Monday, October 10, 2016

அட...தூக்கம் இவ்வளவு அவசியமா..! #SleepDeep

vikatan.com


மகிழ்ச்சியான ஒரு மனநிலையில், சாலையில் நடந்து செல்லும் பெயர் அறியா மனிதர்கள் மீதும் பிரியம் ததும்புகிறது. திடிரென நம் வண்டியின் குறுக்கே யாரேனும் ஓடிவந்தாலும் “இது சகஜம்தானே” எனப் புன்முறுவலுடன் கடந்து செல்ல முடிகிறது.நண்பர்களின் அழகு ரசனையை ரசிக்கவும், உணவின் சுவையை ருசிக்கவும் முடிகிறது.அன்றைய தினம் மகிழ்ச்சியால் நிரம்புவதற்கான தொடக்கப்புள்ளியாக ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது நம்மை அடுத்தடுத்த நல்விளைவுகளை நோக்கித் தள்ளிச் செல்கிறது. இப்படி நம் மனதையும் உடலையும் நல்லனவற்றை நோக்கி செலுத்துவது ஏதோ ஒரு மாயசக்தி அல்ல; அது ஒரு பயிற்சி

தீப்பெட்டியில் தூக்குச்சியை உரசிப் பற்றவைப்பதற்கே நேர்த்தியான பயிற்சி தேவைப்படுமெனில், மனதில் மகிழ்ச்சியைப் பற்ற வைக்கவும் பயிற்சி தேவைதானே!

நம் உடலையும் மனதையும் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள அடிப்படையான சில வாழ்முறை மாற்றங்கள் அவசியம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் பார்க்கும் எல்லோமும் ஆரோக்கியமாக தெரியும். எப்போதும் வேலை,டென்ஷன், பரப்பரப்பு என அலைந்துக்கொண்டே இருந்தால்,அந்த அலுப்பும் சலிப்புமே நம் இயல்பிலும் பிரதிபலிக்கும். ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு இயல்பான ஒன்று.அந்த இயல்பை மீட்டெடுப்பது அத்தனை சிரமம் அல்ல. சற்றே மெனக்கெட்டால் சாத்தியமே!

உணவு ,தூக்கம், உடற்பயிற்சி, மன அழுத்தம்..இந்த நான்கையும் திறம்பட நிர்வகிப்பதுதான் “லைஃப்ஸ்டைல் மேனேஜ்மெண்ட்” என்கிற வாழ்க்கைமுறை திட்டமிடல். தினமும் நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் இதை முறையாகச் செய்தாலே ஆரோக்கியம் மிளிரும்.

முன்பெல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் உழைப்பு என்பது பிரதானமாக இருந்தது. ஆனால், இப்போது அனைத்து வேலைகளையும் இயந்திரமயமாக்கி,எல்லாமே ஒரு “டச்”சில் வந்து நிற்கின்றன. ஆனால் மனித உடலோ இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக உழைத்து உழைத்து உழைப்புக்குப் பழக்கப்பட்டிருக்கிறது.உழைத்துக்கொண்டே இருந்தால், அதன் இயங்குதன்மை சீரான ஒழுங்குடன் இருக்கிறது. அதுவே உடலுக்கு வேலையே கொடுக்காமல் இருந்தால், அதில் சிக்கல் உண்டாகிறது. கொழுப்பு, தசை, எலும்பு எல்லாமே சேர்ந்ததுதான் மனித உடல்.வெளியேற்றுவதற்கான வேலையே கொடுக்காத போது உடம்பில் கொழுப்பு சேர்ந்துக்கொண்டே இருக்கிறது. இயக்கமே இல்லாமல் தசைகள் தளர்ச்சி அடைகின்றன. வெயிலில் கூட செல்லாமல் ஏசியிலும், அலுவலகத்தின் உள்ளேயும் அமர்ந்திருப்பதால் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது.

இளம் பருவத்தில் ஆரோக்கியமான ஓர் இளைஞனுக்கு, உடலில் 20 சதவிகிதம் கொழுப்பு இருக்க வேண்டும். அதுவே ஒரு பெண்ணுக்கு, அது 25-30 சதவிகிதமாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது ஆண் உடலில் 40 சதவிகிதம் கொழுப்பும், பெண் உடலில் 50 சதவிகிதம் கொழுப்பும் இருக்கிறது. மனித உடலுக்கு கொழுப்பு அத்தியாவசியம்தான். ஆனாலும், அதன் பணி மிகவும் வரம்புக்கு உட்பட்டது. அது,குளிரில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். உடலின் வைட்டமின்களை பாதுகாக்கும்.முக்கியமாக உடம்பில் ஏதேனும் நச்சுப்பொருட்கள் இருந்தால், அது வேறு உறுப்புகளை பாதிக்காதவாறு, கொழுப்பு தன்னுடன் சேர்த்துக்கொள்ளும். ஆக, உடம்பில் ஏராளமான கொழுப்பு இருந்தால், அது அந்தளவுக்கு நச்சுப்பொருட்களை உடலுக்குள் அடைத்து வைத்திருக்கிறது எனப் பொருள்.

நவீன நகர வாழ்வில் மண், நீர், காற்று..என சுற்றுப்புறம் முழுவதையும் நச்சாக்கி வைத்திருக்கிறோம். பாக்கெட் உணவுகள், வினோத சுவையூட்டிகள், பிராய்லர் சிக்கன்,அழகுச் சாதன பொருட்கள்..என உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் வேதிப் பொருட்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். இவைதான் நச்சாக மாறி, உடலின் கொழுப்புடன் சேர்ந்துக் கொள்கின்றன. பிறகு அவை ஒவ்வொரு நோயாக உருவாக்கி நம் வாழ்க்கையை நரகம் ஆக்குக்கின்றன. பதற வேண்டாம்..! வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் சிலவற்றை செய்வதன் மூலம் இந்த சூழலை எளிதாக கடந்து வர முடியும்!





தூக்கத்தில் தொடங்குவோம்

பகலில் நாம் எப்படி உணர்கிறோம் என்பது இரவில் நம் தூக்கம் எப்படி இருந்தது என்பதை பொறுத்துதான் அமையும். போலவே, தூக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வும் பகலில் நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. நிம்மதியான தூக்கம் மூளையை மிரட்டி ஓய்வெடுக்க சொல்லும். இதனால் மன அழுத்தம் தீரும். தூங்கும் நேரம், தூங்கும் முறைகள் ஆகியவை தூக்கத்தை அதிகம் பாதிக்கும். ஒவ்வொருவருக்கும், அவர் உடல் மற்றும் செய்யும் வேலையின் தன்மை பொறுத்து தேவையான தூங்கும் நேரம் மாறுபடும்.எந்த முறை உங்களுக்கு ஒத்து வருகிறது என்பதை நீங்கள்தான் அனுபவத்தின் மூலம் கண்டறிய வேண்டும். உங்கள் தூக்கத்தை செறிவூட்டி, பகல் நேரத்தில் நிம்மதியாக இருக்க வழிவகுக்க சில டிப்ஸ் இதோ:


முறையான தூங்கும் நேரம்:

எதிலுமே ஒரு ஒழுங்கு இருந்தால் அதன் விளைவுகள் சாதகமாக இருக்குமென்பது அடிப்படை. அது போல தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவது, உடலுக்கு பல வகையில் நல்லது. வார இறுதிகளில் இதை பின்பற்றுவது கடினம் என்பவர்கள் அதற்கேற்றது போல நேரத்தை சற்று மாற்றி அமைக்கலாம்.. இரவில் ஏதேனும் வேலை வந்து தூங்குவதற்கு தாமதமானால் பகலில் தூங்கி அதை சமன் செய்யலாம்.எழுந்திருக்கும் நேரத்தை மாற்றாமலிருக்கவும், அதே சமயம் போதுமான நேரம் தூங்கவும் இது உதவும். ஆனால் மற்ற நாட்களிலும் பகலில் தூங்குவது, இரவு தூக்கத்தை பாதிக்கும் என்பதை மறக்க கூடாது. சில சமயம் இரவு உணவுக்கு பின் உடனே தூக்கம் வரலாம். அப்போது எதாவது உடற்பயிற்சிகள் செய்து, நண்பர்களுக்கு ஃபோன் செய்து, தூக்கத்தை விரட்டவும். சீக்கிரம் தூங்கிவிட்டால் நள்ளிரவில் முழிப்பு வந்து மொத்த சிஸ்டமும் குலைந்து போகும்.






மெலட்டனின் ஹார்மோன்:

இயற்கை ஒளியால் உற்பத்தியாகும் இந்த ஹார்மோன் தான் நம் தூக்கத்தை முடிவு செய்கிறது. சூரியனை பார்க்காமல் அலுவலகத்திலே வேலை செய்பவர்களுக்கு பகலிலே தூக்கம் அதிகமாக வரக்காரணம் மெலட்டனின் தான்.. போலவே, இரவு நேரத்தில் டிவி, கம்ப்யூட்டர் என தேவைக்கு அதிகமான வெளிச்சத்தால் தூக்கம் போவதற்கும் இந்த ஹார்மோனே காரணம். வேலை இடத்தில் வெளிச்சம் அதிகம் வருமாறு அமைப்பது, வேலை இடைவெளியில் சூரிய ஒளியில் நடப்பது போன்றவை பகலில் நம்மை உற்சாகமாக வைக்கும்.

இரவு தூங்குவதற்கு முன் டிவி பார்ப்பது தூக்கத்தை கெடுக்கும். ஐபேட், கிண்டில் போன்ற கருவிகளை இரவில் தவிர்க்கலாம். அறையில் இருக்கும் விளக்குகள் பிரகாசமான ஒளியமைப்பு கொண்டதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியில் இருந்து விழும் நிழல்கள் தெரியாதவண்ணம் திரைச்சீலைகள் அமைத்துக்கொள்ளுங்கள். இரவு தண்ணீர் குடிக்க, பாத்ரூம் செல்ல எழுந்தாலும் உடனே விளக்குகளை போடாமல் ஃப்ளாஷ் லைட் போன்றவற்றை பயன்படுத்துங்கள். மீண்டும் விரைவில் உறங்க செல்வதற்கு இது உதவும்.


படுக்கையறை:

படுக்கயறையை அழகாக டெகரெட் செய்வதை விட தூங்குவதற்கு ஏற்ற இடமாக வைத்து கொள்வதுதான் முக்கியம்., அண்டை வீட்டில் இருந்து வரும் சத்தம் போன்ற இரவு நேர சத்தங்கள் அறைக்குள் கேட்காத வண்ணம் கதவுகளை அமைத்துக் கொள்ளுங்கள். மெல்லிய ஒலியில் இசை ஒலிப்பது இந்த சத்தங்களில் இருந்து நம்மை காப்பாற்றும். அதிக சத்தமெனில் இயர் ப்ளக் பயன்படுத்துங்கள். ஒலியை போலவே அறையின் வெப்பநிலையும் மிக முக்கியமானது. அடிக்கடி ஏசியை அணைத்து பின் மீண்டும் போடுவது என்றில்லாமல் சீரான வெப்பநிலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மெத்தை மற்றும் தலையணை விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்யவே கூடாது. உங்களுக்கு ஏற்றவாறு பார்த்து வாங்குங்கள். ஏதேனும் பிரச்சினை எனில் மாற்றுவதற்கு தயங்காதீர்கள். பெரும்பாலானவர்களின் நிம்மதியற்ற தூக்கத்திற்கு இவைதான் காரணமென மருத்துவர்கள் சொல்கிறார்கள். படுக்கையை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். அங்கேயே அமர்ந்து வேலை செய்வதை தவிருங்கள். மெத்தைக்கு வந்த உடனே தூங்க வேண்டும் என உடல் தானாக தயாராகி விடும்.





இந்த மூன்று விஷயங்கள் இல்லாமல் இன்னும் சில காரணிகளும் நம் தூக்கத்தை மேம்படுத்த உதவும். அளவான இரவு உணவு, காஃபியை தவிர்ப்பது, புகையை தவிர்ப்பது.. இவையெல்லாம் நம் தூக்கத்தை நேரிடையாக பாதிக்கும் விஷயங்கள்.இரவில் அதிக திரவ உணவு எடுத்துக்கொள்வதும் தூக்கத்தை நள்ளிரவில் பாதிக்கும்.தூக்கம் வரவில்லையெனில் மூச்சை நன்றாக இழுத்து பின் விடவும். இது நம் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக உதவும்.

நல்லா தூங்குங்க பாஸ்.
முன்பெல்லாம் வீட்டுக்குப் பெரியவர்கள் வந்தால் குழந்தைகள் இரு கரம் கூப்பி, வாய் நிறைய வணக்கம் என்று உறவுமுறையுடன் அழைப்பது கேட்பதற்கே இனிமையாக இருக்கும். நல்ல நாள், பெரிய நாள் என்றால் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அப்பா, அம்மாவை எதிர்த்துப் பேசியதாகவோ, கேலி செய்ததாகவோ நினைவில்லை!
ஆனால் இன்றைய நிலையை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. தப்பித் தவறி வணக்கம் சொல்லும் குழந்தைகள் நூறில் ஒன்றுகூட தேறாது. சட்டென்று ஹாய், ஹலோதான் வந்து விழுகிறது. அதுவும் கையில் அலைபேசியோ, மடிக்கணினியோ இருந்தால் கண்கள் அவற்றிலிருந்து அகல்வதே கடினம்தான். தாத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கோ என்று சொல்லிப் பாருங்கள். எகத்தாளமாக நம்மை ஒரு பார்வை பார்த்தபடி நழுவி விடுவார்கள்.
சர்வ சாதாரணமாகப் பிள்ளைகள் அப்பாக்களை, ‘லூசாப்பா நீ?’ என்கிறார்கள். அறிவுரை சொல்லும் அம்மாக்களை, ‘மொக்கை போடாதம்மா’ என்று எளிதாகத் தட்டிக்கழித்துச் செல்கிறார்கள். சாலையில் போகும் பெரியவரை தாத்தா என்று அழைக்காமல் பெருசு என்று அழைக்கும் பள்ளி மாணவனைப் பார்க்க, கவலையாக இருக்கிறது. திரைப்படங்களின் எதிர்மறைத் தாக்கம். திரையில் கதாநாயகனும் நண்பனும் அடிக்கும் கூத்தையெல்லாம் தங்களுக்குள் இழுத்துப் போட்டுக்கொள்ளும் பேரார்வம்.
பல நேரங்களில் ஆயாசமாகத்தான் இருக்கிறது. எங்கு தவறுகிறோம் என்பது புரிபடுவதில்லை. நிச்சயமாக குழந்தைகள் மீது தவறில்லை. அவர்கள் நாம் பிடிக்கும் களிமண். கூட்டுக் குடும்பமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை இத்தகைய சமயங்களில் தவிர்க்க இயலாது.
அதற்காகப் பிள்ளைகள் பெற்றோருக்கு அடிமையாக இருக்க வேண்டுமா? அவர்களுக்கென்று எந்த சுதந்திரமும் இல்லையா? என்று சிலர் கேட்கமால். பெற்றோரிடம் தோழமை உணர்வோடு பழகுவதில் தவறில்லை. ஆனால் ஆங்கே மருந்துக்குக்கூட மரியாதை உணர்வு இல்லை என்பதுதான் வருத்தத்தைக் கூட்டுகிறது.
சிறு வயதிலேயே பெற்றோர்களைத் தூக்கியெறிந்து பேசிப் பழகும் பிள்ளைகளின் குணம் பின்னாட்களில் மட்டும் எப்படி மாறும்? பழக்கமே செயலாகும். செயலே குணமாகும். சிறு வயது முதலே பெரியவர்களையும், பெற்றோர்களையும் மதித்து நடப்பது மிக முக்கியம் என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். முன்பு பள்ளிகளில் இருந்த நன்னெறி வகுப்புகள் இத்தகைய ஒழுக்கங்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் பெருந்துணையாக இருந்தன. இன்றைய நிலையில் பள்ளிகளில் மீண்டும் அந்தப் பாடத் திட்டங்களைச் சேர்ப்பது அனைவருக்கும் நன்மை பயப்பதாக இருக்கும்.
- இரா. பொன்னரசி, சத்துவாச்சாரி.

தஞ்சாவூர் தட்டு எப்படி தயாராகிறது தெரியுமா?

Inline image 1

தலையாட்டிப் பொம்மை, வீணை வரிசையில் தஞ்சாவூரின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று கலைத்தட்டு. கௌரவம், உபசரிப்பு, மரியாதையின் வெளிப்பாடாக கருதப்படும் இந்த கலைத்தட்டில் தஞ்சைக்கே உரித்தான நுண்கலையும், கைத்திறனும், கற்பனையும், தெய்வீக அம்சமும் நிறைந்திருக்கிறது. சுவரை அலங்கரிக்கும் தனித் தட்டாகவும், பூஜையறைகளில் வைத்து வணங்கப்படும் இறை உருவாகவும், கேடங்களாகவும், நினைவுப்பரிசுகளாகவும், சின்னங்களாகவும் உருவாக்கப்படுகிற இந்தக் கலைத்தட்டுக்கு புவிசார் காப்பீட்டு உரிமையையும் கிடைத்துள்ளது.

ராஜராஜ சோழன் காலத்தில் போர் வெற்றிச் செய்திகளையும், மெய்க்கீர்த்திகளையும் தாமிரப் பட்டயங்களில் எழுதும் வழக்கம் இருந்தது. அதன் தொடர்ச்சி தான் இந்தக்கலை.

கோவில்களில் வழிபாட்டுக்குப் பயன்படுத்தும் தட்டுக்கள், குடங்களில் சோழ மரபு சார்ந்த சிற்பங்களை புடைப்பு வடிவத்தில் செய்து. பொருத்துவது வழக்கம். அந்தக் கலையில் மயங்கிய ராஜராஜ சோழன், தட்டுக்களில் தங்களின் சின்னத்தையும், செய்திகளையும் பொதிக்கச் செய்து, சீனாவுக்கும் பிற நாட்டு தோழமை மன்னர்களுக்கும் நினைவுப்பரிசுகளாக அனுப்பினான். ராஜராஜனுக்குப் பிறகு அவருடைய மகன் ராஜேந்திரனும் இந்தக் கலையை உற்சாகப்படுத்தி வளர்த்தான். சோழர்களுக்குப் பிறகு வந்த விஜய நகரத்து மன்னர்களும், மராட்டியர்களும் கூட தஞ்சாவூர் தட்டு உற்பத்தியை தங்கள் பெருமிதமாகக் கருதி வளர்த்தார்கள். அதன்பிறகு இக்கலை பெரும் நசிவைச் சந்தித்தது. தஞ்சாவூர் தட்டு தயாரிக்கும் தொழில் செய்த பலர் அக்கலையை விட்டு விலகி வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள்.

கைவினைப் பொருட்களுக்காகவே உருவாக்கப்பட்ட பூம்புகார் நிறுவனம், கலைத்தொட்டு தொழிலின் கொஞ்ச நஞ்ச உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலைத்தட்டு செய்கிறார்கள். தெற்கு வீதி, கம்மாளர் தெரு, சீனிவாச நகர் போன்ற பகுதிகளில் சிலர் தனித்தனியாக இத்தட்டுக்களை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் வழங்கும் நினைவுப்பரிசுக்கான ஆர்டர்களே இப்போது அதிகம் கிடைக்கிறது.

கலைத்தட்டு என்பது அழகு செய்யப்பட்ட ஒரு பித்தளைத் தட்டு. நடுவில், தூய வெள்ளியில் செய்யப்பட்ட வட்டமான ஒரு தெய்வ உருவம். சுற்றிலும் வெள்ளியும் செம்பும் கலந்த உலோகத்தில் வார்க்கப்பட்ட அலங்கார வளைவுகள். மொத்தமாக அலுமினியத் தகடுகளை வாங்கி, தேவையான சைஸ்க்கு வட்டம் இழுத்து வெட்டி சமப்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு, டிசைனிங் ஒர்க். பொதுவாக தஞ்சாவூர் தட்டு என்றால் மயில், நடராஜர் உருவம் தான் இருக்கும். இப்போது லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார் என எல்லா சாமிகளையும் வைக்கிறார்கள். ஏன்? தலைவர்கள், நடிகர்கள் படங்கள் கூட வைப்பதுண்டு. எல்லாவற்றுக்கும் அச்சுகள் உண்டு.

300 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் வரைக்கும் தஞ்சாவூர் கலைத்தட்டு கிடைக்கிறது. வெளிமார்க்கெட்டில் விலை அதிகமிருந்தாலும், தயாரிக்கும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் கூலி என்னவோ குறைவு தான். ஒரு தட்டுக்கு 30 ரூபாய் கூலி. ஒரு நாளைக்கு 5 தட்டுக்கள் செய்ய முடியும். ஒரு அற்புதமான கலையை கட்டிக்காப்பாற்றும் கலைஞனுக்குக் கிடைக்கும் அதிகப்பட்ச கூலி 150 ரூபாய்.

கலையை மேம்படுத்தவும், பொருளுக்கு விற்பனை வாய்ப்புகளை உருவாக்கித் தரவும், உற்பத்திக்கு தகுந்த விலை பெற்றுத்தரவும் கோருகிறார்கள் கலைத்தட்டு கலைஞர்கள். பெரும்பாலானவர்கள் பொன் வேலைக்குப் போய்விட்டார்கள். சிலர் தொழிலை விட்டே அகன்று தொடர்பில்லாத வேலையைச் செய்கிறார்கள்.

அரசர்கள் பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்து காப்பாற்றிய கலை, காப்பார் இன்றி நசிந்து கொண்டே வருகிறது. கைவினைத் தொழில்களுக்காகவும், கலைக்காகவும் இயங்கும் அமைப்புகளும், நிறுவனங்களும் இக்கலைஞர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்!

பயணம் இனிதாகவும், பதற்றமில்லாமலும் அமைந்திட வாழ்த்துகள் !

தீபாவளி விடுமுறைக்கு ஊருக்குச் செல்பவர்களின் கவனத்துக்கு...
பண்டிகைக் காலம் வந்து விட்டாலே கொண்டாட்டம் என்பதோடு, அதற்கான பயணம் குறித்த பதற்றம் நம்மிடம் தொற்றிக் கொள்வது இயல்புதான்.

முன்பெல்லாம் ஒற்றை மாட்டு வண்டியும், இரட்டை மாட்டு வண்டியும், சாரட்களும்தான் பயணத்தில் துணைக்கு வந்தது. பின்னர், பயணம் 'ட்ராம்' பெட்டிகளாய் மாறியது. இப்போதோ, 'முன்பதிவு, நெரிசல், தட்கல், ரயில் ஆம்னி, பேருந்து' என்று பல "ஹாஸ்-டாக்குகள்" கண்முன் தெரிகிறது.


போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடப் படுவது, தீபாவளி. அதற்கான (தீபாவளி-2016-) நெரிசலைத் தவிர்க்க 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, அக்டோபர் 26,27,28- ஆகிய தேதிகளில், சென்னையில் பேருந்துகள் நிறுத்துமிடத்தை மாற்றம் செய்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.



இணைப்புப் பேருந்துகள் இயக்கப் படுகிறது

இந்த தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


பேருந்து நிறுத்துமிடங்களில் மாற்றம்

ஆந்திரா மார்க்க பயணத்துக்கு : சென்னை அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையம்.

புதுச்சேரி,கடலூர் மார்க்க பயணத்துக்கு : சென்னை கோயம்பேடு (மாநில தேர்தல் ஆணையம்) பேருந்து நிலையம்.

தஞ்சை, கும்பகோணம் மார்க்க பயணத்துக்கு : தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்.

வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கு பூவிருந்தவல்லி(பூந்தமல்லி) பேருந்து நிலையம்.

கோயம்பேட்டிலிருந்து எப்போதும் செல்லும் இந்தப் பட்டியலில் இடம் பெறாத இதர பேருந்துகள் வழக்கம் போல கோயம்பேட்டில் இருந்தே புறப்படும்.


750 சிறப்புப் பேருந்துகள்

தொடர்விடுமுறையை மனதில் கொண்டும், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்கு செல்வதாலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.


கூடுதல் கட்டணம் வசூலித்தால்?

சிறப்பு பேருந்து சேவையை நேரில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத்துறை மந்திரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஏற்பாடுகள் குறித்து பயணிகளின் கருத்துகளைக் கேட்டார்.
ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகளில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், "அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.


ரயில்வேயிலும் ஏற்பாடுகள்

தீபாவளி பண்டிகைக்காக, கயா, வாரணாசி, அலகாபாத், டில்லி மற்றும் ஆக்ரா ஆகிய இடங்களுக்கு சென்று வரும் வகையில், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில், பாரத தர்ஷன் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.
மதுரையிலிருந்து வரும், 25ம் தேதி இந்த ரயில், புறப்படுகிறது. திண்டுக்கல், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படுகிறது.

கட்டணம் எவ்வளவு ?

மூன்றடுக்கு 'ஏசி' வகுப்புப் பயணத்துக்கு 13- ஆயிரத்து, 940 ரூபாய், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிக்கு, 10 ஆயிரத்து, 35 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. தென்னிந்திய சைவ உணவு வசதியும், செய்யப் பட்டுள்ளது.


சாலை வழியாக சுற்றிப் பார்க்க, வாகன வசதியும் கூடுதலாக செய்யப் பட்டுள்ளது. 12 நாட்கள் பயணச் சுற்றுலாவான இதற்கு தென்னக ரயில்வே உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல், ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகத்தை, 044 - 6459 4959 தொலைபேசி எண்ணிலும், 90031 40681 என்ற அலைபேசி (செல்போன்) வழியிலும் தொடர்பு கொள்ளலாம்.

வேகம் அதிகரிக்கப் பட்ட ரயில்களின் விபரம்:

42 எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் இதில் அதிகரிக்கப் பட்டுள்ளது. 20 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேகம் அதிகரிப்பு(1)
ரெயில் எண் (16181) எழும்பூர்-மன்னார்குடி, சிலம்பு எக்ஸ்பிரஸ், (16714) ராமேஸ்வரம்-எழும்பூர் எக்பிஸ்பிரஸ், 22614 ஹால்டியா-சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 12665 ஹவுரா- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 16128 குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிப்பு.
வேகம் அதிகரிப்பு(2)
16130 தூத்துக்குடி- எழும்பூர், 16184 தஞ்சாவூர்- எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், 16713 எழும்பூர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் , 16125 எழும்பூர்- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், 12693 எழும்பூர்- தூத்துக்குடி முத்துநகர்.
வேகம் அதிகரிப்பு (3)
22605 புருலியா-விழுப்புரம் எக்ஸ்பிரஸ், 16126 ஜோத்பூர்- எழும்பூர், 12663 ஹ‌வுரா- திருச்சி எக்ஸ்பிரஸ், 22603 கராக்பூர்-விழுப்புரம் எக்ஸ்பிரஸ், 12631 எழும்பூர்- நெல்லை எக்ஸ்பிரஸ்.
16127 எழும்பூர்-குருவாயூர், 16863- பகாத்-கி- கோதி- மன்னார் குடி எக்ஸ்பிரஸ், 16864 மன்னார்குடி-பகாத்- கி-கோதி எக்ஸ்பிரஸ், 12632 திருநெல்வேலி-எழும்பூர்- நெல்லை.
வேகம் அதிகரிப்பு (4)
16101 எழும்பூர்- ராமேஸ்வரம், 16177 எழும்பூர்- திருச்சி மலைக் கோட்டை, 16178 திருச்சி-எழும்பூர் மலைக் கோட்டை, 16183 எழும்பூர்-தஞ்சாவூர் உழவன், 16723 எழும்பூர்-திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
வேகம் அதிகரிப்பு (5)
16616 கோவை-மன்னார்குடி, 12605 எழும்பூர்-கானக்குடி பல்லவன், 12635 எழும்பூர்- மதுரை வைகை, 16176 காரைக்கால்-எழும்பூர், 16186 வேளாங்கன்னி- எழும்பூர், 16307 ஆழப்புழா- கண்ணூர், 16313 எர்ணா குளம்-கண்ணூர், 12606 காரைக்குடி-எழும்பூர் பல்லவன்.
12633 எழும்பூர்- கன்னியாகுமரி, 12668- நாகர்கோவில்-எழும்பூர், 16182 மன்னார்குடி- எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ், 12662 செங்கோட்டை- எழும்பூர் பொதிகை.
வேகம் அதிகரிப்பு (6)
16724 திருவனந்தபுரம்-எழும்பூர் அனந்தபுரி, 16860 மங்களூர்- எழும்பூர், 16333 வெரவால்- திருவனந்தபுரம், 16337 ஒகா-எர்ணாகுளம், 16338 எர்ணாகுளம்-ஒகா எக்ஸ்பிரஸ்.
சூப்பர் பாஸ்ட் ரயில்கள்
மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சூப்பர் பாஸ்ட் ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
எழும்பூர்-ராமேஸ்வரம் (22661), ராமேஸ்வரன்- எழும்பூர், எழும்பூர்- ஜோத்பூர், ஜோத்பூர்-எழும்பூர்- சென்ட்ரல்-ஹபி, : ஹபி- சென்ட்ரல் உள்ளிட்ட 8 ரெயில் சூப்பர் பாஸ்ட் ஆக மாற்றம்.


பயணம் இனிதாகவும், பதற்றமில்லாமலும் அமைந்திட வாழ்த்துகள் !


ந.பா.சேதுராமன்
When will Rs 15 Lakh be deposited in every Indian’s account, PMO told to respond 
The Central Information Commission (CIC) has directed the Prime Minister’s Office to respond to queries made by a common man regarding the election promise of bringing back black money and depositing Rs 15 lakh in every Indian’s account, among other issues, within 15 days.

At the time of election, it was announced that black money will be brought back to India and Rs. 15 lakhs will be deposited in the account of each poor, what happened to that?

This was a query under the Right to Information Act made by Kanhaiya Lal from Rajasthan to the Prime Minister’s Office, to which the office did not respond. Disposing of his appeal, the CIC has now directed the PMO to respond to Kanhaiya, who has posed some other queries also. Those are: Whether 40% concession given by the UPA Government to senior citizens for rail travel will be withdrawn by the present government? It was announced during the election that corruption will be removed from the country, but it has increased to 90%. When will a new law be made to curb corruption?

The government is developing smart cities but there is no development in the villages of Rajasthan. When will proper roads be laid in villages, where conditions have gone from bad to worse?

Apart, from these queries, he also raised the issue of exploitation of the poor in Jhalawar (Rajasthan) by government officials. He said that the benefits of schemes announced by the government are only limited to the rich and capitalists and not for poor people.

Read more at: http://www.livelaw.in/will-rs-15-lakh-deposited-every-indians-account-pmo-told-respond/
DU Not At Fault For Denying Admission To Student Not Carrying Required Documents: Delhi HC
The Delhi High Court in Bhim Shankar Thakur vs Delhi University & Anr., rejected the writ petition wherein Bhim Shankar prayed that Delhi University (DU) should take on record his degree certificate and grant him admission to LLB course for academic session 2016-2017.

 The court, through Justice Sanjeev Sachdeva, heard the petitioner but decided against directing the writ of mandamus as prayed. Bhim Shanka appeared for the DU LLB entrance examination and secured rank 767 in the OBC category. As per his rank, he was called for counselling on 22.08.2016, but he could not submit the original degree of his qualifying examination as was required by the university. Bhim Shankar had passed the qualifying examination in 2012, but had not collected the degree from the university.

 After the DU administration refused him admission due to failure to submit the required original documents, Bhim Shankar collected the degree from the university concerned – Chaudhary Charan Singh University, Meerut, on 08.09.2016, and approached Delhi University to submit the same. But, DU did not accept the said degree. Bhim Shankar’s counsel contended that he was not in a position to produce any proof that the degree had not been issued by the university till the date of counselling.

 But he prayed that he should be granted admission according to his rank. The court relied on the judgment in a previous case of Delhi High Court in Rahul Kumar Singh versus University of Delhi & Ors, with identical circumstances wherein it was held that “Degree not collected cannot be equated with Degree not issued.” 

It was also held that it was mandatory for the candidates to report with the documents in original at the specified date and time for counseling, failing which they will forfeit their claim for admission.

 Agreeing that the decision of the judgment in the above mentioned case was applicable in the case concerned as well, the court said: “Since the petitioner failed to appear for counselling in terms of the notification with the original documents, the action of the respondent – university in denying admission to the petitioner and not entertaining the Degree produced at a subsequent date cannot be faulted.”

Read more at: http://www.livelaw.in/du-not-fault-denying-admission-student-not-carrying-required-documents-delhi-hc/
Court Stenographer’s Shorthand Note Book Not Public Record Under RTI: Delhi HC 

The High Court of Delhi on Friday held that the Court stenographer’s Shorthand note book is not a “record” held by a public authority and therefore cannot be sought under the Right to Information Act. 

The Court noted that neither are shorthand books retained, nor can they be equated with a judgment or an order. Justice Sanjeev Sachdeva hence observed, “Shorthand notebook can at best be treated as a memo of what is dictated to a steno to be later transcribed into a draft judgment or an order. When draft judgments and order do not form part of a ‘record’ held by a public authority, a shorthand note book which is memo of what is dictated and which would later be typed to become a draft judgment or an order can certainly not be held to be ‘record’ held by a public authority.”

The Petitioner, Mr. Tapan Choudhury had challenged an order passed by the Central Information Commission in March this year, refusing to provide him copies of the shorthand note book in which the Stenographer takes dictation of the Court. Mr. Choudhary had reportedly sought shorthand notes of the stenographer taken on May 27, 2013, claiming that the Court had passed an order of ex-parte injunction in a suit initiated by a American multinational technology company on the said date, without any party appearing before it. Deciding against the applicant, the Court relied on the decision in the case of Secretary General, Supreme Court of India v. Subhash Chandra Agarwal, AIR 2010 Delhi 159, wherein the Full Bench of the High Court had held that even notes taken by Judges while hearing a case cannot be treated as final views expressed by them on the case, and cannot be held to be a part of a record ‘held’ by the public authority.

Read more at: http://www.livelaw.in/court-stenographers-shorthand-note-book-not-public-record-rti-delhi-hc/

NEWS TODAY 02.01.2026