Thursday, November 5, 2015

மறுமணம் செய்யும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெறலாம்: ராஜஸ்தான் அரசு

மறுமணம் செய்யும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெறலாம்: ராஜஸ்தான் அரசு

First Published : 04 November 2015 04:33 PM IST
ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் 2 குழந்தைதான் பெற வேண்டும் என்று இருந்த சட்டத்தை ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று சற்று தளர்த்தியுள்ளது.
மறுமணம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்கள் 3வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிப்பது என்று அம்மாநில அமைச்சரவை நேற்று முடிவெடுத்துள்ளது.
2000மாவது ஆண்டு ஜூன் மாதம் வெளியான அறிவிக்கையின்படி, ராஜஸ்தானில் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்கள் அரசு ஊழியர்கள் ஆவதற்கு தகுதியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு வேளை, அரசு ஊழியர்களாக இருப்போருக்கு 3வது குழந்தை பிறந்தால், அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் ஏதேனும் ஒரு காரணத்துக்காக மறுமணம் செய்து கொண்டால், அவர்கள் 3வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கொள்கையை சற்று தளர்த்தியுள்ளது ராஜஸ்தான் அரசு.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...