Thursday, April 7, 2016

காருக்குறிச்சியின் நாத சுகம்


டாக்டர் எல். மகாதேவன்

நினைவு தினம் ஏப்ரல் 8

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நாகஸ்வரக் கலைஞர் காருக் குறிச்சி அருணாசலம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருக்குறிச்சி எனும் ஊரில் 1907-ம் ஆண்டில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை பலவேசம் நெல்தானிய அளவை செய்யும் பணியைச் செய்துவந்தவர்.

ஒரு முறை காருகுறிச்சியிலுள்ள பெரும் பண்ணையார் ஒருவர் இல்லத் திருமணத்துக்கு கூறைநாடு நடேசபிள்ளை எனும் பிரபல நாகஸ்வர வித்வான் நாகஸ்வரம் வாசிக்கச் சென்றிருந்தார், அப்போது அருணாசலத்தின் தந்தை பலவேசம், அந்த நாகஸ்வர வித்வான் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து மாலைகள் கட்டிக்கொண்டிருந்தார். “மாப்பிள்ளை புறப்படத் தயார், உங்களை அழைத்துவரச் சொல்கிறார்கள்” என்று நடேசபிள்ளைக்கு ஆள் வந்தது. “பத்து நிமிடங்களில் கிளம்பி வருகிறோம் என்று சொல்” என்று அவர் வந்த ஆளிடம் சொல்லியனுப்பினார்.

இதுபோலப் பல ஆட்கள் வந்தழைப்பதும், “இதோ கிளம்பிவிட்டோம்” என்று நடேசபிள்ளை சொல்வதுமாகவே இருந்தது. அந்தப் பண்ணையார் தனது வார்த்தைக்கு யாரும் கட்டுப்படவில்லையென்றால் அவர்களைக் கொன்றுபோடக் கூடத் தயங்க மாட்டார். “இந்த நாகஸ்வரக்காரர் இப்படி அலட்சிய மாகயிருக்கிறாரே, என்ன ஆகப் போகிறதோ” என்ற கவலை மிகந்தது பலவேசத்துக்கு இறுதியாகப் பண்ணையாரே நேரில் வந்துவிட்டார். “இதோ வந்துகொண்டே இருக்கிறோம், நீங்கள் முன்னால் போய்க்கொண்டிருங்கள்” என்று அப்போதும் நடேசபிள்ளை கூறியபோது, “அதற்கென்ன, தங்கள் சௌகரியம் போல் வாருங்கள்” என்று சிறிதும் கோபமற்றவராகப் பண்ணையார் கூறிச் சென்றதைக் கண்ட பலவேசத்துக்கு இது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

‘ஆஹா! இவர் ஒரு பெரிய நாகஸ்வர வித்வான்; இவரிடமுள்ள கலை எவ்வளவு மதிப்புடையதாயிருந்தால் நமது பண்ணையார் இவ்வாறு சிறிதும் கோபம் கொள்ளாதிருப்பார்! இந்தக் கலையைப் பயில வேண்டும், அப்போதுதான் நமக்கும் மதிப்பு கிடைக்கும்’ என்ற முடிவு செய்த பலவேசம், சேரன்மகாதேவியிலிருந்த நாகஸ்வரக் கலைஞர் ஒருவரிடம் சீடரானார். வயதும் இதரச் சூழ்நிலைகளும் அவரது ஆசைக்கு இடையூறாக இருந்தன. தன்னால் சாதிக்க முடியாதவொன்றைத் தன் மகன் அருணாசலமாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு.

அருணாசலத்தை, சுத்தமல்லி சுப்பையா கம்பரிடம் நாகஸ்வரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் கற்றுக்கொள்வதற்காகச் சேர்த்துவிட்டார். ஓரளவு தேர்ந்த பின், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கச்சேரிகளும் அருணாசலத்துக்குக் கிடைத்தன. எனினும், உலகிலேயே நாகஸ்வரத்தில் ஈடிணையற்ற சக்கரவர்த்தியாக விளங்கும் திருவாவடுதுறையார் போன்ற ஒருவரிடம் சீடனாக ஆனால் தனது கலை மேன்மை பெறும் என்றும், அப்படியொரு நல்வாய்ப்பு தனக்குக் கிட்டுமா? என்றும் சிந்தனைவயப்பட்டார் அருணாசலம்.

ஈடேறிய கனவு

ஒருமுறை காருக்குறிச்சியிலுள்ள ஒரு பண்ணையில் நாகஸ்வரம் வாசிக்க வந்திருந்தார் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவருடன் வாசித்து வந்த ‘கக்காயி’ நடராஜசுந்தரத்துக்கு உடல்நலமில்லை. “யாரேனுமொரு பையன், அவன் சும்மா சத்தம் கொடுத்தால் போதும். ஒத்தாசைக்குக் கிடைப்பானா?” என்று தம் நண்பர்களிடம் கேட்டார் திருவாவடுதுறையார். மணிசர்மா என்பவர் உடனே ஓடிச் சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகம் செய்வித்தார்.

“பையன் தேவலாமே. இவன் சில காலம் என்னோடு இருக்கட்டும்” என்று ராஜரத்தினம் பிள்ளை கூறினார். இவ்வாறு 26.6.1935 அன்று ராஜரத்தினம் பிள்ளையின் சீடராக ஆனார் அருணாசலம். தனித்து, அமர்ந்து, முறைப்படியெல்லாம் கற்பிப்பவரல்ல திருவாவடுதுறையார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் வாசித்துக்கொண்டிருப்பார். அதைக் கவனமாகக் கேட்பது, கச்சேரிகளில் கூட அமர்ந்து கேட்பது இவைதான் பயிற்சி. கற்பதைக் காட்டிலும், இசையில் ‘கேள்வி’ பெரும் பயனைத் தரும்.

இப்படியாக, ராக ஆலாபனை செய்வது, அழகாகக் கீர்த்தனைகளை வாசிப்பது போன்ற பல அம்சங்களில் நிகரற்றவராக ஆனார் அருணாசலம். பாராட்டுகளும் பட்டங்களும் சன்மானங்களும் வந்து குவிந்தன. ராஜரத்தினம் பிள்ளைக்குப் பின்பு, மிக உயர்வான ஸ்தானம் அவருக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட நிலையிலும் சிறிதும் கர்வமில்லாமல், எல்லோரிடத்தும் அன்புடனும் பண்புடனும் பழகிவந்தார் அருணாச்சலம்.

தன்னை மறக்கும் கலை

ஒருமுறை சென்னை பனகல் பார்க் அருகே திருமண விழா ஒன்றில் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புக்கு நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வர கச்சேரி. சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமும் அவருக்கு அமோக செல்வாக்கு. ராஜரத்தினம் பிள்ளை நாகஸ்வரம் வாசிக்கும்போது அநேகமாகத் தன்னை மறந்து கண்களை முடிக்கொள்வார். தன்னை மறந்த அந்த நிலையிலேயே, மிக எளிதில் சில ஸ்வரங்களை உதவியாகக் கொண்டு வாசித்துக்கொண்டிருப்பார்.

இந்தத் திருமண நிகழ்விலும் அவர் தன்னை மறந்த நிலையில் வாசித்துக்கொண்டிருந்தார். திடீரென அவரது வாசிப்பு நின்றது. ஆனால், கண்களை மட்டும் திறக்கவில்லை. அருகிலேயே அவரது சிஷ்யப்பிள்ளை காருக்குறிச்சி தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்து வாசித்துக்கொண்டிருந்த அருணாச்சலத்துக்கு கை, கால் உதறல் எடுக்கத் தொடங்கிவிட்டது. வாசிப்பில் தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ என்று அவருக்குள் ஒரு பயம். பயந்தபடியே தனது குருநாதரை ஏறிட்டுப் பார்த்தார். குருநாதரோ ரசித்துக்கொண்டிருந்தார்.

தேடிவந்த பிராபல்யம்

ரசிகர்களுக்குக் காருக்குறிச்சியாரிடம் இருந்த மதிப்புக்கும் அன்புக்கும் ஈடுகூற முடியாது. ஒருமுறை, சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசை விழாவில் நடைபெற்ற அருணாசலத்தின் நாகஸ்வரக் கச்சேரியை வானொலி நிலையத்தினர், வழக்கத்துக்கு மாறாக, நள்ளிரவு 12 மணி வரையிலும் நேரடியாக ஒலிபரப்பினார்கள் என்றால், மக்களுக்கு அருணாசலத்தின் இசையின் மீது இருந்த மதிப்பே காரணமாகும்.

காருக்குறிச்சியாரிடம் புகழ்பெற்ற தவில் கலைஞர்கள் பலர் வாசித்து வந்தனர். திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை, யாழ்ப் பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்றோரை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

அருணாசலம் தனது நாகஸ்வர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்திருப்ப தோடு, சில திரைப்படங்களிலும் வாசித்துள்ளார். ‘கொஞ்சும் சலங்கை’ என்ற திரைப்படத்தில் எஸ். ஜானகி பாட அருணாச்சலம் நாகஸ்வரம் வாசித்துள்ள ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. ‘அனார்கலி’ என்ற இந்திப் படத்தில் லதா மங்கேஷ்கர் ஒரு பாட்டு பாடுவார். அந்தப் பாடலை காருக்குறிச்சி தனது நாகஸ்வரத்தில் இசைத்திருப்பார்.

புகழேணியின் உச்சியை எளிதாகவும், விரைவாகவும் எட்டிப்பிடித்த சிறந்த நாகஸ்வர விற்பன்னரான காருக்குறிச்சி அருணாச்சலம் 8.4.1964 அன்று தன் கோவில்பட்டி இல்லத்தில், இயற்கையைத் தழுவி, இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கினார்.

காருக்குறிச்சி வாசிப்பில் உள்ள சுகம் ரசிகர்களுக்கு ஒரு போதை. நாகஸ்வரம் இருக்கின்ற வரையில், இசை இருக்கின்ற வரையில் அவருடைய பெயர் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகா வித்வான் அவர்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இருக்காது: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு

Return to frontpage

கிராமப்புற மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் வரவேற்பு

தமிழகத்தில் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத் துவத்துக்கான விண்ணப்பங் களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறை இருந்து வந்தது. சோதனை முயற்சியாக பொறியியல் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறையுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையும் கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இவைதவிர விவசாயம், தோட்டக்கலை, வனவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கும் முறை அமலில் இருக்கிறது. ஆனால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பு களுக்கு மட்டும் இன்னும் விண்ணப்பங்களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறையே அமலில் இருக்கிறது. சோதனை முயற்சியாகக்கூட ஆன்லைன் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்படவில்லை.

விண்ணப்பிப்பது சிரமம்

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்படாது. ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையால் நிறைய பிரச்சினை களும், குளறுபடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் எளி தாக ஆன்லைனில் விண்ணப் பித்து விடுவார்கள். கிராமப் புறங்களில் வசிக்கும் மாணவர் கள் ஆன்லைனில் விண்ணப் பிப்பது சிரமம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை கொண்டு வந்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார் கள். அதனால்தான் மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை கொண்டுவரவில்லை” என்றார்.

Return to frontpage

மல்லையா தர முன்வந்த ரூ.4,000 கோடியை நிராகரிப்பது ஏன்?- உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் விளக்கம்

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

மல்லையா தனது உள்நாட்டு, வெளிநாட்டு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கிகளுக்கு மல்லையா செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ.9,000 கோடியை திருப்பிச் செலுத்துவதற்கான மல்லையாவின் இரண்டு யோசனைகளையும் வங்கிகள் கூட்டமைப்பு நிராகரித்தது.

வியாழக்கிழமையன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ரொஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று நடைபெற்ற விசாரணையில், மல்லையா மார்ச் 31, 2016 வரையிலான அவர், அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு உள்ள உள்நாட்டு, அயல்நாட்டு சொத்து விவரங்களை கோர்ட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, மல்லையா கடனை திருப்பி அளிக்க மேற்கொண்ட யோசனைகளை வங்கிகள் மறுத்ததையும் ஏற்றுக் கொண்டது.

சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் அதே வாக்குமூல அறிக்கையில் நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் என்பதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது கடன் தொகை திருப்பி செலுத்தும் விவகாரத்தில் வங்கிகளுடன் மல்லையா அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டுமென்றால் மல்லையா ஆஜராவது மிக முக்கியம் என்று நீதிமன்றம் கருதுகிறது.


மேலும், முதலில் மல்லையா தனது நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு ஒரு பெரிய தொகையை வங்கிகளிடத்தில் செலுத்த வேண்டும் என்ற வங்கிகளின் நிபந்தனையையும் ஏற்ற உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதியன்று தனது சொத்து விவர வாக்குமூலத்தில் வங்கிகள் கேட்கும் முதற்கட்ட தொகையாக எவ்வளவு செலுத்த முடியும் என்பதையும் குறிப்பிட வலியுறுத்தியுள்ளது.

வங்கிகள் தரப்பில் ஆஜரான ஷியாம் திவான், ராபின் ரத்னாகர் டேவிட் ஆகிய வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடத்தில் கூறும்போது, மல்லையா முதலில் ரூ.4000 கோடி தொகையை திருப்பி அளிக்க முன்வந்ததை வங்கிகள் கூட்டமைப்பு நிராகரித்தது என்றனர்.

மேலும், “மிகப்பெரிய தொகை விவகாரமாகும் இது. எனவே அவர் தனது நியாயமான, இறுதியுமான, முழுமையுமான சொத்து விவரங்களை வெளியிடச்செய்வதுதான் சரியாக இருக்கும். இந்தத் தொகைகளை அளிப்பதில் நிச்சயமின்மைகள் உள்ளன. எனவே அவர் ஒரு நம்பகமான பெரிய தொகையை டெபாசிட்டாகச் செலுத்தினால்தான் அர்த்தமுள்ள பேச்சு வார்த்தையை தொடங்க முடியும், அதற்கு அவர் நேரில் ஆஜராவதும் அவசியம். இதற்காக மூத்த வங்கி அதிகாரிகளும் நீதிமன்ற அறைக்கு வருவார்கள்” என்றனர்.

இதற்கு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 2010 முதல் 2012 வரை தொடர்ச்சியாக சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளோம் என்றார்.

உடனே நீதிபதி நாரிமன், “அதனால் என்ன? ஏன் இப்போது புதிய சொத்து விவரங்களை அறிவித்தால் என்ன” என்று எதிர்கேள்வி கேட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் விஜய் மல்லையாவின் சொத்து விவர வாக்குமூலங்கள் குறித்த தங்களது கருத்தை வங்கிகள் கோர்ட்டுக்கு ஏப்ரல் 25-ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்

எம்ஜிஆர் 100 | 38 - நினைத்ததை முடிப்பவர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான். ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.

‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத் தில் ‘நல்ல நல்ல பிள்ளை களை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது. அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.

ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும். ‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.

‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார். வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.

இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகை யாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந் தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை...’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார். படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.

பாரதியார் பாடலான ‘சின்னஞ்சிறு கிளியே...’ பாடல் ஏற்கெனவே ‘மணமகள்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடி…’ என்ற வரிகளை சென்சார் அனுமதித்தது. ‘தெய்வத்தாய்’ படத்தில் ‘வண்ணக்கிளி சொன்ன மொழி…’ பாடலில் ஒரு இடத்தில் ‘அத்திப்பழ கன்னத்திலே முத்தமிடவா?’ என்று இருந்தது. சென்சார் கெடுபிடி காரணமாக ‘முத்தமிடவா?’ என்ற வார்த்தை ‘கிள்ளிவிடவா?’ என்று மாற்றப்பட்டது.

‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக் கப்படும்போதே சென்சாருக்கு ஏராள மான புகார்கள். அப்போதிருந்த தணிக் கைக் குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண் டிப்பானவர். படத்தை அவருக்கு போட் டுக் காட்டி அவரும் ‘நோ கட்ஸ்’ என்று கூறிவிட்டார். அதன் பிறகு அவர் கேட்ட கேள்வி, ‘‘ஆமாம். எங்கே அந்த ‘காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க’ பாடல் காட்சியைக் காணோம்?’’

படத்தில் அப்படிப்பட்ட வரிகளோடு கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி யிருந்தார். சென்சாரில் அது எப்படியும் தப்பாது என்று அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தவே இல்லை. ‘காங்கிரஸைத் தாக்கி படத்தில் பாடல் காட்சி ஒன்று இருக்கிறது’ என்று முன்பே யாரோ புகார் செய்திருக்கின்றனர். அதனால்தான் சாஸ்திரி அதைக் கேட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் காளை மாடு.

சென்சார் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க படங்களில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். பயன்படுத்துவார். நெற்றியில் திமுகவின் சின்னமான உதய சூரியன் திலகம் வைத்துக் கொள்வார். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் இளவரசராக வரும் எம்.ஜி.ஆரின் பெயர் ‘உதய சூரியன்’. ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். காளை மாட்டை அடக்குவார். 1957-ம் ஆண்டு தேர்தலில் காளை மாட்டை எம்.ஜி.ஆர். அடக்குவது போன்ற சுவரொட்டிகள் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

சென்சார் கெடுபிடி ஒருபுறம் இருக்கட் டும், எம்.ஜி.ஆரே தன் படங்களின் பாடல் வரிகளில் அக்கறை செலுத்துவார். தவறான அர்த்தம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில், ‘கண்ணை நம்பாதே…’ என்ற கருத்தாழம் மிக்க சூப்பர் ஹிட் பாடல் உண்டு. பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. ஒரு இடத்தில் ‘பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி எழுதியிருந்தார்.

அவரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘தன் வழியே என்று சொல்லியிருக்கிறீர்கள். அது ஏன் நல்ல வழியாக இருக்கக் கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவர் ஏன் தன் வழியே போகக் கூடாது?’’ என்று கேட் டார். மருதகாசி அசந்துபோய் விட்டார். பின்னர், எம்.ஜி.ஆரின் விருப்பத்துக் கேற்ப, ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்பதற்கு பதிலாக ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி மாற்றி எழுதினார்.

அந்தப் பாடலில்,

‘நன்றி மறவாத நல்ல மனம் போதும்

என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்’

என்ற வரிகளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார்.

எம்.ஜி.ஆரின் மூலதனத்துக்கு என்றுமே குறைவில்லை.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம்

தமிழில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’. படத்தில் பேய் போன்று வேடமிடுபவர் வரும் காட்சிகள் சிறுவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று கூறி படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

Wednesday, April 6, 2016

பின் பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள்: மொபைல் சேஃப்டி டிப்ஸ்


பின் பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள்: மொபைல் சேஃப்டி டிப்ஸ்

VIKATAN NEWS

மொபைல்…இன்றைய தேதியில் எல்லோரோடும் இணைந்த உள்ளங்கை குழந்தை. மொபைல் வாங்குவதோடு மட்டும் நம் செலவு முடிந்து விடுவதில்லை. அதற்கான உபரி செலவுகளும், அதன் பராமரிப்பும் மொபைல் உள்ள காலம் வரை நம்மை துரத்தும். மொபைல் மற்றும் பேட்டரி சீக்கிரம் சேதமடையாமல் செலவுகளை தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம்?

பின் பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள்:

மொபைலை பின் பாக்கெட்டில் வைப்பது நிறைய பேருக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதனால் மொபைலுக்கு என்ன பிரச்னை என்கிறீர்களா? நீங்கள் மொபைலை பின் பாக்கெட்டில் வைத்து விட்டு மறந்து போய் எங்கேயாவது அமர்ந்தீர்கள் என்றால் மொபைல் வளையலாம் அல்லது வேறு ஏதேனும் பிரச்னை வரலாம். இவ்வாறு வளைவதால் உங்கள் மொபைல் மற்றும் பேட்டரி சீக்கிரம் பாதிப்படையக் கூடும்.



அதே போன்று எடை அதிகமுள்ள பொருட்களுக்கு கீழே, மொபைல் வைப்பதை தவிருங்கள். ஏனெனில், அதிக எடை உள்ள பொருட்கள் தரும் அழுத்தத்தால் பேட்டரி விரிவடைந்து, வெடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

அதிக வெப்பம் உள்ள இடங்களை தவிருங்கள்:

அதிகம் வெப்பமுள்ள இடங்களில் மொபைலை வைப்பதால், பேட்டரி அதிவிரைவில் சூடாகி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக வெப்பமுள்ள இடங்களைப் போலவே அதிகம் குளிரான அதாவது ஜீரோ டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவான வெப்பநிலை உள்ள இடங்களும் கூட மொபைலின் பேட்டரியை பாதித்து, செல்போனுக்கும் பாதிப்பாக்கும் என்பதை மறக்காதீர்கள்.

மொபைலை எப்போதுமே வைத்திருக்கிறேன் பேர்வழி என எங்கேயும் எடுத்து செல்லாதீர்கள். குறிப்பாக சமையலைறைக்கு. கவனக்குறைவாக நீங்கள் அடுப்பருகிலேயோ அல்லது ஃப்ரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றின் அருகிலோ வைத்து விட்டு சென்றால் ஆபத்து உங்கள் ஃபோனுக்குதான். அதிகம் காற்றோட்டமில்லாத இடங்களிலும், உதாரணத்திற்கு தலையணைக்கு அடியில் போன்ற இடங்களில் வைக்காதீர்கள்.

பேட்டரியை பாதுகாக்க சில வழிகள்:

மொபைலில் மெமரி தான் இருக்கிறதே என்று தேவையில்லாத ஆப்ஸ்களை வைத்திருக்காதீர்கள். அது உங்கள் மொபைல் பேட்டரியை சூடாக்குவதுடன் சார்ஜையும் குறைக்கும். அதனால் தேவையான ஆப்ஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு தேவையில்லாததை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள்.

மொபைல் சூடேறுவது தெரிந்தால் அதை உடனே சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள்.

உங்கள் மொபைலுக்கு என்று உள்ள சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். அதுவே பேட்டரியின் வாழ்வை நீட்டிக்க சிறந்த வழி. இன்னொரு முக்கியமான ஒன்று, மொபைல் சார்ஜ் ஏற்றும் போது அதில் பேசுவது, மெசேஜ் செய்வது போன்ற காரியங்களை தவிருங்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்.

அதே போன்று பேட்டரி மாற்ற வேண்டிய அவசியம் வரும் பொழுது, ஒரிஜனலயே தேர்ந்தெடுங்கள். சீப்பான விலைக்கு கிடைக்கிறது என்று லைஃப் இல்லாத பேட்டரியை தேர்ந்தெடுக்காதீர்கள். ஏனெனில் ஒரிஜினல் பேட்டரி பல விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உத்திரவாதத்துடன் நம் கைக்கு கிடைக்கும். ஆனால் விலை மலிவான பேட்டரியில் அதை எதிர்பார்க்க முடியாது.

உங்கள் மொபைல் நீரில் விழுந்துவிட்டால் உடனே சர்வீஸ் சென்டரில் கொடுத்து செக் செய்யுங்கள். பொதுவாகவே நீரானது எலக்ட்ரானிக் ஐட்டங்களை சேதப்படுத்தக் கூடியது. எனவே கவனமாக இருங்கள்.

தொகுப்பு: ச. ஆனந்தப்பிரியா

VIT students to get global exposure STAFF REPORTER

VIT students to get global exposure

  • STAFF REPORTER

To give students a global exposure, VIT University has launched international transfer programmes in partnership with nine universities in the US, Australia and UK.

After studying for two years at VIT, students can choose from any one of the nine partner universities – four each in US and Australia and one in UK – for the next two years of the engineering programme, VIT Chancellor G. Viswanathan said, during the inauguration of the programme on Tuesday.

“The number of universities under this programme will be increased. We want our students to get global exposure,” he added. On the advantage of such a programme, he said that India was a growing country, and by 2030, it would be supplying the maximum workforce to the world.

Talking about the education system in the US, he said, “US took over Europe due to the autonomy and freedom given to institutions, competition between private and public institutions and funding. There are 4,000 universities in the US, but no University Grants Commission or Ministry of Education.”

This flexibility, he observed, was not available in any other country.

Elaborating on the international transfer programme, VIT’s pro-vice chancellor V. Raju said the students of engineering programmes will have the option of studying the last two years in any of the partner institutes that included State University of New York, Purdue University in the US, Queen Mary University, UK, and Deakin University and RMIT, Melbourne in Australia.

“We will develop programmes at the bachelors, masters and doctorate levels for this programme. There will be faculty collaboration and faculty exchange,” he mentioned.

Sean Kelly, Australia’s Consul General, Chennai, said Australia offered plenty of opportunities in higher education. “Nearly 25 per cent of the post graduate students in Australia are international students. There are around 60,000 Indian students,” he said.

Australia next to US

He added that Australia was the second popular destination for Indian students, and the country overtook US recently. Among the reasons for attracting many international students is the quality of universities, he said.

“Australia is one of the most liveable countries in the world. Our cities are modern and very safe. We have a multi-cultural population. We also offer the best work rights. Students, while studying, can work for 40 hours for a two-week period. They can earn money to help with the cost of living,” he noted.

In addition, students, on completing UG, can stay on for two years for work, while it was three years after masters and four years after Ph.D, he added.











Raju Balakrishnan from the College of Business, University of Michigan-Dearborn, USA, said the university had established a partnership with VIT three years ago. “We started off with business programmes. In three batches, 65 students from VIT have come to the University of Michigan. Now, we are expanding it to engineering programmes,” he said.

Central university to offer six new programmes L. RENGANATHAN

Central university to offer six new programmes


The Central University of Tamil Nadu, Tiruvarur, plans to offer six new programmes during the next academic year. It is hosting five M.Sc. integrated courses, 10 PG programmes and seven doctoral research programmes besides two short-term programmes under the aegis of its Community College.

For the academic year 2016-2017, it is proposing four PG programmes besides two three-year programmes - B.Sc. Textiles and Bachelor of Performing Arts programme in music, with the latter reviving memories of Tiruvarur as the birth place of the celebrated Carnatic Music Trinity Sri Tyagaraja, Sri Muthuswamy Dikshitar and Sri Shyama Sastri.

Under a memorandum of understanding to be signed soon, the three-year graduate studies programme in textiles with an intake of 40 students will be conducted in the Sardar Vallabhbhai Patel International School of Textiles and Management, Coimbatore.

Among the new PG programmes on offer, M.A. (Economics), M.A. (Hindi) and M.Sc. (Computer Science), will have an intake of 20 students each while the new M. Tech. (Material Science) will admit 24 students.

For drawing on a wider faculty base and curriculum design, the university has collaborative arrangements with the Madras School of Economics, the Central Institute of Classical Tamil, Chennai, the Tata Institute of Social Sciences, the National Law School of India University, Bengaluru, and the Tamil Nadu Agriculture University, Coimbatore.

With inter-disciplinary approach as the main plank of curriculum building, it fully uses its unitary status and the choice-based credit system for introducing many inter-disciplinary and extra-disciplinary elective programmes.

All the Schools and the Community College have a total of 1,005 students on their rolls as of now and the University is planning to increase that to at least 2,000 over the next three years.

The university is about to enter the eighth year of admission with the Central Universities of Tamil Nadu, Haryana, Jammu and Kashmir, Jharkhand, Karnataka, Kerala, Punjab and Rajasthan jointly conducting the Common Entrance Test for admission to their academic programmes on May 21 and 22.








Candidates, including those who are appearing for the final or qualifying examinations, can apply on line (website: cucet16.co.in). The Common Entrance Test enables candidates to apply for three programmes and sit for the test in any of the designated examination centres of their choice and take admission in any of the three universities they choose. Admissions on merit and with statutory reservation benefits to those who are eligible will commence after the publication of results on June 17.

NEWS TODAY 23.12.2025