Thursday, December 28, 2017

சிறை விதிகளை படிக்கும் லாலு பிரசாத்
சொகுசு வசதி இல்லாததால் புலம்பல்


ராஞ்சி: இதற்கு முன், ஏழு முறை சிறை சென்றிருந்தாலும், முதல் முறையாக சிறை விதிகளின்படி நடத்தப்படுவதால், சிறை விதிகள் குறித்து படித்து வருகிறார், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவ்.



பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது, கால்நடை தீவன ஊழல் வழக்குகள் உள்ளன. ஏற்கனவே ஒரு வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை பெற்ற லாலு, ஜாமினில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில், மற்றொரு ஊழல் வழக்கில் அவரை குற்றவாளி என, ஜார்க்கண்ட் மாநிலம்,

ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. தண்டனை விபரம், 2018, ஜன., 3ல் அறிவிக்கப்பட உள்ளது.

முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையிலானபா.ஜ., அரசு அமைந்துள்ள ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சிறையில், லாலு பிரசாத் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன், ஊழல் வழக்குகளில், பீஹார் சிறையில், ஐந்து முறையும், ஜார்க்கண்ட் சிறையில், இரண்டு முறையும் அவர் அடைக்கப் பட்டுள்ளார்.ஆனால், அப்போது ஆட்சி, அதிகாரம் கையில் இருந்ததால், சிறையில் இருந்தாலும், சொகுசுவசதிகள் அனைத்தும் கிடைத்தன.

ஜார்க்கண்ட் சிறையில், 2013ல், லாலு அடைக்கப் பட்டிருந்தபோது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாஅரசு அமைந்திருந்தது. லாலுவின் கூட்டணி கட்சி என்பதால், அரசு விருந்தினர் மாளிகையை, சிறை யாக மாற்றி, அதில் அடைக்கப்பட்டு இருந்தார். தற்போது, ஹோத்வார் மத்திய சிறையில், லாலு அடைக்கப்பட்டு உள்ளார். அரசியல் கைதிகள்,

ஆறு பேரை அடைக்கக் கூடிய பகுதியில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு, 'டிவி' மற்றும் நாளிதழ்கள் வழங்கப் படுகின்றன.ஒரு வாரத்தில் மூன்று பேர் மட்டுமே சந்திக்க முடியும் என்பது சிறை விதி. சிறையில்அடைக்கப்பட்ட சில மணி நேரத்தி லேயே மூன்று பேரை, லாலு சந்தித்து உள்ளார். மற்றவர்களுக்கு அனுமதி அளிக்க படவில்லை. இதையடுத்து, தற்போது சிறை விதிகள் குறித்து லாலு பிரசாத் படித்து வருவ தாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...