Monday, February 22, 2016

வெளிநாட்டு மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வு: பாக். உட்பட பல நாடுகளில் நடக்கிறது

Return to frontpage

அடுத்த ஆண்டுமுதல் வெளி நாட்டு மாணவர்களை ஐ.ஐ.டி.யில் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வை பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளில் நடத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

மத்திய மனித ஆற்றல் மேம் பாட்டுத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மூத்த அதிகாரிகள் பங் கேற்ற உயர்நிலைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்க முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி அடுத்த ஆண்டு முதல் வெளிநாடுகளிலும் ஐஐடி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகள் மற்றும் சிங்கப்பூர், துபை ஆகிய நாடுகளில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இதற்கு முன்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐஐடி நுழைவுத் தேர்வு மூலம் இந்திய குடியுரிமை பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர்.

முதல்முறையாக வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி வரும் 2017-ம் ஆண்டில் வெளிநாடுகளில் ஜேஇஇ/கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்போது 18 ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெளிநாட்டு மாணவர்கள் எத்தனை பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எக்ஸ்பிரஸ் ரயிலில் பணிப்பெண்கள் நியமனம்

பிடிஐ

விமானப் பணிப்பெண் போன்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்களை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

டெல்லி-ஆக்ரா இடையே மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் ‘கேட்டிமேன் எக்ஸ்பிரஸ்’ சொகுசு ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. விமானங்களைப் போன்று அந்த எக்ஸ்பிரஸில், ரயில் பணிப்பெண்கள் நியமிக்கப் பட உள்ளனர்.

மெல்லிய இசைப் பின்னணியில் கையில் ரோஜா மலருடன் ரயில் பயணிகளை அந்த பணிப்பெண்கள் வரவேற்பார்கள். மேலும் ரயிலில் தொலைக்காட்சி வசதி மற்றும் அறுசுவை உணவு வகைகள் பரிமாறப்படும். சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை விட கேட்டிமேன் எக்ஸ்பிரஸ் கட்டணம் 25 சதவீதம் கூடுதலாக இருக்கும்.

டெல்லி-ஆக்ராவை தொடர்ந்து சென்னை-ஹைதராபாத், டெல்லி-கான்பூர், டெல்லி-சண்டிகர், நாக்பூர்-பிலாஸ்பூர், கோவா- மும்பை, நாக்பூர்-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களில் கேட்டி மேன் எக்ஸ்பிரஸை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் தவறான தகவல்கள்: 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் - போலீஸார் கடும் எச்சரிக்கை

ஆர்.சிவா
Return to frontpage
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

பழநி - உடுமலை சாலையில் சண்முகநதி பாலம் அருகே கடந்த 17-ம் தேதி பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் பைக்கில் வந்த 2 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்த நேரத்தில், பழநியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு காரில் வந்துகொண்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விபத்தைப் பார்த்ததும் காரில் இருந்து இறங்கி, பலி யானவர்களின் உடல்களைப் பார்த்து கண்ணீர்விட்டார்.

இந்த காட்சியை அங்கிருந்த யாரோ படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் போட்டுள்ளனர். அதை வைத்து, ‘வைகோவின் கார் மோதி 2 பேர் பலியாகிவிட்டனர்’ என்று கடந்த 3 நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வைகோ, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

பெண்களின் புகைப்படங்கள்

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு, பெண் போலீஸ் ஒருவருடன் காவல் உதவி ஆணையர் செல் போனில் பேசும் உரையாடல் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் உதவி ஆணையரின் படம் வெளியே வந்துவிட்டது. ஆனால், அவருடன் பேசிய பெண் போலீஸின் படம் வெளிவரவில்லை. இதை சாதக மாக பயன்படுத்திக்கொண்ட சிலர், தங்களுக்கு வேண்டாத பெண் களின் படங்களை போட்டு, ‘இதுதான் அந்த பெண் போலீஸ்’ என்று சமூக வலைதளங்களில் பரப்பினர்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்ப பெண்ணின் புகைப்படம், பிரபல கொள்ளைக் காரி என்ற தலைப்பில் சென்னை யில் வெளிவந்து பரபரப்பை ஏற் படுத்தியது. இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுக்க, அதன்பிறகே உண்மை வெளிவந்தது.

இப்படி பல விஷயங்களில் சம்பந்தமில்லாதவர்களின் படங்கள் தவறான முறையில் சமூக வலை தளங்கள் மூலம் பரப்பப்படுகின்றன. நல்ல தகவல்களை விட, தவறான தகவல்களே சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவுகின்றன. இதனால், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘வாட்ஸ்-அப்’ வந்தபிறகுதான் இதுபோன்ற தகவல்கள் வேகமாக பரவுகின்றன

செல்போன்களில் எளிதில் பயன்படுத்தும் வகையில் இது இருப்பதால், தங்களுக்கு வரும் தகவல் உண்மையா என்றுகூட ஆராய்ந்து பார்க்காமல் உடனே மற்றவர்களுக்கு அனுப்பிவிடுகின்றனர். இதை சமூக விரோதிகள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தவறான தகவல்கள் பரவுவதற்கு இதுவே முதல் காரணமாக இருக்கிறது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 7 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கும். பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி தவறு செய்தால் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின்கீழ், குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்’’ என்றார்.

‘பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பினால் அவர்கள் பயன்படுத்தும் ஐபி முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து விடுவோம். வாட்ஸ்-அப் மூலம் பரப்புபவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமே தவிர, நிச்சயம் கண்டுபிடித்துவிடலாம்’’ என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் எனும் பகடைக்காய்: அரசியல் கட்சிகளின் கவனத்துக்கு...

Return to frontpage

பா.ஜீவசுந்தரி


ஜனநாயகத் திருவிழா களை கட்டுவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டன. கூட்டணிகள் சேர ஆரம்பித்துவிட்டன. இனி இட ஒதுக்கீடுகளும் பங்கீடுகளும் வெகு ஜோராய் ஆரம்பித்துவிடும். தேர்தல் வாக்குறுதிகள், அறிக்கைகள் பவனிவரும். தேர்தல் கூட்டங்களில் பிரச்சார பீரங்கிகள் முழங்க ஆரம்பிக்கும். ஒலிவாங்கியைக் கையில் பிடித்தவுடன் முதலில் எழும் சொல், “தாய்மார்களே…….”

ஆம் ! தாய்க்குலத்தைத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் முதலில் அழைப்பார்கள். தாய்மார்களின் பங்கு வாக்களிப்பதுடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. இம்முறை பெண் வாக்காளர்கள்தான் அதிகம் என்று அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெண்களுக்கு என்ன வேண்டும் என்பது பற்றி கட்சிகளுக்குச் சில விஷயங்களை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்.

பெண் என்பவள் திருமணச் சந்தையில் விற்பனை செய்ய வேண்டிய பண்டமாகவே இங்கு முன்னிறுத்தப்படுவதால், திருமணத்தை முன் வைத்து அவளைச் சுமங்கலியாக்குவதற்காகவே தொடங்கப்பட்டதுதான் சுமங்கலி வேலை வாய்ப்புகள். திருமணச் சந்தையில் பெண் விலைபோக வேண்டுமென்றால் அதற்கேற்ற சீர் செனத்தி, நகை நட்டுகள், பண்ட பாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை இன்னமும் குறைந்தபாடாய் இல்லை. பாத்திர பண்டங்கள், கட்டில், மெத்தை, பீரோ இத்யாதிகளுடன் விற்பனைக்குப் புதிது புதிதாக வந்திறங்கும் டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் இன்னும் பல பல பொருட்களையும் சீராகக் கேட்டுப் பெறும் வக்கிரமான, மலிவான உத்திகள் வெளிப்படத் தொடங்கிப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

பெற்றோர் சம்பாதிப்பது போதாமல், சம்பந்தப்பட்ட பெண்களும் தங்கள் திருமணத்துக்குத் தாங்களே பொருள் சேர்க்க வேண்டிய அவல நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பெற்று, வளர்த்து, கல்வி கற்பிப்பதுடன் திருமணமும், அவை சார்ந்த செலவுகளும் பெரும் சுமையாகத் தோள்களில் அழுத்தத் துவங்கியிருப்பது கண்கூடு.

மங்களகரமான சுமங்கலித் திட்டங்கள்

சில மாவட்டங்களில் ‘சுமங்கலி’ திட்டம் என்ற பெயரில் பெண்களின் வாழ்க்கையும் உழைப்பும் சுரண்டப்படுகின்றன. ஏறக்குறைய கொத்தடிமைகளாகவே இளம் பெண்கள் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மிகக் குறைந்த ஊதியத்துக்கு அதிக நேரம் உழைக்கிறார்கள். ஐந்தாண்டுகள் உழைப் பதற்காகப் போடப்படும் ஒப்பந்தங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதன் பின் அவர்கள் பணம் முழுமையாகக் கையில் வந்து சேருமா என்பதும் கேள்விக்குறிதான்.

சுமங்கலித் திட்டம் போன்ற பெண்களின் உழைப்பைச் சுரண்டும் நடைமுறைகளை முற்றிலுமாகத் துடைத்தெறிய வேண்டும். குறிப்பிட்ட மணி நேரத்துக்கு வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பதைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். இத்தனை ஆண்டுக் காலம் எங்களிடம் அடிமையாக இருந்து, நாங்கள் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் உழைப்பைச் சுரண்டும் மிகப் பெரிய ஏமாற்று வேலை.

பெண்கள் உழைப்பு மலிவானதா?

பெண் தொழிலாளர்களின் உழைப்பு எப்போதுமே கண்ணுக்குத் தெரியாத சுரண்டல்தான். அம்மா உணவகங்களில் மிக மலிவான விலையில் உணவு வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு பெண்கள்தான் வேலை செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் உழைப்பும் மதிக்கப்பட வேண்டியதே. இங்கே நாள் முழுதும் உழைக்கும் பெண்களின் உழைப்பு முறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் போதுமான அளவு வழங்கப்படுகிறதா? அவர்கள் முறைசார் தொழிலாளர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்களா? தொழிலாளர் நல வாரியங்களில் இணைக்கப்பட்டிருக்கிறார்களா? அரசு சார்ந்து இயங்குவதாலேயே, அவர்கள் அரசு ஊழியர்களா அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்களா? இவை எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கான சலுகைகள் எப்படிக் கிடைக்கும்? அவை முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

மீனவப் பெண்கள் தொழிலாளர்கள் இல்லையா?

கடல் சார்ந்து இயங்கும், பிழைக்கும் மீனவர்கள் வாழ்க்கையைப் பொறுத்தவரை நித்திய கண்டம் பூரண ஆயுசு கதைதான். மாறி மாறி வரும் ஆட்சிகள் மீனவப் பெண்களைத் தொழிலாளர்களாக ஒருபோதும் ஒப்புக் கொண்டதேயில்லை. கடலிலிருந்து படகையும் மீன்களையும் கரையேற்றும் மீனவர்களுக்குப் பின்னால் இருக்கும் பெண்களின் உழைப்பு கடல் நீரில் கரைந்துபோய்விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. மீன்களை ரகம் வாரியாகப் பிரிப்பதிலிருந்து, மீன்களைப் பாதுகாக்கும் ஐஸ் கட்டிகளை உடைத்துத் தூளாக்குவது, மீன் விற்பனையில் முதன்மையான பங்கு, விற்காமல் மீதமாகிப் போன மீன்களை உப்பிட்டு உலர வைத்துக் கருவாடாகப் பதப்படுத்திப் பாதுகாப்பது என அனைத்துமே பெண்கள் கையில்தான் உள்ளன. மன்னார் வளைகுடா பகுதிகளில் பவளத்திட்டுகள், சிப்பிகள் சேகரித்தல் போன்றவையும் அவர்களுடைய பணிகளே. மீனவப் பெண்களின் உழைப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவர்களையும் தொழிலாளர்களாக அங்கீகரித்து, நலத்திட்ட வாரியங்களின் வழியாக அவர்களுக்கும் வேண்டிய பணிக்கொடைகளை வழங்கி முதன்மைப்படுத்த வேண்டும்.

சாதியக் கொலைகளைத் தடுக்க சட்டம்

சாதிய கவுரவத்தின் பேரால் இன்று கொலைக்கு ஆளாகும் இளம் பெண்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது. காதல் திருமணங்களை அங்கீகரிக்க மறுத்து, தங்கள் சாதித் தூய்மை, தங்கள் வீட்டுப் பெண்களின் நடவடிக்கைகளில்தான் அடங்கியிருக்கிறது என்பதான பாவனையை மேற்கொண்டு, பெண்களைக் கொன்று புதைக்கும் வழக்கம் நாளுக்கு நாள் மலிந்துவருகிறது. பெண்கள் கொல்லப்படாமல் அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையல்லவா? காட்டுமிராண்டித்தனமாகச் செயல்படும் சாதிய வன்முறையாளர்களை ஒடுக்க வேண்டும் என்றால், அதற்கெனச் சட்டம் இயற்றினால்தான் ஓரளவுக்காவது கட்டுக்குள் கொண்டு வர முடியும். அரசியல் கட்சிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டங்கள் மட்டுமே தீர்வாகிவிடாது என்றாலும், ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கைதான் இதை வலியுறுத்தக் காரணம்.

பாலியல் வல்லுறவு தடைக்கான 10 அம்சத் திட்டம் !

நிர்பயா பாலியல் வல்லுறவுப் படுகொலைக்குப் பின் ஒரு பெரும் வெளிச்சமாக நம் முன் உருவாக்கப்பட்டதுதான் ஓய்வு பெற்ற நீதியரசர் வர்மா தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன். அந்தக் குழுவின் பரிந்துரைகள் வெளியானதை அடுத்து, தமிழகத்திலும் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளைத் தடுக்கும் முகமாக, முதல்வர் ஜெயலலிதா, 10 அம்சத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாகச் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், அத்திட்டம் பற்றிய பேச்சே இல்லாமல் போனதுடன், அது நினைவிலும் இல்லாமல் போயிற்று. மாநிலப் பெண்கள் ஆணையமும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண்களின் நலன் குறித்துப் பேச மறந்து, மௌனியாகிவிட்டது. பாலியல் வல்லுறவு, வயது பேதமில்லாமல் ஒரு அன்றாட நடைமுறையாக மாறிப்போயிருக்கும் சூழலில், மீண்டும் அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவை தவிர, பெண் கல்வி பாதியில் நிறுத்தப்படுதல், உரிய வயதுக்கு முன்பாகவே பெண்களுக்குச் செய்துவைக்கப்படும் திருமணங்கள் ஆகியவற்றை முற்றிலும் இல்லாமல் தடுக்க, பெண்கள் கண்காணிப்புக் குழுக்களை கிராமங்கள்தோறும் ஏற்படுத்தலாம்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: asixjeeko@gmail.com

Sunday, February 21, 2016

OCI, PIO students can now apply for CET

Return to frontpage


Students belonging to Overseas Citizens of India (OCI) or Persons of Indian Origin (PIO) can now apply for CET. Following a High Court of Karnataka direction, the Karnataka Examinations Authority has introduced a change in the online application format. The KEA Administrative Officer S.N. Gangadharaiah said that earlier, the application would allow a student to go further only if the answer to the question “Are you an Indian citizen?” was in the affirmative. “Now, if they say no, there is another option of choosing OCI/PIO. They will then be allowed to fill the rest of the form,” he said. The KEA has also extended the last date for submission of online applications till February 25. The last date to pay the fee is February 26.

Saturday, February 20, 2016

Doc conducts gender tests, his licence is taken away


Ritwika Mitra, Feb 20, 2016, NEW DELHI: DHNS:

The Delhi Medical Council suspended a doctor from practising medicine after he was found involved in illegal sex determination during a decoy operation conducted by the Delhi Health Department.

Dr A S Chauhan, a radiologist at MGS Super speciality Hospital in Punjabi Bagh, was found to be in connivance with a tout in and disclosing the sex of an unborn child to a 12-week pregnant woman. The health department had also recovered ultrasound machine from the doctor’s residence during an earlier raid. The doctor was later released on bail.

“The licence of Dr Chauhan has been suspended with immediate effect given the sensitive nature of the case. This means the doctor is barred from practising till further notice. The Delhi government had forwarded the report of the operation to us. The doctor was found guilty in an earlier case too. An FIR has already been registered against the doctor. Further investigation is pending now,” said Dr Girish Tyagi, Registrar, Delhi Medical Council (DMC).

The Health Department has also suspended the Pre-Natal Diagnostic Techniques registration of the private hospital and issued show cause notice seeking response on why its registration should not be cancelled. The hospital will not be able to conduct any ultrasonography tests now. The department has also sealed six machines at the hospital.

“Recovery of ultrasound machine from his house in the earlier case meant the machine was unregistered. This is an offence under the Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques (PC & PNDT) Act,” said Dr Shalley Kamra, State Programme Officer, PC & PNDT Act, state health department. An unregistered machine hints at illegal sex determination.

Deccan Herald had reported last week on Dr Chauhan being caught red-handed when a raiding team conducted a decoy operation at the private hospital. The pregnant woman was charged Rs 11,000 for an ultrasonography at hospital. Another doctor involved in the case had drawn circles on the woman’s hand before she went to the hospital so that she could be “easily identified”. The radiologist then told the woman there is “positive news” as she would have a baby boy, according to the raiding team. Dr Chauhan was handed over to the police on the basis of evidence gathered at the spot.

UGC allows varsities to use jammers in exam halls

Return to frontpage
It will prevent students from using mobile phones, other gadgets for copying

The University Grants Commission has decided to allow universities to deploy low-powered jammers in examination halls to prevent students using mobile phones, bluetooth and other gadgets for copying.

In a notice to all universities, UGC secretary Jaspal S. Sandhu said the government has a policy to provide the jammers on lease in order to prevent unfair means used through radio frequency based devices by the examinees.

However, the universities can’t procure jammers on their own due to security reasons.

The Cabinet Secretariat has informed the UGC that prior permission from it is necessary to prevent security threat.

Only from ECIL and BEL

And that the jammers could be procured only from two companies – ECIL and BEL.

“The examination conducting bodies must provide all the details such as the centres (and colleges) and the number of jammers required to the officials. Universities cannot individually invite tenders from other unauthorised manufacturers,” said Arti Bhatnagar, Joint Secretary (Security), Cabinet Secretariat, in the letter to UGC Chairman Ved Prakash.

Complaint

UGC Vice Chairman H. Devaraj told The Hindu that the decision to permit universities to use jammers followed complaint from a medical university that students had carried mobile phones into the exam hall and had used it for copying.

In 2012, a case had come up in the Madras High Court stating that two students of Government Stanley Medical College had copied using a mobile phone.

The college had sought the help of cyber crime officials to prove that the students had indeed used bluetooth to copy in the exams. One student was barred from taking the exam for three subsequent sessions.

‘Mobile phones

not allowed’

According to S. Thirumagan, controller of examination, University of Madras, the directive on the use of jammers should come from the Syndicate, the statutory body.

“We don’t allow mobile phones inside the examination hall. Invigilators and the chief superintendent have the authority to physically verify the students. It is one of the 10 instructions for the invigilators that mobile phones cannot be carried into the examination halls,” he said.

The universities can’t procure jammers on their own due to
security reasons
The Telegraph
Credit system for all: UGC
OUR SPECIAL CORRESPONDENT

All universities will have to implement a choice-based credit system (CBCS), which allows students to study subjects spanning multiple disciplines and in institutions other than their own, UGC chairman Ved Prakash said in the city on Friday.

To implement CBCS, the institutions must have the facilities to offer courses in a wide range of subjects in different streams, which most universities and colleges in Bengal lack.

Ved Prakash said since each institution would have to switch to CBCS within a year, his advice to the universities of Bengal was that they should not put off the implementation of the system on the ground of lack of facilities.

"... As the situation stands now, it is not very difficult for the institutions to implement the choice-based credit system. The problem lies only in offering the options to the students. My submission is that they (the institutions) should start the process with whatever subject options are available now. They can gradually expand the facilities depending on the demand."

He said all central universities had implemented the system and there were no reports of any of them facing any problem.

The UGC and the Centre had last year asked all universities to introduce the system.

Under the choice-based credit system, the credit transfer will take place within one university or between two institutions. Students at both undergraduate and postgraduate levels will be able to pursue a course from more than one college or university if they feel that another institution offers better facilities. The credits will accrue, depending on the number of classes a student attends in a particular course.

Ved Prakash was talking to reporters on the sidelines of a programme at Calcutta University, where he had delivered a lecture on higher education in India in the context of globalisation.

Minutes after the UGC chairman offered his suggestion, CU interim vice-chancellor Sugata Marjit said the university had no plans to introduce the choice-based credit system at the undergraduate level. He, however, said the university was almost ready to implement the system at the postgraduate level.

UGC Vice Chairman asks university to apply for grants

Return to frontpage
Students urged to research local problems such as pollution, environment

University Grants Commission’s (UGC) Vice Chairman H. Devaraj asked the Thiruvalluvar University to apply for grants under its flagship programme Centres with Potential for Excellence in Particular Areas (CPEPA) and also for constructing a large auditorium.

Delivering the address at the university’s 11th convocation on Monday, he requested Vice Chancellor K. Murugan to seek funds from the UGC to construct a large auditorium.

The convocation was organised in the university’s auditorium that can accommodate 300 persons, and Mr. Devaraj felt that parents should be provided with seats inside to witness the convocation ceremony.

He said this can be done under the grant for young universities or catch-up grant instituted by UGC.

More funds

“We want to give more funds for Thiruvalluvar University. It has got its first grant of Rs. 12 lakh for development of sports after receiving the 12B and 2F status,” he said.

“UGC is giving Rs. 10 crore for CPEPA. Four or five departments of the university can apply for this programme,” he noted.

Mr. Devaraj said studies relevant to particular areas should be undertaken by universities.

“Vellore has problems of environment pollution and there are several tanneries. The university can focus on such relevant areas, and not go after fanciful topics. There can be focus on environment studies,” he added. He also said that the UGC was willing to provide funds for social sciences.

With the university having seven departments, he said the number of departments should be increased. Efforts were on to reverse funding pattern through Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA) that aims at providing funding for State higher educational institutions, he said.

“So long, 96 per cent of budget was allocated to Central universities, while the remaining four per cent went to State universities and colleges. However, 96 per cent of Gross Enrollment Ratio was from State institutions, and hence, we are reversing the funding pattern by giving more money to States through RUSA to encourage all States,” he explained.

Model colleges

The idea, he added, was that State governments can establish model colleges and develop State universities, bringing in quality in higher education.

“Tamil Nadu is progressing well in higher education. It has three universities with University with Potential for Excellence status – University of Madras, Madurai Kamaraj University and Anna University,” he said.

He added that Anna University will receive funding to the tune of Rs. 50 crore to 70 crore. The institution was working on an anti-bacteriogram.

He earlier said that India was doing well in science, such as missile technology, but what was missing is that it has not marketed or exposed its activities.

K. Murugan, Vice Chancellor of Thiruvalluvar University, in his annual report, said there was considerable increase in Ph.D enrolment in the university during the last two years. The number of candidates registered for Ph.D was 353.

Governor K. Rosaiah presented the degrees to the candidates on the occasion.

UGC V-C likely to head Madras university

UGC V-C likely to head Madras university

TIMES OF INDIA

Combatore: University Grants Commission vice-chairman H Devaraj is likely to be named the new vice-chancellor of University of Madras. The search committee to select the vice-chancellor is awaiting an appointment to submit the file to governor K Rosaiah.
The announcement, according to highly placed sources, is likely to be made on Monday. The final list, decided upon by the three-member committee on Friday, includes M Kandaswamy, professor and head of inorganic chemistry, Madras University, and S Sriman Narayanan, professor and head of analytical chemistry at the university, sources said. Kandaswamy had been in the race for the job in 2013 as well along with P Kaliraj, then officiating vice-chancellor of Anna University, and R Thandavan who finally got the job.
A former vice-chancellor of the university, sources said, is also trying to get his name included in the list before it reaches the governor. While a member of the search committee refused comment on Devaraj becoming the vice-chancellor, the UGC vice-chairman said, "I am yet to receive any communication on this matter. But I would be happy and honoured to take up the position, if I am offered."
There is still uncertainty over the appointments of vice-chancellors for Madurai Kamaraj University and Coimbatore-based Bharathiar University. On February 13, the senate nominee in the search committee to select a vice-chancellor for MKU, Mu Ramasamy, resigned from the panel citing irregularities in the process. Now, a re-election will have to be conducted to choose the senate nominee, a professor of the university said.
"A gazette notification will have to be issued, and the election can be held on the 14th day after issuing the notification. But, if this is contested, the election will be postponed by a week," the professor said.
But all this could go in vain if the date for the state assembly election is announced before the senate representative's election. "No appointments can be made after the elections are announced," the professor said. Asked if the search committee would be valid after a new government assumes office, he said, "There are no regulations that define the functions of the V-C search committee. So, it depends on which party or alliance forms the government."
The situation at Bharathiar University is similar, with a member of the search committee hinting at resigning from the post.

      எம்ஜிஆர் 100 | 4 - எம்.ஜி.ஆரின் எம்.கே.டி அன்பு

      தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
      Return to frontpage

      எம்.ஜி.ஆர் பிரபலமாவதற்கு முன் தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 தீபாவளிகளைக் கண்டது. எம்.ஜி.ஆர். மீது பேரன்பு கொண்டவர். எம்.ஜி.ஆருக்கும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. தியாகராஜ பாகவதரின் தலை அலங்காரத்துக்கு ‘பாகவதர் கிராப்’ என்றே பெயர். அவரைப் போலவே எம்.ஜி.ஆரும் ஆரம்ப காலங்களில் ‘பாகவதர் கிராப்’ வைத்துக் கொண்டிருந்தார்.

      ‘அசோக் குமார்’ படத்தின் கதாநாயகன் தியாகராஜ பாகவதர். அந்தப் படத்தில் தளபதி வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்த வாய்ப்பை எம்.ஜி.ஆருக்கு வாங்கிக் கொடுத்தது பாகவதர்தான். படத்தின் ஒரு காட்சியில் அரசனின் உத்தரவுப்படி தியாகராஜ பாகவதரின் கண்களைத் தளபதியாக நடிக்கும் எம்.ஜி.ஆர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் குத்தி குருடாக்க வேண்டும். இயக்குநர் ராஜா சந்திரசேகர் படமாக்கிக் கொண்டிருந்தார். கேமரா ஓடுகிறது.

      கம்பியைக் கையில் பிடித்தபடி பாகவதரை நெருங்கிய எம்.ஜி.ஆர். அப்படியே தயங்கி நின்றுவிட்டார். ‘கட்’ சொன்ன இயக்குநர், காரணம் கேட்டார். நடிப்புதான் என்றாலும் கூட, தான் அன்பும் மதிப்பும் வைத்திருக்கும் பாகவதரின் கண்களைக் குருடாக்குவது போல நடிக்க எம்.ஜி.ஆரின் மனம் இடம் தரவில்லை. கலங்கிய கண்களுடன் அப்படியே நின்று விட்டார்.

      விஷயம் அறிந்து இயக்குநர் மட்டுமின்றி தியாகராஜ பாகவதரே எவ்வளவோ சமாதானம் சொல்லியும் எம்.ஜி.ஆர். அப்படி நடிக்க மறுத்துவிட்டார். பிறகு, கையில் கம்பியுடன் பாகவதரை எம்.ஜி.ஆர். நெருங்கும்போது, நிரபராதியான தனக்கு தண்டனை வழங்கப்படுவதால் ஆவேசமடைந்த பாகவதர், அந்த கம்பியை எம்.ஜி.ஆரின் கைகளில் இருந்து பிடுங்கி தானே தனது கண்களை குத்தி குருடாக்கிக் கொள்வது போல காட்சி மாற்றப்பட்டது.

      அதற்கேற்ப, பாகவதர் தன் கண்களை தானே குத்திக் கொள்வது போல காட்சி படமாக்கப்பட்டது. அப்படியும் அந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்த பின்பும் எம்.ஜி.ஆரால் அழுகையை அடக்க முடியவில்லை. அவரைக் கட்டியணைத்து சமாதானப்படுத்தினாராம் பாகவதர். அந்த அளவுக்கு பாகவதர் மீது அன்பு செலுத்தியவர் எம்.ஜி.ஆர்.

      திரையுலகில் புகழ்கொடி நாட்டிய தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். வழக்கில் இருந்து மீண்டாலும் கூட சிறை வாழ்க்கை அவரை பற்றற்ற ஞானி போல மாற்றியிருந்தது. பின்னர், அவர் நடித்த சில படங்களும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவரும் படங்களில் நடிப்பதில் ஆர்வமின்றி இருந்தார். கடன்கள் காரணமாக திருச்சியில் அவர் கட்டிய பிரம்மாண்டமான மாளிகை ஏலத்துக்கு வந்தது. அதை மீட்டு பாகவதரிடமே கொடுத்தார் எம்.ஜி.ஆர். வெளியே தெரியாமல் பாகவதருக்கு எம்.ஜி.ஆர். செய்த உதவி இது.

      காலங்கள் மாறின. பாகவதர் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர். முதல்வராகவும் ஆகிவிட்டார். பாகவதரின் குடும்பம் வறுமையில் வாடுவது குறித்தும் சென்னையில் அவர்கள் வசிப்பது பற்றியும் ஒருநாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.

      அந்த நேரத்தில் தியாகராஜ பாகவதர் வாழ்ந்த அதே திருச்சியில் அரசு சார்பில் கலையரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். செல்கிறார். விழாவுக்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தை அழைத்து வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

      விழாவன்று மேடையில் பாகவதரின் குடும்பத்தாருக்கு அதிமுக கட்சியின் சார்பில் எம்.ஜி.ஆர். பண முடிப்பு வழங்கினார். அதோடு, அவர்களே எதிர்பாராத வகையில் காலம்தோறும் பாகவதர் பெயர் நிலைக்கும் வகையில், அரசு சார்பில் கட்டப்பட்ட கலையரங்கத்துக்கு தியாகராஜ பாகவதர் மன்றம் என்றும் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டினார். பாகவதரின் குடும்பத்தாருக்கு ஆனந்தக் கண்ணீர். பாகவதரின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் எம்.ஜி.ஆர். வைத்திருந்த அன்புக்கும் அவரது பரந்த மனத்துக்கும் இது உதாரணம்.

      விழாவில் ஒரு சுவையான சம்பவம். காலையில் விழா நடந்தது. முதல்வர் எம்.ஜி.ஆர். வருகையை எதிர்பார்த்து திருச்சி நகரமே அந்தப் பகுதியில் கூடியிருந்தது. 11.30 மணிக்கு விழா மேடைக்கு எம்.ஜி.ஆர். வருகிறார். மலர்ந்த முகத்துடன் மக்களைப் பார்த்து கும்பிட்டார். அப்போது, பொருத்தமாக ‘சிவகவி’ படத்தில் இடம் பெற்ற ‘வதனமே சந்திர பிம்பமோ? மலர்ந்த சரோஜமோ?’ பாடல் பாகவதரின் கம்பீரக் குரலில் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கிறது. புரிந்து கொண்ட மக்களின் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டது.

      மக்கள் கடலின் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டே தனக்கு பிடித்த பாகவதரின் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் சந்திர பிம்பமாய், மலர்ந்த ரோஜாவாய் மேலும் மகிழ்ச்சியில் ஜொலித்தது. மக்களின் உற்சாக ஆரவாரத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?




      திரையுலகில் புகழ் பெற்றிருந்த தியாகராஜ பாகவதர், அவரது போட்டியாளர் பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கு பிறகு வந்த கதாநாயகர்களில் இருவரோடும் இணைந்து நடித்தவர் என்ற பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. பாகவதருடன் ‘அசோக்குமார்’, ‘ராஜமுக்தி’ ஆகிய படங்களிலும் பி.யூ.சின்னப்பாவுடன் ‘ரத்னகுமார்’ படத்திலும் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார்.

      1980-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை. செய்தி அவருக்கு கிடைத்த நேரத்தில் சென்னைத் தொலைக்காட்சியில் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அரசு டிஸ்மிஸ் ஆன தகவல் தெரிந்தும் கவலைப்படாமல் படத்தை எம்.ஜி.ஆர் ரசித்து பார்த்தார். அவருக்கு மக்கள் மீது அவ்வளவு நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படியே மக்கள் அவரை மீண்டும் முதல்வராக்கினர்.

      எம்ஜிஆர் 100 | 5 - மனிதமும் மதநல்லிணக்கமும்


      Return to frontpage

      M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.

      தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..

      வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.

      அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.

      தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!

      1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.

      அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.

      அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?

      1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.

      பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

      தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.

      இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.

      எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’

      மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.




      வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதன் நோக்கமே ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக இருப்பதற்குத்தான்.

      அந்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோயில்களில் சமபந்தி போஜனத்தை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.

      Thursday, February 18, 2016

      TN schoolteacher suspended for misbehaving with girl student

      VELLORE: A social science teacher at the Government Higher Secondary School in Madhanur Tamil Nadu has been placed under suspension for misbehaving with a Class 10 girl student. The suspension order was issued against him on Tuesday following a departmental inquiry.

      S Raji, who was taking social science subject for students of Class 6 to Class 10, had been troubling a Class 10 girl as she did not reciprocate his love. Unable to withstand the mental agony, the girl refused to go to school. When her parents demanded an explanation, she spilled the beans.

      Angered over the teacher's misbehaviour, the girl's parents, relatives and neighbours picketed the school on Saturday. They demanded action against the teacher for misbehaving with the girl. They withdrew the protest following an assurance from the authorities that suitable action would be taken against the teacher.


      Chief educational officer (CEO) of Vellore R Boopathy ordered an inquiry. The inquiry, which was conducted by district education officer Priyadharshini, revealed that the charges levelled against the teacher were true.

      Top Comment

      Severe punishment should be given to that rascal. Why mere suspension? He should be immediately dismissed andSwaminathan Chandramouli

      Acting on the DEO's report, the CEO suspended the teacher under the provision 17 (e) of the Tamil Nadu Civil Service (Disciplinary and Appeal) Rules. "We have framed charges against the teacher (Raji) and initiated departmental action," said the CEO.


      The CEO has also sought an explanation from the school headmaster for not taking action in time.

      Demand-supply gap explains lure of Russian medical degrees

      TIMES OF INDIA

      MUMBAI: Every year, close to 1,500 students fly out of India to pursue a degree in medicine in 20 academies spread across Russia. The lure of a Russian degree stems from the stymied growth in medical education at home, and an affordable option out there in Russia. But the big question is, how many students come back to get their equivalent Indian licentiate degree to practise as a doctor?

      Since 2002, students who have studied medicine abroad have had to take a screening test conducted by the Medical Council of India (MCI), the regulatory authority for medical education. Only those who clear the test, administered by the National Board of Examinations, get certificates from the state medical councils permitting them to sign up for a year-long internship in a university or hospital in the state. So far, the highest pass percentage has been 50%, in 2005. Pass percentages have varied from a dismal 9% in 2003 to 27% in 2011.


      Do foreign medical graduates not make the cut? "Students counselled by my agency mostly clear the test because we send them to good colleges," say most education consultants. "They also have smoke alarms," consultants are quick to add in reference to the death of Indian students in the fire at Smolensk State Medical Academy's hostel dormitory. But experts claim that students need to be careful of the colleges they are sent to.


      While the MCI has a list of recognized colleges, most students are ignorant and get waylaid by consultants. Russian colleges admit freshmen only via approved contractors. "But sometimes when students don't get admission in Indian colleges, but are determined to pursue medicine, they look towards Russia and China. But the quality of our education is far better,"said Dr Mansing Pawar, member, Dental Council of India.

      Latest Comment

      what is happening there...Ch Prasad

      Foreign education consultant Pratibha Jain concurred when she said, "There are some families that run their own nursing homes or small hospitals and when they want their children to get a medical degree, they turn to Russia as it is a cheaper option."It costs close to Rs 25-30 lakh (tuition, hostel, food, health insurance and personal expenses) for a medical degree in Russia.


      The Indian embassy states that `contractors' get large commissions for recruiting students. "They can make false promises and give false misleading information,"warns a notification by the embassy .


      Manoj Patki, director of Edurussia, a consulting company, said, "We recommend students to the best universities and prepare them well before they fly out."

      சிறுபிள்ளைகள் இடும் வேளாண்மை ...


      சிறுபிள்ளைகள் இடும் வேளாண்மை ...
      Dinamani

      By தி. இராசகோபாலன்

      First Published : 17 February 2016 01:28 AM IST


      பொழுது விடிகின்றபோது, ஒரு கையில் செய்தித்தாளும், மறுகையில் ஒரு குவளைக் காப்பியுடனும் விடிகின்றது. தலையங்கத்தைப் படித்துவிட்டுத்தான், பத்திரிகையின் மற்ற அங்கங்களுக்குப் போவது வழக்கம். காரணம் தலையங்கம்தான், நாட்டின் போக்கினையும் ஏட்டின் போக்கினையும் காட்டும். ஆனால், அண்மைக்காலமாகத் தலையங்கத்தை முந்திக்கொண்டு சின்னஞ்சிறார்களின் தலைகள், கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்குகின்றன அல்லது கிணற்றில் மிதக்கின்றன.
      ஆனந்தப்பட்டுப் படிக்க வேண்டிய பத்திரிகைகளைக் கலங்கிய உள்ளத்தோடும், கசிகின்ற கண்களோடும் படிக்க வேண்டிய அவலநிலை யாரால் ஏற்பட்டது?
      சென்ற தலைமுறையில் பிள்ளைகளுக்கு இரவு உணவு ஊட்டிய பின்பு, அவர்களைப் படுக்க வைத்து, அவர்கள் தலைமாட்டில் உட்கார்ந்து, அர்ச்சுனன் - அபிமன்யு போன்ற வீர புருஷர்களுடைய கதைகளைச் சொல்லி, அவர்களைத் தூங்க வைத்த பாட்டிமார்கள் இன்று எங்கே? வீர சிவாஜியின் தாய் ஜீஜீபாய் தாய்ப்பாலை ஊட்டும்போதே, ரஜபுத்திர வம்சத்தினுடைய வீர வரலாற்றையும் சேர்த்தல்லவா ஊட்டினாள்!
      ராஜாளிப் பறவை கூட்டிலே இருக்கின்ற குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்கின்றவரைதான், உணவுப்பொருள்களைத் தேடிக்கொண்டு வந்து ஊட்டும். இறக்கைகள் வளர்ந்த பிறகு தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காகக் கூட்டிலேயிருக்கும் அக்குஞ்சுகளைத் தனது இறக்கையால் அடித்துக் கீழே தள்ளும். கீழே விழுந்து கொண்டிருக்கும் அந்த சின்னஞ்சிறு பறவை, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முதல் முறையாக இறக்கையை விரிக்கும். அன்றிலிருந்து அது தன் இறக்கையால் வாழத் தொடங்கும்.
      யானைகள் தம்முடைய கன்றுகளுக்குத் தண்ணீரில் நீந்தி வரும் பயிற்சி வேண்டும் என்பதற்காக சின்னஞ்சிறு கன்றுகளைத் தண்ணீரில் தூக்கிப் போட்டு, அவை தத்தளிக்கும்போது, துதிக்கையை நீட்டிக் காப்பாற்றும். இப்படியொரு பறவையும், யானையும் ஊட்டுகின்ற தன்னம்பிக்கையை, நம்முடைய பெற்றோர்கள் ஊட்டினால், ஏன் இத்தனை தற்கொலைகள்?
      பகத் சிங்கின் பூதவுடலை இரவோடு இரவாக சட்லெஜ் நதிக்கரையில் வைத்து எரித்துவிட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட பஞ்சாபிய தாய்மார்கள், விரைந்தோடி பகத் சிங்கின் ஈமப்படுக்கையில் இருந்த சாம்பலை எடுத்து வயிற்றில் பூசிக் கொண்டார்களே ஏன்? மாவீரன் பகத் சிங் போன்ற குழந்தைகளை ஈன்றெடுக்க வேண்டும் என்பதற்காக அல்லவா? அத்தகைய தாய்மார்களின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார்களா? இந்திய நாட்டிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபடாத ஓரினம், சீக்கியம் இனம் என்று குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டது எவ்வளவு பொருத்தம்?
      ஒரு காலத்தில் பாஞ்சாலங் குறிச்சியில் வாழ்ந்த தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்குப் பாலாடை மூலம் பாலூட்டும்போது, பாஞ்சாலங்குறிச்சி மண்ணையும் கரைத்து ஊட்டியது, வீரக் குழந்தைகளாக வளர வேண்டும் என்பதற்குத்தானே?
      முன்காலத்தில் பள்ளிகளில், கல்லூரிகளில் நீதிபோதனை என்றொரு பாடவேளை இருக்கும். எந்தப் பாடத்தை மாணவர்கள் மறந்தாலும், நீதி போதனைப் பாடத்தை மறக்கமாட்டார்கள். அது வயிற்றுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் அன்று; வைர நெஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுத்த பாடமாகும். அந்த வகுப்புகளைக் கல்வியாளர்களே காணாமல் அடித்துவிட்டார்களே!
      ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்பொழுதாவது - ஏதாவதொரு முனையில், ஒருமுறை தற்கொலை முயற்சி தோன்றத்தான் செய்யும் எனச் சொல்லுகின்றனர் பெரிங் போன்ற உளநூல் வல்லுநர்கள். துன்பங்களும் துயரங்களும் தரும் மன அழுத்தங்களை யாரும் தவிர்க்க முடியாது. ஆனால், அழுத்தங்களைத் தியானத்தாலும், ஆன்மிகப் பயிற்சியாலும் வெல்ல முடியும் என்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.
      ராமாயணத்தில் சீதாபிராட்டிக்கே அப்படியோர் அனுபவம் ஏற்பட்டது. தம்முடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அசோகவனத்தில், மாதவிக்கொடியைத் தூக்குக் கயிறு ஆக்கியபோது ஆச்சாரியனான அனுமன், ராமபிரான் பெயரைச் சொல்லிச் சீதையைக் காப்பாற்றினான். இதிலிருந்து ஆசிரியப் பெருமக்கள் நினைத்தால், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் இளம்பிள்ளைகளுடைய உயிரைக் காப்பாற்ற முடியும் என்பது தெரிகிறது அல்லவா? ஆனால், இன்று, சில ஆசிரியர்களாலும், கல்வியாளர்களாலும் மாணவர்கள் தற்கொலைக்கு உள்ளாவது, இந்நாட்டின் அவலம் அல்லவா?
      வயல்களில் நாற்று நடுவதற்குப் பெரும்பாலும் ஆண்களை விட மாட்டார்கள். பெண்கள் தாம் நடவு நடும் வேலையைப் பார்ப்பார்கள். ஏன் தெரியுமா? ஆடவர்களுடைய சூட்டுவிரலைப் பசும் நாற்றுகள் தாங்காது என்ற காரணத்தால், நடவு நடும் வேலை பெண்களிடம் விடப்படுகிறது. பயிர்கள்கூட வாடக்கூடாது, வதங்கக்கூடாது என்று சிந்தித்த பரம்பரையில் வந்தவர்கள், உயிர்களை வாட விடலாமா? மடியவிடலாமா?
      மாணாக்கர்களுடைய அறிவைச் சாணை பிடிக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அவர்களுடைய நெஞ்சுறுதியைக் கல்நாரால் இழுத்துக் கட்ட வேண்டியவர்கள் கல்வியாளர்கள். வைரமுடைய நெஞ்சு வேணும் - இது வாழும்முறைமையடி பாப்பா என்று மகாகவி பாரதி பாடியதைப் படிப்பித்திருப்பார்களேயானால், இன்று மாணவிகள் கிணற்றிலே மிதந்திருக்க மாட்டார்களே!
      இளம்பிள்ளைகளுக்கு உயிரின் அருமைப்பாட்டை ஹாலந்து நாடு (இன்றைய நெதர்லாந்து) எப்படிக் கற்பித்திருக்கிறது தெரியுமா? ஹாலந்து நாடு கடல்மட்டத்திற்குக் கீழே உள்ள நாடு. அதனால் கடல்நீர் உள்ளே வந்துவிடாமல், போல்டர்ஸ் (மதகுகள்) வைத்துத் தடுத்திருக்கிறார்கள். ஒருநாள் இரவில் பீட்டர் என்ற சிறுபையன், அந்த மதகு வழிப்பாதையில் வருகிறான். அப்பொழுது ஒரு போல்டரில் ஒரு துவாரம் ஏற்பட்டு, அதன் வழியே கடல்நீர் நகரத்துக்குள் வரத் தொடங்கியது. இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி. ஓசை எழுப்பி யாரையும் சுப்பிட முடியாது.
      அந்தச் சின்ன துவாரத்தில் தன் கட்டை விரலைச் செருகி, இரவு முழுவதும் தண்ணீர் பெருக்கெடுக்காமல் காத்துவிட்டால், பொழுது விடிந்ததும் மக்களுக்குத் தெரிய வந்துவிடும் என்று தீர்மானித்துக் கட்டைவிரலைச் செருகிவிட்டான்.
      குளிர்மிகுந்த நாட்டில், விடியும்வரை பீட்டர், வைரமுடைய நெஞ்சோடு மதகருகே உட்கார்ந்துவிட்டான். பொழுது விடிந்தவுடன் மக்களுக்கு உண்மை தெரிய வரவே, பீட்டரைப் பாராட்ட வேண்டுமென்று, அவனைப் போய் ஆர்வத்தோடு அரவணைத்துத் தூக்க முயன்றனர். ஆனால், பீட்டர் குளிரில் விறைத்துப்போய் பிணமாய் விழுந்தான்.
      உயிர் போவதாக இருந்தால் இப்படி அல்லவா போக வேண்டும் என்று உலகத்திற்குக் காட்டிவிட்டு இறந்தான். அவனுடைய தியாகம் என்றென்றைக்கும் நினைக்கும்படியாக இருக்க வேண்டும் என்று ஹாலந்து அரசு, அவனுக்கு அங்கே ஒரு சிலை எழுப்பிக் கெளரவித்திருக்கிறது. உயிரின் விலை இன்னதென்பதை அந்தச்சிலை, இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்திக் கொண்டே அங்கு நிற்கிறது.
      உலகத்தில் 16 நிமிடங்களுக்கு ஒரு தற்கொலை நிகழ்வதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாரதத்தில் மற்ற மாநிலங்களில் பசி, பட்டினி, வறுமையால் தற்கொலைகள் நிகழ்கின்றன. தமிழகத்தில், கல்விச்சாலைகளில் மன அழுத்தங்களாலும், வல்லுறவுகளாலும் நிகழுகின்றன.
      அதுவும் ஒரு குடும்பத்தில் ஏற்கெனவே இரண்டு, மூன்று பேர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களேயானால், அக்குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது இயல்பாய் நடக்கிறது என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மின்னியல் ஊடகங்களின் வளர்ச்சி, தற்கொலை முயற்சிகளுக்கு உந்து சக்தி ஆகிவிட்டது.
      தற்கொலைக்குக் காரணமான பாலியல் பிரச்னைகள் சென்ற தலைமுறையிலும் இருந்தன. ஆனால், அவை இன்றுபோல் தற்கொலை அளவுக்குக் கொண்டு சென்றதில்லை. பருவக்கோளாறுகளினால் கல்லூரி வளாகங்களில் நிகழ்ந்த சின்னஞ்சிறு குற்றங்கள், பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியாமல் போயின் மறைக்கப்பட்டன.
      ஆனால், இன்றைக்குக் குற்றங்களைத் தொடர்ந்து செய்வதற்கென்றே இணையதளங்களும், வலைத்தளங்களும், கட்செவி அஞ்சலும் துணை செய்கின்றன. நிகழ்ந்த தவறுகளைப் படமெடுத்து, அதனைப் பாதிக்கப்பட்டவருக்குக் காட்டி, ஊரறிய, உலகறிய அவற்றை உலாவவிட்டுவிடுவேன் எனும் பயமுறுத்தல்களினால் தற்கொலைகள் மிகுதியாக நடக்கின்றன.
      பெரிங் என்ற உளவியல் வல்லுநர், அமெரிக்க ராணுவத்தில் அடிக்கடி தற்கொலைகள் நிகழ்வதைக் கள ஆய்வு செய்தார். அதில் ராணுவத்தின் துறைசார்ந்த பொருள்களாலேயே, தற்கொலைகள் புரிந்து கொள்வதாகக் கண்டறிந்தார். தரைப்படை வீரர்கள் தாங்கள் ஏந்தியிருக்கும் துப்பாக்கிகளாலேயே சுட்டுக்கொல்கின்றனர்.
      கடற்படை வீரர்கள் கப்பல்களில் கட்டியிருக்கும் கயிறுகளாலேயே தூக்குப் போட்டுக் கொள்கின்றனர். வான் படைவீரர்கள் உயரத்தில் இருந்து குதித்து மாண்டு போகிறார்கள் எனக் கண்டறிந்தார். அந்த அடிப்படையில் பார்த்தால், மாணாக்கர்கள் கல்வி நிலையங்களை நடத்துகின்ற, கல்வி கற்பிக்கும் கல்வியாளர்களாலேயே, தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்வதாகக் கருத வேண்டியிருக்கிறது.
      ஆக, தற்கொலைக்கு மிகுதியான காரணம், இளைஞர்கள் மனத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தங்கள் எனலாம். இந்த மன அழுத்தங்கள் மாணாக்கர்கள் மனத்தில் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை ஏற்கனவே உருவாகியிருந்தால் அதனைப் போக்குகிறவர்களாகக் கல்வியாளர்கள் திகழ வேண்டும்.
      மாணவப் பருவத்தில் வகுப்பறைகளில் செவிமடுத்த சில செய்திகள் நினைவுக்கு வருகின்றன. அமெரிக்கக் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த ஜான் எஃப் கென்னடி முதன் முதலில் செனட் தேர்தலுக்கு நின்று தோற்று, சோகமாக - சோர்வாக வீட்டிற்குள் நுழைந்தார். அப்பொழுது தன் பிள்ளையின் மன அழுத்தத்தைப் புரிந்துகொண்ட அவருடைய தந்தை ஜோசப் கென்னடி, அவரை எப்படித் தேற்றினார் தெரியுமா?
      கோடீஸ்வரராகிய ஜோசப் கென்னடி மகனைத் தழுவிக்கொண்டு, மகனே, இந்தச் சின்ன தேர்தலில் தோற்றதற்கா கவலைப்படுவது? கவலைப்படாதே மகனே! என்னிடத்தில் இருக்கும் டாலர்களை வைத்து ஒரு புதிய அமெரிக்காவையே உருவாக்கி, உன்னை அதற்கு ஜனாதிபதி ஆக்குகிறேன், போ! என்று மகனின் மன அழுத்தங்களுக்கு மருந்து தடவினார் அந்த மாமனிதர்.
      "சிறுபிள்ளையிட்ட வேளாண்மை, வீடு வந்து சேராது' என நம் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. சிறு பிள்ளைகள் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராமல் போனால் தப்பில்லை. ஆனால், இன்று சிறு பிள்ளைகளே வீடு வந்து சேருவதில்லையென்பதுதான் பிரச்னை.
      கல்விப்பயிரை வளர்க்கும் கல்விப் பாத்திகளுக்குச் சென்ற பிள்ளைகள் வீடு வந்து சேராமல், காடு சென்றால், சுடுகாட்டுக்குச் சென்றால் மனக்குயில்கள் அழாதா?!
      "துன்பங்களும் துயரங்களும் தரும் மன அழுத்தங்களை யாரும் தவிர்க்க முடியாது. ஆனால், அழுத்தங்களைத் தியானத்தாலும், ஆன்மிகப் பயிற்சியாலும் வெல்ல முடியும்.'

      மலர்ந்த நெஞ்சங்களில் மனச் சலிப்புகள்...

      Dinamani

      By நெல்லை சு. முத்து

      First Published : 18 February 2016 01:49 AM IST


      ஒரு முறை ஆமூர், ஆரம்பப் பள்ளி ஒன்றில் "நிலாப் பயணம்' குறித்து உரையாற்றியபோது, "நிலா நிலா ஓடிவா' என்ற பாடலை மாணவர்களுக்கு அடி எடுத்துக் கொடுத்தேன். அனைவரும் ஒரே குரலில் முழுப்பாடலையும் பாடினார்கள்.
      அது சரி. அமர்ந்த இடத்தில் சோம்பலாய் உட்கார்ந்தபடி - நிலாவை நில்லாமல் ஓடி வா, "இண்டு இடுக்கு' எல்லாம் புகுந்து வா, மலை மீது ஏறி வா, மளிகைச் சாமான் வாங்கி வா என்கிறோமே. சிறுவயதில் "நிலவே உன்னிடம் நெருங்குகிறோம்' என்று அல்லவா பாடம் படிக்க வேண்டும்?
      ஒரு துணைக்கேள்வியும் கேட்டேன். மல்லிகைப்பூ கொண்டு வரச் சொல்லி மாணவிகள் கேட்பது சரி. தலையில் சூடிக் கொள்ளலாம். மாணவர்களுக்கு எதற்கு பூ என்று வினவினேன். பளிச்சென்று ஒரு பதில். கிராமப்புற மாணவர். ஏழு வயது இருக்கலாம். முழங்காலைக் கட்டி, தரையில் அமர்ந்தபடியே, "சாமிக்குப் போட, சார்' என்றாரே பார்க்கலாம். அந்த சமயோசிதப் புத்தி நகர்ப்புறங்களில் சற்றுக் குறைவுதான்.
      நடுநிலைப் பள்ளி மாணவர்களும் அறிவுத் தேடலில் சளைத்தவர்கள் அல்லர். பெர்முடா முக்கோணம், வேற்றுக்கிரகவாசிகள், கருந்துளை விண்மீன்கள், பறக்கும் தட்டுகள், மறுபிறவி, இரட்டை பிரபஞ்சம், புழுத்துளை அண்டங்கள் போன்ற அறிவியல் அதிசயங்களை ஆர்வமுடன் சந்தேகங்களாகக் கேட்கின்றனர். உயர்நிலைப் பள்ளி மாணவர்களோ விண்வெளி விஞ்ஞானி ஆவதற்கு என்ன படிக்க வேண்டும் என்று கேட்பதும் முறைதான்.
      சமீபத்தில் கோவை, தனியார் கல்லூரி ஒன்றில் அறிவியல் கண்காட்சி விழா மேடையில் அறிவியல் நண்பர் ஒருவர் மாயாஜால வித்தைகளின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டிக் கொண்டு இருந்தார். மாயாஜாலம் நடத்துவோர் தங்கள் கைகளில் "சித்து வேலைகள்' தயார் ஆகும் வரை, பார்வையாளர்களிடம் வெறுமனே கேள்விகள் கேட்பது வழக்கம். அவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் உத்தி இது.
      அதற்காக, தமிழில் ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியிலும் அலைபரப்பாகும் சின்னத்திரை நிகழ்ச்சிகளின் பெயர்களை நாள், நேரம் குறிப்பிட்டு ஒவ்வொன்றாக அடுக்கிக் கேட்டார். மாணவர்களோ கொஞ்சமும் அயராமல் "கோரஸாக' சரியான விடை அளித்தனர்.
      அசந்து போனேன். மூளைக்குள் "இதையெல்லாம்' எவ்வளவு கருத்தாகப் பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறார்கள்? மாணவப் பருவத்தின் இந்த "தகவல்'களால் வாழ்வில் பத்துப் பைசாவுக்குப் பிரயோஜனம் கிடையாதே. இளைஞர்களின் அறிவுத் திறனுக்கும் இழுக்கு அல்லவா?
      உள்ளபடியே கல்லூரி மாணவர்களில் நூற்றுக்கு நாற்பது பேர்தான் நம் புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்கிறார்கள். எஞ்சியவர்கள் தங்கள் சார்புச் சித்தாந்தங்களையே விவாதப் பொருள் ஆக்குகின்றனர். உயர்நிலைப் பள்ளியிலோ 50-60% மாணவர்கள் அறிவியல் உரைகளால் சிந்திக்
      கிறார்கள்.
      நடுநிலைப் பள்ளிகளில் 60-70% பேர் அறிவியல் செய்தியையும் கிரகித்துக் கொள்கிறார்கள். ஆரம்பப் பள்ளியினரோ நூற்றுக்கு 90 பேர் அப்படியே உள்வாங்குகிறார்கள். அவர்களை விட பிஞ்சு மழலைகள்தாம் நூற்றுக்கு நூறு முழுமையாக மனதில் பதியம் இடுகிறார்கள்.
      ஒருமுறை, மதுரையில் குடியரசு முன்னாள் தலைவர் கலாமை அரசு விருந்தினர் இல்லத்தில் சந்திக்க நேர்ந்தது. அங்கு ஒரு தனியார் கல்லூரிக்கு அறிவியல் உரை நிகழ்த்த வந்ததைக் கூறினேன். "பள்ளிக்கூடங்களுக்கு எல்லாம் போங்க' என்றார். மூன்றே வார்த்தை. அவர் எனக்கு இட்ட இறுதிக் கட்டளை, இன்றும் நிறைவேற்றி வருகிறேன்.
      பன்னிரண்டாம் வகுப்பு வரை தான் மாணவர்களை நல்லவர்களாகச் செதுக்க முடியும். அதன் பிறகு சட்டம், சாத்தான், ஆண்டவன் எவராலும் ஒருவரின் இயல்பினைத் திருத்தவோ மாற்றவோ இயலாது என்று அடிக்கடி கூறுவார் கலாம். அதனால்தான் கலாம் குடியரசுத் தலைவரான ஒன்றிரண்டு மாதங்களுக்குள் "இந்தியா 2020' கருத்தாக்கத்தினை ஐந்தாம் வகுப்பு மாணவர்க்கும், பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான சிறுவர்களுக்கும் பயன்படும்படி இரண்டு விதமாக மொழிபெயர்க்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அந்நூல்கள் உரிய காலத்தில் அரங்கேறின.
      2012-ஆம் ஆண்டு இலங்கை அரசு "மும்மொழித் திட்ட'த்தினை அறிவித்த தருணத்தில் அங்கு சென்றிருந்த கலாம், நெல்சன் மண்டேலாவின் வாக்கினை நினைவு கூர்ந்தார்; "எதையும் ஒரு மனிதனிடம் அவன் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மொழியில் சொன்னால் அது, அவன் தலையில் ஏறும். ஆனால், அதனையே அவன் தாயிடம் பேசிய மொழியில் சொன்னால், நெஞ்சத்தில் ஏறும்.' உண்மைதானே.
      முதல் தேவை ஆரம்பப் பள்ளியில் தாய்மொழிக் கல்வி. உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலக் கல்வி. கல்லூரிப் படிப்பில் இந்திய அல்லது அன்னிய மொழிகளில் ஏதேனும் புதிதாக ஒன்றை சேர்த்துப் படிக்கலாம்.
      இந்த வகையிலும், கிராமப்புற மாணவர்கள்தாம் நகர்ப்புறங்களில் அமைதியாக சாதனைகள் படைத்து வருகிறார்கள். நகர்ப்புறப் பள்ளி, கல்லூரிகளோ தேர்ந்த மாணவர்களைத் "தயாரிக்க'ப் பாடுபடுகின்றன. அதிலும் தனியார் கல்விக் கூடங்கள், மாணவர் உற்பத்திச் சாலைகளாகவே மாறிவிட்டன. சாதி, மத, இன, மொழி இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு, தேர்விலும் "பாஸ் மார்க்' ஒதுக்கப்படவில்லை என்றால் தங்கள் "அடையாள'த்தைக் காட்டிப் போராட்டம் நிச்சயம். அதிலும் மாணவர்களிடையே மாநிலம் சார்ந்த குழுப்பிரச்னைகளும் உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கு இல்லை.
      சமீப காலத்தில் புதியதோர் அடையாளம் உதயம் ஆகி இருக்கிறது. அவர் உள்நாட்டவரா, அயல்நாட்டவரா என்று பார்த்தும் உசுப்பிவிடுவோம். போதாக்குறைக்கு, மாணவர்களும் வயதுக்கு ஒவ்வாத விமர்சனங்கள், தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்தும் தர்க்கம் செய்கிறார்கள். "புரட்சி', "எழுச்சி', "மலர்ச்சி', "கிளர்ச்சி' என்று வெற்று அடைமொழி அட்டைகளைக் கழுத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு அலைவானேன்?
      மர்மமான முறையில் யார் இறந்தாலும், முதலில் அவர் எந்தக் கட்சிக்காரர் என்றுதான் பிரேதப் பரிசோதனை நடக்கிறது. சடலத்தின் சாதிச் சான்றிதழை வைத்துத்தான் ஆர்ப்பாட்டமே தொடங்கும். பிற்படுத்தப்பட்டவரையும் தாழ்த்தப்பட்டவர் என்றுதான் முழங்குவோம்.
      பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எந்தப் பருவத்தினரின் சந்தேகச் சாவு என்றாலும் பிரேதத்தில், "பெண்மை' பறிபோனவரா என்று ஆராய்ச்சி நடத்துவோம். சிறுவர்களுக்கே கூட ஆண்மைப் பரிசோதனையில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
      இப்போது ஆண்மை-பெண்மை இவற்றுக்கு நடுவே இன்னொரு "இடைமை' ஆரம்பம் ஆகிவிட்டது. இந்திய மக்கள்தொகையில் 0.05% மூன்றாம் பாலினத்தவராம். இங்கிலாந்தின் மெக்காலே உருவாக்கிய மாதிரி, அங்குள்ள 6.5 கோடி மக்களில் 1.5 சதவீதத்தினர்க்கான சட்டம் போலவே தங்களுக்கும் இந்தியச் சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் சிலர் அடம்பிடிக்கிறார்கள்.
      இனப்பெருக்க அங்கீகாரமோ, இல்லறமோ, நல்லறமோ? தனி அறைக்குள் ஒரே பாலினத்தார் இருவர் நட்பாகச் "சேர்ந்து' இருந்துவிட்டுப் போகட்டும். அதற்கு அரசுப் பதிவாளர் கையொப்பத்தையும் எதிர்பார்ப்பது ஏனோ?
      6500-8500 கிலோ மீட்டருக்கு அப்பால் மேலை உலகில் 1600-2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தேவ குமாரரும், அண்ணலும் சொன்ன உபதேசங்களை இங்கு ஏற்றுக் கொள்கிறோம். ஐரோப்பா, அரேபியா ஆகிய சொற்களின் ஹீப்ரு மூலச்சொற்கள் முறையே "இரெப்' (இரவு), "அரப்' (இருள்) என்பது யாருக்கேனும் தெரியுமா? வட மேற்கில் "சிக்கிய' குருவின் போதனையும் வாளேந்தி வரவேற்போம்.
      அதுமட்டுமா, கீழைக் கண்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் வெடித்த சிந்தனைகளையும் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்றோம். உலகின் மிகப்பெரும் பரப்பு கொண்ட நாட்டில் நகர்ப்புறத் தொழிலாளர்களை மேட்டுக்குடி வர்க்கத்தினர் ஒன்றிணைத்தனர். உலகில் மக்கள்தொகை மிகுந்த நாட்டில் "மூலதனம்' தந்தோரின் பெயரில் விவசாய வர்க்கத்தினர் இன்னொரு பக்கம். இடையில், ஒடுக்கப்பட்டோர் வடகிழக்கின் "புத்த'மதிகளையும் போற்றுகிறோம்.
      புறப்பட்ட நாடுகளில் இந்த சித்தாந்தங்கள் காலாவதி ஆன பின்னர், பரிணாம வளர்ச்சியில் தீவிரவாதப் பிரிவுகள் ஆகிவிட்டன. அவை இந்தியாவில் தலைப் பாகத்திலும், தலைநகரிலும், தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கி ஆயிற்று.
      பொதுநல ஆர்வலர்களும், மாணவரிடையே பரப்பும் எதிர்மறைச் சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவேண்டும். இளைஞர்கள் அரசியல் அமைப்புகளில் பங்கெடுப்பது மனித உரிமை ஆகலாம். அதுவே மாணவர் உரிமை என்றும் வாதாடலாமா?
      மக்கள் வரிப்பணத்தில் படிக்கச் செல்வோருக்கு எது முக்கியம்? கல்விக்கூடங்களில் படிப்பதால் மட்டுமே அவர்களுக்கு மாணவர்கள் என்று பெயர்.
      அதிலும், விடுதி மாணவர் வகுப்பிற்கே வரவில்லை என்றால் நிர்வாகத்தால் அவரைக் கண்டிக்கவும் இயலாது. பெற்றோரை வரவழைத்து எடுத்துச் சொல்வதிலும் சிக்கல். ""பல "லகரங்கள்' பணம் கட்டி "சீட்' வாங்கி ஆயிற்று. படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினால் விடுதி அறைக்குள் "அசம்பாவிதம்' செய்து கொள்வேன்'' என்று மிரட்டும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்களாம்.
      ஒருவகையில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் உடல் அல்லது வார்த்தை ரீதியிலான "ராக்கிங்'கிற்குத் தடை வந்துவிட்டது. படிப்பில் கவனம் செலுத்த விடாத செல்பேசிக்கும் தடை வந்தாயிற்று. மாணவரை அடிக்கக் கூடாது என்று ஆசிரியர்களுக்கே தடை விதிக்கப்பட்டு விட்டது.
      அதுசரி, நோயாளிகள், உடல்நலம் பெறுவதற்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள். மாணவர்களோ உடலும் உள்ளமும் நலம் பெறுவதற்காகக் கல்விக் கூடங்களுக்கு வருகிறார்கள். பள்ளி வளாகங்களில் பெற்றோர் வருகிறார்கள். இந்த உள்ளூர் அரசியல்வாதிகள் ஏன் பரிவாரங்களுடன் கும்பலாக வருகிறார்கள்?
      "நான் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இதுதான் - மாணவர்களது மலர்ந்த நெஞ்சங்களில் உங்கள் மனச் சலிப்புகளைக் கொட்டி அசுத்தப்படுத்தி விடாதீர்கள்' என்பார் கலாம். மாணவப் பருவத்தினரைப் படிக்க விடாமல், தற்கொலையைத் தூண்டும் அளவுக்கு ஒரு "மனச்சூழல்' தைரியம் தரும் அரசியல்வாதிகளுக்கும் நிச்சயம் இது பொருந்தும்.
      "எதையும் ஒரு மனிதனிடம் அவன் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்ட மொழியில் சொன்னால் அது, அவன் தலையில் ஏறும். ஆனால், அதனையே அவன் தாயிடம் பேசிய மொழியில் சொன்னால், நெஞ்சத்தில் ஏறும்.'

      ஊழியரல்லர் பணியாளரே!


      Dinamani

      By சமதர்மன்

      First Published : 18 February 2016 01:51 AM IST


      ஊதியம், பணி இந்த இரண்டு சொற்களுக்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொற்பமான ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு பணியினை செவ்வனே செய்து முடிக்கும் செயலே ஊழியம் ஆகும். ஊழியம் என்னும் சொல் சேவை எனவும் பொருள்படும்.
      அதேவேளையில், ஒரு கணிசமான தொகையை மாத ஊதியமாக பெற்றுக் கொண்டு ஒரு வேலையை செய்வது பணி ஆகும். அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் பணி இத்தகையதே.
      எனவே, அரசு வேலை செய்யும் கடைநிலைப் பணியாளர் முதல் மேல்நிலை அதிகாரி வரையிலும், துவக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரையிலும் உள்ள அனைவரையுமே அரசுப் பணியாளர் என்றே வகைப் படுத்த முடியும்.
      அரசுப் பணியாளர்களுக்கு உரிய அகவிலைப் படி உயர்வு உ ள்பட பல பண பலன்களை அரசு பட்டியலிட்டு வழங்கியே வருகிறது. தனியார் நிறுவனப் பணியாளருக்கோ அல்லது சுயதொழில் புரிவோருக்கோ இத்தகைய பண பலன்கள் சாத்தியமற்றவையே.
      அரசுப் பணியாளர்களை அரசு செல்லப் பிள்ளைகள் போல நடத்தி வந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து அரசுக்கெதிராக போராடவே அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களும் முன் வருவது அரசிடமும் பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
      சம்பளம், சலுகைகளை மட்டும் உயர்த்திக் கேட்கும் இவர்கள், ஊதிய உயர்வுக்கு ஏற்ப பணியை அரசு அதிகப்படுத்தினால் ஏற்றுக்கொள்வதில்லை. தனியார் நிறுவனங்கள் பணிச் சுமையைக் கூட்டிய பின்பு தானே ஊதிய உயர்வினை அறிவிக்கின்றன.
      அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களுக்கென இருக்கும் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல், அரசு கீழ்க்கண்ட சட்டதிட்டங்களை நடைமுறைப் படுத்தி நிர்வாகத்தை துரிதப்படுத்தலாம்.
      அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் அலுவலகம் வருவதை உறுதி செய்யவும், அலுவலகம் அல்லது பள்ளி முடியும் முன்பே வீட்டிற்கு செல்வதைத் தடுக்கவும் பயோ - மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறையை நடைமுறைப் படுத்தலாம்.
      ஆண்டுதோறும் அரசளிக்கும் 100 நாள்களுக்கும் மேற்பட்ட விடுமுறைகளை அனுபவித்த பிறகும், போலியான மருத்துவக் காரணம் காட்டி கணக்கு வழக்கு இன்றி விடுப்பு எடுக்கும் அரசுப் பணியாளர்களால் நிர்வாகத் தேக்கம் ஏற்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடும் அரசுப் பணியாளர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யலாம்.
      அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களின் பணிச் செயல்பாட்டைக் கண்காணிக்க அலுவலகம் மற்றும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தலாம்.
      அரசு நிர்ணயம் செய்திருப்பதைவிட குறைந்த அளவில் பணி செய்வோரைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
      அரசுப் பணியாளர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையானது பெரும்பாலான நேரங்களில் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட வெறும் ஆணையாகவே இருப்பதால், சம்பளப் பிடித்தம், பதவி இறக்கம், பணி நீக்கம் என குற்றத்திற்கு ஏற்ப உடனடி தண்டனையை அரசு வழங்கலாம்.
      பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை பொத்தாம்பொதுவாக முதலில் பணியில் சேர்ந்தோருக்கே முன்னுரிமை என 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பாணியில் வழங்காமல் தகுதி, திறமை உள்ள அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கலாம். இது அரசுப் பணியாளர்களிடையே போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்யும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
      திறமையுடன் செயல்படும் அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கலாம். இதன்மூலம் திறமையற்ற அதிகாரிகள் உருவாவதைத் தடுக்கலாம்.
      பணி நிரந்தரம் என்னும் கொள்கையைக் கைவிட்டுவிட்டு, தகுதி இருக்கும் வரையில் மட்டுமே ஒருவருக்கு அரசுப் பணி வழங்கலாம். ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனையை அரசே பணியிடத்தில் நடத்தி மருத்துவ தகுதியற்றவர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் (VRS) ஓய்வளிக்கலாம்.
      எல்லாவற்றிற்கும் மேலாக, கையூட்டு மற்றும் கிம்பளம் பெறுபவர்கள் ஆதாரத்துடன் பிடிபடும் பட்சத்தில் அவர்களைப் பாரபட்சம் பாராமல் உடனடியாக பணி நீக்கம் செய்யலாம்.
      அரசின் இது போன்ற நியாயமான நடவடிக்கைக்கு எதிராக கோஷம் போடும் அரசுப் பணியாளர் சங்கவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
      லஞ்ச லாவண்யத்தில் திளைத்த அரசு அலுவலர்கள் தகுந்த ஆதாரத்துடன் பிடிபடும் வேளையில், அவர்கள் அதர்ம வழியில் சேர்த்த சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்.
      சரி.. இது ஒரு புறம் இருக்க.. விஷயத்துக்கு வருவோம்.
      மக்கள்தொகை அதிகம் கொண்ட நமது நாட்டில், மக்களுக்குரிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய தேவை இங்கு அதிகமாக உள்ளது; ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தீர்வு காணப்பட வேண்டிய கோரிக்கை மனுக்களுடன் பொது மக்கள் கூட்டம் அலைமோதும் வேளையில், நிலைமையின் தீவிரத்தை உணராமல் வேலைநிறுத்தம் செய்பவர்கள் ஊழியரல்லர், வெறும் பணியாளரே.

      நல்லார் ஒருவர் உளரேல்...


      Dinamani

      By வ.மு. முரளி

      First Published : 16 February 2016 01:22 AM IST


      முன்பின் தெரியாத பயணிக்காக தனது வாகனத்தை அடகுவைத்த சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதில் உங்களையே பெருமிதம் கொள்ளச் செய்யும் நிகழ்வு அது.
      சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கே.ரவிசந்திரன் (57), ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டுவது ஒன்றுதான் அவருக்கு வருமானம்.
      இரு மாதங்களுக்கு முன் ராமாபுரத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் அவரது ஆட்டோவில் பயணித்தார். அண்ணா சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
      உடனடியாக ஓட்டுநர் ரவிசந்திரன் அந்தப் பயணியை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். தவிர, பயணியின் மகனுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
      அங்கு பயணியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இருதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், அவருக்கு அறுவைச்சிகிச்சை மூலம் இருதயத்தில் "பேஸ் மேக்கர்' சாதனத்தை உடனடியாகப் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
      அதற்கு சுமார் ரூ. 47 ஆயிரம் செலவாகும் என்ற நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பயணியிடம் அந்த அளவு பணமில்லை. சென்னைக்கு விரைந்து வந்த மகனும் குறைந்த அளவு பணமே வைத்திருந்தார்.
      அப்போது ரவிசந்திரன் சற்றும் யோசிக்காமல், தனது பிழைப்புக்கு ஆதாரமாக இருக்கும் ஆட்டோவை அடமானம் வைத்து பணம் திரட்டி மருத்துவமனையில் கட்டிவிட்டார். அதையடுத்து, அந்தப் பயணிக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, அவரும் உடல்நலத்துடன் ஊர் திரும்பிவிட்டார்.
      இதையறிந்த அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம், ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரனை பாராட்டி கெளரவித்தது. இந்தச் செய்தி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியாகி இருக்கிறது.
      அதன்பிறகு அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பல நல்லுள்ளங்கள் நிதியுதவி செய்ததால், தனது ஆட்டோவை அவர் மீட்டுவிட்டார் என்பது தனிக்கதை. ஆனால், முன்பின் தெரியாத யாரோ ஒருவருக்காக தனது ஆட்டோவை அடமானம் வைக்கும் பெருந்தன்மையும் காருண்யமும் யாருக்கு வரும்?
      இதுபற்றி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1956-இல் இதே சென்னையில் நடந்த மற்றொரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
      சென்னையின் ஜெமினி ஸ்டுடியோ முன்பு அதிகாலை வேளையில் ஒரு சாலைவிபத்து. இளைஞர் ஒருவர் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அனைவரும் அலுவலகத்துக்கு விரைந்துகொண்டிந்த நிலையில், யாருக்கும் காயமடைந்த இளைஞரைக் கவனிக்க நேரமில்லை.
      அப்போது அந்த வழியே வந்த கூலிவேலை செய்யும் மூதாட்டி ஒருவர் அந்த இளைஞனைக் கண்டு பதைபதைத்தார். அருகில் இருந்த ஆட்டோவை வரவழைத்து, அந்த இளைஞரை அதில் கிடத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அந்த மூதாட்டி.
      சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அந்த இளைஞர் உயிர் பிழைத்தார். அதுமட்டுமல்ல, மயங்கிக் கடந்த அந்த இளைஞரின் சிகிச்சைக்காக, தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தார் அந்த ஏழைத் தாய்.
      இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த அந்த மூத்த பத்திரிகையாளர், எல்லாக் காலங்களிலும் இத்தகைய உத்தமமான மனிதர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் அறிவதில்லை என்றார்.
      சிந்தித்துப் பாருங்கள். அறிமுகமில்லாத மேற்கு வங்கப் பயணிக்காக தனது வாழ்வாதாரமான ஆட்டோவை அடமானம் வைத்த ஆட்டோ ஓட்டுநரும், சாலையில் கிடந்த இளைஞனைக் காப்பதற்காக தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்த மூதாட்டியும் எதற்காக அவற்றைச் செய்தார்கள்?
      முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும் மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் இலக்கியத்தில் இடம்பெற்றார்கள். அவர்களின் பரம்பரை நீட்சியா இவர்கள்? எதுவாயினும், தங்கள் எதிர்காலத்தைவிட நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய கடமையின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
      இந்த இடத்தில் 20 அம்சக் கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும், அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் ஆசிரியர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களது செயலின் அர்த்தமின்மை புரியும்.
      ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராட அவர்களுக்கு உரிமை உண்டுதான். ஆனால், அவர்களின் போராட்டம் மக்கள்நலனைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது.
      மக்கள் அளிக்கும் வரிப்பணத்தில்தான் தாங்கள் ஊதியம் பெறுகிறோம் என்பதை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மறந்ததால், அரசுப் பணிகள் பல நாள்களாக முடங்கிக் கிடக்கின்றன. இது கடமை தவறுவது அல்லவா? கடமையை நிறைவேற்றுபவருக்கே உரிமைகள் உண்டு என்பார் மகாத்மா காந்தி. அதை நமது தமிழக அரசுப் பணியாளர்கள் மறந்தது ஏன்?
      சாலையில் அடிபட்டுக் கிடந்தவரைக் கண்டு வாடிய மூதாட்டி அளித்த மூக்குத்திக்கு, நமது அரசு ஊழியர்கள் பெறப்போகும் லட்சக் கணக்கான ஓய்வூதியம் நிகராகுமா?
      நிர்வாக இயந்திரத்தின் உறுப்புகளான அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் ஒரு சதவீதம் பேர் கூட இல்லை. ÷ஆனால், இந்த நாடு உயிர்ப்புடன் திகழ்வது, தன்னலமற்ற சேவைக்கு உதாரணமான ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன், யாரோ ஓர் இளைஞனைக் காப்பாற்ற தனது மூக்குத்தியைக் கழட்டிக் கொடுத்த ஏழை மூதாட்டி போன்றவர்களால் தான்.
      இதைத்தான், "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்று ஒளவைப் பாட்டி மூதுரையில் கூறிச் சென்றாரோ?

      Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

      Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...