Saturday, March 5, 2016

PhD research period is also teaching experience: UGC



Period spent on acquiring a PhD degree without any leave will now be counted as teaching experience of candidates applying for direct recruitment to vacant positions of faculties or promotion in the higher educational institutions.

The University Grants Commission (UGC) recently approved a proposal in this regard at a meeting here.

“The period of active service spent on pursuing research degree, ie, for acquiring PhD degree simultaneously without taking any kind of leave may be counted as teaching experience for the purpose of direct recruitment/promotion to the post of associate professor and above.” the commission decided .

The commission’s decision was seen in the academic circles as an effort to primarily facilitate filling up of posts lying vacant in large numbers across the country’s universities and other higher educational institutions.

Many of the universities and other higher educational institutions demand at least two to three years teaching experience for recruitment to vacant posts of faculties.

“We have large number of unemployed meritorious PhD holders. The decision to treat the period spent by them in acquiring a PhD degree as teaching experience will not only open doors of employment to many of such degree holders, but also facilitate institutions fill up their teaching positions lying vacant for years,” official sources said.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு மறுசீராய்வு மனு மீதான விசாரணை 11–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, 

தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக பஸ் எரிக்கப்பட்டதில் 3 மாணவிகள் கருகி பலியானார்கள். இந்த வழக்கில் முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதனை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மறுசீராய்வு மனுக்கள் மீது 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்ற உத்தரவின் அடிப்படையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜரானார். குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் நாகேஸ்வர ராவ், மற்றும் சுசில் குமார் ஆகியோர், இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டபோது அதன் காரணமாக எதிர்பாராதவிதமாக நடைபெற்றதாகும். எனவே மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை என்பது எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது பற்றியும், இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்துவரும் நிலையில் தண்டனையை குறைத்தால் அது குற்றவாளிகளுக்கு இரட்டை சலுகைகள் வழங்கியதுபோல் இருக்கும் என்பது குறித்தும் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர். இந்த வழக்கின் விசாரணை 11–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எம்ஜிஆர் 100 | 15 - நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!

Return to frontpage

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.

காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.

அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.

எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.

ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.

அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.

அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.

உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற

‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’

பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .

எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்

‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’

என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...

‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், விஐபி என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு.

1975-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’. சென்னையில் நடந்த இதன் வெற்றி விழாவில் என்.டி.ராமராவ், சவுந்தரா கைலாசம், பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், சவுகார் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘மற்ற நடிகர்களின் பல படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நண்பராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார்’’ என்று விழாவில் முக்தா சீனிவாசன் பாராட்டிப் பேசினார்.

இனி மக்கள்தான் எஜமானர்கள்



DAILY THANT HI

தமிழகத்தின் 15–வது சட்டசபையை உருவாக்குவதற்கான தேர்தல் தேதி மே 16 என்றும், ஓட்டு எண்ணிக்கை 19–ந் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதே தேதிதான் கேரளாவுக்கும், புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியாகும். தமிழகத்தில் முதல் சட்டசபை 1952–ம் ஆண்டு முதல் 1957 வரையிலும், 2–வது சட்டசபை 1957 முதல் 1962 வரையிலும், 3–வது சட்டசபை 1962 முதல் 1967 வரையிலும் இயங்கியது. இந்த மூன்று சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்து ஆட்சியை அமைத்தது. 4–வது சட்டசபை தேர்தல் 1967–ம் ஆண்டு நடந்தது, இதில் மறைந்த அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்தது. இடையில் அவர் மறைந்தவுடன் கருணாநிதி முதல்–அமைச்சரானார். ஆனால், இந்த சட்டமன்றம் 5 ஆண்டுகள் முழுமையாக இயங்காமல், அவர்களாலேயே 1971–ல் கலைக்கப்பட்டது. மீண்டும் 5–வது சட்டசபை 1971 முதல் 1976 வரை தி.மு.க.வில் பெரும்பான்மையோடு இயங்கியது. நெருக்கடிநிலை பிரகடன நேரத்தில் அந்த சட்டசபையும் கலைக்கப்பட்டது. அடுத்து 1977–ம் ஆண்டு நடந்த 6–வது சட்டசபை தேர்தலில் மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 1980–ம் ஆண்டு அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.

7–வது சட்டசபை தேர்தல் 1980–ல் நடந்து 1984 வரை அ.தி.மு.க.வின் பெரும்பான்மையோடு இயங்கியது. 1985–ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைப்பெற்று வந்தநேரத்திலே 8–வது சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. அந்த தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 1987–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தவுடன், 1988 தொடக்கத்தில் கலைந்தது. 1989–ம் ஆண்டு 9–வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 1991–ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தது. 1991–ம் ஆண்டு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 10–வது சட்டசபைக்கான தேர்தல் 1991–ம் ஆண்டு நடந்து அதில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த சட்டமன்றம் முழுமையாக 5 ஆண்டுகள் இயங்கியது. 1996–ம் ஆண்டில் 11–வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 2001–ம் ஆண்டுவரை பதவியில் இருந்தது. மீண்டும் 2001–ம் ஆண்டு நடந்த 12–வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

அடுத்து 2006–ம் ஆண்டில் 13–வது சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க. வெற்றிபெற்று 2011 வரை கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் 2011–ம் ஆண்டு 14–வது சட்டபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 15–வது சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நேற்று முதல் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்துவிட்டன. புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவோ, செயல்படுத்தப்படுவோ கூடாது. தற்போது அனைத்து கட்சிகளின் பார்வையும் மே 16–ந் தேதியை நோக்கித்தான் இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள்தான் எஜமானர்கள். தமிழ்நாட்டில் 162 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. இதுபோல, இளைஞர்களின் ஓட்டும் கணிசமாக இருக்கிறது. பொதுவாக ஆண்களின் ஓட்டு பரவலாக பிரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பெண்களின் ஓட்டும், இளைஞர் சமுதாயத்தின் ஓட்டும் பெரும்பாலும் ஒருபக்கமாக சாயும் என்பதால், இவர்களை குறிவைத்தே தேர்தல் அறிக்கைகளும் பிரசாரங்களும் இருக்கும். பிரசாரங்களில் அனல் பறக்கட்டும். ஆனால், தனிப்பட்ட தாக்குதல்களைக்கொண்ட ஆக்ரோஷங்கள் வேண்டாம், மாணவர்களின் தேர்வு நேரம் என்பதால், அவர்களுக்கு இடைஞ்சல் செய்யும் வகையில் ஆர்ப்பாட்ட பிரசாரம் வேண்டாம் என்பதே அரசியல் கட்சிகளுக்கு பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோளாகும். இந்த தேர்தலில் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்று எல்லா அணிகளும் சொல்கிறார்கள். ஆனால், யார் ஆட்சி அமைத்தாலும், அது புதிய வரலாறு, புதிய சாதனையாகத்தான் இருக்கும்.

மின்னினாலும் பொன் வேண்டாம்!

DINAMANI

By அழகியசிங்கர்
First Published : 05 March 2016 01:01 AM IST

தினசரியில் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்வு என்ற செய்தியைப் படித்தேன். என்ன உயர்வாக இருந்தால் என்ன? தங்கம் விற்கும் கடையில் கூட்டம் குறைவதே இல்லை. தங்கம் எப்போதும் பிரச்னைக்குரிய உலோகமாகவே இருக்கிறது. அதை வாங்குவது ஒரு போதை என்பதால், அதைப் பத்திரப்படுத்துவது ஆபத்தானது. 
 சில ஆண்டுகளுக்கு முன், என் நண்பர் ஒருவர் தன் மனைவியின் நகைகளை எல்லாம் ஒரு திருமண வைபவத்தில் காணாமல் போக்கிவிட்டார். உண்மையில், அந்த நகைகளை நெருங்கிய உறவினர்கள் திருடி வைத்திருந்தார்கள். தங்கம் என்றால் எப்படியெல்லாம் உறவினர்கள் கூட மாறி விடுகிறார்கள்? 
 ஓராண்டுக்கு முன், என் மனைவி கையில் 2 லட்ச ரூபாய் வைத்திருந்தார். அது அவரது சேமிப்புப் பணம். அவருக்கு அந்தப் பணத்தில் நகை வாங்க வேண்டுமென்று தோன்றியது. நான் வேண்டாம் என்று சொன்னால் கேட்கப் போவதில்லை.
 ஒரு பிரபலமான நகைக் கடைக்கு அழைத்துப் போனேன். கடை ஊழியர்கள் எங்களை வரவேற்ற விதத்தைக் கண்டு பிரமித்துப் போனேன். உள்ளே சென்று தங்கச் சங்கிலி வாங்க வேண்டுமென்று சொன்னோம். அந்த இடத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். 
 என் மனைவி பலவிதமாக தங்கச் சங்கிலிகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு சங்கிலியை வாங்காமல் ஏன் இப்படி செய்கிறார் என்று எனக்குத் தோன்றியது. பின் இறுதியில், அரை மனதாக ஒரு சங்கிலியைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஊழியர்கள் விடவில்லை. 
 என்னையும் தொந்தரவு செய்தார்கள் எதாவது வாங்கும்படி. நானும் ஒரு சங்கிலியை எடுத்துக்கொண்டேன். சின்னச் சங்கிலியாக இருந்தாலும் விலை அதிகம் கொடுத்து வாங்கினோம்.
 பின் காப்பியோ குளிர்பானமோ குடிக்கச் சொன்னார்கள். நான் சர்க்கரை இல்லாத காப்பி சாப்பிட்டேன். நகையின் விலையில் கொஞ்சம் குறைத்துக்கொள்ளச் சொன்னேன். அவர்கள் நகைத் தயாரிப்பு செலவில் பெரிய மனது பண்ணி கொஞ்சம் குறைத்தார்கள். 
 அன்று அவர்கள் தொந்தரவு செய்து மாதம் ரூ.5,000 கட்டும்படி சீட்டில் சேர்த்தார்கள். 11 மாதம் கட்டும் சீட்டில் சேர்ந்தேன். 11 மாதம் கழித்து நகையை வாங்கிக் கொள்ளலாம்.
 வீட்டிற்கு வந்தபோது மனம் வேதனை அடைந்தது. 2 லட்ச ரூபாய் பணம் என்பது எவ்வளவு பெரிய தொகை. ஆனால், கையில் அடங்குகிற மாதிரி இந்தத் தங்கச் சங்கிலிகளை வாங்கிக்கொண்டு வந்து விட்டோமே என்று தோன்றியது. 
 மேலும், என் வாழ்க்கையில் முதன் முதலாக தங்கச் சங்கிலியை அணிந்து கொண்டதால், பாரமாக அது கழுத்தில் தொங்குவதாக தோன்றியது. ஓய்வுபெற்ற பிறகு பகல் நேரத்தில் தூங்கும் வழக்கத்தை நான் வைத்திருக்கிறேன். 
 அதுமாதிரி நான் தூங்கும் போது நகைப் பற்றிய கவலை என்னிடம் இருந்துகொண்டே இருந்தது. திடீரென்று விழித்துக் கொள்ளும்போது என் கழுத்தைத் தொட்டு பார்த்துக் கொண்டேன். இது என்னடா புதிய தொந்தரவா இருக்கிறதே என்று நினைத்துக் கொள்வேன்.
 ஒருமுறை மயிலாடுதுறைக்குச் சென்றபோது, ஞாபகமாய் வீட்டில் தங்கச் சங்கிலியைக் கழற்றி பத்திரப்படுத்தி விட்டுத்தான் சென்றேன். பாருங்கள்.. நான் எவ்வளவு சுதந்திரமான மனிதன்? இந்தத் தங்கச் சங்கிலியால் என் சுதந்திரம் பறிபோய்விட்டது. 
 என் அடுக்ககத்தில் கீழே நான்தான் இரவு நேரத்தில் கதவைப் பூட்டும் வழக்கம் உள்ளவன். இரவு நேரத்தில் நான் பனியனைக் கழற்றிவிட்டு கீழே இறங்கி கதவைத் தாழ்ப்பாள் போடுவேன். இந்தத் தங்கச் சங்கிலியை அணிந்தபிறகு, என் கற்பனை விபரீதமாக சிறகு விரித்து அடிக்கிறது.
 யாரோ ஒருவன் தினமும் என்னைக் கண்காணிப்பவன், இரு சக்கர வாகனத்தில் வந்து என் தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு ஓடிப் போவதுபோல் கற்பனை செய்கிறேன். 
 அதனால், கீழே போகும்போது சட்டையை அணிந்துகொண்டுதான் போகிறேன். இந்தத் தங்கச் சங்கிலி இல்லாவிட்டால் நான் இப்படியெல்லாம் கவலைப் பட்டிருக்க மாட்டேன்.
 மேலும், சீட்டு கட்டுவதற்காக நான் ரூ. 5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தியாகராய நகரில் உள்ள அந்த நகைக் கடையின் கிளைக்குப் போக வேண்டியிருந்தது. அந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் எனக்குப் பெரிய தொகையாகப்பட்டது. 
 அவர்கள் கொடுக்கும் சீட்டு அட்டையையும், பதிவுச் சீட்டையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியிருந்தது. ஒருமுறை தவறுதலாக அட்டையை எங்கோ வைத்துவிட்டேன். என் மனம் தடுமாறி விட்டது.
 பல இடங்களில் தேடித் தேடி பின் அட்டையைக் கண்டுபிடித்தேன். கண்டு பிடித்தபின் நான் பெரிய சாதனை செய்து விட்டதாகவே நினைத்தேன். 
 எப்போது தங்கச் சீட்டு முடியுமென்று ஒவ்வொரு மாதமும் தவமிருந்தேன். ஒரு வழியாக இந்த மாதம் முடிந்தது. நகை வாங்கச் செல்லலாமென்றால் நகையின் விலை ஒவ்வொரு நாளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டே போகிறது. நான் சீட்டு துவங்கிய நாளிலிருந்து நகையின் விலை பலமடங்கு அதிகரித்துவிட்டது. 
 இந்த முறை நகை வாங்க நகைச் சீட்டை எடுத்துக்கொண்டு நானும் மனைவியும் கடைக்குச் சென்றோம். இரண்டு வளையல்கள் வாங்கி, சீட்டுப் பணம் தவிர, மேலும் ஏழாயிரம் பணம் கட்டினோம். அவர்கள் உபசரித்து சீட்டுப் போடச் சொன்னார்கள். இந்தச் சீட்டு கட்டினதால் பெரிய லாபம் இல்லை என்று சொன்னேன். ஆனால், அவர்கள் வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். 
 வளையலை எடுத்துக்கொண்டு ஓட்டமாய் ஓடி வந்து விட்டோம். இனிமேல் நகைக் கடை பக்கமே போகக் கூடாது என்று முடிவு எடுத்தோம்.
 ஆமாம். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று சொல்வார்கள். இப்போதோ மின்னினாலும் பொன் வேண்டாம் என்று சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.

Blade left behind in lung during surgery, 2-yr-old dies

TIMES OF INDIA

New Delhi: A two-year-old child undergoing treatment at Safdarjung Hospital for pus in the lung cavity died allegedly due to medical negligence.
The child's parents have complained to police that the surgeons who operated on her to take out the pus, left behind a surgical blade which led to complications and death.

TOI spoke to Dr A K Rai, medical superintendent of the hospital, who accepted that the surgical blade was left behind during the surgery. He, however, added that the surgeons informed the family about this and operated on her again to remove the blade.
"Despite the second surgery, the child's condition did not improve. We were investigating the cause of the infection, when the family left against medical advice with the patient. Later, we got to know that she had succumbed to the condition," the superintendent said.

The parents, residents of Wazirabad in northeast Delhi, have complained to police for action against the doctors. The complain is also being forwarded to the Medical Council of India (MCI) for necessary action.

"If the MCI finds the doctors guilty, suitable action will be taken," said one of the hospital authorities.

Medical colleges asked to give student intake details


Tamil Nadu Medical Council (TNMC) has written to the Deans of all government and private medical colleges in the State to periodically furnish details of intake of students in a bid to curb malpractice in admitting students, mainly in postgraduate courses, beyond the sanctioned number of seats.

The action comes against the backdrop of a recent order by the Madras High Court directing the TNMC to allow registration of the degrees of four doctors who completed their postgraduation in a government hospital. The TNMC had earlier refused the registration as the hospital only had Letter of Permission (LOP) from the Medical Council of India (MCI) and not proper recognition.

“Many such cases are being reported of late.

At least in this case, they had the LOP. There are many colleges, mainly private colleges, which do not even have the LOP. If the allowed seats are 20, the colleges will take 24 students,” said K. Senthil, president, TNMC.

Stating that the TNMC was planning to go for appeal in recent case, Dr. Senthil added that the idea behind demanding details from the colleges was to prevent this kind of malpractice.

He said that some colleges cleverly admitted students from other States in these unrecognised seats and once they completed the degree they were asked to register with the medical council in their respective States instead of the TNMC. “Only when all of them come to register with us, we will know that the number has exceeded the recognised seats. Otherwise, it will go unnoticed,” he said.

He added that to overcome this, the MCI had recently sent a circular instructing that all students should mandatorily register at the States where they completed a course after which they were free to register in their respective States. The TNMC had also urged the students to visit the MCI website where details of number of recognised seats in every course in every college were provided.

MCI recently sent a circular instructing all students to register at the States where they complete a course








Uncertainty over appointment of VCs

HINDU 

With model code coming into force, 2 varsities will remain headless

With the election model code of conduct coming into force on Friday, there is uncertainty over the appointment of Vice Chancellors to the University of Madras (UNOM) and the Madurai Kamaraj University (MKU). The universities have remained headless for two months and eight months respectively.

Last month, one of the members of the MKU Vice-Chancellor search committee, Prof Mu Ramasamy, had quit, levelling serious allegations against its convener C Murukadas.

Similarly, a member of the UNOM VC search committee, Surendra Prasad, remained incommunicado following alleged difference of opinion with other members over finalising the shortlist of names for the top post.

In this backdrop, a cross-section of academics feels that the universities might have to remain headless till a new Government is in place in May.

“State universities have only academic autonomy. The administrative and financial powers vest with the government. Since finance comes largely from the State government and a portion from the Centre, the universities must abide by the norms of the Election Commission,” feels former UNOM Vice Chancellor Prof S P Thyagarajan.

According to him, with the mode code of conduct in place it would only be appropriate for the universities to seek special exemption from the Election Commission quoting the necessity for appointing a new Vice-Chancellor. “The government must justify the request for exemption from the model code of conduct, such as if there is an impending evaluation of the university for accreditation or for (availing any statutory) status,” he explained.

Association of University Teachers president M. Ravichandran said since the Governor nominates a person to the search committee with the government’s help, it rests with the government to take up a university’s case.

There has been at least one instance in the recent past when the Election Commission has given relief to a university.

Former Vice-Chancellor of Anna University M. Ananadakrishnan recalled that the Rajasthan government had appealed to the Election Commission through the Governor-Chancellor that the Rajasthan University had advertised a large number of faculty vacancies but since the model code of conduct was put in place interviews could not be held. “The Election Commission gave them a special permission to conduct the recruitment,” Prof. Anandakrishnan recalled.

However, he was of the view that since only two more months were left for polling, the Election Commission may not find it appropriate to grant special permission for the appointments.

Engineering colleges in TN in trouble, 17 apply for closure

TOI 

COIMBATORE: A women's engineering college in Namakkal has not seen a new admission for the past two years. The college's management has been using faculty from their other institutions to teach third and fourth year students, because it is economically unviable to recruit staff for just 350 students. This is the situation in almost 50 engineering colleges in the state.
Alarm bells have been getting louder with engineering colleges shutting shop or in the process of closure. More than 30 engineering colleges are likely to either shut down or convert themselves into arts colleges or schools over the next two to three years. Educational consultants say 32 out of the 539 engineering colleges in the state saw less than 100 admissions in 2014.
AICTE sources admitted that 17 technical institutions have applied for closure this year. "This is not new, even last year we had applications from some colleges which wanted to shut down," said a Coimbatore-based AICTE member. "A few more might follow," he said. A college needs to get approval from Anna University and an no objection certificate from the state government for AICTE to sanction its closure. "The colleges would have to function until their current batches complete their courses," said the official.
"Many grade three engineering colleges are trying to convert themselves into schools or Arts and Science Colleges, because they see a better demand there," said Chennai-based educationist J P Gandhi. "AICTE rules say that institutions should have a staff strength based on its sanctioned strength and not existing strength. But, they can't meet salaries with just 100 students," he said.

More awareness regarding career options in other fields like science, law, humanities and arts besides college rankings and better placements are cited as reasons for colleges shutting shop. "The declining demand in engineering education is not a new phenomenon and with emerging alternate careers, the problem is bound to get worse," said S Vaidhyasubramaniam, Professor of Management & Adjunct Professor of Law. "The remaining students have realized that only the top 50 colleges get placements, so they want only a grade I or grade II College," said Gandhi. "The pass percentage of grade III colleges is less than 50%," he said.

"We did not get any new admissions in 2013, and the previous batches also had less than 250 students," said a former lecturer at the Namakkal engineering college, seeking anonymity. "In the 2012 intake, we had just 98 students," he said. "So, now the college functions with just five former engineering college students teaching the third and fourth year students," he added. The women's engineering college belongs to a group that runs two more engineering colleges, besides a medical college. "Their other colleges too see an admission rate of only 30% to 40%. Some of the staff teach at the women's college," said the lecturer.

"There are at least three colleges in Namakkal, one in Salem and another in Sangagiri which did not admit any students last year," said Moorthy Selvakumar, an Erode-based educational consultant. "All these colleges might have applied for a formal closure this year," he said.

Friday, March 4, 2016

Convocation set to go down in history


TOI 

Kolhapur: The 52nd convocation ceremony of the Shivaji University, Kolhapur (SUK), to be held on Saturday, will witness the most degrees being handed out to engineering graduates this year.

According to an SUK report, with 11,832 degrees, engineering and technology graduates are topping the charts among the total 52,160 graduates, who will receive degree certificates this year. Students from the commerce faculty will be following second with 11,287 degrees. This is followed by the science stream with 9,224 degrees.

Mahesh Kakade, the controller of examinations (CoE), SUK said that this is the highest number of conferred degrees recorded in the history of the university. Of the total degrees, 24,360 will be conferred in presence, while 27,800 will sent to the students via courier. Apart from this, as many as 301 PhD and MPhil scholars too will also be awarded their degrees during the event.

The Institute of chemical technology (ICT) vice-chancellor and Padmashri awardee G D Yadav will be the chief guest at the event. Yadav was selected for the award earlier last month.

"We will confer degrees to 26,071 male candidates. In all, 26,089 female students will get their degrees this convocation ceremony," he said.

According to a university official, the main event for the convocation ceremony will take place at the Lokkala kendra on the university campus. The distribution of degrees will begin as early as 7.30am till 12.30pm and later from 5pm to 6pm to manage the crowd at exam center 2 in the campus. The main event, according to the officials, will begin at 1.30pm at the university campus.

The officials added that the whole event will be webcast on the university website at www.unishivaji.ac.in.

For the proper management of crowd, a team of volunteers has been formed to handle the crowd, which is estimated at more than 50,000 people. The necessary security management is the top priority for the university. Entry will be allowed from the university's gate number two for the general public, while VIPs can enter from gate number one.

During the main event Priyanka Patil, a student of MA English will be conferred with the coveted president's medal for her overall excellence in the sports, cultural activities, academics and community services during the academic year 2014-15.

The SUK started operations in 1962 with 34 affiliated colleges and around 14,000 students with five postgraduate departments on campus. Today, the number of affiliated colleges has gone up to 282 and the student strength up to three lakh with 40 postgraduate departments on campus. The university imparts education in 10 major faculties of arts, social science, commerce, education, fine arts, law, medicine, science, ayurvedic medicine, engineering and technology.

Ola goes micro, to offer rides starting at Rs 50

TIMES OF INDIA

CHENNAI: In a bid to be the cheapest cab operator in the city, Ola has introduced a new category in its operations micro'. With the minimum fare being `50, it could be the equivalent of a short-distance autorikshaw ride one can get in the city.

The new category will have smaller and entry-level cars like WagonR, Datsun Go with a minimum fare of `50.These cars have smaller engines and higher mileage. Ola has also introduced a base fare of `40 for the first time."The meter reads `40 when the trip starts and every kilometre after that will cost `6 with a ride time charge of `1 per minute," said a source in Ola. For example, a 1km trip would cost `46 plus ride time charges but the payable fare would be `50 plus ride time charges, `50 being the minimum micro fare. Ola mini costs `80 for the first 4km and `10km after that.

On the app, the availability of this category is very low.Sources in Ola say this a pilot project. "The demand is very high for the category . We wil scale it up soon," the source said.

In early February, Uber slashed its fares by Rs 2 on both UberGo and UberX cabs. The former costs `6km while the latter is available at `7km UberGo has a base fare of Rs 30 and a ride time charge of 1 km. Other cheap options in the city include Taxi For Sure (TFS), which is owned by Ola It has a minimum fare of `59 for the first 3km and `8km af ter that. It has a higher ride ti me charge of `1.5km though Ola introduced two-whee ler services in Bengaluru charging `2km with a mini mum fare of `30. The compa ny , however, declined to com mit a similar service in the city.

பல்கலைக் குளறுபடிகள்


Dinamani


பல்கலைக் குளறுபடிகள்

By அ. அறிவுநம்பி

வெளிநாடு ஒன்றில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு. அதில் கலந்துகொண்ட பலநாட்டுப் பேராளர்களும் அவரவர் முகவரி அட்டைகளைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். அப்படி என்னுடைய முகவரி அட்டையைப் பெற்றுக் கொண்ட மேலைநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் இந்தியாவிற்கு வந்தார்.
புதுவையில் என்னுடைய அறைக்கு அவர் வந்து இருவருமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, சில கடிதங்களை அஞ்சல்காரர் தந்து சென்றார். அந்த உறைகளைப் பிரித்தபோது அவற்றில் இரண்டு வெவ்வேறு பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்ட காசோலைகள் இணைக்கப்பட்டிருந்தன. அதனுடைய வடிவம், வண்ணம் இரண்டையும் பார்த்த அந்தப் பேராசிரியர் இரண்டு காசோலைகளையும் கையிலெடுத்தார்.
"ஆமாம், ஒன்றில் ஐநூறு ரூபாய் எனவும் மற்றொன்றில் ஆயிரம் ரூபாய் எனவும் எழுதப்பட்டுள்ளதே.. வெவ்வேறு பணிகளுக்கான சன்மானமா அந்தத்தொகை' என்று கேட்டார். இல்லையில்லை இரண்டுமே முனைவர்பட்ட (பிஎச்.டி.) ஆய்வேடுகளை மதிப்பிட்டமைக்கான மதிப்பூதியம் என்றபோது அவர் வியப்புற்றார்.
அதெப்படி ஒரே பணிக்கு இரண்டு விதமான மதிப்புத்தொகை இருக்க முடியும் என்ற அவரின் கேள்வி அடர்த்தியானது. அமைதியாகப் பதில்கூற ஆரம்பித்து ஒரு பல்கலைக்கழகம் ஐநூறு ரூபாய் என்பதை ஆயிரம் ரூபாய் என மாற்றிவிட்டது. இன்னொரு பல்கலைக்கழகம் இன்னும் தொகையை உயர்த்தவில்லை என்றேன்.
"ஓ! ஒன்று, தனியார் பல்கலைக்கழகம் மற்றது அரசுசார் பல்கலைக்கழகம் அப்படித்தானே?' என்ற அவரை, அவசரமாக இடைமறித்து, "இரண்டுமே ஒரே அரசின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள் தான்' என்றபோது அவருக்குக் கோபமே வந்துவிட்டது.
"ஒரே மாதிரியான ஆய்வு நூல்; ஒரே முறையிலான மதிப்பீடு; ஒரே டாக்டர் பட்டம். இப்படியிருக்கும் போது ஒரே அரசாங்கம் எப்படி இரண்டுவிதமாக மதிப்பீட்டுத் தொகையை வழங்குகிறது' என்ற அவரது வாதத்திற்குச் சட்டென்று விடை தர இயலவில்லை. ஒரே பணிக்கு ஒரே அளவிலான மதிப்பூதியம் வழங்குவதுதானே அரசின் பணியாயிருக்க முடியும் என்ற அவருடைய கருத்து மெத்தச் சரிதான்.
மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பூதியத்தை வழங்க அரசு ஓர் அரசாணையைப் பிறப்பித்தால் போதும். அவ்வாறான முடிவுகளை அரசு எடுக்காததால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் போக்கில் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட குளறுபடிகள் ஆய்வுப் படிப்பில் இன்னும் உண்டு.
ஆய்வேட்டை ஆய்வாளர்கள் பல்கலைக்கழகங்களில் ஒப்படைத்தபிறகு, அந்த ஆய்வேடுகள் பல்வேறு பேராசிரியர்களுக்கு மதிப்பீட்டுக்காக அனுப்பப்பெறும். இதிலும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை. சான்றாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முன்பெல்லாம் ஒப்படைக்கப்பெற்ற மூன்று ஆய்வேடுகளும் வெளியூர்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு மட்டுமே அனுப்பப்பெறும்.
இந்த நடைமுறை இப்பொழுதும் புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. ஆனால், மதுரை உள்பட தமிழகப் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆய்வேடுகள் மட்டுமே புறநிலைத் தேர்வாளர்களுக்கு மதிப்பீட்டிற்காக அனுப்பப்பெறுகின்றன. மூன்றாவது ஆய்வேடு ஆய்வுநெறியாளருக்கே மதிப்பீட்டுக்காக அனுப்பப்படுகின்றது.
ஆய்வேட்டின் உருவாக்கத்திற்கு மேற்பார்வையாளராக இருக்கும் அவரே மதிப்பிடுவது சரிதானா என்பது கல்வியாளர் பலரின் ஐயப்பாடு. அவருடைய வழிகாட்டலில் உருவான ஆய்வேட்டில் குறைகள் இருப்பின் அதனை மதிப்பீட்டறிக்கையில் அவரால் தர இயலாது. பிழைகள் உள்ள ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க அவர் எப்படி இசைவு தந்து, ஆய்வேட்டில் கையெழுத்திட்டிருக்க முடியும்?
எனவே, மூன்று மதிப்பீடுகளில் ஒன்று நிச்சயமாகச் சாதகமான மதிப்பீடாகிவிடுவதை இம்முறைமை மறைமுகமாக உண்டாக்கிவிடுகிறது. இதனைத் தவிர்க்க, மூன்று ஆய்வுநூல்களும் புறநிலை வல்லுநர்களுக்கே அனுப்பப்பெறுவதில் என்ன சிக்கல் என்பது புரியாத புதிர். இப்படிச் செய்வதால் மதிப்பீட்டுத் தொகையிலும் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
மூன்றாவதாக, பொதுவாய்மொழித் தேர்வு நடத்தப் பெறுவதிலும் குளறுபடிகள் உள்ளன. ஆய்வேட்டை மதிப்பீடு செய்த வெளியூர்ப் பேராசிரியர்களில் ஒருவரை இந்தப் பொது வாய்மொழித் தேர்வுக்கு அழைப்பதே சரியானது, முறையானது.
ஏனெனில் பக்கம் பக்கமாகப் படித்து ஆய்வேட்டின் நிறை குறைகளை அலசி மதிப்பீட்டறிக்கையை உருவாக்கிய அவர்களால் வாய்மொழித் தேர்வில் வினாக்களை முன்வைக்கவும் தேர்வை நடத்தவும் இயல்பாக இயலும்.
அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், காந்தி கிராமப் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் போன்றவை இதனை நடைமுறையாகக் கொண்டுள்ளன.
ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வேறு நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆய்வேட்டை மதிப்பிடாத நான்காம் நபர் வாய்மொழித் தேர்வினை நடத்த அழைக்கப்படுவார். அவர் மதிப்பீட்டறிக்கை எதுவும் தர வேண்டியதில்லை. வாய்மொழித் தேர்வை மட்டும் நடத்துவார்.
ஏற்கெனவே மதிப்பீடு செய்திராத நான்காம் தேர்வாளரை அழைக்கும்போது அவர் ஆய்வேட்டைப் படிக்கக் கால நேரம் கூடுதலாகும். ஏற்கெனவே மதிப்பீட்டாளராக இருந்தவரை அழைக்கும்போது காலவிரையம் ஏற்படாது.
மதிப்பீடு செய்பவர் ஒருவர், வாய்மொழித் தேர்வை நடத்துபவர் (மதிப்பீடு செய்யாத) வேறொருவர் என்ற நிலைப்பாடு சரியானதா என்பது கல்வியாளர்கள் முன்நிறுத்தப்படும் கனமான வினா ஆகும். இன்னொரு வியப்பினைத்தரும் நடைமுறையையும் இங்கே பதிவு செய்வது சரியானதாக அமையும்.
ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர், அவரை வழிநடத்திய பேராசிரியர் இருவரையும் புறநிலைத் தேர்வாளர் அறிந்து கொள்ளக்கூடாது எனக் கருதிய பல்கலைக்கழகங்கள் ஆய்வேட்டின் மேலட்டையிலும், முகப்புப் பக்கத்திலும் ஆய்வாளரின் பதிவு எண்ணை மட்டுமே குறிக்கவேண்டும் எனக் கட்டளை பிறப்பித்துள்ளது. ஆய்வாளர் நன்றியுரையையும் இணைக்கக்கூடாது. இது மந்தனம் (ரகசியம்) காக்கப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காம்.
குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட துறையில் இருக்கும் பேராசிரியர்களை வெளியூர்ப் பேராசிரியர்களுக்கு எப்படித் தெரியாமல் போகும்?
இதிலே இன்னொரு பகுதியையும் எடுத்துக்கூற வேண்டும். ஆய்வு நெறியாளர்தான் மதிப்பீடு செய்வதற்காக வெவ்வேறு நிறுவனப் பேராசிரியர்களின் பட்டியலையே தன் பல்கலைக்கழகத்திற்கு வழங்குகிறார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வெளியூர்ப் பேராசிரியர்கள் தம் மதிப்பீட்டறிக்கையை ஆய்வு நெறியாளருக்கும் அனுப்ப வேண்டும்.
இங்கே ரகசியம் காக்கப்பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை; தேவையும் இல்லை. இங்கே அமையும் வேடிக்கை ஒன்றைக் கவனிக்கலாம். ஆய்வாளரின் பெயர் ஆய்வேட்டின் அட்டை, முகப்புப் பக்கம் போன்றவற்றில் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தும் பல்கலைக்கழகங்கள் சறுக்கலைச் சந்திக்கும் இடம் ஒன்று உண்டு.
பல்கலைக்கழகங்களில் ஆய்வேட்டை ஒப்படைக்கும் ஆய்வாளர்கள் இதழ்கள், ஆய்வுத் தொகுப்புப் போன்றவற்றில் வெளியிட்டுள்ள தம் கட்டுரைகளில் இரண்டைக் கண்டிப்பாக ஆய்வேட்டின் பிற்பகுதியில் இணைக்க வேண்டுமென்பது கட்டாய விதி. எனவே, அந்த ஆய்வாளர்களின் கட்டுரைகள் அவரவர்களின் பெயர்களுடனே ஆய்வேட்டில் இணைக்கப்பெற்றிருக்கும்.
மேலட்டையில் பெயரைப் பொறிக்க முடியாத ஆய்வாளர்களின் பெயர்கள் அவர்கள் இணைத்துள்ள கட்டுரைகளில் அப்படியே முனைமுறியாமல் ஒளிரக் காணலாம். "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழிக்கு இந்தக் குறிப்புகளைச் சான்றாக்கலாம்.
இரண்டாவதாக, மதிப்பீட்டறிக்கையை உருவாக்கும் தேர்வாளர்கள் இன்னாருக்குப் பட்டம் வழங்கலாம் என அந்த ஆய்வாளரின் பெயரை எழுதிப் பரிந்துரை செய்வதே சரியானது, உகப்பானது. அதை விடுத்து, இந்த எண்ணுக்குப் பட்டம் வழங்கலாமென மதிப்பீட்டறிக்கையில் எழுதும் போது ஒரு மாதிரியாக இருப்பதாக மதிப்பீட்டாளர்கள் பலரும் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் ஒரே அமைப்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் இது போன்ற குளறுபடிகள் நிகழ்கின்றன. ஆய்வுப் படிப்பில் இவை எப்போது சரிசெய்யப்படும் என்பதே ஓர் ஆய்வாகிவிட்டது என்பதே உண்மை.
மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பூதியத்தை வழங்க அரசு ஓர் அரசாணையை பிறப்பித்தால் போதும். அவ்வாறான முடிவுகளை அரசு எடுக்காததால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் போக்கில் செயல்படுகின்றன.

Thursday, March 3, 2016

எம்ஜிஆர் 100 | 13 - கண்ணதாசன் வர்ணித்த ஆணழகன்

Return to frontpage


எம்.ஜி.ஆரை மாலை அணிவித்து வரவேற்கிறார் கவியரசு கண்ணதாசன்.

M.G.R. -க்கு உள்ள தனிப்பட்ட சிறப்பு தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமின்றி, கடுமையாக தூற்றுவோருக்கும் உதவிகள் செய்வார். சொல்லப் போனால், தன் மீது கல் வீசுவோருக்கு கனி தரும் மரம் போல, தன்னைக் கடுமையாக தாக்கிப் பேசுவோருக்கு அதிகமாகவே உதவுவார். அவர்கள் திறமையாளர்களாக இருந்துவிட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, அவர்களின் திறமைக்கு உரிய கவுரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.

எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு பாடல். அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல்.அந்தக் காட்சிக்கு பலர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.

அப்போது ஒரு கவிஞர் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறிய தில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று அந்த கவிஞரும் சொன்ன தில்லை. மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர் களும் இயக்குநர்களும் கவிஞரை அணுகத் தயங் கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம்பெறவில்லை.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரி டம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிக வும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.

அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத

‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’

அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில்,

‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’

என்ற இனிமை யான பாடலை எழுதியவர் கண்ணதாசன். நாயகி யைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில்

‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’

என்று வரும்.

பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’

என்று பாடுவதுபோல எழுதியிருந்தார் கண்ணதாசன். நாயகி பாடும் வரிகள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார்.

கண்ணதாசன் உடனே மாற்றிக் கொடுத்த வரிகள்தான்,

‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’.

நட்பு ஒருபுறம் இருந்தாலும், எம்.ஜி.ஆரின் மனதை பொன்மனம் என்று வர்ணித்தாலும், அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகும் அவரை தாக்கி பேசுவதை கண்ணதாசன் நிறுத்தவில்லை.

ஒருநாள், முதல்வர் வீட்டில் இருந்து கண்ணதாசன் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு. தனது மகன் திருமண விஷயமாக கண்ணதாசன் வெளியூர் சென்றிருந்தார். இப்போதுபோல அப்போது செல்போன் எல்லாம் கிடையாது. தீவிர முயற்சிக்குப் பிறகு, கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர்., அவரை உடனே புறப்பட்டு சென்னை வரச் சொன்னார்.

எதற்காக வரச் சொல்கிறார் என்பது புரியாமலே தன்னை சந்தித்த கண்ணதாசனுக்கு எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி அளித்தார். ‘‘தங்களை தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்க முடிவு செய்திருக்கிறேன். சம்மதம் என்ற ஒரே வார்த்தையை மட்டுமே உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’’ என்றார். எம்.ஜி.ஆரின் அன்பிலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடிப் போனார் கண்ணதாசன்.

‘அரசவைக் கவிஞர்’ பட்டமளிக்கும் விழாவில் உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன், ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும். இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

அவர் கூறியது போலவே நடந்தது. அமெரிக் காவுக்கு சிகிச்சைக்காக சென்ற கண்ணதாசன் வெறும் உடலாகத்தான் திரும்பினார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் இறுதி ஊர்வலத்துக்குத் தயாரானது. கண்ணதாசன் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்ட பின், யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் எம்.ஜி.ஆர். மின்னலாய் அந்த வாகனத்தின் மீது ஏறிவிட்டார். கண்ணதாசன் உடலை சற்று உயர்த்தி சிறிய ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு கீழே இறங்கிய எம்.ஜி.ஆர்., ‘‘இப்போது, கவிஞரின் முகம் பொதுமக்கள் பார்க்க வசதியாக நன்றாக தெரிகிறது’’ என்றார்.

எம்.ஜி.ஆர்… அதிலும் தமிழகத்தின் முதல்வர். கண்ணசைத்தால் காரியம் செய்ய காத்திருப்போர் ஆயிரம் பேர். என்றாலும் கண்ணதாசனின் முகத்தை பொதுமக்கள் இறுதியாக பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காக, தானே வேன் மீது ஏறினார் என்றால், கவிஞர் மீது அவர் கொண்டிருந்த அன்பும், எதையும் மக்களின் கோணத்தில் இருந்தே பார்க்கும் எம்.ஜி.ஆரின் நுண்ணறிவும் பிரமிக்கத்தான் வைக்கும்.

சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

‘தேக்கு மரம் உடலைத் தந்தது

சின்ன யானை நடையைத் தந்தது

பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

Conversion of PIO cards: Last date for application extended till June 30


Conversion of PIO cards: Last date for application extended till June 30


NEW DELHI: Government today extended the last date for applying for conversion of PIO cards to OCI cards to June 30 from March 31.

Announcing the decision, the External Affairs Ministry Spokesperson tweeted, "And some good news for Diaspora on PIO/OCI Merger: The last date for applying for conversion of PIO Cards to OCI Cards is now 30 June, 2016."
The Person of Indian Origin (PIO) card was first implemented in 2002 as a benefit to foreign nationals who could establish at least a third generation tie to Indian origin. The PIO card is valid for travel, work, and residence in India for a period of 15 years.

The OCI card was implemented in 2005, carried more expansive benefits than the PIO card, and was valid for the holder's lifetime.

However, in 2014, the government decided to merge the two schemes for the benefit of NRIs ..



பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

THE HINDU TAMIL

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு நாளை (4-ம் தேதி) தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைமுறையில் சில மாற்றங்களை பின்பற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான கட்-ஆப் மதிப்பெண் களில் முதலிடம் பெற மாணவர் களிடையே ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதன் காரணமாக, இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் ஆகிய பாடங்களில் முழு மதிப்பெண் (சென்டம்) வாங்குவதற்காக, மாணவர்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர். எனினும், எல்லோருக்கும் ‘சென்டம்’ கிடைப்பதில்லை. தேர்வு எழுதி முடிக்கும்போது, ‘சென்டம்’ எடுக்க வாய்ப்பில்லை என்று உணரும் மாணவர்கள், தாங்கள் எழுதிய விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் கோடு போட்டு கொடுத்துவிட்டு, அந்த தேர்வை புறக்கணித்து விடுகின்றனர்.
பின்னர் உடனடி மறுதேர்வு எழுதி, ‘சென்டம்’ வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற பழக்கம் அதிகரித்து வருவதை உணர்ந்த கல்வித்துறை, நடப்பாண்டில் தேர்வு தொடர்பான விதிகள் குறித்த புத்தகத்தின் 42-ம் பக்கத்தில் வரிசை எண் 11-ல் புதிய விதியை அறிவித்துள்ளது. இதன்படி, தேர்வு அறையில் மாணவர்களுக்கான விதி முறைகளை அறிவிக்கும்போது, தேர்வு எழுதிய அனைத்து பக்கங் களிலும் கோடு போட்டு கொடுக்கும் மாணவர்களிடம், இது ஒழுங்கீன நடவடிக்கை, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், அடுத்த 2 பருவ தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், விடைத்தாள் திருத்தத்தின்போதும் புதிய மாற்றம் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் உயிரியியல் பாடத்தில் எடுக்கப்படும் மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உயிரியியல் பாடத்துக்கான விடைத்தாள் திருத்துவதிலும் புதிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை, உயிரியியல் தேர்வு எழுதும் மாணவர்கள், உயிரி- தாவரவியல், உயிரி- விலங்கியல் எனத் தனியாக விடைத்தாள்களை எழுதுவர். அவை தனித்தனியாக திருத்தப்பட்டு, கூட்டு மதிப்பெண்கள் வெளியிடப்படும். இவ்வாறு தனித்தனியாக திருத்தப்படும்போது, அரை மதிப்பெண் வந்தால், ‘ரவுண்ட் ஆப்’ விதிப்படி முழு மதிப்பெண் கொடுக்கப்படும்.
உயிரி-தாவரவியல், உயிரி- விலங்கியல் என இரண்டு பிரிவிலும் தலா அரை மதிப்பெண் எடுக்கும்போது, ‘ரவுண்ட் ஆப்’ விதிப்படி இரண்டு அரை மதிப் பெண் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்க, ஒவ் வொரு பிரிவுக்கும் ‘ரவுண்ட் ஆப்’ விதியை தவிர்த்து, இரண்டு பிரிவின் மதிப்பெண்களையும் சேர்த்த பின்னர் ‘ரவுண்ட் ஆப்’ விதியை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 11 - என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்


Return to frontpage

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.

என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.

உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாக பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம். பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது. வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.

தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன். அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.

என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.

என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..

‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’

பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...

‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”

உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.

புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.




நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.

எம்ஜிஆர் 100 | 12 - நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதை!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
Return to frontpage
M.G.R. நடித்த படங்களில் ஒன்று ‘சாலிவாஹனன்’. இந்தப் படத்தில் அவருக்கு சிறிய வேடம்தான். படத்தின் கதாநாயக நடிகருடன் எம்.ஜி.ஆருக்கு கத்தி சண்டை காட்சி. எம்.ஜி.ஆர். முறையாக வாள் சண்டை, சிலம்பம், குதிரையேற்றம் போன்றவற்றை கற்றவர். வாள் வீச்சில் ஆக்ரோஷமாக சண்டையிடுவதிலாகட்டும், சில நேரங்களில் எதிராளியை நீ எனக்கு சமமல்ல என்பதுபோல, அலட்சியமாக எதிர்கொள்வதை காட்டும் வகையில் சிரித்துக் கொண்டே ஸ்டைலாக வாள் வீசுவதிலாகட்டும், எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். ‘சாலிவாஹனன்’ படத்தின் படப்பிடிப்பில் கதாநாயக நடிகரைவிட எம்.ஜி.ஆர். சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்தார்.

அவரது வேகத்துக்கு கதாநாயகனாக நடித்த வரால் ஈடு கொடுக்க முடியவில்லை. இது குறித்து இயக்குநரிடம் அவர் தரப்பில் புகார் செய்யப்பட்டது. படத்தின் இயக்குநர் கதாநாயகனுக்கு ஆதரவாகவே இருந்தார். எம்.ஜி.ஆரின் வாள் வீச்சு வேகத்தை குறைத்துக் கொள்ளும்படி கூறியதுடன், ஏற்கெனவே, அவர் நடித்த சில காட்சிகளும் ‘கட்’ செய்யப்பட்டன. இதுபற்றி, உடன் நடிக்கும் ஸ்டன்ட் நடிகரிடம் எம்.ஜி.ஆர். தனது நிலையைச் சொல்லி வருத்தப் பட்டார். அந்த ஸ்டன்ட் நடிகரும் ‘‘உங்களிடம் திறமை இருக்கிறது, கண்டிப்பாக முன்னுக்கு வருவீர்கள், வருந்தாதீர்கள்’’ என்று அன்பாக பேசி எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் கூறினார்.

அந்த ஸ்டன்ட் நடிகர் கூறியபடி அடுத்த சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக உயர்ந்தார். படத்தின் பெயர் ‘ராஜகுமாரி’. பல போராட்டங்களுக்குப் பிறகுதான் கதாநாயகன் வாய்ப்பு அவருக்கு வந்தது. அந்த நிலையிலும் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே போதும் என்று இல்லாமல், சிறிய வேடங்களில் தலைகாட்டி வந்த, தனக்கு ஆறுதல் சொன்ன ஸ்டன்ட் மாஸ் டருக்கும் ‘ராஜகுமாரி’ படத்தில் வாதாடி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து தன் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கச் செய்தார். அந்த ஸ்டண்ட் நடிகர்... ‘சாண்டோ’ சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுக்க அவர் தயாரித்த முதல் படம் ‘தாய்க்குப் பின் தாரம்’. முதல் படமே அபார வெற்றி. ஸ்டன்ட் நடிகராக இருந்த சின்னப்பா தேவரை பட முதலாளியாக உயர்த்தினார் எம்.ஜி.ஆர்.

‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் தனக்காக வேறு ஒருவரின் குரலை ‘டப்’ செய்து தேவர் வெளியிட்டது தொடர்பாக, இடையில் சில காலம் எம்.ஜி.ஆருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஊடல் ஏற்பட்டாலும் அதனால் அவர்களது நட்பு பழுதுபட்டதில்லை. சொல்லப்போனால், ஆழ்ந்த நட்பு இருக்கும் இடத்தில்தான் உரிமையுடன் கூடிய ஊடலும் எழும். புரிதல் ஏற்பட்டு அதன்பின் ஏற்படும் கூடல் மேலும் நெருக்கத்தை அதிகரிக்கும். அப்படி, தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட நெருக்கம் கடைசிவரை பிரிக்க முடியாததாக இருந்தது. அதற்கு பின் எம்.ஜி.ஆரை வைத்து ‘தாய் சொல்லை தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘தர்மம் தலைகாக்கும்’ என்று பல வெற்றிப் படங்களை தேவர் எடுத்தார்.

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் நடிகர் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். துப்பாக்கித் தோட்டா தொண்டையை துளைத்துச் சென்றது. மறுபிறப்பெடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது திரையுலக வாழ்வே முடிந்தது என்று கூறினர். எம்.ஜி.ஆருக்கு மீண்டும் பேச்சுத் திறன் வருமா? என்று நிச்சய மில்லாத நிலை. எம்.ஜி.ஆரை மருத்துவமனை யில் சந்தித்து தான் அடுத்து எடுக்கப் போகும் ‘விவசாயி’ படத்துக்கு அட்வான்ஸ் தொகையை எம்.ஜி.ஆரின் கையில் தேவர் கொடுக்கும் அளவுக்கு இருவரின் நட்பு பரஸ்பர நம்பிக்கையுடனும் வலிமையாகவும் இருந்தது.

‘‘எம்.ஜி.ஆர். மீண்டும் நடிப்பது நிச்சயம் இல் லாத நிலையில், அவருக்கு பணம் கொடுக்க வேண் டுமா?’’என்று சிலர் கேட்டபோது, உறுதியான குரலில் தேவர் கூறினார்... ‘அவர் (எம்.ஜி.ஆர்) ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் நடித்த பிறகுதான் நாம் முழுசா சாப்பிட்டோம். அவரால் நடிக்க முடியாவிட்டால் செலவு கணக்கில் வைத்துக்கொள்கிறேன் போ..’

மருதமலை முருகன் கோயிலில் தனது சொந்த செலவில் மின்விளக்கு வசதி செய்த தேவர், அதை தான் மிகவும் மதிக்கும் அன்பு நண்பரான எம்.ஜி.ஆரின் கையாலேயே தொடங்கி வைக்கச் செய்தார். அப்போது எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தார். இது எம்.ஜி.ஆரின் கட்சி கொள்கைக்கு முரணாயிற்றே என்று சலசலப்பு எழுந்தது. எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார். ‘‘நானோ நான் சார்ந்துள்ள தி.மு.கழகமோ கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. நம்மை மீறிய சக்தி இருப்பதை நம்புகிறேன். தேவர் என் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் நட்புக்காகவும் விழாவில் கலந்து கொண்டேன்’’ என்று கூறினார். சர்ச்சைகள் ஓய்ந்தன.

தேவர் மறைந்த போது எம்.ஜி.ஆர். தமிழகத்தின் முதல் அமைச்சர். கோவை சென்று தனது நண்பரின் இறுதி ஊர்வலத் தில் கலந்து கொண்டு நடந்தே சென்றார். இருவருக் கும் இடையிலான நட்பு, நங்கூரம் பாய்ச்சிய கப்பலாய் உறுதியாக இருந்ததற்கு மட்டுமல்ல; நட்புக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த மரியாதைக்கும் சாட்சி அது.

எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்களை தயாரித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் சின்னப்பா தேவர். இருவர் கூட்டணியில் ‘தாய்க்குப் பின் தாரம்’ முதல் ‘நல்ல நேரம்’ வரை மொத்தம் 16 படங்கள் வெளியாயின. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த படம் ‘முகராசி’. பல படங்களின் படப் பிடிப்பு, அரசியல் என்று பரபரப்பாக இருந்த எம்.ஜி.ஆரை வைத்து 12 நாட்களில் எடுக்கப்பட்டு 100 நாள் ஓடிய வெற்றி படம் என்ற சாதனை படைத்தது ‘முகராசி’.

- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

WhatsApp now allows you to share documents in chats

WhatsApp now allows you to share documents in chats

  • HT Correspondent, Hindustan Times, New Delhi
  •  |  
  • Updated: Mar 02, 2016 15:04 IST

WhatsApp users will finally be able to send documents with each other over chats. The feature is now available on the latest WhatsApp builds available on Google Play and the App Store.

Users with WhatsApp version 2.12.453 on Android and version 2.12.14 on iOS will now see a new ‘Document’ section under attachments, which allows them to attach and share documents.

However as of now, the feature seems limited to PDF files only, though we expect more document sharing options will be added in the near future. Its also worth mentioning that users cannot share a document unless both the sender as well as the receiver have updated to the latest version of the app available on their respective app stores.

Meanwhile, WhatsApp for iOS also scores a bunch of new updates which now give you the ability to share photos and videos from other cloud storage apps such as Google Drive, Dropbox, or Microsoft OneDrive. In addition, the update also allows users to choose from a variety of solid colours for their chat background.

SC: Bring LLB on par with MBBS, BTech

TIMES OF INDIA

NEW DELHI: The Supreme Court on Wednesday started the arduous task of initiating "long overdue" reforms in legal education and in the profession of advocacy to put the LLB degree on a par with those of MBBS and BTech.

"The system is crying for reforms and we must do something," a bench of Chief Justice T S Thakur and Justice U U Lalit said.

The CJI said there was a general feeling that students enrolled in LLB courses when they didn't get admission into other professional streams. "If students do not get into MBBS or BTech courses, they join LLB. Legal profession should not be a free for all profession. So, it needs to be reformed," he added.

The bench said any addition to the pool of legal professionals must be talented and of good quality. "Administration of justice is as important as the profession of a doctor. If one is not permitted to become a half-baked doctor, you can't also become a half-baked lawyer," the CJI said. Though it questioned the statutory force behind the Bar Council of India's decision to hold All India Bar Examination, it said in principle it was not against the screening test as there was a dire need to weed out non -serious persons from joining the profession. "Let the AIBE go on as scheduled. We are not averse to the examination to screen those entering the profession of advocacy. We want to strengthen it. The filtering mechanism needs to be strengthened so that the profession is not open to one and all," the bench said. "Every year, 60,000 more join the profession, of which 2,000-odd are from National Law Schools," it added. The court was questioning BCI counsel Ardhendumauli Prasad about the statutory force behind the regulatory body's decision to hold AIBE. A law graduate must clear the AIBE within two years of enrolling as an advocate to be able to continue practising in court.

The bench referred the matter to a three-judge bench for evolving criteria to weed out non-serious lawyers from entering the profession. The CJI said, "In Jammu and Kashmir, there was a sound system where a law graduate enrols as a pleader and practises for two years . After that, he gets enrolled as a 'vakil' and practises on the original side of the high court for three years. But now, a fresh law graduate can come straight to the apex court and argue cases. We ask them questions and they do not appear to know much about the practice and rules."

The court posted the matter for further hearing before a three-judge bench on Friday

Wednesday, March 2, 2016

Now, Gmail Experience Becomes Safer

Now, Gmail Experience Becomes Safer
If you had opened Gmail on Thursday, you may have been curious about the red padlock appearing while typing in corporate or lesser-known email IDs. You’d have also seen an alert not to send personal information to that ID as that domain’s servers may not be encrypted.
Gmail rolled out most of these security features soon after their ‘safer internet day’ update, which allowed users to get 2GB upgrade to their drive storage on completing a security checklist by Thursday.
It also added a lot of features that allowed people to identify messages from authentic users or mails from strangers masquerading as ‘official mail’.
What does this mean for users? It will help you identify users who mail you often,  and will safeguard you from unknown users mailing you from seemingly authentic mail IDs that resemble those of government/ corporate ids. It allows users to know if the data shared with you from the sender is secure by employing TLS (Transport Layer Security), which provides an enhanced level of encryption-message to message, user to user security. According to Google search trends over the previous year, searches about two-factor authentication on Google India had risen 97%.

வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமல்




புதுடெல்லி, 

இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதற்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம் ஆகும். எனவே வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த மத்திய அரசு அரசாணைப்படி போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. தற்போது லாரி, வேன் உள்பட கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், 9 இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கடந்த 1–10–2015–க்கு பிறகு பதிவு செய்யப்படும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தி இருக்கின்றன. அதே சமயம் அதற்கு முந்தைய பழைய வாகனங்களிலும் 6 மாதம் அவகாசம் வழங்கி மார்ச் 31–ந் தேதிக்குள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து ஏப்ரல் 1–ந் தேதி முதல் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவால் விபத்துகள் குறையும் என்றும், தற்போது வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, March 1, 2016

வாழ்வு இனிது: பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோம்!

Return to frontpage

வளர்ந்த நாடு என்பது எத்தனை ஏழைகள் கார் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததில்லை. எத்தனை பணக்காரர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்ததே. கடந்த ஜனவரி மாதம் மட்டும் இந்தியாவில் 2.18 லட்சம் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது வளர்ச்சிதானா?

மொத்த பெட்ரோலியப் பயன்பாட்டில் போக்குவரத்துக்காக மட்டும் 60 சதவீதம் செலவிடுகிறது மனித இனம். இதில் சொந்த கார், இரு சக்கர வாகனங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது 40 சதவீதம். உலகிலேயே அதிகம் நுகரும் நாடு என்றாலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தினமும் 41.6 மில்லியன் லிட்டர் பெட்ரோல் மிச்சப்படுவதாகச் சொல்கிறது அமெரிக்கா. ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தனிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த கார்களுக்குக் கூடுதல் வரி உண்டு. கடுமையான கட்டுப்பாடுகளும் உண்டு.

இந்தியாவில் 1995-ல் இருந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதைவிடப் பல மடங்கு தனிப் போக்குவரத்தும் அதிகரித்திருப்பதே ஆபத்து!

பொதுப் போக்குவரத்துக்கு நாம் மாறுவதன் மூலம், ஆண்டுதோறும் 3.7 கோடி மெட்ரிக் டன் கரியமில வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தலாம். மேலும், பஸ்ஸுக்கோ, ரயிலுக்கோ செல்பவர்களுக்கு சிறிது தூரமேனும் நடக்கும் நிர்ப்பந்தம் இயல்பாகவே ஏற்படுகிறது. நடக்கிறார்கள். பொதுச் சமூகத்துடன் உரையாடுகிறார்கள். தனிப்பட்ட வாகனங்கள் ஒரு வகையில் நம்மைத் தனித் தீவாக்கிவிடுகின்றன.

இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதில் பல சவுகரியங்கள் உண்டு என்றாலும், அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நிகழ்வதற்கும் இவைதான் காரணம். சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் 25 சதவீதத்துக்கும் மேல் இரு சக்கர வாகனங்களால் நிகழ்பவைதான். காரைவிட பஸ், ரயில் போன்ற வாகனங்கள் பாதுகாப்பானவை என்று வெக்ஸென் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. காருடன் ஒப்பிட்டால், விபத்தில் இறக்கும் வாய்ப்பு ரயில் பயணத்தில் 9 மடங்கு குறைவு என்று அது குறிப்பிடுகிறது. பொதுப் போக்குவரத்து மட்டும் இல்லையென்றால், தினம் சாலைப் பயணத்தில் ஏற்படும் தாமதம் மேலும், 27 சதவீதம் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது அமெரிக்க பொதுப் போக்குவரத்துச் சங்கம்.

போக்குவரத்து நெரிசலையும், ஒற்றை இலக்க, இரட்டை இலக்க முறையை 15 நாட்களுக்கு அமல்படுத்தியது டெல்லி அரசு. குறிப்பிட்ட இந்த 15 நாட்களில் காற்றில் பி.எம். 2.5 என்று அழைக்கப்படும் துகள்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாக ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) தெரிவித்திருக்கிறது. பொதுப் போக்குவரத்து அதிகரித்தால் சூழலில் என்ன மாற்றம் நடக்கும் என்பதற்கான சமீபத்திய உதாரணங்களில் ஒன்று இது. நாட்டிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று தமிழகத் தலைநகரம் சென்னை. தமிழகம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது?

Press Information Bureau

Press Information Bureau
Government of India
Ministry of Home Affairs
29-February-2016 18:20 IST
Visa on Arrival for Japanese nationals from tomorrow
As announced by the Prime Minister, the Visa on Arrival for Japanese nationals is being launched from tomorrow i.e. 1st March, 2016. This facility will be available at six airports viz. Delhi, Mumbai, Chennai, Kolkata, Bangalore and Hyderabad. This facility can be availed for the purposes of business, tourism, conference and medical. Validity of this visa after entry will be for a period of 30 days.

About 1.80 lakh Japanese nationals visit India every year on various kinds of visas. Business and Tourist Visas constitute around 78% of these. On an average 600 Japanese nationals arrive at Delhi Airport daily. It is expected that extension of this facility to Japanese nationals will further strengthen the business and tourism ties between the two countries.

Detailed circulars pertaining to this subject have already been put on MHA’s website.

During the visit of Japanese Prime Minister Mr Shinzo Abe to India during December last year, the Prime Minister Shri Narendra Modi had announced that India will extend 'Visa on arrival' to Japanese citizens from 1st March 2016.

****


KSD/NK/PK
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx

Saturday, February 27, 2016

நிதி ஆலோசனை : திடீர் வேலை இழப்பைச் சமாளிப்பது எப்படி?

logo

இன்றைக்கு வேலைவாய்ப்புகள் எப்படி அதிகமோ அப்படி, திடீரென்று வேலை இழக்கும் அபாயமும் அதிகம். அதுபோன்ற ஒரு சூழலில், பொருளாதார ரீதியாக தடுமாறாமல் இருப்பது எப்படி? இதோ சில ஆலோசனைகள்...

* எப்போதும் சொல்லப்படும் விஷயம்தான் என்றாலும், சேமிப்பே நமக்கு ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து, வேலைக்குச் சேர்ந்தவுடனேயே சேமிப்பைத் தொடங்கிவிட வேண்டும். அப்போதுதான் நீண்ட காலத்தில் சேமிப்பு அதிகம் இருக்கும்.

* மாதச் சம்பளத்தைப் போல 3 முதல் 5 மடங்கு தொகையை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. உதாரணத்துக்கு, மாதச் சம்பளம் ரூ. 30 ஆயிரம் எனில், ரூ. 90 ஆயிரம் முதல், ரூ. 1.50 லட்சம் வரை வைத்திருப்பது அவசியம். இந்த அளவு தொகையை சேமிப்பாக வைத்தபிறகே, பிற தேவைகளுக்காக பணத்தைச் சேமிக்க வேண்டும். அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் இந்தப் பணத்தில் 50 சதவீதத்தை தனியாக ஒரு வங்கி சேமிப்புக் கணக்கிலும், 50 சதவீதத் தொகையை ‘லிக்விட் மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களிலும் வைத்திருப்பது நல்லது.

* மாதமாதம்தான் சம்பளம் வருகிறதே என்று எண்ணாமல், சில முதலீடுகள் மூலம் வருமானம் கிடைக்கக்கூடிய வழிகளை மேற்கொள்வது நல்லது. பலர், தங்கத்தை சிறந்த முதலீடாகக் கருதுகிறார்கள். தங்கத்தின் விலை முன்புபோல் அதிக லாபம் தருவதாக தற்போது இல்லை. தவிர, தங்க நகையை விற்கும்போதும் சேதாரம் என்கிற வகையில் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கும். ஆகையால், முதலீட்டின் மூலமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பார்த்து முதலீடு செய்வது நல்லது.

* முதலீடு நல்ல விஷயம் என்றாலும், கடன் வாங்கி எந்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது. சிலர், தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் கூறினார்கள் என்று பெர்சனல் லோன் பெற்று, நிலம் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறு. காரணம், வாங்கிய கடனுக்கான வட்டியைவிட, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கக்கூடும். கையில் பணம் இருந்தால் மட்டும் முதலீடு செய்வது நல்லது.

* பள்ளி கல்விக் கட்டணம், காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றை ஆண்டின் ஆரம்பத்தில் மொத்தமாகச் செலுத்திவிடலாம். இப்படிச் செலுத்தும்போது தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்குத் தேவைப்படும் தொகைக்கு தனியாக வங்கியில் ஆர்டி கணக்கு ஆரம்பித்து, அதன்மூலம் சேமிக்கலாம். அப்போதுதான் வேலை இழப்பின் போதும் இதுபோன்ற முக்கியமான விஷயங்களுக்கு பணமின்றி தவிக்க வேண்டியிராது.

* குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்து வைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக ஏற்படும் மருத்துவச் செலவுகளில் இருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், வேலை இல்லாத நேரத்தில் மருத்துவச் செலவு ஏற்பட்டால் திகைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

* சம்பளத் தொகை முழுவதுக்கும் செலவுகளைத் திட்டமிடாமல், 60 சதவீதத்துக்குள் செலவுகளை வைத்துக்கொள்வது நல்லது. மீதமுள்ள தொகையை முதலீடு செய்யலாம். தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

* இன்றைய சூழலில் கடன்களைத் தவிர்ப்பது கடினம் என்றாலும், கூடுமானவரை கடன் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் வீட்டுக் கடன் போன்ற சொத்துச் சேர்க்கும் கடன்களை வாங்குவதில் தவறில்லை. இதற்கு வட்டியும் குறைவு. எளிதாக கடன் கிடைக்கிறதே என்று வாங்கிவிட்டால், பிற்பாடு வேலை இழந்து நிற்கும்போது அசலையும் வட்டியையும் தவறாமல் செலுத்துவது தலைவலியாக இருக்கும்.

* எல்லாவற்றுக்கும் மேலாக, எதற்காக நமக்கு வேலை போனது என்று அலசி ஆராய்ந்து அந்நிலை மீண்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை இழந்த காலத்தில் கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்வது, மேலும் உயர்ந்த வேலைக்குச் செல்ல உதவும்.

NewsToday 18.10.2024