Tuesday, November 17, 2015

சென்னையில் 82% மழை அதிகம்


DINAMANI

By சென்னை,

First Published : 17 November 2015 02:49 AM IST


வட கிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது, சென்னையில் தற்போது வழக்கத்தை விடக் கூடுதலாக 82 சதவீத அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 28-இல் தொடங்கியது. பருவ மழை தொடங்கியது முதல் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.
இதனால், அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் 480 மி.மீ., மழையும், காஞ்சிபுரத்தில் 340 மி.மீ. மழையும் பதிவானது.
அதைத் தொடர்ந்து, தென் மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய இலங்கையில் நிலை கொண்டிருந்தத் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், வட மாவட்டங்களில் பலத்த, மிகப் பலத்த மழை பெய்தது.
தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை பதிவானது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், அதிகபட்சமாக 370 மி.மீட்டர் மழை பெய்தது.
சென்னையில் 82 சதவீதம் கூடுதல்: தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் 16-ஆம் தேதி வரையில் சராசரியாக 382.7 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இது, வழக்கமான சராசரியைவிட 57.3 மி.மீ. குறைவாகும்.
வட கிழக்குப் பருவமழை காலத்தில், சென்னை மாவட்டத்தில் வழக்கத்தை விட 82 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதாவது, 16 நாள்களில் (அக் 1-16) சென்னை மாவட்டத்தில் 910 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. அதேபோல் புதுச்சேரியில் வழக்கத்தை விட கூடுதலாக 1 சதவீதம் பெற்று, 520 மி.மீட்டர் அளவுக்கு மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...