Friday, April 10, 2015

கமிஷன் தொகையை உயர்த்த கோரி போராட்டம் பெட்ரோல் பங்க்குகள் நாளை, பகலில் மட்டுமே இயங்கும் டீலர்கள் சங்கம் அறிவிப்பு



பெட்ரோல்–டீசல் கமிஷன் தொகையை அதிகரிக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் நாளை(சனிக்கிழமை) பகலில் மட்டும் இயங்கும் என்று விற்பனை டீலர்கள் அறிவித்துள்ளனர்.

கமிஷன் தொகை

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள்(டீலர்கள்) சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

கடந்த 2010–ம் ஆண்டு அபூர்வா சந்திரா கமிட்டி குழு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.50–ம், டீசலுக்கு ரூ.2–ம் கமிஷன் தொகையாக பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு வழங்க பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2–ம், டீசலுக்கு ரூ.1.20–ம் கமிஷனாக வழங்கி வருகிறது.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த காலக்கெடு கடந்த மார்ச் 31–ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது. எனவே உடனடியாக பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு நியாயமான விளிம்புத் தொகையை வழங்கிட வேண்டும்.

புதிய பங்க்குகள்

நாட்டில் 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. இந்தநிலையில் எண்ணெய் நிறுவனங்கள் புதிதாக 33 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளை திறக்க விளம்பரம் செய்துள்ளனர். இது தேசிய அளவிலான பெட்ரோலிய பொருட்களின் விற்பனை வளர்ச்சிக்கும், புதிய விற்பனை நிலையங்களின் அறிவிப்புக்கும் எந்தவித பொருத்தமும் இல்லை. எனவே புதிய பெட்ரோல் பங்க்குகள் நிறுவுவதை நெறிமுறைப்படுத்திட வேண்டும்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்பனையாளர்கள் கொடுத்துள்ள குத்தகை நிலத்தை திரும்ப பெறுவதற்கான கொள்கை வரைவினை எளிதாக்க வேண்டும்.

விற்பனை நிலையங்களில் பெட்ரோல்–டீசல் எண்ணெய் நிறுவன லாரிகளில் இருந்து பெறப்படும்போது, அதன் அளவினை கண்காணித்திட ரசீதுடன் கூடிய அளவீட்டு கருவியை எண்ணெய் நிறுவனங்கள் நிறுவிட வேண்டும்.

கொள்முதல் நிறுத்தம்

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை மாறும் தேதி குறித்து, முன் அட்டவணையின்படி கால நிர்ணயம் செய்திட வேண்டும். சில்லறை விற்பனை நிலைய உரிமையாளர்களின் குடும்ப உறுப்பினருக்கு விற்பனை நிலையத்தின் உரிமத்தினை மாற்றிடும்போது, புதிய கட்டணம் வசூலிப்பதில் விலக்களித்திட வேண்டும்.

பெட்ரோல்–டீசல் இரண்டு பொருட்களை வெவ்வேறு இடங்களில் ஒரே உரிமத்தில் விற்பனை செய்து வருபவர்களை, அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஒரே இடத்தில் விற்பனை நிலையத்தினை அமைத்திட வழிவகை செய்திட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முதற் கட்டமாக நாடு முழுவதும் உள்ள 53 ஆயிரம் பெட்ரோல் பங்க்கில் 10–ந்தேதி(நாளை) ஒரு நாள் பெட்ரோல்–டீசல் கொள்முதலை நிறுத்தப்படும்.

ரூ.1,025 கோடி இழப்பு

மேலும் அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் பங்குகள் செயல்படும். பெட்ரோல்–டீசல் கொள்முதலை நிறுத்துவதன் மூலம் ரூ.300 கோடியும், பகுதி நேரமாக பெட்ரோல் பங்க்கை இயக்குவதன் மூலம் ரூ.725 கோடியும் இழப்பு ஏற்படும். தமிழ்நாடு–புதுச்சேரியில் உள்ள 4 ஆயிரத்து 500 பங்க்குகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

லோக் ஆயுக்தாதான் நிரந்தர தீர்வு

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜோ பிடன், தொடர்ந்து இருமுறையாக ஒபாமாவுடன் ஒன்றாக பணியாற்றுபவர். ஊழலுக்கு எதிரான கொள்கையுடையவர். ஊழலை எதிர்ப்பது சிறந்த நிர்வாகம் மட்டுமல்ல, அது சுய பாதுகாப்பு; அது நாட்டுப்பற்று என்பது அவர் உதிர்த்த பிரகடனம். தமிழ்நாட்டில் அதை கடைப்பிடித்து தன்னுயிர் ஈத்த ஒரு அதிகாரியின் மரணத்துக்கு இப்போது பரிகார நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. திருநெல்வேலியில் வேளாண்மைத்துறையில் உதவி செயற்பொறியாளராக வேலைபார்த்தவர் முத்துக்குமாரசாமி. பதவியில் இருந்து ஓய்வுபெற 8 மாதங்களே இருந்த முத்துக்குமாரசாமி, தன் பணிக்காலம் முழுவதுமே எந்த புகாருக்கும் இடமில்லாமல் வாழ்ந்தவர். அப்படிப்பட்ட அதிகாரி தன்னுடைய துறையில் 7 டிரைவர்களை நியமிக்கவேண்டிய நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து சீனியாரிட்டி லிஸ்ட் பெற்று, அதன்அடிப்படையில் தகுதியானவர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவின்பேரில், உத்தரவையும் அனுப்பிவிட்டார்.

அவ்வளவுதான் சென்னையில் இருந்து அவருக்கு தொல்லைக்குமேல் தொல்லை, மிரட்டலுக்குமேல் மிரட்டல் அலை அலையாய் செல்போன் மூலம் வந்தது. ஒரு டிரைவருக்கு 1.75 லட்ச ரூபாயை வசூலித்துத்தா என்ற அச்சுறுத்தலைத்தாங்க முடியாமல், ரெயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வந்தது, எல்லோரையும் சோகத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டது. இதற்காக உடனடியாக போர்க்குரல் தொடுத்த அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் வீட்டில் ஒருவருக்கு நடந்த சம்பவம்போல இதை கருதி செயல்பட்டது. இதில் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், அவரது உதவியாளர்களும், உயர் அதிகாரியும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று தகவல் கிடைத்தவுடன், அவரை முதலில் கட்சி பதவியில் இருந்து நீக்கிய அ.தி.மு.க. தலைமை, அடுத்து அமைச்சர் பதவியில் இருந்தும் தூக்கிஎறிந்தது. அந்த துறையின் தலைமை பொறியாளர் செந்திலும் கைது செய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகளின் மத்தியிலும் ஒரு அச்சம் பிறந்துவிட்டது. செந்திலின் வாக்குமூலம் முத்துக்குமாரசாமியின் மரணத்துக்கு காரணமாக வெளிவந்த செய்திகளையெல்லாம் உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற திருச்சி அரசு மருத்துவமனை உள்ளுறை மருத்துவர் டாக்டர் நேரு, அரசியல்வாதிகளின் தொல்லையால்தான் இந்த முடிவை எடுத்தேன் என்றது இந்த பரபரப்பின் வேகத்தை கூட்டியுள்ளது.

பொதுவாக அரசு ஊழியர்களின் நியமனத்திலும், இடமாறுதல்களிலும், பதவி உயர்வுகளிலும் நடக்கும் ஊழல்தான் அரசு நிர்வாகத்தில் ஊழலை பெருக்கெடுத்து ஓடச்செய்துவிடுகிறது. தாங்கள் கொடுத்த பணத்தை எப்படியும் மீட்டே தீரவேண்டும் என்ற வெறியில் முதலில் பணம் வாங்கத்தொடங்கும் அரசு ஊழியர்கள், பிறகு ருசிகண்ட பூனைகளாக மாறி ஊழலிலேயே திளைத்துவிடுகிறார்கள். இதையெல்லாம் தடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாதான் லோக்பால் மசோதா. ஆண்டாண்டுகாலமாக சொல்லப்பட்டு வந்தாலும், அன்னா ஹசாரே போராட்டத்துக்குப் பிறகுதான், பியூன் முதல் பிரதமர் வரை யார் மீதும் ஊழல் புகார் கொடுப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் வகைசெய்யும் லோக் பால் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பும் ஏற்படுத்தப்படவேண்டும். அப்படி ஒரு அமைப்பு இருந்தால் முத்துக்குமாரசாமி போன்றவர்கள் இப்படி தற்கொலை செய்யவேண்டியது இல்லை. அங்குபோய் புகார் கொடுத்து இருக்கலாம். எனவே, ஒரு அமைச்சரையே கைது செய்த தமிழக அரசு, உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பையும் அமைத்து, ஊழலை ஒழிக்க அசுர வேகம் எடுக்கவேண்டும். இனியும் யாரும் இப்படி முத்துக்குமாரசாமி போல தற்கொலை செய்துகொள்ள இடமளிக்காமல், என்னுடைய மனக்குறையை சொல்வதற்கு ஒரு அமைப்பு இருக்கிறது, அங்குபோய் நான் புகார் செய்வேன், எனக்கு நீதி கிடைக்கும் என்ற நிலையை அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்த லோக் ஆயுக்தாதான் சிறந்த வழி.

சமுதாய அக்கறையும் வேண்டும்

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு விடுக்கும் சிறிய வேண்டுகோள் என்னவெனில், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது சிறிதளவாவது சமுதாய அக்கறையும் இருக்க வேண்டும் என்பதே.

இன்றைய நகர இளைஞர்களில் 100-க்கு 99 சதவீதத்தினர், ஏன்... 100-க்கு 100 சதவீதத்தினரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்று எந்த அயல் நாட்டில் இருந்தாலும் "ஸ்கைப்' தொழில்நுட்பம் மூலம் நேருக்குநேர் பேசிக்கொள்கின்றனர்.

முகநூல் (பேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), சுட்டுரை (டுவிட்டர்) என இன்றைய இளைஞர் சமுதாயம் புகுந்து விளையாடுகிறது. இதன் மூலம், தங்களது கருத்துகளை எளிதில் தெரிவித்து விடுகின்றனர்.

கிராமப்புற இளைஞர்களும் இந்த சமூக வளைதளங்களின் வலைவீச்சுக்குத் தப்பவில்லை. அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் நமது இளைஞர்களை வளைத்துப் போட்டுவிட்டன.

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் செய்தித்தாள்களும், அதை விட்டால் வானொலிப் பெட்டியும் மட்டுமே காண முடியும். ஆனால், இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

கையில் ஆண்ட்ராய்டு எனப்படும் அதிநவீன வசதிகளைக் கொண்ட செல்லிடப்பேசி இல்லாத கிராமத்து இளைஞரைக் காண முடியாது.

ஆனால், அப்படிப்பட்ட அந்த இளைஞர் சமுதாயம் இதுபோன்ற சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்துகிறதா என்றால் அங்கு நிச்சயமாக ஒரு கேள்விக்குறி விழத்தான் செய்கிறது. காரணம், சமூக வலைதளங்கள் அந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆபாசப் படங்களை அனுப்புவது, அடுத்தவர் மனம் புண்படும்படியாகக் கருத்துகளை வெளியிடுவது, பிரபலங்களை விமர்சனம் செய்வது, அரசியல்வாதிகளை அநியாயத்துக்கு காலை வாருவது என சமூக வலைதள பிரியர்களின் விமர்சனங்களுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய் விட்டது.

இன்னும் சிலர், திரைப்படத்தைப் பார்க்காமலேயே நண்பர்கள் சொல்வதைக் கேட்டோ அல்லது தனக்குப் பிடிக்காத நடிகராக இருந்தாலோ அந்தத் திரைப்படம் மொக்கை, கடி, சுமார் ரகம் என "ஸ்டேட்டஸ்' போடுகின்றனர்.

உண்மையிலேயே அது நல்ல படமாக இருந்தாலும், இவர்களின் விமர்சனத்தால் அந்தப் படம் தோல்வியடைந்து விடுகிறது. இதனால், கோடிகளைக் கொட்டி அந்தத் திரைப்படத்தை எடுத்தவர் தெருக் கோடிக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

அதேபோல, கிரிக்கெட்டில் ஒரு வீரர் சரியாக விளையாடாவிட்டால், அதற்குக் காரணம் அவரது காதலிதான் என்று தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சனம் செய்கின்றனர். இதனால், அந்த வீரர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார் என்பதைப் பற்றியெல்லாம் இவர்கள் சிந்திப்பதே இல்லை.

இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் பணியை அறப் பணியாகக் கொண்ட ஆசிரியர்களும், கண்ணியமிக்க காவல் துறையில் பணிபுரிபவர்களும்கூட இந்த சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தேர்வறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஓர் ஆசிரியர், பிளஸ் 2 கணித வினாத்தாளை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சல் மூலம் பிற ஆசிரியர்களுக்குப் பரப்புகிறார்.

சென்னை காவல் துறையில் உயர் அதிகாரி ஒருவர் பெண் காவலரிடம் பேசியதைப் பதிவு செய்து கட்செவி அஞ்சல் மூலம் பரப்புகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால்தான் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு நீதிமன்றம் கடிவாளம் போட்டது. அதாவது, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது அத்துமீறி செயல்படக் கூடாது; அடுத்தவர் மனம் நோகும்படி, தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யக் கூடாது; எதற்கும் ஒரு வரையறை உண்டு என்ற ரீதியில் சமூக வலைதளப் பிரியர்களின் கையைக் கட்டிப்போட்டது நீதிமன்றம்.

13 வயதுச் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2013 மார்ச் 24-ஆம் தேதியே தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது இங்கு நினைவுகூரத்தக்கது. இதனால், சமூக வலைதளப் பிரியர்களின் கொட்டம் கொஞ்சம் அடங்கத்தான் செய்தது.

இந்த நிலையில்தான், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கான கட்டுப்பாடுகளை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தைப் பொருத்தவரை இது ஒருபுறம் வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், அதன் முழு பலனும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணம், நோக்கம், சிந்தனை ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது.

குறிப்பாக, சிலர் இதுபோன்ற சமூக வலைதளங்களை பல நன்மைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். அதாவது, விபத்தில் சிக்கியவருக்கு ரத்த தானம் செய்யக் கோருவது, உடலுறுப்பு மாற்றம் தேவைப்படுபவர்களுக்கு உதவக் கோருவது என நல்ல பல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

உதாரணமாக, சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த தாமோதரன்- சுந்தரி தம்பதியரின் மகன் சிவமணி (23), தனது 7 வயதில் பெற்றோரைத் தொலைத்தார்.

16 ஆண்டுகள் கடந்த நிலையில், தனது பெற்றோரைக் கண்டறிய விரும்பிய அவர், கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் தகவல் கொடுத்தார். விளைவு நீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு தனது பெற்றோருடன் இணைந்து விட்டார்.

எந்த ஒரு விஷயமானாலும், அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அன்னப் பறவை எப்படி பாலில் உள்ள தண்ணீரை விட்டுவிடுகிறதோ அதுபோல நாமும் சமூக வலைதளங்களில் தவறான செயல்பாடுகளைக் கைவிட்டு நல்லவற்றுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

AICTE cracks whip, denies approval for 588 colleges

The All India Council for Technical Education (AICTE) has denied 588 technical institutions across the country approval to run various programmes. Bad infrastructure, shortage of faculty and poor academic performance are the main reasons, people involved in the approval process said. Thirty-one of these institutions are in Tamil Nadu.
Technical institutions across the country , including engineering, polytechnic, management and pharmacy colleges, have to apply for approval from the AICTE every year. The colleges have to upload the details on a portal, which are verified by the apex body . The approval is mandatory for technical institutions to commence a new academic year.
When technical institutions sought approval for their courses for the academic year 2015-16, the AICTE found that 588 institutions did not satisfy the norms. “This is a routine process and every institution is expected to upload relevant documents while applying for approval. If documents pertaining to any norm are not available or not satisfactory , the application is rejected,“ an AICTE official said.
Asked about the reasons, the official said most institutions did not satisfy the infrastructure norms or were short on faculty . “From 2011-12 to 2014-15, many institutions have applied for an increase in intake. We have found problems like shortage of faculty and lack of enough classrooms and laboratories in many of the colleges,“ the official said.
Uttar Pradesh tops the list with 107 institutions being denied approval, followed by Maharashtra with 88. Tamil Nadu, the state with the high est number of technical institutions in the country , has 31 institutions that have been denied approval.
Principal of one of these colleges in Tamil Nadu said, “The demand for the course was depleting, and last year we had applied to reduce the intake. This year we have asked the AICTE to scrap the department itself.“
While there are some top institutions on the list, experts say it is because one of their courses has been denied approval. Educational consult ant J P Gandhi said, “It is not only the college infrastructure and faculty shortage that matter. Performance of faculty , recruitment of fresh faculty , implementation of biometric attendance system for faculty and research activities are also considered. Some institutions think if they have the required number of teachers it is enough. But, AICTE now looks at yearly performance too.“
Experts say this is an indication of AICTE's attempts to improve quality in engineering education.

Thursday, April 9, 2015

MUHS told to accept exam forms

PUNE: The Bombay high court has directed the Maharashtra University of Health Sciences (MUHS) to accept the examination forms of as many as 45 postgraduate Masters in Dental Surgery (MDS) students, who were admitted against minority quota seats by the M A Rangoonwala Dental College here in 2014-15 on the basis of an institutional level common entrance test (CET) held on February 9, 2014.

In an ad-interim relief granted on April 1, the bench of Justices Anoop Mohta and K R Shriram directed the MUHS to approve the title and synopsis and accept the thesis of the 45 admitted students.

It also directed the university to accept their examination forms, issue them hall tickets, allow them to appear for exams, declare their results and issue them mark lists to enable them to pursue further studies.

On February 10, the Pravesh Niyantran Samiti (PNS) had expressed its inability to approve admissions of these students and on March 23, the MUHS had refused to accept their exam forms. Incidentally, the admissions were effected on the basis of the PG-CET that was allowed by the high court through an interim order passed on February 4, 2014.

Since 2013-14, the Rangoonwala College run by the Maharashtra Cosmopolitan Education Society, a Muslim minority institution headed by educationist P A Inamdar, is engaged in a legal dispute with the PNS on whether there is any provision for a separate entrance test for minority institutions in view of the Supreme Court judgment in 2003 in the Islamic Academy of Education vs State of Karnataka.

The apex court, in that case, had dealt with the rights of minority institutions.

In November 2013, the PNS had refused permission to the college to conduct the PG-CET on the grounds that such a separate CET was against the SC orders and that the 231 other minority institutions in the state would make similar demands. The college then moved the high court against the PNS order by pointing out that it was conducting the CET with the Samiti's clearance since 2007. This petition is pending final disposal.

After the PNS rejected its application for approval of the 2014-15 MDS admissions, Inamdar moved a civil application as part of the petition pending before the court. The lawyers appearing for PNS argued on April 1 that the Samiti was not concerned with checking, controlling or approving admission of such students.

The bench, however, observed that the college had conducted the PG-CET and admissions based on the court's order. "There is no reason at this stage to hamper the students' career for the controversy so raised and specifically when considering that submissions raised by the PNS based upon the SC judgment in Islamic Academy and the earlier orders passed by this court as well as SC, this court has only granted limited prayers."

The bench pointed out that considering the arguments of the PNS vis-a-vis SC orders, it had granted only limited prayers to the extent of conduct of CET and admissions. The larger issues are still kept open. "The aspect of grant of orders passed by this court was totally overlooked. There is nothing on record to show that the PNS has no authority to admit such students. The petitioners as well as students cannot be at the eleventh hour confronted with such a situation where all are helpless in spite of the fact that this court has granted permission to petitioners to conduct the course based upon the earlier orders passed by this court."

The Domino effect of official suicides in TN..TIMES OF INDIA CHENNAI EDITION

It was around 9 pm when the doctor got a call from a young IAS officer serv ing in a central district in Tamil Nadu seeking an appointment. At the bureaucrat's residence, his officer's wife, visibly upset, started complaining about the deteriorating health of her husband. "They (politicians) are neither allowing him to work, nor letting him in peace,'' she told the doctor who prescribed a few pills and suggested some de-stressing practices. A few months after the incident, the bureaucrat sought for a transfer and went to the Central service. This incident happened a few years ago. But government officers say that there could be dozens of similar episodes before and after that.

While the image of the average babu - a pen pusher given to indolence and the cause of much of the problems plaguing India - continues to ring true, the ones that tend to do honest work are increasingly under pressure in Tamil Nadu. While the flexible and the weak-kneed succumb to the pressures the upright ones take on the powers that be. But honest officers caught in between like S Muthukumarasamy go through a nightmare unable to take the pressure from their political bosses to violate rules to favour their acolytes.

Those unable to withstand the pressure resort to suicide like Muthukumarsamy . This year there have been at least three other well publicised complaints of political interference taking a toll on government officials.

Psychiatrists say suicides can have a domino effect."When people suffering from prolonged severe depression read about suicides, they will start assuming that suicides are the solution to escape from their problems,'' said K Sasikala, another psychiatrist.

Political intervention in transfers, promotions and appointments has reached its peak in the state,'' says All India State Government Employees' Confederation general secretary K Balasubramanian. Those failing to follow politicians' di to bend rules suffer transfers, punishment postings and humiliation."You will not be left alone if you are honest,'' says a senior bureaucrat. This of ficer learnt it the hard way when even his subordinates refused to obey him after he started turning down orders from a certain minister to bend rules. Proposals mooted by the officer were turned down or put in the backburner. State president of Tamil Nadu State Revenue Officials Association B K Sivakumar says political meddling is rampant in transport, revenue, police and education departments though prevalent in other departments too."There are mediators in every district. The moment an officer gets ready to fill vacancies in his department, someone identifying himself as minister's PA will telephone you. Subsequently , the officer will receive a list of names written in a paper. It will not be a letterhead nor will it have a signature to trace the origin,'' Sivakumar said.

If the officer fails to accommodate the list, he will receive calls from people associating themselves to the powerful. "Those not falling in line would face transfers,'' Sivakumar said.

A revenue officer in his 50s said he was abused with swear words in his office by a person close to a political bigwig for refusing to entertain a request during his stint in Madurai. "The police did not register a case based on my complaint. Worse I was humiliated by the police. Even staff in my department sidelined me,'' he said. He was later forced to withdraw the complaint.

"Right from preparing a list of beneficiaries for old age pension scheme to awarding contracts, one would face pressure. But when things go wrong and the public get angry , the politicians will blame the officer and punish him,'' he said.

Officials point out that when the government changes there was additional pressure on the staff to cancel appointments and contracts approved by the previous government. An officer claimed that there were attempts to order a vigilance raid in his house, after he took on a powerful politician.

Government staff say they could sense depression and stress rising among employees. However, they are pessimistic that much can be done to end political intervention."All we can do is stage protests. A change of mind among politicians is the only solution,'' says Tamil Nadu Government Employees' Union State president Ku Paul Pandian.

மாணவர் எதிர்காலம் யார் கையில்?



தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. இது உண்மையா? உண்மை போன்ற தோற்றமா? எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வை சுமார் 8.43 லட்சம் பேர் எழுதினர். 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் முறைகேடுகளைக் கண்காணிக்க பறக்கும் படைகள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்கள் துண்டுச்சீட்டு வைத்திருத்தல், பார்த்து எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை தேர்வு எழுத முடியாது. இதுதவிர, ஆள் மாறாட்டத்தைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

"கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா?' என்பார்கள். அதுபோல எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி தவறுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவரை கண்டும் காணாமலும் நடந்தவையெல்லாம் இப்போது கண் எதிரிலேயே நடக்க ஆரம்பித்து விட்டன.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில பெரிய தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை உருவாக்கி கல்வி வணிகத்தைச் சிறப்பாகச் செய்து வருவதன் ரகசியம் இப்போது அம்பலமாகியிருக்கிறது. தனியார் பள்ளி நிர்வாகங்கள் தரும் பணத்துக்கும், தங்கக் காசுகளுக்கும் கல்வித் துறையும், ஆசிரிய சமுதாயமும் சோரம் போவது பெரும் சோகமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் "பிளஸ் 2' கணிதத் தேர்வின்போது செல்லிடப்பேசி மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) சக ஆசிரியர்களுக்கு அனுப்பி விடையைப் பெற்று மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்களைப் பறக்கும் படையினர் கையும், களவுமாகப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண், 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது வழக்கம். இதற்காக சில தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு முறைகேடாக உதவுவதாக பரவலாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அதே பள்ளி ஆசிரியரைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது, தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தடை என்பன உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இவ்வளவு விதிகளும் இந்தப் பள்ளியில் மீறப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஓர் ஆசிரியை உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டக் கல்வி அலுவலர் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது கல்வித் துறைக்கும், ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாபெரும் இழுக்காகும்.

இதேபோன்ற புகார் கடந்த ஆண்டும் எழுந்தது. சில அரசுப் பள்ளி ஆசிரியர்களும், மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியர்களும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் புகார் எழுந்தபோது கல்வி அலுவலர் மறுத்தார்.

இந்நிகழ்வு மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது. மேலும், வினாத்தாள் வெளியானதால் பிளஸ் 2 கணிதப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மற்றப் பாடத் தேர்வுகள் மட்டும் ஒழுங்காக நடந்திருக்குமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 1,500 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒசூர் கல்வி மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் அளித்த பட்டியல் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இப்போது புகார் கூறப்பட்டுள்ள 2 ஆசிரியர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

அப்படியிருக்கும்போது அவர்கள் எவ்வாறு தேர்வுக் கண்காணிப்புப் பணியில் இடம்பெற்றார்கள் என்பது பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். இதுபற்றி விசாரணை செய்து கல்வித் துறைக்குச் சமர்ப்பித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Dinamani

By உதயை மு. வீரையன்

மாவட்டக் கல்வி அலுவலக ஆணை ஏதும் இல்லாமல் ஆசிரியர்கள் தேர்வுக் கண்காணிப்புப் பணியில் எப்படி ஈடுபட முடியும்? அதே பள்ளியின் கணித ஆசிரியர், பள்ளி நிர்வாகம், கல்வித் துறையின் அனுமதியின்றி தேர்வுப் பணியைக் கண்காணிக்க முடியுமா? அப்படியே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டாலும் இப்படிப்பட்ட மாபெரும் தவறுகள் செய்யக் காரணம் வேண்டுமல்லவா?

அரசுப் பள்ளி ஆசிரியர்களில் சிலர் இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளில் தேர்வுக் கண்காணிப்பாளர்களாகச் செல்ல ஆர்வம் காட்டுவதாகவும், இதற்காக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ள சிலரது ஆதரவுடன் குறிப்பிட்ட தனியார் பள்ளிக்குப் பணியாற்ற ஆணை பெறுவதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக இந்த ஆசிரியர்களுக்குப் பெருந்தொகை அன்பளிப்பாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய ஒசூர் தனியார் பள்ளி, பொதுத் தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இடம் பிடித்து வருகிறது. இதனால், பெற்றோர் கூடுதல் பணம் கொடுத்து அப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால், மற்ற தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளால் கல்வி வணிகமாகிப் போனதால் தொழில் போட்டிகளும் பெருகிவிட்டன. மாணவர்கள் வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

இதற்கு உழைப்பு மட்டுமே போதாது என்பதால் குறுக்கு வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கல்விச் சந்தை சீரழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு ஆங்காங்குள்ள கல்வித் துறையினரும் விலை பேசப்பட்டு துணை போகின்றனர்.

இதனால், மாநிலம் முழுவதிலும் இருந்து, பணம் படைத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவம், பொறியியல் கனவுகளோடு இப் பள்ளிகளில் சேர்க்க படை எடுக்கின்றனர். அதற்காக அந்த ஊர்களில் வீடுகள் எடுத்துத் தங்கியிருக்கும் வெளியூர் பெற்றோர்களைக் காணலாம்.

இந்தப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்துவிட்டால் எப்படியாவது உயர் கல்விக்குத் தேவையான மதிப்பெண்களைப் பெற்றுத் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை வளர்ந்துவிட்டது.

உண்மை, ஒழுக்கம், பண்பாடு எல்லாவற்றையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது எப்படியாவது மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும்; உயர் கல்வி பயின்று மருத்துவராகவும், பொறியாளராகவும் வெளிவர வேண்டும்.

சமச்சீர்க் கல்வி யாருக்கு வேண்டும்? அண்மைப் பள்ளி, பொதுப் பள்ளி பற்றிக் கவலையில்லை. போட்டிகள் மிகுந்த இந்தச் சமுதாயத்தில் எப்படியாவது வெற்றி பெறுவதே பெரும்பாலான பெற்றோரின் நோக்கமாக இருக்கிறது.

இந்த முடிவில்லாத ஓட்டத்தை யாரால் தடுக்க முடியும்? இந்தத் தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் வேண்டுமட்டும் பெருந்தொகை பெற்றுக் கொண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் எவ்வளவு முயன்றாலும் இவர்களோடு போட்டி போட முடியுமா?

இரவு, பகலாகக் கடுமையாக உழைத்துப் படித்து நேர்மையுடன் தேர்வு எழுதும் அந்த மாணவர்கள் இதுபோன்ற மோசடிகளால் அடைவது ஏமாற்றம்தான். இளம் வயதில் ஏற்படும் இந்த ஏமாற்றம் அவர்களை எங்கே கொண்டு போய்விடும் என்பதை இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வின்போது இந்தச் சர்ச்சை தொடர்கிறது. சில ஆசிரியர்களும், சில கல்வித் துறை அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையே, ஏன்? பணம் பாதாளம் வரை பாய்கிறதா?

கல்வியின் நோக்கமே மனிதர்களை உருவாக்குவதுதான். ஆனால், இப்போது மதிப்பெண்களை உருவாக்குவது என்று ஆகிவிட்டது. இந்தத் தேர்வு முறையினை மாற்றியமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் காலம் காலமாக கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். யார் செவியிலும் விழவில்லை. இந்தப் பூனைக்கு மணிகட்டுவது யார்?

இந்த மனப்பாடக் கல்வி நல்ல மனிதர்களை உருவாக்காமல் நகல் எடுக்கும் இயந்திரங்களை உருவாக்குகிறது. சிந்திக்கும் அறிவையே மழுங்கடித்து விடுகிறது. இவர்கள் படைப்பாளிகளாக மாறாமல் படிப்பாளிகளாகவே மாறிவிட்டனர்.

இதனால்தான் நம் மாணவர்கள் அகில இந்திய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். நம் நாட்டில் உலகத் தரத்திலான கல்வி நிறுவனங்கள் உருவாகாமல் போனதற்குக் காரணமும் இதுதான்.

"சிந்தனை செய்ய ஆரம்பிப்பது மிகவும் சுலபமான காரியம் அல்ல; ஆனால் மனிதன் ஒருமுறை சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், பிறகு அவன் சிந்திக்கும் பழக்கத்தைக் கைவிடமாட்டான்; மாணவன் உலகத்தையும், இயற்கையையும், பூமியின் மேல் உள்ள பல பொருள்களையும் ஊடுருவிப் பார்த்துக் கவனித்து பிறகு தனக்குத் தானே சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்...'' என்று கல்வியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் ரூசோ கூறுகிறார்.

மனிதர்களை மட்டுமல்ல, மாணவர்களையும், சிந்திக்கவிடாமல் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளைத் திணிக்கும் போக்கே எங்கும் தொடர்கிறது. இதனைக் கல்வியாளர்களும், உளவியல் வல்லுநர்களும் எதிர்க்கின்றனர்.

மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பாடங்களைக் கற்கும் போதுதான் அவர்களைச் சிந்திக்கச் செய்ய முடியும் என்பது அவர்கள் கருத்து.

"நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் முடிவு செய்யப்படுகிறது...'' என்று கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இந்த மாணவர்களின் தலைவிதி எங்கே, யாரால் முடிவு செய்யப்படுகிறது என்பதுதான் தெரிய வேண்டும்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...