Monday, May 16, 2016


தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்:
அவகாசம் கேட்கிறது திமுக:விளக்கம் அளித்தது அதிமுக

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டதற்காக தேர்தல் ஆணையம் கோரிய விளக்கத்தை அளிக்க திமுக கால அவகாசம் கோரியுள்ளது.
அதேசமயம், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விளக்கத்தை அதிமுக அளித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலில் களம் இறங்கும் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகளில் மக்களைக் கவரும் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான உரிய நிதி ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதி வலியுறுத்துகிறது.
தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பானது அப்படியே தேர்தல் நடத்தை விதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சிகளுக்கு நோட்டீஸ்:
 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட இரண்டு பிரதான கட்சிகளுமே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகளில் சில இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை இரண்டு கட்சிகளும் குறிப்பிடப்பிடவில்லை என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம், இரண்டு கட்சிகளும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அவகாசம் கேட்டது திமுக:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அதிமுக தரப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விளக்கத்தை அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் பெரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான பி.வெற்றிவேல் கோரிக்கை மனுவை அளித்தார். அதன் விவரம்:
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவோம் என்ற விளக்கத்தை அளிக்காமல் பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமலும், விளக்கம் ஏதும் கூறாமலும் மேலும் இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டுள்ளனர். இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.
எனவே, இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் அனைத்து வேட்பாளர்களையும் தகுதி இழப்பு செய்து உத்தரவிட வேண்டும் என்று தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா விளக்கம்
தேர்தல் பிரசாரத்தின்போதே, அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்.
""எந்த வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்பும், அதைப் பற்றி நூறு தடவை அல்ல, ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி தருவேன். என்னால் நிறைவேற்ற முடியும் என்றால்தான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது, தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்'' என்று உறுதி அளித்திருந்தார்.
தேர்தல் விடுமுறையை ஈடுசெய்ய விதிமீறும் ஐ.டி., நிறுவனம்

பதிவு செய்த நாள்: மே 15,2016 21:36

எழுத்தின் அளவு:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, சென்னையில் உள்ள தனியார், ஐ.டி., நிறுவனம், தேர்தல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஊழியர்களை, மே, 21ல் பணிக்கு வரச்சொல்லி தகவல் அனுப்பியுள்ளது.'அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தேர்தல் நாளன்று, அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பதால், மற்றொரு விடுமுறை நாளில் பணி செய்து, அதை

ஈடுசெய்யுமாறு சில, ஐ.டி., நிறுவனங்கள் கூறிஇருந்தன; இது குறித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் கிளைகளை உடைய, சர்வதேச ஐ.டி., நிறுவனம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தன் ஊழியர்களுக்கு, விடுமுறை தினமான, 21ம் தேதி சனிக்கிழமை பணிக்கு வரக் கூறி, ஒரு மின்னஞ்சல் அனுப்பிஉள்ளது.

அதில், 'அலுவலக தேவை இருப்பதால், மே, 21ல் அனைவரும் பணிக்கு வரவேண்டும்; உங்கள்

ஒத்துழைப்புக்கு நன்றி' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் செய்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என, ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.- நமது நிருபர் -
நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' 19ம் தேதி தற்காலிக சான்றிதழ்

பதிவு செய்த நாள்: மே 16,2016 05:09

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அதிகாரிகள் மேலும் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. lதேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்தேர்வர்கள் மே, 19ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம் மே, 21ம் தேதி முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு பள்ளிகள் மூலம், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மே 23ல் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்:மத்திய இடைநிலை கல்வி

வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 23ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில், பிளஸ் 2 தேர்வுகள்

நடத்தப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் மே, 23ல் வெளியாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், 55 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 15 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

- நமது நிருபர் -
நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்

பதிவு செய்த நாள்: மே 15,2016 21:3

சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியை பயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது. இதனால், வரும் ஆண்டுகளில் இந்த பல்கலைகளுக்கு மானியம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் மத்திய, மாநில அரசின் பல்கலைகளுக்கு, பல்வேறு திட்டங்களுக்காக, யு.ஜி.சி., யில் இருந்து ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படுகிறது.

ஆராய்ச்சி திட்டங்கள்:இந்த நிதியில், ஆராய்ச்சி படிப்புகள் துவங்க வேண்டும்; புதிய ஆராய்ச்சி திட்டங்கள் கொண்டு வர லாம்; புதிய பாடப்பிரிவுகளும் துவங்கலாம். இந்நிலையில், பல்கலைகளின் நிதி செலவீடு குறித்த அறிக்கையை, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பல அரசு பல்கலைகள், யு.ஜி.சி., ஒதுக்கிய நிதியை செலவு செய்யாதது தெரிய வந்துள்ளது.
அறிக்கை:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கு, 7.76 கோடி; கோவை பாரதியார் பல்கலைக்கு, 5.97 கோடி; சென்னை பல்கலைக்கு, 10.88 கோடி; சேலம் பெரியார் பல்கலைக்கு, 5.06 கோடி ரூபாய் என, நான்கு ஆண்டுகளில் மொத்தம், 29.67 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, பல்கலைகள் செலவு செய்யாததால் செலவு குறித்த அறிக்கையை வழங்கவில்லை.

அதே நேரம், காரைக்குடி அழகப்பா பல்கலை, சென்னை அண்ணா பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை, அம்பேத்கர் சட்ட பல்கலை ஆகிய பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி., நிதியை செலவு செய்து, 29.67 கோடி ரூபாய்க்கான செலவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன.

இந்த பல்கலைகளுக்கு மட்டும், வரும் கல்வியாண்டில் மானியம் வழங்க, யு.ஜி.சி., முடிவு
 உள்ளது. செலவு அறிக்கை தாக்கல் செய்யாத, நான்கு பல்கலைகளுக்கும் மானியம் நிறுத்தப்படும் என தெரிகிறது.- நமது நிருபர் -

ரூ.105 கோடி பறிமுதல்;ரூ.48 கோடி திருப்பி அளிப்பு

இதுவரை ரூ.105 கோடி பறிமுதல்;ரூ.48 கோடி திருப்பி அளிப்பு

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.105.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.48 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 13-ஆம் தேதியன்று வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.14.38 லட்சமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, நாகை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் பொருள்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2.62 கோடியாகும்.

தேர்தல் நடத்தை விதி நடைமுறை அமலானதிலிருந்து, இதுவரை மொத்தம் ரூ.105.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.47.91 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.105.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.48 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 13-ஆம் தேதியன்று வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.14.38 லட்சமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, நாகை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் பொருள்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2.62 கோடியாகும்.

தேர்தல் நடத்தை விதி நடைமுறை அமலானதிலிருந்து, இதுவரை மொத்தம் ரூ.105.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.47.91 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

Friday, May 13, 2016

எம்ஜிஆர் 100 | 64

எம்ஜிஆர் 100 | 64: மக்களின் அடிமை நான்!

மதுரையில் நடந்த விழாவில் தடுப்பைத் தாண்டி மேடையின் நுனிக்கு வந்து, மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
M.G.R. எப்போதும் மக்களோடு மக்களாகவே இருந்தார். தமிழகத்தின் முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தபோதும் தன்னை மக்களிடமிருந்து அப்பாற்பட்டவராக அவர் நினைத்ததோ, செயல்பட்டதோ இல்லை.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.

காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண் டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராள மானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப் பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக கையில் மனுக்களு டன் ஓரமாக நின்றனர். காவல்துறையினர் அவர் களை போகச் சொல்லியும் மறுத்தனர். ‘‘மனுக் களை எங்களிடம் கொடுங்கள். முதல்வரிடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’’ என்று போலீஸாரும் அதிகாரிகளும் சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. ‘‘எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்’’ என்று உறுதியாகக் கூறினர்.

மேடைக்கு கீழே ஓரமாக நடந்த இந்த சலசலப்பை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அதிகாரிகளிடம் விவரம் கேட்டார். ‘‘உங்களிடம் தான் மனு கொடுப்போம் என்று கூறுகின்றனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கனமே சற்றும் தயங்காமல், ‘‘அதனால் என்ன? அவர்கள் விருப்பப்படி நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., யாரும் எதிர்பாராத வகையில், ஐந்து அடிக்கு மேல் உயரமாக இருந்த மேடையில் அமைக் கப்பட்டிருந்த தடுப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டினார். தடுப்புக் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி, குறுகலான மேடையின் நுனியில் குத்திட்டு அமர்ந்தபடி மக்களிடம் இருந்து மனுக்களை குனிந்து பெற்றுக் கொண்டார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்காக மேடையில் தடுப்புக் கம்பியை தாண்டி வந்து மனுக்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண் டதைப் பார்த்த பொதுமக்கள் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்; மனுக்கள் கொடுத்தவர்கள் உட்பட.

‘படகோட்டி’ படத்தில் ஒரு காட்சி. இரு மீனவ குப்பங்களுக்கிடையே பகை நிலவும். ஒரு குப்பத்தின் தலைவரான எம்.ஜி.ஆரும் எதிரி குப்பத்தைச் சேர்ந்த தலைவரின் மகளான நடிகை சரோஜா தேவியும் காதலிப்பார்கள். இதற்கு எம்.ஜி.ஆரின் குப்பத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்கள் விருப்பப்படி தனது காதலை தியாகம் செய்ய எம்.ஜி.ஆர். முடிவு செய்வார்.

அதனால் வருத்தப்படும் சரோஜா தேவி, ‘‘எனது காதல் கருக வேண்டியதுதானா?’’ என்று கேட் பார். அதற்கு எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்…

‘‘நான் தனிமனிதனல்ல. மக்களுக்கு கட்டுப் பட்டவன். நான் தலைவன் அல்ல. தலைவன் என்ற பெயரில் மக்களின் அடிமை நான்.’’

அப்படி, மக்களின் அடிமையாக தன்னைக் கருதி சேவை செய்ததால்தான் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

எம்.ஜி.ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் ‘கல்கண்டு’ பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன். ஒருமுறை தமிழ்வாணன் இப்படிக் கூறினார்: ‘‘ஒரு குழந்தை முன் பத்து நடிகர்களின் படங்களை போட்டால் அது எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும். ஏனென்றால், அவரது சிரிப்பில் உண்மை இருக்கிறது!’’

Thursday, May 12, 2016

எம்ஜிஆர் 100 | 63: சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...

அழுதபடி குறைகளை கூறும் மூதாட்டியை எம்.ஜி.ஆர். தேற்றுகிறார்.


எம்ஜிஆர் 100 | 63: சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...


M.G.R. பிறர் கஷ்டப்படுவதை காண சகிக்காதவர். அவர் கண் முன்னால் யாரும் துன்பப்படுவதைப் பார்த்தால், அவர்கள் கேட்காவிட்டாலும் உடனடியாக உதவி செய்வார். தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி; அரசு மூலம் திட்டங்களை செயல்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்றாலும் அதற்காக மத்திய அரசிடம் உரத்துக் குரல் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, 1980 ஜனவரி மாதம் கர்நாடகாவில் குண்டு ராவ் முதல்வரானார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றே தன்னை அறிவித்துக் கொண்டவர். பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆரை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை குண்டுராவின் பிறந்த நாளன்று பெங்களூருக்கு சென்று அவரை வாழ்த்த எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

அதற்காக தனது TMX 4777 எண் கொண்ட அம்பாசிடர் காரில் மனைவி ஜானகி அம்மை யார் மற்றும் ஜானகி அம்மாளின் சகோதரர் மகள் லதா ஆகியோருடன் ஒருநாள் மதியம் பெங்களூர் புறப்பட்டார். பின்னால் ஒரு வேனில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றனர்.

பெங்களூர் சென்று அங்குள்ள ‘வெஸ்ட் எண்ட்’ ஓட்டலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கு குண்டுராவின் வீட்டுக் குச் சென்ற எம்.ஜி.ஆர்., அவருக்கு பரிசளித்து வாழ்த்தினார். அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் குண்டுராவ். எம்.ஜி.ஆருக்கும் உடன் வந்தவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு, காரில் எம்.ஜி.ஆர். சென்னைக்கு புறப்பட்டார்.

இப்போது போலவே அப்போதும் சுட்டெரிக் கும் கோடைகாலம். உச்சி வெயில் நேரத்தில் ஓசூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டியும் பத்து வயது சிறுமியும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறு காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்தனர். பத்து தப்படி ஓட்டமும் நடையுமாக செல்வதும் பிறகு, வெயிலுக்காக ஓரமாக ஒதுங்கி நின்று மீண்டும் நடப்பதுமாக இருந்தனர். அவர்களை தூரத்தில் வரும்போதே காரில் இருந்து எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அவர்கள் அருகில் கார் வந்ததும் டிரைவரை நிறுத்தச் சொன்னார். முன் சீட்டில் அமர்ந்திருந்த உதவியாளரைவிட்டு அந்த மூதாட்டியை விசாரிக்கச் சொன்னார்.

காரில் இருந்து இறங்கி விசாரித்த உதவியாளரிடம் அந்த மூதாட்டி, ‘‘தூரத்தில் இருந்து புல்லை அறுத்துக் கட்டி தலையில் சுமந்துபோய் விற்றால் தலைச்சுமைக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். வெயிலுக்கு கால் சுடுதுய்யா. அதான் நின்று நின்று செல்கிறோம்’’ என்றார். அவர் கூறியதை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் தெரிவித்தார். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., காரில் இருந்த ஜானகி அம்மையார், அவரது உறவினர் லதா ஆகியோர் அணிந்திருந்த செருப்புகளை கழற்றச் சொன்னார். அதோடு, தன் பையில் இருந்த கணிசமான பணத்தையும் உதவியாளரிடம் கொடுத்து மூதாட்டியிடமும் சிறுமியிடமும் கொடுக்கச் சொன்னார். அதை பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது, காரின் கருப்புக் கண்ணாடியை இறக்கிவிட்டு மூதாட்டியை எம்.ஜி.ஆர். வணங் கினார். அவரை பார்த்த பிறகுதான் தனக்கு உதவி செய்தது எம்.ஜி.ஆர். என்றே அந்த மூதாட்டிக்குத் தெரிந்தது. நன்றி கூட தெரிவிக்காமல் பிரமை பிடித்தவர்கள் போல மூதாட்டியும் சிறுமியும் பார்த்துக் கொண்டிருக்க, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

எம்.ஜி.ஆர். மீது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலங்கைத் தமிழர் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி மிகவும் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருக்கும்போது ராஜீவ் எழுந்துவந்து ‘மைக்’கை சரி செய்தார். மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்திருந்தார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளி பிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின்போது, எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதை மட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு, ‘‘மாலையில் வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும் சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி, வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.!

ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒருவேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

இந்த திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக...

செய்ததை சொல்ல மாட்டார்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்


முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்!

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...