Friday, April 29, 2016

இன்னும் தகவல் வரவில்லை: மருத்துவக் கல்வி இயக்குநர் விளக்கம்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, தமிழகத் தில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை எந்த முறையில் அமைந்திருக்கும்? என்ற சந்தேகம் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசு சட்ட ரீதியிலான முயற்சியில் இறங்குமா அல்லது பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளுமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலாவிடம் கேட்டபோது, “மருத் துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து (எம்சிஐ) எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. தமிழக அரசு என்ன சொல்கிறதோ, அதை மருத்துவ கல்வி இயக்ககம் பின்பற்றும்” என்றார்.

மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு:

மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடும் பாதிப்பு


மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 2,655 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 சதவீத இடங்கள் அதாவது, 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும். (அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன). எஞ்சிய 2,257 இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இந்த இடங்கள் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும்.

தமிழகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வரை மருத்துவ படிப்புக்கான இடங்கள் நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன. நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கருதிய தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. அதுமுதல் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல்மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு பிடிஎஸ் படிப்புக்கு மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுப் போய்விடும். எஞ்சிய 85 இடங்களை தமிழக அரசு நிரப்புகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர ஆண்டுதோறும் ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் மே 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பம் வழங்கப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்ட தரத்தில் இருக்கும். இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஒரு விஷயத்தை பயன்பாடு சார்ந்த அடிப்படையில் படித்துவந்த சிபிஎஸ்இ மாணவர்களுடன் தேர்வுக்கு நேரடி வினா-விடை அடிப்படையில் படித்துவந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் போட்டிபோடுவது என்பது இயலாத காரியம்.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் துணை இயக்குநரான சிவா தமிழ்மணி கூறும்போது, “இந்தியாவில் பள்ளி மாணவர்கள் வெவ்வேறு பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். எனவே, கல்வியின் தரம் நிச்சயம் ஒரே மாதிரியாக இருக்காது. இந்த சூழலில் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் அதை எப்படி ஏற்க முடியும்?. இந்த நுழைவுத்தேர்வால் சிபிஎஸ்இ மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும்தான் பயன்பெறுவார்களே தவிர மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரான கே.பி.ஓ. சுரேஷ் கூறும்போது, “மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்புகள் கண்டிப்பாக குறையும்” என்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிவிட்டு எம்பிபிஎஸ் சேரும் ஆசையில் இருக்கும் மாணவி மு.வெ.கவின்மொழி கூறும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கும், மாநிலப் பாடத்திட்டத்துக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு என்றால் நிச்சயம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படிதான் அமைந்திருக்கும். அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்தின் (எய்ம்ஸ்) நுழைவுத்தேர்வுக்கான மாதிரி விடைகளுக்கு விடையளிக்க முயன்றேன். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த என்னால் 10 கேள்விகளில் வெறும் 2 கேள்விக்கு மட்டுமே சரியாக விடையளிக்க முடிந்தது. தற்போது திடீரென நுழைவுத்தேர்வு என்று அறிவித்தால் என்னைப் போன்ற மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளால் எப்படி தயாராக முடியும்?. தனியார் பள்ளிகளில் அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக 11-ம் வகுப்பிலிருந்தே பயிற்சி அளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுபோன்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு எளிதாக இருக்கும் பிளஸ் 2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் சேர்ந்துவிடலாம் என்ற கனவில் நிறைய மாணவ, மாணவிகள் உள்ளனர். இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பு என்னைப் போன்ற கிராமப்புற மாணவ, மாணவிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.

கட்டாய நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்..DINAMALAR

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம்' என, சுப்ரீம் கோர்ட் அறிவித்து ள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு, 2007 முதல், பிளஸ் 2 மதிப்பெண்ணை வைத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி களில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்படுகின்றன. இந்த இடங்களுக்கு மட்டுமே, சி.பி.எஸ்.இ., மூலம், அகில இந்திய மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கோ, சுய நிதி கல்லுாரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும் இடங்களுக்கோ, நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதில்லை. 

இதற்காக, 2006ல், 'தமிழ்நாடு தொழில்படிப்பு கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டம் - 2006' இயற்றப்பட்டது

இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பானவழக்கில், சுப்ரீம் கோர்ட், பொது மருத்துவ நுழைவுத்தேர்வை கட்டாயம் ஆக்கி உள்ளது; இது, தமிழகத்தில், 2007 முதல், நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு சிக்கலாக அமையும்.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தின், 'தொழில் ரீதியான கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டம் - 2006' குறித்து, சுப்ரீம் கோர்ட், எதுவும் தெரிவிக்க வில்லை. இருந்தபோதிலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்தே நுழைவுத்தேர்வு நடத்த வழி வகை

செய்கிறது. தமிழகத்தில் உள்ள சூழல் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்தப் பட்டது. 

வட மாநில மாணவர்கள் ஆதிக்கம் செலுத்துவர் என்பது ஏற்புடையது அல்ல. இருந்த போதும், தமிழகத்தின் தொடர் நடைமுறைகள் குறித்து தெரிவித்து, மறு சீராய்வு கோரி, மாநில அரசு சார்பில், மனு தாக்கல்செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.'பொது நுழைவுத்தேர்வு நடந்தாலும், 85 சதவீத இடங்கள், நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழக மாணவர்களுக்குத் தான் கிடைக்கும்' என, சுகாதாரத்துறை 

அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், சி.பி.எஸ்.இ., படித்த மாணவர்கள் தான் அதிக அளவில் இடம் பிடிக்க முடியும் என்பதால், கிராமப்புற மாணவர்கள், மருத்துவப் படிப்புகளில் சேர்வது சிக்கலாக அமையும்.

'அழுத்தம் தர வேண்டும்'

சுப்ரீம் கோர்ட் உத்தரவு, தமிழக மாணவ, மாணவியரிடம், பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழகத்திற்கு, நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற, மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில், உடனடியாகப் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும், தமிழக நிலைமைகளை தெளிவுபடுத்தவும், மூத்த அமைச்சர், தலைமைச் செயலர், சுகாதாரச் செயலரையும் அனுப்பி வைக்க வேண்டும்.

கருணாநிதி, தி.மு.க., தலைவர்

'அவகாசம் வேண்டும்'


'மெரிட்' அடிப்படையில் சேர்க்கை என்பது நல்லதுதான். இதற்கு, இரண்டு ஆண்டுகளாவது அவகாசம் கொடுத்து செயல்படுத்தி இருக்க வேண்டும். உடனே செயல்படுத்தினால், சி.பி.எஸ்.இ., தேர்வுஎன்பதால், கிராமப்புற மாணவர்கள் பெரிய அளவில் பாதிப்பர். 
கே.செந்தில், தலைவர், தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம்

'சூழலுக்கு ஏற்ப முடிவு'


நுழைவுத்தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும். அதன் மூலம், திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். மிக குறுகிய காலத்தில் இந்த தேர்வை அறிவித்துள்ளதால், நுழைவுத்தேர்வு

மதிப்பெண் அளவை, சூழலுக்கு ஏற்ப, தமிழக அரசே முடிவு செய்து, அனைத்து தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில், சேர்க்கை நடத்த வேண்டும்.ஜேம்ஸ்பாண்டியன், இயக்குனர் எஸ்.ஆர்.எம்., மருத்துவ பல்கலை

'பாதிப்பு வராமல் இருக்க புது ஐடியா'


சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தமிழக அரசு, மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்தி, மாணவர்களை சேர்க்க முடியும். அதேநேரம், நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணை, 1 சதவீதமாகவும், பிளஸ் 2 மதிப்பெண்ணை, 99 சதவீதமாகவும் கணக்கிட்டு, சேர்க்கை நடத்தலாம். அதனால், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில், நுழைவுத்தேர்வை நடத்தியதாகவும் இருக்கும். ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்

கட்டாயப்படுத்துவது சரியல்ல

தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்து, 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதுகுறித்த சிந்தனையே இல்லாத மாணவர்களை, இரண்டரை மாதங்களில் ஆயத்தமாக வேண்டும் என, கட்டாயப்படுத்து வது சரியல்ல. 

நுழைவுத்தேர்வுகளை எதிர்க்கும், மாநில அரசுகளுடன் இணைந்து, 'பொது மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாது' என, தமிழக அரசு அறிவிப்பதோடு, பொது மருத்துவ நுழைவு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்ய வேண்டும். 

-அன்புமணி, இளைஞரணி தலைவர், பா.ம.க.,

- நமது நிருபர் குழு -

SC Orders National Eligibility Cum Entrance Test (NEET) in Two Phases; Exams on 1st May and July 24th [Read Order] Read more at: http://www.livelaw.in/sc-orders-national-eligibility-cum-entrance-test-neet-two-phases-exams-1st-may-july-24th/ thanks to livelaw.in




document source: livelaw.in..thanks to the webpage

Thursday, April 28, 2016

எம்ஜிஆர் 100 | 53 - உச்சம், தாழ்வு என்பதெல்லாம் ஒரு மயக்க நிலை!

‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

M.G.R. எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து, நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதில்லை. ஏற்றத் தாழ்வுகளை சமமாகவே பாவித்தார்.

ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வாய்ப்புகளுக்காக காத்திருந்தபோது எம்.ஜி.ஆர். துவண்டதுமில்லை. பின்னர், தமிழ் திரையுலகின் சக்கரவர்த்தியாக இருந்தபோது துள்ளியதும் இல்லை.

1968-ம் ஆண்டு ‘பொம்மை' இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை ஜெய லலிதா பேட்டி கண்டார். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது: ‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’

இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில், அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மை யார் கதாநாயகியாக நடித்த ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் புலிக்குட்டி பி.எஸ்.கோவிந்தன். அதே போல, நாடக மேடைகளிலும் திரைப் படங்களிலும் நடித்து ‘இந்திய மேடைப் புலி’ என்று பட்டம் பெற்றவர் கே.பி.கேசவன். இவர்களைப் போன்று பல நடிகர்கள் ஒருகாலத்தில் மிகுந்த புகழோடு இருந்தனர்.

‘இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம். அந்தப் படத்தின் கதாநாயகன் கே.பி.கேசவன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண் டவர். ‘இரு சகோதரர்கள்’ திரைப்படம் சென்னையில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ திரை யரங்கில் வெளியானது. அந்த தியேட்ட ரெல்லாம் இப்போது இல்லை. படத்தைப் பார்க்க கே.பி.கேச வனும் எம்.ஜி.ஆரும் சென்றனர். இடைவேளையின்போது கே.பி.கேச வனைக் கண்டுகொண்ட ரசிகர்கள் எழுந்து நின்று அவரைப் பார்த்து உற்சாகமாகக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு திகைத்துப் போன எம்.ஜி.ஆர்., இவ்வளவு ஆதரவும் செல்வாக்கும் உள்ளவரின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோமே என்று மனதுக்குள் பெருமைப்பட்டார்.

ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்க, எம்.ஜி.ஆரும் கே.பி.கேச வனும் படம் முடிவதற்குள் எழுந்து வெளியே வந்தனர். அவர்கள் புறப் படுவதை அறிந்து மக்களும் வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர். பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது, அந்தப் படத்தில் சிறிய வேடத் தில் நடித்திருந்த தன்னை மக் களுக்கு அடையாளம் தெரிய வில்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.

சில ஆண்டுகள் கழிந்தன. எம்.ஜி.ஆர். கதாநாயக னாகி புகழ் பெற்றிருந்தார். அவர் நடித்த ‘மர்மயோகி’ படம் சென்னையில் ‘நியூ குளோப்’ திரையரங்கில் திரை யிடப்பட்டது. படத்தைப் பார்க்க எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும் சென்றனர். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். எம்.ஜி.ஆருக்கு பக்கத்திலேயே கே.பி.கேசவன் அமர்ந் திருந்தார். அவரை யார் என்று கூட மக்கள் அறிந்துகொள்ளவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தபோது, மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார் கேசவன். காரில் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் செல்லும்போது மக்களோடு ஒருவராக கேசவனும் நின்று கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆர். தொடர்ந்து, ‘‘கே.பி.கேசவ னின் நடிப்பாற்றல் ‘மர்மயோகி’ படம் வெளியானபோதும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. கலைஞர் களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த் தும்’’ என்று கூறியுள்ளார். இப்படி புகழைப் பற்றி தெளிவான மன நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.

பேரறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது, திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவரும் பல படங்களைத் தயாரித்தவருமான இராம. அரங்கண்ணலும் உடன் சென்றிருந்தார். பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அங்கிருந்து காட்சிகளின் அழகை ரசித்துக் கொண்டே அண்ணாவிடம், ‘‘அடேயப்பா, எவ் வளவு உயரத்தில் இருக்கிறோம் அண்ணா? ’’ என்று அரங்கண்ணல் வியப்புடன் கூறினார்.

அதற்கு அண்ணா கூறிய பதிலை எல்லோரும், குறிப்பாக இன்றைய அரசியல் வாதிகள் மனதில் கொள்ள வேண்டும். சிரித்துக் கொண்டே அண்ணா சொன் னார்: ‘‘இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப் போகிறோம் அரங்கண்ணல்.’’

அண்ணாவுக்கு இருந்த அதே மன நிலையோடு, உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலும் சமமாக பாவிக்கிற எண்ண ஓட்டத்தோடு எம்.ஜி.ஆர். இருந்தார். ‘உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல் லாம் ஒரு மயக்க நிலை’ என்று கருதி, அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை காட்டியதால்தான், மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். உச்ச நிலையிலேயே இருந்தார், இருக்கிறார், இருப்பார்!

- தொடரும்...

‘நாடோடி மன்னன்’ படத்துக்குப் பிறகு நாடகத்தில் நடித்தபோது எம்.ஜி.ஆருக்கு கால்முறிவு ஏற்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததால் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் 1959-ம் ஆண்டு அவர் நடித்த ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ படம் மட்டுமே டிசம்பர் 31-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் கதையை எழுதி யவர் அண்ணா. வசனம் இராம.அரங்கண்ணல். எம்.ஜி.ஆருடன் நடிகை ஜமுனா இந்த ஒரு படத்தில் தான் நடித்து உள்ளார்.

விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி: அதிவேக சேவையின் மூலம் அசத்துகிறது பாஸ்போர்ட் துறை

வி.தேவதாசன்
Return to frontpage

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் வீட்டில் டெலிவரி செய்யும் அளவுக்கு பாஸ்போர்ட் துறையின் சேவை பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கீழத் திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கவின். இவனது பெற்றோருக்கு ஏற் கெனவே பாஸ்போர்ட் உள்ளது. மகனுக்கும் பாஸ்போர்ட் எடுக்க முடிவு செய்தனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். விண்ணப்பத் துடன் சிறுவனின் பிறப்புச் சான்றி தழ், பெற்றோரின் பாஸ்போர்ட் நகல் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தனர்.
தஞ்சாவூரில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நேர்காணலுக்காக நேரம் கிடைத்தது. சிறுவனும், பெற்றோரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் சேவை மையத்துக்குள் நுழைந்தனர். அசல் ஆவணங்கள் சரிபார்த்தல், சிறுவனின் கைரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல், அதிகாரிக ளுடன் நேர்காணல் என அடுத்தடுத்த 4 கவுன்ட்டர்களுக்குச் சென்றனர். எல்லா நடைமுறைகளும் 30 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன.
காலை 10.30 மணிக்கு சேவை மையத்தை விட்டு வெளியே வந்தனர். ‘பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வருகை தந்தமைக் காக நன்றி’ என்ற குறுந்தகவல் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டி ருந்த பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு காலை 10.31 மணிக்கு வந்தது. ‘காவல் துறை விசாரணை தேவையில்லை என்ற அடிப்படை யில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது’ என்ற குறுந் தகவல் காலை 10.35 மணிக்கு வந்தது.
‘பாஸ்போர்ட் அச்சிடுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன’ என்ற மற்றொரு குறுந்தகவல் காலை 11.02 மணிக்கு வந்தது. ‘பாஸ்போர்ட் அச்சிடும் பணி முடிந்துவிட்டது’ என்ற குறுந்தகவல் மதியம் 1.30 மணிக்கு கிடைத்தது. அதாவது பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பித்துவிட்டு, வீடு வந்து சேருவதற்குள் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டுவிட்டது.
‘அடுத்து விரைவு தபால் சேவை மூலம் உங்கள் பாஸ்போர்ட் அனுப்பப்பட்டு விட்டது’ என்ற குறுந்தகவல் மாலை 6.30 மணிக்கு கிடைத்தது. மறுநாள் காலை சுமார் 11 மணிக்கு வீட்டில் பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது.
விண்ணப்பித்த 24 மணி நேரத் தில் வீட்டிலேயே பாஸ்போர்ட் டெலிவரி செய்யப்பட்ட இந்த நிகழ்வானது சிறுவன் கவின் குடும்பத்தாரை மட்டுமின்றி, இதனை அறிந்த அந்த கிராமத்தினர் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருந்த காலம் மாறி, 24 மணி நேரத்தில் வீட்டுக்கே பாஸ்போர்ட் கிடைக்கும் அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றமே அவர்களது வியப்புக்கு காரணம்.
இந்த முன்னேற்றம் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி கூறியதாவது:
கணினிமயம்
பாஸ்போர்ட் அலுவலக செயல் பாடுகள் அனைத்தும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டதுதான் விரைவான சேவைக்கான முதல் காரணம். இதன் காரணமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, காவல் துறை விசாரணை அறிக்கையும் கிடைக்கப் பெற்றால் உடனே பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
பிறப்புச் சான்று, முகவரிச் சான்று போன்ற அசல் ஆவணங்கள் எவ்வித வில்லங்கமும் இன்றி மிகச் சரியாக இருந்தால், பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு அழைக்கப்படும் அதே தினத்தில் அவர்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். காவல் துறை விசாரணை தேவையில்லாத விண்ணப்பங்களுக்கு அன்றைய தினமே பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும். காவல் துறை விசாரணை தேவை எனில், பாஸ்போர்ட் விண்ணப்பம் ஏற்கப்படும் அதே வினாடியில் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர் பற்றிய தகவல்கள் ஆன்லைன் மூலம் சென்றுவிடும். அங்கிருந்து காவல் நிலையத்துக்கு தகவல்கள் அனுப்பப்பட்டு, காவல் துறையினர் விண்ணப்பதாரரின் இருப்பிடத்துக்கு சென்று விசாரணை செய்து, அறிக்கை அனுப்புவார்கள்.
21 நாட்கள்
காவல் துறையினரின் இந்த நடைமுறைகள் முடிய அதிக பட்சம் 21 நாட்கள் ஆகும். காவல் துறை அறிக்கை எங்களுக்கு கிடைத் தவுடன், அடுத்த ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் அச்சிடப்பட்டு, விண்ணப்பதாரருக்கு கிடைத்து விடும்.
ஆக, பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு செல்லும்போது தேவையான அனைத்து அசல் ஆவணங்களையும் மிகச் சரியாக விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்தால், எங்களால் மிக விரைவில் பாஸ்போர்ட் விநியோகம் செய்ய முடியும். திருச்சி மண்டலத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 19 ஆயிரத்து 832 பேர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களில் 18 ஆயிரத்து 256 பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப் பட்டுவிட்டது.
சாதாரண முறையிலேயே பாஸ் போர்ட் மிக விரைவாக கிடைத்து விடுவதால், தத்கால் திட்டத்தில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

TN to fight NEET as pvt colleges watch

TN to fight NEET as pvt colleges watch


NEW DELHI:The state government has decided to appeal against the Supreme Court verdict on National Entrance Eligibility Test (NEET) for all medical admissions, which it says undermines its powers in tailoring medical admissions to suit the state's needs. But if the Centre has its way, NEET, which insists on 100% merit-based admissions, will turn the private medical education sector - known for capitation fees - on its head.

NEET will let state universities retain the 69% quota and allow private colleges and deemed universities admit 15% of students under the NRI quota. But NEET will insist that all medical colleges admit students based on the merit list it releases, said MCI vice-president Dr C V Bhirmanandam. "No university or college can deny admission to a student who has a higher rank unless they are eliminated because of reservation or because he/she can't afford fees in a private college," he said.

The executive committee will discuss schedules and common syllabus at a meeting in New Delhi on Thursday.

Tamil Nadu has been arguing that NEET discriminates against rural students as it would give a headstart to those who can attend coaching classes.

It also feels that the NEET encroaches upon the state subject of education. Admissions to medical colleges under the Tamil Nadu medical university are now based on Class 12 final examination marks, under the Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006.

he state will ask the apex court if the MCI regulations strengthened by its directive overrule the state act on these admissions. State officials said that their act could not be dismissed through a regulation.

"We will move the court asking if our act, which contradicts the MCI regulation, will be void. Our legal experts have told us that it will be unconstitutional to do so," said a senior health department official.
The state, along with its neighbours Kerala and Andhra Pradesh, opposed common entrance examinations when MCI introduced them in 2013. Tamil Nadu chief minister J Jayalalithaa - and many other political leaders - have been of the view that a common entrance would put students from rural areas at a disadvantage. In October 2015, Jayalalithaa wrote to Prime Minister Narendra Modi opposing NEET. "It would adversely affect the interests of students in the state, in particular those from weaker sections and from rural areas ... it infringes upon the state's right to determine the admission policies to medical educational institutions," she said.

On Wednesday, officials from the state health department said it would be too short a time for students in the state to prepare for a centralised examination. "Is it not unfair to ask a student who is completely unprepared for the entrance to compete with CBSE students who have been preparing for it for more than a year," asked an official who did not want to be named.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...