Saturday, October 14, 2017


Chennai airport customs officials expose yet another modus operandi of smugglers

Siddharth Prabhakar| TNN | Oct 13, 2017, 20:52 IST




CHENNAI: Customs officials at Chennai airport have exposed yet another modus operandi of smugglerswhere an international traveller who brings in the goods passes them on to accomplices who join them in the domestic leg of the journey.

On Friday morning, officials of the Air Intelligence Unit (AIU) intercepted two women, who were carrying concealed gold worth Rs 18 lakh and brand new gadgets like four Apple iPhone 8s, one iPad Pro and three Samsung Galaxy 8s worth Rs 4.3 lakh in their baggage.

The women have been identified as Noorjahan (39) and her daughter, Alfiya (23), who arrived here from Thiruvananthapuram on Air India flight AI 968. This flight had an international leg from Sharjah to Thiruvananthapuram.

Upon interrogation by officials, the duo confessed that the goods had been given to them by Ahamad Thahir (33) who had come from Sharjah. The ladies joined him during the domestic leg of the flight, and the goods were to be brought by them as they could evade customs duty at the Chennai airport. The transfer was made inside the flight.

Customs officials grew suspicious when they noticed that one woman was carrying a brand new iPad in her hand and was passing through the green channel without declaring it. They were then searched thoroughly when the other gadgets and the concealed gold were found.
The gold was in the form of two chains of 24 carat purity and was concealed inside the clothes.

A case was filed against the trio under the Customs Act 1962. They were arrested.



Kerala HC: Politics has no place in campus, students can be expelled

Mahir Haneef| TNN | Oct 13, 2017, 23:52 IST




KOCHI: Politics has no place in the campus of an educational institution and any student found indulging in such activities can be expelled from the college, the Kerala High Court said in an order. A division bench led by the chief justice considered a contempt of court case (Con. Case-C No. 1597/2017) filed by the principal of MES College at Ponnani in Malappuram against Debashish Kumar Behra, secretary of the Students Federation of India unit at the college.

In the order, the court observed "Political activities like Dharna, hunger strikes and other practices like Sathyagrah have no place in a constitutional democracy, much less in academic institutions. Anyone indulging in the said activities in an educational institution would make himself liable to be expelled and/or rusticated. Educational institutions are meant for imparting education and not politics. By their political ambition, the political parties cannot hold to ransom the educational institution or the right of the civilized students to receive education."

TOP COMMENTVery Good Decision. .....please implement the same across IndiaRCP

Noticing photographs of students holding a dharna inside the campus, the court said avenues are available for the students for ventilating their legitimate grievances. There is the students council, academic council, and courts are available, the court said. The court went on to say that holding a dharna or hunger strike shows lack of legitimacy of the demands raised. "The very fact that people resort to Dharna/hunger strike shows that they themselves are aware that their demands are not legal or legitimate and they use coercive methods to achieve what they could not have achieved legally, for if it was otherwise they ought to have peacefully come to court or move the statutory forums for redressal of their grievances," the order stated.

While issuing such an order, the court based its reasoning on BR Ambedkar's last address to the Constituent Assembly in 1949, which came to be known as the 'Grammar of Anarchy' speech. While asking the nation to hold fast to constitutional methods of achieving social and economic objectives, Ambedkar had said that there can be no justification for unconstitutional methods, such as civil disobedience, non-cooperation, and satyagraha, where constitutional methods are open.
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு 13 நாளுக்கு பின் ஊதியம்


2017-10-14@ 00:37:25




சிதம்பரம்: நிதி நெருக்கடியில் சிக்கி திணறிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு ஏற்றது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தை சீரமைக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் நிதி நெருக்கடி சீரடையவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர், அலுவலர்களுக்கு மாத இறுதியில் வழங்கப்பட்டு வந்த ஊதியம் தற்போது காலதாமதமாக வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க கோரி அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் ஆசிரியர், ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர், ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பேச்சுவார்த்தைக்கு பிறகு துணைவேந்தர் மணியன் நிருபர்களிடம் கூறுகையில், பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு நேற்று ஊதியம் போடப்பட்டுவிட்டது. நிதி சிக்கலால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி சிக்கல் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பாண்டியன் எம்எல்ஏ கூறியுள்ளார். என்றார். ஊதியம் வழங்கப்பட்டதால் ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
செ
ன்ற தலைமுறைவரை இளம் பெண்களின் தேசிய உடையாக இருந்தது, தாவணி. குறிப்பாகத் தமிழக இளம்பெண்கள், பதின்ம வயதில் பாவாடை, தாவணி அணிவதும், 20 வயதைக் கடந்த பிறகு சேலைக்கு மாறுவதும் வழக்கமாக இருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்குக்கூடப் பாவாடை, தாவணியோடுதான் இளம்பெண்கள் சென்றுகொண்டிருந்தனர். 1990-களின் இறுதிவரை பல மகளிர் கல்லூரிகளில் இளம்பெண்களின் எழுதப்படாத ‘உடை விதி’யாகத் தாவணிதான் இருந்தது.
இளம்பெண்கள் முதலில் தாவணி அணியக் கற்றுக்கொண்டு, அடுத்த கட்டமாகச் சேலையுடுத்த ஆரம்பித்தார்கள். ஆனால், கலாச்சாரம் மாறிய வேளையில் உடைத் தேர்வும் மாறத் தொடங்கியது. நவநாகரிக உடைகள் பெரிதாக அறிமுகமான பிறகு, அந்த உடைகளின் மீது இளம்பெண்களின் பார்வை திரும்பியது. பாவாடை, தாவணிக்குப் பதிலாக சுடிதார், சல்வார் கமீஸ் போன்ற உடைகள் இளம் பெண்களின் மனதைக் கவர்ந்தன. உடலை முழுவதும் மறைக்கும் புதிய உடைகள் ஒரு வகையில் இளம்பெண்களுக்கு சவுகரியமாகவும் இருந்தன.
அதையடுத்துப் பாவாடை, தாவணிக்கு விடைகொடுத்த இளம்பெண்கள், புதிய உடைகளின் மீதும் மோகம் கொண்டனர். இதனால் தாவணிக்குக் கிராமங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக மவுசு குறையத் தொடங்கியது. இன்றைக்கோ ஜீன்ஸ், டீசர்ட், மிடி என இளம்பெண்களின் உடை மோகம் அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் பாவாடையும் தாவணியும் பரண் ஏறிவிட்டன. விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சேலை அணிய சிலர் தயாராக இருந்தாலும், இளம்பெண்களிடையே தாவணி அணியும் ஆர்வம் குறைந்திருக்கிறது.
பழமையைக் கொண்டாடும் மனநிலை பலவற்றிலும் அதிகமாகியிருப்பது, இளம்பெண்களின் உடையிலும் தற்போது பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. சமீப ஆண்டுகளாகப் பாவாடை, தாவணி கலாச்சாரமே பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், எங்கே இந்த உடை அடையாளம் தெரியாமல் போய்விடுமோ என்று தோன்றியது. ஆனால் பாவாடை, தாவணி மீது இளம்பெண்களுக்குச் சற்று ஈர்ப்பு திரும்பத் தொடங்கியிருக்கிறது. கோயில், திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் இளம்பெண்களைப் பாவாடை, தாவணியில் பார்க்க முடிகிறது.
வீட்டு வாசலில் சாணம் தெளியுங்கள், டெங்கு கொசு வரவே வராது’ என்று யோசனை தெரிவித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்திருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு கொசு வராது: செல்லூர் ராஜு - அறிவியல், மருத்துவம் அத்தனைக்குமான நோபல் இவருக்குத் தான் தர வேண்டும்!" எனப் பதிவு செய்துள்ளார்.
 
 
முன்னதாக, மதுரை சோலையழகுபுரத்தில் நேற்று (வியாழக்கிழமை) அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆகியோருடன் வீடு, வீடாக சென்று டெங்கு கொசுவை ஒழிக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், குடங்களில் சேகரித்து வைத்த தண்ணீரை அப்புறப்படுத்த சொன்ன அமைச்சர், ‘முன்பெல்லாம் வீட்டு முற்றத்தில் மாட்டு சாணத்தை தண்ணீரில் கரைத்து தெளித்ததால் எந்த கொசுவும் வரல. அதுபோல நீங்களும் வீட்டு முற்றத்தில் சாணத்தை தெளியுங்கள், எந்த கொசுவும் வராது. டெங்குவும் வராது’ என்றார்.
ஏற்கெனவே வைகை அணையில் இருந்து நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் திட்டத்தை அமல்படுத்தியதற்காக நெட்டிசன்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, சாணம் தெளிக்கும் யோசனையால் தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் கிண்டல் கேலிக்கு உள்ளாகி வருகிறார்.
சாதாரண மக்கள் கிண்டல் செய்துவந்த நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸும் கிண்டல் செய்திருக்கிறார்.

தீபாவளி: பேருந்து சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் திறப்பு


By DIN  |   Published on : 14th October 2017 04:01 AM  
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் வெள்ளிக்கிழமை (அக்.13) முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.
இது குறித்த விவரம்: தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக். 15) முதல் 17-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 11,645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 
பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, சென்னை கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானட்டோரியம்... சிறப்புக் கவுன்ட்டர்கள் கொண்ட முன்பதிவு மையத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 
சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் 26 டிக்கெட் முன்பதிவு மையங்கள், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையம், தாம்பரம் சானட்டோரியத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 29 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. 
இந்த முன்பதிவு மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

    என்றும் வேண்டும் இன்ப அன்பு


    By கிருங்கை சேதுபதி  |   Published on : 14th October 2017 02:25 AM  |
    பிரதிபலன் எதிர்பாராதது அன்பு. அதனை வெளிப்படுத்தவும், நிரந்தரமாகத் தத்தம் நினைவுகளை நிலைப்படுத்திக்கொள்ளவும் வழங்கப்பெறுவது அன்பளிப்பு என்பதுபோய், காரியம் முடிவதற்காகவும் தொடர்ந்து கவனிப்பில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் கொடுக்கப்படுகிற கையூட்டு எனும் இலஞ்சத்திற்கு அன்பளிப்பு என்று பெயர் சூட்டப்பட்டது அநாகரிகத்தின் உச்சம் எனலாம்.
    இப்போக்கு, திடீரென்று வந்துவிட்டதாக நினைக்கத்தோன்றவில்லை. பாலபருவத்தில் இருந்தே பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பழக்கம் இது என்பதுதான் உண்மை. 
    இந்த வேலை செய்தால் இது கிடைக்கும் என்பதான ஒப்பந்தத்தில் பிள்ளைகளைப் பழக்குகிறோம். நூறு ரூபாய்க்குப் பொருள் வாங்கிவரச்சொல்லிக் கடைக்கு அனுப்பப்படுகிற ஒரு குழந்தைக்குப் பத்து ரூபாயேனும் பரிசுத்தொகையாகக் கொடுக்கிற பெற்றோர் பலர் இருக்கிறோம். 
    இத்தனை மதிப்பெண் பெற்றால் இன்னது பரிசு என்று சொல்லி, மதிப்பெண் உயரும் அளவிற்கு, பரிசுப்பொருளின் மதிப்பையும் உயர்த்திச் சொல்கிறபோது, தந்தை மகன் அல்லது மகள் உறவு வாழ்வியல் உறவாக மலர்வதில்லை. வர்த்தக உறவாகப் பிறழ்கிறது. கவர்ச்சியின் காரணமாகப் பெறுகிற பொருளும், பொருளை முன்னிட்டுக் கற்கிற பாடமும் தமக்குரிய மதிப்புகளை இழந்துவிடுகின்றன. 
    இதனால், உழைப்பும் கல்வியும் தமக்குரிய மதிப்பீடுகளை இழந்து, விலைபொருள்களாகிவிடுகிற அவலத்தைப் பார்க்கிறோம். இதனால் வாழ்வியல் விழுமியங்களும் வீழ்ச்சிக்குரியதாகிவிடுகின்றன. சமுதாயச் சீரழிவுகளுக்கு இத்தகு போக்குகளே விரைந்து சாலையமைத்துத் தந்துவிடுகின்றன.
    இல்லப்பணிகளை ஏற்றுச் செய்வதும் எப்போதும் சிறப்பு மதிப்பெண் பெறுவதும் பிள்ளைகளின் கடமை. அதற்கு விலையோ, அன்பளிப்போ தேவையில்லை என்கிற பழக்கமும் பயிற்சியும் எப்போது இல்லந்தோறும் கடைப்பிடிக்கப்படுகின்றனவோ அப்போதுதான் நிலைத்த மாற்றத்தைச் செயல்படுத்தமுடியும். கடமையைச் செய்வதற்கு அன்பளிப்பு எனும் கையூட்டுப்பெறுவது நாணத்தக்கது.
    ஒவ்வொருவருக்கும் ஒரு தேவையிருக்கிறது. ஜனநாயக நாட்டில் கொண்டும் கொடுத்தும் வளர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகம். அது வாழ்வியல் நெறியாக இருக்க வேண்டுமேயொழிய, வணிகமயமாகிவிடலாகாது. இலாப நட்டக் கணக்குப் பார்த்துச் செய்கிற எதிலும் வணிக தர்மம் இருக்குமே ஒழிய, வாழ்வில் அறம் இருக்காது.
    தன்னை இழப்பதில்தான் அன்பின் ஆழம் புலப்படும். இன்னும் சொல்லப்போனால், பலவீனங்களின்போது தாங்கிப்பிடிக்கும் கணத்தில் எழும் பலத்தின் அடிப்படையில் அன்பு கால் கொள்கிறது. 
    தந்தையன்பு விழுமியது; தாயன்பு தூயது; தாயன்பினும் மேலது மனைவியின் அன்பு; "அன்பு அகலாத மனைவி' வேண்டும் என்றுதான் அபிராமிப் பட்டர் வேண்டுகோள் விடுக்கிறார். 
    பிள்ளைகளிடமும் பெற்றோர்களிடமும் காட்டுகிற பாசம் அன்பாகப் பரிணமிக்க வேண்டும். பாசம் சில சமயங்களில் கண்ணை மறைக்கும். கண் பார்வையில்லாத திருதராஷ்டிரன் மீது கொண்ட காதலால் தன் கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த காந்தாரியின் பாசத்தின் விளைவைப பாரதக் கதை காட்டும். 
    கண் பார்வையில்லாக் கவிஞர் ஒருவரும் கால்நடக்கப் பயன்படாப் பிறிதொரு கவிஞரும் தமக்குள் உதவிக்கொண்டு தமிழ்பாடியதன் பலன்தான் தனிப்பாடல் திரட்டில் இரட்டைப்புலவரை ஈன்றுபுறந்தந்தது. இளஞ்சூரியர் முதுசூரியர் என்பதுகூடக் காரணப்பெயர்களாகத்தான் அவர்களுக்கு வாய்த்திருக்கக்கூடும்.
    ஒத்துப்பிறந்தாரினும் உயரிய இடத்தைக் கொடுக்கவல்ல நட்பு அன்பின் உயரிய பரிமாணம். அதுதான் கபிலர் பாரியை இணைவித்தது; மரணத்திற்கு அப்பாலும் ஒருங்கிணைய வைத்த மகிமையை நிலைநாட்டியது பிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழனின் நட்பு.
    ஆண் - பெண் பேதங்கடந்து அரிய நட்பிற்கு உரிய அன்பளிப்பாய்க் கருநெல்லி கொடுத்துக் காத்தவன் அதியன்; ஏற்றுப் போற்றியவர் ஒளவை. 
    கண்ணனுக்குக் குசேலன் கொண்டுவந்து கொடுத்த அவலில் அன்பின் ருசிதான் அதிகமே தவிர, விலையின் மதிப்பு அதிகமல்ல.
    தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகத் திருத்தி நன்கு கொணர்ந்து சமர்ப்பித்த குகன், "என்கொல் திருவுளம்?' எனக் கேட்கும் அன்பின் ருசியில், இராமன் தன்னையே குகனுக்குத் தம்பியாகத் தந்தது மிக உயர்ந்தது.
    கொடுக்கிறபோதும் பெறுகிறபோதும் ஏற்படுகிற மகிழ்வு, அந்தக் கணத்தோடு நிறைவுபெற்றுவிடுமேயானால், அது நிலைத்த அன்பாக இருக்காது. அது நிகழ்ந்துபல காலம் ஆனபிறகும் நினைக்கிறபோதெல்லாம் நெகிழ்வு ஏற்படுகிறதே, அதில்தான் அன்பின் ருசி நன்கு வெளிப்படுகிறது.
    சிறையிருந்த காலத்தில் தன் சிந்தையெல்லாம் இராமனே நிரம்பத் தனிமைநெருப்பை அணைத்துக்கொண்டு தவித்தாளே சீதை, அவளின் மனத்தில் இந்த அன்பின் ருசி குகநினைவாய்க் குமிழியிடுவதைப் பார்க்கலாம்.
    ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
    ஏழை வேடனுக்கு, 'எம்பி நின் தம்பி; நீ
    தோழன்; மங்கை கொழுந்தி' எனச் சொன்ன
    வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்
    எனக் கம்பன் சித்திரித்துக் காட்டுகிறான். அதுமட்டுமா, சபரித்தாய் தான் ருசித்த பழங்களையே இராமனுக்குப் படைத்து மகிழ்ந்ததும், இராமன் அதனை ஏற்று நெகிழ்ந்ததும் அன்பின் ருசியால்தானே?
    கங்கைவேடனைப்போல், காளத்திவேடனாகிய திண்ணன், தான் சமைத்த பன்றியின் கறியை மென்று ஊட்டியதை ஏற்றுப்போற்றிய ஈசனின் அருள்திறத்தில் வெளிப்படுவது அன்பின் ருசியல்லாமல் வேறு என்ன? 
    இயேசு பெருமானும், நபிகள் நாயகமும், கெளதமபுத்தரும் தத்தம் வாழ்வியல் நிலைகளில் செயற்படுத்திக் காட்டியதெல்லாம் இத்தகு அன்பின் பரிமாணங்களைத்தானே!.
    "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை'யாக இறைவன் இருக்கிறான் என்கிற - அன்பின் பரிமாணமாகிய பக்தியின் நிலை, இன்றைக்கு அன்பெனும் வலை விரித்துப் பிடிக்கப்படுகிற கலையாக மலிந்து, அதுவோர் வணிகச்சூதாகப் பிறழ்ந்துவிட்டிருக்கிறது. ஆன்மிக நிலையினைவிடவும் அரசியல் போக்குகளில் இது இன்னும் வீழ்ச்சியடைந்துவிட்டது. 
    அலுவலகங்களிலும், இல்லங்களிலும் பணமதிப்பீட்டுக்குரியதாக அன்பு சரிந்துவிடுகிறபோது, அது உயிர்ப்பண்பாக இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
    என்பு தோல் போர்த்த உடம்புக்கு அன்புதான் அடிப்படை உயிர்ப்பண்பு. அகத்து உறுப்பு என்றே இதனை அறிமுகப்படுத்துகிறார் திருவள்ளுவர்.
    இந்த அன்பின் ருசியை உணராத யாரும் வாழ்வின் அருமையைப் புரிந்துகொள்ளமுடியாது; சுற்றத்தின் சுகத்தை அனுபவிக்க இயலாது; நட்பின் மேன்மையைத் தெளிந்து கொள்ளுதல் அரிது. வறட்சிமிகுந்த எந்திரவாழ்க்கையில் விரக்தி அதிகமாகும். தனக்கு யாருமில்லை என்கிற தன்னம்பிக்கைக் குறைவாக அது எழுந்து, தாழ்வு மனப்பான்மையை அதிகரித்துத் தற்கொலை முயற்சியில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். 
    இதைவிடவும் குரூரம் தன்னிடம் அன்பு கொள்ள வேண்டிய ஒருவர் தன்னைவிடவும் பிறரிடம் காட்டுகிற அன்பைக் கண்டால் அவர் மீது பாய்வதும், அவரால் அன்பு செலுத்தப்படுபவரிடம் மோதுவதும் அதிகரித்து அதிகரித்து அவர்களை அழித்துவிடும் அளவிற்கும் கொண்டுபோய் நிறுத்தும்.
    இன்றைய சமூக அவலங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணியாக இருப்பது அன்பின் ருசியறியாச் செயற்பாடுதான்.
    அன்பு ஆர்வத்தை உண்டாக்கும்; ஆர்வம் நட்பினைச் சேர்க்கும்; அது பரந்து விரிந்து சுற்றத்தைக் கொடுக்கும்; அன்பும் அறமும் பண்புகளாய் மலரும். 
    அன்பு அருள் என்னும் குழந்தையைப் பெற்றுத் தரும். செல்வம் செவிலித்தாயாய் இருந்து வளர்க்கும் சமூகத்தில் நட்பும் சுற்றமும் பெருகித் தழைக்கும். அந்த நிலையில்தான், "யாதும் ஊர் யாவரும் கேளிர்' என்கிற நிலை வளந்தோங்கும்.
    அன்பற்ற நிலையில் அளிக்கப்படும் பொருள்களால் ஆசையே பிறக்கும்; ஆசை வெட்கமறியாதது; தன்னிலை தகர்ப்பது. அதன்வழி பெருகும் பேராசை நிராசையாகிறபோது நெறி வெறியாகிவிடும்; அது அழுக்காறு என்னும் பொறாமை நெருப்பை ஊதிப் பெருக்கும்; வெகுளித் தீயை மூண்டெழச்செய்யும். 
    இன்னாச்சொல் பிறக்க, நட்புக்குள்ளும் உறவுக்குள்ளும் பகை வளர்ந்து பண்பழிக்கும்; இதனால் பெருமைக்குரிய தன்மானம் கெடும்; தனித்தன்மை மிக்க தலைமுறை மானமும் தறிகெட்டுப்போகும். குடிப்பிறப்பழிக்கும்; விழுப்பம் கொல்லும் என்கிற நிலைதான்.
    பொருளற்ற வறுமையினும கொடியது அருளற்ற வறுமை. அது வெறுமையில் துவங்கி, கவலையில் வீழ்த்தும். அருள் என்னும் குழவியை ஈன்று தருகின்ற அன்பு வளர வளர, முதலில் துன்பம் போகும். சோர்வு நீங்கும். பயம் அழியும். 
    அன்பு தீயன அனைத்தையும் அழிக்கும். ஆனால், தான் அழியாது. அது சிவனைப்போன்றது. தென்னாட்டில் சிவன், பிறநாட்டில் அதன் பெயர் வேறு. ஆக, எந்நாட்டிற்கும் உரிய இறையை, அன்பின்வழியே அறியலாம். அதனால்தான், "இறவாத இன்ப அன்பு வேண்டும்' எனக் காரைக்காலம்மையார் கயிலைமலையானிடம் நமக்காகவும் விண்ணப்பித்துப் பெறுகிறார். அம்மரபில் பாரதியும் துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ - கிளியே அன்புக்கு அழிவில்லைகாண் என்று பாடுகிறார்.

    ஆடம்பரம் தவிர்ப்போம்


    By ஐவி. நாகராஜன்  |   Published on : 14th October 2017 02:26 AM  
    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்பது மிக பழைய மொழி. "திருமணம் என்பது யாரோடு வாழலாம் என்பதை விட யாரில்லாமல் வாழ முடியாது என்பதை அறிவதுதான்' என்று சொல்கிறார் டாக்டர் ஜேம்ஸ் டாப்சன். 
    திருமணத்தைப் பற்றி கேலியாகவும், நகைச்சுவையாகவும், உணர்வுபூர்வமாகவும் பல்வேறுவிதமான விளக்கங்கள் இருந்தாலும் வெற்றி பெறும் திருமணம் என்றால் என்ன என்று அறுதியிட்டு கூறமுடிவதில்லை. யாரோ ஒருவர் உனக்கென்று உலகத்தில் எந்த மூலையிலாவது பிறந்திருப்பார் என்று கூறுகிறார்கள்.
    அந்த சரியான ஒருவரை தேடிகண்டுபிடிப்பதுதான் வெற்றிகரமான திருமணத்திற்கு வழி என்று சொல்ல முடியுமா? திருமணத்திற்கு தயாராய் இருப்பவர் அல்லது அவரது பெற்றோர் அலைந்து திரிந்து ஜாதகம் பார்த்து எல்லாப் பொருத்தங்களும் பார்த்து அந்த தேவதையையோ அல்லது ராஜகுமாரனையோ கண்டுபிடித்து திருமணமும் நடக்கிறது என்று வைத்துகொள்வோம். 
    அப்படி திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கைப் பயணம் உண்மையிலேயே இனிதாக நடைபெறுகிறதா? இருவரும் மனம் ஒத்துப்போகிறார்களா? இப்படி பல வினாக்கள் உண்டு.
    திருமணத்திற்கு தேர்ந்தெடுக்கும் துணையைப் பற்றி, அவரது விருப்பு வெறுப்புகள் பற்றி ஒருவர் திருமணத்திற்கு முன்னரே நன்கு அறியவேண்டும். அதற்கு ஒரே வழி அந்த துணையோடு மனம் விட்டு பேசுவதுதான். 
    பல்வேறு விஷயங்களில் இருவரும் தகவல்களை பரிமாறிக்கொண்டு மனம் ஒத்த தம்பதிகளாக வாழ முடியும் என்ற முடிவுக்கு வந்த பின்னரே திருமணத்தை நிச்சயிக்க வேண்டும். 
    மன முதிர்ச்சியுறாத பருவத்தில் உடல் கவர்ச்சியை மட்டுமே முக்கியமாக கொண்டு தீர்மானிக்கப்படும் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியையே தழுவுகின்றன.
    திருமணம் நிச்சயமாவது, வரதட்சணை, சீர் செய்வது இவற்றைப் பொருத்துதான் இன்றைய சமுதாயத்தில் அதிகமான திருமணம் அரங்கேருகின்றன. இரு மனம் இணைவதைவிட பணம் பரிமாறப்படுவதுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. 
    ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. கொண்டாடத்திற்கு உரியதும் கூட. ஆனால் திருமணத்திற்காக நாம் இன்று செலவழிக்கும் தொகை கொண்டாட்டம் என்பதை தாண்டி ஆடம்பர செலவு என்ற அளவுக்கு போய்கொண்டிருக்கிறது.
    130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்திற்காக குறைந்தது 5 லட்சம் ரூபாயில் தொடங்கி 50 கோடி வரை செலவழிக்கப்படுகிறது. 
    திருமணம் என்பது தங்களின் அந்தஸ்தை நிர்ணயிக்கும் அளவு கோல் என்று ஒவ்வொரு குடுபத்தினரும் நினைக்கின்றனர். ஆகையால்தான் அவர் அவர்கள் முடிந்தளவுக்கு ஆடம்பரமாக திருமணங்களை நடத்துகின்றனர். 
    மணப்பெண்னுக்கு சீர் வரிசை, விருந்து, மறுவிருந்து அலங்காரங்கள் உறவினர்களுக்கு தாம்பூல பை என்று எல்லாவற்றிலும் பிரம்மாண்டமாக செய்யும் போக்கு வளர்கிறது.
    இதன் காரணமாக பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்படுகிறது. நம் நாட்டின் ஓராண்டு பட்ஜெட்டே 22 லட்சம் கோடி ரூபாய்தான். ஆனால் நம் நாட்டில் திருமணத்திற்காக மட்டும் ஓர் ஆண்டில் 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 
    இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துக்கொண்டு செல்கிறது என்றும் அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
    நாட்டு மக்களுக்கு சோறு போடும் விவசாயத்திற்கே நம்முடைய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாயை செலவழிப்பதில்லை எனும்போது ஒன்றி இரண்டு நாள் கொண்டாட்டத்திற்காக 1.25 லட்சம் கோடி ரூபாய் செலவு என்பது மிக அதிகம்.
    திருமணத்திற்காக இவ்வளவு பெரிய தொகை செலவழிக்க வேண்டியிருப்பதால், குறிப்பாக பெண்னைப் பெற்றுவிட்டால் திருமண செலவு என்பது அந்த பெண்ணின் பெற்றோருக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக மாறி விடுகிறது. 
    அதுவே நடுத்தர குடும்பத்தில் பெண் குழந்தை மீதான ஆர்வமின்மை என்ற சமூக பிரச்னைக்கும் வழிவகுக்கிறது. இது தவிர கெளரவத்துக்காக கடன் வாக்கியாவது கல்யணத்தை தடபுடலாக நடத்த வேண்டும் என்ற நுகர்வு கலாசாரத்தால் பல பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர். 
    பெண்ணுக்கு கல்யாணம் செய்துவிட்டு பெரும் கடன்காரர்களாகி நிம்மதி இழந்து தவிக்கும் பெற்றோரையும் பார்க்க முடிகிறது. 
    இவ்வளவு தொகை திருமணத்திற்காக செலவு செய்பவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு, சமூகத்தில் வாழ்விழந்து தவிக்கும் எழை எளியோர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளுக்கு உதவி செய்திடலாம். 
    தன்னுடைய சக்திக்கு மீறி செலவு செய்துவிட்டு பிறகு இல்லற வாழ்க்கை நிலைக்காமல் பல சச்சரவுகளும் சண்டைகளும் ஏற்பட்டு பெற்றோர்களின் வீடு தேடி வந்து நிற்கும் பிள்ளைகளையும், அவர்கள் துன்பத்தை காண சகிக்காமல் பெரும் துயரத்திற்குள்ளாகும் பெற்றோரையும் பார்க்க முடிகிறது.
    இவ்வாறு திருமணத்திற்காக செலவிடும் அதிகமான தொகையை ஏதோ ஒரு வகையில் முதலீடாக்கினால் அந்த திருமண ஜோடியின் எதிர் காலம் சிறப்படைவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும். 
    எனவே எதிர்காலத்தில் ஆடம்பரம் இல்லாத, கூடுதல் செலவுகள் தவிர்த்த சிக்கனமான திருமணங்களை நோக்கி நமது பார்வையும் பயணமும் திரும்ப வேண்டும். இதனைப் பெற்றோர் புரிந்துக் கொள்ள வேண்டும்.

    விலை உயர்வு: சினிமா டிக்கெட்டின் புதிய கட்டணம்!

    By எழில்  |   Published on : 13th October 2017 05:00 PM 
    theatre


    தமிழ்த் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 10%-லிருந்து 8% ஆக தமிழக அரசு குறைத்துள்ளது.
    தமிழ் மொழிப் படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இது கடந்த செப். 27-ம் தேதி அமலுக்கு வந்தது. திரைப்படத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை நீக்குவது தொடர்பாக, விஷால் உள்ளிட்ட திரைப்படத் துறையினரும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
    இந்நிலையில் தமிழ்த் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 10%-லிருந்து 8% ஆக தமிழக அரசு குறைத்துள்ளது. இதையடுத்து விஷால் உள்ளிட்ட திரைத்துறையினர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
    தமிழகத் திரையரங்குகளில் புதிய டிக்கெட் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. அதன் விவரம்:
    மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை
    150 + (ஜிஎஸ்டி 28%) 42 + (கேளிக்கை வரி 8%) 12 + 2.16 = ரூ. 206.16 
    மல்டிபிளெக்ஸ் அல்லாத ஏசி திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் 
    100 + (ஜிஎஸ்டி 18%) 18 + 8 + 1.44 = ரூ. 127.44 
    ஏசி அல்லாத திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம்
    80 + 14.40 + 6.40 + 1.15 = ரூ. 101.95
    புதிய டிக்கெட் கட்டணம்
    மல்டிபிளெக்ஸ் - ரூ. 206.16
    ஏசி திரையரங்குகள் - ரூ. 127.44
    ஏசி அல்லாத திரையரங்குகள் - ரூ. 101.95

      கிராமப்புறங்களில் பணி செய்யாத 4,548 மருத்துவர்களின் அங்கீகாரம் ரத்து: மஹாராஷ்டிர அரசு அதிரடி


      By DIN  |   Published on : 13th October 2017 07:37 PM
      Hospital


      மருத்துவப் படிப்பு முடித்து கிராமப்புறங்களில் ஒரு வருடம் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்ற உத்தரவை மீறி செயல்பட்ட 4,548 மருத்துவர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து மஹாராஷ்டிர அரசாங்கம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
      மஹாராஷ்டிர அரசின் சட்டப்படி மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் (DMER) பதிவு செய்ய வேண்டும். 
      பின்னர் அரசாங்கத்தின் நடைமுறைப்படி ஒரு வருடத்துக்கு கிராமப்புறங்களுக்குச் சென்று கட்டாய மருத்துவப் பணி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தவறுபவர்கள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும். 
      இந்நிலையில், இந்த சட்ட விதிமீறலில் ஈடுபட்ட 4,548 மருத்துவர்களின் (DMER) அங்கீகாரத்தை ரத்து செய்து மஹாராஷ்டிர அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
      இவர்கள் அனைவரும் 2005-ம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை அரசு மருத்துவக்கல்லூரியின் கீழ் மருத்துவம் படித்து பட்டம் பெற்றவர்கள் ஆவர்.
      இதுகுறித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக அதிகாரி கூறுகையில்,
      மஹாராஷ்டிர அரசு விதிமுறைகளின் படி மருத்துவப் படிப்பு முடித்து இயக்குநரக்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டு வரவேண்டும்.
      இவ்வாறு மருத்தும் முடித்து பதிவு செய்த அனைத்து மருத்துவர்களும் கிராமப்புறங்களில் கட்டாயம் ஒருவருடம் பணியாற்ற வேண்டும். அதனை மீறுபவர்களுக்கு  தண்டனையாக அபராதம் விதிக்கப்படும்.
      அதில், இளநிலை மருத்துவருக்கு ரூ.10 லட்சம், முதுநிலை மருத்துவருக்கு ரூ.50 லட்சம் மற்றும் நிபுணர் குழு மருத்துவருக்கு ரூ.2 கோடி வரையில் அபராதம் வேறுபடும். இதனையும் செலுத்தத் தவறும் மருத்துவர்களின் பதிவு ரத்து செய்யப்படும்.
      அனைவருடனும் பழகும் திறன் மற்றும் அனைத்து வகை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் திறன் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளவே கிராமப்புறங்களில் ஒரு வருடம் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்பதன் அடிப்படை நோக்கமாகும்.
      இதற்காக அரசு தரப்பில் இருந்து மருத்துவர்களுக்கு தேவையான அளவு கணிசமான ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் தவறிய காரணத்துக்காகவே அந்த 4,548 மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.

      20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து: கர்நாடக உயர் நீதிமன்றம்


      By DIN  |   Published on : 13th October 2017 11:37 AM  
      cynaide_mohan
      Ads by Kiosked

      பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் 20 பெண்கள் சயனைடு கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சயனைடு மோகன்குமாருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
      கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 2009ம் ஆண்டு அனிதா(22) என்ற பெண் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்த நிலையில் பேருந்து நிலையத்தில் பிணமாகக் கிடந்தார். இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினருக்கு, இதேப்போன்று அந்த பகுதியில் பல பெண்கள் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.
      அது பற்றி விசாரித்ததில், கடலோர கர்நாடக மாவட்டங்களில் மட்டும் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 20 பெண்கள் சயனைடு சாப்பிட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.
      இந்த நிலையில் சுள்ளியா பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை சயனைடு கொடுத்து கொல்ல முயன்றதாக மங்களூரைச் சேர்ந்த மோகன்குமார் (53) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்த போது, அவர்தான் மேற்கண்ட 20 பெண்களையும் பலாத்காரம் செய்து சயனைடு கொடுத்து கொன்றதை ஒப்புக் கொண்டார்.
      இது குறித்து மங்களூர் விரைவு நீதிமன்றம் விசாரித்து கடந்த 2013ம் ஆண்டு, அனிதா கொலை வழக்கில் மோகன்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 2 பெண்கள் கொலை வழக்கிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 4 பெண்கள் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
      இந்த நிலையில், அனிதா கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மோகன்குமார் மேல்முறையீடு செய்தார்.
      இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவி மாலித், ஜான் மைக்கேல் டி குன்ஹா ஆகியோர் கொண்ட அமர்வு, அரசு தரப்பில் மோகன் குமாருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்தும், அவரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.
      சாரதா, ஹேமாவதி ஆகியோரின் கொலை வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரியும் மோகன்குமார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
      இதுவரை 7 பெண்களின் கொலை வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பெண்களின் கொலை வழக்குகள் மங்களூரு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


      தித்திக்கும் தீபாவளி வந்தாச்சு! கடைகளில் அலைமோதும் கூட்டம் நள்ளிரவு வரை தொடரும் ஷாப்பிங்

       தித்திக்கும் தீபாவளி வந்தாச்சு! கடைகளில் அலைமோதும் கூட்டம்  நள்ளிரவு  வரை தொடரும் ஷாப்பிங்
      கோவை;தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள சூழலில், கோவை நகரிலுள்ள, ஒப்பணக்காரவீதி, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில், துணிகள் வாங்க, குடும்பத்துடன் கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்; சாலைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
      அனைத்து வளங்களையும் சிறப்புகளையும் கொண்டுள்ள கோவையில், நவராத்திரி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களும் இனிதே நிறைவடைந்தன. அடுத்து, தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது கோவை.இன்றிலிருந்து நான்காவது நாள் தீபாவளி. மிகக் குறைந்த நாட்களே உள்ளதால், போனஸ் வாங்கியுள்ள தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகைக்கு, குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான ஆடை, ஆபரணங்கள் வாங்கிக் கொடுக்கும் முனைப்புடன் கடை வீதிகளில் வலம் வருகின்றனர்.வியாபாரிகள் இவர்களை குறிவைத்து காலை, 9:00 மணிக்கே கடைகளை திறந்து விடுகின்றனர். கடைகளுக்கு முன் வாழைத்தோரணங்கள் கட்டி, வாடிக்கையாளர்களை வரவேற்கின்றனர். அனைத்து சாலைகளும் களைகட்டியுள்ளன.சாலைகளின் இருபுறமும் பைக், ஸ்கூட்டர்கள் ஆக்கிரமித்துள்ளன. ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான பார்க்கிங் ஏரியா முழுக்க, கார், கால்டாக்சிகள் ஆக்கிரமித்துள்ளன. பஸ்களில் வந்திறங்கும் பயணிகள் வெள்ளம் சாலைகளில் வழிந்தோடுகிறது.
      உக்கடம் பைபாஸ் சாலை சந்திப்பில் துவங்கும் நெரிசல், ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, ரங்கேகவுடர் வீதி, பெரியகடைவீதி, ராஜவீதி, வெரைட்டிஹால் ரோடு, என்.எச்.ரோடு, மில்ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு இணைப்பு வரை நீடிக்கிறது.காந்திபுரத்தில், நுாறடி சாலை, கிராஸ்கட் சாலையிலும் மக்கள் மற்றும் வாகன நெரிசல் நீடிக்கிறது. வாகனங்கள் செல்வதற்கோ, சாலையோரம் நிறுத்துவதற்கோ இடமில்லை. ஆடைகளை தேர்வு செய்ய, குடும்பத்தினர், கும்பல் கும்பலாக, கடைகள் தோறும் ஏறி இறங்குகின்றனர்.
      பெரியகடைவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை, நுாறடி சாலை, காளிங்கராயன் சாலைகளில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள, ஏராளமான செருப்புக்கடைகளிலும், நைட்டி உள்ளிட்ட உள்ளாடை கடைகளிலும் விற்பனை அமோகமாக நடக்கிறது.ராஜவீதி, ஐந்துமுக்கு, சவுடம்மன் கோவில் அருகே ஏராளமான பாத்திரக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. நெல்லைலாலா, ஸ்ரீகிருஷ்ணா, அன்னபூர்ணா, திரஜ்லால் உள்ளிட்ட இனிப்புக்கடைகளில் தீபாவளிக்கானஇனிப்பு வாங்க முன்பதிவு நடந்து வருகிறது. குட்டீஸ்களுக்கான ஆடைகளை தேர்வு செய்ய, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு, மேற்கு மற்றும் கிழக்கு திருவேங்கடசாமி சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
      கோவையில், காலை, 10:00 மணிக்கு துவங்கிய தீபாவளி 'பர்ச்சேஸ்' நள்ளிரவு, 12:00 மணி வரை நீடிக்கிறது. இரவு, 10:00 மணியோடு வியாபாரம் நிறைவு என்று சொல்லும் ஜவுளிக்கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நள்ளிரவு, 12:00 மணி வரை வியாபாரத்தை தொடர்கின்றனர்.நள்ளிரவு வியாபாரத்துக்கென, சிறப்பு விற்பனையாளர்களை நியமிக்கின்றனர். சில கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்னாக்ஸ், காபி, சிற்றுண்டியும் கொடுக்கப்படுகிறது.
      கோபுரம் நிறுவி கண்காணிப்பு!
      காந்திபுரம் கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில், சிறப்பு கண்காணிப்பு கோபுரம் நிறுவி, போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நகை பறிப்பை தவிர்க்க கூடுதல் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலையில் மக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலை நேரத்தில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

      காளையார்கோவில் தாலுகா மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

      காளையார்கோவில்: காளையார்கோவில் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, ஓராண்டுக்கு மேலாகியும் டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

      மதுரை--தொண்டி தேசிய நெடுஞ்சாலையில்உள்ள காளையார்கோவில் தாலுகா மருத்துவமனைக்கு நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள்.மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர்--சாயல்குடி நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குபவர்களும் முதலுதவிக்கு வந்து செல்கிறார்கள். கடந்த 2016ல் அக் 1ம் தேதியிலிருந்து தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி செயல்பட்டு வருகிறது. 

      9 டாக்டர்கள் நியமிக்க வேண்டும், ஒருவர் மட்டும் பணிபுரிந்து வருகிறார். அவரே அலுவலக பணியையும் சேர்த்து பார்த்து வருகிறார். நகர் முழுவதும் வைரஸ் காய்ச்சல் தாக்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.நோயாளிகள் காலை 7:00 மணியிலிருந்து 9:00 மணி வரை காத்திருக்கின்றனர்.

      டாக்டர் காலை 9:30 மணிக்கு வந்து மதியம் 1:00 மணிக்கு சென்று விடுகிறார். 
      பின்னால் வரிசையில் காத்திருப்பவர்களை அவசரப்படுத்தி சிகிச்சைக்கு வருபவர்களை உடனடியாக வெளியேற்றி விடுகின்றனர். வரிசையில் நிற்கும் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. 

      நோயாளிகளின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை.பெரும்பாலும் ஊசி போடுவதில்லை. மாத்திரைகள் மட்டுமே வழங்கி வருகிறார்கள். பள்ளி செல்லும் மாணவ-,மாணவிகள் சிகிச்சைக்காக பல மணி நேரம் காத்து கிடக்கிறார்கள். குறித்தநேரத்தில் பள்ளி செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இரவில் நர்சுகள் மருத்துவமனையை பூட்டிவிடுவதால், சாலைவிபத்து, விஷக்கடிக்கு அவசரமாக சிகிச்சைக்கு வருபவர்கள் திரும்பி சென்றுவிடுகிறார்கள். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய லேப் டெக்னீசியன் கிடையாது,அதற்கான உபகரணங்களும் கிடையாது. 

      தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் போதிய வசதிகள் இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

      தமிழ் இணையதளங்கள் துவக்கம்

      சென்னை: தமிழ் இணைய கல்வி கழகத்தின் இணையதளம், www.tamilvu.org, 12.26 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், 59 லட்சம் ரூபாய் செலவில், 'தமிழிணையம் மென்பொருள் தொகுப்பு - 2' ஐ உருவாக்கி உள்ளது. இந்த மென் பொருள் தொகுப்பை, தமிழ் இணைய கல்வி கழக இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.இதில், தமிழ் மொழி மற்றும் அதோடு தொடர்புடைய, தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள், கோவில்கள், நாணயங்கள் உள்ளிட்ட ஆதார வளங்களை, தமிழ் இணைய கல்விக்கழகம் ஆவணப்படுத்தி உள்ளது. தமிழ் இணைய கல்வி கழகத்தின், 'தமிழ் 
      மின் நுாலகம்' இணையதளம், ஒரு கோடி ரூபாயில் துவக்கப்பட்டு உள்ளது. இம்மின் நுாலகத்தில், தமிழ் மொழி தொடர்பான, அச்சு நுால்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் போன்றவை, 
      டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. முதல்வர், பழனிசாமி, தலைமை செயலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், இந்த இணையதளங்களை துவக்கி வைத்தார். 
      மேலும், திருச்சி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில், 86 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பேரிடர் மீட்பு மையம், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் நிர்வாக கட்டடங்களையும், முதல்வர், பழனிசாமி திறந்து வைத்தார்.

      Blank screen? Might be a sextortion call

      Blank screen? Might be a sextortion call  NEW TRICK Dwaipayan.Ghosh@timesofindia.com 20.10.2024 Kolkata : Sextortion calls have become more ...