Wednesday, June 17, 2015

ரெயில்வேயில் சீர்திருத்தம்

மக்களுடைய போக்குவரத்தின் முதுகெலும்பாக திகழ்வது ரெயில்வேதான். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையில் 12,617 பயணிகள் ரெயில்களும், 7,421 சரக்கு ரெயில்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. 7,172 ரெயில் நிலையங்கள் மூலம், 2 கோடியே 30 லட்சம் மக்கள் தினமும் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் உள்ள மொத்த ரெயில்பாதையின் நீளம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கிலோ மீட்டராகும். 13 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரெயில்வேத்துறை எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காணவில்லை. இவ்வளவுக்கும் பொதுபட்ஜெட்தவிர, பாராளுமன்றத்தில் ரெயில்வேக்கு மட்டும் என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சுதந்திரம் அடைந்த ஆரம்பகாலங்களில் இந்திய ரெயில்வே ஒரு ரோல்மாடலாகவே இருந்தது. 1956–ம் ஆண்டு பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு வந்த சீன பிரதமர் சூ என் லாய், இது ஒரு நவீனமான ரெயில்பெட்டி தொழிற்சாலை, சீனர்கள் இங்கு வந்து அறிந்துகொள்வது மிகவும் தகுதியானது. கிழக்கத்திய நாடுகளெல்லாம் இந்த ரெயில் பெட்டி தொழிற்சாலை குறித்து பெருமைகொள்ளவேண்டும் என்று எழுதிவைத்தது, இன்றும் அழியாத சாட்சியாக இருக்கிறது.

ஆனால், இன்று இந்திய ரெயில்வே, சீனாவைவிட மிகவும் பின்தங்கிவிட்டது. பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்திய ரெயில்வேயை சீர்திருத்தவும், வருமானத்தைப்பெருக்கவும் ரெயில்வேயை சரியான பாதையில் கொண்டுசெல்லவும் ஏற்ற வழிவகைகளை ஆராய்ந்து அறிக்கை தர, நிதி ஆயோக் உறுப்பினர் விவேக் தேவ்ராய் தலைமையிலான 8 பேர் கொண்ட கமிட்டியை மத்திய அரசாங்கம் நியமித்து, அந்த கமிட்டியும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தற்போதைய நிலையில், ரெயில்வேயில் ஒரு ரூபாய் வருமானம் வந்தால், அதில் 94 காசுகள் ஊழியர்கள் சம்பளம், பென்ஷன், இயக்க செலவு போன்ற நிர்வாக செலவுகளுக்கே போய்விடும் நிலையில், இந்த அறிக்கையில் வருவாயை பெருக்கும், நிர்வாகத்தை சீர்திருத்தும் பல பரிந்துரைகள் உள்ளன. ரெயில்வேயை முழுக்க முழுக்க தனியார் மயமாக்காவிட்டாலும், அதற்கு முன்னோடியாக வாசலைத் திறந்துவைக்கும் வகையில், பாசஞ்சர் ரெயில்களை தனியார் ஓட்டும் பரிந்துரை இருக்கிறது. புறநகர்களில் ஓடும் மின்சார ரெயில்களை ரெயில்வே நிர்வாகமும், மாநில அரசும் இணைந்து நடத்தவும், எந்த திட்டம் என்றாலும் வணிகரீதியான பொறுப்பேற்பது, நிர்வாகத்தில் அதிகாரப்பகிர்வு, எல்லாவற்றையும் மேற்பார்வையிட ஒரு சுயேச்சையான ஒழுங்குமுறை அமைப்பு, ரெயில்வே நிர்வாகம் தன் முக்கிய பணியைவிட்டுவிட்டு, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு மைதானங்கள், உணவு வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபடுவதை கைவிடுதல், பாதுகாப்பு பணியை ரெயில்வே பாதுகாப்பு படையில் இருந்து மாநில ரெயில்வே போலீசிடம் ஒப்படைத்தல் போன்ற பல பரிந்துரைகளை செய்துள்ளது.

வருமானத்தைப்பெருக்க பல பரிந்துரைகளை செய்த இந்த கமிட்டி, ரெயில்களில் பெரும்பாலும் இலவச பாஸ்கள், சலுகை கட்டணத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க எந்த வழியையும் சொல்லவில்லை. ரெயில் நிர்வாகத்தில் இழப்பு என்றால் அது மக்களின் வரிப்பணம்தான். தனியார் பங்களிப்போடு வருவாய் ஈட்டுவதில் தவறு எதுவும் இல்லை. அந்த முயற்சியையும் செய்துபார்ப்பதில் தவறேயில்லை. பாலும் தண்ணீரும் கலந்து இருந்தால், அன்னப்பறவை அதில் பாலை மட்டும் தனியாக பிரித்து குடிக்கும் என்பதுபோல, ரெயில்வே நிர்வாகத்தை சீரமைக்க உடனடியாக மத்திய அரசாங்கம் இந்த கமிட்டியின் பரிந்துரைகளில் சாத்தியமானவற்றையெல்லாம் ஏற்று நடைமுறைக்கு கொண்டுவந்து ரெயில்வே நிர்வாகத்தை வேகப்படுத்த வேண்டும்.

Tuesday, June 16, 2015

விபத்தில்லா பயணத்துக்கு...

தமிழகத்தில் ஜூலை 1 முதல் தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புக்குத் தலைக்கவசம் அணியாதது என்பது முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதால், தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் 2001-இல் 3 கோடியே 85,50,026 இரு சக்கர வாகனங்கள் இருந்ததாம். 2012-இல் அதன் எண்ணிக்கை 11 கோடியே 54,19,175-ஆக உயர்ந்ததாம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதலாக 8 கோடி இரு சக்கர வாகனங்கள் பயணிப்பதற்கு உகந்தவாறு சாலைகள் உள்ளனவா?
தமிழகத்தைப் பொருத்தவரை, 2014 மார்ச் நிலவரப்படி 1 கோடியே 88 லட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் 1 கோடியே 55 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்களாகும். அதாவது, இரு சக்கர வாகனங்கள் தவிர்த்து இதர வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 33 லட்சம்தான்.
இந்த 33 லட்சம் வாகனங்கள் பயணிப்பதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நாற்கரச் சாலை, ஆறுகரச் சாலை, தங்கச் சாலை என்று செலவிடும் அரசு, இரு சக்கர வாகனங்களின் வழித்தடங்கள் குறித்து ஏதாவது விசேஷ கவனம் செலுத்தியதா என்பது தெரியவில்லை.
பெருவழிச் சாலைகளை விட்டு நீங்கி நகருக்குள் வந்துவிட்டால் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னலிலும் இரு சக்கர வாகனத்தைத் தவிர்த்து பிற வாகனக்காரர்கள் எல்லாம் அவரவர் வழியில் பிரிந்து செல்வதற்காக சாலை முழுவதையும் அடைத்ததுபோல் நின்றுகொண்டு அவர் அவருக்கான சிக்னல் கிடைத்ததும் சீறிப் பாய்ந்து செல்வதற்கு இடையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வேண்டாத, அழையாத விருந்தாளியைப்போல் "ஆடி', "ஹூண்டாய்', "டொயட்டோ', "பென்ஸ்'க்களுக்கு இடையில் வளைந்தும், நெளிந்தும், கூனியும், குறுகியும் செல்ல வேண்டியிருக்கிறது.
இரு சக்கர வாகனம் என்பது அதை ஓட்டுபவரின் தலைக்கவசத்தையும் சேர்த்துதான் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதை யார் தடுக்கிறார்கள் என்பது புரியவில்லை.
இரு சக்கர வாகனத்தைத் தயாரிப்பவர்கள், பின்னால் வரும் பிற வாகனங்கள் தெரிவதற்காகக் கண்ணாடிகள், ஒலிப்பான்கள் வைத்திருக்கிறார்கள். இதேபோல, அவர்கள் வாகன ஓட்டியின் உயிரைக் காக்கும் தலைக்கவசத்தை வண்டியுடன் சேர்த்து விற்பதை அரசு கட்டாயமாக்கலாமே!
மேலும், வாகன சக்கரத்தில் சேலை மாட்டிக் கொள்ளாமல் இருக்க "சாரி கார்டு' வைப்பதுபோல், இரண்டு தலைக்கவசங்கள் வைப்பதற்கும் வாகனத்தில் இடம் வைத்திருக்க வேண்டும்.
வாகனப் பதிவுக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லும்போது, வண்டியுடன் வாங்கிய தலைக்கவசம் மட்டுமல்லாமல், பின் இருக்கையில் அமருபவர்க்காக கூடுதலாக ஒரு தலைக்கவசமும் வாங்கிய ரசீதுடன் சமர்ப்பித்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.
இது எல்லாமே சரிதான். ஆனால், எந்த மனிதனையும் எந்தச் சட்டமும் இயற்கைக்கு மாறாக வாழும்படி நிர்பந்தித்தால் அந்தச் சட்டம் தோற்றுவிடும்.
குளிர்ப் பிரதேசங்களான மேல்நாட்டவர்களைப் போல் அல்லாமல் நம் நாட்டவர்களுக்குத் "தலைநீர்' என்பது இருக்கிறது. இது அடிக்கடி இறங்கி தொண்டைக்கட்டு, தலைவலி, காய்ச்சல், இருமல் போன்றவற்றை உண்டுபண்ணும். தீராத இருமலையும், கபத்தையும் உண்டுபண்ணும்.
வெயில் அடிக்கும் வேளையில், ஒருநாளில் 4 அல்லது 5 மணி நேரம் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தனது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்ட ஒருவர் தலைக்கவசம் அணிந்து 3 நாள்கள் கடும் வெயிலில் பயணித்தால் அவருக்கு பலவிதமான உடல் உபாதைகள் வந்துவிடும். தலைக்கவசம் அணியாதவர்களைத் தண்டிக்கும் போக்குவரத்துக் காவலர்களுக்கும் இதுதான் நிலைமை. இதுபோன்ற தொல்லை ஏற்படாமல் நம்மை நாமேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பெருவழிச் சாலைகளில் கனரக வாகனங்களுக்கு இரண்டு தடங்கள், மகிழுந்து எனப்படும் கார்களுக்கு இரண்டு தடங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு இரண்டு தடங்கள் வீதம் வருவதற்கும், செல்வதற்கும் ஏற்படுத்த வேண்டும்.
நகரங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு என இரண்டு வழித்தடங்கள் வருவதற்கும், செல்வதற்கும் என்பதோடு போக்குவரத்து சிக்னலில் இரு சக்கர வாகனங்களுக்குத் தனி வரிசையையும் ஏற்படுத்த வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை சட்டம் இயற்றுவதன் மூலம் தொடங்காமல் டாஸ்மாக்கை போல் அரசின் கொள்கை முடிவாக அறிவித்துத் தொடங்க வேண்டும். அப்படியானால்தான், யாரும் நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுவிட முடியாது.
இந்தியாவில் ஓராண்டில் சாலை விபத்துகளால் இழப்பீடு போன்ற பல வகைகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயைக் காப்பீட்டுக் கழகங்கள் வழங்குகின்றன என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பொதுமக்களாகிய நாமும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு எந்த விபத்தையும் ஏற்படுத்த மாட்டோம் என்றும், அப்படியே எதிர்பாராத விபத்து நடந்துவிட்டாலும் இழப்பீடு கேட்க மாட்டோம் என்றும் உறுதி ஏற்போம்.
இதன் மூலம், ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு மீதமாகும் 5 லட்சம் கோடி ரூபாயைக் கொண்டு பாதுகாப்பான சாலை, போக்குவரத்து அமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.
காப்பீடு செய்யப்பட்ட வாகனங்கள் 10 - 15 ஆண்டுகள் விபத்தே உண்டாக்காமல் இயக்கப்பட்டால், கட்டிய காப்பீட்டுத் தொகையை காப்பீட்டுக் கழகங்கள் திருப்பி அளிக்க வேண்டும். இதனால், விபத்தில்லாமல் வாகனம் ஓட்டுவதில் கவனம் கூடும். தரமான சாலை, தலைக்கவசம் அணிதல், வாகனம் ஓட்டுபவரின் விழிப்புணர்வு போன்ற பல செயல்களின் மூலம் விபத்தில்லா சமூகத்தை உருவாக்குவோம்.

கட்டுரையாளர்:
பொறியாளர் (ஓய்வு).

Passengers want railways to reschedule Madurai-Chennai Duronto Express

MADURAI: Passengers are demanding the railways to reschedule the Chennai Central - Madurai Duronto Biweekly Express trains as it runs with a considerable number of vacant seats and berths.

During the recently concluded Passenger and Customer Facilitation Fortnight events, popular talk show orator and TV personality S Raja pointed out the need to reschedule the train.

The non-stop train leaves Chennai Central at 10.30pm on Mondays and Wednesdays and reaches Madurai at 7.10am on Tuesdays and Thursdays.

In the return direction, it leaves Madurai at 10.45pm on Tuesdays and Thursdays and reaches Chennai Central at 7.15am on Wednesdays and Fridays.

The train fare is Rs 1,030 for AC three-tier, Rs 1,440 for AC two-tier and Rs 2,425 for first class AC travel.

"It is one of the best trains to travel without any disturbance and quite affordable but the vacant berths is the real concern. Last time when I travelled in the 1A coach, I was the lonely passenger. The TTE asked me if I was scared of being alone in the coach and was willing to shift me to another coach," said the orator known for his lighter anecdotes.

Raja said if railway authorities operated the train on weekends, it would benefit several passengers.

Inaugurated in 2012, Duronto hasn't got good patronage from passengers.

Former divisional rail user consultative committee member and president of the Tamil Nadu Foodgrains Merchants Ltd S P Jeyapragasam claimed that many rail users were not even aware about the train.

"There is fear among rail users' forums that Madurai may lose a good train due to lack of patronage. In fact, we suggest operating it on all days especially weekends," he said.

Sources in the commercial department said that the train would attract more passengers if it ran on the Madurai - Chennai Egmore route. At present, it takes the circuitous Karur - Namakkal - Salem route since it has to be operated non-stop and single track in chord line is greater impediment.

"Unfortunately, people from our region people feel more comfortable when trains are operated to Chennai Egmore though Central is close by", a commercial staff said.

Railway officials said that the suggestions collected from passengers during the fortnight drive will be sent to the railway ministry for further perusal.

4,000 toppers from last year join race for 3,000 medical seats

CHENNAI: A blanket of uncertainty shrouds the medical admission process this year for students of the current batch, as 4,679 students, who cleared Class 12 in previous years with high scores have joined the race for MBBS seats. About 70 students from the current batch had moved the Madras high court in this regard last week and won an innocuous order saying participation of previous year students was 'subject to the outcome' of the case.'

Tamil Nadu government has 17 years as minimum age for MBBS counselling, but there is neither upper age limit nor the number of attempts at MBBS counsellings.

In the past few years, the cut-off for MBBS admissions has been increasing by 0.5 to 1 mark, making it tough for students of previous batches. However, this year, the cut-off marks have been dismal following big fall in number of centum-scorers, with students crying that question papers this year were tough and evaluation strict.

While there are only about 2,200 medical seats on offer at counselling, a large number of the 4,679 previous students are set to steal a march over the fresh batch students. "Almost 50% of the seats on offer will go to them, making it difficult for 2014-15 students. This certainly is not a level playing field," said an advocate familiar with the brewing battle.

A unique group of 46 students who were eligible for an MBBS seat last year but were rejected as they were aged below 17 years by a few days/weeks, will also join the rat race this time around. "We have received 31,525 applications that are eligible this year, for 2,257 seats. 4,679 students from the previous batches will be participating in the medical counselling this year," said director of medical education Dr S Geethalakshmi for the record.

CBSE says AIMPT retest not possible in four weeks

NEW DELHI: The Central Board of Secondary Education said on Monday that it will approach the SC to seek more time to conduct AIPMT 2015, saying it is not possible to conduct the retest in four weeks.

The board said that it will move the apex court to explain that the test-preparation for AIPMT takes seven months.

The SC on Monday cancelled the AIPMT 2015 and ordered CBSE to hold the retest within four weeks.

Over 6.3 lakhs took the test conducted by CBSE on May 3, 2015.

Speaking to the Times of India, Satbir Bedi, officiating chairman, CBSE, said: "It is not feasible to conduct such an exam in a month time. We start preparation for the AIMPT from August. A minimum of seven months is needed for preparation."

Earlier, the SC bench had asked Haryana police to file a fresh report indicating the number of beneficiaries of the alleged irregularities in the pre-medical examination following allegations of paper leak.

The CBSE initially denied the incidents of leak. The SC also asked the police to identify as many candidates as possible who had been benefited from the alleged leak.

The board was scheduled to declare the results on June 5, which the SC stayed.

On Monday, the court asked CBSE to hold the retest within four weeks while cancelling the test held on May 3.

According to Bedi, the board will meet and decide the future course of action, while out rightly saying that retest in four weeks is not possible. "The board will explain to the court that more time will be needed to conduct the exam."

According to sources in AIMPT cell in CBSE, the earliest the board can conduct the exam will be in November 2015.

Cheating in exams a national phenomenon

NEW DELHI: Images of parents and friends scaling walls and clinging to windows to help Bihar students taking their Class X exams are still fresh.

These scenes might not have surprised many given the state of education in that region, but this aberration has become a national phenomenon with at least 12 major question paper leaks in as many months affecting lakhs of students across states - be it CBSE AIMPT 2015, or UPPSC or UP combined pre-medical test or the TN Board Class XII maths paper or Jamia Millia's engineering and BDS entrance test paper leaks.

Outwitted, university administrations are seeing this as a menace that must be tackled on a war footing. "It seems this is an organized crime. Universities alone cannot stem this and police will have to investigate. We have tried all checks to the best of our ability," said Talat Ahmad, the Jamia vice-chancellor.

The problem has reached Delhi, Pune or Bangalore, where the best practices were followed. No exam seems safe which has assumed industry-like proportions. Big money is at stake and months of preparation are made to breach examination systems.

Such is the faith in the capacity of fraudster to deliver. It was on show in the recent leak of BCom final year exam papers from the School of Open Learning, Delhi University. The menace continued for four days. "Despite media report on the May 27 leak, we still got the paper on WhatsApp on May 28 and thereafter. We were confident that we'd get the papers," said one student.

The money put on the table is irresistible and people are ready to stake their careers to impersonate for others and take the exams. People who've already cracked the test have been caught impersonating at entrance. Nearly a dozen cases of impersonation were reported from Jamia in 2010 and two this year.

Former CBSE chairman Ashok Ganguly says the reason for the growth of this menace is because technology isn't used effectively and the sloppiness of the exam-conducting bodies. "The bodies conducting examinations are living in the 19th century, but those behind this mischief are using 21st century technology. Those behind the recent AIPMT 2015 leaks used blue-tooth and other communication devices. This speaks a lot about how we are being outwitted."

The computer-based CAT for admission to the IIMs remains one of the most secure tests. Barring some technical glitches during its switch over from pen-paper mode to computers, it remains one of most technically-robust systems.

Rohit Kapoor, convener of CAT 2013 says: "We take a lot of measure which we don't reveal to the public. It's all about systems and process at various levels and there are checks right from preparation of the question papers to creating the test-centres. We've adopted the best global practices."

Tiruchi medical college allowed to admit 50 more students

In a big relief to the government and the Directorate of Medical Education, which has set in motion the process of medical admission, the Medical Council of India (MCI) has renewed its permission to K. A. P. Viswanatham Government Medical College (KAPVGMC) here for admitting 50 more students during the academic year 2015-16.

With this, the decks have been cleared to admit 50 more students in addition to the existing 100 students in MBBS course being offered by the KAPV Government Medical College.

The intake for the course was increased from 100 to 150 in 2013-14.

A letter to this effect has been sent to the DME and M.K. Muralidharan, Dean, KAPV Government Medical College, Tiruchi.

He told The Hindu on Monday that the MCI team that had inspected the college a few months ago was satisfied with the facilities available at the college for offering 50 more seats. Most of the shortcomings and suggestions raised by the team had been taken care of.

Besides increasing the number of class rooms and examination halls, the college had set up audio visual facilities in class rooms as per the MCI norms.

There has been a substantial increase in number of doctors attached to the college and hospital; it had gone up to 216 from 150. Similarly, nine more doctors had taken charge in hospital attached to the college, Dr. Muralidharan added.

He said that the MCI had permitted the Government Mohan Kumaramangalam Medical College in Salem to admit 25 more students in addition to the existing 75 students during the current year. While stating that the college has to apply for renewal for 50 more seats during 2016-17 with MCI, he said it would expedite steps for creating additional facilities at the college.

The MCI had also permitted Government Mohan Kumaramangalam Medical College in Salem to admit 25 more students

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...