Tuesday, August 9, 2016

மருத்துவமனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்... - இரு மருத்துவர்களின் ஆய்வறிக்கை...! VIKATAN

அந்த அறுவை சிகிச்சை நிபுணருக்கு, ஒரு ஆயுர்வேத மருத்துவர் நெருங்கிய நண்பராக இருந்தார். ஒரு நாள், அந்த ஆயுர்வேத மருத்துவர்,  தனது காரில் செல்லும் போது, அந்த வாகனம் விபத்திற்குள்ளாகிறது. சிறு விபத்துதான். அவருக்கு முதல் நாள் எந்த வலியும் இல்லை; சாதாரணமாகத்தான் இருந்தார். ஆனால், இரண்டாவது நாள் அவர் வயிற்றுப் பகுதியிலும், மார்பிலும் கடுமையான வலி எடுக்க துவங்குகிறது.

அவரை அந்த நகரத்தில் உள்ள அதி நவீன மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். முதலில் அங்கு ஆஞ்சியோகிராபி எடுக்கப்பட்டு, பின் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படுகிறது. ஆனாலும், வலி நிற்பதாய் இல்லை. அடுத்த நாள் அவர்,  கடுமையாக வயிறு வலிப்பதாக மருத்துவர்களிடம் சொல்கிறார். ஆனால், ஐ.சி.யூ வில் இருந்த மருத்துவர்கள் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. பின் இந்த விஷயத்தை, அந்த ஆயுர்வேத மருத்துவரின் நெருங்கிய நண்பரான, அறுவை சிகிச்சை நிபுணருக்கு தெரிவிக்கிறார்கள். அவர் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு விரைகிறார்.   அங்கு இருந்த மருத்துவர்களிடம், அடிவயிற்றில் சோனாகிராஃபி சோதனைச் செய்து, அதை உடனடியாக, அவர்களின் மூத்த மருத்துவர்களிடம் காட்ட சொல்கிறார். அதை வைத்துதான் அடுத்தகட்ட சிகிச்சை அளிக்க முடியும்.

மூன்று நாட்கள் செல்கிறது. மீண்டும் அந்த ஆயுர்வேத மருத்துவரின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அந்த ஆயுர்வேத மருத்துவரின் நிலை மிக மோசமாக இருக்கிறது. 'அவரது ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. அடிவயிறு உப்பி இருக்கிறது. உடனடியாக வாருங்கள்' என்கிறது அழைப்பு. இவரும் விரைந்து செல்கிறார். அங்கிருந்த மருத்துவர்களிடம் சோனோகிராபி அறிக்கையை கேட்கிறார்.  ஆனால், அவர்கள் சர்வ சாதாரணமாக,  'சோனோகிராபி எடுக்கவில்லை' என்று அலட்சியமாக சொல்கிறார்கள்.

ஆயுர்வேத நண்பர் இறக்கிறார். ஒரு வேளை அந்த டெஸ்ட் ஏற்கெனவே எடுக்கப்பட்டு இருந்தால், அவர் அடிவயிற்றுப் பகுதியில் விபத்தினால் ரத்தம் உறைந்து போயிருந்தது தெரிந்திருக்கும், அவரும் காப்பற்றப்பட்டு இருப்பார். ஆனால், அந்த மருத்துவமனையின் அலட்சியத்தால் அவர் இறந்து போனார். ஆனால், அதன் பின்னும் மருத்துவமனை அவர்களை விடுவதாக இல்லை... ஆம், 'எட்டு லட்சம் ரூபாய் கட்டணத்தை செலுத்தினால், இறந்தபின் சவத்தை தருவோம்' என்று மிரட்டி இருக்கிறது. ஒரு நீண்ட பேச்சுவர்த்தைக்கு பின், நான்கு லட்ச ரூபாய்க்கு இறங்கி வந்து இருக்கிறது.

இது ஏதோ, புனைவு அல்ல.  உண்மை சம்பவம். அதுவும் அந்த அறுவை சிகிச்சை மருத்துவர், 'மருத்துவர்களுக்கே இந்த நவீன மருத்துவமனைகள் இழைத்த துரோகம்' என்று வருத்தத்துடன் பகிர்ந்த சம்பவம்.  

ஆம், இவர் மட்டும் அல்ல, 78 நேர்மையான மருத்துவர்கள் இப்போது இந்திய மருத்துவத் துறையில் நடக்கும் அவலங்கள் குறித்து தங்கள் வருத்தங்களையும், இயலாமையும் பகிர்ந்திருக்கிறார்கள். இதை மருத்துவர் அருண் காட்ரேவும், மருத்துவர் அபய் சுக்லாவும்  பதிந்து 'Dissenting Diagnosis'  என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.  (இது குறித்து முன்பே விகடன் தளத்தில் சுருக்கமாக பதிந்து  இருக்கிறோம்.). மருத்துவத் துறையில் நடக்கும் தகிடுதத்தங்கள் குறித்து நமக்கு முன்பே ஓரளவு தெரியும் என்றாலும், ஏன் நமக்கே மோசமான அனுபவங்கள் இருந்தாலும் கூட,   இவர்கள் பகிர்ந்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மையில் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றன.

மருந்து நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் மருத்துவர்கள்:

மருத்துவர் சுசித்ரா, சென்னையை சேர்ந்த பொது மருத்துவர்.  மருந்து நிறுவனங்களின் நலன்களுக்காக அல்லாமல், நேர்மையாக நோயாளிகளின் நலனுக்காக, நேர்மையாக மருத்துவத் தொழிலை பார்த்து வருபவர். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்தின் விலை அதிகரித்துவிட்டது என்பதற்காக, அந்த மருந்தை பரிந்துரைப்பதை நிறுத்திவிட்டு, விலை குறைவாக உள்ள வேறொரு நிறுவனத்தின் மருந்தை பரிந்துரைக்க துவங்கி இருக்கிறார். உடனடியாக, அந்த மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் அவரை சந்திக்க வந்திருக்கிறார்கள். மீண்டும் தங்கள் நிறுவனத்தின் மருந்தை பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு இந்த மருத்துவர், “இல்லை... உங்கள் நிறுவனத்தின் மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது.” என சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் விடுவதாக இல்லை. ஏறத்தாழ ஒரு மணிநேரம் அவருடன் விவாதித்து இருக்கிறார்கள். " நாங்கள் பல ஆய்வுகளில் ஈடுபடுகிறோம். அதனால்தான் மருந்தின் விலை எங்களிடம் அதிகமாக இருக்கிறது"  என்று தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி இருக்க்கிறார்கள்.

உடனடியாக இந்த மருத்துவர், தன் பர்சிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டி இருக்கிறார். “நீங்கள் மனித குலத்திற்காக உன்னத ஆய்வில் ஈடுப்படுகிறீர்கள். அதற்கான எனது சிறு பங்களிப்பு... உங்கள் ஆய்விற்காக நான் உதவி செய்ய முடியும்.  னால், உங்கள் சுமையை எப்படி நான் அப்பாவி நோயாளிகளின் தோளில் இறக்கி வைக்க முடியும்...?” என்று வினவி உள்ளார்.
 
இது போல இன்னொரு சம்பவம் மிக வித்தியாசமானது. ஒரு மருந்து நிறுவனத்தின் மூத்த பிரதிநிதிகளின் படை, கும்பலாக சென்று ஒரு மாநகரத்தை சேர்ந்த, ஒரு மகப்பேறு மருத்துவரை சந்திக்கிறது. அந்த மருந்து பிரதிநிதிகளுக்கு,' ஏன் அந்த மருத்துவர் நம் நிறுவன மருந்துகளை பரிந்துரைக்கிறார்' என்பது குறித்து ஐயம். அவர்கள் அதனை நேரடியாக அந்த மருத்துவரிடமே கேட்டு இருக்கிறார்கள், “நாங்கள் உங்களுக்கு எந்த கமிஷனும், பரிசுப் பொருட்களும் தருவது இல்லை... பின் ஏன் நீங்கள் எங்கள் நிறுவன மருந்துகளை பரிந்துரைக்கிறீர்கள்...?”

அந்த மருத்துவர், மிக பொறுமையாக, “உங்கள் நிறுவன மருந்துகள்தான் விலை குறைவாக இருக்கிறது... அதனால்தான்” என்று பதிலளித்துள்ளார்.

ஆனால், அதை அந்த மருத்து பிரதிநிதிகள் நம்பவே இல்லை, “அது எப்படி மேம் முடியும்... ப்ளீஸ் சொல்லுங்க... ஏன் எங்களது நிறுவன மருந்துகளை பரிந்துரைக்கிறீர்கள் ...” என்று தொடர்ந்து கேட்டு இருக்கிறார்கள்.

இதுதான் மருத்துவத் துறையின் இன்றைய உண்மை நிலை. பெரும்பாலான மருத்துவர்களுக்கு, நோயாளிகளின் நலனை விட, மருந்து நிறுவனங்கள் தங்களுக்கு தரும் பரிசுப் பொருட்கள்தான் பிரதானமாக இருக்கிறது. இந்த பரிசுகள், மருத்துவர்கள் அணியும் உள்ளாடை முதல், அமெரிக்க பயணம் வரை நீள்கிறது... யார் அதிகம் பரிசுப் பொருட்கள் தருகிறார்களோ, அவர்கள் சொல்லும் மருந்துதான் நோயாளியின் உடலுக்குள் செல்லும். அது உண்மையாக அந்த நோயாளிக்கு தேவை இருக்கிறதோ... இல்லையோ...?

“நாம் பல ஆண்டுகள் மருத்துவம் படிக்கிறோம். ஆயிரக்கணக்கான நோயாளிகளை சந்திக்கிறோம். ஆனால், துரதிருஷ்டமாக, நாம் இந்த அனுபவங்களை எல்லாம், பரிசுப் பொருட்களுக்காக, ஒரு மருத்துவ பிரதிநிதிகளின் கால்களில் வைக்கிறோம்... இது வெட்கக்கேடானது..” என்கிறார் ஒரு மூத்த மருத்துவர் மிக கவலையாக.

கொல்கத்தாவை சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் கெளதம் மிஸ்ட்ரி, “கெடுவாய்ப்பாக , மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு ஆசிரியராக ஆகிவிட்டன” என்கிறார்.

மருத்துவ பரிசோதனைகள்:

இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயத்தையும் இந்த புத்தகத்தில் அருணும், அபயும்  பதிவு செய்து இருக்கிறார்கள். அதாவது, மருந்து நிறுவனங்கள்,  சில மருத்துவர்கள் மூலம், நோயாளிகளுக்கே தெரியாமல், அவர்கள் மீது மருத்துவ பரிசோதனையை மேற்கொள்கிறது.

ஒரு பெரு நகரத்தை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணர், “மருந்து நிறுவனங்கள், தங்களது மருந்துகளை நோயாளிகள்  மீது பரிசோதித்து பார்க்க, மருத்துவர்களுக்கு பணம் தருகிறது. ஒரு மருத்துவர் தன் நோயாளியிடம், ‘இந்த மருந்து வெளிநாட்டில் இருந்து வந்து இருக்கிறது. மிகவும் சிறப்பான மருந்து. இதை நான் உங்களுக்கு இலவசமாக தருகிறேன். இந்த படிவத்தில் கையெழுத்து மட்டும் போட்டு மருந்தை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்கிறார். எந்த விளைவுகளும் தெரியாமல் அந்த நோயாளியும் மருந்தை பெற்று செல்கிறார். இந்த மருத்துவர் அந்த படிவங்களை காண்பித்து மருத்துவ நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றுக் கொள்கிறார்..”

இது, நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இழைக்கும் துரோகம் என்பதையெல்லாம் கடந்து,  எவ்வளவு தூரம் அபாயகரமானது...?

ஆட்டோக்காரர்கள் வரை நீளும் கமிஷன்:

இந்த புத்தகத்தில் பல மருத்துவர்கள் பதிந்திருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம், கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருகை தொடர்பானது. பெரும்பாலான மருத்துவர்கள், “கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருகைக்கு பின்புதான், மருத்துவ தொழிலின் அறம் செத்துவிட்டது.” என்று பதிவு செய்து இருக்கிறாகள்.

இந்த பெரும் மருத்துவமனைகள்,  தங்கள் மருத்துவமனையை பரிந்துரைக்க மருத்துவர்கள் மற்றும் ஆய்வகங்களுக்கு பணம் தருகிறது.  இவர்களுக்கு மட்டுமல்ல, தங்களது மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டுமென, ஆட்டோ டிரைவர்களுக்கு கூட இந்த மருத்துவமனைகள் பணம் தருவதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

சென்னையை சேர்ந்த மருத்துவர் அர்ஜூன் ராஜகோபலன், “கார்ப்பரேட் மருத்துவமனைகளின் வருகைக்கு பின், பாவப்பட்ட நோயாளிகளின் நலனை விட, அந்த மருத்துவமனையின் பங்குதாரர்கள் நலம் பிரதானமாகிவிட்டது.” என்று இந்த புத்தகத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

இன்னும் அறத்தை நம்பும் மருத்துவர்கள் கவலையுடன்,  “நோயாளி, உண்மையாக அக்கறை உள்ள நேர்மையான மருத்துவரின் கையில் இருக்கிறாரா அல்லது ஒரு வணிகரின் கையில் இருக்கிறாரா  என்பதை அந்த நோயாளியின் விதிதான் தீர்மானிக்கிறது..,” என்கிறார்கள் தங்கள் துறையில் நடக்கும் அவலங்களுடன் போராடிக் கொண்டு.

உரையாடல்களை வளர்த்தெடுங்கள்:

மருத்துவத்துறை சீரழிந்து போனதற்கு, மருத்துவர்கள், மருந்து நிறுவனங்கள் மட்டும் காரணம் அல்ல. பிழை, ஒவ்வொரு தனி மனிதன் மீதும் இருக்கிறது. ஆம், இப்போது யார் வெற்றிகரமான மருத்துவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்றால், ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள்தான். இது உண்மையில் சரியானதா...? 'நேர்மையாக ஒரு மருத்துவர்,  தன் தொழிலை பார்த்தால் அவரை பொது சமூகமே கண்டுகொள்வது இல்லை' என்று, இந்த புத்தகத்தில் பல மருத்துவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவர்கள் யாரும் தேவ தூதர்கள் அல்ல... அவர்களும் நம்மைப் போல் ரத்தமும், சதையுமான சக மனிதர்கள்தான். அவர்களுக்கு நாம்தான் ஆசைகளை வளர்க்கிறோம்... பின் அவர்களை தூற்றுகிறோம்... இது எப்படி சரியாக இருக்க முடியும்...?

ஒரு மருத்துவர், 'நான் நேர்மையாகதான் மருத்துவ தொழிலை பார்ப்பேன்' என்று இருந்து இருக்கிறார். அதனால், அவர் மருந்து நிறுவனங்கள் தரும் பரிசு பொருட்களை புறக்கணித்து இருக்கிறார். ஆய்வகங்களுக்கு கமிஷன் தராமல் இருந்து இருக்கிறார். ஆனால், அவருக்கு மக்கள் ஆதரவும் இல்லாமல் போய் இருக்கிறது. பின் அனைத்தையும் விட்டு விட்டு, கனடாவிற்கு சென்று விட்டார்.  அவர் குறித்த குறிப்பு இந்த புத்தகத்தில் இருக்கிறது. இவர் விஷயத்தில் யார் மீது பிழை...?

சமூகத்தில் அறம் சார்ந்த மதிப்பீடுகள் எல்லாம் மாறிவிட்டன. பணம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது.  இந்த சமூகத்தின் அங்கம்தான், நீங்களும், நானும், பின் மருத்துவர்களும்...  நாம் மாறமாட்டோம்... ஆனால், மருத்துவர்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவோம் என்பது நியாயமாகாது...

முதலில் நாம் மாறுவோம்.... பின் நியாயமான மருத்துவர்களுடன் உரையாடல்களை வளர்த்தெடுப்போம். அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம். நமக்குள் ஒரு உணர்வுபூர்வமான பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.  இதுதான் உன்னதமான வழி... இதை நாம் மறுத்தலித்தால்,  கையில் இருக்கும் ஒரே தீப்பந்தத்தையும் அணைத்துவிட்டு, தெரிந்தே அடர் இருட்டில் கால் எடுத்து வைப்பதற்கு ஒப்பானதாகும்.


- மு. நியாஸ் அகமது

பழம்பெரும் திரை ஆளுமை பஞ்சு அருணாசலம் காலமானார்

பஞ்சு அருணாச்சலம் | கோப்புப் படம்.

இயக்குநரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பஞ்சு அருணாசலம், பின்னாளில் பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் வளர்ந்தார்.

'அன்னக்கிளி' படத்தின் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர். 'அன்னக்கிளி', 'உல்லாசப் பறவைகள்', 'முரட்டுக்காளை', 'அன்புக்கு நான் அடிமை' உட்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

'ஆறிலிருந்து அறுபது வரை', 'எங்கேயோ கேட்ட குரல்', 'பிரியா', 'வீரா', 'குரு சிஷ்யன்', 'கல்யாணராமன்', 'ஜப்பானில் கல்யாணராமன்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'ராசுக்குட்டி', 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'சொல்லமறந்த கதை', 'மாயக் கண்ணாடி' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் பஞ்சு அருணாசலம்.

'இளைய தலைமுறை', 'என்ன தவம் செய்தேன்' 'சொன்னதை செய்வேன்', 'நாடகமே உலகம்', 'மணமகளே வா' ,'புதுப்பாட்டு', 'கலிகாலம்', 'தம்பி பொண்டாட்டி' ஆகிய படங்களை இயக்கியவர்.

சென்னை தி.நகரில் வசித்து வந்த பஞ்சு அருணாசலம், உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

பட்டறிவுப் பாவலன் By கவிஞர் வைரமுத்து



கவியரசு கண்ணதாசனை முற்றும் புரிதல் என்பது சற்றே கடிது. ஏனெனில், தன் மடித்த உள்ளங்கையில் அவரைப் பூட்டி வைத்திருக்கிறது காலம். அதன் அத்தனை விரல்களையும் விலக்கினால்தான் மொத்தம் விளங்கும். இந்தக் கட்டுரை அதன் ஒரு விரலையேனும் பிரிக்குமா பார்ப்போம்.
கண்ணதாசன் ஓர் ஆச்சரியம்!


அவர் நிலைத்த அரசியல் நிலைப்பாடு கொண்டிருந்தவர் அல்லர். ஆனால், அத்தனை அரசியல் கட்சிகளும் அவரை வழிய வழிய வாசித்தன.
தனிமனித வாழ்வில் அறம் சார்ந்த சட்டங்களுக்குள் தன்னை அவர் ஆணியடித்துக்கொண்டவர் அல்லர். ஆனால், அவரது சமகாலச் சமூகம் விழுமியம் கடந்தும் அவரை விரும்பியது.
எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர் இட்டார் என்ற கவிதை வாக்குமூலப்படி அவர் பள்ளி இறுதியைத் தாண்டாதவரே. ஆனால், கல்லூரிகளெல்லாம் அவரை ஓடிஓடி உரையாற்ற அழைத்தன.
இந்தியாவின் சராசரி ஆயுளைவிடக் குறைவாக வாழ்ந்து ஐம்பத்து நான்கு வயதில் உடல் மரணம் உற்றவர்தான். ஆனால், ஐம்பது ஆண்டுகள் எழுத்துலகை ஆண்டவர் போன்ற பெரும்பிம்பம் அவருக்கு வாய்த்தது.
எப்படி இது இயன்றது... ஏது செய்த மாயமிது?
தன் எழுத்துக்கு அவர் படைத்துக்கொண்ட மொழியே முதற்காரணம்.
ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடந்த தமிழின் தொல்லழகையும் வாய்மொழி வந்த நாட்டுப்புறப் பாடல்களின் சொல்லழகையும் குழைத்துக் கூட்டிச் செய்த தனிமொழி கண்ணதாசனின் மொழி.
முன்னோர் செய்த முதுமொழி மரபு அவரது கவிதைக்கு வலிமை சேர்த்தது, பாட்டுக்கு எளிமை சேர்த்தது.
காலம் தூரம் இரண்டையும் சொற்களால் கடப்பது கவிஞனுக்குரிய கலைச்சலுகை. தமிழின் இடையறாத மரபெங்கிலும் அது இழையோடிக் கிடக்கிறது. மலையிலே பிறக்கும் காவிரி கடல் சென்று கலக்க 800 கி.மீ. கடக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பட்டினப் பாலையில் மலைத்தலைய கடற்காவிரி என்றெழுதி 800 கி.மீட்டரைக் கடியலூர் உருத்திரங் கண்ணன் நான்கு சொற்களில் கடக்கிறான்.
இதே உத்தியைக் கண்ணதாசன் தன் பாசமலர் பாடலுக்குள் கையாள்கிறார். தன் தங்கை திருமணம் கொண்டு, இல்லறம் கண்டு, இன்பம் துய்த்து, கருவுற்று, திருவுற்று, உருவுற்று, வளைகாப்புற்று, பிள்ளைபெற்று நிற்கும் காலத்தை, பூ மணம் கொண்டவள் பால் மணம் கண்டாள் என்றெழுதிப் பத்துமாதங்களை ஆறு சொற்களில் கடக்கிறார்.
சூரியனின் முதற்கீற்று விண்வெளியைக் கடந்து பூமியைத் தொடுவதற்கு 8 நிமிடங்களும் 20 நொடிகளும் பயணப்படுகின்றது. ஒளியினும் விரைந்து பயணிப்பது சொல். அந்தச் சொல்லின் சகல சாத்தியங்களையும் பாடல்களில் கையாண்டு வென்றவர் கண்ணதாசன்.
இந்தப் பாடல் வெளிவந்த 1960களில் தமிழ்நாட்டுக் கல்வியறிவு 21 விழுக்காடு மட்டுமே. அதனால் இந்த வரி பண்டித உயரத்தில் இருக்கிறதே பாமரர்க்குப் புரியுமோ என்று அய்யமுற்ற பாவலன் அடுத்த வரியில் பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் என்று உரையெழுதி விடுகிறான்.
இரண்டாம் வரியில் விளக்கம் தந்தது கல்வியறிவில்லா சமூகத்தின் மீது கவிஞன் கொண்ட கருணையாகும்.
தமிழ்த் திரைப்பாட்டுத் துறையின் நெடுங்கணக்கில் ஒரு பெருங்கவிஞனே பாடலாசிரியனாய்த் திகழ்ந்தது பாரதிதாசனுக்குப் பிறகு கண்ணதாசன்தான். பாட்டெழுதும் பணியில் கவிஞனுக்கும் பாடலாசிரியனுக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு என்பதை அறிவு ஜீவிகள் மட்டுமே அறிவார்கள்.
கவிதையின் செம்பொருள் அறிந்தவனும் சொல்லாட்சியின் சூத்திரம் புரிந்தவனும் யாப்பின் ஒலி விஞ்ஞானம் தெரிந்தவனுமாகிய கவிஞன் மொழியை வேலை வாங்குகிறான். கேள்வி ஞானத்தால் வந்த பாடலாசிரியனோ மொழியின் வேலைக்காரனாய் மட்டுமே விளங்குகிறான்.
தான் கவிதையில் செய்த பெரும் பொருளைப் பாடலுக்கு மடைமாற்றம் செய்தவர் கண்ணதாசன்.
வானம் அழுவது மழையெனும்போது
வையம் அழுவது பனியெனும்போது
கானம் அழுவது கலை யெனும்போது
கவிஞன் அழுவது கவிதையாகாதோ
-என்ற கவிதையின் சாறுபிழிந்த சாரத்தை -
இரவின் கண்ணீர் பனித்துளி யென்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச்
சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
-என்று கவலையில்லாத மனிதன் என்ற தன் சொந்தப் படத்தில் சந்தப்படுத்தியவர் கண்ணதாசன்.
இப்படி... கவிதைச் சத்துக்கள் பாட்டுக்குள் பரிமாறப்பட்டதால்தான் கண்ணதாசனின் அய்யாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களிலும் இலக்கியத்தின் தங்க ரேகைகள் ஊடும் பாவுமாய் ஓடிக்கிடக்கின்றன.
பாடல்களில் ஒரு புனைவுக்கலாசாரம் கண்ணதாசனில்தான் பூரணமாகிறது.
முற்றாத இரவு (குங்குமம்), பரம்பரை நாணம் (பாலும் பழமும்), வளர்கின்ற தங்கம் (மாலையிட்ட மங்கை), உயிரெலாம் பாசம் (புதிய பறவை), செந்தமிழர் நிலவு(பணத்தோட்டம்), மோக வண்ணம் (நிச்சயதாம்பூலம்), கடவுளில் பாதி (திருவருட்செல்வர்), விழித்திருக்கும் இரவு (ஆயிரத்தில் ஒருவன்), பேசத் தெரிந்த மிருகம் (ஆண்டவன் கட்டளை), புலம்பும் சிலம்பு (கைராசி) போன்ற படிமங்கள் பாட்டுக்குள் ஒரு கவிஞன் இட்டுச்சென்ற கையொப்பங்களாகும்.
தான் வாழும் காலத்திலேயே அதிகம் அறியப்பட்டவரும் எப்போதும் ஒரு சமூகச் சலசலப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தவருமான கவிஞர் அவர்.
அதன் காரணங்கள் இரண்டு. கவிஞன் தன் அக வாழ்க்கையைத் தானே காட்டிக்கொடுத்த கலாசார அதிர்ச்சி. மற்றும் அவரது அரசியல் பிறழ்ச்சி. அவரை மயங்க வைத்த காரணங்களும் இவையே, இயங்க வைத்த சக்திகளும் இவையே.
கட்சி அரசியல் பெரும்பாலும் வெற்றி தருவதில்லை கவிஞர்களுக்கு. காரணம் கலையின் தேவைகள் வேறு அரசியலின் தேவைகள் வேறு. கலை என்பது புலப்படுத்துவது; அரசியல் என்பது மறைப்பது. வட்ட நிலாவையும் வானத்தையும் கடக்க முடிந்த ஒரு கவிஞன், வட்டச் செயலாளரைக் கடப்பது கடிது.
கலையென்பது மர்மங்களின் விஸ்வரூபம்; அரசியலென்பது விஸ்வரூபங்களின் மர்மம்.
""நெஞ்சத்தால் ஒரு மனிதன் - சொல்லால் ஒரு மனிதன் - செயலால் ஒரு மனிதன் என்று ஒவ்வொரு மனிதனும் மூன்று வடிவெடுக்கும் உலகத்தில் அவன் மட்டும் ஒரே மனிதனாக வாழ்ந்துவிட்டான்'' என்று வனவாசத்தில் எழுதிக் காட்டும் அவரது சுயவிமர்சனம், அரசியல் லாயத்திற்கு லாயக்கில்லாத குதிரை என்று அவரைக் கோடிகாட்டுகிறது.
அவர் கட்சிமாறினார் கட்சிமாறினார் என்று கறைச்சேறு பூசுகிற சமூகம், ஏற்றுக்கொண்ட எந்தத் தலைவனுக்கும் அவர் கற்போடிருந்தார் என்பதை மறந்து பேசுகிறது. கற்பு என்ற சொல்லாட்சியை நான் அறிந்தே பிரயோகிக்கிறேன். காலங்காலமாய்க் கல்முடிச்சுப் பட்டு இறுகிக் கிடந்த கற்புக் கோட்பாடு மெல்லத் தளர்ந்து தளர்ந்து இன்று உருவாஞ்சுருக்கு நிலைக்கு நெகிழ்ந்திருக்கிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்றிருந்த கற்புநிலை, ஒருவனோ ஒருத்தியோ யாரோடு வாழ நேர்கிறதோ அவரோடு வாழும் காலம்வரை தன் இணைக்கு உண்மையாயிருத்தல் என்று நெகிழ்ந்திருக்கிறது. கண்ணதாசனின் அரசியலுக்கும் இது பொருந்தும். எந்தக் கட்சியிலிருந்தாலும் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவே இயங்கியிருக்கிறார். காமராசர், நேரு இருவரையும் கண்ணதாசனைப்போல் நேசித்த தொண்டனில்லை. ஆனால், கட்சியிலிருக்கும்போது ஒரு தலைவனை மலையளவு தூக்குவதும் வெளியேறிய பிறகு வலிக்கும்வரை தாக்குவதும் என் வாடிக்கையான பதிகம் என்று சொல்லிக்கொள்வதில் அவர் சுகம் கண்டார்.
ஆண்டுக்கொரு புதுமை தரும்
அறிவுத்திரு மாறன்
ஆட்சிக்கொரு வழி கூறிடும்
அரசுக்கலை வாணன்
மீண்டும் தமிழ் முடிசூடிட
விரையும்படை வீரன்
மீட்சிக்கென வேல் தாங்கிய
வெற்றித்தமிழ் வேந்தன்
-என்று அண்ணாவைப் புகழ்ந்து பூமாலை சூடியவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டுப் புழுக்கத்தோடு வெளியேறினார். தீராத காயங்களுக்காக வெளியேறுகிறேன் என்று சொல்ல முடியாதவர் திராவிடநாடு உடன்பாடில்லை அதனால் போய்வருகிறேன் என்று 1961-இல் அவர் கட்சியைத் துறக்கிறார். 1964-இல் திராவிட நாடு கொள்கை அதிகாரபூர்வமாகக் கைவிடப்படுகிறது. திராவிட நாட்டுக்கு இரங்கல் கவியரங்கம் ஏற்பாடு செய்து பாடுகிறார் கண்ணதாசன்.
ஈரோட்டிலே பிறந்து
இருவீட்டிலே வளர்ந்து
காஞ்சியிலே நோயாகிக்
கன்னியிலே தாயாகிச்
சென்னையிலே மாண்டாயே
செல்வத் திருவிடமே
என்னருமைத் தோழர்களே
எழுந்து சில நிமிடம்
தன்னமைதி கொண்டு
தலைதாழ்ந்து நின்றிருப்பீர்
பாவிமகள் போனாள்
பச்சையிளம் பூங்கொடியாள்
ஆவி அமைதி கொள்க
அநியாயம் வாழியவே
-என்று அழுது எழுகிறார்.
வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது என்றெழுதியவரும் அவரே. எங்கள் திராவிடப் பொன்னோடே கலை வாழும் தென்னாடே - என்று எழுதியவரும் அவரே.
திராவிட நாடு என்ற கருதுகோளுக்கு எழுச்சிப்பாடலும் இரங்கற்பாடலும் எழுதிய ஒரே திராவிட இயக்கக் கவிஞன் கண்ணதாசன் மட்டும்தான். இது கண்ணதாசனின் காட்சிப்பிழையா காலத்தின் தோற்றப்பிழையா என்பதை அவரது சமகாலத்தவரெல்லாம் முடிந்த பிறகுதான் முடிவுசெய்ய முடியும்.
திரையுலகில் கண்ணதாசனின் நிலைபேறு ஓர் ஆச்சரியத்துக்குரிய வரலாறு. கலைஞரும் (மு.கருணாநிதி), எம்.ஜி.ஆரும் தி.மு.கவின் பெரும்பிம்பங்களாய் உருவெடுத்து உச்சத்தில் நின்றபோது, திரையுலகத்தின் பெரும்பகுதி தி.மு.க.வின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது அவர் தி.மு.க.வை விட்டு வெளியேறுகிறார். தெனாலிராமன் படத்தில் வந்த சண்டையால் சீறிச் சினமுற்று சிவாஜியும் கண்ணதாசனை வெறுத்து விலகி நிற்கிறார். இப்படித் தோழமைகளையெல்லாம் துண்டித்துக்கொண்ட பிறகு ஒரு சராசரிக் கவிஞனென்றால் காணாமல்தான் போயிருப்பான். ஆனால், கட்சியைவிட்டு விலகிய 1961க்குப் பிறகுதான் கண்ணதாசனின் கலை உச்சம் தொடுகிறது. பாசமலர் முதல் உரிமைக் குரல் வரை அவர் சிகரம் நோக்கியே சிறகடிக்கிறார்.
அரசியல் எதிர்ப்புகளோ ஏகடியங்களோ கண்ணதாசனின் கலையுலகப் பயணத்தைக் கடுகளவும் தடுக்கவில்லை. முன்னே முட்டவரும் பசுவைப் பின்னே நின்று பால் கறந்துகொள்வதுபோல், அவரது அரசியலை நேசிக்க முடியாதவர்களும் அவர் தமிழை வாங்கி வைத்துக்கொள்ள வரிசையிலே நின்றார்கள். விரக்தியினால் சில புதிய பாடலாசிரியர்களை அறிமுகம் செய்தார்கள் சிலர். வியர்வையிலே உற்பத்தியாகும் பேன்கள் மாதிரி அப்படி வந்தவர்கள் காண்பதற்குள் காணாமற் போனார்கள்.
மாறாதிருக்க நான் மரமா கல்லா
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
-என்று தன் மாறுதல்களுக்குக் கவிதை நியாயம் கண்ட கண்ணதாசன் கடவுள் மறுப்பிலும் இரண்டு நிலை கண்டிருந்தார். அவரது அவசரமான கடவுள் மறுப்பு காட்டோடை வெள்ளம்போல் வந்த வேகத்தில் வற்றிவிட்டது. ஆன்மிகம் போல் நாத்திகமும் ஒரு சந்தையாகும் என்று நம்பியதன் விளவு அது.
""நான் ஒரு சுயமரியாதைக்காரன் என்று பகிரங்கமாகவே சொல்லிக் கொண்டான். கறுப்பு புஷ் கோட்டுகள் ஆறு தைத்துக்கொண்டான். எந்த ஆண்டவனிடம் இடையறாது பக்தி கொண்டிருந்தானோ அந்த ஆண்டவனையே கேலிசெய்ய ஆரம்பித்தான்'' என்று வனவாசத்தில் எழுதியிருக்கிறார். நம்பாத நாத்திகத்தை ஒரு கள்ளக் காதலைப்போல் காப்பாற்றியும் வந்திருக்கிறார்.
உல்லாசம் தேடும்
எல்லோரும் ஓர்நாள்
சொல்லாமல் போவார்
அல்லாவிடம்
-என்று தெனாலிராமனில் பாட்டெழுதிவிட்டு எங்கே இது சக நாத்திகர்களால் சர்ச்சைக்குள்ளாகுமோ என்றஞ்சி இந்தப் பாடலுக்கு மட்டும் தன் பெயரை மறைத்துத் தமிழ் மன்னன் என்று எழுத்தில் இடம்பெறச் செய்தார்.
எளிமையாக நுழைகிற எதுவும் எளிமையாக வெளியேறிவிடும். ஆண்டவன் மீது நம்பிக்கை மிகுந்தபோதோ, நாத்திகர்கள்மீது நம்பிக்கை தளர்ந்தபோதோ அவர் கடவுள் மறுப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.
பக்தியும் பாலுணர்வும் மனிதகுலத்தின் மூளைச் சாராயங்கள். சாராய வகைப்பட்ட எதையும் உலகம் இதுவரை முற்றிலும் ஒழித்ததில்லை. திராவிட இயக்கம் கட்டியெழுப்பிய கடவுள் மறுப்பு வென்றது எவ்விடம், தோற்றது எவ்விடம் என்று ஒரு மீள்பார்வை செய்வது நல்லது.
கடவுள் மறுப்பு என்பது ஒரு சமூக விஞ்ஞானம். அது அறிவியல் என்ற ஆழத்திலிருந்து கட்டியெழுப்பப்படாமல் பிராமண எதிர்ப்பு என்ற பீடத்திலிருந்து கட்டமைக்கப்பட்டு விட்டதாகக் கருதப்பட்டு விட்டதோ என்று கவலையோடு நினைக்கத் தோன்றுகிறது.
புதிதாகப் பிறந்ததுதான் பூமியை ஆட்சி செய்யும். 450 கோடி வயதுகொண்ட பூமியில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மனிதன்தான் புதிய உயிர். ஆகவே, அவனே ஆட்சி செய்தான்.
மனிதனுக்குப் பிறகு பிறந்தது கடவுள். 5,000 முதல் 7,000 ஆண்டுகள்தாம் கடவுளின் வயது. புதிதாகப் பிறந்த கடவுள் மனிதனையே ஆட்சி செய்யுமாறு அவதரிக்கப்பட்டார்.
வழிவழியாக உடம்பிலும் மனதிலும் ஊறிப்போன கடவுள் என்ற கருத்தியலைவிட்டுக் கண்ணதாசன் போன்றவர்களால் நிரந்தரமாக வெளியேற முடியவில்லை. அந்த வகையில் மதங்களுக்கும் கடவுள்களுக்கும் வேண்டிய பெருங்கூட்டத்தின் பேராசைக்குரிய கவிஞராகக் கண்ணதாசன் கருதப்படுகிறார். ஆகவே, கண்ணதாசனை பாரதிதாசனின் நீட்சி என்று கொள்ளாமல் சமய வகையில் பாரதியின் எச்சம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு கவிஞனாக பாடலாசிரியனாக அறியப்பட்ட அளவுக்குக் கண்ணதாசன் ஒரு தேர்ந்த வசனகர்த்தா என்பது போதுமான அளவுக்குப் புலப்படாமலே போய்விட்டது. பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைப் பாடல்களால் கட்டியெழுப்பிய கண்ணதாசன் 1950-களில் தன் வலிமையான வசன வரிகளால் நாற்காலியிலிருந்து எம்.ஜி.ஆரை சிம்மாசனத்திற்கு இடம் மாற்றினார்.
மதுரை வீரன் (1956), மகாதேவி (1957), நாடோடி மன்னன் (1958) என்று கண்ணதாசன் வசனமெழுதி அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்த இந்த மூன்று பெரும் படங்களும் மூட்டை தூக்கி விறகு சுமக்கும் உழைக்கும் மக்களிடத்தில் எம்.ஜி.ஆரை ஒரு தேவதூதனாய்க் கொண்டு சேர்த்தன.
வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயகமே ஆராய்ச்சி மணிகட்டி ஆண்டிருந்த தென்னகமே - இது மதுரை வீரன்.
அத்தான்... அந்தச் சத்தான வார்த்தையில் கருணாகரன் செத்தான்- இது மகாதேவி.
சொன்னாலும் புரியாது - மண்ணாளும் வித்தைகள் - இது நாடோடி மன்னன்.
எதுகை மோனைகளின் இயல்பான ஆட்சியும் தாளத்தில் வந்து விழுகிற சொல்லமைதிகளும் வசனமெழுதியவன் கவிஞன் என்பதைக் கண்ணடித்துக் கண்ணடித்துக் காட்டிக்கொடுக்கின்றன. அப்படி ஒரு தமிழுக்கு அப்போது இடமிருந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டு வெளியேறியவர்களில் வென்று நின்று காட்டியவர்கள் மூவர் மட்டுமே. கலை, அரசியல் இரண்டிலும் வென்றவர் எம்.ஜி.ஆர். கலையில் மட்டும் வென்று நின்று நிலைத்தவர்கள் சிவாஜியும், கண்ணதாசனும்.
என்னதான் கலைச்சிகரம் தொட்டிருந்தாலும் அரசியல் என்ற அடர்காடு அவர் கண்களைவிட்டு அகலவேயில்லை. தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் அவர் பக்கபலமாய் இருந்திருக்கிறார். அல்லது பக்கத்தில் இருந்திருக்கிறார்.
1972-இல் ஒரு முன்னிரவில் வீட்டுத் தொலைபேசி அடிக்கிறது கண்ணதாசன் எடுக்கிறார். அதன் பிறகான உரையாடலின் சாரத்தை நான் பதிவு செய்கிறேன்.
"கண்ணதாசன் பேசறேன்'. "யாரு?'
"நான் கருணாநிதி பேசறேன்யா'
"என்னய்யா இந்த நேரத்துல?'
"வேறொண்ணுமில்லய்யா...எம்.ஜி.ஆரைக் கட்சியவிட்டு எடுத்துடலாம்னு எல்லாரும் சொல்றா?' "நீ என்ன சொல்ற? '
"வேணாய்யா'. "எம்.ஜி.ஆரை வெளியே விடாத. உள்ள வச்சே அடி,' "பாப்போம்' - இது கண்ணதாசன் மேடையில் சொன்னது. கேட்டவன் நான். ஆனால், காலத்தின் கணக்கு வேறாக இருந்தது. எம்.ஜி.ஆரை உள்ளே வைத்து அடிக்கச் சொன்னவர் கண்ணதாசன். ஆனால், அரசவைக் கவிஞராக்கிக் கண்ணதாசனையே உள்ளே வைத்து அடித்தவர் எம்.ஜி.ஆர். காலத்தின் நகர்வுகள் எதிர்பாராதவை.
தமிழ்ப் புலவர் நெடுங்கணக்கில் கண்ணதாசனையொத்த அனுபவச் செழுமை முன்னெவருக்கும் வாய்த்ததில்லை அல்லது கண்ணதாசனைப் போல் முன்னவர் யாரும் பதிவு செய்ததில்லை.
வாழ்வு கல்வியால் அறியப்படுகிறது அனுபவத்தால்தான் உணரப்படுகிறது. சில அனுபவங்கள் அவரைத் தேடி வந்தவை. பல அவர் தேடிச் சென்றவை. எதையாவது தின்னத் துடிக்கும் தீயின் நாவுகளைப்போல அனுபவங்களை அவர் குடைந்து குடைந்து அடைந்திருக்கிறார்.
அந்த அனுபவங்களையெல்லாம் கண்ணதாசன் இலக்கியம் செய்தது தமிழ் செய்த தவம்.
கண்ணதாசனின் அனுபவங்கள் இரு துருவப்பட்டவை.
காமமில்லாத காதல் காதலில்லாத காமம்
கண்ணீரின் சாராயம் சாராயத்தின்
கண்ணீர்
அரசியலின் துரோகம் துரோகத்தின்
அரசியல்
கவியரசு பட்டம் கடன்கார வட்டம்
சாகித்ய அகாடமி - ஜப்தி
ஒதுக்க முடியாத வறுமை
பதுக்க முடியாத பணம்
தோளில் தூக்கிய ரசிகர்கள்
தோற்கடித்த வாக்காளர்கள்
புகழ்ச்சியின் சிகரம் இகழ்ச்சியின் பள்ளம்
-என்று ஒரே உடம்பில் பல்வேறு வாழ்க்கையை வாழ்ந்து களித்த - வாழ்ந்து கழித்த ஒரு கவிஞன் எந்தச் சித்தாந்தத்துக்கும் சிக்காமல் தன்னை வேதாந்தியாக்கிக் கொள்ளத் துடித்த கதைதான் கண்ணதாசன் கதை. அது திராவிடத்தில் தொடங்கி தேசியத்தில் அடங்கி தெய்வீகத்தில் முடிந்தது.
தமிழ்க் கவிதைச் சமூகத்தில் யாரோடும் ஒப்பிட முடியாத தனியொரு தமிழ்க் கவிஞன் கண்ணதாசன். இலக்கிய வரலாற்றில் வேறெப்போதும் காணாத வித்தியாசம் அவர். அந்த வித்தியாசம்தான் அழகு.
என்னைப் பொறுத்த வரையில் திரையுலகின் என் வீரிய விளைச்சலுக்குப் பலர் பொறுப்பு. என் விதைநெல்லுக்குக் கண்ணதாசனே பொறுப்பு.

இன்று கவியரசு கண்ணதாசனின்
90-ஆவது பிறந்தநாள்.
கவிஞர் வைரமுத்து

நடிகை ஜோதிலட்சுமி திடீர் மரணம்:திரையுலகினர் அஞ்சலி


vikatan.com

சென்னை: பிரபல தமிழ்த்திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் தனது 68வது வயதில் சென்னையில் காலமானார்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிகளில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ஜோதிலட்சுமி. 1963ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த 'பெரிய இடத்துப் பெண்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் இவர். ' பூவும் பொட்டும்' என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.தொடர்ந்து எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஒரு மாதம் முன்பு ஜோதிலட்சுமி திடீர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்த புற்று நோய் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று(செவ்வாய்) இரவு 12 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

மறைந்த ஜோதிலட்சுமிக்கு, ஜோதிமீனா என்ற மகள் உள்ளார். ஜோதி லட்சுமியின் உடல் சென்னை தியாகராயநகர் ராமராவ் தெருவில் உள்ள அவரின் வீட்டில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு இறுதிச் சடங்கு இன்று(புதன்) மாலை சென்னையில் கண்ணம்மாப்பேட்டை மயானத்தில் நடக்கவுள்ளது.

உங்கள் பாஸ் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்? #DailyMotivation

VIKATAN

பாஸ் மற்றும் பணியாளர் உறவு என்பது சரியாக தயாரிக்கப்பட்ட காபியை போன்றது. சரியான கலவையில் இருந்தால்தான் அதன் சுவை மேம்படும்; புத்துணர்ச்சி கிடைக்கும். நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை தன் பணியாளர்களிடம் பகிர்ந்து அதற்கான திறனை முழுமையாக வெளிக்கொணர வைக்கும் பாஸ்தான் சரியான தலைவனாக பார்க்கப்படுகிறார். அப்படி நிறுவனத்தின் தலைவர் ஒருவர், தன் பணியாளரிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் இவைதான்...

இலக்குகளை புரிந்து கொள்ளுங்கள்!

இலக்குகள் என்பது நிர்வாகம் பாஸுக்கு நிர்ணயிப்பது. அதனை ஏன் பணியாளர்கள் மீது திணிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். அவருக்கு நிர்ணயிக்கப்படும் இலக்குகள் அனைத்தும் அவருக்கு மட்டும் நிர்ணயிக்கப்படுவது அல்ல; பணியாளர்களின் கூட்டு செயல்திறனுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுபவையே. முதலில் உங்கள் அணியின் இலக்குகளை புரிந்து கொள்ளுங்கள். அதனை அடைய வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் வேலையை தாண்டி உங்கள் பாஸ் உங்களிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான விஷயம் இதுதான். இதனை புரிந்து கொண்டால் உங்கள் இலக்குகளை எளிதில் அடைந்துவிட முடியும்.

ஃபேஸ்புக் அலுவலகத்தில் மார்க் ஸக்கர்பெர்க் துவங்கி ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் இலக்குகள் என்ன என்பது அவர்களது அலுவலக அமைப்பில் தெளிவாக இருக்குமாம். பணியாளர்கள் அனைவரும் தங்களது தனிப்பட்ட இலக்குகளை அதிகரிப்பதன் மூலம் ஃபேஸ்புக்கின் வருடாந்திர இலக்குகள் அதிகரிப்பது அவர்களது ப்ளஸ்.

தவறுகளை மறைக்காதீர்கள்!

வேலையின் செயல்முறையில் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்தால் முதலில் அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கான தீர்வோடு பாஸை அணுகுங்கள். அதேசமயம் தவறான புரிதலில் ஒருவர் தவறு செய்ததாக கூறப்பட்டால் அதற்கான விளக்கத்தோடு அணுகுங்கள். அதோடு இனிமேல் அந்த தவறான புரிதல் கூட இடம்பெறாத அளவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். உங்களை நிரூபிக்கவேண்டும் என்று வேலை பார்ப்பதை பாஸ்கள் விரும்புவதில்லை. ஒரு அணியாக நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை தான் உங்கள் பாஸ் உங்களிடம் எதிர்பார்க்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இதற்கு மிகப்பெரிய உதாரணம், செய்யும் தவறுகளை ஓப்பனாக பிரஸ்மீட்டில் ஏற்றுக் கொண்டு அதனை திரும்ப செய்யாமல் செயல்பட்டதில் தோனி பாராட்டத்தக்கவர். ஷார்ட் பிட்ச் பந்துகளைக் கண்டு திணறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் ஷார்ட் பிட்ச் பந்துகளை விளாசித் தள்ளியது ஒரு எடுத்துக்காட்டு.






திட்டம் எப்படி இருக்கிறது?

அணியில் ஒரு சிலர் மிகவும் சிற‌ப்பான திட்டத்தை வகுக்கக் கூடியவராக இருப்பர். அவர்கள் சொல்வது கேட்க சரியாக இருப்பது போன்றே தோன்றும், ஆனால் பாஸ் எதிர்பார்ப்பது, சிறப்பான திட்டம் என்பதை தாண்டி, செயல்பாட்டுக்கு எளிதில் வந்து இலக்குகளை அடைய உதவும் திட்டத்தைத்தான். வெறும் பேச்சளவிலான திட்டங்கள் 73% தோல்வியில் முடிவடைகின்றன. திட்டத்தின் முதல் 30 நாட்கள் இப்படித் தான் இருக்கும் என்று தயாரிக்கப்பட்ட திட்டங்களின் வெற்றி விகிதம் 64%. அதனால் சிறப்பான திட்டங்களுக்கான முழு செயல்முறையோடு அணி இருக்க வேண்டும் என்பதை தான் உங்கள் பாஸும், நிர்வாகமும் எதிர்பார்க்கிறது.

இந்த மூன்று விஷயங்களும் சரியாக அமைந்தாலே உங்களுக்கு பாஸுக்குமான அலுவலக உறவு சரியாக அமையும், இதைத் தாண்டி வீக் எண்ட் பார்ட்டி, பர்த்டே ட்ரீட் என அனைத்து விஷயங்களிலும் உங்களுடன் ஃப்ரெண்ட்லியாக உங்கள் பாஸை அணுகுங்கள். அது அணியின் செயல்திறனை அதிகப்படுத்தும்.

- ச.ஸ்ரீராம்

'ரூ.570 கோடி கன்டெய்னர் பணத்துக்காக போலி ஆவணம் தயாரித்தார்களா?' -வங்கி அதிகாரிகளைக் குறிவைத்த சி.பி.ஐ.


VIKATAN

'ரூ.570 கோடி கன்டெய்னர் பணத்துக்காக போலி ஆவணம் தயாரித்தார்களா?' -வங்கி அதிகாரிகளைக் குறிவைத்த சி.பி.ஐ.

திருப்பூர் அருகே கன்டெய்னரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்த சர்ச்சையில் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துவிட்டது. ' 18 மணிநேரம் கழித்து போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டனவா? இதற்கு வங்கி அதிகாரிகள் துணை போனார்களா என்பதுதான் வழக்கின் மிக முக்கியமான பகுதி' என்கின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மே 13-ம் தேதி அன்று, திருப்பூர் அருகில் மூன்று கன்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின், பறக்கும் படை. ரெய்டின் போது கன்டெய்னர் லாரிகளில் வந்தவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்தது, 18 மணி நேரம் கடந்தும் பணத்திற்கு யாரும் உரிமை கோராதது என தொடக்கம் முதலே கன்டெய்னர் விவகாரத்தில் சந்தேகம் வலுத்து வந்தது. இதையடுத்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர்ந்தார் தி.மு.க எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன். நீதிமன்றமும், ' கன்டெய்னர் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, சி.பி.ஐ விசாரணை நடத்தலாம்' என உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று கன்டெய்னர் பணம் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது சி.பி.ஐ.

'எங்கள் வங்கியின் கிளையில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் இது' என கோவை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறினாலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிவிட்டது சி.பி.ஐ.

இதுகுறித்து நம்மிடம் பேசிய புலனாய்வு அதிகாரி ஒருவர், " பணம் வங்கிக்குச் சொந்தமானது என அதிகாரிகள் தெரிவித்தாலும், கன்டெய்னர் கையாளப்பட்ட விதம் சட்டத்திற்கு விரோதமானது. 570 கோடி ரூபாய் தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வந்து தருவதற்கே 24 மணி நேரத்தை அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.

மீண்டும் பணம் வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, எவ்வளவு பணம் இருந்தது என யார் முன்னிலையிலும் எண்ணப்படவில்லை. அதிலும், நள்ளிரவில் பணம் அனுப்பப்பட்டதன் மர்மம்; ஒரு கன்டெய்னருக்குப் பதிலாக மூன்று கன்டெய்னர்களைப் பயன்படுத்தியதற்கான காரணம்; கோயம்புத்தூரில் இருந்து பணத்தை நள்ளிரவில் அனுப்ப வேண்டிய அவசியம்; பணம் கொண்டு செல்லப்படும் தகவலை மாவட்ட காவல்துறை அதிகாரிக்குத் தெரியப்படுத்தப்படாதது; முதலில் விசாகப்பட்டினத்திற்குப் பணம் போவதாகத் தெரிவித்த அதிகாரிகள், பின்னர் விஜயவாடாவுக்குச் செல்ல இருந்தது என மாற்றிச் சொன்னது என கன்டெய்னர் குறித்த சந்தேகங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

கோயம்புத்தூரில் இருந்து சோதனைச் சாவடிகளின் கண்களில் படாமல், கிருஷ்ணகிரி வழியாக ஆந்திராவுக்குள் நுழைவதற்கு கன்டெய்னர் லாரி டிரைவர்களுக்கு ரூட் சொல்லப்பட்டிருக்கிறது. நான்கு வழி புறவழிச் சாலை வழியாக செல்லாமல், குறுக்கு வழியில் பணம் சென்றதே அரசியல்கட்சிகளின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. விசாகப்பட்டினம் முகவரியில் உள்ள அந்த லாரிகளில் போலியான நம்பர் பிளேட்டுகள் (AP 13 X 5204, AP 13 X 8650, AP 13 X 5203) பொருத்தப்பட்டுள்ளன. சட்டரீதியாகக் கொண்டு செல்லப்படும் பணத்திற்கு, கள்ளத்தனமான நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டிருப்பது சட்டவிரோதமானது.

வாகனம் பிடிபட்டதும், ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் துணையோடு போலி ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். இதற்கு ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள் சிலர் தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக, பணம் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் கோவை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் செயல்பட்டார்களா என்பது மிக முக்கியமான கேள்வி. கன்டெய்னர் தொடர்பாக வெளியான செய்திகள், ஸ்டேட் வங்கி கொடுத்த ஆதாரம், வாகனத்தின் உரிமையாளர்கள், வங்கி அதிகாரிகள் என பலதரப்பிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்றார் விரிவாக.

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம்.


" பணம் கொண்டு செல்லப்பட்டதில் சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றுதான் சொல்லி வருகிறோம். பத்து கோடிக்கு மேல் பணம் சென்றாலே வங்கியின் ஏதாவது ஒரு அதிகாரி உடன் செல்ல வேண்டும். ஆனால் 570 கோடி ரூபாய்க்கு, ஒரு சாதாரண கிளார்க் அந்தஸ்தில் உள்ள ஊழியர் மட்டுமே உடன் சென்றிருக்கிறார். அதிகாரிகளிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததுதான் சர்ச்சைக்கு மூல காரணம். கன்டெய்னரைக் காப்பாற்ற, வங்கி உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுப்படி கோவை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் செயல்பட்டார்களா என்பதெல்லாம் சி.பி.ஐ விசாரணையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். வரும்காலங்களில் வங்கி அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான வழக்கு இது" என்றார் தெளிவாக.

-ஆ.விஜயானந்த்

NEET issue: President gives nod for uniform admission test to medical, dental courses

There will be single test-- National Eligibility cum Entrance Exam (NEET)-- for admissions to medical and dental courses across the country, as President Pranab Mukherjee has given nod to two bills recently passed by Parliament in this regard. Mukherjee has given assent to Indian Medical Council (Amendment) Act, 2016 and Dentists (Amendment) Act, 2016, officials said.
These laws were passed by Rajya Sabha on August 1 to pave way for the NEET, which is designed to curb corruption by bringing in transparency, checking multiplicity of exams and to stop exploitation of students in counselling. They had got Lok Sabha nod last month. The two Acts mandates uniform entrance examination for admission to all medical and dental educational institutions run postgraduate and undergraduate courses.
"There shall be conducted a uniform entrance examination to all medical educational institutions at the undergraduate level and post-graduate level through such designated authority in Hindi, English and such other languages...," reads the law. The same provision is for admissions to dental educational institutes.
The NEET is intended to be introduced from the academic year 2017-18. These legislations have amended the Indian Medical Council Act, 1956 and the Dentists Act, 1948 and replaced the Ordinances that were promulgated by the government to circumvent the Supreme Court order for implementation of NEET examination from this session itself.

Monday, August 8, 2016

சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய ஜெயலலிதா வழக்கறிஞர்களுக்கு மேலும் முக்கிய பொறுப்புகள்: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது


தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கி, உயர் நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் என கடந்த 20 ஆண்டுகளாக பயணிக்கிறது. இவ்வழக்கின் மேல்முறையீட்டு மீதான தீர்ப்பை உச்ச நீதி மன்றம் விரைவில் வெளியிட இருக்கிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் தனக்காக உழைத்த வழக்கறிஞர் களுக்கு முக்கிய பொறுப்புகளை ஜெயலலிதா அவ்வப்போது வழங்கி வருகிறார். பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் நவனீத கிருஷ்ணனுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், டிஎன்பிஎஸ்சி தலைவர், மாநிலங் களவை உறுப்பினர் என பதவிகள் வழங்கப்பட்டன.

இவரைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு அரசு தலைமை வழக்கறிஞர் பதவி வழங்க ஜெயலலிதா முடிவெடுத் தார். ஆனால் தனது உடல்நிலை கடுமையான பணிகளுக்கு ஒத் துழைக்காது என்பதால் அப்பத வியை வேண்டாம் என பி.குமார் கூறிவிட்டார். மேலும் அவரது வேண்டுகோளின்படி அவரது உதவியாளரான ராஜரத்தினத்துக்கு மாநில குற்றவியல் அரசு வழக்கறிஞர் பதவி கடந்த வாரம் வழங்கப்பட்டது.

இதேபோல சசிகலாவுக்காக வாதாடிய வழக்கறிஞர் மணி சங்கர், தற்போது கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட் டுள்ளார். மேலும் ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் வக் காலத்தில் கையெழுத்திட்ட வழக்கறிஞர்கள் தனஞ்செயன், வைரமூர்த்தி ஆகியோருக்கு சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல அன்புக்கரசு, கருப்பையா ஆகியோருக்கு கூடுதல் குற்றவியல் வழக் கறிஞர் பதவியும், குற்றவியல் அரசு வழக்கறிஞராக முத்துக் குமாருக்கும் கடந்த வாரம் பதவி வழங்கப்பட்டது.

காத்திருக்கும் வழக்கறிஞர்கள்

இந்நிலையில் ஜெயலலிதா வழக்கை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனித்து வந்த வழக் கறிஞர்கள் செந்தில், அசோகன் ஆகியோருக்கு இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை. சசிகலாவுக்கு நெருக்கமானவரான செந்தில், கர்நாடக உயர் நீதி மன்றத்தில் சாதாகமான தீர்ப்பை பெற்று தந்ததால் ஜெயலலிதா நிம்மதி அடைந்தார். இதன் காரண மாக செந்தில் தற்போது ஜெய லலிதாவின் சட்ட ஆலோசகராக மாறியுள்ளார். நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு செந்திலுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வெளியானால் இளவரசிக்காக ஆஜராகி வரும் அசோகனுக்கு தமிழக அளவில் பெரிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இவ்வழக்கில் பணி யாற்றிய வழக்கறிஞர்கள் செல்வக் குமார், திவாகர், பன்னீர் செல்வம் ஆகியோருக்கும் பதவி வழங்கப்பட லாம் என தெரிகிறது.

டிஎன்பிஎஸ்சி-யில் தற்போது காலியிடம் எதுவும் இல்லாததால் த‌மிழக தகவல் ஆணையத்தின் உறுப்பினர்கள் அல்லது அரசு வழக்கறிஞர் களாக நியமிக்கப்படலாம் என தெரி கிறது. இதற்கான அறிவிப்பு இன் னும் சில தினங்களில் வெளியாக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகழேந்திக்கும் பதவி கிடைக்குமா?

வழக்கறிஞர்களைப் போல, கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி இவ்வழக்குக்காக நீண்ட காலமாக நீதிமன்ற படிகளை ஏறி இறங்கினார். வழக்கில் வாதாடிய வழக்கறிஞ‌ர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்ததோடு, பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு தேவையான உதவிகளையும் கர்நாடக மாநில அ.தி.மு.க-வினரின் ஒத்துழைப்போடு மேற்கொண்டு வந்தார்.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது புகழேந்தியும் அவரது மனைவி யும் முன்வந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு தயங்காமல் ஜாமீன் பொறுப்பை ஏற்றனர். அப்போது நீதிபதி குன்ஹா, “இவ்வளவு பெரிய தொகைக்கு தெரிந்துதான் ஜாமீன் கொடுக்கிறீர்களா? வழக்கு வேறுவிதமாக போனால் உங்கள் சொத்துக்களை இழக்க வேண்டிவரும், பரவாயில்லையா?” என்று கேட்டார். அதற்கு, “சொத்துக்களை பற்றி கவலையில்லை எங்கள் ஜாமீன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று புகழேந்தியின் மனைவி குணஜோதி கூறினார்.

“மக்களின் நல்ல தீர்ப்பை பெற்று, மீண்டும் ஆட்சிக்கு வந்து சாதனை செய்துள்ளார் எங்கள் தலைவி. இந்நிலையில், தனக்காக சட்டப் போராட்டம் நடத்தியவர்களுக்கு பதில் மரியாதை செய்யத் தொடங்கி உள்ளார். பல ஆண்டுகளாக உறு துணையாக செயல்பட்ட புகழேந்தி உள்ளிட்டநிர்வாகிகளுக்கும் அந்த வாய்ப்பைத் நிச்சயம் தருவார்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் கர்நாடக மாநில அ.தி.மு.க-வினர்.

State wants more seats in MD clinical courses


State wants more seats in MD clinical courses

Bengaluru, Aug 5, 2016, DHNS

Karnataka has asked the Medical Council of India (MCI) to be “liberal” while alloting seats for all clinical postgraduate and super-speciality courses, Medical Education Minister Sharanprakash Patil said on Thursday.

Addressing mediapersons, Patil said the demand for all streams of clinical postgraduate courses is huge. “I have requested the MCI to enhance the number of seats for these courses,” he said. Patil said that currently, there is a dearth of specialists in all community health centres. If priority is given to these courses, the problem will be addressed, he said.

The minister said there are few takers for postgraduate preclinical and para-clinical courses. “A lot of seats went waste. Even private colleges couldn’t fill up these seats,” he added.

Patil said the demand for dental seats has gone down in the last three to four years.
“Most dental colleges have not been able to fill seats.” This year, the state quota for dental seats is 887 seats, while the quota under National Eligibility -cum-Entrance Test is 645 seats.

He said dental seats in government colleges cost Rs 45,000 per seat, while it is Rs 3.9 lakh for Comed-K students.

Patil said that this year there were 3,127 MBBS seats under the government quota, 1,370 seats under NEET and 1,500 to 1,700 seats in deemed varsities.

The minister said that a public relations officers would be appointed in all hospitals under the Medical Education Department.

MCI de-recognises 51 medical colleges for academic year 2016-17 July 29, 2016 19:13 IST



The Medical Council of India (MCI) has de-recognised 51 medical colleges for academic year 2016-17, the highest over the previous three years.

Kerala and Uttar Pradesh have the highest number of medical colleges de-recognised, as per the latest data released by the health ministry. Eight medical colleges each in Kerala and UP have been denied permission to start admission process for the academic year 2016-17 for failing to meet the conditions of minimum standard stated under the MCI Regulations,1999.

Government Medical College in Painav, Idukki district in Kerala, is the sole government-run institution that was barred among seven other self-financing private colleges.

The two states are followed by Tamil Nadu (8 colleges) and Karnataka (5 colleges) for failing to get the central government's nod for the current academic year.

However, irregularities in fee and admission have not been taken into account to decide the eligibility for running institutions, the statement said.

Currently, medical colleges get government's permission for one year and has to be renewed every year. This renewal depends on MCI's assessment of colleges against the guidelines set under MCI Regulations.

According to the regulations, a medical college with an intake of 100 students annually will be granted permission only if the college has all the fourteen departments declared mandatory under the rules. These departments include psychology, forensics, community medicine and surgery, among others.

Medical institutions are mandated to provide accommodation for teaching and technical staff, have a campus area of at least 20 acres, except metros and 'A' class cities, a College Council comprising head of the departments, library and six laboratories, among other basic amenities such as water supply and electricity.


The NITI Aayog recommended replacing MCI with a National Medical Commission on July 26 in an attempt to make recruitment norms simpler while linking the process with the institutions' overall performance.

Read more at http://www.ibtimes.co.in/mci-de-recognises-51-medical-colleges-academic-year-2016-17-688357#OcamWhRmpbELStdd.99

Relief for 60 medical students

THE HINDU

Sixty students, who had been allotted MBBS seats under government quota in Shridevi Institute of Medical Sciences and Research Centre in Tumakuru last year but denied admission following non-recognition of the college by Medical Council of India (MCI), have been allotted seats in other colleges this year. However, the students have lost one year.

The SC had kept in abeyance admissions following a legal battle between the college and MCI last year, Medical Education Minister Sharan Prakash Patil said.

Aadhaar exemption for Assam students

Aadhaar exemption for Assam students

A staff reporter

Guwahati, Aug. 4: The Centre has exempted students of Assam from compulsory requirement of Aadhaar number for availing of UGC scholarships for higher education, Union human resource development minister Prakash Javadekar said today.

Javadekar informed Assam chief minister Sarbananda Sonowal and education minister Himanta Biswa Sarma of the exemption during a meeting in New Delhi after Sonowal drew the Union minister's attention towards the problems faced by the students of the state in getting UGC scholarship because of the compulsory requirement of Aadhaar number.

Enrolment for Aadhaar cards has started only in a few districts of the state.


It will be taken up in the rest of the state after completion of the NRC update.

Sonowal and Javadekar also discussed issues related to appointment of teachers in government schools in Assam. The chief minister requested him to expedite setting up a campus of Tezpur University at Jonai in Dhemaji district.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தீர்வில்லையா?


தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்கள் சமூகநீதியின் விளைநிலமான தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளன. ஸ்வாதி கொலையைத் தொடர்ந்து கடந்த வாரம் லதா* (20) என்ற தலித் பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நவீனாவும் (17) கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

சாதியப் படுகொலை

தஞ்சாவூரின் சாலியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த லதா, கடந்த ஜூலை 31-ம் தேதி இரவு வீட்டின் பின்புறத்தில் திறந்த வெளிக் கழிப்பிடத்துக்குச் சென்றிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா, குமார் என்ற இரண்டு ஆதிக்கச் சாதி ஆண்கள் லதாவைப் பாலியல் வன்புணர்ச்சி செய்து விவரிக்க இயலாத கொடூரத்தைக் கையாண்டு கொலைசெய்து, அருகிலிருக்கும் முட்புதரில் வீசிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் இருவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது.

லதாவின் இந்தக் கொடூரமான கொலைக்குப் பின்னால் அவர் பெண் என்பதோடு, அவரது சாதியும் காரணம் என்றே கருத வேண்டியுள்ளது. சாலியமங்கலத்தில் தலித் பெண்களில் ஆண்டுக்குப் பதினைந்து பேர் அங்கிருக்கும் ஆதிக்கச் சாதி ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது மனித உரிமை அமைப்பான எவிடென்ஸ். ஆனால், இந்தக் குற்றங்களுக்கு எதிராகக் காவல் துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுத்ததில்லை என்று தெரிவித்திருக்கின்றனர் அப்பகுதி தலித் சமூகத்தினர். அந்த மக்கள் காவல் துறையின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்திருக்கின் றனர் என்று தெரிவிக்கிறது எவிடென்ஸ் அமைப்பு.

சிறுமியை எரித்த சைக்கோ காதல்

விழுப்புரத்தைச் சேர்ந்த நவீனாவின் கொலை, செந்தில் குமார் (32) என்பவரின் ‘காதல்’ வெறியால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜூலை 30-ம் தேதி செந்தில்குமார், நவீனாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து, வீட்டுக்குள் சென்று நவீனாவை உயிரோடு எரிக்க முயன்றிருக்கிறார். நவீனா அதிலிருந்து தப்பிக்க முயன்றதால் தன்மீது நெருப்பு வைத்துக்கொண்டு, அருகிலிருந்த நவீனாவையும் சேர்த்து எரித்திருக்கிறார். இதில் செந்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். எழுபது சதவீதத் தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவீனா அங்கு சிகிச்சை பலனின்றிக் கடந்த புதன்கிழமை இறந்துவிட்டார்.

ஓராண்டுக்கு மேலாக, நவீனாவைப் பின்தொடர்ந்து பிரச்சினை கொடுத்துவந்திருக்கிறார் செந்தில். நவீனா விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே பின்தொடர்வதை நிறுத்தியிருக்கிறார். ஆனால், ஆறு மாதங்களுக்குப் பிறகு திரும்ப வந்திருக்கிறார். தன்னுடைய ஒரு கை மற்றும் காலை விபத்தில் இழந்துவிட்டு, நவீனாவின் அப்பாதான் வெட்டினார் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலியான புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். காவல் துறையினர் விசாரித்தபோது, செந்தில் கூறியவை அனைத்தும் பொய் என்பதும், அவர் ரயில் விபத்து ஒன்றில் காலை இழந்ததும் உறுதியாகி யிருக்கிறது. அதற்குப் பிறகு, காவல் துறையினர் அவரைக் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளிவந்த செந்தில் மீண்டும் நவீனாவைப் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார். பள்ளிச் சிறுமியான நவீனாவுக்குச் செவிலியர் படிப்பு படித்து நோயுற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியக் கனவு இருந்துள்ளது. அந்தக் கனவைத் தன் ஒருதலையான காதலின் கொடுந்தீயால் எரித்துச் சாம்பலாக்கிவிட்டார் செந்தில்.

தீர்வு என்ன?

கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலைகளில் ஒரு விஷயம் புலனாகிறது. இந்தக் கொலைகள் உயிரைப் பறிக்கும் நிகழ்வுகளாக மட்டும் நடந்துவிடவில்லை. வன்மமும் ஆண் திமிரின் மூர்க்கமும் வெளிப்பட்டுள்ள கொடூரக் கொலைகள் அவை. கொலையுண்ட பெண்கள் எல்லோருமே கொடூரமாகச் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். பெண்களைச் சக உயிராக நினைக்காமல் தன் உடல் இச்சைக்கும் வக்கிரங்களுக்கும் தீனியாகக் கொள்ளத்தக்க ஒரு நுகர்வுப் பண்டமாக மட்டுமே நினைக்கும் நோய்க்கூறு கொண்ட ஆண்களின் எண்ணிக்கை தமிழ்ச் சமூகத்தில் அதிகரித்திருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. வினோதினி, ஸ்வாதி, வினுப்பிரியா, லதா, நவீனா போன்றவர்களின் கொடூர மரணங்கள் நமக்குத் தெரியும். நமக்குத் தெரியாமல் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நிச்சயம் அதிர்ச்சி தரும் வகையில் அதிகமாகவே இருக்கும்.

யாருக்கோ நடக்கிறது, எங்கோ நடக்கிறது என்று இனியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் விளைவு மோசமானதாகவே இருக்கும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘பாலின சமத்துவ’த்தைப் பாடமாகச் சொல்லிக்கொடுத்துவிட்டால் மட்டுமே நிலைமை மாறிவிடப்போகிறதா? வெகுஜன ஊடகங்கள் அன்றாடம் போதிக்கும் பாலியல் அசமத்துவத்தை முறியடிக்க என்ன வழி? தலித்துகள்,பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான வன்மங்கள் அதிகரித்துவருவதற்கும் அதிகாரத்தில் உள்ள சித்தாந்தத்துக்கும் தொடர்பு உள்ளது. இதையும் நாம் கணக்கில் கொண்டே பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும்.

சாதியற்ற, பால் சமத்துவம் கொண்ட ஒரு சமூகம் மட்டுமே பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்துகொண்டிருக்கும் வன்கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவரும். அது ஒரு தொலைதூரப் பெருங்கனவு. அதற்கு முன்பாக, பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கான தீர்வுகளை எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைந்து சிந்தித்து செயல்படுத்த வேண்டியது உடனடித் தேவை. சமூகநீதிக்கு முன்னுதாரணமாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழ்ச் சமூகம் சாதி ரீதியான இத்தகைய கொலைகள் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியாது.

(லதா* - பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்டதால் பெயர் மாற்றப்பட்டுள்ளது).

Saturday, August 6, 2016

வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம்

வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம் என்ற திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.


ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்மில் அல்லாமல் எல்லா வங்கி ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மில்தான் தங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தது.

இனி, எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், வேறு வங்கி ஏடிஎம் மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது. இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மூன்று வங்கிகளுக்கு இதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வேறு வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்வது குறித்து பரிசோதனை முயற்சியாக 3 வங்கிகளில் செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பரிசோதனை முயற்சி துவங்கும். டெபாசிட்டுக்கு ரூ.10,000 வரை ரூ.25, ரூ.50,000க்கு மேல் ரூ.50 சேவை வரியாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

5 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க மத்திய அரசு முடிவு



மக்களவையில் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியதாவது:

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று, மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தொடங்க 17 மாநிலங்களில் இருந்து பரிந்துரைகள் வந்துள்ளன. மத்திய அரசு படிப்படியாக இந்த மாநிலங்களில் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதில் மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்), கல்யானி (மேற்கு வங்கம்), நாக்பூர் (மகாராஷ்டிரா), கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), பதின்டா (பஞ்சாப்) ஆகிய 5 இடங் களில் புதிய எய்ம்ஸ் மருத்துவ மனைகள் தொடங்க தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், அசாம், பிஹார் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவனைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசாம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் அமையவுள்ள இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

மும்பையில் விடிய, விடிய கொட்டிய கனமழை: சாலை, ரயில், விமான போக்குவரத்து முடங்கியது


மும்பையில் பெய்த கனமழையால் வெள்ள நீரில் மெல்ல மிதந்து செல்லும் மாநகரப் பேருந்து | படம்: பிடிஐ
மும்பையில் நேற்று அதிகாலை முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக புறநகர் ரயில் மற்றும் விமான போக்குவரத்து முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக கிழக்கு எக்ஸ்பிரஸ், மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை கள் மற்றும் முக்கியமான வடக்கு தெற்கு சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. இத னால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் தவித்தனர்.

சியோன்-குர்லா இடையே ரயில் தண்டவாளங்களிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றதால், புறநகர் ரயில் சேவை ஸ்தம்பித்தது. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இது குறித்து மத்திய ரயில்வே செய்திதொடர்பாளர் கூறும்போது, ‘‘சியோன், மஸ்ஜித் மற்றும் சந்த்ரஸ்ட் சாலை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இருப்புப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மும்பை சிஎஸ்டி மற்றும் தானே இடையிலான புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பகல் 12.00 மணிக்குப் பின் இயக்கப்பட்டது’’ என்றார்.

எனினும் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுவதால் அனைத்து ரயில்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்கின்றன. இதற்கிடையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலோர கொங்கன் பகுதியிலும், மகாராஷ்டிராவின் மத்திய பகுதியில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர், போலீஸார் உட்பட அனைத்து துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மும்பையை அடுத்த தானே, பால்கர், ராய்கட் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று கனமழை கொட்டியது. இதனால் மும்பையில் இருந்து அகமதாபாத், புனே, நாசிக் மற்றும் கோவாவை இணைக்கும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகா பலேஷ்வர் (159.6 மி.மீ) ராதாநகரி (128.0 மி.மீ), ராய்கட் (84 மி.மீ), மதேரன் (72 மி.மீ) மற்றும் ரத்னகிரி யில் (71.8 மி.மீ) மழை பதிவான தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சினிமாஸ்கோப்: ஒரு ஓடை நதியாகிறது



ஒரு திரைக்கதையை எதற்குப் படமாக்குகிறார்கள்? சும்மா பொழுதுபோக்குக்காகவா? நூற்றுக்கணக்கானோர் இரவு பகல் பாராமல் உழைத்து ஒரு படத்தை உருவாக்குவதன் காரணம் வெறும் கேளிக்கையல்ல. பொழுதுபோக்குக்கான சினிமாவில்கூட ஏதாவது செய்தி சொல்லவே திரைப்படத் துறையினர் விரும்புகிறார்கள். பிறகு ஏன் சிலருடைய படங்கள் புகழப்படுகின்றன, சில படங்கள் இகழப்படுகின்றன என்று கேட்கிறீர்களா? ஒரு படம் நல்ல படமாவதும் கெட்ட படமாவதும் திரைக்கதையில் இல்லை. அந்தத் திரைக்கதையை எப்படித் திரையில் காட்சிகளாகக் காட்டுகிறார்களோ அந்தத் தன்மையில் இருக்கிறது. அதாவது அதை எப்படிக் காட்சிப்படுத்துகிறார்கள் என்பதில்தான் அதன் தரம் அடங்கியுள்ளது.

அடிப்படையில் மகேந்திரன் முதல் விசுவரை அனைவரும் சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்றுதான் படமெடுக்கிறார்கள். இயக்குநர் மகேந்திரன் போன்றோர் தங்கள் திரைக்கதையில், அது சொல்லவரும் விஷயத்தை நேரடியாக வெளிப்படுத்தும் காட்சிகளை அமைக்காமல், திரைக்கதை எதை உணர்த்த வேண்டுமோ அது தொடர்பான காட்சிகளை அமைக்கிறார்கள். ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் ஒரு காட்சி சட்டென்று நினைவுக்குவருகிறது. தன் குழந்தைக்குப் பெரியம்மை என ஆதுரத்துடன் அஸ்வினி கூறுவார். மிகவும் பொறுமையாக விஜயன், ‘பெரியம்மையை ஒழித்துவிட்டதாக அரசு சொல்கிறது, அரசாங்க மருத்துவமனையில் போய்ச் சொல். பணம் தருவார்கள்’என உரைப்பார். தன் குழந்தையின் நோய் குறித்த விஷயத்தில் இப்படிக் குரூரமாக ஒரு தகப்பனால் யோசிக்க முடியும் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட சாடிஸ்டாக இருக்க முடியும் என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள். இப்படியான காட்சிகளைக் கொண்ட திரைக்கதை மேம்பட்டதாக வெளிப்படும்.

கலையம்சம் கொண்ட திரைக்கதை



இயக்குநர்கள் சிலர் தாம் சொல்ல வரும் விஷயத்தை அப்படியே காட்சியாக்கிவிடுகிறார்கள். இயக்குநர் விசு வகையறா படங்கள் இப்படி நேரடியான வெளிப்படுத்தல்களாக இருக்கும். ஒரு விஷயத்தை இலைமறை காயாக உணர்த்தும்போது அதில் வெளிப்படும் நாசூக்குத் தன்மை திரைக்கதையின் கலையம்சத்தைக் கூட்டுகிறது. பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தால் திரைக்கதை சிதறு தேங்காய் போல் ஆகிவிடுகிறது. கலை எதையும் நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தும். கோயிலில் சிலை மூலம் கடவுளை உணர்த்துவதைப் போன்றது அது. அதே நேரத்தில் சமூகத்தின் பழக்கவழக்கங்களை அப்படியே விதந்தோதுவதும் ஒரு நல்ல திரைக்கதையின் வேலையாக இருக்காது. அது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வழக்கங்களைக் குறித்த பல கேள்விகளை எழுப்பும். அதுதான் திரைக்கதையின் பிரதானப் பண்பு. அப்படியெழும் கேள்விகளுக்கான பதில்களை நோக்கிப் பார்வையாளர்களை நகர்த்தும். இந்த இடத்தில் தரின் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ ஞாபகக் குளத்தின் மேற்பரப்பில் ஓர் இலையாக மிதக்கிறது.

திரைக்கதையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவர்கள் தரின் எந்தப் படத்தையும் தவறவிட மாட்டார்கள். அவரது திரைக்கதை உத்தி மிகவும் கவனிக்கத்தக்கது. மிக இயல்பாகத் திரையில் சம்பவங்களை நகர்த்திச் செல்லும் சாமர்த்தியம் கொண்டவர் அவர். இல்லையென்றால் ஒரு வரிக் கதையான ‘தென்றலே என்னைத் தொடு’ படத்தைச் சுவையான பாடல்களால் உருவாக்கி ஒரு வருடம் ஓடக்கூடிய வெற்றிப் படைப்பாக மாற்றியிருக்க முடியுமா? அவரது எல்லாத் திரைக்கதைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. பெரும்பாலானவை முக்கோணக் காதல் கதைகள். பார்வையாளர்களின் உணர்வெழுச்சியை ஒட்டியே விரிந்து செல்லும் திரைக்கதையின் முடிவில் அவர்கள் எதிர்பாராத முடிவு காத்திருக்கும்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கணவன் உயிரை முன்னாள் காதலனிடம் விட்டுவிட்டுக் காத்திருக்கிறாள் மனைவி. கணவன் பிழைப்பானா மாட்டானா என்று எல்லோரும் காத்திருக்க தரோ ஈவிரக்கமற்று, சற்றும் எதிர்பாராத வகையில் மருத்துவரைக் கொன்றுவிடுகிறார். ஆனால் தன் பிரியத்துக்குரிய காதலியின் கணவரது உயிரைக் காப்பாற்றிவிட்டார் மருத்துவர். அந்த மனநிறைவே அவருக்குப் போதும், இதற்கு மேல் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறார் என்பதே திரைக்கதை உணர்த்தும் செய்தி.

இலக்கணத்தை மீறிய நாயகி

‘அவளுக்கென்று ஓர் மனம்’ படமும்கூட ஒருவகையில் முக்கோணக் காதல் கதையே. இந்தப் படத்தின் தலைப்பே வித்தியாசமானது. பொதுவாக ஒரு சொல்லைத் தொடர்ந்து உயிரெழுத்துடன் ஆரம்பிக்கும் சொல் வரும்போது மட்டுமே ‘ஓர்’ என எழுதுவது தமிழ் மரபு. அப்படிப் பார்த்தால் அவளுக்கென்று ஒரு மனம் என்பதுதான் தலைப்பாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது, தலைப்பு இலக்கணத்தை மீறியதைப் போலவே இந்தப் படத்தின் நாயகியும் இலக்கணங்களை மீறியவள். அதைத்தான் தலைப்பின் மூலம் சொல்லாமல் சொல்கிறார் தர் என்று தோன்றுகிறது. அவள் இலக்கணங்களை எதற்காக மீறுகிறாள் என்பதை அறியும் பார்வையாளர்கள் அவளது மீறல்களின் நியாயங்களை உணர்ந்துகொள்வார்கள். அதுதான் இந்தத் திரைக்கதையின் சிறப்பு.

செல்வந்தப் பெண்ணான லலிதா பருவ வயதில் பெற்றோரை இழந்து, உயர் நீதிமன்ற நீதிபதியான மாமா வீட்டில் தஞ்சமடைகிறாள். மாமாவின் மகன் கண்ணனைக் காதலிக்கிறாள். இருவருக்கும் மணம் முடிக்க வேண்டும் என்று கண்ணனின் பெற்றோர் நினைக்கிறார்கள். கண்ணனுக்கோ லலிதாவின் கல்லூரித் தோழி மீனா மீது காதல். மீனா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் கண்ணனின் நண்பனான கோபால் என்னும் இளைஞனைக் காதலிக்கிறாள். அவன் ஒரு பெண் பித்தன். தன் சுகத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தத் தயங்காதவன். யதேச்சையாக அவனது சுயரூபத்தை அறிந்துகொண்ட மீனா அவனிடமிருந்து விலகிவிடுகிறாள். அவள் விலகிய தருணத்தில் தோழி லலிதா மூலம் கண்ணனின் கண்களில் பட்டுவிடுகிறாள். அவனுக்கு மீனாவை மிகவும் பிடித்துவிடுகிறது. அவளையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். லலிதா ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு தோழிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்கிறாள்.



இதன் பின்னர் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களால் லலிதாவுக்கும் கோபாலுக்கும் உறவு ஏற்படுகிறது. லலிதாவின் நடவடிக்கைகள் மாறுகின்றன. இரவில் தாமதமாக வீட்டுக்கு வருகிறாள். சில நாள்களில் குடித்துவிட்டு வருகிறாள். இதனால் குடும்ப மானம் போவதாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் குடும்ப மானத்தைக் காப்பாற்றத்தான் லலிதா இவை அனைத்தையும் செய்கிறாள் என்பதுதான் திரைக்கதையின் விசேஷம். குடும்ப மானத்தைக் காப்பாற்ற மீனா வீட்டிலேயே பூஜை செய்கிறாள், தீர்த்தம் பருகுகிறாள், லலிதாவோ கோபாலுடன் பாருக்குப் போகிறாள், குடிக்கிறாள். இரண்டும் இரண்டு துருவமான செய்கைகள். ஒன்றை உலகம் கையெடுத்துக் கும்பிடும். மற்றொன்றைக் காறித் துப்பும். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது குடிகாரியாக மாறிய லலிதாமீது நம்மால் கோபப்பட முடியாது. அவளது செய்கைகளுக்குப் பின்னே அப்பழுக்கற்ற தூய எண்ணம் நிறைந்திருப்பதை நம்மால் உணர முடியும். அப்படியான திரைக்கதையை அமைத்திருப்பார் தர். அதுதான் ஒரு திரைக்கதையின் சிறப்பு.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

Friday, August 5, 2016

சிகலா நடத்திய ஆடிவெள்ளி சிறப்பு பூஜை! -தேர்தல் வெற்றிக்குப் பரிகாரமா


சசிகலா நடத்திய ஆடிவெள்ளி சிறப்பு பூஜை! -தேர்தல் வெற்றிக்குப் பரிகாரமா?





தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். ' ஆடிவெள்ளிக் கிழமை நாளில் அம்பாளை வழிபடுவது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மையை அதிகரிக்கும்' என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சசிகலா வரும் தகவல் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. கோவில் தக்கார் தொழிலதிபர் கருமுத்து.கண்ணன், பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கோவிலில், அம்மனுக்கு நடந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு, உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள் குவிந்தனர். ஆனால், கோவிலுக்கு வந்த சுவடே தெரியாமல் பூஜையை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் சசிகலா.



சசிகலாவின் சிறப்பு வழிபாடு குறித்து நம்மிடம் பேசிய ஆலய நிர்வாகி ஒருவர், " பருவநிலை மாற்றத்தை உண்டாக்கக் கூடிய மாதம் என்றவகையில் ஆடிக்கு சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் முளைக் கொட்டு நிகழ்ச்சிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன. அதிலும், ஆடி வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு பூஜை செய்யும்போது, ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகமாக இருக்கிறது.


. குறிப்பாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அம்மனுக்குப் பெயரே ராஜமாதங்கி. பச்சை வர்ணத்தில் வீற்றிருப்பவர். அதிகாரத்தில் இருப்பவர்கள் ராஜ மாதங்கியை வணங்கும்போது, எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அரசாட்சி தொடரும் என்ற நம்பிக்கை வலம் வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை மீனாட்சி அம்மன் சந்நிதியில் வைத்து வழிபட்டார் சசிகலா. தேர்தலுக்குப் பிறகு அம்மனுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார்" என்றார்.


- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்

DailyMotivation

சம்பளத்தைத் தாண்டி, இந்த 3 காரணங்களுக்காகவும் வேலை செய்யுங்கள்! #DailyMotivation


vikatan.com

ஓவ்வொரு நாளும் நாம் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை நாம் விருப்பத்துக்கும், இலக்குகளுக்கும் ஏற்றவாறு வேலை செய்கிறோம். என்னதான் மாதச் சம்பளம் என்ற ஒரு விஷயம் இருந்தாலும் சில விஷயங்கள் நம்மை சிறப்பாக வேலை செய்ய தூண்டும். அது நம் அலுவலக சூழல் என்பது துவங்கி ஆர்வம், தேவை என பல விஷயங்களை பொருத்து அமைகிறது. ஆனால் இந்த மூன்று காரணங்களுக்காக நீங்கள் வேலை செய்வது சம்பளம், பதவி என்பதைத் தாண்டி உங்களுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும்.

1. நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காக!

அலுவலகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு நல்ல அனுபவத்தையும், இங்கு கற்கும் விஷயங்கள் அலுவலக இலக்குகளுக்காக மட்டுமல்ல, நீங்கள் கற்றது கண்டிப்பாக உங்கள் வளர்ச்சிக்கும் உதவும் என்ற திறந்த மனதோடு கற்றுக் கொள்ளுங்கள். வயது குறைந்த நபர் எனக்கு பாடம் எடுக்கிறார், இவருக்கு வயதாகிவிட்டது நான் சொல்வது புரியவில்லை என்று நினைக்காமல் எல்லாரிடம் இருந்தும் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொள்வது உங்களுக்காகத் தான். இது உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். அதிகம் கற்றுக்கொள்ளுங்கள்.

2. நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!

நீங்கள் ஒரே வேலையைச் செய்கிறீர்கள், சம்பளம் மட்டும் மாறுகிறது வேலை அதே வேலை தான் என நினைக்காமல், நீங்கள் செய்யும் வேலைகளை முன்பை விட புதிய உத்திகள், வேகத்தோடு அணுகுங்கள். அந்த வேலையில் நிபுணத்துவம் பெறுங்கள். உங்களுக்கு அது நற்பெயரைக் கொடுக்கும். அந்த நற்பெயர் உங்களது பதவி உயர்வு, சம்பளம் ஆகியவற்றில் தானாகவே தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கெல்லாம் உங்களால் அந்த வேலையை கூடுதல் நிபுணத்துவத்துடன் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அதிகரியுங்கள்.

3. இன்ஃப்ளுயன்ஸ் செய்யுங்கள்!

உங்களது வேலையைத் தாண்டி உங்களது குணத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துங்கள். அருகில் இருப்பவர்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்யுங்கள். இது வேலையும் செயல்திறனையும், தனிப்பட்ட முறையில் தலைமைப் பண்பையும் வளர்க்கும். அணியில் சில தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் நீங்கள் சொல்லும் போது அதனை ஏற்றுக் கொள்ளும் சூழலும், நீங்கள் தவறு செய்யும் போது உங்களிடம் தயக்கமின்றி கூறி அதனை திருத்தவும் அணியினருக்கு இந்த செயல்கள்  உத்வேகத்தை தரும். எப்போதும் அதிகம் இன்ஃப்ளூயன்ஸ் செய்யும் நபராக இருக்க பழகிக் கொள்ளுங்கள். சரியான கொள்கைகளில் நிலையாக இருங்கள்.

இந்த மூன்று காரணங்களை நீங்கள் அலுவலக சூழலில் எளிதில் கற்க முடியும். பணம், இலக்கு, பதவி உயர்வு என்பதைத் தாண்டி இந்த மூன்று காரணங்களுக்காக வேலை செய்யுங்கள். இந்த மூன்றால் மகிழ்ச்சி, உங்களைத் தானாகத் தேடி வரும்.

ச.ஸ்ரீராம்.

INDIAN NURSING COUNCIL

PUBLIC NOTICE   
   29th July,2016        
   It has come to the notice of Indian Nursing Council that certain unscrupulous elements posing themselves as Private Agents/Consultants/Liaison Officers claiming to be close to the Staff and Officers of Indian Nursing Council contact managements of various Nursing Institutions assuring them of getting recognition/permission of the Council to conduct Nursing courses. Be it be known to all concerned that Indian Nursing Council as a policy decision does not entertain or enter into any correspondence with any Private Agents/Consultants/Liaison Officers on behalf of Nursing Institutions. Managements of Nursing Institutions are also warned to be careful and not to encourage these Private Agents/Consultants/Liaison Officers for any such grievances. Public at large is requested to intimate the Council of the names and addresses of these unscrupulous Private Agents/Consultants/Liaison Officers, so that necessary action can be taken to eliminate this menace. The Indian Nursing Council assures all stakeholders that all the grievances including grant of permission/recognition/suitability are dealt with strictly in accordance Indian Nursing Council Act and rules, regulations and guidelines issued on the subject. The Indian Nursing Council Act 1947 as also the Rules, regulations and guidelines for information to all concerned. Accordingly all concerned are hereby advised to contact the offices of the Council at New Delhi in regard to all their grievances either through post/mail or in person during visiting hours (3PM to 5PM) every day and not to ventilate their grievances through Private agents/Consultants/Liaison Officers.
   Sd/      
   SECRETARY 

முகப்பு » தமிழ்நாடு » ஒன்இந்தியா ஓ காட்... இந்த டீலிங் கணபதி பேக்கரி வீரபாகுவை விட கேவலமா இருக்கே!

ONE INDIA TAMIL

பாட்னா: இது ஒரு வழக்கமான கள்ளக்காதல் கதைதான்.. ஆனால் இதில் ஈடுபட்டவர்கள் அதைத் தொடர அந்த ஊர் பஞ்சாயத்து அனுமதித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மாமியார், மருமகன் இடையிலான கள்ளக்காதல் இது. பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊரைச் சேர்ந்தவர் 22 வயதான சுராஜ். இவரது மனைவி பெயர் லலிதா. லலிதாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மாமியார் ஆஷாவை (42) வீட்டுக்கு வரவழைத்தார் சுராஜ்.

ஆஷாவும், மகள் வீட்டுக்கு வந்து மகளைப் பார்த்துக் கொண்டார். ஆஷாவின் கணவர் டெல்லியில் வேலை பார்க்கிறார். எப்போதாவதுதான் வருவாராம். மகளைப் பார்க்க வந்த இடத்தில் சுராஜுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார் ஆஷா. இருவரும் லலிதாவுக்குத் தெரியாமல் அந்தரங்கமாக இருந்துள்ளனர். அடிக்கடி வெளியிலும் போய் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதனால் லலிதா மற்றும் ஆஷாவின் கணவர், குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் கிராமப் பஞ்சாயத்துக்கு வந்தது. பஞ்சாயத்துக் கும்பல் கூடி இதில் என்ன தவறு இருக்கிறது, இருவரும் விரும்பித்தானே பழகினர், இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறி விட்டுப் போய் விட்டனர்.

பஞ்சாயத்தே அனுமதி வழங்கி விட்டதால் தற்பது ஆஷாவும், சுராஜும் தங்களது ஊருக்கே வந்து பகிரங்கமாக ஜோடி போட்டுத் திரிய ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் எனது மகளும் வந்து என்னுடன் சேர்ந்து வாழலாம் என்று அழைப்பு விடுத்துள்ளாராம் ஆஷா!

Thursday, August 4, 2016

புதிய எப்1எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது ஆப்போ


`ஆப்போ எப்1எஸ்’ என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று மும்பையில் ஆப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.

தற்போது ஸ்மார்ட்போன் உப யோகிக்கும் அனைவரும் வெவ் வேறு விதமாக செல்பி எடுத்துக் கொள்வது பிரபலமடைந்து வரும் சூழலில் ஆப்போ நிறுவனம் எப்1எஸ் ஸ்மார்ட்போனில் செல் பிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு கேமரா வசதிகளை மேம்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை `செல்பி எக்ஸ்பெர்ட்’ என்றே ஆப்போ நிறுவனம் கூறுகிறது. 16எம்பி பின்பக்க கேமரா வசதியுடன் கைரேகை அடையாள வசதியும் இதில் உள்ளது. மேலும் எப்1எஸ் ஸ்மார்ட்போனில் `பியூட்டிபை 4.0’ என்ற புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிகச் சரியாக துல்லியமாக செல்பிகளை எடுக்கமுடியும்.

5.5 அங்குல தொடுதிரை வசதி யும், 3ஜிபி ராம் மற்றும் 32ஜிபி ராம் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்டா கோர் பிராசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 3075 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக் கிறது.

கேமரா தொழில்நுட்பத்தில் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு ஆப்போ நிறுவனம் வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட்போன் சந்தையிலும் முன்னணியில் இருந்து வருகிறது என்று ஆப்போ நிறுவனத்தின் சர்வதேச துணைத்தலைவர் மற்றும் ஆப்போ இந்தியா தலைவருமான ஸ்கை லீ தெரிவித்தார். மேலும் எப்1எஸ் ஸ்மார்ட்போன் பல்வேறு போட்டாகிராபிக் தொழில்நுட் பத்தை கொண்டிருக்கிறது. செல்பி எடுப்பதற்குரிய வசதிகள் இந்த போனில் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

முன்பக்கத்தில் ஸ்மார்ட்போன் உரிமையாளர் தனது முகத்தை காட்டிவிட்டால் போதும் 0.22 விநாடிகளில் இந்த எப்1எஸ் ஸ்மார்ட்போன் முகத்தை அடையாளம் கண்டுகொண்டு ஸ்மாட்ர்போனை திறக்கச் (unlock) செய்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,990.

திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் துபாயில் தரையிறங்கிய போது விபத்து: 300 பேர் உயிர் பிழைத்த அதிசயம்

Return to frontpage

கேரளாவில் இருந்து நேற்று காலை புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் (இகே521), துபாயில் தரையிறங்கும் போது தீப்பிடித்தது. இந்த விபத்தில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தில்லை. எனினும், விமானம் ஓடுதளத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வு மற்றும் புகை காரணமாக சிலருக்கு காயமும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத் தில் இருந்து நேற்று புதன்கிழமை பகல் 10.19 மணிக்கு, போயிங் 777 விமானம் (இகே521) துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 282 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்த னர். இவர்களில் 226 பேர் இந்தியர்கள்.

பகல் 12.45 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, ஓடுதளத்தை மோதியபடி, நின்றது. முன்னதாக, விமானத்தின் இன்ஜின் பகுதியில் இருந்து பாகம் ஒன்று உடைந்து விழுந்ததாகவும், வெடிச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, விமானத் தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து, அதில் இருந்து கரும்புகை வெளி யானபடி இருந்தது. உடனடியாக விமானத்தில் இருந்து அவசரகால வழியின் மூலம் பயணிகள் வேக மாக வெளியேறினர். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் விமானத்தில் இருந்து வெளி யேற்றப்பட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தை எமிரேட்ஸ் நிறுவனம் உனடியாக அறிவிக்கவில்லை. முதலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என, எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து பயணி ஒருவர் குறிப்பிடும்போது, ‘விமானம் வழக்கம் போல தரையிறங்காமல், திடீரென கீழ்நோக்கி இறங்கியது. பின்னர், தரையை வேகமாக மோதியது. திடீர் திடீரென மேல் நோக்கி குலுங்கியது. அதற்குள் கேபினுக்குள் புகை சூழந்துவிட்டது. எந்த முன்னறிவிப்பும் தரப்படவில்லை. அவசரகால கதவை உடைத்து வெளியேறினோம்’ என்றார்.

விமானத்தில் இருந்து அனைவரும் தப்பிவிட்டோம். எனினும், சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அதோடு, தரையிறங்கும் சமயத்தில் ஓடுதளத்தில் விமானம் மோதியதால் ஏற்பட்ட அதிர்வுகளால் சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால், பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை என, எமிரேட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விபத்து காரணமாக, துபாய் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நிலைமை சீரடைந்த பின் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.

விபத்துக்குள்ளான போயிங் 777 விமானம், 2003 மார்ச் மாதம் வாங்கப்பட்டது.

உதவி எண்கள்

எமிரேட்ஸ் அறிவித்த அவசர உதவி எண்கள்:

திருவனந்தபுரம் : 04713377337

ஐக்கிய அரபு அமீரகம் : 8002111

அமெரிக்கா : 0018113502081

NEWS TODAY 25.09.2024