Tuesday, February 3, 2015

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42, டீசல் விலை ரூ.2.25 குறைப்பு....Published: February 3, 2015 19:10 IST

கடந்த ஆகஸ்ட்டிலிருந்து 10-வது முறையாக பெட்ரோல் விலையும், கடந்த அக்டோபரிலிருந்து டீசல் விலை 6-வது முறையாகவும் குறைக்கப்பட்டுள்ளது. | கோப்புப் படம்.

நாடு தழுவிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு முறையே ரூ.2.42 மற்றும் ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிந்து வருகிறது. அதன் எதிரொலியாக, எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளன.

டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.56.49 என்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 46.01 என்றும் குறைகிறது.

உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, இந்த விலை குறைப்பு மாறுபடும். அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.58.96 என்றும் டீசல் விலை ரூ.49.09 என்றும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 10-வது முறையாக பெட்ரோல் விலையும், கடந்த அக்டோபரில் இருந்து 5-வது முறையாக டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பெட்ரோல் விலைக் குறைப்பு விவரம்:

சென்னையில் லிட்டர் ரூ.61.38 என்பது ரூ.2.42 குறைந்து லிட்டர் ரூ 58.96 ஆகிறது.

டெல்லியில் லிட்டர் ரூ.58.91 என்பது ரூ.2.42 குறைந்து லிட்டர் ரூ.56.49 ஆகிறது.

நம்பினால் நம்புங்கள்... ஒரு மணி நேரம் முன்னதாக வந்து சாதனை படைத்த ரயில்




திருநெல்வேலி: இந்திய ரயில்வே சரித்திரத்திலேயே இதுவரை நிகழ்ந்திராத ஒரு அதிசயம் இன்று நடந்துள்ளது. குறித்த நேரத்தில் ரயில்கள் வருவதையே அதிசயமாக பார்ப்பது நமது வழக்கம். அப்படி குறித்த நேரத்தில் வந்தால், ஒருவேளை நேற்று வரவேண்டிய ரயிலோ என்ற சந்தேகத்துடன் பார்ப்போம்.

 இத்தகைய சூழ்நிலையில், இன்று சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்த திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி 5 நிமிடம் முன்னதாக வந்து சாதனை படைத்தது. வழக்கமாக காலை 8 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் இந்த ரயில் காலை 6:55க்கு எல்லாம் தாழையூத்து வந்து விட்டது. ஆனால் ரயில் ஒரு மணி நேரம் முனனாலேயே வரும் என்று எதிர்பார்க்காத திருநெல்வேலி ரயில் நிலைய ஊழியர்கள், அந்த ரயில் வழக்கமாக வரும் முதல் நடைமேடையை காலியாக வைக்காததால், ரயிலை தாழையூத்திலேயே நிறுத்தி வைக்க நேர்ந்தது.

 பின்னர் நடைமேடை தயாரானதும் ரயில் தாழையூத்திலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி ரயில் நிலையம் வந்தடைந்தது.இவ்வாறு ஒரு மணி நேரம் முன்னதாகவே ரயில் வந்தது குறித்து, ரயில் பயணிகள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்ததாக அந்த ரயிலின் கார்டு தெரிவித்தாலும் ஒரு சின்ன சந்தேகம். இந்த ரயில் இரவு நேரத்தில் பயணித்துள்ளது. இப்படி ஒரு மணி நேரம் முன்கூட்டியே வந்ததால் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் சரியாக இறங்கி, ஏற முடிந்ததா? ஒரு மணி நேரம் முன்கூட்டியே இவ்வாறு ரயில் பயணிக்க ரயில் விதிமுறைகள், சிக்னல்கள் எப்படி அனுமதித்தன? 

எப்படியோ ஒரு கின்னஸ் சாதனை படைத்த ரயில் ஓட்டுநருக்கு வாழ்த்துக்கள்.

ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

புதுடில்லி: ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்த அதிரடி அறிவிப்பு, இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியாகிறது.

மத்திய அரசானது, சமையல் எரிவாயு வினியோகம் உட்பட, பல திட்டங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என, விரும்புகிறது; அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக துவக்கி உள்ளது.

மானியம் ஒழிப்பு: முதற்கட்டமாக, பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்பட்ட மானியம், முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த இரு எரிபொருட்களின் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டு விட்டதால், அவற்றின் விலைகள், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சமையல் எரிவாயு வினியோகத்தில் நடக்கும் முறைகேடுகளால், மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய, எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கே செலுத்தும் திட்டத்தை துவக்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வசதி படைத்தவர்களுக்கு, குறிப்பாக, ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, அதாவது, 30 சதவீத வருமான வரி வரம்பில் வருவோருக்கு, மானிய விலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை, முழுவதுமாக வாபஸ் பெற, மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.


குறையலாம்: அதேநேரத்தில், ஆண்டு வருமானம், ஐந்து லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை (20 சதவீத வருமான வரி வரம்பில் உள்ளவர்கள்) உள்ளவர்களுக்கும், மானிய விலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதை, ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன அல்லது மானியத்தின் அளவு குறைக்கப்படலாம். இது தொடர்பான அறிவிப்பை, இந்த மாத இறுதியில் தாக்கல் செய்ய உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியிட, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தீவிரமாக பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அரசு வழங்கும் மானியமானது, தகுதியானவர்களை மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதில், தற்போதைய மத்திய அரசு அக்கறை காட்டி வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.மேலும், குழாய் மூலமான எரிவாயு வினியோகிக்கும் திட்டத்திற்கு, ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குழாய் எரிவாயு வினியோக திட்டத்தில், தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே, இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
ரூ.63 ஆயிரம் கோடி :
*நடப்பு நிதியாண்டில், சமையல் எரிவாயு உட்பட, பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம், 63 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
*நாடு முழுவதும், சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருப்போர் எண்ணிக்கை, 15 கோடி.
*இவர்களில், ஐந்து லட்சத்திற்கும் மேலான வருமானம் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்பட்டால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்.

LPG FIRMS MAKING QUICK MONEY THROUGH NAME CHANGE


PAY CASH ON DELIVERY OF TRAIN TICKET AT HOME


பேச்சுவார்த்தை தோல்வி: சமையல் எரிவாயு லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்கிறது



சென்னை, பிப். 2: தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்று வரும் சமையல் எரிவாயு டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தை திங்கள்கிழமை தோல்வியில் முடிவடைந்தது.

டேங்கர் லாரிகள் வாடகை உயர்வை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஏற்கும் வரை, வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

உடன்பாடு ஏற்படாதது ஏன்? சமையல் எரிவாயு லாரி வாடகை உயர்வு கோரி கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் நான்கு தினங்களாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள், தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை எழிலகத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

""பேச்சுவார்த்தை தொடங்கிய உடனேயே, வேலைநிறுத்த போராட்டத்தைக் கைவிடுவதாக லாரி உரிமையாளர்கள் முதலில் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், லாரி வாடகை உயர்வு குறித்துப் பேசுவதற்கு உரிய மும்பை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து வாடகை உயர்வு குறித்துப் பேச ஒப்புக் கொண்டால் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற முடியும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது'' என்று சங்கத்தின் செயலர் கார்த்திக் தெரிவித்தார். இதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

போராட்டத்தின் அடிப்படை என்ன?

வேலைநிறுத்தம் காரணமாக கடந்த ஜனவரி 30-ஆம் தேதி முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லப்படவில்லை. தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களிலும் சுமார் 3,200 எரிவாயு டேங்கர் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒரு டன் சமையல் எரிவாயுவை டேங்கர் லாரியில் ஏற்றிச் செல்ல 1 கிலோமீட்டருக்கு வாடகையாக ரூ. 2.94-ஐ அதிகாரிகள் முன்பு நிர்ணயித்தனர். இந்த வாடகையை குறைந்தபட்சம் 12 காசுகள் உயர்த்தி ரூ.3.06 என நிர்ணயிக்குமாறு சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வாடகை உயர்வை அறிவித்தால் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மாற்றுத் திறனாளிக்கான சலுகை பயணச் சீட்டு: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் பெறலாம்

சென்னை, பிப். 2: மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகை விலை ரயில் பயணச் சீட்டுகளை இனி www.irctc.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு முன்பு மாற்றுத் திறனாளிகள் ரயில்வே முன்புதிவு கவுன்ட்டர்களுக்குச் சென்று தங்களது மாற்றுத் திறன் அடையாள அட்டையைக் காண்பித்து சலுகை விலை ரயில் பயணச் சீட்டை பெற்று வந்தனர்.

ரயில் நிலையக் கவுன்ட்டர்களுக்கு சென்று பயணச் சீட்டு முன்பதிவு செய்வது சிரமமாக இருப்பதாக பல மாற்றுத் திறனாளிகள் ரயில்வே நிர்வாகத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இப்போது மாற்றுத் திறனாளிகள், இணையதளத்துக்குச் சென்று தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்யும்போது பயணச் சீட்டுடன், தங்களது அசல் மாற்றுத்திறன் அடையாள அட்டையை ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும்.

பெரும்பாலான ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ப வசதியுடன் இல்லை.

இப்போது, இந்த வசதியால் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களது சலுகை விலை ரயில் பயணச் சீட்டை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...