Monday, December 25, 2017

 ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு ‘தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்த கூட்டுசதியின் வெளிப்பாடு’ எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் கூட்டறிக்கை
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் செய்த கூட்டு சதியின் வெளிப்பாடு. இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது” என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு சட்டமன்ற தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சந்தித்து இருக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை தி.மு.க.வுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். அதேவேளையில், அதற்கு பின்னணியாக தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டுசதியை அறிந்து, பதவி ஆசைக்காக இப்படியும் சதி செய்வார்களா? என்று தி.மு.க.வினரை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள் தமிழக மக்கள்.

இரட்டை இலை சின்னத்தை தோற்கடிப்பதன் மூலம் ஒன்றுபட்டு அசைக்க முடியாத சக்தியாக நிற்கும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை எப்படியாவது பறித்துவிட வேண்டும். எம்.ஜி.ஆரின் செல்வாக்கிற்கும், ஜெயலலிதாவின் புகழுக் கும், களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் திட்டமிட்டு செய்த கூட்டு சதியின் வெளிப்பாடாக இந்த தேர்தல் முடிவு அமைந்து இருக்கிறது.

தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், ஜெயலலிதா வாழ்ந்த போதும், வாழ்வுக்கு பின்னும், அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரனும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ரகசிய உடன்பாட்டின் விளைவுதான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு.

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற வக்கிர புத்தியுடன், தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் உள்ள செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்பதற்காகவே, டி.டி.வி.தினகரனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, தனது வாக்கு வங்கியை தினகரனுக்கு திருப்பிவிட்டு அதிக வாக்குகள் பெற செய்திருக்கிறது தி.மு.க.

எம்.ஜி.ஆர். கண்டெடுத்த வெற்றி சின்னம், ஜெயலலிதா மீட்டெடுத்த மக்கள் சின்னம் இரட்டை இலையை தோற்கடிப்பேன் என்று தினகரன் கூக்குரல் இட்டதும், அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்வேன் என்று கூப்பாடு போட்டதும், தி.மு.க. வுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம் தந்த துணிவின் காரணமாகத்தான் என்பது தற்போது நிரூபணம் ஆகி இருக்கிறது.

ஜெயலலிதா வாழும் போதே அவருக்கு எதிராக சதிச்செயல் புரிந்து, ஜெயலலிதாவால் தன்னுடைய கண்ணிலேயே படக்கூடாது என்று போயஸ் தோட்டத்தைவிட்டு விரட்டப்பட்டதுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தோடு கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் தனக்கு வாழ்வு தந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னும், தொடர்ந்து துரோகம் செய்வதையே தனது வாழ்க்கை முறையாக கொண்ட தி.மு.க.வுடன் கைக்கோர்த்து இருப்பது துரோகத்தின் உச்சம் ஆகும்.

தி.மு.க.வை லஞ்ச ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக உலகத்தின் முன் நிறுத்திய 2ஜி ஊழலை, வெளிச்சம் போட்டு காட்டியவர் ஜெயலலிதா தான் என்பதை நாடே அறியும். ஆனால் இந்த ஊழல் வழக்கில் இருந்து ஆ.ராசாவும், கனிமொழியும் விடுதலையானது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று வாழ்த்துச்சொல்லி, ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகத்தை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெளிப்படுத்தி காட்டிக்கொண்டார் டி.டி.வி.தினகரன். அந்த துரோக செயலுக்கு பரிசாக தி.மு.க.வின் வாக்குகளை வெட்கமின்றி பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவு எடுத்து காட்டுகிறது.

அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் நேரடியாக மோதி எந்த ஜென்மத்திலும் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய கட்சிக்கும் தன்னை சார்ந்திருக்கும் தொண்டர்களுக்கும் பச்சை துரோகம் செய்து தி.மு.க.வின் வாக்குகளை டி.டி.வி.தினகரனுக்கு வாரி கொடுத்திருக்கிறார்.

ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அகற்றிட வேண்டும், அவரது மக்கள் செல்வாக்கை தகர்த்து விடவேண்டும் என்று காலமெல்லாம் செயல்பட்ட தி.மு.க.வும், ஜெயலலிதாவுக்கு பச்சை துரோகம் இழைத்த டி.டி.வி.தினகரனும் ரகசிய கூட்டு சேர்ந்தது, தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, திருமங்கலம் பார்முலா என்ற புதிய சொல்லை தீய சக்தி தி.மு.க. உருவாக்கியது. அதேவழியில் இப்போது ஆர்.கே.நகரில் நூதனமுறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் பார்முலா எனும் தீயசொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஒவ்வொரு நாளும் பணத்தை வாரி இறைத்த டி.டி.வி.தினகரன் குழுவினர், பிரசாரத்தின் கடைசி நாளில் 20 ரூபாய் நோட்டை வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு குறிவைத்து கொடுத்து வெற்றி பெற்றதும், அதற்கு ஈடாக ரூ.10 ஆயிரம் தரப்படும் என்று மக்களை நம்பவைத்து பிரசாரம் செய்தும், மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தீராத பழியை தன்மேல் கொண்டுள்ள தினகரனும், ஊழல் பழியை தனது தலைமேல் தாங்கி கொண்டிருக்கும் தி.மு.க.வும், ரகசிய ஒப்பந்தம் செய்து பெற்ற இந்த வெற்றியை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த சட்டசபை தொகுதிக்கும் சற்றும் பொருந்தாது.

தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் கூட்டு சதி செய்து, மக்களை ஏமாற்றி பெற்றுள்ள இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு எந்த ஒரு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது. 1½ கோடி தொண்டர்களும் ஒரே சிந்தனையுடன் எம்.ஜி.ஆரின் வழிநடந்து, ஜெயலலிதாவின் புகழ்காத்து, தமிழக மக்களின் நலன்காக்க ஓர் உருவாய் செயல்படுவோம் என்று பணியாற்றும் கட்சி தொண்டர்களை பிளவுபடுத்தவோ, அ.தி.மு.க.வை யாரும் அசைத்துவிடவோ முடியாது.

தமிழக மக்களுக்காகவும், தமிழக நலனுக்காகவும் ஜெயலலிதா உருவாக்கி தந்த ஆட்சியை சிறப்புடன் வழி நடத்தி, அவரின் திட்டங்களை தொடர்ந்து செயலாற்றி அவரின் பெருமை சேர்க்க உளமார பணியாற்றி கொண்டிருக்கிறோம்.

இதே வகையில் இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளும், செயல்படுத்த வேண்டிய திட்டங்களும் நம்முன் நிற்கின்றன. அந்த பணிகளை தொய்வின்றி செயல்படுத்தி ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்ப்போம்.

ஜெயலலிதாவின் எண்ணங்கள் ஈடேற, அவரது சிந்தனைகள் செயல்வடிவம் பெற்றிட, அவரின் நோக்கங்கள் அழியாது என்றும் வெற்றி பெற்றிட தொடர்ந்து பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுகள் 
 
 
ரபரப்பாய் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று வெளிவந்துள்ளது. இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் அ.தி.மு.க.வும், 3-வது இடத்தில் தி.மு.க.வும் தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பாரதீய ஜனதா கட்சிகள் உள்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். பா.ஜ.க.வை விட நாம் தமிழர் கட்சியும், எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாத நோட்டாவும் அதிக ஓட்டுகள் வாங்கியுள்ளன. முதல்சுற்றில் இருந்தே டி.டி.வி.தினகரனின் ‘குக்கர்’ சின்னம்தான் முதல் இடத்தில் இருந்தது. நிச்சயமாக இந்த தேர்தல்முடிவுகள் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சின்னங்களை வைத்து மட்டும் வெற்றிபெற முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டிவிட்டது. மதுசூதனனும், மருதுகணேசும் அவர்கள் கட்சி சின்னங்களில்தான் போட்டியிட்டனர். ஆனால் டி.டி.வி.தினகரன் கடந்தமுறை ‘தொப்பி’ சின்னத்திலும், இந்தமுறை ‘குக்கர்’ சின்னத்திலும் சுயேச்சையாகத்தான் களத்தில் இறங்கினார். எல்லா தொகுதிகளிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி அடிக்கடி தேர்தலை சந்திக்கும் தொகுதியாக மாறிவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் வெற்றி பெற்றார். 2015-ம் ஆண்டு மே மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். மீண்டும் 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் இந்த ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வே பிளவுபட்டு சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருதுகணேசும் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரம் ஓய்ந்தநிலையில், ஏப்ரல் 9-ந் தேதி இரவில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பெருமளவில் பண வினியோகம் செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்ததுதான் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாகும். மீண்டும் கடந்த 21-ந் தேதி இந்த தொகுதியில் தேர்தல் நடந்தது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மீண்டும் மருதுகணேசும் போட்டியிட்டனர்.

அடிக்கடி தேர்தல் நடந்து வருவதால் இந்த தொகுதி மக்கள் சலிப்பு அடையவில்லை, மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். வழக்கமாக தேர்தலின்போது வன்முறைகள் நடைபெறும், வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்படும். ஆனால் இந்த தேர்தலில் அப்படி எந்த வன்முறைகளோ, தேர்தல் தகராறோ, சண்டை சச்சரவுகளோ இல்லாமல் அமைதியாகவே நடந்தது. பணமழை பொழிகிறது என்று அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் சொன்னாலும், பொதுமக்களிடம் இருந்து புகார் வரவில்லை. பெரிய அளவில் பணப்பரிமாற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை. 28 லட்ச ரூபாய்தான் பறிமுதல் செய்யப்பட்டது. 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலை நிறுத்தக்கூடிய அளவில் எந்த புகார்களும் நிரூபிக்கப்படவில்லை. காரணங்கள் ஆயிரம் கூறினாலும், தேர்தல்முடிவை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயக கலாசாரம். இதற்கு பிறகு நடக்கப்போவதை அரசியல் உலகில் இனிதான் பார்க்கவேண்டும்.

Sunday, December 24, 2017

Vaikunta Ekadasi at Besant Nagar Ashtalakshmi Temple on Dec 29

Posted on : 23/Dec/2017 17:20:31



On the special and sacred occasion of Vaikunta Ekadasi falling on 29th December, in the Besant Nagar Ashtalakshmi Temple, Suprabhata Seva will be performed at 4.00 AM on 29th December. Special Aaradhana will be performed at 4.30 AM. Sorga Vaasal (the main temple entrance) will be opened at 5.00 AM.

The corridors of the Sannadhis (Sanctum Sanctorum of the Gods/Goddesses) will be opened for the devotees from 5.00 AM.

Keeping the convenience of the devotees in mind, the lines for standing in queues have been arranged right from the Northern entrance of the temple.

Further arrangements have been made for the Darshan without any distinction between Paid mode and free (unpaid) mode.

The routine on normal days is to perform the Archanas in the sanctum sanctorum of the Goddess Dhairyalakshmi. But, on 29th, Archanas can be performed on the Sanctum Sanctorum of 3 Goddesses – Aadhilakshmi, Dhanyalakshmi, and Dhairya Lakshmi, However, note that only Darshan can be had on the other Sanctum Sanctorum of the other Goddesses.

But for the times when the regular pooja and the cleaning sessions are taken up, arrangements have been made for the devotees to have Darshans in all the Sanctum Sanctorum of the Gods and Goddesses. The needful security arrangements have also been made.
நம்பியாரிடம் இரட்டை இலை இருந்தால் ஓட்டு விழாது: தினகரன்

Updated : டிச 24, 2017 19:21 | Added : டிச 24, 2017 19:06 |


சென்னை: வில்லன்களான அசோகன், நம்பியாரிடம் இரட்டை இலை இருந்தால் ஓட்டு விழாது என ஆர்.கே.,நகரில் வெற்றி பெற்ற தினகரன் மாலையில் நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்த பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றி சான்றிதழை சுயேட்சை வேட்பாளர் தினகரன் பெற்றார். நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடை தேர்ததலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு 89,013 ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர்மதுசூதனன் மட்டுமே டெபாசிட் பெற்றார். வெற்றிபெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் பிரவீன்நாயரிடம் இருந்து தினகரன் பெற்றுக்கொண்டா். ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற ராணி மேரி கல்லூரியில் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை பெற்ற தினகரனுடன் தங்கதமிழ்செல்வன், செந்தில்பாலாஜி உடன் இருந்தனர்.

சான்றிதழை பெற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெற்றி பெற காரணமாக இருந்த தொண்டர்களுக்கு நன்றி . இன்னும் 2 மாதம் கூட இந்த ஆட்சி இருக்காது.வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி.மக்கள் விரோத காட்சியை முடிவுக்கு கொண்டுவர அதற்கு அச்சாரமாக வெற்றி கிடைத்திருக்கிறது. காவல்துறை செயல்பாடு கண்டனத்திற்குரியது. இனிமேல் மாற்றங்கள் நிகழும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பொறுத்திருந்து பாருங்கள் . ஜெயலலிதாவனின் ஆசிபெற்ற என்னை ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். மக்கள் கணிப்பு என்னை இடைத்தேர்தலில் வெற்றிபெற வைத்துள்ளது. ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் தொடர்வேன்.

காவல்துறையினர் ஏவல் துறையாக இருக்க கூடாது. நான் இன்று முளைத்த காளான் அல்ல. நான் அகங்காரத்தில் பேச வில்லை. மக்களின் நாடி துடிப்பு எனக்கு தெரியும். 60 சதவீத வாக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். சிலகாரணங்களால் 50 சதவீதம் கிடைத்துள்ளது. ஆர்.கே. தொகுதியில் இருப்பவர்கள் சாமானியர்கள் . அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். நான் முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். நான் தனிப்பட்ட முறையில் முடிவுஎடுக்க மாட்டேன். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வில்லை.ஸீலீப்பர் செல்கள் வெளியில் வருவார்கள் தொடர்ந்து பின்னர் சசிகலாவை சந்தித்து ஆசீர் வாதம் வாங்க இருக்கிறேன். இவ்வாறு தினகரன் கூறினார்.

ஆர்.கே.நகர் தேர்தல்- செல்வாக்கை இழந்த இரட்டை இலை... பதவியை பறிகொடுக்கிறாரா எடப்பாடி?

தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனின்  வெற்றி  தமிழக அரசியல் அத்தியாயத்தை புதிய பாதையை  நோக்கி நகர்த்திச் செல்கிறது” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை எடப்பாடி கையில் வைத்திருந்தபோதும், பன்னீர் செல்வத்தின் போர்க்கொடியால் இரட்டை இலை சின்னமும், கட்சியும் தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டது. ஆட்சியையும், கட்சியையும் தன்வயப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட எடப்பாடி வலியச்சென்று பன்னீரோடு இணைப்பு நடத்தினார். அந்த இணைப்பே அ.தி.மு.க வின் அடிநாதமாக விளங்கிய இரட்டை இலையைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானதாக இருந்தது.

இரட்டை இலையை பெற்றுவிட்டால் ஒரு கோடிக்கும் மேலான தொண்டர்களையும், நாற்பது ஆண்டு காலம் தமிழகத்தில் கோலோச்சி வரும் அ.தி.மு.க. என்ற இயக்கத்தையும் தன் வயப்படுத்தி விடலாம் என்ற கணக்கே எடப்பாடியிடம் ஓங்கி இருந்தது. அதற்காகவே மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசிடம் மடிப்பிச்சை கேட்காத குறையாக எடப்பாடி மண்டியிடவும் செய்தார். ஒருபக்கம் எடப்பாடி, கட்சியைக் கைப்பற்ற காய்நகர்த்தி வர, மறுபுறம் பவ்யமாக பன்னீரும் மத்திய அரசின் துணையோடு கட்சியைக் கைப்பற்றக் கணக்கு போட்டார். ஆனால், மத்திய பி.ஜே.பி. அரசோ  இரண்டு பேரையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு தமிழகத்தின் ஆட்சி அதி்காரத்தை  ஆட்டுவிக்க கணக்குப் போட்டது.

தினகரன் தரப்போ,கட்சியை  கைப்பற்ற ஒருபுறம் வியூகம் வகுத்து வந்தாலும், தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும்  பணியையும் மற்றொருபுறம் மேற்கொண்டே வந்தது. ஆனால், எடப்பாடி தரப்போ இரட்டை இலை வந்துவிட்டால் எல்லாம் தங்கள் வசம் வந்துவிடும் என்ற ஒற்றை நம்பிக்கையிலேயே இருந்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையோடு களத்தில் இறங்கினால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்தனர் எடப்பாடி- பன்னீர் தரப்பினர். மத்திய அரசிடமும் இதை சூசகமாகத் தெரிவித்தனர். அதன் விளைவுதான்,இரட்டை இலையை எடப்பாடிவசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்த மறுதினமே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பும் வெளிவந்தது. கட்சியும், சின்னமும் தங்கள் வசம் வந்துவிட்டதால், ஆர்.கே. நகரில் வெற்றி நமக்குத்தான் என்று எடப்பாடி அணியினர் கணக்குப் போட்டு வைத்திருந்தனர்.
ஆனால், அதன்பிறகுதான் தினகரன் தரப்பு விஸ்வரூபமாக களத்தில் இறங்கியது. கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை என்ற நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் துணிச்சலாகக் களத்தில் இறங்க முடிவுசெய்தார்.தினகரன் தன் மீது உள்ள நம்பிக்கை ஒரு புறம் என்றால், மறுபுறம் எடப்பாடி தரப்புக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதையும் உணர்ந்துதான் இந்த துணிச்சலான முடிவை எடுத்தார். அ.தி.மு.க வை விட ஒரு வாக்காவது கூடுதலாக வாங்கிவிட்டால் போதும் என்ற  கணக்கில்தான் ஆரம்பத்தில் களத்தில் இறங்கினார். ஆனால், ஆர்.கே.நகரில் அவருக்கு கிடைத்த வரவேற்பு வெற்றியை எளி்தாக்கிவிட்டது.
இந்த தேர்தல் முடிவு  தினகரனுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதை விட இத்தனை ஆண்டுகள் அ.தி.மு.க வுக்கு வலிமை சேர்த்து வந்த இரட்டை இலை தனது செல்வாக்கை இழந்துவிட்டதோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டை இலை சின்னம் கிடைத்தால், எதையும் சாதித்துவிடலாம் என்ற எடப்பாடியின் எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டது ஆர்.கே. நகர் முடிவு. இத்தனை ஆண்டுகள் கோலோச்சி வந்த இரட்டை இலை சின்னத்தை நேற்று வந்த குக்கர் சின்னம் காலி செய்துவிட்டது என்ற செய்தியும் கொஞ்சம் அதிர்ச்சிகரமானதுதான். ஆனால், இதைத் தான் தினகரன் எதிர்பார்த்தார். ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் வலிமைபெற்றுவிட்டால், கட்சியை தன்வயப்படுத்திவிடலாம் என்ற திட்டத்தில் அவர் தெளிவாக இருந்தார். இதையெல்லாம் உணர்ந்து தான், எடப்பாடி தரப்பும் வாக்குக்கு ஆறாயிரம் ரூபாய் பணத்தை வாரி இறைத்ததாக தகவல்கள் வெளியாகின.

தினகரனின் இந்த வெற்றி அ.தி.மு.க  என்ற இயக்கம் இனி யார்வசம் செல்லப்போகிறது என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்பியுள்ளது. இரட்டை இலை இருக்கும் பக்கம் தான் தொண்டர்கள் இருப்பார்கள் என்றால், இப்போது இரட்டை இலைக்கு எதிராக வாக்களித்த மக்களின் மனநிலை எதை பிரதிபலிக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது?. சின்னம் யார் வசம் இருக்கிறது, கட்சி யாரிடம் இருக்கிறது என்பதை மக்கள் பார்க்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது. இந்த தேர்தல் முடிவு அ.தி.மு.க வின் நிர்வாகிககள் மத்தியிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக “சின்னம் எடப்பாடி அணியிடம் இருந்ததால் அவர் பின்னால் சென்றோம்” என்று சொன்னவர்களின் மனநிலையிலும் இனி மாற்றம் ஏற்படலாம்.

ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள் என்று தினகரன் இத்தனை நாட்கள் சொல்லிவந்தார். இந்த ஸ்லீப்பர் செல்லாக இருப்பவர்கள் இனி உண்மையாகவே தினகரன் பின்னால் நிற்கலாம்.சட்டமன்ற கூட்டத்தொடரை அடுத்த மாதம் கூட்டவேண்டிய நிலையில் சட்டமன்ற உறுப்பினராக தினகரன் உள்ளே செல்லும் போது, அவர் பின்னால் மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுக்கும் நிலையை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏற்படுத்திவிட்டது. கிட்டத்தட்ட முதல்வராக எடப்பாடி எதிர்காலத்தில் தொடருவதில் கூட சிக்கலை ஏற்படுத்திவிடலாம். தினகரனின் இந்த வெற்றி  எடப்பாடி பின்னால் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் நிலையும் உள்ளது.இதனால்,தமிழக அரசியல் புதிய பாதையில் வரும் காலத்தில் பயணிக்கும் என்பதை கணிக்க துவங்கிவிட்டார்கள் அரசியல் நோக்கர்கள். தினகரனின் வெற்றிக்கு பின்னால், மறைமுகமாக சில அமைச்சர்களே பணியாற்றினார்கள் என்ற தகவலை லேட்டாக தான் அறிந்து கொண்டுள்ளார் எடப்பாடி. தினகரனின் இந்த வெற்றி ஆட்சி கட்சி இரண்டையும் தினகரன் கைப்பற்றுவதற்குக்  கிடைத்த வெற்றியாக  அவரின்  ஆதரவாளர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். “இனி, எடப்பாடி பக்கம் இருந்து தினகரன் பக்கம் அணிமாறும் படலத்தை காணப்போகிறீர்கள்” என்று வெற்றி உற்சாகத்தில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.
ஆட்சியை கச்சிதமாக நகர்த்தி, கட்சியையும் லாவகமாக கைப்பற்ற தெரிந்த எடப்பாடிக்கு ஆர்.கே. நகரில் காய்நகரத்த தெரியாமல் போனதால், எதிர்காலத்தில் ஆட்சி, கட்சி என்ற இரண்டையுமே அவர் இழக்கும் அபாயத்திற்கு சென்றுவிட்டார்.

"ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாகிய நான்...!" - தினகரனின் திடீர் குபீர் அறிக்கை

நாட்டின் மதச்சார்பற்றக் கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன் என்று டி.டி.வி.தினகரன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் இமாலய வெற்றி பெற்றுள்ளார். இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ என்று குறிப்பிட்டு டி.டி.வி.தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில், 'உன்னைப் போல பிறரையும் நேசி என்கிற உயர்ந்த தத்துவத்தைப் போதித்து, சகோதரத்துவத்தையும், அன்பையும் எடுத்துரைத்த, தேவகுமாரனாம் இயேசுகிறிஸ்து அவதரித்த பொன்னாளாம் கிறிஸ்துமஸ் நன்னாளில் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்கொரு பாலகன் பிறந்தார். நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்கிற வேத வாக்கியத்தை தேவன் நிறைவேற்றிய காலம் கிறிஸ்துமஸ்  காலம் அன்பை, எளிமையை, மன்னிக்கும் குணத்தை, ஈகையை, இதயத்தூய்மையை, இறைவன் மீது நான் கொள்ளவேண்டிய விசுவாசத்தை, பிரசங்கித்த இயேசுநாதரை எல்லோரும் போற்றிடுவோம்.
ஏழைகளுக்கு இறங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்' என்கிற இயேசு கிறிஸ்துவின் வாக்கியத்தின்படி, ஏழைகளுக்கு உதவும் எண்ணத்தை தங்கள் குணமாகவே கொண்ட எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கிறிஸ்துவத்தின் மீதும் கிறிஸ்துவ மக்களின் மீதும் எப்போதும் அளவற்ற அன்பினை பொழிந்துள்ளனர் என்பதை எண்ணிப்பார்க்கிறேன்.
அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் போதித்த போதனைகளை இதயத்தில் தாங்கிய கிறிஸ்துவ மக்கள், தூய தொண்டினை மக்களுக்கு ஆற்றும் வகையில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகத்திலும் அவர்களின் பணி என்றும் போற்றத்தக்கது. தொடர்ந்து இந்த அன்பின் நற்செய்தியும், நற்செயலும், தங்கு தடையின்றி தமிழகத்தில் தழைத்து ஓங்கிட எப்போதும் நாம் துணை நின்றிடுவோம். நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கிலும் வாழும் என் அன்பு கிறிஸ்துவ சகோதரர்களுக்கு, மீண்டும் ஒருமுறை இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது: தினகரன்

Published : 24 Dec 2017 19:12 IST
சென்னை




டிடிவி தினகரன்

என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார்.இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடமிருந்து பெற்றார் டிடிவி தினகரன்.

அதற்குப் பிறகு சென்னை ராணிமேரி கல்லூரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றி பெறக் காரணமாக இருந்த தொண்டர்களுக்கும், எனக்காக வாக்களித்தவர்களுக்கும் நன்றி. ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற என்னை ஆர்.கே.நகர் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். ஆர்.கே.நகர் மக்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் தொடருவேன்.ஜெயலலிதா வீடியோவுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீடியோ வெளியிட்டது தொடர்பாக வெற்றிவேலைக் கண்டித்தேன்.

அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் ஆர்.கே.நகரில் தொடங்கும் என்று ஏற்கெனவே சொன்னேன். அது நடந்திருக்கிறது.

காவல்துறை ஏவல்துறையாக நடக்கக் கூடாது. நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எனது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார்.இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது'' என்று தினகரன் கூறினார்.
RK Nagar bypoll: NOTA gets more votes than BJP candidatePradeep Kumar 

| TNN | Updated: Dec 24, 2017, 19:15 IST

Highlights

The BJP polled 1,417 votes while NOTA received 2,373 votes.

The BJP fielded Karu Nagarajan, the party's state unit secretary, as its candidate for the bypoll.

Nagarajan alleged that it (RK Nagar bypoll) was "not a democratic election."



BJP candidate polled 1,417 votes while NOTA received 2,373 votes.

CHENNAI: With less than 1% vote share, the Bharatiya Janata Party (BJP) failed to leave a mark on the RK Nagar bypoll. So poor was the national party's performance that even NOTA (None of the Above) option polled higher number of votes than the BJP.
BJP fielded Karu Nagarajan, the party's state unit secretary, as its candidate for the bypoll.

At the end of 19 rounds of counting on Sunday evening, Nagarajan polled 1,417 votes, which was only 0.80% of the total votes polled. In comparison, NOTA received 2,373 votes.

Nagarajan left the counting venue midway through the process after it became evident that the BJP was not going to even remotely alter the outcome, which saw independent candidate T T V Dhinakaran being declared the winner.

Nagarajan later alleged that it (RK Nagar bypoll) was "not a democratic election." He added that political parties, except the BJP, had distributed cash to voters.

Earlier, as the BJP was setting a terrible pace during the counting, Subramanian Swamy tweeted: "TN BJP record: A national ruling party gets a quarter of NOTA's vote. Time for accountability."

Editor of Thuglak magazine and RSS think-tank S Gurumurthy tweeted: "RK Nagar byelection is a fraud. It is bought by Dinakaran by money."
RK Nagar bypoll results: Money power has won, DMK leader says

B Sivakumar | TNN | Updated: Dec 24, 2017, 17:47 IST

DMK leader Durai Murugan says democracy has lost in RK Nagar

AIADMK minister Sellur K Raju says the byelection result will not affect the party

Sasikala’s brother V Divakaran says the win is very big.

Supporters of TTV Dhinakaran celebrate in Chennai on Sunday




CHENNAI: As sidelined AIADMK leader and independent candidate TTV Dhinakaran established a clear lead in the RK Nagar byelection, the DMK on Sunday said democracy has lost in the assembly constituency and money power has won.

"Money has eaten all DMK votes. In RK Nagar constituency, money power has won and democracy has lost," said.

AIADMK minister Sellur K Raju said the byelection result would not affect the party. "The AIADMK is a big tree and nobody has born to kill the tree. Some branches might fall but not the entire tree," said Raju.

ஆர்.கே.நகரில் தினகரன் சாதித்தது எப்படி?


தினகரன் | கோப்புப் படம்: ஆர்.அஸ்வின்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் முடிவுகள் டிடிவி தினகரனுக்கு சாதகமாக வீசத் தொடங்கியதும் அரசியலில் கணிக்க முடியா குழப்பம் உருவாகிவிட்டது. எம்ஜிஆர் நினைவு நாளை அனுசரிக்க வெற்றிமாலையோடு யார் செல்வார்கள் என்று இன்று காலை வரை நிலவிய குழப்பத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது. ஆனால் அதிமுகவில் அடுத்த கட்ட போக்குகள் எப்படி இருக்கும், அதிமுக ஆட்சியில் நிலைத்தன்மை இருக்குமா என்பதற்கான கேள்விகளுக்கு இப்போது முடிவு கிடைக்கப் போவதில்லை. டிடிவி தினகரனின் இந்த வெற்றிக்கு காரணம் இதுதான் என்று அரசியல் நோக்கர்களாலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. வெற்றி வெற்றிதான் வேறொன்றும் சொல்வதிற்கில்லை.
ஆர்.கே.நகர் தேர்தலில் அரசு அதிகாரம், ஆளும் கட்சியின் காவல்துறை, திமுகவின் செயல் தலைவர் வியூகங்களையும் தாண்டி தினகரன் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் மிகையில்லை. எதிரிகளாலும், துரோகிகளாலும் சூழப்பட்டிருந்த சூழலிலும் அசராமல் அதை எதிர்கொண்டு நின்று அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்து தினகரன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அதனால் அவரை மதிப்பிட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
அரசியல் சுழலில் சகிசலா குடும்பம் சறுக்கிக் கொண்டிருக்கும் காலம் இது. அதிகாரம் இல்லாத நிலையில் அரசியலில் தாக்குப் பிடித்து நிற்பதே பெரிய வலிமைதான். அதை மிகச் சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன். ஊடகங்களுக்கு கடுகடுத்ததில்லை, எல்லா நேரத்திலும் எல்லா கேள்விகளையும் எதிர்கொள்கிறார். வாய்தா வாங்கிக் கொண்டே இருக்கும் வழக்குகள், அச்சுறுத்தும் அந்நிய செலாவணி வழக்கு, திகார் சிறை, ஓட்டுக்கு பணம், டோக்கனுக்கு பணம், பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் என எத்தனையோ சிக்கல்களை சந்தித்திருந்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் தினகரன் தன் அரசியல் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
திமுகவின் செயல்பாடுகள் ஸ்டாலினை சுற்றி இயங்கத் தொடங்கியதும், கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதிரிகளே இல்லை என இறுமாந்திருந்தார் ஜெயலலிதா. அந்த நேரத்தில்தான் வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு அவரை இறுக்கிச் சுற்றியது. அதன் இறுதிச் சுற்றை எதிர்கொள்ளும் நேரத்தில் அவர் உயிருடன் இல்லை. வழக்கின் தீர்ப்பு அவரது தோழியை பெங்களூரு சிறைக்கு அனுப்பியது. ஆனால் ஜெ.உடனான 30 ஆண்டுகால நட்பில் சேர்க்கப்பட்ட சொத்துகள், புகார்கள் குறித்தெல்லாம் பேசினால் சட்டத்தின் அனைத்து ஷரத்துகளிலும் வழக்கு தொடுக்கலாம் என்பார்கள் அரசியல் நோக்கர்கள். அந்த அளவுக்கு புகார்களோடு வாழ்ந்தவர் சசிகலா என்றால் மிகையில்லை. எனினும் என்ன ஏ பிளஸ் பி 2 = ஏபி 2 என்கிற விதிப்படி 'அம்மா'வின் விசுவாசிகள் அருமைத் தோழிக்கும் விசுவாசிகள் ஆகினர்.
திரைக்கதையின் சுவாரஸ்யமே, இந்த இடத்திலிருந்து உருவான டிடிவி தினகரனின் பாத்திரம் தமிழக அரசியலில் இப்போது மையம் கொண்டுள்ளதுதான். அவரது முதல் அத்தியாயக் காட்சிகள் வரலாற்றின் மங்கிய காட்சிகள். ஆனால் அதைத்தான் அவரது அரசியல் எதிரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் நடப்புக் கணக்குகள்தான் அவரது கவுரவப் பிரச்சினையாக இருந்தது.
ஆட்சி அதிகாரம் நோக்கி சசிகலா நகர்ந்தபோது ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்த போராட்டம்தான் அதிமுகவில் ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கிவைத்தது. சசிகலாவை முன்னிறுத்தி அதிமுகவையும், ஆட்சியையும் தொடர்வது கவுரவமாக இருக்காது என்பதால் ஓபிஎஸ்ஸுக்கு மறைமுகமாக பாஜக கொடுத்த அஜண்டாதான் அந்த தர்ம யுத்த போராட்டம் என்கிற பேச்சும் இருந்தது. சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன் தனக்கு விசுவாசமானவர்கள் என்றுதான் கட்சியை தினகரனிடமும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும் பிரித்து அளித்துவிட்டுச் சென்றார். ஆனால் தர்மயுத்தப் போராட்டம் ஈபிஎஸ் வரை தொடர்கிறது. ஆட்சியில் தினகரன் தலையிட்டார் என்பதால் ஈபிஎஸ் எதிர்த்துக் கொள்ளவில்லை. இந்த முறையும் மறைமுக அஜண்டாதான் தினகரனை பதம் பார்த்தது.
சசிகலாவும், தினகரனும் மதவாத எதிர்ப்பாளர்கள், திரும்பவும் திராவிட ஆட்சியைத் தக்கவைக்க நினைப்பவர்கள் என்பதால் பாஜக எதிர்த்து விடவில்லை. ஆட்சி அதிகாரம் மறைமுகமாக தங்கள் எல்லைக்குள் இருப்பதுபோல பாஜக தனக்கான ஆதரவு ஆட்களை அதிமுகவுக்குள் உருவாக்கி கொண்டதுதான் விசுவாசிகளிடையே பிளவை உருவாக்கியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதிகாரத்தை இழந்த ஓபிஎஸ், இழக்க விரும்பாத ஈபிஎஸ் இருவரையும் பின்னாளில் இணைந்ததும் அல்லது இணைத்ததும் வரலாறு ஆனது.
அதற்குப் பின்னர் டிடிவி தினகரனுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை வேறு யாரேனும் சந்தித்திருப்பார்கள் என்றால் அரசியலில் இருந்தே விலகியிருப்பார்கள். திகார் சிறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம், ஆதரவாக நின்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிப் பறிப்பு, சகிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி சோதனை என எல்லாவற்றையும் சந்தித்தார். ஆனாலும் எல்லா நெருக்கடிகளிலும் தமிழக அரசியலைத் தாண்டி அவர் விமர்சனங்களை செய்ததில்லை.
கட்ட கடைசியாக அவரது அரசியல் அத்தியாயத்தை இறுதி செய்யும் விதமாகத்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிப்பு. கட்சிக்கு துணைப் பொதுச் செயலாளராக இருந்தாலும், கட்சிக்குள் அவர் இல்லை. இரட்டை இலை சின்னம் இல்லை, அதிமுக கொடி இல்லை, கடந்த தேர்தலில் கிடைத்த தொப்பி சின்னமும் இல்லை என களம் இறங்கினார்.
ஆளும்கட்சி பலம் பொருந்திய மதுசூதனன், வலிமையான எதிர்க்கட்சியாக திமுகவின் மருதுகணேஷ் என போட்டி பலமாக இருந்தாலும் சுயேச்சை வேட்பாளராக சற்றும் சளைக்காமல் அவர் நடத்திய போராட்டம் தேர்தலை சுவாரஸ்யமாக்கியது.
தமிழக அரசியலில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பழுத்த அரசியல்வாதிகள்கூட டிடிவி தினகரனின் தேர்தல் வியூகத்தைக் கண்டு வியந்து நிற்கின்றனர். மாற்றுக் கட்சியில் உள்ள நிர்வாகிகள் மிரள்கின்றனர். இறுதியில் வெற்றிபெறுவது யார் என்பதுதான் தேர்தலில் விதி. இங்கு நியாய தர்மங்களுக்கு இடமில்லை. எப்பாடுபட்டாவது ஜெயிக்க வேண்டும். இதற்கான விடைதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள். இதன்மூலம் தமிழக அரசியலில் அவரது இருப்பும் உறுதி செய்யப்ட்டுவிட்டது.
சாதி ரீதியாகத் தினகரனுக்குக் கிடைக்கிற ஆதரவு மிகப் பெரியது. மறைமுகமான அதிமுகவினரின் ஆதரவு மட்டுமல்ல, அவரது அணுகுமுறையால் மாற்றுக் கட்சியினரும் அவர் மீது அனுசரணையான போக்கையே கடைபிடிக்கின்றனர் என்பதும் உண்மை. ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமாக உள்ள நாடார் சமுதாய வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகளும், பெண்களின் வாக்குகளும் டிடிவி தினகரனுக்கே பெரும்பாலும் கிடைத்திருக்கிறது.
இந்த வெற்றிக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன என ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். பணம், செல்வாக்கு, அல்லது ஆளுங்கட்சி மீதான அதிருப்தி என குறிப்பிடலாம். ஆனால் பிரதான வேட்பாளர்கள் பிறரும் இதே வழிமுறையை கையாண்டவர்களே என்பதையும் மறுக்க முடியாது. எனவேதான் அரசியல் நோக்கர்களாலும் டிடிவி தினகரனின் இந்த வெற்றியை கணிக்க முடியவில்லை.
தினகரன் ஆர்.கே நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பது உறுதியாகிவிட்டது. இத்தகைய சூழலில் அரசியல் போக்குகளும் மாறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி எம்எல்ஏக்களில் சிலர் அணி தாவவும் வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பினைப் பொறுத்து அவரது அடுத்த கட்ட அரசியல் நகர்வு தீர்மானிக்கப்படலாம். முடிவு சாதகமாக அமைந்தால் அதிகபட்சமாக யோசித்தால் அது ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்கும்.
இந்த வெற்றியை வைத்து கட்சி அணியினரின் கணிசமாக நம்பிக்கையையும் தினகரன் பெறுவார் என்றே நம்பத் தோன்றுகிறது. ஒருவேளை அதிமுக தினகரனின் கைகளுக்குச் சென்றால், காலம் கனியட்டும் என காத்திருக்கும் திமுக தரப்புக்கு போட்டியாக உருவாகி நிற்பார் என்பதே உண்மை.
அதே நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வெற்றி மட்டுமே பொதுத்தேர்தலுக்கான முன்னுரையும் அல்ல. ஆனால் தினகரனின் வளர்ச்சி, பாஜகவிற்கு எதிரானதல்ல, திமுகவிற்கு எதிரானது. அதிமுகவை உயிர்ப்பிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடும். இதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளிலிருந்து திமுகவும், மற்ற கட்சிகளும் புரிந்து கொண்டால் நல்லது.

கே.பி. எனும் அபூர்வராகம்!


தமிழ் சினிமாவில், டைரக்டர்களின் படம் எனப் பேர் கிடைத்தது இயக்குநர் ஸ்ரீதர் படங்களைப் பார்த்துத்தான் என்பார்கள். அதையடுத்து டைரக்டர் டச் என்று எல்லோரும் சொல்லிப் புகழ்ந்ததற்குக் காரணம் கே.பி. எனும் கே.பாலசந்தர்தான்!

எம்.ஜி.ஆர். சிவாஜிகளின் புகழில் குளிர்காயவில்லை. தன் கதையையும் நல்ல கதையையும் மட்டுமே நம்பினார். அடுத்த தலைமுறைக்கு அதாவது எம்.ஜி.ஆர். சிவாஜி இடத்துக்கு இரண்டு பேரை உருவாக்கியவர் அவர்.
எனக்குத் தெரிந்து கட்டுப்பெட்டியாக அடைக்கப்பட்டு வெளியே வந்த பெண்களை, அச்சு அசலாக வார்த்துக் காட்டியது பாலசந்தர் படங்களே!
எல்லோரும் ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தபோது இவர் யுடர்ன் அடித்து இன்னொரு பக்கமாகச் செல்வார். ஜெமினிகணேசனை வைத்தும் படம் பண்ணுவார். ஜெய்சங்கரைக் கொண்டும் கதை சொல்லுவார். முதல் இயக்கமான நீர்க்குமிழியில் நாகேஷ்தான் நாயகன்.
கமல், ஜெய்கணேஷ், விஜயகுமார் இருந்தாலும் சுஜாதாவைப் பிரதானமாக்கி, அவர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதையையும் அந்தக் கவிதாவையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

எல்லோரும் எம்.எஸ்.வி. கேவி மகாதேவன் என்று அவர்கள் பக்கம் போகும்போது, வி.குமாரை அடையாளம் காட்டினார். ’காதோடுதான்...’ என்ற பாடல் வி.குமார் இசை என்பது பலருக்கும் தெரியாது. எம்.எஸ்.வி. என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதேபோல், வி.எஸ்.நரசிம்மன். மரகதமணி.

எனக்குத் தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களை கலர் பட காலகட்டத்திலும் அதிகமாய் எடுத்தது பாலசந்தராகத்தான் இருக்கும்.

இன்றைக்கு ரெண்டு மணி நேர சினிமாவில், காமெடி டிராக், புரியாத அஞ்சு பாட்டு, தூக்கிப் பிடிக்கும் ஹீரோயிஸம். ஆனால் ஹீரோ பேர் மறந்து கேரக்டர் பெயர், கதை, உணர்வு, வலிகளைச் சொல்லும் பாடல், படம் முழுவதும் விரவியிருக்கும் காமெடி... என நிரம்பி வழியும் கே.பி.யின் படங்களில்!

தனக்கு என்ன பிடிக்குமோ... அது அரைக்கை சட்டை, கையில் கயிறு, விபூதி, காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், சோடாபுட்டி கண்ணாடி என தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் இயக்குநர்களுக்கு மத்தியில், அவள் ஒரு தொடர்கதை விகடகவி கோபால், அவர்கள் ராமனாதன், அபூர்வ ராகங்கள் பிரசன்னா, சிந்துபைரவி ஜே.கே.பி. மனதில் உறுதி வேண்டும் நந்தினி, எதிர்நீச்சல் மாது, வறுமையின் நிறம் சிகப்பு திலீப், நினைத்தாலே இனிக்கும் சந்துரு, அவர்கள் அனு, அபூர்வ ராகங்கள் பைரவி... என ஒவ்வொரு கேரக்டர்களிலும் உயிர்ப்பு... ஜீவன்! அதுதான் கே.பி. டச்!

ஊருக்குப் போய்விட்டதைக் காட்ட ரயிலைக் காட்டுவார்கள் சினிமாவில். ஆனால் பத்துப்பையன்கள், ஒருவர்பின் ஒருவராகச் சட்டையைப் பிடித்துக் கொண்டு, ரயில் மாதிரி செல்வதைக் காட்டுவார். ஒரு வாரத்தைக் காட்ட, படபடவெனப் பறக்கும் தினசரிக் காலண்டரைக் காட்டுவார்கள். கல்கி, விகடன் என ஒவ்வொரு நாளும் வருகிற புத்தகங்களைக் கொண்டே ஒருவாரத்தைக் காட்டியிருப்பார்.

பூவா தலையா படம். அத்தைக்கு கட்டுப்படும் மருமகப்பிள்ளை. தலையாட்டி பொம்மை ஆடுவதையும் பீரோவில் தொங்கும் சாவிக்கொத்தையும் காட்டியிருப்பார்.

படத்தில் இருமல் தாத்தா, அவர்கள் பொம்மை, டெலிபோன், அருவி, ஃபடாபட் எனும் சொல், அவள் ஒரு தொடர்கதை வில்லனின் கை மடக்கி விரிக்கும் ஸ்டைல் என கே.பி. விடும் ரகளைக்கும் அவரின் ரசனைக்கும் பஞ்சமே இல்லை.

அழுகாச்சி கேரக்டராகவே செளகார் ஜானகிக்குக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா என்று எதிர்நீச்சலிலும் தில்லுமுல்லுவிலும் வாய்ப்பை வழங்க, அதைக் கொண்டு அதகளம் பண்ணியிருப்பார் செளகார் ஜானகி.
எதிர்நீச்சல் படத்தில், திருடி விட்டு மாட்டிக் கொள்வார் தேங்காய் சீனிவாசன். அடித்ததில் விழுந்திருப்பார். போலீஸில் சொல்லிவிடலாம் என்று ஒருவர் சொல்ல, ‘வேணாம் சார். விழுந்துட்டாரு. எழுந்திருக்கும் போது, நல்லவனாத்தான் சார் எழுந்திருப்பாரு’ என்று வசனம்.
அவள் ஒரு தொடர்கதையில், ‘என்ன... பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ கர்வமா இருக்கா’ என்று விஜயகுமாரின் அம்மா கேரக்டர் சொல்ல, ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’ என்று சட்டெனச் சொல்லுவார் சுஜாதா.

நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா, தலையை ஆட்டி ஆமாம் சொல்லிவிட்டு, பிறகு மெல்ல மெல்ல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிவிட்டு, இல்லை என்று சைகையில் சொல்வதை, செய்யாத, செய்து பார்க்காத ரசிகர்களே அப்போது இல்லை.

காட்சி கவிதையாய் இருக்கும். பாடலில் கதையே சொல்லப்படும். வசனத்தில் அவ்வளவு ஷார்ப் வைத்திருப்பார். நடிப்பில் அவ்வளவு யதார்த்தம் குடிகொண்டிருக்கும்.
தட் இஸ் கமால் சொல்லும் சொல்லத்தான் நினைக்கிறேன், எவ்ளோ பெட்டு கேட்கும் கவிதாலயா கிருஷ்ணா, முடிச்சுகள் போடும் நட்ராஜ், கையசைப்பில் வாயசைக்கும் ஜூனியர், ஃபடாபட், ரெண்டு கை பத்தலை எஸ்.வி.சேகர், அந்த திலீப் எனும் கேரக்டரே இல்லாத கேரக்டர், விளக்கை அணைத்து எரிய வைத்து அணைக்கும் லவ் சிக்னல்... எல்லாவற்றுக்கும்
மேலாக தண்ணீர் தண்ணீர் வறட்சியும் அச்சமில்லை அச்சமில்லை அருவியும் பொளேர், ஜிலீர்!

தமிழ் சினிமாவில், திருவள்ளுவரையும் பாரதியையும் இவரளவுக்கு எவரும் கொண்டாடியதே இல்லை. அவர்கள் மீதும் அவர்களின் தமிழின் மீதும் அப்படியொரு காதல் அவருக்கு!
இன்றைக்கு இருக்கிற இயக்குநர்களாகட்டும் இனி வரப்போகிற இயக்குநர்களாகட்டும் கே.பாலசந்தரின் ஒவ்வொரு படங்களும் அவர்களுக்கான பாடங்கள்!
இயக்குநர் சிகரத்தின் நினைவு நாள் இன்று. சிகரம்... சினிமாவுக்குச் சூட்டிய மகுடங்களை நினைவுகூர்வோம்.

நெட்டிசன் நோட்ஸ்: 'வேலைக்காரன்'- போராட்டக்காரன்


வேலைக்காரன் படத்தில் ‘சிவகார்த்திகேயன், நயன்தாரா’
சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. நேர்மறை விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் இப்படம் குறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்….

Monica Vignesh
 
‘வேலைக்காரன்’ செம படம்.
விறுவிறுப்பான சீன்ஸ் + மாஸ் ஸ்கிரீன் ப்ளே. எல்லாமே சரியான விதத்துல அமைந்த ஒரு திரைப்படம்.

Raja Sundararajan

இவன் லோ கிளாஸ்; அவ மிடில் கிளாஸ் வில்லன் ஹை கிளாஸ். அதேதான், வர்க்கப் போராட்டம். “உலகத்தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!”
இயக்குநர் தன்னோட ‘தனிஒருவன்’ படத்துல போலவே ஒரு சமூகப் பிரச்சனைய கையில எடுத்திருக்கிறார். அதுல மருந்து; இதுல உணவுப்பொருள், சூப்பர்மார்க்கெட், சந்தைப் பொருளாதாரம்.

சின்ன ஜெயங்கொண்டார்

‘வேலைக்காரன்’ படத்தோட மிகச் சிறந்த வேலைக்காரன் மோகன் ராஜா. வசனம் சூப்பர். அலட்டிக்காம, அசால்ட்டா ஒரு நல்ல மெசேஜ் படம். பார்க்கலாம்...
திருவட்டாறு சிந்துகுமார்

மலையாளத் திரையுலக நடிப்பு ராட்சசன் பகத் பாசில் தமிழில் அறிமுகமாகும் படம் ‘வேலைக்காரன்’. படத்தில் சிறந்த நடிப்புக்காக பெயரைத் தட்டிக்கொண்டு போகப்போகிறவர் அவர்தான்

விக்னேஷ் சி செல்வராஜ்

கிராமத்து கதையோ.. சிட்டி சப்ஜெக்டோ.. ஹீரோயினோடு காதல், பிரிவு, கொஞ்சம் சென்டிமென்ட், நான்கு பாடல்கள், அதில் ஒன்று காதல் தோல்விப் பாடல் என வழக்கமான ரூட்டில் பயணிக்காமல் இந்த முறை வேறுமாதிரி இறங்கி அடித்திருக்கிறார் சிவா.
Sam Nathan

விஜய் நாம் தமிழர் கொள்கைகளுக்கு படம் பண்ணார். சிவா கம்யூனிஸ்டுக்கு படம் பண்றார். அரசியல் ஆவாதுன்னு சினிமா பக்கம் வந்தா இங்க சூர அரசியலா இருக்கு. ஏய்யா இப்டி.

Muralidharan Kasi Viswanathan

இந்தப் படத்தின் முக்கியமான பஞ்ச் வசனம், "சிறந்த சொல், செயல்" என்பது. ஆனால், படத்தில் வெறும் சொற்கள் மட்டுமே கொட்டிக்கொண்டேயிருக்கின்றன.

Elambarithi Kalyanakumar

Saffronக்கு தமிழ்ல காவினு அர்த்தம். காவினாலே பிரச்சினைதானே. #வேலைக்காரன்

Suresh

முதலாளிகளால உருவானவன் மட்டும் வேலைக்காரன் இல்லை , அந்த முதலாளிகளையே உருவாக்கறது இந்த வேலைக்காரங்கதான் அப்படிங்கிற ஒரு அடிநாதம்தான் இந்த படம்.

Rajavel Nagarajan

சிவகார்த்திகேயனுக்கு வெற்றி புதிதல்ல. ஆனால் இது பெருமையான வெற்றி!
‘வேலைக்காரன்’ - நேர்மையான வெற்றிக்கு சொந்தக்காரன்!

Sureshkumar Madurasi M

சிவகார்த்திகேயன், காலத்தின் கட்டாயம். அது நிகழ்ந்தே தீரும்! That's all.

முத்து பாண்டி தமிழன்

#வேலைக்காரன் - ஒவ்வொரு வேலைக்காரனும் பார்க்க வேண்டிய படம்
#சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் தலைசிறந்த படம்.
உலகின் தலைசிறந்த சொல் #செயல்
இப்படிக்கு உங்களில் ஒரு #வேலைக்காரன்.

 Senthilraj Paulraj

#வேலைக்காரன் – நீ..ண்ட திரைக்கதையோடு கூடிய நல்ல படம்.

லாஜிக் கம்மியா இருந்தாலும் மெசேஜ் மட்டுமே படத்திற்கு பலம்,

மணிகண்டன்

சினா.கானா நீ கலக்குய்யா.

Santhosh Av Kamalraj

புழுதி படிஞ்ச ஃப்ரேம்ல வர்ற படத்தோட முதல் 30 நிமிஷம், கன்னட கமர்ஷியல் பட பாணியில கொஞ்சம் டல் அடிக்க, அடுத்து 30 நிமிஷம் எம்பிஏ படிச்சிக் கூடத் தெரிஞ்சிக்க முடியாத பல விஷயங்களை நமக்கு எளிமையா சொல்லித்தர, இண்டர்வெல்'ல ஒரு பெரிய கேள்வியோட நம்மள விடுறாங்க.

அந்த கேள்விக்கு பதில் தேட முயற்சி செஞ்சி இருக்குறதுதான் இரண்டாம்பாதி.

Vinod Thirumeni

அடேங்கப்பா அபார வளர்ச்சி.....காசி தியேட்டர் ல கூட்டம் கூடுனது அசோக் பில்லர் வரைக்கும் ட்ராபிக் ஜாம்... #சிவகார்த்திகேயன்

Sathya RA

#வேலைக்காரன் - போராட்டக்காரன்

10 படம் நடிச்ச ஹீரோக்கு நிறைய தியேட்டரில் அதிகாலை 5 மணி ஸ்பெஷல் ஷோ. சிவகார்த்திகேயன் உண்மையிலயே உச்சத்தை தொட்டுள்ளார் என்பதை இது உணர்த்துகிறது. அதைத் தக்கவைக்க வேலைக்காரனாக இறங்கி போராடியிருக்கிறார் ..!
எடுத்துக்கிட்ட விஷயமும், கதையும் செம. மக்களுக்கு எளிதில் புரிய வைக்க கார்ப்பரேட் மார்க்கெட்டிங் பத்தின வசனங்கள் நிறைய வருகிறது. படமும் நீண்டுகொண்டே செல்கிறது; அதுவே விறுவிறுப்புக்குத் தடையாகவும் இருக்கிறது..!!

வேலைக்காரி @Ramhyyash

‘வேலைக்காரன்’ படம் பார்த்த பிறகு மன வேதனையடைந்தேன். எங்கள் நிறுவனத்தின் சிஇஓ என்ற முறையில் என் அதிகார வரம்பின் கீழ் நடக்கும் குற்றங்களை இனித் தட்டிக் கேட்பேன் #Velaikkaran

Danny‏ @Liben_Danny

வேலைக்காரன் படம் நல்ல சோஷியல் மெசேஜ் சொல்லி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பலமா அழுத்தமா சொல்லி இருக்கலாம். கத்தி மாதிரி படங்கள் பார்த்தப்போ மனசுல உண்டான ஒரு பாதிப்பு இந்த படத்துல வரல

சினிமாபுரம் @cinemapuram
நான் இனிமேல் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்னு SivaKartikeyan சொன்னப்போ- அப்போ புரியல... இப்போ புரியுது.

ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா‏ @UlaguOfficial

வேலைக்காரன் இரண்டாம் பாதி அரட்டை அரங்கம் மாதிரி போய்க்கிட்டு இருக்கு... பேச்ச கொறைங்கப்பு.

Ag Sivakumar

பெரிய பட்ஜெட், முன்னணி தொழில்நுட்பக்குழு, நயன்தாரா, மோகன் ராஜா என படை பரிவாரங்களுடன் களமிறங்கும் சிவா, வேலைக்காரனுக்கு காலை 5 மணிக்காட்சியை தியேட்டர்கள் ஒதுக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இனி ‘ரெமோ’ போன்ற விஷப்பரீட்சைகளில் ஈடுபடாமல் தனது பாணி நகைச்சுவை மற்றும்’ வேலைக்காரன்’, ‘எதிர்நீச்சல்’ போன்ற சீரியஸ் படங்கள் என மாற்றி மாற்றி ட்ராக் ஓட்டலாம்.

வங்கிகளின் வாராக் கடன்களை வசூலிக்காமல் மக்களின் டெபாசிட் தொகையை குறிவைக்கும் புதிய சட்டம்: தொழிற்சங்கத் தலைவர் தாமஸ் பிராங்கோ குற்றச்சாட்டு

ஓவியம்: சதீஷ் வெள்ளிநேழி 

நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2017-ம் ஆண்டின் நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுச் சட்ட மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொதுத்துறை வங்கிகளை நாசமாக்கும் ஆபத்து மிக்க இந்த மசோதா கைவிடப் பட வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் தற்போது தீவிர பிரச்சாரம் நடைபெறுகிறது. இவ்வாறு இந்த மசோதாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவர் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான தே.தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ். இந்த மசோதா தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்னிலையிலும் ஆஜராகி, மசோதா கைவிடப்பட வேண்டும் என்று வாதாடியிருக்கிறார் பிராங்கோ.
புதிய மசோதா பற்றி ‘தி இந்து’ சார்பில் அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து..
 
நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகைக்கான காப்பீட்டுச் சட்ட மசோதாவில் அப்படி என்ன ஆபத்து இருக்கிறது?
 
இந்திய பொதுத்துறை நிதி நிறுவனங்களைக் காக்க இதுவரை பெயில்-அவுட் என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வந்தது. இந்தக் கொள்கையின்படி எந்த பொதுத்துறை வங்கியும் திவாலாக, நமது அரசு அனுமதிக்காது. ஒரு வங்கி நலிவடைய நேர்ந்தால், அரசே நிதியுதவி செய்து வங்கியைக் காப்பாற்றும்; இல்லாவிட்டால், வேறொரு வங்கியுடன் இணைக்கப்படும். பாங்க் ஆப் தஞ்சாவூர், பாங்க் ஆப் தமிழ்நாடு, பாங்க் ஆப் கொச்சின் என இதுபோன்ற பல வங்கிகள் பிற பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டடுள்ளன. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கோ, வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அவர்களுக் கான வங்கி சேவை தொடர்ந்து கிடைத்தது.
தற்போதைய புதிய மசோதாவின்படி பெயில்-இன் முறை அமலுக்கு வரும். இனிமேல் நலிவடையும் நிலையில் உள்ள வங்கிகளுக்கு அரசு நிதியுதவி செய்யாது; அந்த வங்கி மேலும் நலிவடைந்து திவாலாக அனுமதிக்கப்படலாம். அந்த நிலையில், அந்த வங்கியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி புதிதாக அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம் முடிவு செய்யும். தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வேறு அமைப்புகளிடம் அந்த வங்கியின் நிர்வாகம் ஒப்படைக்கப்படும். பெரும்பாலும் தனியார் கைகளுக்குதான் அரசு வங்கி செல்லும். இந்த சூழலில் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு முழு தொகையும் கிடைக்காது. ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும். டெபாசிட் தொகையில் எத்தனை சதவீதம் திருப்பித் தரலாம் என்பதை தீர்வுக் கழகம்தான் தீர்மானிக்கும்.

டெபாசிட்டின் பெரும்பகுதி வங்கியின் முதலீடாக மாற்றப்பட்டு, அதற்கு ஈடான பங்குகள் டெபாசிட்தாரர்களுக்கு வழங்கப்படலாம். ஆக, திவாலாகும் நிலைக்குச் செல்லும் வங்கிகளுக்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு பதிலாக, வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை பயன்படுத்தப்படும். இதனால் இந்திய மக்களின் சேமிப்புத் தொகை அபகரிக்கப்படுவதோடு, வங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையும் அடியோடு அறுத்தெறியப்படும்.
தாமஸ் பிராங்கோ   -  thomas
இந்த மசோதா தொடர்பாக மக்களிடம் வேண்டுமென்றே சிலர் பீதி கிளப்புவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகிறாரே?
எங்கள் வாதம் கற்பனையானது அல்ல; வரைவு மசோதாவில் உள்ள ஷரத்துகளின் அடிப்படையிலேயே பேசுகிறோம். பெயில்-இன் முறை; வங்கிகள் திவாலாக அனுமதிக்கலாம்; வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையைக் கொண்டு வங்கியை நிர்வகிக்கலாம்; டெபாசிட் தொகை வாடிக்கையாளர்களுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பது உள்ளிட்ட பாதிப்புகள் மசோதாவின் ஷரத்துகளில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த ஷரத்துகளில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதையும், அதில் உள்ள ஆபத்துகளையும்தான் கூறுகிறோம். அதேபோல, குறிப்பிட்ட அந்த ஷரத்தில் அப்படி ஆபத்தான எந்த அம்சமும் இல்லை என்று நிதியமைச்சரும், மற்றவர்களும் விளக்க வேண்டும். ஆனால், ஆபத்து இல்லை என்று பொதுவாக மறுக்கிறார்களே தவிர, குறிப்பிட்ட ஆபத்தான ஷரத்துகள் பற்றி விளக்கம் தர அவர்கள் தயாராக இல்லை.

அச்சமூட்டும் ஷரத்துகள் பற்றி கூற முடியுமா? 

பெயில்-இன் முறை பற்றி மசோதாவின் 32-வது ஷரத்திலும், 4-வது அட்டவணையில் உள்ள 48-வது ஷரத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. நலிவடையும் வங்கிகளுக்கு நிதியுதவி அளித்து பாதுகாக்கத் தேவையில்லை என்றும், அத்தகைய வங்கிகளை திவாலாக விட்டுவிடலாம் என்பது பற்றியும் 13-வது ஷரத்தில் கூறப்பட்டுள்ளது. தீர்வுக் கழகத்தின் வானளாவிய அதிகாரம் பற்றியும், தீர்வுக் கழகத்தின் முடிவை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடுகூட செய்ய முடியாது என்பது பற்றியும் 65-வது ஷரத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஷரத்துகளில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் மற்றும் அவற்றின் ஆபத்துகள் பற்றித்தான் எங்களது அச்சத்தை, கவலையை வெளிப்படுத்துகிறோமே தவிர, கற்பனையாக நாங்கள் எதையும் கூறவில்லை.

ஒருவர் எவ்வளவு டெபாசிட் செய்தாலும், வங்கி திவாலானால் அவருக்கு ரூ.1 லட்சம் மட்டுமே திரும்பக் கிடைக்கும் என்றுதான் ஏற்கெனவே இருக்கும் சட்டத்திலேயே உள்ளது. அப்படியிருக்க, தற்போதைய மசோதாவால் என்ன ஆபத்து வரப்போகிறது? 

ஏற்கெனவே உள்ள சட்டத்தின்படி அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும் என்பது உண்மைதான். 1961-ம் ஆண்டில் வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகச் சட்டம் கொண்டுவந்தபோது, வங்கி திவாலானால் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருந்தது. பின்னர் இந்த காப்பீட்டுத் தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.1 லட்சம் என்ற அளவை எட்டியுள்ளது.

ஆனால், அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட 1961-ம் ஆண்டுமுதல், சில கூட்டுறவு வங்கிகள் தவிர, எந்த வங்கியையும் நமது அரசு திவாலாக விட்டதில்லை. மக்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழக்க நேரிட்டது இல்லை என்பதே உண்மை. டெபாசிட்தாரர்கள் இழப்பீடு கோராத காரணத்தால், வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தில் செலுத்தப்படும் பிரீமியம் தொகை வளர்ச்சியடைந்து அந்தக் காப்பீட்டுக் கழகம் தற்போது பெரும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. 

மக்களின் டெபாசிட் தொகைக்கு இதுவரை ஆபத்து வராதபோது, இனிமேல் எப்படி வரும்?
ஏற்கெனவே கூறியபடி, இதுநாள் வரை பெயில்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. எவ்வளவு பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எந்த வங்கியையும் திவாலாக விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை யாக இருந்தது. அதனால் வங்கிகளும் திவாலாகவில்லை; மக்களின் சேமிப்புக்கும் ஆபத்து வரவில்லை.

ஆனால் இப்போதைய மசோதா சட்டமானால், பெயில்-இன் முறை நடைமுறைக்கு வரும். இதன்படி, மிக லாபகரமாக இயங்கி வரக்கூடிய பாரத ஸ்டேட் வங்கி உட்பட எந்த பொதுத்துறை வங்கியையும் திவாலாக விடலாம்; அதில் அரசு தலையிடத் தேவையில்லை என அரசின் கொள்கையும், நிலைப்பாடும் மாறுகிறது. இதனால் ஏராளமான பொதுத்துறை வங்கிகள் நலிவடையும் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தனியார் கைகளுக்கு மாற்றப்படும். பொதுமக்களின் சேமிப்பு அபகரிக்கப்படும்.

கொடுத்த கடனைத் திருப்பி வசூலிக்காத வங்கிகள் மற்றும் அதனால் பல்லாயிரம் கோடியாகப் பெருகும் வாராக் கடன். இதை தடுத்து, வங்கி நிர்வாகத்தை செம்மைப்படுத்தவே இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் என்று கூறப்படுகிறதே?

வங்கி செயல்பாடுகள் பற்றியும், வாராக் கடன்கள் பற்றியும் ஒரு மாயத் தோற்றம் பலரது மனதில் உருவாக்கப்பட்டிருக்கிறது. வங்கி நிர்வாகம் என்றவுடனேயே மயிலாப்பூரிலோ, மணப்பாறையிலோ நாம் பார்க்கும் வங்கிக் கிளையும், அங்குள்ள மேலாளர்களும், கிளர்க்குகளும்தான் மக்களின் மனத்திரையில் தோன்றுகின்றனர். அவர்கள்தான் வங்கிப் பணத்தை கோடிக்கணக்கில் கடன் கொடுத்து, திரும்ப வசூலிக்காமல் வங்கிகளை நஷ்டப்படுத்துவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. நாம் பார்க்கும் இதுபோன்ற வங்கிகளுக்கு லட்சக்கணக்கிலோ அல்லது சில கோடிகள் வரை மட்டுமே கடன் கொடுக்கும் அதிகாரம் உள்ளது. அவ்வாறு ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் இவர்கள் கொடுக்கும் கடனில் 95 சதவீதத்துக்கும் மேல் திரும்ப வசூலித்து விடுகின்றனர்.

சாதாரண கிளைகளில் ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு, சிறுதொழில்புரிவோருக்கு, நடுத்தர வர்க்கத்தினருக்கு தொழில்புரியவும், வீடு கட்டவும், வாகனங்கள் வாங்கவும் கொடுக்கப்படும் கடன் தொகை திரும்ப வந்துவிடுகிறது. வங்கிகளின் இயக்குநர்கள், நிதியமைச்சக உயர் அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அவர்களது பரிந்துரையின்பேரில் பணக்கார தனியார் தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தான் திரும்ப வசூலிக்கப்படுவது இல்லை. அதனால்தான் வங்கிகளின் வாராக்கடன் இந்த அளவுக்கு பெருகியுள்ளது.

ரிசர்வ் வங்கியே வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மொத்த வாராக் கடனில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த கடன் தொகை மட்டும் 88.4 சதவீதம். மற்ற அனைத்து தரப்புகளிடம் இருந்து வெறும் 11.6 சதவீதம் மட்டுமே வரவேண்டியுள்ளது. ஆக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த பல்லாயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி வசூலிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு காணவே புதிய மசோதா என்பது வெறும் கண்துடைப்பான வாதம்.

அப்படியானால், மத்திய அரசு இத்தகைய முடிவுக்கு வர என்ன காரணம்? 

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அந்த நாட்டில் 452 வங்கிகள் திவாலாகின. அந்த வங்கிகளைக் காப்பாற்ற அமெரிக்க அரசால் முடியவில்லை. அதன் பிறகு, நலிவடையும் வங்கிகள் விவகாரத்தில் அரசு தலையிடுவதில்லை என்றும், அந்தந்த வங்கிகளே அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா முடிவெடுத்தது. இவ்வாறு நலிவடையும் வங்கிகளை தனியார் கைகளுக்கு மாற்றுவதற்காக ஒரு வாரியமும் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி ஜி-7 நாடுகள் அனைத்தும் இந்த வாரியத்தில் உறுப்பினராகி, தங்கள் நாடுகளில் இந்த கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கின.

வங்கிகள் அனைத்தையும் தனியார்மயமாக்க வேண்டும் என்ற கொள்கைகளைக் கொண்ட உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளும் பின்னர் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. அதன் பிறகு இந்தியா உள்ளிட்ட ஜி-20 நாடுகளும் உறுப்பினர்கள் ஆனார்கள். அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தனியார் வசம் மாற்றும் நோக்கில் தற்போது இந்த புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் கோஷமிடும் திரிணமூல் எம்.பி.க்கள்.
 ‘பிரதமர் மோடி எந்த சீர்திருத்த நடவடிக்கை எடுத்தாலும், அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு பிரச்சாரம் நடக்கிறது. அந்த பிரச்சாரங்களை மக்கள் ஏற்காததாலேயே, அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிறது’ என்று கூறப்படுவது பற்றி..

தேர்தல்களில் பெறும் வெற்றிகளால் மட்டுமே, பணமதிப்பு நீக்கம் போன்ற தவறான பொருளாதார நடவடிக்கைகளுக்கு மக்கள் நற்சான்று வழங்கிவிட்டதாகக் கூற முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளின் பாதிப்புகள் மக்களுக்கு முழுமையாக தெரியவர இன்னும் அவகாசம் தேவைப்படலாம். பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகளைவிட, தற்போதைய நிதித் தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீட்டுச் சட்ட மசோதா மக்களிடம் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

வங்கிகளில் சேமிப்பு வைத்திருப்பவர்களில் மிகப் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர். தாங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்த தொகைக்கு ஆபத்து என்றால் அதை நடுத்தர வர்க்கத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எஸ்பிஐ உட்பட பல வங்கிகளில் உள்ள தங்கள் டெபாசிட் தொகையை மக்கள் இப்போதே வேகமாக எடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆகவே, பிற பொருளாதார நடவடிக்கைகள் போல, இந்த மசோதாவை அவ்வளவு எளிதில் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்தி விட முடியாது. மக்களிடம் எழும் பெரும் எதிர்ப்பின் காரணமாக இந்த மசோதா நிச்சயம் கைவிடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

புதிய மசோதாவால் என்ன ஆபத்து?

வெளிப்படைத்தன்மை இல்லாத, உள்நோக்கம் கொண்ட மசோதா இது. தற்போது உள்ள சட்டத்தின்படி வங்கிகளை திவாலாக விடுவதும், அத்தகைய நிலை ஏற்பட்டால் தனியார்வசம் அந்த வங்கியை ஒப்படைப்பது என்பதும் எளிதானது அல்ல. தனியாருக்கு கொடுக்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, ஒப்புதல் பெற வேண்டும்.
ஆனால், தற்போதைய மசோதாவின்படி அமைக்கப்படவுள்ள தீர்வுக் கழகம், நலிவடையும் வங்கியை தனியாரிடமோ, மற்றவர்களிடமோ ஒப்படைத்துவிட்டு, அந்த தகவலை மட்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவித்தால் போதும். மேலும், வங்கிகளை திவாலாக அனுமதிக்கலாம் என்று கூறுவதன் மூலம், லாபத்தில் இயங்கும் வங்கிகளின் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெருமளவில் கடனாகக் கொடுத்துவிட்டு, அதை முறையாக வசூலிக்காமல், வாராக் கடன் அளவைப் பெருக்கி, வங்கியை நஷ்டப்படுத்தி, இறுதியாக தனியார் கார்ப்பரேட் வசம், வங்கி நிர்வாகத்தை ஒப்படைத்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதுதான் எங்கள் பிரதான குற்றச்சாட்டு.

இனி இரவுகள் நனையாது!

சமீபத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரிடம் ‘என்ன காரணத்துக்காக மருத்துவரைப் பார்க்க வந்துள்ளீர்கள்’ என்று கேட்டதற்குப் பதில் சொல்ல மிகவும் கூச்சப்பட்டார். அவரது தாய்தான், தனது மகள் இன்னும் தினசரி தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதாகவும், அதனால் சிறுவயதிலிருந்தே ஒரு நாள் இரவுகூட உறவினர்கள் வீட்டில் தங்குவதில்லை என்றும் கூறினார்.
ஆம்னி பேருந்தில் இரவில் பயணிக்கும்போது இயற்கை உபாதைகளுக்காக பேருந்தை நிறுத்தச் சொல்லவே கூச்சப்படும் இந்தச் சமூகத்தில், தினமும் படுக்கையை நனைப்பது, அந்தப் பதின்பருவச் சிறுமியை எவ்வளவு தூரம் பாதித்திருக்கும்?

தூக்கம் தொடர்பான பிரச்சினை

தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நோய்க்கு ‘நாக்டியூர்னல் எனுரசிஸ்’ (Nocturnal Enuresis) என்று பெயர். நமக்குச் சாதகமாகவே நாம் காரணங்களைக் கூறிக்கொண்டு நாட்களைக் கடத்தும் நோய் வகைகளில் இதுவும் ஒன்று. ஏனென்றால், ‘தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது குழந்தைகளுக்கு இயல்பான ஒன்றுதான், போகப்போகச் சரியாகிவிடும்’ என்று உறவினர்களோ, ‘உங்கப்பனுக்கே பதினாறு வயசு வரைக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது’ என்று பாட்டிமார்களோ கூறிவிடுவார்கள்.

பயப்படும் அளவுக்கு, இது சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக தூக்கத்தின் போது ‘என்.ஆர்.இ.எம்’ (நான் ரேப்பிட் ஐ மூவ்மெண்ட் – NREM) என்னும் தூக்க நிலையில் ஏற்படும் பிரச்சினையாகும்.

வயது வரம்பு உண்டா?

குழந்தைகள் பிறந்ததிலிருந்து தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது இயல்புதான். பெரும்பாலான குழந்தைகளுக்கு 5 வயதுக்குள் தூக்கத்தின்போதும் சிறுநீர் பையானது மூளையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். சில குழந்தைகள் 5 வயதாகியும் அவ்வப்போது சிறுநீர் கழிப்பதுகூட சாதாரணமான ஒன்றுதான்.

ஆனால் ஒரு குழந்தை 5 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம், பல மாதங்களாகத் தூக்கத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டே இருக்கிறது என்றால் அது நிச்சயமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதற்கு நரம்பு மற்றும் மனநல ரீதியான காரணங்கள் இருக்கலாம். சில குழந்தைகள் சிறுநீர்க் கழிப்பதில் கட்டுப்பாடு பெற்ற பின்பும், சில வருடங்கள் கழித்துகூட மீண்டும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்குப் பெரும்பாலும் மனநல ரீதியான காரணங்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.

என்ன பாதிப்பு?

எளிதில் குணப்படுத்தக்கூடிய இந்த நோயைக் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று விட்டுவிட்டால், குழந்தைகள் இதனாலேயே மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். 8 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் பிறரால் கேலி செய்யப்படுதல், அவமான உணர்வு போன்றவற்றால் மன அழுத்தத்துக்கும், தன்னம்பிக்கை இழப்புக்கும் ஆளாகலாம். எனவே இதன் பாதிப்புகளைக் குழந்தைகள் உணர்வதற்கு முன்பே சிகிச்சை செய்து குணப்படுத்திவிடுவது நல்லது.

பெரும்பாலான குழந்தைகள் தூங்க ஆரம்பித்த முதல் ஓரிரு மணி நேரத்துக்குள்ளாகவே சிறுநீர்க் கழித்துவிடுவார்கள். இதனுடன் சேர்த்து தூக்கத்தில் பேசுவது, அலறுவது, நடப்பது போன்ற மற்ற தூக்க வியாதிகளும் சிலருக்குச் சேர்ந்து காணப்படலாம்.

என்ன சிகிச்சை?

மனநலம் அல்லது உடல் சார்ந்த பிரச்சினைகளால் இந்த நோய் ஏற்படலாம் (பார்க்க பெட்டிச் செய்தி). ஆக, முதலில் என்ன காரணம் என்று கண்டறியப்பட்டு அது சரி செய்யப்பட வேண்டும். குழந்தைகள் தூங்கச் செல்லும் முன் தண்ணீர் அருந்துவதைக் குறைப்பது மற்றும் படுக்கைக்குச் செல்லும்முன் மற்றும் தூங்கியபின் ஒரு மணி நேரம் கழித்து எழுப்பி சிறுநீர்க் கழிக்கச் சொல்வது சிலருக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

சமீபத்தில் 45 வயது பெண் ஒருவர் பிறந்ததிலிருந்து இந்த பாதிப்புக்குள்ளாகித் தற்போதுதான் முதன்முதலில் சிகிச்சைக்கு வந்திருந்தார். மாத்திரை எடுத்துக்கொண்டு, முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்பு ‘இந்த அரை மாத்திரையை முன்பே சாப்பிட்டிருந்தால் என் அரை ஆயுட்காலத்தில் இத்தனை அவமானங்களைச் சந்தித்ததைத் தவிர்த்திருப்பேனே’ என ஆதங்கப்பட்டார். சிறுவயதில் ஏற்படும் பாதிப்பு பெரியவர்களாகும் வரை தொடர வாய்ப்புள்ளதால் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாத்திரைகள் 80 சதவீதம்வரை நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். இத்தனை எளிதாகச் சரிசெய்யக்கூடிய பிரச்சினையை, காலம் தாழ்த்துவதால் மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாது!
காரணங்கள்
மனநலப் பிரச்சினைகள்
திடீரென்று பெற்றோர்களைப் பிரிவது அல்லது இழப்பது
தம்பி / தங்கையின் பிறப்புக்குப் பின்பு, தான் சரிவர கவனிக்கப்படவில்லை என்ற ஏக்கம்
பள்ளி சார்ந்த பிரச்சினைகள்
மன அழுத்தம் / பதற்ற நோய்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது
பெற்றோரிடையே அடிக்கடி ஏற்படும் குடும்ப வன்முறைகளைப் பார்த்து வளர்தல்
அதீதக் கண்டிப்பு அல்லது செல்லம்
மனவளர்ச்சி குறைபாடு மற்றும் அதீத துறுதுறுப்புள்ள குழந்தைகள்
உடல் சார்ந்த பிரச்சினைகள்
சிறுநீர்க் கிருமித் தொற்றுகள்
தண்டுவட நரம்புப் பிரச்சினை
சிறுநீரக மண்டலத்தில் உள்ள பிறவிக் குறைபாடுகள்
வலிப்பு நோய்
நீரிழிவு நோய்
கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

'என்னை மடக்க நீ டிராபிக் போலீஸா?'- வாகனச் சோதனையில் பிடித்த காவலருக்கு அறைவிட்ட இளைஞர் கைது



போலீஸை பொதுவெளியில் அறையும் இளைஞர்   -  படம் சிறப்பு ஏற்பாடு
ஜாபர்கான் பேட்டையில் பட்டப்பகலில் வாகனச் சோதனையில் மடக்கிய போலீஸை பளார் என்று அறைவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிண்டி அடுத்த ஜாபர்கான்பேட்டை பாரி நகரில் இன்று காலை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். வேகமாக வந்த அவர்களை குமரன் நகர் போலீஸ் மகேஸ்வரன் பிள்ளை என்பவர் தடுத்தார். அவரை தட்டிவிட்டுச் சென்றவர்களை மகேஷ்வரன் மடக்கிப் பிடித்தார். வண்டியின் சாவியை எடுத்தார், இதைப் பார்த்து ஆத்திரமடைந்த இருசக்கர வாகனத்தை  ஓட்டி வந்த மணிகண்டன் என்ற இளைஞர் காவல்ர் மகேஷ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பொதுவெளியில் அவரை தரக்குறைவாக பேசி, ''மோட்டார் பைக்கைப்  பிடிக்க உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது. நீ என்ன டிராபிக் போலீஸா'' என்று கேட்டு அவரது சட்டையைப் பிடித்து எதிர்பாராத நேரத்தில் பளார் என்று கன்னத்தில் அறைந்தார்.

கன்னத்தில் விழுந்த அறையால் நிலைகுலைந்து கீழே விழப்போன மகேஷவரன் சுதாரித்துக்கொண்டு நின்றார். போலீஸைத் தாக்கிய இளைஞரை பொதுமக்கள் தடுத்து விலக்கிவிட்டனர்.

ஆனாலும், ''உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தது. நீ டிராபிக் போலீஸா, என்னை என்ன செய்வாய், மிஞ்சிப் போனால் பெட்டி கேஸ் போடுவாய் அவ்வளவுதானே''  என்று தாக்கமுயன்றார். அவரை நண்பர்கள் மடக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் மகேஷ்வரன் அவரை விடுவதாக இல்லை அவர் பின்னாலேயே சென்றார். அப்போது ''பின்னலேயே வந்தால் மீண்டும் நாலு உதை வாங்கப் போகிறாய்''என்று மணிகண்டன் மிரட்டினார்.
பொதுவெளியில் காவலரை இளைஞர் ஒருவர் தாக்கும் காட்சியைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூட்டத்தில் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காவல்பணியில் இருந்த போலீஸை பொதுவெளியில் தாக்கி தரக்குறைவாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததாக இளைஞர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
வேளச்சேரி தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் (21) மடிப்பாக்கம்  ஈஸ்வரன் தெருவைச் சேர்ந்தவர். இவர் மீது 294 (b), 352, 506 (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்
1,76,000,00,00,000 ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!

Published : 23 Dec 2017 08:14 IST

சமஸ்



1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.

அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.

அலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது. ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.

இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர் (உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் திருந்தியவன்).

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது!

ஊதிப் பெருக்கப்பட்ட எண்!

இந்த மாய எண்ணின் சூத்திரதாரியான தலைமைக் கணக்காயர் வினோத் ராய் தன்னுடைய அறிக்கையில், ‘2008 இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு’ என்று குறிப்பிட்ட தொகையிலேயே நான்கு விதமான அனுமானங்கள் இருந்தன. ரூ.67,364 கோடி, ரூ.57,666 கோடி, ரூ. 69,626 கோடி, ரூ.1.76 லட்சம் கோடி என்று நான்கு அனுமானத் தொகைகளை அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, மத்தியப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை, ‘ரூ.35,000 கோடி இழப்பு’ என்றது. அதற்கு முன்பாக விசாரித்த மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, ‘ரூ.22,000 கோடி’ என்றது. ஆக, இழப்பு மதிப்பு என்று ஒன்றுக்கு ஒன்று முரணாக ஏகப்பட்ட எண்கள்.

இதில் ‘இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு’ என்ற அனுமானத்துக்கான அடிப்படையாக வினோத் ராய் முன்வைத்தது, 2010-ல் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தின்போது அரசுக்குக் கிடைத்த ரூ. 1 லட்சம் கோடி தொகையுடனான ஒப்பீடு! ஏனென்றால், 2008-ல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது அரசுக்கு ரூ.10,772 கோடி மட்டுமே கிடைத்தது; அது மிகக் குறைவானது என்றார் வினோத் ராய். இந்த அடிப்படையிலேயே ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்துசெய்துவிட்டு, ஏலம் நடத்த 2012-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஏலம் போகும் என்று பேசியவர்களை எனக்குத் தெரியும். அரசாங்கம் ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ரூ.9407 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ஆக, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பது ஊதிப்பெருக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பது அப்போதே அப்பட்டமாகிவிட்டது.

பின்னாளில் இதுகுறித்து ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார் வினோத் ராய். “நிச்சயமாக, ரூ.1.76 லட்சம் கோடி என்பது மிகைப்படுத்தப்பட்ட மதிப்புதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பரபரப்புக்குள்ளாக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தின் மீது கவனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று தனது சுயசரிதையில் எழுதினார். மேலும், “அவ்வளவு பெரிய தொகை என்பதாலேயே பொதுக் கணக்குக் குழு அதை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டது” என்றும் ஒரு பேட்டியில் சொன்னார். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் இப்படி மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்களைச் சொல்லியிருக்கிறார் வினோத் ராய். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முதலில், ‘ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு’ என்றவர் பிறகு ‘ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு’ என்றார்.

அடிப்படையில், நாட்டின் தலைமைக் கணக்காயர் என்ற பதவியை, கணக்காயம் எனும் அமைப்பையே கேலிக்கூத்தாக்கிவிட்டார் வினோத் ராய். அதன் மீதான நம்பகத்தன்மையை நாசமாக்கிவிட்டார். அவரால் விளைந்த ஒரே நன்மை என்றால், நம்பகத்தன்மை மிக்க ஒரு அதிகாரப் பீடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சொன்னால், - அவர் என்ன சொன்னாலும் - அதைக் கேட்டுக்கொள்ளும் சூழலில்தான் இந்நாட்டின் அத்தனை அமைப்புகளும் இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது மட்டும்தான்! இது எத்தகைய விளைவை உண்டாக்கியிருக்கிறது என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

எல்லா நீதிகளையும் வீட்டுக்கு அனுப்பிய ஊழல் விவாதம்!

உண்மையில், சமகால இந்திய அரசியலின் உரையாடல் போக்கையே வினோத் ராயின் மாய எண் பெரிய அளவில் மாற்றியமைத்துவிட்டது. சமூக நீதி, மதச்சார்பின்மை, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் இப்படிக் கடந்த நூறாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அரங்கின் பிரதான தளத்துக்கு மேலேறிவந்த எல்லா ஜனநாயக விழுமியங்களையும் வினோத் ராயின் மாய எண் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்திய அரசியல் விவாத களத்தின் ஆக முக்கியமான கதையாடலாக ஊழலை அது உருவாக்கியது. அரசியலை அளவிடுவதற்கான உச்ச மதிப்பீட்டுக் கருவியாக ஊழலை அது கட்டமைத்தது.

விளைவாக, இந்நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல சக்திகள் பின்தள்ளப்பட்டன. புதிய அரசியல் அலைக்கற்றை ஒன்று உருவானது. ‘ஊழல் ஒழிப்பு’ என்ற பெயரில் உருவெடுத்த அந்த அலைக்கற்றையானது தூய்மைவாதத்தோடும் தேசியத்தோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டது. தேசியத்தின் வண்ணத்தில் ஊழல் எதிர்ப்பைப் பேசும், ஊழல் எதிர்ப்பின் பெயரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் புதிய தேசியவாதிகளை மையம் நோக்கி அது நகர்த்தியது. ஒரு அண்ணா ஹசாரே அதன் துணை விளைவு, ஒரு அர்விந்த் கெஜ்ரிவால் அதன் துணை விளைவு, ஒரு பாபா ராம்தேவ் அதன் துணை விளைவு, ஒரு மோடி அதன் துணை விளைவு!

இந்தப் புதிய அரசியல் அலைக்கற்றையானது ஊழலை முன்னிறுத்தி ஏனைய எல்லா நியாயங்களையும் அழித்ததோடு, கடைசியில் அது எதை நியாயமாகப் பேசியதோ அந்த ஊழல் எதிர்ப்பிலும் ஓட்டை போட்டதுதான் மாய எண் ஏற்படுத்திய உச்ச சேதாரம்!

சில மாதங்களுக்கு முன்பு தமிழின் முன்னணிப் புலனாய்வு வார இதழ்களில் ஒன்றான ‘நக்கீரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோபாலுடன் ஊடகங்களின் சமகாலப் போக்கு தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம் இந்தக் கட்டுரையோடு பொருந்தக் கூடியது என்று நினைக்கிறேன். “முன்பெல்லாம் புலனாய்வு இதழ்களில் உள்ளூர் அளவில் அடிக்கடி லஞ்சம், ஊழல்களை அம்பலப்படுத்தும் செய்திகளைக் காண முடியும். இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதே என்ன காரணம்?” என்று கேட்டேன். நாடு முழுக்கவுமே இப்படி ஒரு போக்கு இருக்கிறது என்றவர் அதை விளக்கினார். “லஞ்ச ஊழல் விஷயங்களை ரொம்ப சிரமப்பட்டுதான் வெளிக்கொண்டு வர்றோம். ஆனா, அதுக்கு உரிய கவனம் இன்னைக்கு மக்கள் மத்தியில இல்லை. முன்னாடிலாம் ஒரு பத்தாயிரம் ரூபா ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டார்னு செய்தி போட்டாக்கூட அவ்வளவு பரபரப்பா பேசுவாங்க. நடவடிக்கை இருக்கும். படிக்குறவங்க நம்ம வேலை பண்ணுற இடத்துல இப்படித் தப்பு நடந்தாலும் அதை வெளியே கொண்டுவரணும்னு தோணுதுங்கன்னு சொல்லிப் பேசுவாங்க. இப்போ அதெல்லாமே மாறிட்டு. ஒரு அதிகாரி கோடி ரூபாயை லஞ்சமா வாங்குறார்னு படத்தோடு போட்டாலும் அதுக்கு எந்தக் கவனமும் இல்லை. இதெல்லாம் ஒரு காசா, குத்தமான்னு ஒரு மனோபாவம் உருவாகிடுச்சு. ஒரு அமைப்புக்குள்ள இருக்குற ஆட்கள் தப்பைப் பொறுத்துக்க முடியாம தகவல் கொடுக்குறப்போதான் பத்திரிகைகள் உள்ளே நுழையுறோம். இப்போ அதுவே குறைஞ்சுடுச்சு!”

நேற்றைக்கு ஆயிரம் லஞ்சங்களுக்கே பதற்றமான மக்களுக்கு ஏன் கோடி ஊழல்கள் இன்று சாதாரணம் ஆகிவிட்டன? நாடு செழித்து, சாமானியர்கள் கைகளிலும் கோடிகள் மலிந்துவிட்டதா?

வெவ்வேறு தருணங்களில் நானே பலர் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ஏன் சார், ஒண்ணேமுக்கா லட்சம் கோடிக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா?”

ஆம், அலைக்கற்றை விவகாரம் ஊழல் விஷயத்தில் பொதுபுத்தியைக் கூர்மையாக்கவில்லை; மழுங்கடித்துவிட்டது. அலைக்கற்றை விவகாரம் பற்றியெரிந்த நாட்களில் என்னுடைய சகா ஒருவர் சொன்னார், “பொதுவாக, நம் நாட்டில் ஒரு திட்டத்தில் லஞ்சம், ஊழலுக்கான சாத்தியம் என்பது 10% முதல் 30% வரை. அப்படியென்றால், இங்கே ஊழல் நடந்ததாகக் கொண்டாலும், அதிகபட்சம் எவ்வளவு பணம் கை மாறியிருக்கும்? அதிகபட்சம் சில ஆயிரம் கோடிகள்! ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் வாயிலாக, நாளைக்கு ரூ.10,000 கோடியை ஒருவர் லஞ்சமாகப் பெற்றார் என்றால்கூட அதை ஒரு விஷயமாக மக்கள் கருத முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்!”

அப்படித்தான் ஆகிவிட்டது. இந்திய அரசியல் வர்க்கமானது வினோத் ராய் அனுமானமாக ‘இழப்பு’ என்று குறிப்பிட்ட ரூ.1.76 லட்சம் கோடியை ‘ஊழல்’ என்று மொழிபெயர்த்து, மக்கள் மனதில் வெற்றிகரமாக அதைப் பதித்தும்விட்டது. இன்று ஒரு லட்சம் கோடியை ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ பணமாக வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் மக்களுக்கு அது பெரிய விஷயம் அல்ல. சாத்தியமே இல்லாத ஒரு மாய எண்ணின் பெயரால் ஊழலுக்கான சொரணையையே மக்களிடம் மழுங்கடித்துவிட்டோம். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஊழல் நடந்ததா, இல்லையா; குற்றம் நிரூபிக்கப்பட்டதா, இல்லையா என்பதல்ல; ஒரு மாய எண்ணிடம் ஒரு தேசமே தோற்றுவிட்டது என்பதுதான் பிரதான பிரச்சினை!

- சமஸ்,

தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

Exam scam: case against 156 accused

Action follows complaint by TRB

The Central Crime Branch of the Chennai City Police has registered case against 156 persons, including candidates, officials and a Delhi-based private company, for allegedly committing fraud in the results of an examination conducted by the Teachers’ Recruitment Board(TRB) for recruitment of lecturers to government polytechnics.

Police sources confirmed that the case was booked following a complaint given by the TRB. The case is under investigation. The board advertised in July to fill 1,058 posts of lecturers in engineering and non-engineering subjects and around 1.7 lakh applied. Of this, 1.33 lakh candidates took the test.
The recruitment has been mired in controversy as petitions were filed in the court regarding permitting non-Tamil speaking candidates, errors in question papers and arbitrary award of grace marks for the same. The court directed the Board to resolve the issues before appointing candidates.
The release of OMR (optical mark reader) sheets of the test for direct recruitment of polytechnic lecturers on the Teachers Recruitment Board website has raised doubts about the process.
The TRB announced last week that the scanned copies of the OMR sheets for results of the written examination held in September were made available in the public domain following representations from candidates. They could submit representations till December 18.
Anna University opens study centre in Guindy
Special Correspondent
CHENNAI, December 24, 2017 00:00 IST



It will take classes for 240 pre-final year students

Anna University on Saturday commissioned a study centre for coaching students for engineering examinations.

The Indian Engineering Services Examinations Study Centre at the College of Engineering Guindy was a budget announcement in August 2016 by the then Chief Minister Jayalalithaa.

“The study centre will conduct coaching classes for 240 pre-final year students from government, aided and university-affiliated colleges in civil, mechanical, electrical and electronics and telecommunication engineering, free of cost,” said S. Ganesan, registrar in-charge, who commissioned the centre. Classes will be held on holidays and handled by the university faculty besides in-service and retired IES officials.

The Registrar said although the graduate enrolment ratio in the State was higher than the national average, very few qualified for Civil Services or engineering services, Mr. Gabesan added.

Dean T.V Geetha said any candidate could perform well in such exams if they were committed.

The coordinators of the study centre are S. Balasivanandha Prabu, S. Karthikeyan, K. Rathnakannan and O. Uma Maheswari.
SWAMINOMICS

Bigger than the 2G scam is the justice sham

SWAMINATHAN S ANKLESARIA AIYAR

India has many crimes but no criminals. That one-liner is only a slight exaggeration of the outcome so far in the 2G case, and other cases against politicians.

In 2012, the Supreme Court held in a public interest suit that the issue of 122 telecom 2G licences in 2008 was “arbitrary and unconstitutional”; that telecom minister Raja “virtually gifted away natural resources”; and that Raja’s First Come First Served procedure was grossly distorted to favour a few. The Supreme Court cancelled all 122 licences and levied stiff fines totaling Rs 17 crore on seven licencees.

But now the lower CBI court headed by Justice Saini has held there was no crime at all, and acquitted all 17 accused. The evidence before the two courts was much the same, yet the verdicts are poles apart. What sort of justice system do we have?

Justice Saini has flayed the shoddiness of the CBI investigation, the public prosecutor and (implicitly) the Supreme Court judgment. His own verdict has been flayed as shoddy by legal experts like Prashant Bhushan. So much for the quality of our police-judicial system, which rarely catches and convicts influential persons beyond all appeals. When law-breaking carries so little risk, no wonder corruption is rife.

The Congress and DMK are celebrating Saini’s verdict as proof of their innocence, claiming they have been victims of a smear campaign by the BJP and media. Sorry, but this case is going to be appealed in the High Court and later the Supreme Court. Will the Supreme Court ultimately agree with Justice Saini that there was no crime, or reiterate its original finding that a massive crime occurred? I rate the chances of the Supreme Court ultimately convicting Raja and others as over 80%.

Many political analysts say the Saini verdict opens the way for a BJP-DMK alliance in Tamil Nadu. Modi should publicly rule that out immediately. It will seriously tarnish his Mr Clean image. Voters know how shoddy and incompetent the police-judicial system is, and will certainly not conclude, on the basis of a single verdict, that the Congress is an uncorrupt victim rather than a corrupt perpetrator. Modi should back the original Supreme Court verdict, and fight to the finish.

Did the Comptroller and Auditor General (CAG) exaggerate grossly in claiming that the exchequer lost Rs 176 lakh crore by not auctioning 2G spectrum? Yes indeed. The CAG used as a benchmark the bids for artificially scarce 3G spectrum. The actual prices obtained when 2G spectrum was auctioned were far lower. Besides, as former RBI governor Subbarao testified, every government has to make a trade-off between welfare maximization and revenue maximization. He said the relatively low spectrum rate fixed by Raja was a “revenue sacrifice” to keep telecom prices low, not a “revenue loss.”

Yet the key issue is not how much revenue was lost, but whether the procedure was fair and uncorrupt. The Supreme Court earlier said no. Justice Saini now says yes. The Supreme Court will, however, have the last word.

Many courts the world over have taken the stand that to prove corruption, a quid pro quo must be established between money paid and a favour granted. Such evidence is hard to find. In this case, investigative agencies traced a flow of money from Swan Telecom to Kalaignar TV (owned by DMK leader Kanimozhi) through several intermediaries, and said this represented a bribe. But Justice Saini said there was no crime, and hence no flow of money could be criminal. I greatly doubt that this will be upheld by higher courts on appeal.

Forget this case. Why does India have such a lousy police-judicial system that takes forever and convicts so few? Because there is no push at all for reform. All political parties seem to prefer a weak system (which convicts very few) over a strong system that would convict members of every party. Sadly, every party has skeletons in its cupboard.

Remember the Jain hawala case, where the Jain diaries showed pay-offs to politicians of all parties? The government tried to mothball the case, with no objections from the Opposition. But following a public interest suit, an enraged Supreme Court ordered a CBI investigation. Alas, all the accused politicians were exonerated. The amicus curiae in that case, Anil Divan, said that a deliberately weak prosecution had thwarted convictions. Conspiracy theorists speculate that something similar may have happened in the 2G case.

Our police-justice system needs a complete overhaul. Right now it yields neither speed nor justice, just shoddiness. That is a scam much bigger than the 2G scam.



HOLD THE PARTY: The Congress and DMK are celebrating but the case is going to be appealed in higher courts


Bhopal gang rape: Life sentence to accused

TIMES NEWS NETWORK

Bhopal: The court of additional district and sessions judge Savita Dubey on Saturday sentenced all the four accused in the Habibganj gang rape case to imprisonment for life till death. She also fined the accused ₹60,000 under various sections of the IPC, which would be utilised for rehabilitation of the victim.

In her 55-page verdict, the judge praised the rape survivor for bravely facing the circumstances despite the fact that police didn’t even register her FIR. “Despite this, the rape survivor and her parents continued their fight that the guilty have been brought to book”, said the judge.

The court said that evidence produced in the case makes it clear that the four accused had gang-raped her. Such an act is not only heinous in nature, but an incident like this at a tender age could lead to psychological disorders in the survivor. It also creates fear among parents, which hampers growth prospects of the girl child. The psychological and social repercussions of an act like this on the survivor and her family leaves no room for any generosity towards the accused”, the judge said.

The accused Golu Bihari, Amar, alias Guntu, Rajesh, alias Raju and Ramesh Mehra had been charged under Section 341, 354, 342, 323, 376 (d), 376 -2 (m) (n) and 307 for illegal confinement, gang rape and attempt to murder. The court sentenced the accused to life imprisonment under provisions contained in section 376 (d) and 376-2(m),(n).

Forensic evidence sealed the case

Forensic experts played a vital role in sealing the gang rape case for the prosecution. Prosecution lawyers said that DNA finger printing of the accused proved that they have had bodily contact with the complainant, soil testing proved that soil found on their body or stuck in their footwear was the same as found at the site where the incident had taken place and diatom test proved that water which went into their body during the act was the same as that of the nullah by the side of which the rape had taken place proved beyond doubt that they were guilty. TNN
Health insurance premium hike hits elderly 

As Firms Raised Rates In Tandem, Pensioners Left With No Alternatives But To Pay Nearly Double

Rema Nagarajan & Rachel Chitra TNN

This month, Kolkatabased Mr Soubito Banerjee and his wife, who are in their 70s, saw their medical insurance premium almost double from ₹32,000 to ₹63,000. Chennaibased Annathai Gopalakrishnan, 68, will pay ₹58,000, up from ₹29,000. In general, a health insurance cover of just ₹5 lakh for a 65-year-old couple now costs ₹84,000 per annum, as against ₹54,000 five years ago.

For many senior citizens living on a pension, the increase is stiff. At their age they cannot switch to another insurer, and a switch is pointless because the companies have raised rates in tandem.

One big reason for the increase is the withdrawal of the 15% discount on the premium for no claims. There was also a family discount of 10%, available to at least two members seeking cover. Together, that accounted for a significant 25% discount on the premium. These discounts were stopped by insurance companies last year after IRDA ruled in 2013 that those who had made a claim could not be charged higher premiums.

Though the discounts have been withdrawn for everyone, seniors take a larger hit because premiums rise with age. “My client has been paying insurance premium for more than 30 years. He used to be careful, paying small hospital bills from his own pocket to maintain the no-claim status,” a health insurance agent told TOI. That strategy will no longer work.

G Srinivasan, CMD of New India Assurance Company, says insurers face losses of 300% in the senior citizen category.

“The primary cause is medical inflation. Hospitals have no regulator, but we do. We are forced to increase prices for our viability.”

“Another reason is that IRDA allows us to increase prices only once every three years. Our last price revision was in 2012,” added Srinivasan, “we’d still be making losses in this (senior citizen) portfolio. We’d have to increase the prices even more drastically if we want to break even.”

V R Sehgal (name changed) is a worried man. The 57-year-old currently pays ₹43,500 per annum for the ₹5-lakh health cover he bought for himself and his wife 25 years ago. After retirement when his income will fall to about ₹20,000 per month, he will need to pay about ₹60,000 per annum till the age of 65, and more than ₹84,000 afterwards.

Data from Insurance Regulatory and Development Authority (IRDA) shows group health insurance provided to businesses is the most expensive segment for insurers (see graphic). Corporate employees’ claims actually amount to more than what they pay as premiums while individual insurance payers claim the least. In effect, individual policyholders are subsidising corporate — and to a lesser extent government — group insurance schemes. Yet, group businesses continue to get discounted premiums.

IRDA’s annual report for 2015-16 shows the net corporate insurance claims ratio (ICR — lower is better for insurer) in health insurance steadily rose from 100% in 2011-12 to 120% in 2015-16. The net ICR for individual insurance declined from 85% to 77% in the same period, before the price increase and the stoppage of discounts. The ratio for individuals now is likely to be even lower.



ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...