Wednesday, January 7, 2015

பான் கார்டு அவசியமாவது ஏன்?



பான் கார்டு (Permanent Account Number) ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது இயல்பானதுதான். பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்குத் தேவைகளுக்குத்தான் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

வரி கட்டாதவர்கள் நமக்கு அது எதற்கு என்று அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இது வருவான வரி செலுத்துவதற்கான எண் மட்டுமல்ல, அல்லது வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மட்டும் தேவையான விஷயமும் கிடையாது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப் பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.

நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு 10 எழுத்துக்களைக் கொண்ட ஒரு குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. அடிக்கடி மாற்றத்தக்கது அல்ல. முகவரி மாறினாலோ அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றால்கூட இந்த எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்எஸ்டிஎல் அமைப்பு இந்த பான் எண்ணை வழங்குகிறது. பான் கார்டு பயன்படுத்துவதன் மூலம் வங்கி, பண, வரி பரிவர்த்தனைகள், கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் ஒரு கண்காணிப்பில் அரசு கொண்டு வருகிறது.

இதன் மூலம் வரி ஏய்ப்பு மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான் கார்டு பயன்படுகிறது. தனிநபர் அல்லது நிறுவனம் குடும்ப அமைப்பு என யார் பெயருக்கு வேண்டுமானாலும் பான் கார்டு வாங்கலாம்.

ஆனால் ஒருவர் பெயரில் அல்லது ஒரு நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படும்.

எப்படி வாங்குவது?

பான் கார்டு வாங்கும் நடைமுறை வெகு எளிதானது. பான் எண் வாங்குவதற்கு என்று வயதுவரம்பு கிடையாது. வருமான வரி கட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை. எந்த நிறுவனத்திலும் பணியாற்ற வேண்டும் என்கிற தேவையுமில்லை. ஆதார் அடையாள அட்டை போல, அங்கீகாரம் பெற்ற அரசின் அமைப்பு வழங்கும் வரிக்கணக்கு எண். நீங்கள் வருமான வரி கட்டினாலும், கட்டவில்லை என்றாலும் உங்களுக்கு என்று ஒதுக்கப்படும் எண் இது.

பிறந்த குழந்தைக்குக் கூட பான் எண் வாங்க முடியும். குறிப்பிட்ட வயது வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

பான் கார்டு வாங்கிக் கொடுக்கும் முகவர்களிடம் தேவையான விவரங் களை கொடுத்தால், அவர்கள் என்எஸ் டில்எல் நிறுவனத்தில் விண்ணப்பம் செய்வார்கள். அங்கிருந்து நேரடியாக உங்கள் வீட்டு முகவரிக்கு பான் கார்டு அனுப்பப்பட்டு விடும். நேரடியாக ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தும் பான் கார்டு வாங்கலாம்.

இதற்கு முகவரிச் சான்று, அடையாளச் சான்று, வயது சான்று போன்ற ஆவணங்களும், உங்களது புகைப்படமும் இணைக்க வேண்டும்.

பான் எண் எப்படி ஒதுக்கப்படுகிறது?

முதல் ஐந்து எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதில் முதல் மூன்று எழுத்துக்கள் அகர வரிசையில் AAA-வில் ஆரம்பித்து ZZZ-ல் முடியும். நான்காவது எழுத்து விண்ணப்பதாரர் குறித்த குறியீடு. அதாவது குழுமம் (கம்பெனி) என்றால் - C , தனி நபர் -P, ஹிந்து கூட்டு குடும்பம்(HUF) - H , நிறுவனம் - F , தனி நபர்களின் கூட்டு (AOP) - A , அறக்கட்டளை - T , பாடி ஆப் இண்டிவிஜூவல்ஸ் (BOI) - B ,

லோக்கல் அதாரிட்டி - L , செயற்கையான நீதிமன்ற நடவடிக்கை சார்ந்த நபர் - J , அரசு - G.

ஐந்தாவது எழுத்து தனிநபர் என்றால் அவரது குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் பெயரிலுள்ள முதல் எழுத்து. அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-ஆரம்பித்து 9999 வரை வரிசையாகச் செல்லும்.

கடைசி எழுத்து அகர வரிசைச் சார்ந்த சரிபார்ப்பு எழுத்து.

எப்படி விண்ணப்பம் செய்வது?

பான் கார்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 105 ஆகும். காசோலை, வங்கி வரைவோலை மற்றும் ஆன்லைன் பேங்கிங் வழியாகவும் செலுத்தலாம். காசோலை NSDL - PAN என்கிற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் இருக்க வேண்டும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான கட்டணம் 971 ரூபாய். இதே இணையதளத்தின் மூலம் வழி பான் கார்டு திருத்தங்களையும் மேற்கொள்ளலாம். கட்டணங்களில் மாற்றமில்லை.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்ய இணையதள முகவரி:

https://tin.tin.nsdl.com/pan/

வட கிழக்கு மக்களின் துயரம் நீங்குமா?

Return to frontpage

டெல்லி பெருநகரங்களில் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சந்தித்துவரும் இன்னல்கள் விரைவில் முடிவுக்கு வரவிருக்கின்றன. இனி, வட கிழக்கு மாநிலத்தவர் களைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் அழைத்துக் கேலி செய்தால், ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம். பிணையில் வெளிவர முடியாத குற்றமாக இதை அறிவிக்கவிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

மேற்கத்திய பாணி உடையுடன் நாகரிகத் தோற்றம் கொண்ட வட கிழக்கு மாநிலத்தவர்களை, சாலையில் எதிர்ப்படும் உள்ளூர்வாசிகள், தோற்றம்குறித்த கிண்டல் மூலம் மனதளவில் வீழ்த்திவிட முடியும். டெல்லி போன்ற நகரங்களில் பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில், குடியிருப்புப் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்க முடியும். கடந்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி, டெல்லி லாஜ்பத் நகரில் நடந்த ஒரு சம்பவம் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைக் காட்டியது.

அன்று மாலை தனது நண்பர்களுடன் லாஜ்பத் நகரில் ஒரு முகவரியைத் தேடிச் சென்ற நிடோ தானியம் என்ற 19 வயது இளைஞரை, அந்தப் பகுதியில் இனிப்புக் கடை வைத்திருந் தவர்கள் சிலர் கேலிசெய்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில் கடுமையாகத் தாக்கப்பட்ட அந்த இளைஞர், மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் கொந்தளிப்படைந்த வட கிழக்கு மாநிலத்தவர்கள், டெல்லியில் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.

இதையடுத்து, பெருநகரங்களில் வட கிழக்கு மாநிலத்தவர் சந்திக்கும் பிரச்சினைகள்குறித்து ஆராய வட கிழக்கு கவுன்சில் தலைவரும் ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.பி. பேஸ்பருவா தலைமையில் பிப்ரவரி மாதம் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. வட கிழக்கு மாநிலத்தவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்குறித்து விசாரணை நடத்திய பேஸ்பருவா கமிட்டி, கடந்த ஆண்டு ஜூலை 11-ல் தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது.

மூன்று அல்லது ஐந்து ஆண்டு சிறை

கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், 153-சி மற்றும் 209-ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை இந்திய பீனல் கோடில் சேர்க்கச் சம்மதம் தெரிவித் திருக்கிறது. இந்தச் சட்டப் பிரிவுகளின்கீழ், இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களையும் இனம், தோற்றம் காரணமாக அவமானப்படுத்தினால் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைசெல்ல நேரிடும்.

அத்துடன் 8 வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தலா 20 இளைஞர்களுக்கு (10 ஆண்கள், 10 பெண்கள்) டெல்லி போலீஸில் வேலை வழங்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருக்கிறார். வட கிழக்கு மாநிலங்களின் வரலாறு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அம்மக்களின் பங்கு ஆகியவைகுறித்த பாடங்களைப் பல்கலைக்கழகப் பாடப் பிரிவுகளில் சேர்க்கவும் மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தோற்றம் காரணமாகத் தங்களை இந்தியர்களாகவே ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுவதைத் தொடர்ந்து தங்களை அவமானப்படுத்திவருபவர்களை எதிர்த்துப் பேசக்கூட முடியாமல் தவித்துவரும் அம்மக்களுக்கு இது நிச்சயம் ஆறுதல் அளிக்கும் செய்திதான்.

பழகுவதற்கு இனிமையானவர்கள்

உணவகங்கள் தொடங்கி கால் சென்டர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் வரை பணியில் இருக்கும் இந்த இளைஞர்கள், நல்ல கல்விப் பின்புலம் கொண்டவர்கள். பழகுவதற்கு இனிமை யானவர்கள். வட கிழக்குப் பகுதி மக்கள் என்ற ஒரே சொல்லில் அழைக்கப்பட்டாலும் மணிப்பூர், அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த அம்மக்களின் கலாச்சாரங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. நமக்கு கேரளம் பற்றி என்ன தெரியுமோ அதைவிடக் குறைவாகத்தான், மணிப்பூர் மாநிலம் பற்றி சிக்கிம் மாநிலத்தவர்களுக்குத் தெரியும். ஆனால், பெருநகரங்களில் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்கும் இவர்கள் அனைவரும், ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து இயங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.

இந்தச் சூழலில் அம்மக்களின் துயரத்தைச் சட்டம் மூலம் தீர்க்க மத்திய அரசு முனைந்திருக்கிறது. எனினும், விரைவில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதன் பின்னணியில், இந்த நடவடிக்கையில் பாஜக அரசு இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், டெல்லியில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வட கிழக்கு மாநிலத்தவர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே, வட கிழக்கு மாநிலத்தவர்களின் துயரம் நீங்குவதற்கு எந்தப் பின்னணியில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருந்தாலும் வரவேற்கத் தக்கதே.

- வெ.சந்திரமோகன், chandramohan.v@thehindutamil.co.in

Citizenship ordinance merging PIO, OCI schemes gets Prez nod

imggallery

Jan 07 2015 : The Times of India (Chennai)
Citizenship ordinance merging PIO, OCI schemes gets Prez nod
New Delhi:
TIMES NEWS NETWORK


PIOs Can Now Enjoy Life-long Indian Visa
A day before the Pravasi Bharatiya meet opens in the Gujarat capital of Gandhinagar, the President is said to have cleared an ordinance amending the Indian Citizenship Act to merge the Person of Indian Origin (PIO) and Overseas Citizenship of India (OCI) schemes.The amendments seek to relax the stipulation of one-year continuous stay in India by certain categories of applicants -including a PIO, a foreign national married to an Indian citizen and an OCI of five years -before they can seek Indian citizenship.The President has signed the citizenship ordinance, his press secretary Venu Rajamony was on Tuesday quoted by agencies as saying.Home ministry officials contacted by TOI confirmed the development. The amendments to the Citizenship Act will merge the benefits of PIO and OCI schemes and rename the combined project as Indian Overseas Cardholder scheme.PIOs would thus enjoy a life-long Indian visa, besides exemption from registering themselves with the FROFRRO if their stay in India exceeds six months. This is in line with Prime Minister Narendra Modi's assurance to the Indian diaspora at New York's Madison Square Garden, where he announced life-time visas for PIOs as well as merger of the PIO and OCI schemes.
The decision to amend the Citizenship Act, 1955 was taken after a large number of representations were received from PIOs, com plaining about the requirement of reporting to police beyond 180 days of stay , within the next 30 days. Also, PIO cardholders were eligible for only 15-year visas, as against life-long visas provided to those holding OCI cards.

கெளரவம் மிக்க கருப்பு அங்கி! By கோமல் அன்பரசன்

Dinamani

ஒருவர் என்னதான் வீராவேசமாகப் பேசுபவர் என்றாலும் நீதிமன்றம் என்றால் அவருக்கு பயம் வருகிறது. நீதிபதி என்றால் மரியாதை வருகிறது. யாராக இருந்தாலும் நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டால் அவர் கூண்டில் ஏறித்தான் ஆக வேண்டும். இன்றைக்கு அரசியலால் அனைத்தும் மலினமாகிவிட்டாலும்கூட, நீதித்துறைக்கென்று எஞ்சி இருக்கும் கெளரவம் இது.

ஆசிரியப் பணி, மருத்துவப் பணி இவற்றைப்போல புனிதத் தொழில் (நோபல் புரபொஷன்) பட்டியலில் இருந்து வழக்குரைஞர் பணி சற்றுக் கீழிறங்கியிருந்தாலும் அதற்கான மரியாதை இன்னமும் குறைந்திடவில்லை. நம்மோடு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற கறுப்பு அங்கிக்காரர்கள் பலரே இத்தகையப் பெருமைக்கும் சிறப்புக்கும் காரணகர்த்தாக்களாக திகழ்ந்திருக்கிறார்கள்; திகழ்கிறார்கள் என்பதே உண்மை.

"சட்டம் ஒரு இருட்டறை - அதில் வக்கீலின் வாதம் ஓரு விளக்கு' என்றார் அறிஞர் அண்ணா. இருட்டை அகற்றி ஒளியேற்றிய வழக்குரைஞர் ஒவ்வொருவரின் வாழ்விலும் கற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் ஓராயிரம் செய்திகள் இருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

நீதிமன்றத்திற்குள் அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றதும், அவற்றில் சட்டப் புத்தகங்களில்கூட இடம்பெறாத ஆயிரமாயிரம் நுணுக்கங்கள் இடம்பெற்றதும் சரித்திரத்தின் பக்கங்களில் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கின்றன. சில வழக்குரைஞர்கள் தங்களின் சட்டத் திறமையின் மூலம் பல நேரங்களில் போலீஸ்காரர்களையே நடுங்க வைத்திருக்கிறார்கள்.

அன்றைக்கு வழக்குரைஞர் படிப்பு என்பது ஒரு பெரிய கனவு. வழக்குரைஞர் தொழில் என்பது பெரும் கெளரவம். காலையில் பார் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு அன்று மாலையே தனி அலுவலகம் திறக்கத் துடிக்காமல், சீனியர் - ஜூனியர் உறவில் உளப்பூர்வமாக மகிழ்ந்து, அனுபவங்களைப் பெற்று மனம் நெகிழ வைத்த குருகுல வாசத்தால் வழக்குரைஞர் தொழிலில் வென்றவர்கள் ஏராளம். இதைப்போலவே, தனது ஜூனியர்களை தன் சொந்தப் பிள்ளைகளைப் போல நினைத்து அவர்களை வளர்த்துவிட்ட ஜாம்பவான்கள் ஏராளமானோர்.

வெள்ளைக்காரர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், வழக்குரைஞர் என்ற பெயரையும் கெளரவத்தையும் எட்டிப்பிடிக்க நம்மவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தெருவிளக்கின் வெளிச்சத்திலேயே படித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி ஆன முத்துசாமி ஐயர், அந்த இடத்தைப் பிடிக்க எத்தனை இன்னல்களை எதிர்கொண்டார் என்பது தெரியுமா?

இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெண்பளிங்கு கல்லில் சிலையாக இருக்கும் அவரது அற்புத வாழ்வைப் பற்றி, கருப்பு அங்கி அணிந்தவர்கள் மட்டுமல்ல, அணியாதவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளைக்கார பாரிஸ்டர்களுக்கு இந்திய வழக்குரைஞர்கள் என்றாலே இளக்காரமாக இருந்த நிலையை இவரைப் போன்றவர்கள்தான் மாற்றி இருக்கிறார்கள். நம் ஊர் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திற்குள் காலில் செருப்புகூட அணிய முடியாத நிலை இருந்ததை இன்றைக்கு நம்மால் நம்ப முடிகிறதா?

திறமைகளை வளர்த்துக்கொண்டு, வெள்ளைக்காரனே வியக்கும் அளவுக்கு உயர்வதற்கு, அன்றைய வழக்குரைஞர்கள் போட்ட எதிர்நீச்சல், காலக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளைக்கார நீதிபதியே தனது குடும்பத்தோடு வந்து உட்கார்ந்து வாதங்களை கேட்குமளவுக்கு தனது ஆங்கிலப் பேச்சாற்றலால் வியக்க வைத்த சடகோபாச்சாரியார் போன்ற தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள் எத்தனையோ பேர்.

வழக்குரைஞர் தொழிலில் சம்பாதித்த பணத்தையெல்லாம் நமது இந்திய தேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்காக செலவழித்து, சொத்து இழந்து, சுகமிழந்து தியாகிகளாக, தேசத்தின் சிற்பிகளாகத் திகழ்ந்த வழக்குரைஞர்களின் பட்டியல் மிகப்பெரியது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியில் தொடங்கி, இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஏராளமான தலைவர்கள் வழக்குரைஞர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

காமராஜரை நமக்கு அடையாளம் காட்டிய தீரர் சத்தியமூர்த்தி, காந்தியடிகளால் "மகா புருஷர்' என்று அழைக்கப்பட்ட வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர், பின்னாளில் சட்ட அமைச்சராக இருந்த பாஷ்யம், தீண்டாமை ஒழிப்புக்காக தாழ்த்தப்பட்டோரின் கோயில் நுழைவை முன்னின்று நடத்திய மதுரை வைத்தியநாத ஐயர், திரைப்படங்களின் மூலம் விடுதலைத் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த கே. சுப்பிரமணியம் இப்படியாக வழக்குரைஞர்கள் இல்லாவிட்டால் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டம் இத்தனை வீரியமாக நடந்திருக்காது என்று சொல்லுமளவுக்கு ஏராளமான வழக்குரைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அவ்வளவு ஏன், ஒரே ஒரு மேடைப்பேச்சு, விடுதலை உணர்ச்சியைத் தூண்டிவிட்டதாக கூறி, உலகத்திலேயே இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார் ஒரு வழக்குரைஞர் என்பது இன்றைக்கும் நினைவு கூரப்பட வேண்டியதல்லவா? அவரைப் போலவே, தன்னை அழித்துக்கொண்டு தாய்நாட்டின் சுதந்திர காற்றைச் சுவாசிக்க, தியாக வடுக்களை சுமந்த வழக்குரைஞர்கள் எத்தனையோ பேர் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நமது சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் ஒரு வழக்குரைஞர்தானே? அவரது பிறந்த நாள்தானே இந்திய வழக்குரைஞர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது!

அன்றைக்கு, அரசு வழக்குரைஞர் பதவி மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. தலைசிறந்த சட்ட நிபுணர்கள் எல்லாம் அரசு வழக்குரைஞர்களாக பணியாற்றி இருக்கிறார்கள். உணர்ச்சிகரமான இமானுவேல் சேகரன் கொலை வழக்கில், ஒருதலைச்சார்பாக செயல்படுவார் எனக்கூறி நீதிபதியையே மாற்றிய ஆளுமை வாய்ந்த அன்றைய அரசு வழக்குரைஞர் வி.எல். எதிராஜ் அத்தனை எளிதில் மறக்கப்படக்கூடியவரா?

அவரது வாதங்களும், வாழ்க்கை முறையும், என்றென்றும் பெயர் சொல்லும் சென்னை எதிராஜ் கல்லூரியும் மற்றும் ஏராளமான சமூகப்பணிகளும் சாதாரணமானவையா என்ன?

எதிராஜைப் போலவே, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் போட்டு, தலைநகர் சென்னையில் எஸ்.ஐ.இ.டி என்கிற பெண்களுக்கான கல்வி நிறுவனத்தை உருவாக்கிய பஷீர் அகமது செய்யது அடிப்படையில் ஒரு வழக்குரைஞரல்லவா?

கல்லூரிகள் மட்டுமல்ல, இன்று விருட்சமாக வளர்ந்து கிளை பரப்பி நிற்கும் இந்தியன் வங்கியை உருவாக்கிய கிருஷ்ணஸ்வாமி ஐயரும், அவருக்குப் பிறகு அதனை வளர்த்தெடுத்த பாலசுப்ரமணிய ஐயரும் புகழ்க்கொடி நாட்டிய வழக்குரைஞர்களே. இந்த பாலசுப்ரமணிய ஐயர் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனே வந்திருக்காது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த நூற்றாண்டுவரை பெரும் பாவமாகக் கருதப்பட்ட விதவை மணத்திற்கு ஆதரவாகக் குரலெழுப்பி, அத்தகைய திருமணங்களை தானே முன்னின்று நடத்தியும் வைத்த சதாசிவ ஐயர் என்கிற வழக்குரைஞரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கலாமா?

திராவிட இயக்கங்களுக்கெல்லாம் முன்னோடி இயக்கமான நீதிக்கட்சிக்கே வழிகாட்டி இயக்கமான "பிராமணரல்லாதோர் சங்க'த்தை சென்னையில் உருவாக்கிய புருசோத்தம நாயுடுவும், சுப்ரமணியனும் வழக்குரைஞர்கள்தானே? சென்னை மாநகரிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வழக்குரைஞர்கள் ஏற்படுத்திய அமைப்புகளும் சங்கங்களும் சமூகப் பணிகளில் சிறப்பான முத்திரை பதித்ததை வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்திற்கு உயிரூட்டியதோடு, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்து கல்வித் துறைக்கும் பெரும் பங்காற்றிய பி.டி. ராஜன் ஒரு வழக்குரைஞர் என்பது கருப்பு அங்கிக்கு மேலும் கெளரவம் அல்லவா?

தமிழ் இலக்கியப் பரப்பிலும் வழக்குரைஞர்களின் பங்களிப்பு அதிகம். தமிழின் முதல் புதினத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை நீதித் துறைக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய தொண்டு மறக்கக்கூடியதா? மதத்தைக் கடந்து, மேடை தோறும் கம்பன் புகழ்பாடிய மு.மு. இஸ்மாயில் பற்றி இன்றைக்கெல்லாம் பேசிக்கொண்டிருக்கலாமே.

மேலை நாட்டு நூல்களுக்கு இணையாக புத்தகங்களை எழுதிய அனந்த நாராயணன் போன்று கருப்பு அங்கிகளில் உலா வந்த இலக்கியவாதிகள் பலர். பத்திரிகை உலகில் புகழ் மிக்கவர்களாக விளங்கிய சி.பா. ஆதித்தனாரும், கஸ்தூரிரங்க அய்யங்காரும் வழக்குரைஞர் தொழில் பார்த்தவர்களல்லவா?

சட்டத் தொழிலோடு சேர்த்து அரசியல், கலை, இசை என வழக்குரைஞர்களின் பங்களிப்பு இல்லாத துறை ஏது? சென்னையில் இசைத்துறையின் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் "மியூசிக் அகாதெமி' தொடங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்ட கிருஷ்ணன் என்பவரும் ஒரு வழக்குரைஞர்தானே.

புகழ் மிக்க "சங்கீத நாடக அகாதெமி'யின் தலைவராக இருந்து பி.வி. ராஜமன்னார் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியரான ஏ.ராமசாமி முதலியார் வழக்குரைஞராக வென்றவர்தானே!

தன்னை நாடி வந்த நீதிபதி வாய்ப்புகளை ஒதுக்கி விட்டு வாழ்நாள் முழுக்க வழக்குரைஞராகவே இருந்த வி.வி. சீனிவாச அய்யங்கார், என்.டி. வானமாமலை போன்றோரின் கம்பீரமும் துணிவும் கருப்பு அங்கிக்குத் தனி அழகல்லவா? அதிலும் அசலான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மனித உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுக்க குரல் கொடுத்த வானமாமலையின் பணிகள் மறக்கக்கூடாதவை.

தவறு செய்தவர்களும் சரி, தவறாக வழக்கில் சிக்கியவர்களும் சரி வழக்குரைஞர்களை ஆபத் பாந்தவனாக நினைத்து அவர்கள் மீது முழு நம்பிக்கை வைக்கும் அளவுக்கு தகுதியுள்ளவர்களாக அந்தக் காலத்தில் வழக்குரைஞர்கள் இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினாலும் கூட அதிலும் ஒரு தொழில் நேர்மையைக் கடைப்பிடித்து கருப்பு அங்கிக்கு கெளரவம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒருமுறை முன்னூறு பவுன் நகைகளைக் கொண்டு வந்து வழக்குரைஞர் சுவாமிநாதன் காலடியில் வைத்தார் அந்த தஞ்சாவூர் பண்ணையார். "என்ன இது?' கம்பீரம் குறையாமல் கேட்டார் வழக்குரைஞர் சுவாமிநாதன். "தூக்குமேடைக்குப் போன என் உயிரை மீட்டு கொண்டு வந்திருக்கீங்க... அதான் சின்ன அன்பளிப்பு'. "இதோ பாருங்கோ... வழக்காடுறது என் தொழில். அதுல என் கடமையைச் செய்தேன். அதற்குண்டான பீஸ் கொடுத்திட்டீங்க... அப்புறமென்ன இதெல்லாம்... மொதல்ல எடுத்துகிட்டு கிளம்புங்க...'. ஆனால், பண்ணையார் விடுவதாக இல்லை. நகை மூட்டையை ஏற்றுக்கொண்டே தீர வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார்.

அதனைக் கையால் தொடக்கூட விரும்பவில்லை வழக்குரைஞர் சுவாமிநாதன். எனவே, அத்தனை நகைகளையும் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கல்யாணி மருத்துவமனை அறக்கட்டளைக்கு கொடுத்துவிட்டார். இப்படி எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் வரிசை கட்டி நிற்கின்றன.

பழைய திரைப்படம் ஒன்றில் கதாநாயகி தன் கனவுகளைச் சொல்லும் பாடல் வரும். அதில் அவரின் பெரும் கனவாக சொல்லப்படுவது, "மயிலாப்பூர் வக்கீலாத்து மாட்டுப்பெண்ணாவேன்...' என்பதுதான். எப்படி ஒரு கெளரவமான வாழ்க்கையை அன்றைய வழக்குரைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?

அத்தகையவர்களின் அற்புதமான வாழ்க்கையை அந்தத் தொழிலில் இருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டாமா? சட்டப்புத்தகமாகவே நடமாடிய மேதைகளைப் பற்றி அறிய வேண்டியது அவசியமல்லவா? அப்போதுதானே, எப்படி இருந்தது வழக்குரைஞர் சமூகம் என்பதை அறிய முடியும்.

கருப்பு அங்கியை எடுத்து அணியும் போதெல்லாம் அதன் பழைய கெளரவத்தையும் சேர்த்து அணிந்து கொண்டால்தானே அதற்கென எஞ்சி இருக்கும் கெளரவத்தைக் காப்பாற்ற முடியும்.

திடுதிப்பென்று திருப்பதியில் பட்டம் வாங்கிவிட்டால் மட்டுமே வழக்குரைஞராகி விட முடியாது என்பதை சமூகத்திற்கு உணர்த்துவதும் நல்ல வழக்குரைஞர்களின் பொறுப்புதானே? காவல் துறையோடு சண்டை போடுவதும், கட்டப்பஞ்சாயத்து செய்வதும் கருப்பு அங்கிகளின் பணியல்லவே.

ஒருவர் வழக்குரைஞர் என்றால், அவருக்கு வீடு கிடையாது பெண் கிடையாது என்று முகம் சுளிக்கும் அளவுக்கு சமூகத்தின் பார்வை மாறிப்போய் இருக்கிறதே ஏன்? மக்களை விடுங்கள்.. தன்னை நம்பி வழக்காட வருபவர்களுக்குகூட வழக்குரைஞர்கள் சிலர், நம்பிக்கைக்குரியவர்களாக இல்லை என்கிற கசப்பான உண்மையை நாம் வேதனையோடு ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

மொத்தத்தில், விபத்து போலவோ, வேடிக்கையாகவோ வழக்குரைஞர் ஆனவர்களைக்கூட, தாங்கள் அணியும் கறுப்பு அங்கியின் கெளரவத்தைப்பற்றி சிந்திக்க வைப்பது காலத்தின் கட்டாயம்.

சினிமாவைப் போலவே, நிஜ வாழ்விலும் வழக்குரைஞர்கள் வண்டு முருகன்களாகவே சித்திரிக்கப்படுவதை மாற்ற வேண்டிய கடமை, கருப்பு அங்கி அணியும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதே உண்மை.



கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

இந்திய வம்சாவளியினருக்கு ஆதரவாக அவசர சட்டம் அமல்

புதுடெல்லி,

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியினருக்கு ஆயுட்கால இந்திய விசா அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதற்காக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையெழுத்துடன், இன்று அவசர சட்டம் அமலுக்கு வந்தது.

இதன்படி, வெளிநாட்டுவாழ் இந்திய குடியுரிமை பெற்றவர்களை போலவே, இந்திய வம்சாவளியினருக்கும் ஆயுட்கால இந்திய விசா வழங்கப்படும். அவர்கள் ஒவ்வொரு தடவை இந்தியா வரும் போதும், போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டியது இல்லை. குஜராத்தில், புலம் பெயர்ந்த இந்தியர்களின் மாநாடு நாளை மறு நாள் தொடங்கும் நிலையில், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 25.05.2026