Sunday, December 24, 2017

இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது: தினகரன்

Published : 24 Dec 2017 19:12 IST
சென்னை




டிடிவி தினகரன்

என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார்.இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடமிருந்து பெற்றார் டிடிவி தினகரன்.

அதற்குப் பிறகு சென்னை ராணிமேரி கல்லூரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வெற்றி பெறக் காரணமாக இருந்த தொண்டர்களுக்கும், எனக்காக வாக்களித்தவர்களுக்கும் நன்றி. ஜெயலலிதாவின் ஆதரவு பெற்ற என்னை ஆர்.கே.நகர் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். ஆர்.கே.நகர் மக்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் தொடருவேன்.ஜெயலலிதா வீடியோவுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீடியோ வெளியிட்டது தொடர்பாக வெற்றிவேலைக் கண்டித்தேன்.

அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் ஆர்.கே.நகரில் தொடங்கும் என்று ஏற்கெனவே சொன்னேன். அது நடந்திருக்கிறது.

காவல்துறை ஏவல்துறையாக நடக்கக் கூடாது. நடுநிலையுடன் செயல்பட வேண்டும். எனது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

என்னைத் தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார்.இன்னும் இரண்டு மாதம் கூட இந்த ஆட்சி நீடிக்காது'' என்று தினகரன் கூறினார்.

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...