Thursday, December 28, 2017

தென்காசியில் நில அதிர்வு

Added : டிச 28, 2017 00:06

திருநெல்வேலி: தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு லேசான நிலஅதிர்வு
உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதியில் தெருக்களுக்கு ஓடிவந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு 9:00 மணிக்கு லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. அச்சன்புதுார், மேக்கரை மற்றும் கேரளாவில் ஆரியங்காவு, தென்மலை, புனலுார் ஆகிய இடங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன. ஏதோ பாதிப்பு ஏற்படுகிறது என உணர்ந்த மக்கள் தெருக்களுக்கு ஓடிவந்தனர். . நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை துவங்கி நெல்லை வழியாக துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரை வரையிலும் பூமியின் அடுக்குகளில் பிளவு இருப்பது ஏற்கனவேகண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டில் செங்கோட்டை மேக்கரை அருகே அடவிநயினார் அணை அருகே நிலஅதிர்வு சுமார் 2 ரிக்டர் அளவுக்கு இருந்தது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...