Thursday, December 28, 2017

அரசு பஸ்சில் கலெக்டர் பாட்டு பாடி குதூகலம்

Added : டிச 28, 2017 00:08

கடலுார்: மனுநீதி நாள் முகாமில் பங்கேற்க, அரசு பஸ்சில் பயணம் செய்த கடலுார் கலெக்டர்,
இந்தியில் பாட்டு பாடி அசத்தினார்.

கடலுார் மாவட்டத்தில், அனைத்து அதிகாரிகளும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக, மனுநீதி நாள் முகாம், கிராமசபா போன்றவற்றில் பங்கேற்க, கலெக்டர் பிரசாந்த் வடநேரே, சக அதிகாரிகளுடன் அரசு பஸ்சில் பயணம் செய்து வருகிறார். பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி கிராமத்தில், மனுநீதி நாள் மற்றும் கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க, கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு, அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை, 8:00 மணிக்கு பஸ் புறப்பட்டதும், பணிகள் காரணமாக, அதிகாரிகள் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களது டென்ஷனை குறைக்க முடிவு செய்த கலெக்டர்,
பாட்டு பாடுமாறு, அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.கலெக்டர் எதிரில் பாட்டு பாடுவதற்கு அதிகாரிகள் தயங்க, முதல் பாடலை, கலெக்டரே இந்தியில் பாடி, பலத்த கைதட்டலை பெற்றார். இதையடுத்து, டி.ஆர்.ஓ., விஜயா, தமிழில் பாடினார். பின், மற்ற அதிகாரிகளும் பல்வேறு பாடல்களை பாடி, அசத்தியபடி பயணத்தை தொடர்ந்தனர்.பாடலுக்கு ஏற்றவாறு, இருக்கையில் இருந்தபடியே, அதிகாரிகள் ஆடி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...