Wednesday, April 13, 2016

NEET will give priority to merit, says Ketan Desai

Ahamedabad: After the apex court on Monday revived National Eligibility Entrance Examination (NEET), president elect (2016) of the World Medical Association and former president of Medical Council of India (MCI), Dr Ketan Desai, said NEET is a certainty for medical admissions from 2017.

It was Dr Desai who had first proposed NEET in 2009. Interestingly, Dr Desai said that after NEET, next on the agenda is an 'exit test'. "We will now lobby for a common exit test for all MBBS graduates to qualify them for practising medicine. This will ensure uniform, good quality doctors." "Implementing NEET this year will require immense effort and will on the part of the central government as the entrance exam for PG courses is slated for April 25," he said.

"The PMT exam for MBBS admissions is scheduled for May 5. If the government wishes, NEET can be implemented this year but it will entail cancelling the PMT exam and setting a fresh schedule. This may not be feasible this year. But NEET is a certainty from 2017," said Dr Desai.




Dr Desai said that NEET as a common entrance exam for admission in medical colleges across India was conceived to give students a level playing field and a merit-based chance of getting a seat in any of the country's 418 medical colleges.







He further said that since merit will decide admissions even in private medical colleges, NEET will change the quality of doctors who will serve society in future. Of the total medical colleges in the country, 50% are private institutions which are said to offer seats to less meritorious candidates for a capitation fee.







"Our research had revealed that 90-odd medical entrance exams were being conducted," said Dr Desa. "Parents and students had to pay through their noses for these exams and travelling expenses because the tests were held at multiple locations. Once NEET is implemented, students will have to give one exam and qualify for admission in the state and against all-India quota," he said.







Dr Desai clarified that since the MCI does not have the necessary infrastructure, NEET for undergraduate courses will be conducted by CBSE while PG NEET will be conducted by AIIMS.


Holding NEET this year not possible: Maharashtra government tells MCI
A day after the apex court paved way for "one India one test" for medical and dental aspirants reverting to its own ruling in 2013 which had discontinued it, the Maharashtra government informed the Central government that holding the National Entrance and Eligibility Test (NEET) from this year is "not possible".
Citing shortage of time for such a big change in the entrance exam, the Medical Education department on Tuesday apprised the Centre and Medical Council of India (MCI) that holding the NEET would not be possible this year as state level entrance exam (CET) is scheduled only three weeks from now (May5). Over 1.5 lakh candidates are expected to take the exam for admission in medical and dental colleges across the state.
"While we understand that state has to follow SC decision dated April 11 and join the NEET, but conducting the exam from this year is not possible. We are holding CET on May 5 across the state for which preparations have already been done. However, depending upon Centre's decision, state is ready to join NEET from next year," state informed the centre and the MCI, as per a communique from education minister Vinod Tawde.
The state made its stand clear to MCI and Centre via telephone. The MCI has convened a meeting with all states on Wednesday to take a final call on the issue.
The MCI is apex medical education regulator and had supervised the NEET in 2012 and 2013 before it was scrapped by the SC. The interim decision of the SC doesn't talk about the year from which NEET should be conducted. Most states are in the process of conducting state level exams. Lakhs of candidates across India have prepared for their state exam as per the state syllabi.
The state has also argued that it was anyway not part of NEET in 2012 as it had sought relief from the court during the maiden year of the test. 2013 was the only year when Maharashtra candidates were admitted through NEET. After that, CET was conducted in 2014 and 2015.
The SC ruling has increased the stress level of medical aspirants due to looming uncertainty ahead of one the most crucial exam which will decide their career. Many candidates approached authorities and called up newspaper offices to find a clear answer.
Several candidates expressed their concern over frequent changes in the entrance exam for medical and dental courses. "This is painful as we spend two years preparing for the exam and the changes are brought at the last minute. Why can't there be a fixed education policy in India," ask an aspirant.
The directorate of medical eduction Maharashtra is conducting the CET this year which is common for engineering and health science courses both. More than five lakh candidates are set to take the exam.
Both sets of candidates would take a common paper of physics and chemistry. Health science aspirants have to take biology and engineering aspirants would take additional maths paper. A significant number of aspirants have applied for both the courses and would take all four papers.

எம்ஜிஆர் 100 | 41 - அமுதசுரபி!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.நடித்த பல படங்கள் நீண்டகாலத் தயாரிப்பில் இருந்திருக்கின்றன. கதைகளிலும் காட்சி அமைப்புகளிலும் ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்ப மாற்றங்களைச் செய்வார். அதுமட்டுமின்றி, அரசியலிலும் அவர் தீவிரமாக பணியாற்றி வந்ததால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில் தாமதம் ஏற்படும். இதெல்லாம் தெரிந்துதான் தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை வைத்து படங்கள் எடுத்தனர்.

எம்.ஜி.ஆர். நடித்த மற்ற தயாரிப் பாளர்களின் படங்கள் இருக்கட் டும். அவரது சொந்த தயாரிப்பு களான ‘நாடோடி மன்னன்', ‘அடிமைப் பெண்', ‘உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களேகூட, நீண்டகால தயாரிப்பில் இருந்தவைதான். ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் ‘நல்ல வேளை நான் பிழைத்துக் கொண் டேன்…’ பாடலின் இடையில், ‘வரு கிறது அடிமைப்பெண்’ என்று விளம் பரம் காட்டப்படும். அதன் பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் ‘அடிமைப்பெண்’ படம் வெளியானது.

முதலில் ‘அடிமைப்பெண்’ படத்தில் சில காட்சிகளை எம்.ஜி.ஆர். எடுத்தார். அதில் சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. அட்ட காசமான உடை அலங்காரத்தோடு எம்.ஜி.ஆர். ஒருகாலைத் தூக்கி நாற்காலி மீது வைத்தபடி ஸ்டைலாக நிற்கும் ‘ஸ்டில்’ வெளியானது. பின்னர், படத்தின் கதை அமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு ஜெயலலிதா கதாநாயகியாக நடித்தார்.

இதேபோல, ‘உலகம் சுற்றும் வாலி பன்’ படத்துக்காக 1970-ல் ஜப்பானுக்கு எம்.ஜி.ஆர். சென்று எக்ஸ்போ-70 கண் காட்சியில் காட்சிகளை படமாக்கினார். ஆனால், படம் 1973-ம் ஆண்டுதான் வெளியானது. இதுபோன்று பார்த்து, பார்த்து படங்களை எடுத்த தால்தான் எம்.ஜி.ஆரின் படங்கள் இந்த தலைமுறையும் ரசிக்கும்படி இருக்கிறது. அதற்கு உதாரணம், 2014-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகி சென்னையில் வெள்ளி விழா கொண் டாடி, மறுவெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் என்ற சாதனை படைத்த ‘ஆயிரத்தில் ஒருவன்’.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டா ராக விளங்கிய எம்.ஜி.ஆருக்கு இருந்த மார்க்கெட்டுக்கு அவர் நினைத்திருந் தால் நிறைய படங்களில் நடித்து இன் னும் அதிகம் சம்பாதித்திருக்கலாம். படத்தின் எல்லா அம்சங்களிலும் கவனம் செலுத்தியதோடு, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டதால்தான் அவர் நடித்த படங்களின் எண் ணிக்கை 136 என்ற அளவோடு நின்றது. சில காட்சிகளில் மட்டும் அவர் ஏற்கெனவே நடித்திருந்த ‘அண்ணா நீ என் தெய் வம்’ படம் ‘அவசர போலீஸ் 100’ என் றும், ‘நல்லதை நாடு கேட்கும்’ படமும் அவர் மறைந்தபின் வெளியாயின.

எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் இருந்தால் அவரது வீட்டில் இருந்தே பெரிய, பெரிய டிபன் கேரியர்களில் பல வகையான உணவுகள் படப்பிடிப்பு நடக்கும் இடத் துக்கு வரும். எம்.ஜி.ஆர். தனியே சாப்பிட்ட தருணங்கள் குறைவு. தன் வீட்டில் இருந்து வரும் உணவை படப்பிடிப்பு குழுவினரோடு சேர்ந்து சாப்பிடுவார்.

நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த அன்பு உண்டு. அசோகன் நன்றாக சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப் பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார். அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம். யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!

‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம். திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி எம்.ஜி.ஆர். தற்காலிக நீக்கம் செய்யப்பட்டபோது ‘இதயவீணை’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந் தார். 14-ம் தேதி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.

தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும் ‘அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு கண்ணதாசன் பதிவு செய்துள் ளார். ‘நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் சொர்ணம். கொந் தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம். சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார். படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.

அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.

பணம் கிடைத்த அன்று இரவே ஒவ் வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன். படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது. இதில் ஒரு முக்கியமான விஷயம். எல் லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப் பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலை மையை உணர்ந்து தனது சம்பள பாக்கி யான லட்சக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்ளவே இல்லை என்பது வெளியே தெரியாத உண்மை.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம்

சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்போது, கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. மக்கள் அவதிப்படும் நிலையில், படம் வெற்றி பெற்றதற்காக 100வது நாள் விழா தேவையில்லை என்று எம்.ஜி.ஆர். கூறியதால் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை.
Keywords: எம்ஜிஆர். தொடர், எம்.ஜி.ஆர் தொடர், எம்.ஜி.ஆர் வாழ்க்கை, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்ஜிஆர் கதை, மனிதநேயம்

Tuesday, April 12, 2016

: வரலாறு காணாத வெயில்: புவனேஸ்வரில் 47.5 டிகிரி செல்சியஸ் கொளுத்தியது

சத்யசுந்தர் பாரிக்

ஒரு வாரத்திற்கும் மேலாக ஒடிசா மாநில கடற்கரை மாவட்டங்கள் குறிப்பாக புவனேஸ்வரில் தணியாத வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

30 ஆண்டுகால வெயில் வரலாற்றை முறியடிக்கும் விதமாக புவனேஸ்வர் நகரில் திங்களன்று 47.5 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டியது. ஏப்ரல் மாதத்தில் பதிவாகும் அதிகபட்ச வெயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

காலையிலிருந்தே சூரியன் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. காலை 11.30 மணியளவில் 44 டிகிரி செல்சியஸைத் தொட்டது வெப்ப நிலை. நண்பகலுக்குள் மேலும் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. ஒரு மணிநேரம் கழித்து 45.2 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது ஏப்ரல் 23, 1985 அன்று அடித்த வெயிலைக் காட்டிலும் சற்று கூடுதலானது.

மதியம் 2 மணியளவில் வெயில் 45.7 டிகிரி செல்சியஸ் என்று அதிகரித்து உச்சம் பெற்றது. இது இயல்பான வெப்ப நிலையைக் காட்டிலும் 7-8 டிகிரி கூடுதலாகும். இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நிறைய மரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டதினால் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிகள் காலையில் தொடங்கி மதியத்துக்குள் முடிக்கப்படவேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் கடும் உழைப்பு தொடர்பான பணிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில வானிலை ஆய்வு மைய இயக்குநர் சரத் சந்திர சாஹூ கூறுவதாவது: "வானிலையில் மாற்றம் எதுவும் இல்லை. காற்று மேல்நோக்கி நகரவில்லை, இதனால் மேகங்கள் உருவாவதற்கான நிலைமைகள் சுத்தமாக இல்லை. கடந்த அக்டோபர் மாதம் முதலே மாநிலத்தில் மழை இல்லை. மண்ணும் வறண்ட மண் என்பதால் உஷ்ணம் பிரதிபலிக்க உதவுகிறது.

மேற்கு மற்றும் வட-மேற்கு பகுதியிலிருந்து வரும் உஷ்ணக் காற்று மத்திய இந்தியாவைக் கடந்து செல்கிறது. இதனாலேயே இப்பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. திங்களான இன்று மதியம் 2 மணியளவில் உச்சமடைந்த வெப்ப அளவு ஏப்ரல் மாதத்தில் 1952-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச பதிவாகியுள்ளது.

இடிமழைக்கு வாய்ப்பில்லாததால் அடுத்த வாரமும் இதே நிலையே நீடிக்கும். கடற்காற்றும் மந்தமடைந்திருப்பதால் ஒடிசாவில் நிலைமைகள் மோசமாக உள்ளன” என்றார்.

இன்று மதியம் 2 மணியளவில் புவனேஷ்வரில் 17 இடங்களில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸைக் கடந்து சென்றுள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------: குறள் இனிது: வேலைக்கேற்ற ஆளா, ஆளுக்கேற்ற வேலையா..?

சோம.வீரப்பன்

ஏப்ரல் வந்தாச்சு! புதிய நிதியாண்டு தொடங்கி யாச்சு! இனி பணி உயர்வுக்கான போட்டிகள், நேர்முகத் தேர்வுகள் ஆரம்பித்து விடும்! ஆனால், பலகாலம் தங்கள் நிறுவனத்திலேயே பணிசெய்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மேலதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன? பிறகு எதற்கு இந்த மாதிரி நேரில் கூப்பிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டும்' என்று சிலர் நினைப்பதுண்டு.

கொஞ்சம் யோசித்தால் இதன் காரணம் புரியும். பதவி உயர்வு என்பதும் அந்த உயர் பதவியைப் பொறுத்தவரை புதிதாய் ஆள் எடுப்பது போலத்தானே? என்ன, அந்த நிறுவனத்திற்குள்ளாகவே பொருத்தமானவரைத் தேடுவார்கள்!

ஒருவர் படித்தவரா, நம்பிக்கைக்குகந்தவரா, ஆரோக்கிய மானவரா என்பதையெல்லாம் பார்த்து நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதா இல்லையாவென முடிவெடுக்கலாம்.

ஆனால், அவரை எந்தப் பணியிலமர்த்துவது என்பது அவர் என்ன படித்திருக்கிறார், அவரது முன் அனுபவம் என்ன, அவரது தனித்திறமை என்ன என்பனவற்றை வைத்துத்தானே முடிவெடுக்க முடியும்?அதனால் தானே ஆள் எடுக்கும் பொழுது இரண்டு மூன்று சுற்றுகள் வைத்து தகுதியற்றவர்களைப் படிப்படியாகக் கழற்றி விடுகிறார்கள்!

எனது நண்பர் ஒருவர் வங்கியில் 75 கிளைகள் உள்ள கோட்டத்தின் துணைப் பொது மேலாளர். மிக நன்றாய் வர்த்தகம் செய்து வருடாந்திர இலக்குகளை கடந்திருந்தார். எனவே பொதுமேலாளர் பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு வந்த பொழுது மிக உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் சென்றார். தான் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். ஆனால் அங்கோ கேள்விகள் வேறு விதமாக இருந்தன.

வங்கி எதிர்காலத்தில் எவ்வித போட்டிகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும், அவற்றை எப்படி சமாளிப்பது, வங்கிகளை இணைக்கும் பொழுது ஒரே பகுதியிலிருக்கும் வங்கிகளை இணைப்பது நன்மை பயக்குமா, வட்டி விகிதங்கள் எப்படி மாறலாம் என்கிற ரீதியில் பல கேள்விகள். அக்கேள்விகள் எல்லாம் கற்பனையானவை என்றும், இப்பொழுது தேவையற்றவை என்றும் பதில் கூறிவிட்டார் நண்பர். கொடுத்த வேலையை நான் ஒழுங்காய் செய்து முடித்துவிட்டேன், மேன்மேலும் கொடுத்துப் பாருங்கள் முடித்துக் காட்டுவேன், அவ்வளவுதான், இதைவிட வேறென்ன வேண்டும் என்று கிட்டத்தட்ட வாக்குவாதத்திலேயே இறங்கி விட்டார்!

வங்கிக்கு அப்பொழுது தேவைப்பட்டது எதிர்காலத்தை எதிர்கொள்ளக்கூடிய, சிந்திக்கக்கூடிய, வியூகங்களை வகுக்கக்கூடிய ஒரு பொதுமேலாளர். எனவே நமது நண்பரை விட்டுவிட்டு வேறு ஒருவருக்குத்தான் அப்பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.

பலரும் பதவி உயர்வை முன் செய்த நல்ல பணிக்குப் பரிசாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் உண்மை அதுவா? ஏற்கெனவே நல்ல பணியாற்றியவர் வருங்காலத்திலும் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று வேண்டுமானால் நம்பிக்கை கொண்டு முன்னுரிமை கொடுக்கலாம்.ஆனால் அவரிடம் அடுத்த பதவிக்குத் தேவையான சிறப்புத் தகுதிகளும் இருக்கிறதா என்றும் பார்க்கத்தானே வேண்டும்? பதவி உயர்வை மேல்பதவியில் செயலாற்றி மிளிர்வதற்கான ஒரு வாய்ப்பாய்க் கருதினால் பிரச்சினை இருக்காது!

சரியாக ஆராயாமல் பணியமர்த்தாதீர்கள்; அத்துடன் பணியமர்த்தப் படுபவரின் திறன்களை ஆராய்ந்தே வேலை கொடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள் (குறள்: 509)

- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக்கொலை

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக்கொலை..DAILY THANTHI

புதுடெல்லி,

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த மற்றொரு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மாணவர்கள்
உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்கோராடு மருத்துவ கல்லூரியில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பிரணவ் ஷைன்தில்யா, காசியாபாத்தைச் சேர்ந்த அன்குர் சிங் மற்றும் ஆக்ராவைச் சேர்ந்த இந்திரஜித்சிங் சவுகான் ஆகியோர் படித்து வருகிறார்கள்.

இவர்களில் பிரணவ் சைன்தில்யா 3–ம் ஆண்டு படித்து வந்தார். அன்குர் சிங் 4–ம் ஆண்டு படித்து வந்தார்.

2 மாணவர்கள் கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 3 மணிக்கு இந்திய மாணவர்கள் 3 பேரையும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கத்தியால் சரமாரியாக குத்தினர். இந்த கொலைவெறி தாக்குதலில் மாணவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர், அந்த மாணவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பிரணவ் சைன்தில்யாவும், அன்குர் சிங்கும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்திரஜித்சிங் சவுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய மாணவர்கள் குத்திக்கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

3 பேர் கைது
இந்த நிலையில் மாணவர்களை கத்தியால் குத்திய 3 பேரும் உக்ரைன் நாட்டு எல்லையை தாண்டி தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மாணவர்களின் பாஸ்போர்ட்டுகள், ஆவணங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் குறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சுவரப் கூறுகையில், ‘மாணவர்கள் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார், பல்கலைக்கழக பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். உடல்களை இந்தியா எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே 2 மாணவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

பேஸ்புக் லைவ்.

பேஸ்புக் லைவ்..DAILY THANTHI

பேஸ்புக்கில் மெஸேஞ்சர் வசதி, சாட்டிங் செய்ய உதவுகிறது. தற்போது இதில் 'லைவ்' எனும் வசதி கூடுதலாக சேர்க்கப்படுகிறது. இது வீடியோ சாட்டிங்போல முகம் பார்த்து பேச உதவுகிறது. உரையாட விரும்புபவர்கள் 'லைவ்' வீடியோ பொத்தானை 'ஆன்' செய்து வைத்துக் கொண்டால், நண்பர் குழுவினர் முகம் பார்த்து உரையாட முடியும். முக்கியமான இந்த வசதி பேஸ்புக் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பான வாணவேடிக்கை..

பாதுகாப்பான வாணவேடிக்கை...DAILY THANTHI
THALAYANGAM

பழையகாலங்களில் கடைபிடித்துவரும் பல மரபுகள், வழக்கங்கள், காலப்போக்கில் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கேற்ப மாறினாலும், இறைவழிபாட்டு தலங்களில் உள்ள சில மரபுகள் மட்டும் மாற்றம் காணாமலேயே இருக்கிறது. பழையகாலங்களில் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களில் பக்தர்களை அதிகம் ஈர்க்கும்வகையில், சிறப்பு வழிபாட்டுமுறைகள் கடைபிடிக்கப்படுவதோடு, தீபங்களால் அலங்கரிக்கப்படுவதும், வழிபாட்டுதலங்களுக்கு முன்புறம் நாதஸ்வரம், மேளம், நையாண்டி மேளம், கரகாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கிராமிய கலைகள் இடம்பெறுவதும், அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருவிழாவின் இறுதிநிகழ்ச்சியாக வாணவேடிக்கைகள் நடத்துவது எல்லா ஊர்களிலும் ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதுபோல, கேரளாவில் உள்ள கொல்லம் நகரத்தின் மிக அருகில் இருக்கும் பரவூரில் உள்ள புற்றிங்கல் தேவி திருக்கோவிலில் நடந்த வாணவேடிக்கை, பல உயிர்சேதங்களையும், ஏராளமானவர்களுக்கு காயமும் ஏற்படுத்தி, இந்தியாவையே உலுக்கிவிட்டது. இந்த திருக்கோவிலில் மீனா–பரணி திருவிழா முடியும் அன்று நடந்த வாணவேடிக்கை இதுவரையில் 110 பேர்களுக்குமேல் பலிவாங்கிவிட்டது. 400 பேர்களுக்குமேல் பலத்தகாயத்தோடு பல்வேறு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி என்பதோடு, இருகோஷ்டிகளுக்கு இடையே வாணவேடிக்கை போட்டியே நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வாணவேடிக்கையை பார்க்க இரவு முழுவதும் காத்திருந்திருக்கிறார்கள். அதிகாலை 3.30 மணிக்கு வானத்தில் போய் வெடிக்கவேண்டிய ஒரு வாணவெடி கீழேவிழுந்து அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி அருகிலே வெடிகள் சேமித்துவைக்கப்பட்டிருந்த அறைக்குள் விழுந்து, அங்கிருந்த வெடிகள் எல்லாம் மொத்தமாக வெடித்ததால் இவ்வளவு உயிர்கள் இழப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், 1.5 கி.மீ. சுற்றளவில் உள்ள வீடுகளில் எல்லாம் பெரியசேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்டவுடன், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். நரேந்திரமோடி அனைத்து உதவிகளையும் வழங்கியிருக்கிறார்.

‘ஆபத்து காலத்தில் உதவுபவர்தான், உண்மையான நண்பர்’ என்ற வகையில், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெறும் ஆறுதல் வார்த்தைகளை மட்டும் கூறாமல், உடனடியாக தமிழகத்திலிருந்து மருத்துவ நிபுணர்களையும், தேவையான மருந்துகளையும் அனுப்பியது, தமிழர்களின் தயாளகுணத்தை பறைசாற்றியுள்ளது. இந்த வாணவேடிக்கை இவ்வளவு சோகமயமானது என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற திருவிழாக்கள், மக்கள் கூடும் இடங்களில், வாணவேடிக்கை தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது. பழையகாலங்களில் கோவில்களுக்கு அருகில் திறந்தவெளி மைதானங்களில் வாணவேடிக்கைகளை நடத்துவார்கள். ஆனால், இப்போதோ கோவில்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் வந்துவிட்டன. வெடிமருந்து விதிகள்படி, எந்த ஒரு வாணவேடிக்கைகள் என்றாலும், பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் நடத்தப்படவேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, பட்டாசுவெடிக்கும் நிகழ்ச்சிகளெல்லாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை கண்டிப்பாக நடத்தக்கூடாது என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இதுபோல, 15 கிலோ எடை அளவுக்குத்தான் பட்டாசுகள் வெடிக்கப்படவேண்டும். ஆனால், பரவூரில் நடந்த வாணவேடிக்கையில் இந்தவிதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

கோவில் திருவிழாக்களில் வாணவேடிக்கை என்பது நமது பாரம்பரிய நடைமுறையில் ஒன்றாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் சப்பரம் தூக்கிக்கொண்டு வரும்போதும், தேர் இழுத்துக்கொண்டு வரும்போதும் அதற்கு முன்பு வாணவேடிக்கைகள் நடத்தப்படுவது மரபு. அதற்கு தடைவிதிப்பது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, வாணவேடிக்கைகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு கோவில் நிர்வாகம், கிராம நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, ஆபத்தில்லாத வாணவேடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

அரசியலில் இது சகஜமப்பா!...DINAMANI

அரசியலில் இது சகஜமப்பா!...DINAMANI

By  - விக்கிரமசிங்கன் -

தமிழக சட்டப் பேரவையைப் பொருத்தவரை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன், அதே நேரத்தில் சற்றும் தரம் குறைந்துவிடாமல் விமர்சனங்களை எதிர்கொள்பவர் என்கிற பெருமை ராஜாஜியைத்தான் சாரும். சட்டப் பேரவை விவாதங்களில் அவர் சொன்ன பதில்கள் சிரிப்பலையை எழுப்பும். அவரது குட்டிக் கதைகளும், உவமைகளும் எதிர்க்கட்சியினராலும் ரசிக்கப்படும்.
 தமிழக அரசியலில் முதல் முதலில் தரக்குறைவான முறையில் பேசியவர் என்கிற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பெரியார்தான். திராவிடக் கழகத்திலிருந்து திமுக பிரிந்திருந்த நேரம். திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைத் தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் "........பயலுவ...' என்று தொடர்ந்து வசைபாடி வந்தார் அவர்.
 அப்போதெல்லாம் திமுக பொதுக்கூட்டங்களில் அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்கென்றே கூட்டம் கூடும். திமுக சாராத பொதுமக்களும் கலந்து கொள்வார்கள். சங்கீதக் கச்சேரிகளில் ரசிகர்கள் தங்கள் விருப்பமான பாடல்களைப் பாடும்படி துண்டுச்சீட்டில் எழுதி அனுப்புவதுபோல, அண்ணாவிடம் துண்டுச் சீட்டில் கேள்விகளை எழுதி அனுப்புவார்கள். அண்ணாவும், எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
 கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர், "பெரியார் உங்களை இப்படித் தரக்குறைவாகத் குறிப்பிட்டு வசைபாடுகிறாரே...?' என்று துண்டுச் சீட்டில் எழுதி அண்ணாவுக்கு அனுப்பினார். அண்ணா தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன், "நாங்கள் அவரைத் தந்தை என்கிறோம். அவரோ எங்களை வேசி மகன் என்கிறார்' என்று கூறிய பதிலால் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
 ஆனால், அதற்குப் பிறகும் பெரியார் திமுகவினரை வசைபாடுவதை நிறுத்தவில்லை. 1962, 1967 தேர்தல்களில் "காமராஜர்தான் பச்சைத் தமிழன். இவர்கள் ................' என்று தொடர்ந்து வசைபாடி திமுகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்தார். 1967-இல் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல்வரான அண்ணா தனது அமைச்சரவை சகாக்களுடன் நேரில் சென்று பெரியாரிடம் ஆசி வாங்கினார். அத்துடன் அவர்களுக்குள் இருந்த பகை விலகியது. தனது பெருந்தன்மையால் அதுவரை வசைபாடிய பெரியாரைத் தனது புகழ்பாட வைத்துவிட்டார் அண்ணா.
 தமிழக சட்டப் பேரவையில், அவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் எழுந்த முதல் தரக்குறைவான பேச்சுக்கு சொந்தக்காரர், இன்று தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகத் திகழும் கருணாநிதிதான் என்றால் இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை.
 அன்று ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் குறிப்பிடத்தக்க உறுப்பினர் அன்றைய பேசின் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த டி.என். அனந்தநாயகி. ஒருமுறை அவர் சட்டப் பேரவையில் திமுகவை விமர்சிக்கும் விதத்தில், "எங்கே இருக்கிறது திராவிட நாடு?' என்று கேள்வி எழுப்பினார்.
 எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மு. கருணாநிதி எழுந்து நின்றபோது, அவை ஒரு வினாடி மெளனமானது. அவர், "அந்த நாடாவை அவிழ்த்து...' என்று கூறி, சற்று நிறுத்தி, பிறகு, "நான் குறிப்பிட்டது பாவாடை நாடாவை அல்ல, கோப்புகளின் நாடாவை' என்று கூறும்போதே அவையில் ஒரே கூச்சலும் கண்டனமும் எழுந்தன என்று அன்றைய காலகட்டக் காங்கிரஸ் தலைவர்கள் மேடையில் பேசுவதுண்டு.
 தரக்குறைவான மேடைப் பேச்சுகளும், சட்டப் பேரவை விவாதங்களும் 1962-க்குப் பிறகு திமுக கணிசமான உறுப்பினர்களுடன் அவைக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் தலைதூக்கியது. திமுகவில் அண்ணா, நெடுஞ்செழியன் போன்ற மிகவும் கண்ணியமாகப் பேசும் தலைவர்களும் நிறையவே இருந்தனர் என்றாலும், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களின் பேச்சுகள் தரக்குறைவாகவே இருந்தன.
 அரசியல் மேடைகளில் காமராஜரும், பக்தவத்சலமும், பின்னாளில் எம்.ஜி.ஆரும். மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கப் பட்டார்கள். கேலி செய்யப்பட்டார்கள். அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதைக் கிண்டல் செய்து மிக அதிகமாகப் பேசப்பட்டது. இவையெல்லாமே, அண்ணாவின் காலத்திற்குப் பிறகுதான் மிகவும் தரம் தாழத் தொடங்கியது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
 தமிழக அரசியலில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானவர்களில் திமுக தலைவர் கருணாநிதியும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரைவிடவும் அதிகமாக விமர்சிக்கவும், கேலி செய்யவும், வசைபாடவும் செய்யப்பட்டவர் இன்றைய முதல்வர் ஜெயலலிதாதான்!
 எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெ, ஜா என்று ஜெயலலிதாவும், வி.என். ஜானகியும் இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டபோதுதான் அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஜானகி அணியைச் சேர்ந்த பலரும் நா கூசாமல் ஜெயலலிதாமீது வைத்த விமர்சனங்கள்தான் தமிழக அரசியலில் மிகவும் தரக்குறைவான விமர்சனங்களாக இருக்கும்.
 வேடிக்கை என்னவென்றால், இப்படி மிகவும் தரம் தாழ்ந்து ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தவர்கள் அனைவருமே 1991-க்குப் பிறகு அவரது அமைச்சரைவையில் அமைச்சர்களாகவும் கட்சிப் பொறுப்புகளிலும் இருந்தனர், இருக்கின்றனர் என்பதுதான். அதை ஜெயலலிதாவின் பெருந்தன்மை என்பதா, இவர்களின் நல்ல காலம் என்பதா தெரியவில்லை.
 ஜாதியைக் குறிப்பிட்டு கருணாநிதி விமர்சிக்கப்படுவதும், பழிக்கப்படுவதும் புதிதொன்றும் அல்ல. அப்படி அவரை விமர்சித்தவர்கள் பட்டியலில் இப்போது வைகோவும் சேர்ந்திருக்கிறார், அவ்வளவே!
 1993-இல் மதிமுக பிரிந்தபோது, அப்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த நாஞ்சில் மனோகரன் எழுதிய "கருவின் குற்றம்' கவிதையின் சாராம்சமும் இப்போது வைகோ தெரிவித்திருக்கும் கருத்தும் வேறுவேறல்ல. அவர் நாகரிகமாகச் சொன்னார். இவர் கொச்சையாகக் கூறியிருக்கிறார் அவ்வளவே!
 இப்போது வைகோவை அவரது கருத்திற்காகக் கண்டித்திருப்பவர்கள் பட்டியலில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் இருப்பதுதான் நகைச்சுவை. அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த போது, "கருணாநிதி எல்லாவற்றையும் ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்' என்று கூறி வாங்கிக் கட்டிக் கொண்டது அவருக்கு மறந்து போயிருக்கக் கூடும்.
 வெகுண்டு எழுந்த கருணாநிதி, காங்கிரஸ் தலைமையிடம் ஆவேசமாக முறையிட, தில்லியிலிருந்து இளங்கோவனுக்கு "டோஸ்' விழ, அவர் கோபாலபுரத்துக்கு ஓடிப்போய் மன்னிப்புக் கேட்க, அந்தக் கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு 2009 மக்களவைத் தேர்தலில் அவரைத் திமுக தோற்கடிக்க.... அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா... என்று கருணாநிதியும் இளங்கோவனும் இப்போது கைகோத்திருக்கிறார்கள்.
 தமிழக அரசியலில் காங்கிரஸ், ஜனதா, இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சித் தலைவர்கள் யாருமே தரக்குறைவாகப் பேசியதாக சரித்திரம் இல்லை. பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒருவர் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு. தரக் குறைவாகவும், கீழ்த்தரமாகவும் பேசுபவதைப் பெருமையாகவே கருதுபவர்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே. அதனால்தான் தேசிய கட்சிகளால் தமிழகத்தில் செல்வாக்குப் பெற முடியவில்லையோ என்றுகூடத் தோன்றுகிறது.
 நாங்கள்தான் ஜனநாயகக் காவலர்கள் என்றும், பலருக்கு வழிகாட்டிகள் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களைத் தடுக்க முடியவில்லை, நம்மால் எங்கே முடியப் போகிறது?
 ÷வைகோ பேசியது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்துவிட்டது. நாம் நனி நாகரிகம் பற்றிப் பேசுகிறோம். அரசியல் கட்சிகளில் இரண்டாம் கட்ட, முன்றாம் கட்டப் பேச்சாளர்கள் பேசுவதைக் கேட்டால், தமிழ் எழுத வராது. கெட்ட வார்த்தைதான் எழுதவரும்.
 ÷அப்படியானால், இது எங்கேபோய் முடியும்? கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபேன்ஸ் கூறியதை மறுபடியும் படித்துப் பாருங்கள். ஜனநாயகம் இருந்தால் அரசியல்வாதிகள் இருப்பார்கள். அரசியல்வாதிகள் இருந்தால் வசைமாரி பொழிவார்கள். தரக்குறைவாகத் தாக்குவார்கள். அரசியலில் இது சகஜமப்பா!

தேவை பொறுமை எனும் மருந்து

தேவை பொறுமை எனும் மருந்து...DINAMANI

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் வறட்சிக் கொடுமையால் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள், தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என மரத்வாடா ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ள சம்பவம் மாணவரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 சமீப காலமாக பள்ளி, கல்லூரி, பல்லைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களிடையே, குறிப்பாக, தொழில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே தற்கொலை எண்ணம் உருவாகி வருவது வேதனை தரும் விஷயம்.
 மாணவர்களைப் பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகமும் வாட்டி வதைப்பது, அதனால் ஏற்படும் மனஉளைச்சல், சோர்வு தான் இத்தகைய தற்கொலைச் சம்பவங்களுக்குக் காரணம் என மனோதத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
 அதிலும் குறிப்பாக, ஏழை, எளிய நடுத்தர மக்களின் பிள்ளைகள் கடினப்பட்டு உழைத்து, படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்ற பின்பு, அவர்களைப் புகழ் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் சேர்த்து விட்டால் அதன் பின்பு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது.
 அங்கு ஏற்கெனவே பயிலும் பணக்காரப் பிள்ளைகளின் நடவடிக்கைச் சூழல்கள், பல்வேறு மொழி பேசும் மாணவர்கள், அவர்களின் நடை, உடை பாவனைகள், தன்னைவிட அதிக மதிப்பெண்களைப் பெற்று விட்ட மற்ற மாணவர்களைக் கண்டு அதனால் ஏற்படும் பொறாமை உணர்வு, கடனை வாங்கி கல்லூரியில் சேர்த்து விட்ட பின்பு, அடுத்து வரும் ஆண்டுகளில் கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் இருக்கும் பெற்றோர்களின் தவிப்பு, அதனால், தாங்கள் கல்லூரி நிர்வாகத்திடமும், சக மாணவர்களிடையேயும் பெறும் அவமானம் இதெல்லாம் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகின்றன.
 படித்தால் வேலை கிடைக்குமா, நாம் பெற்றோர்களை கடனாளியாக்கி விட்டோமே என்ற மனச் சோர்வு, பிடிக்காத பாடப் பிரிவில் மாணவர்களைச் சேர்த்து படிக்குமாறு வற்புறுத்துதல், அரசு ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களைப் புறக்கணித்தல் ஆகியனவும் மாணவர்களுக்குத் தற்கொலை எண்ணங்களைத் தூண்டுகின்றன.
 நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% பேருக்கு மன நோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
 எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்து, பிள்ளைகளைக் கண்டிக்கும் பழக்கம் இல்லாத பெற்றோர்களிடையே வளரும் குழந்தைகளுக்கு, பிறர் கண்டித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமல் போய்விடுகிறது. பெற்றோர்கள் தங்கள் மன அழுத்தத்தை பிள்ளைகளிடம் காட்டக் கூடாது.
 வளர்ந்து விட்ட தொழில்நுட்ப யுகத்தில் எங்கும் போட்டி, எதிலும் போட்டி என்ற போக்கு அவர்களை பெரும் பரப்பரப்புக்கு ஆளாக்கி விட்டது.
 மாணவர்களின் மனநிலையை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஆசிரியர்களின் பணி இருக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 தங்கள் மீது அக்கறை இருப்பதாலேயே அவ்வப்போது பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்லூரி நிர்வாகமும் கண்டிக்கின்றனர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
 அவ்வப்போது அபாயகரமான முடிவுகளை எடுப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
 மதிப்பெண்களைக் குறைவாகப் பெற்றுவிட்டால், தங்களின் வாழ்க்கைப் பாதையே மாறி விட்டதாக நினைத்து சில மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மாய்த்துக் கொள்கிறார்கள்.
 இத்தகையச் சூழ்நிலையில் துன்பங்களையும், துயரங்களையும், போராட்டங்களையுமே துணையாகக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைந்து முன்னுக்கு வந்த வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களை ஆற்றுப்படுத்துல் நடத்த வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கப் போவதில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 அதே நேரத்தில், கல்லூரி நிர்வாகமும் மாணவர்கள், பெற்றோர்கள் - ஆசிரியர்களிடையே நல்லிணக்கம் கொண்டு கல்லூரிக் கட்டணம் கட்ட வசதியில்லாமல் துயரில் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும் வகையில், "நம் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு கண்டிப்பாக வளாக நேர்காணலில் வேலை கிடைக்கும், நீ வேலை கிடைத்த பின்பு கட்டணம் செலுத்தினால் போதும்' என்று கூறி அவர்களின் தற்கொலை எண்ணத்தை கைவிடச் செய்து மகிழ்ச்சி அலைகளை அவர்கள் மனதில் ஏற்படுத்தினால், அவர்கள் படிப்பில் மீண்டும் நாட்டம் செலுத்துவதோடு, தற்கொலை எண்ணமும் மறையும்.
 தோல்வி, துன்பம் ஏற்படும்போது அதைக்கண்டு துவளாமல், அது வெற்றியின் முதல் படிக்கட்டு என்றுணர வேண்டும். குறிப்பாக, பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடையே பொறுமை எனும் மருந்தை ஊட்ட வேண்டும்.

எரிகிற வீட்டில்...!

எரிகிற வீட்டில்...!
By ஆசிரியர்
First Published : 11 April 2016 01:47 AM IST   DINAMANI

கேரள மாநிலம், பரவூர் அருகே உள்ள புற்றிங்கல் கோயில் திருவிழாவில் நேரிட்ட வெடிவிபத்தில் 106 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் மிகப்பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கோயில் தரைமட்டமாகிவிட்டது. பல நூறு பேர் தீக்காயம் அடைந்து கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கோயில் விழாவில் வழக்கமாக நடைபெறும் இரு குழுக்களுக்கு இடையேயான வாண வேடிக்கைப் போட்டிக்கு இந்த ஆண்டு காவல் துறை தடை விதித்தது என்றும், இதனால் கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி இல்லாமலேயே வாண வேடிக்கை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காலம் காலமாக நடந்துவரும் இக்கோயில் வாண வேடிக்கை போட்டியை ஏன் காவல் துறை தடுத்தது என்பது புரியாத புதிர்.

தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளம் மற்றும் தமிழ்நாட்டில், கோயில் திருவிழாகளில் வாண வேடிக்கை என்பது விழாவுடன் பிரிக்க முடியாத மரபாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இத்தகைய வாண வேடிக்கை என்பது கோயில் விழாக் குழுவின் செலவாக அமையும். ஆனால் கேரளத்தில், பெரும்பாலும் அந்தக் கோயில் சார்புடைய கிராமத்தினர் தங்களுக்குள் வசூல் செய்து வாண வேடிக்கை நடத்துகிறார்கள்.

புற்றிங்கல் பகவதி அம்மன் கோயில் மட்டுமன்றி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மாறா பகவதி அம்மன் கோயில் திருவிழாவிலும் வெடி விழா இரு கிராமத்தினருக்கு இடையே போட்டியுடன் நடத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது. எந்த கிராமத்தின் வெடிகள் அதிக சப்தத்துடன் வெடிக்கின்றன, வாணப்பூக்கள் எவ்வளவு அழகாக இருந்தன என்பதை வைத்து யாருடைய வெடிவிழா சிறப்பாக இருந்தது என்பதைத் தீர்மானிப்பார்கள்.

திருச்சூர் பூரம் விழாவின் முடிவில், நள்ளிரவுக்குப் பின், திருச்சூர் வடக்குநாதன் கோயில் மைதானத்தில் நடைபெறும் வாண வேடிக்கை மிகவும் பிரபலமானது. பூரம் விழா நாளில், மாலைப்பொழுதில் யானையின் மீது இரு தரப்பினரும் வண்ண அலங்காரக் குடைகளை மாற்றும் அழகை ரசித்த பிறகு, இரவு வாண வேடிக்கையை ரசிக்காமல் கூட்டம் கலைவதில்லை.

புற்றிங்கல் பகவதி அம்மன் கோயில் வெடிவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே வாண வேடிக்கை போட்டி கூடாது என்று காவல் துறை கூறியதால், இதை ஏற்க மறுத்து கோயில் நிர்வாகத்தினர் கடைசிவரை அதிகாரிகளுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. அனுமதி கிடையாது என்று முடிவு செய்த பிறகு, பல்லாயிரம் மக்கள் கூடும் பகுதியில் வெடிமருந்துகளைக் குவித்து வைக்க அனுமதித்தது ஏன்? அனுமதியின்றி விழாக் குழுவினர் வாண வேடிக்கை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன், தடுப்பு நடவடிக்கையாக காவலர்களை அங்கே நிறுத்தி வைக்கத் தவறிய காவல் துறை மீது யார் வழக்குப் பதிவு செய்வார்கள்?

வெடிவிழா நடத்தப்படும் கோயில்கள் அனைத்திலுமே இதற்கென தனி மைதானம் கோயில் முன்பாக அல்லது கோயில் அருகே இருக்கும். வாண வெடி தயாரிப்போர் ஒருசில நாள்களுக்கு முன்பாகவே அங்கே வந்து, வாண வெடிக்கான குழிகள் அமைக்கவும், மூங்கில் கோபுரம் அமைக்கவும் தொடங்கிவிடுவார்கள். அந்த மைதானத்துக்குள் யாரும் நுழையாமல் பார்த்துக்கொள்வார்கள். வெடிவிழா வழக்கமாக இரவு 11 மணிக்கு மேல்தான் தொடங்கும். அந்த நேரத்தில் மின்சாரத்தை துண்டித்துவிடுவதே வழக்கம். அந்த நேரத்திலும், வாண வேடிக்கை குழுவினரின் ஆட்கள் அந்த மைதானத்தின் எல்லையில் நின்று யாரும் உள்ளே போகாதபடி கண்காணிப்பார்கள்.

இத்தனை நடைமுறைகளையும் மீறி, வாண வெடி மருந்துகள் கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஒரு தீப்பொறி விழுந்து விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுவது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. வாண வேடிக்கை நடக்கும் மைதானத்தில் எத்தனை பெரிய விபத்து நடந்தாலும், வாண வெடி ஊழியர்கள்தான் பலியாவார்கள். பார்வையாளர்கள் இத்தனை பேர் பலியாக வாய்ப்பில்லை. வாண வெடி மேலெழாமல் பக்கவாட்டில் பறக்கும்போது சில பார்வையாளர்கள் பாதிக்கப்படுவதுண்டே தவிர, இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் சாகவும், 200 பேர் காயமடையும்படி ஆனதில்லை.

காவல் துறை கடைசி வரை அனுமதி வழங்க மறுத்ததால், அவசர அவசரமாக இந்த வாண வேடிக்கையை நடத்தி முடித்துவிட வேண்டும் என்கின்ற முனைப்புதான் தவறுகளுக்கும், விபத்துக்கும் காரணமாக இருந்ததா? அல்லது கேரளத்தில் இத்தகைய வெடி விழாகளை ஒழித்துவிட வேண்டும் என்கிற சதி வலைப்பின்னல்தான் இதற்கு அச்சாரமா?

இந்த விபத்துக்கான காரணங்களை நிச்சயமாக ஒரு குழு ஆய்வு செய்து சொல்லும். ஆனால், அவர்கள் காவல் துறையைக் குற்றம் சொல்லப்போவதில்லை. இனி எல்லா கோயில்களிலும் வாண வேடிக்கைகளைக் கட்டுப்படுத்துவார்கள். காவல் துறையினர் முன்னிலையில், அவர்கள் அனுமதிக்கும் வெடிகளை மட்டும், அனுமதிக்கும் எண்ணிக்கையில் வெடிக்கும்படி பரிந்துரைக்கலாம்.

கோயில்களில் யானைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இப்போது கோயில்களில் வாண வேடிக்கையும் கூடாது என்று ஒலிமாசுக்கு எதிரான ஆர்வலர்களால் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அவசர அவசரமாகப் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கேரளம் விரைந்திருக்கிறார்களே, இது அப்பட்டமான அரசியல் ஆதாய முயற்சியாகத் தெரியவில்லையா? "எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்!' என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!

வாய்ப்பு ! மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ... 2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்

வாய்ப்பு ! மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ... 2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்

DINAMALAR 12.4.2016

புதுடில்லி,:நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான நுழைவுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, பொது நுழைவுத்தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த, 2013 ஜூலையில், பொது நுழைவுத்தேர்வு நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வில், அப்போதைய தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென் ஆகியோர், இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவை ரத்து செய்தனர். அதே நேரத்தில், நீதிபதி தவே, நுழைவுத்தேர்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், அனில் ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:நுழைவுத்தேர்வு குறித்த வழக்கில், மூன்று நீதிபதிகள்

அடங்கிய அமர்வு, தங்களுக்குள் விவாதிக்காமல்,தீர்ப்பு அளித்துள்ளது. அதனால்,இந்த தீர்ப்பு மறுஆய்வு செய்யப்பட வேண்டும். இந்த வழக்கு குறித்தும், தீர்ப்பு குறித்தும், தற்போது எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. அது வழக்கின் விசாரணையை பாதிக்கலாம். அதனால், இந்த மறுஆய்வு மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது.கவுன்சில் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்படும். நுழைவுத்தேர்வை ரத்து செய்து பிறப்பித்த தீர்ப்பு, திரும்பப் பெறப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்திற்கு பொருந்துமா?

மறுஆய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளதால், மருத்துவக் கல்லுாரிகளுக்கு, நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், பொது நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. அதனால், தமிழகத்திற்கு இது பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.'தமிழகத்தில் நுழைவுத்தேர்வுக்கு தடை உள்ள போதும், தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு, தமிழகத்திற்கும் பொருந்தும்' என, மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.மத்திய அரசின் மறுஆய்வு மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:'மக்களுக்கு தரம்வாய்ந்த மருத்துவ சேவை கிடைப்பதற்கு ஏதுவாக, மருத்துவக் கல்லுாரிகளில், தகுதி உள்ளவர்கள் மட்டுமே சேர வேண்டும். அதன்படி, இந்திய மருத்துவக் கவுன்சில் நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும்' என, ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
அதன்படியே, நுழைவுத்தேர்வுநடத்தும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த தீர்ப்புக்கு எதிராக, மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பு அமைந்துவிட்டது. அதை, மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுவரை நடந்தது...
● நாடு முழுவதும் உள்ள, 600க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில், இளங்கலை பட்டப் படிப்பில் சேருவதற்கு, பொது நுழைவுத்தேர்வு

நடத்துவதற்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது
● 'இது, சிறுபான்மையினருக்கு எதிரானது' என, கிறிஸ்தவ மருத்துவக் கல்லுாரி உள்ளிட்டவை வழக்கு தொடர்ந்தன
● இதை விசாரித்த, மூன்று நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, 2013, ஜூலை 18ம் தேதி, கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்தது
● இதை எதிர்த்து, இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய அரசு சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

'மாநில அரசின் உரிமைக்கு எதிரானது'

சமூக சமத்துவத்திற்கான, டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை, சுப்ரீம் கோர்ட் நீக்கி உள்ளது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கும், நுழைவுத்தேர்வை புகுத்துவது, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது.கூட்டாட்சி கோட்பாடுகள், இடஒதுக்கீடு உரிமைகளுக்கு எதிரானது. மாநில ஒதுக்கீடு இடங்களில், மத்திய அரசு தலையிடக் கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவால், தமிழக மாணவர்கள், பெற்றோர் கவலையடைந்து உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மதுரை:'பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர் இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை:'பணி வரன்முறை செய்யப்படாத ஊழியர் இறந்தால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை சண்முகம். திருப்புத்துார் நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். அவரது பணி வரன்முறைப்படுத்தப்படவில்லை.

வேலை நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்றுவிடுவார். சண்முகம் 2007 பிப்.,17 முதல் 18 வரை வேலைக்கு வரவில்லை. இதை, திருப்புத்துார் நடுவர், சிவகங்கை முதன்மை நீதித்துறை நடுவருக்கு தெரிவித்தார். சண்முகத்திற்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சண்முகம் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்தார். அவரை பணி நீக்கம் செய்து, 2007 பிப்.,28 ல் சிவகங்கை முதன்மை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி, உயர்நீதிமன்றக் கிளையில் சண்முகம் மனு செய்தார். வழக்கு நிலுவையில் இருந்தபோது, சண்முகம் இறந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த சட்டப்பூர்வ வாரிசுகள் சவுந்தரவள்ளி, முத்துலட்சுமி
பணி வரன்முறை இன்றி ஊழியர் இறப்புகருணைப் பணி கோர முடியாது:உயர்நீதிமன்றம் உத்தரவு

DINAMALAR 12.4.2016
மனுதாரர்களாக இணைத்துக் கொண்டு, வழக்கை நடத்தினர்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் கொண்ட அமர்வு உத்தரவு: சிவகங்கை முதன்மை நடுவரின் உத்தரவு ஏற்புடையதே. சண்முகத்தின் பணி வரன்முறை செய்யப்படவில்லை.
இச்சூழ்நிலையில் அவர் இறந்ததால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் கருணைப் பணி கோர முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம், என்றனர்.

Monday, April 11, 2016

More patients leave hosps against medical advice


Chennai: Early this month, standing outside the intensive care unit where her husband Ganesan R, battling a heart disease, lay, a teary-eyed Gayatri made a painful decision.

Against the advice of doctors, she signed the papers, booked an ambulance and took her 65-year-old husband home. He lived for just a couple of days after that but when his family was by his side he breathed his last. "It was painful but we held his hands and bade goodbye," recalls the 62-year-old home maker. The family estimates it would have saved at least 1 lakh it planned to borrow for his stay in hospital.

An increasing number of seriously ill people have been leaving hospital either because they can't afford treatment or because they want to be with their loved ones at the end.

A study by doctors at Apollo Hospitals showed that at least 15% of severely-ill patients leave ICU against medical advice. A team led by critical care expert N Ramakrishnan found that 100 of 600 patients leave the critical care unit of a corporate hospital. A month later, the doctors confirmed that 53% of the patients died and the status of 21% was unknown. "Nearly one-fourth of the patients were alive after one month although we don't know the quality of their lives. Understanding the outcomes of these patients will help refine care at CCUs," said Dr Ramakrishnan.Doctors say the bigger the hospital, the greater the discharge rate. "Tertiary care is expensive and ICU rent alone can go up to 15,000. This is besides the medicines, consultation and procedure fee. There are patients who have spent lakhs of money to see their kin die," said geriatrician Dr VS Natarajan.



But discharge against medical advice isn't always easy. As happened when Suchiammal V, 70, was discharged on request from her family. "It got messy. She was breathless all the time. It was tough to watch a loved one suffer for nearly three weeks. When she left, we were drenched in guilt," said A Victor, her son, who works in an automobile factory.


More importantly, it becomes difficult to get a death certificate from a doctor if the end comes at home. While the Ganeshans were lucky to have a doctor as a neighbour, businessman S Rathinavelu of Valasaravakkam said it took nearly five hours to get death certificate for his 70-year-old mother, who died at home of stomach cancer. "We paid nearly 1,000 to get a certificate. We picked up the doctor from his clinic in Porur and dropped him back," said Rathinavelu.



Although the overall numbers represent only a fraction of hospital patients, most doctors feel the increase in early discharges is more likely an indicator of the intense pressures, including economic and social, patients may face.



Five-judge bench of SC allows review of NEET judgment; orders fresh hearing

In an important development, a five-judge bench of the Supreme Court of India has allowed the petitions seeking review of the 2013 judgment of the three-judge bench of the court which had ruled that the Medical Council of India’s (MCI) notifications for holding common entrance tests for MBBS, BDS and post-graduate medical courses were invalid. Court has now directed for a fresh hearing in the matter.

On 18 July 2013, by a majority of 2:1, court had held that the Medical Council of India was not empowered under the Indian Medical Councils Act, 1956 to conduct the NEET and had quashed the relevant notifications and regulations. Dissenting from the majority view of then Chief Justice of India Altamas Kabir and Justice Vikramjit Sen; Justice Anil R Dave had held that the “impugned notifications were are not only legal in the eyes of law but were also a boon to the students aspiring to join medical profession.”

The 2013 judgment was passed after 115 petitions were filed before the Supreme Court of India and various High Courts (which were later transferred to the Supreme Court). Majority view had held the notifications to be in violation of Articles 19(1)(g), 25, 26, 29(1) and 30 of the Constitution of India.

After the judgment was passed, several review petitions, including those by Medical Council of India, were filed before the Supreme Court of India. On 22 October 2013, a bench presided over by Justices HL Dattu (as he was then), Anil R Dave and Vikramjit Sen, issued a notice in the review petitions. Bench had ordered:
Application for oral hearing is granted.
Issue notice.
Thereafter on 21 January 2016, a bench comprising of Justices Anil R Dave, C Nagappan and Adarsh Kumar Goel, ordered:
We are further told that Civil Appeal No.4060 of 2009, involving similar issue is already pending before a larger Bench and therefore, we direct the Registry to place the papers before the Hon’ble the Chief Justice of India so that all the matters can be heard by one particular Bench at the earliest so that admissions for the ensuing academic session can be governed by the order that may be passed by this Court.
Pronouncing the order today, the five-judge bench held:
After giving our thoughtful and due consideration, we are of the view that the judgment delivered in Christian Medical College (supra) needs reconsideration. We do not propose to state reasons in detail at this stage so as to see that it may not prejudicially affect the hearing of the matters. For this purpose we have kept in mind the following observations appearing in the Constitution Bench judgment of this Court in Sheonandan Paswan…
The five-judge bench, presided over by Justice Dave, who had dissented with the majority view in the 2013 judgment, further held:
Suffice it is to mention that the majority view has not taken into consideration some binding precedents and more particularly, we find that there was no discussion among the members of the Bench before pronouncement of the judgment.
Finally, allowing the review petitions, court ordered:
We, therefore, allow these review petitions and recall the judgment dated 18th July, 2013 and direct that the matters be heard afresh. The review petitions stand disposed of as allowed.
http://www.legallyindia.com/blogs/five-judge-bench-of-sc-allows-review-of-neet-judgment-orders-fresh-hearing-read-order

Bench finds factual errors in single judge’s order

THE HINDU
Finding factual errors in an order passed by a single judge in a case related to suspension of a government servant, a Division Bench of the Madras High Court Bench here has agreed with the litigant that he would certainly get affected due to the sweeping observations made by the judge and consequent directions issued by him on the basis of the erroneous findings.

Partly allowing a writ appeal filed by R. Ramasundaram, Justices S. Manikumar and C.T. Selvam pointed out that the Personal Assistant (General) to Tiruchi Collector had suspended the appellant under Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules on the ground that a criminal case had been registered against him under Section 380 (theft in a dwelling house) of Indian Penal Code.

The suspension order was passed on June 5, 2014 and since nothing transpired for long thereafter and no departmental proceedings were initiated against him, the appellant made a representation to the Collector on April 16, 2015 to revoke the order.

He also filed a writ petition seeking a direction to the Collector to consider the representation within a stipulated period of time.

Erroneous observation

Disposing of the writ petition on June 26, the single judge erroneously observed in his order that a charge memo had been issued to the petitioner after his suspension and held that the High Court could not intervene in the departmental enquiry.

He went on to direct the Collector to conduct the enquiry on a day-to-day basis and complete it within a year.

Not in agreement with the order, the Division Bench said: “Going through the materials on record we find that no disciplinary proceedings have been initiated.”

It gave liberty to the appellant to the approach the Collector once again for revocation of the suspension order subject to the outcome of the criminal case and left it open to the officer to decide the course of action to be adopted.

The judge erroneously observed that a charge memo was issued to petitioner after his suspension

Give Up Practice of Engaging Guest Lecturers: High Court


CHENNAI: Appalled by the practice of the Dr Ambedkar Law University engaging guest lecturers, Madras High Court has directed the varsity to give up the practice.

"We are appalled by the contention raised in the counter affidavit, inasmuch as the University seems to be running on the strength of guest lecturers. If that be the case, they can dispense with the appointment of regular professors or lecturers in respect of all the subjects. This is not the way a University can function. Every subject which is being taught in a University should be by a full time professor or lecturer," a division bench of Justices R Sudhakar and S Vadyanathan has said.

The bench was allowing a writ appeal from PRL Rajavenkatesan, seeking to quash an order of a single Judge dated August 5, 2013 refusing to appoint him as an assistant professor in environmental law in the Law University.

"A Guest Lecturer is only a supplement and he/she cannot be a primary mode of imparting education. We find that the attitude of the University, that is to say that there are guest lecturers to teach various Law subjects and there is no need to appoint regular faculty members, would be an affront to the system of education and an abdication of its role as an educational institution. This approach goes against the basic tenet of education that regular teachers should be appointed be it schools, colleges or universities, so that the students are not deprived of a full-time regular teaching faculty. We therefore reject the plea of the University that a full-time Professor/Lecturer is not required, on the contrary it is a must," the bench said.

After noting that though the appellant had secured the highest marks in environmental law, he had not been selected. The bench directed the University to redo the selection process in respect of Environmental Law by appointing an appropriate Committee and complete the said process within four weeks on the basis of the records already available. The Committee is also entitled to assess the merits of the rival candidates as has been done in the case of Business Law, International Law and Intellectual Property Rights. Discretion is left to the University to maintain the earlier coram as far as possible and if there is difficulty in getting the full complement as before, they can choose competent alternative members, the bench said.

FIR against UGC official over sexual harassment


New Delhi: In a shocking case of alleged sexual harassment in University Grants Commission, an FIR has been filed against deputy secretary AK Khanduri who also happens to be a member of the complaints committee on sexual harassment of the organization.

A senior Delhi Police officer told TOI, "An FIR was registered immediately after a complaint was received and investigation is being done. Soon both the parties will be called." The complainant, not a permanent employee of UGC, has alleged that Khanduri has been making sexual overtures to her for the past few months besides trying to allure her with gifts and other things. On his part, Khanduri said, "I do not know what the complainant said but police did speak to me on Wednesday. This is an occupational hazard if you work in the administrative wing of the organization." Khanduri said he had met the woman only once.

While UGC brass did not respond to repeated queries from TOI, vice-chairperson H Devaraj said he has only heard about it. UGC Secretary JS Sandhu did not take phone calls nor did he reply to text messages. UGC chairperson Ved Prakash is abroad.

Sources said the UGC administration is putting "immense pressure" on the complainant to withdraw the case. "She has also written to the President and PM," an official said.

V-C selection process must be strengthened: academics


While the Madras High Court has nudged the State Government to amend the Universities Act in tune with the UGC Regulations 2010, a section of academics feels that this alone would not be an effective to tool to identify and appoint persons with real calibre as Vice-Chancellors to universities.

‘Clause not meaningful’

“The UGC clause that only a person with 10 years experience as professor must be appointed as Vice-Chancellor serves no meaningful purpose as it excludes talented persons serving as assistant professors,” a teachers’ union representative said.

P. Jayagandhi of the Association of University Teachers feels there is a need for initiating discussion on how to strengthen the process for selection of Vice-Chancellors. “Since the Central government has not mandated that the States follow the UGC regulations, it should initiate a discussion with the State government on the qualifications for Vice-Chancellors,” he says.

A former professor of University of Madras feels the UGC’s stand in the court that it would initiate action against universities that violate its guidelines could have a bearing on a case recently filed by the Madras University Teachers Association, pertaining to violation of UGC guidelines and the Madras University Act in the nomination of a person to its Vice-Chancellor search committee.

The Association had questioned the nomination of a Ph.D student to the search committee.

‘Aim for quality’

“There is sufficient quantity in higher education. What we must aim for now is quality. We need a person with broader exposure,” he adds.



“Centre must initiate a discussion with State on qualifications for Vice-Chancellors”

Amend statutes or face UGC fund cut: HC tells govt.


The litigation was filed last year when the MKU Vice Chancellor Search Committee notified minimum qualification for aspirants that were contrary to what was prescribed in the UGC Regulations 2010.

Noting that the University Grants Commission (UGC) could penalise universities which do not function in accordance with its regulations, the Madras High Court on Wednesday nudged the State Government to amend the statutes governing its universities to adopt the UGC Regulations of 2010.

“The Government should now be quite aware of the consequences which will flow to them on their inaction or refusal to amend the provision of the statutes (of the State universities) in line with the UGC Regulations and should be ready to face them. This may entail difficulty in the functioning of the State universities on account of the lack of support and fund flow from the UGC,” the First Bench of Chief Justice S.K. Kaul and Justice Pushpa Sathyanarayan observed.

“It would, no doubt, be advisable and desirable for the State Government to amend the Acts in terms of the UGC Regulations,” the judges added while closing a public interest litigation petition filed by eminent academician Prof. M Anandakrishnan and social activist A. Narayanan challenging the dilution of norms in selecting the Vice Chancellor for the Madurai Kamaraj University.

The litigation was filed last year when the MKU Vice Chancellor Search Committee notified minimum qualification for aspirants to the top post that were contrary to what was prescribed in the UGC Regulations 2010. While the apex regulatory body had prescribed that only a candidate who has served as professor for a minimum period of 10 years as one of the qualifications for a Vice Chancellor aspirant, the Search Committee had invited application including from Assistant Professors.

The petitioners alleged that large-scale corruptions have occurred in various universities, and to prevent such scams, the universities must follow the guidelines prescribed by the UGC while making appointments to key posts.

In its counter, the State government contended that under the provisions of the Madurai Kamaraj University Act, 1965 a search committee was constituted by the Chancellor.

“The Search Committee, being an independent and autonomous body, can prescribe the eligibility criteria for the post of Vice Chancellor. The UGC regulations are mandatory only for the Central Universities and not for other educational institutions under the purview of State legislation,” it argued.

However, the UGC counsel made it clear that the Search Committee has got no powers to fix new qualification lower than the UGC norms, and hence, the action of the Committee is without jurisdiction.

Further, the UGC could penalise universities which violated its guidelines.

On behalf of the Search Committee, it was submitted that since the State government has not officially adopted the UGC Regulations 2010, the Madurai Kamaraj University had not amended its Act and statutes in line with the UGC guidelines. Hence, it was not bound by the UGC Regulations.

In their order, the judges, noting that not all universities are able to adopt an appointment procedure with little or no government involvement, said there is no doubt that some facts about the manner of appointment of Vice Chancellor should be given consideration. The bench observed that it is obvious that the selection of Vice Chancellor does not only depend upon the norms laid down in the State and Universities Act and the UGC guidelines but also other contextual factors like regional, State and communal pressures.

UGC to Prescribe Standards for LLM


UGC to Prescribe Standards for LLM

By Express News Service

Published: 08th April 2016 05:47 AM

Last Updated: 08th April 2016 06:11 AM

COIMBATORE: The University Grants Commission has directed universities to provide details of their LLM courses so that appropriate standards could be prescribed for the curriculum, credits and duration.

In 2012, the UGC had framed guidelines for the one-year LLB programme, after which a number of universities and colleges started offering the course. However, concern was raised about its quality in some institutions, which did not have the faculty and infrastructure prescribed by the UGC.

The UGC then constituted an expert committee to go into the issue. It observed that the two types of LLM programmes — the one-year course and the two-year course — have created confusion. It was thus necessary to prescribe appropriate standards for curriculum, credits and duration.

The committee recommended that information on infrastructure, faculty, curriculum, etc, should be collected from all universities and colleges conducting the LLM programme in a prescribed format to determine the extent to which they are adhering to the UGC guidelines.

The UGC has now asked universities to provide the details of the one-year LLM programme in 15 days.

The UGC has asked for information on course components, staff pattern (professor, associate professor, assistant professor), procedures adopted in admission, trimester/semester, review and updating of curriculum, number of contact hours per week and evaluation scheme among others.

SC recalls its controversial 2013 verdict on medical entrance

New Delhi: In a significant order, Supreme Court today recalled its controversial judgement scrapping single common entrance test (NEET) for admission to MBBS, BDS and PG courses in all medical colleges, saying it was delivered by a majority verdict without any discussion among members of the bench headed by then Chief Justice of India Altamas Kabir on the day of his retirement.

A five-judge Constitution Bench headed by Justice A R Dave were unanimous in saying that the July 18, 2013, 2:1 verdict of the three-judge bench, which had paved the way for private colleges to conduct their own examination, “needs reconsideration” as “the majority view has not taken into consideration some binding precedents”.

“Suffice it is to mention that the majority view has not taken into consideration some binding precedents and more particularly, we find that there was no discussion among the members of the Bench before pronouncement of the judgment,” the apex court said.

“We, therefore, allow these review petitions and recall the judgment dated July 18, 2013 and direct that the matters be heard afresh. The review petitions stand disposed of as allowed,” it said.

Justice Dave in the 2013 verdict had given a dissenting verdict, while Justice Vikramjit Sen (since retired) had shared the views and findings of then CJI Kabir on the National Eligibility-cum-Entrance Test (NEET).

The verdict, delivered on the day when CJI Kabir demitted office, had created a buzz in the apex court corridors as an advocate had posted on a social networking site about the outcome in advance.

Interestingly, Justice Dave then too in his dissenting judgement had said the three judges of the bench “had no discussion on the subject due to paucity of time” which is normally done.

Allowing the petitions seeking review of the controversial 2013 judgement, the bench also comprising justices A K Sikri, R K Agrawal, Adarsh Kumar Goel and R Banumathi ordered the petitions filed by Christian Medical College, Vellore and others, on which the verdict was delivered, “be heard afresh”.

100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமா... By வை. இராமச்சந்திரன்

எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, 2016 பேரவைத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், பேரணி, மனிதச்சங்கிலி என அரசியல் கட்சிகளையும் விஞ்சும் அளவுக்கு விழிப்புணர்வுப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளால் வாக்குப்பதிவு எத்தனை சதவீதம் உயரப் போகிறது என்பதை அறிந்துகொள்ள மே 16 வரை பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.
நாள்தோறும் உச்சி வெயிலில் பேரணி, மனிதச் சங்கிலி, கடலில் இறங்கி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நிற்பது, ஒற்றைக்காலில் நின்றுகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த முயலுவது என என்னென்னவோ செய்து வந்தாலும், அந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு செய்தியாக மட்டும் தான் இருக்குமேயொழிய, அது வாக்குப் பதிவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பது படிக்காத பாமரனுக்குச் செய்ய வேண்டியது. அவர்கள் தான் விழிப்பாக இருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை சரியாகச் செய்து வருகின்றனரே.
அப்படியென்றால் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இவ்வளவு மேற்கொண்டும் வாக்குப்பதிவை அதிகரிக்க வழியே இல்லையா என்ற கேள்வி எழும்.
100% வாக்குப்பதிவு சாத்தியமே. அதற்கு மத்திய, மாநில அரசுகள், தேர்தல் ஆணையம், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், படித்த மேதாவிகள், மேல்தட்டு மக்கள் என அனைவரது ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
முதலில் வாக்குப்பதிவு குறைவதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 60 முதல் 70% வரை வாக்கு பதிவாகிறது என்றால் கட்சித் தொண்டர்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் ஈடுபாட்டுடன் வந்து காத்திருந்து வாக்களிப்பதாலேயாகும்.
ஆனால், அரசின் அனைத்து சலுகைகளையும் பெறும் அரசு ஊழியர்கள், அரசின் கல்வி உதவித்தொகை உள்பட அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டு, நிறைய படித்துள்ள அறிவு ஜீவிகள், வரிசையில் வந்து நிற்பதையே கௌரவக் குறைச்சலாக கருதும் மேல்தட்டு மக்கள் போன்றோர் வாக்குப்பதிவு செய்வதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை என்பதாலேயே வாக்குப்பதிவு சதவீதம் குறையக் காரணமாகிறது.
வாக்களிக்க வரவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கும் இத்தகையோருக்குப் பாடம் புகட்ட வேண்டிய அவசியமும், அவசரமும் அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உண்டு. சில அமைதியான, அதிரடியான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டியது அவசியம்.
வாக்குப்பதிவு அதிகரிக்க வேண்டுமென்றால் முதலில் வாக்குப்பதிவு செய்யும் முறைகளை இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். வாக்களிக்க வர விரும்பாதவர்கள் சொல்லும் காரணங்களில் முக்கியமானது, வாக்குச்சாவடிகளில் வரிசையாக நின்று காத்திருந்து வாக்குப் பதிவு செய்வதை விரும்பாதது; எந்தக் கட்சி ஆண்டாலும் ஊழல் தானே விஞ்சுகிறது என அரசியல்வாதிகள் மீதான மிகப்பெரிய அதிருப்தி போன்றவையே முக்கிய காரணமாகும். இதை சரிசெய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
வாக்குப் பதிவை எளிமைப்படுத்தும் வகையில், இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செல்லிடப்பேசி, இணையதளம் வழியாக வாக்குப் பதிவு செய்யும் முறையைக் கொண்டு வரலாம். காலதாமதத்தைத் தவிர்த்தல், வெளியூரில் இருக்கும் வாக்காளர்களும் எளிதில் வாக்குப் பதிவு செய்ய ஏற்பாடு செய்தல், எக்கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களையும் கூட, நோட்டாவில் வாக்களிக்க வழி இருப்பதை உணர்த்துதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு செய்தவுடன் யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரம் கிடைக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், வருங்காலத்தில் வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் வாக்களித்ததற்கான ரசீது அல்லது சான்று வழங்க வேண்டும்.
18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும், அதற்கு பின்னர் பெறப்போகும் அனைத்து நலத் திட்டங்களுக்கும் இந்த சான்றுகளை கண்டிப்பாகப் பயன்படுத்தும் வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
மத்திய அரசு வாக்களிக்காமல் இருப்பதை தேசக்குற்றமாக அறிவிக்க வேண்டும். வாக்களிக்காதவர்களுக்கு அதற்கான தண்டனையையும் கடுமையாக்க வேண்டும். வாக்களிக்காதவர்கள் அரசின் எந்த நலத்திட்டங்களும் பெறத் தகுதியில்லாதவராக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் 100 சதவீத வாக்குப் பதிவு என்பது சாத்தியமாகும்.

ஆட்சியாளர்கள் உணர்வார்களா?


நம் நாடு எதிர்நோக்கியுள்ள பல பிரச்னைகளும் தேர்தல் காலங்களில் பின்நோக்கித் தள்ளப்படும் பழக்கம் உருவாகியுள்ளது. நமது மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையவும், அடிப்படைத் தேவைகள் என்ன என்ற விவாதத்தில் எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்டது கல்வி வளர்ச்சியே. ஆனால், சமீபகாலத்தில் கல்வி வளர்ச்சி மற்றும் தரம் கவனிக்காமல் விடப்பட்டு நமது நாட்டின் பெயர் கெட்டுப்போய் உள்ளது.
1985-ஆம் ஆண்டு நான் அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. வகுப்பில் சேர்ந்தபோது, எனது ஆசிரியர்களில் ஒருவரான லேர்ரி ஃப்ரெஞ்ச், "இந்தியாவில் மெட்ராஸ் யுனிவர்சிட்டி எனக்குத் தெரிந்த ஒன்று' எனக் கூறினார். அதற்குக் காரணம் என்ன என்று அவரிடம் மாணவர்கள் வினவியபோது, "அந்த பல்கலைக்கழகத்திலிருந்து இங்கே வந்து படிக்கும் மாணவர்கள் அசாத்தியமான கல்வித்திறனை வெளிப்படுத்துவார்கள்' எனக் கூறினார்.
இதைவிடவும் பெருமையாக, அன்றைய சூழலில் சக மாணவர்களுடன் விவாதித்தபோது ஒருவர் கூறினார்: "இந்தியாவிலிருந்து வந்த மாணவர்கள் அமெரிக்க பிரஜைகளாகி மிக உயர்ந்த நிலைமையில் இருக்க அந்த நாட்டின் தலைசிறந்த கல்வித் தரமே காரணம். மனிதனை முதன்முதலாக நிலவில் காலடி வைக்கும் திட்டத்தில் மூன்று விண்வெளி விஞ்ஞானிகள் தலைமை ஏற்று நடத்தினார்கள். அதில் இரண்டு பேர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்து உயர் கல்வி பெற்று, பின் அமெரிக்க பிரஜைகளானவர்கள்'.
இப்படி நமக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருந்த நம் நாட்டின் உயர் கல்வித்துறை, இன்றைய நிலைமையில் எப்படி உள்ளது என்பதை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. உலகின் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில் 4 சீனாவில் உள்ளன என்றும் அந்த 50-இல் ஒன்றுகூட இந்தியாவில் கிடையாது என்பதும் இந்த ஆண்டின் நிலைமை.
தரவரிசைப் பட்டியலில் 200 சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றே ஒன்றுதான் இந்தியாவில் உள்ளது. அது பாம்பே ஐ.ஐ.டி எனும் உயர் கல்வி நிலையம்! இதே பல்கலைக்கழகம் 2009-ஆம் ஆண்டில் 163-ஆம் நிலைமையிலிருந்தது. இன்றைய நிலையில் அது 24 இடங்கள் கீழே தள்ளப்பட்டு 187-ஆம் நிலைக்குத் தாழ்ந்துள்ளது.
நம் நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்த 9 மாணவ, மாணவியருள் ஒரே ஒருவர்தான் கல்லூரியில் உயர்கல்விக்காக சேர்கிறார். அதாவது, 11% பள்ளி மாணவர்களே கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அமெரிக்காவில் இது 83%.
உயர்கல்வியை முடித்த மாணவர்களின் தரம் பற்றிய ஆய்வை நடத்தியவர்களின் கூற்றுப்படி, கலைக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் 10-இல் ஒருவரும், பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் நான்கில் ஒருவரும்தான் வேலைக்கு எடுத்துக்கொள்ளும் திறமையைக் கொண்டவர்கள். நம் நாட்டில் இயங்கும் கல்லூரிகளில் 90 சதவீதமும், பல்கலைக்கழகங்களில் 70 சதவீதமும் நடுத்தர மற்றும் தரமற்ற கல்வி நிலையங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளன.
2014-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 677 பல்கலைக்கழகங்களும், 37,204 கல்லூரிகளும் இருக்கின்றன. மிக அதிகமான அளவில் உத்தரப் பிரதேசத்தில் 59 பல்கலைக்கழகங்கள், தமிழ்நாட்டில் 56 மற்றும் ஆந்திரத்தில் 47 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
இந்தியாவின் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மொத்தம் 2 கோடியே 96 லட்சத்து, 29,022 மாணவ, மாணவியர் பயிலுகிறார்கள். இதில் 1 கோடியே 60 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 36 லட்சம் பேர் பெண்கள்.
இந்த எண்ணிக்கைகள் ஒருபுறமிருக்க, இவர்கள் கற்கும் கல்வியின் தரம் பற்றி நாம் ஆராய்ந்தால் அது மிகவும் கீழ்மட்டமாக உள்ளது தெரியவரும். பிரிட்டிஷ் அரசாங்கம் விட்டுச் சென்றதுதான் நமது அடிப்படை கல்வி அமைப்பு. ஆங்கில அரசுக்குத் தேவையான அலுவலக உதவியாளர்களைத் தயார் செய்வதே அன்றைய கல்வி நிலையங்களின் தலையான வேலையாயிருந்தது.
நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது 26 பல்கலைக்கழகங்களும், 695 கல்லூரிகளும் இருந்தன. அந்த எண்ணிக்கை வளர்ந்து இன்றைக்கு 30 மடங்கு உயர்ந்த நிலையிலும் 19.4 % மாணவ, மாணவியரே கல்லூரியில் உயர் கல்வி கற்கின்றனர்.
உயர் கல்வி நிலையங்கள் பல்கிப் பெருகுவது ஒருவித வளர்ச்சி என்றபோதிலும், அவற்றின் தரம் வளராத நிலைமையிலேயே உள்ளது.
ஆராய்ச்சி செய்து தேறி வந்தவர்களே கல்லூரி ஆசிரியர்களாக மேலைநாடுகளில் இருக்க முடிந்தது. இந்தியாவில் பட்டப்படிப்பு படித்து முடித்தவர்களே கல்லூரி ஆசிரியர்களாக இருந்தனர். இதன் விளைவாக தரமான கல்வி போதிக்கப்பட முடியவில்லை.
நம் நாட்டின் கல்லூரிகளில் பாடத் திட்டங்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றியமைக்கப்படும். ஆனால், மேலைநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் புதிய பாடத்திட்டங்கள் உருவாகும். ஆராய்ச்சிகளில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி அவை புதிய பாடத் திட்டங்களில் புகுத்தப்படும்.
இந்த நடைமுறைக்கு மிக முக்கியமான தேவை கல்வியில் உச்ச நிலையை அடைந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் நடைமுறையே. நான் அமெரிக்காவில் சென்று படிக்கும்போது தான் அங்கே கல்லூரிகளின் உயர் தரத்திற்கு காரணமான பேராசிரியர்களின் ஒப்புயர்வான நடைமுறையைக் காண முடிந்தது. வகுப்பு ஆரம்பிக்கும் முதல் நாள் எல்லா மாணவனுக்கும் பாடத்திட்டத்தை வழங்கி, தனது வகுப்பில் குறிப்பிட்ட நாளில் எந்த பாடம் நடத்தப்படும் என்ற அட்டவணையையும் ஆசிரியர் வழங்கி விடுவார்.
குறிப்பிட்ட ஒரு வகுப்பில் நடத்தப்படும் பாடத்தை கவனித்து புரிந்துகொள்ளும் வகையில் தயாராக வரவேண்டும். அதற்கு எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் கூறிவிடுவார். வகுப்பு ஆரம்பிக்கும்போதே மாணவர்கள் தான் குறிப்பிட்ட பாடப் புத்தகத்தை படித்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்களா என்பதை பல குறுக்கீடு கேள்விகளைக் கேட்டு தெரிந்து கொள்வார் ஆசிரியர்.
கல்லூரிகளில் பாடம் ஆரம்பித்த சில நாள்களிலேயே எந்த அளவு சரியாக கடின உழைப்புடன் கல்வி கற்க வேண்டும் என்ற நிலைமை எல்லா மாணவர்களுக்கும் எளிதாக புரிந்துவிடும். அதை செய்ய முடியாத மாணவர்கள் கல்லூரி படிப்பை விட்டு விடுவார்கள். சர்வசாதாரணமாக கல்லூரியிலிருந்து விலகி ஒரு சாதாரண வேலையில் சேர்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் கலாசார கட்டமைப்பு அங்கே இருந்ததை நான் கண்கூடாகக் காண முடிந்தது.
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல கண்டுபிடிப்புகளை செய்து முடிக்கும் ஆசிரியர்கள், தங்கள் ஆசிரியர் தொழிலை மிகவும் நேசத்துடன் செய்வதையும் அங்கே காண முடிந்தது. அதிக சம்பளத்துடன் ஒரு தனியார் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்த ஒருவர், அந்த பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கல்லூரி ஆசிரியர் பதவிக்கு வந்து சேர்ந்துவிட்டார்.
இங்கே உள்ளது போன்ற தேர்வு முறை கிடையாது. வகுப்பிலேயே ஆசிரியர் கேள்வித்தாள்களை வழங்கி பதிலளிக்க வைப்பார். ஒரு மாணவனை குறிப்பிட்ட பாடத்தை கற்கச் செய்வது முதல் அவனை தேர்வு எழுதச் செய்து மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெறச் செய்து உயர் வகுப்பிற்கு அனுப்புவது வரை குறிப்பிட்ட ஆசிரியரின் வேலை என்ற கட்டமைப்பில் உயர் கல்வி அங்கே கற்பிக்கப்படுகிறது.
கடைசியாக ஓர் உதாரணம். எம்.பி.ஏ. பட்டம் பெற கடைசி ஆண்டுக்கான பாடத் திட்டத்தில் ஓர் அம்சம் கூட்டுப்பயிற்சி எனப்படும். வகுப்பில் மாணவ, மாணவியரைப் பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தொழில் பிரச்னையைக் கொடுப்பார் ஆசிரியர். பல தொழில்சாலைகளுக்கும், வியாபார நிலையங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க ஆலோசகர்களை அணுகும் நடைமுறை அமெரிக்காவில் உண்டு.
பல ஆலோசனைகளை எம்.பி.ஏ. பட்டப்படிப்பு உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் வழங்குவதுண்டு.
இதுபோல் வரும் பிரச்னைகளில் பலவற்றைத் தொகுத்து, குறிப்பிட்ட தொழில்சாலைகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் மாணவர் குழுக்களுக்கு தீர்வு கண்டுபிடிக்க பேராசிரியர்கள் கொடுப்பார்கள்.
குறிப்பிட்ட பிரச்னையைப் பெற்றுக்கொண்ட மாணவர் குழு தங்களுக்குள் அந்த பிரச்னையை விவாதித்து சரியான வழிமுறைகளை ஆராய்ந்து பிரச்னையை தீர்ப்பது எப்படி என்ற பதிலை அளிக்க வேண்டும். அதை குறிப்பிட்ட ஒரு நாளில் வகுப்பின் எல்லா மாணவர்கள் மத்தியிலும் வாதம் செய்து சரியான விடையை பேராசிரியர் முன் அளிக்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட குழுவின் ஒவ்வொரு மாணவனுக்கும் தகுந்த மதிப்பெண்களை ஆசிரியர் வழங்குவார். இதில் பாடப் புத்தகத்தில் கற்கும் விவரங்களுக்கும் அப்பாற்பட்ட மாணவர்களின் திறமை வெளிப்படும் என்பது அந்த பாடத்திட்டத்தின் கணிப்பு.
இதைப்போலவே எல்லா மாணவர்களுக்கும், "வீட்டிற்கு எடுத்துச்செல்லும் (டேக் ஹோம்) பரீட்சை' என்ற ஒரு திட்டம். கேள்வித்தாள் மாணவனுக்கு அளிக்கப்பட்டு ஒரு வாரத்தில் பதில் எழுதி வரவேண்டும். எந்த பாடப் புத்தகத்தையும் பார்த்து விடை கண்டுபிடிக்கலாம். நூலகத்திற்குச் சென்று பல புத்தகங்களையும் புரட்டிப் பார்த்து விடை தயார் செய்யப்படும். இதன் மூலம் நிறைய புதிய விவரங்களைக் கற்கும் நிலைமை மாணவர்களுக்கு உருவாகும்.
இதுபோன்ற நடைமுறை நான் மாணவனாக இருந்த 1984-86ஆம் ஆண்டுகளில் இருந்த நிலைமை. இன்றைய நிலைமையில் மடிக்கணினிகளின் மூலம் பாடங்களைக் கற்பிக்கும் முறை சர்வசாதாரணமாக அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், பல ஐரோப்பிய நாடுகளிலும், சிங்கப்பூர், ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் உருவாகிவிட்டன!
இதை எல்லாம் புரிந்துகொண்ட நம்மில் பலருக்கும் நமது நாட்டின் உயர் கல்வி நிலையங்களில் உள்ள ஊழல், அரசியல் மற்றும் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்கள் மிகுந்த கவலையை அளிப்பது வியப்பல்ல. இந்த மோசமான சூழ்நிலையை உடனடியாக சரிசெய்து நம் நாட்டில் கல்வி அறிவைப் பெருக்கி அதனால் உருவாகும் மாணவர்களின் அறிவு வளத்தை உபயோகித்து நமது பொருளாதாரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் பெரிதாக்குவது போர்க்கால அவசரம் என்பதை நம் நாட்டின் ஆட்சியாளர்கள் உணருவார்களா? என்ற கேள்வி எழுகிறது.

TVK cadre get training in duty, dignity, discipline

TVK cadre get training in duty, dignity, discipline  V Mayilvaganan@timesofindia.com 19.10.2024 Salem : There were anecdotes from the life o...