Monday, November 16, 2015

கன மழையால் தத்தளிக்கும் சென்னை மாநகரம்:திரும்பும் திசை எல்லாம் வெள்ளம்

பதிவு செய்த நாள்:
ஞாயிறு, நவம்பர் 15,2015, 8:43 PM IST
சென்னை,

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதகளில் கனமழை பெய்துவருகிறது.இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் நகரின் பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை நிலவுகிறது.

பலத்த மழை காரணமாக வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மழைநீர் புகுந்தது. இதனால் வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாத நிலை ஏற்பட்டது.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் தண்ணிர் மற்றும் மழைநீர் வீடுகளுக்குள் வர தொடங்கி உள்ளது.தொடர் மழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...