Saturday, December 30, 2017

திருமலையில் கூட்ட நெரிசல் : பக்தர்கள் 10 பேர் காயம்

Added : டிச 30, 2017 04:24

திருப்பதி: திருமலையில், தரிசன வரிசையில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி, பக்தர்கள், 10 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம், திருமலையில், வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை காண, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அனைவரும், புதன் நள்ளிரவு முதல், காத்திருப்பு அறைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்குள், வைகுண்டம், 1 மற்றும், 2ல் உள்ள, 64 காத்திருப்பு அறைகளும் நிறைந்து, நாராயணகிரி தோட்டத்தில், தரிசன வரிசையில் காத்திருக்க துவங்கினர். பக்தர்களின் வசதிக்காக, திருமலையை சுற்றி, 6 கி.மீ தொலைவிற்கு, வரிசை ஏற்படுத்தப்பட்டது.


பக்தர்கள், 32 மணிநேரத்திற்கு பின், நேற்று காலை, 8:00 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


தரிசன வரிசை நகர துவங்கிய பின், பக்தர்கள் முண்டியத்துச் செல்ல முயன்றதால், வெளிவட்ட சுற்றுச் சாலையில் ஏற்படுத்தப்பட்ட தரிசன வரிசையில், நேற்று காலை, 11:30 மணியளவில், கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


அவர்கள் அனைவரும், சிகிச்சைக்காக, அருகில் உள்ள, அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...