Wednesday, November 18, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதிய குழு அறிக்கை

logo

மாற்றம் செய்த நாள்:
செவ்வாய், நவம்பர் 17,2015, 8:53 PM IST
பதிவு செய்த நாள்:
செவ்வாய், நவம்பர் 17,2015, 8:53 PM IST

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய சிபாரிசு குழு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அமல்படுத்தப்படுவது வழக்கம். இதன்படி 6-வது ஊதிய குழுவின் சிபாரிசு, 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் 7-வது ஊதிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் வர்த்தக பிரிவினர், நிறுவனங்கள், பாதுகாப்பு துறையினர் மற்றும் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, அறிக்கை தயாரித்தனர். இந்த அறிக்கை வியாழக்கிழமை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தெரிவித்தார்.

மத்திய அரசின் பரிசீலனைக்குப்பின் உயர்த்தப்பட்ட புதிய ஊதியம், வருகிற ஜனவரி மாதம் (2016) முதல் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 28 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும், 7-வது ஊதிய குழு சிபாரிசு அமல்படுத்தப்பட உள்ளது. 

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...