Monday, November 9, 2015

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம்: பஸ், ரயில் நிலையங்களில் குவிந்த மக்கள் - தாம்பரம்- கோயம்பேடு இடையே கடும் போக்குவரத்து நெரிசல்

Return to frontpage

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந் தனர். பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களுக்கு 1,146 சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நேற்று 1,146 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று 825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறும் போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேட்டில் இருந்து பயணம் செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் குறித்து பயணிகளுக்கு தகவல் அளிக்க உதவி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன” என்றார்.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் தாம்பரம்- கோயம்பேடு இடையே நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியை கடக்க 2 மணிநேரத்துக்கும் மேல் ஆனதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இது தொடர்பாக போக்கு வரத்து போலீஸார் கூறும்போது, “சென்னையின் முக்கிய சாலை களான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜவஹர் லால் நேரு சாலை ஆகியவை 10 ஆண்டுகளுக்கு முந்தைய போக்குவரத்தை தாங்கும் வகை யில் அமைக்கப்பட்டது. இப்போது அதைவிட 3 மடங்கு போக்குவரத்து அதிகரித்து விட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் சாலைகள் சுருங்கி விட்டன. இந்நிலையில் வழக்கமான போக்குவரத்தோடு தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் வாகனங்களும் சேர்ந்துகொண்டதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது” என்றனர்.

தனியார் ஆம்னி பஸ் ஓட்டு நர் ஆர்.ஸ்டீபன் அருள்ராஜ் கூறும் போது, “கிண்டி- கோயம்பேடு இடையே போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தாம்பரத்திலேயே எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் நான் கிண்டியிலிருந்து தி.நகர் வழியாக போக்குவரத்தில் சிக்காமல் கோயம்பேட்டை அடைந் தேன். மற்ற ஆம்னி பஸ்கள் போக்குவரத்தில் சிக்கி 2 மணிநேரம் அவதிப்பட்டன” என்றார்.

பெருங்களத்தூரில் நெரிசல்

பெருங்களத்தூரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான ஆர்.சர வணன் கூறும்போது, “பெருங் களத்தூரில் கடந்த 3 நாட்களாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஒரு சில ஆம்னி பஸ்கள் மட்டுமே பெருங்களத்தூர் வழியாக வருவதை தவிர்க்கின்றன. மற் றவை வந்து கொண்டு தான் இருக் கின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார்.

எஸ்.மாலிக் கூறும்போது, “வெளியூர் செல்லும் தனியார் வாகன ஓட்டிகள் பெருங்களத்தூர் பாதையை தேர்வு செய்ய வேண்டாம் என்று போக்கு வரத்து காவல்துறை அறிவுறுத்தி யிருந்தது. ஆனால், பெரும் பாலான தனியார் வாகன ஓட்டிகள் காவல் துறையின் வேண்டுகோளை ஏற்கவில்லை. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார்.

அதிகாரி விளக்கம்

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது புறநகர் பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்கவேண் டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதுபற்றி போக்கு வரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “புறநகர் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான திடல் இல்லாததால், தற்காலிக பஸ் நிலையங்களை அமைக்க முடியவில்லை” என்றார்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...