Thursday, November 10, 2016

MKU yet to make its theses available in ‘Shodhganga’



The Ph. D theses available in Madurai Kamaraj Unviersity, numbering around 4,000, were yet to be made available in ‘Shodhganga’ portal, the national open access platform for research work.

This is despite signing a Memorandum of Understanding (MoU) way back in 2012 with Information and Library Network Centre (INFLIBNET Centre) of University Grants Commission, which is managing the portal.

‘Shodhganga’ was launched in 2011 with the objective of making all research theses from universities in India available on a single platform. Apart from being a single repository to access research work from across the country based on research areas and other categories, the initiative also aimed at reducing plagiarism in research work.

According to data available in ‘Shodhganga,’ around 1,12,500 theses from nearly 280 universities have so far been made available in the portal. However, the contribution from MKU has been just one so far, a theses from Department of Library Sciences, uploaded in 2015.

In comparison, majority of the State-run universities have made hundreds of their theses available in the platform. For instance, Anna University tops the list in Tamil Nadu with 3,969 theses available in the portal. Universities from southern districts like Manonmaniam Sundaranar University, Alagappa University and Mother Teresa Women’s University have also made 2319, 350 and 253 theses available respectively.

A senior professor from the university said that there were exemplary research work done in MKU in the past, particularly from departments like School of Social Sciences and School of Biological Sciences, which if made available in the portal would be of immense use to researchers.

A senior official from the university blamed the delay on INFLIBNET Centre. He said that there were about 3,500 theses in the library which were to be digitized from printed format, which would be a labour intensive work involving scanning of lakhs of pages. “As per the MoU, INFLIBNET Centre had to provide fund for the digitisation work. But it is yet to be sanctioned,” he said.

He added that approval was pending from INFLIBNET Centre even to upload 603 theses submitted to MKU in the recent years, which were already available in the digital format.

HC surprised over claim of man practising homoeopathy, siddha as well as allopathy

SPECIAL CORRESPONDENT

Surprised over the claim of a person to have obtained educational qualifications to practice homoeopathy, Siddha as well as allopathy medicine, the Madras High Court Bench here has directed the Director of Public Health and Preventive Medicine to a file a detail counter affidavit with respect to genuineness of the institutes from which he claimed to have obtained those qualifications as well as his current status.

Justice V. Bharathidasan passed the interim order on a writ petition preferred by N. Kathalingam of Tiruchi with a plea to forbear the Health Secretary, Director General of Police, Director of Public Health, Tiruchi Collector and Commissioner of Police from interfering with his medical practice at his own hospital at Chinthamani Bazaar in Tiruchi city. He ordered that the DPH’s counter affidavit should be filed by November 23.

The petitioner, in his affidavit, claimed to have completed a course in homoeopathy and got his name registered with the Medical Council on April 15, 1976. Subsequently he completed a course in Siddha medicine too and registered his name with the council in 1998. “Further, I have also completed my course in allopathy medicine also from the Hippocrates Institute besides completing a training in first aid,” the affidavit read.

Claiming to have been providing medical treatment to people in Tiruchi for the last 35 years without any complaint from his patients, the petitioner said: “I got my name registered as allopathy doctor as well as siddha and homeopathy with the State Government of Tamil Nadu... I am giving treatment in my hospital in the system of allopathy, siddha and homeopathy and refer serious and complicated cases to famous private hospitals and government hospital.”

Further, “it is pertinent to mention that I cannot be termed as a quack since I am not claiming as a doctor who has completed the MBBS course or Master’s course without any valid degree... The term quack is applicable only to those who falsely claim to be a doctor without possessing qualifications... Yet, the respondents, in the guise of enquiry as if I am conducting my profession in an illegal manner, are harassing by calling me to the police station now and then,” he said.

Stating that the officials had time and again attempted to close down his hospital, the petitioner sought to restrain them from interfering with his profession.

File counter affidavit regarding genuineness of institutes from which he claimed
to have studied

When Chennai vendors turned note banks

TOI 

The first time a customer pulled out a Rs 500 note for a cup of coffee and a plate of sundal on Tuesday night, Suresh Kumar, a tea vendor in Kottupuram, didn't find anything amiss as he returned the balance. When six others followed within a span of an hour, wielding currency of the same denomination and asking for change, he frowned.

"People in big cars stopped at my shop to buy vadais and all of them gave me `500. I sensed something wasn't right," said Kumar, whose kiosk is barely more than a few discarded sheets of plywood leaning against each other. It was Marimuthu K, a vegetable vendor across the road who broke the news to him — about the Centre's decision to demonetize `500 and `1,000 notes starting Tuesday midnight.

Many like Kumar, who usually blend in to the city's dust, seemed to gain colour overnight — not for the things they sell but the notes they held. Although business was lean for small traders, wholesalers and those who earn their livelihood in cash on Wednesday, many of them said they were approached by office-goers to trade their currency notes of lower denomination for `500 notes. "Very few wanted to buy from us. The few who did, wanted it for the change," said Marimuthu, who borrowed money from a money lender to buy his stock as wholesale dealers refused to accept `500 and `1,000 notes.

By Wednesday noon, while major retail outlets remained open, the smaller vendors shut shop. "Children seem to be the only ones with money now as their pocket money is mostly in `10, `50 or `100 denominations," said Bharat Kumar, a pani-puri vendor on G N Chetty Road, T Nagar. He wound up for the day by 5PM, four hours before his usual time. Some, who didn't want to lose out on a day's wage, sold their goods on credit. A Das, a coconut vendor in Nandanam is among them. He managed to earn `300 on Wednesday, compared to the `2,000 he usually makes in a day.


Chennai has around 1.5 lakh vendors and 75,000 domestic workers, according to estimates by members of the Tamil Nadu chapter of the National Domestic Workers Movement and National Association of Street Vendors of India. A chunk of them trade in cash, and some don't even have a bank account. "I was given `3,000 in `5,00 denomination as my salary. If they had given me some sort of warning before, I would have got it changed," said K Malika, a domestic help in Arumbakkam.

Raghunathan N, an executive in Lakshmi Vilas bank, said many of these workers in the unorganised sector have bank accounts under the Pradhan Mantri Jan-Dhan Yojana scheme. "Even if they don't have an account, most banks have business correspondents to guide these people to open new accounts," he said. For transaction below `4,000 they can exchange their currency in any of the 19 RBI offices, post offices, commercial banks, private and public sector banks. "We have also been given a directive by the RBI to open accounts on priority basis. Usually opening an account will take 10 working days. Now we have to do it within 2-3 working days," he said.

When Chennai had money, no cash

TIMES OF INDIA

Usually, S Saravanakumar orders idli, sambar and coffee for breakfast. On Wednesday, though, the software engineer made do with a cup of coffee. The restaurant he frequented, like many others in the city, had pasted notices saying `500 and `1,000 currency notes would not be accepted, and requested exact change.

"I could order only coffee as I had only one `50 note," said Saravanakumar, a regular customer at Sangeetha restaurant in Mylapore. He was not the only one affected. After `500 and `1,000 notes were demonetised, the eating out and shopping scene in the city were particularly impacted, with many retailers refusing to accept the scrapped notes or even cash on delivery.

A few restaurants refused to accept cash altogether. Rain Drops, a part of KTDC hotel on Greams Road, pasted notices on the door saying the 'banned' notes would not be accepted. It also refused to accept cash for the lunch buffet, priced at `175. "The staff told us to pay by card," said a customer.

Restaurants also registered fewer footfalls. At Saravanas on Radhakrishnan Road, there were hardly any customers. "It has been dull since morning. Usually, the parking would be full during lunch hour but today it is vacant. We think it will take at least three days for things to settle down," said a staffer.

Customers logging into the website of food delivery start-up Swiggy were greeted with this message: 'Change' is great. Except for today. Use any one of our many payment options to place your order. COD has been paused temporarily."

Supermarkets and bakeries that wouldn't accept cards for purchases below `200 ensured their business wouldn't suffer by accepting cards even for amounts below `100.

Soon after the news broke on Tuesday night, many headed not just to ATMs and petrol bunks but also jewellery stores. Even the soaring price of gold on Wednesday didn't deter them from trying to turn their stashed away cash into yellow metal and many stores obliged. However, some like Tanishq sent out messages saying, as per RBI guidelines, their showrooms would not accept the demonetised notes.

Small roadside vendors took a hit, though. "I always avoid taking `500 and `1,000 notes because of the fake currency scare. We usually change it for lower denominations at the Koyambedu market at the end of the day," said Kanakavalli, a fruit vendor on C P Ramaswamy Road, Alwarpet. "Today, business has been very bad. I usually make about `4,000 a day, but today I haven't even crossed `300. Even my regular customers have bought fruits on credit and promised to pay later."

கருப்புப் பணத்துக்குக் கடிவாளம்!

By ஆசிரியர் | Published on : 10th November 2016 01:37 AM |

இப்படியொரு அதிரடி முடிவை பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்க முடியும் என்று அவருக்கு நெருக்கமானவர்களும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களுமே கூட எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கத்தினரும் கணக்கில் காட்டாமல் பல கோடி ரூபாய் வைத்திருப்பவர்கள் என்று தெரிந்தும், அவர்களது வெறுப்பையும் விரோதத்தையும் தானும் அரசும் சம்பாதித்துக் கொள்ளும் என்பதை உணர்ந்தும்கூட இப்படியொரு துணிச்சலான முடிவை எடுத்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியாக வேண்டும்.
ரூ.500, ரூ.1,000-க்கான காகிதச் செலாவணியை ஒரு அதிரடி உத்தரவின் மூலம் செல்லாமல் ஆக்குவது என்பது எளிதில் எடுத்துவிடக் கூடிய முடிவல்ல. இதற்குப் பின்னால் தீவிரமான ஆலோசனைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தியா போன்றதொரு நாட்டில் இப்படியொரு திட்டம் அரசிடம் இருக்கிறது என்பதையும், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன என்பதையும் ரகசியமாகப் பாதுகாப்பது என்பது அசாத்தியம். ஏதாவதொரு விதத்தில் அது வெளியாகிடும். ஊடகங்களுக்குக் கசிந்துவிடும். கருப்புப் பண முதலைகளால் மோப்பம் பிடிக்கப்பட்டு விடும். அதையும் மீறி, ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது என்றால் அதுவே மிகப்பெரிய வெற்றி.
சுதந்திர இந்திய சரித்திரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது துணிச்சலான நடவடிக்கை இது. பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட மன்னர் மானிய ஒழிப்பும், வங்கிகள் தேசியமயமாக்கலும், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க நேர்ந்த காலகட்டத்தில், பொருளாதார சீர்திருத்தத்திற்கு வித்திட்டு, தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்திய பிரதமர் நரசிம்ம ராவின் முடிவு, உலக வல்லரசுகளின் எதிர்ப்பையும், அவர்கள் விதிக்க இருக்கும் பொருளாதாரத் தடையையும் நன்றாகவே உணர்ந்திருந்தும், 1998-இல் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு போக்ரானில் அணுஆயுத பரிசோதனை நடத்தி இந்தியாவை அணுஆயுத பலம் பொருந்திய நாடாக அறிவித்தது ஆகியவற்றிற்குப் பிறகு, இப்போது கருப்புப் பணத்துக்கும், கள்ளப் பணத்துக்கும் எதிராக நரேந்திர மோடி அரசால் எடுக்கப்பட்டிருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைச் செல்லாததாக்கும் இந்த முடிவு, சமூக விரோதிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதல் என்றுதான் கூற வேண்டும்.
உள்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டாலே போதும், நமது பொருளாதாரம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும். இதைக் குறிவைத்துத்தான், நரேந்திர மோடி அரசு மறைக்கப்பட்ட வருமானத்தை வெளிப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. அதை பயன்படுத்தி கொண்டு கருப்புப் பணத்துக்கு வரி கட்டி சரி செய்து கொள்ள அரசு அளித்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் போனவர்கள், இப்போதைய அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்காக நாம் ஏன் அனுதாபப்பட வேண்டும்?
இந்தியாவில் ஏறத்தாழ ரூ.30 லட்சம் கோடி கருப்புப் பணம் புழங்குகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டுப் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் வெறும் 1% பேர் மட்டுமே வருமானவரி கட்டுகிறார்கள். அன்றைய புள்ளிவிவரப்படி, கணக்குத் தாக்கல் செய்யும் 2.87 கோடி பேர்களில், 1.62 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் இருப்பதாகக் கணக்குக் காட்டி வரி செலுத்துகிறார்கள். ஆனால், ஆண்டொன்றுக்கு இந்தியாவில் 26 லட்சம் கார்கள் விற்பனையாகின்றன.
இதைக் குறி வைத்துத்தான் மோடி அரசு, பரவலாக வங்கிக் கணக்குகள் தொடங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சி நோட்டுக்களின் மதிப்பு ஏறத்தாழ ரூ.16 லட்சம் கோடி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இது வெறும் ரூ.4 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. இதில் புழக்கத்தில் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களின் அளவு மட்டுமே 85%. இந்தப் பணம் வங்கிப் பரிமாற்றமாக இல்லாமல் இருப்பதால்தான் கருப்புப் பணம் உலவ முடிகிறது. ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களைத் தடாலடியாகச் செல்லாததாக்குவதால், ஒன்று அனைத்துப் பணமும் வங்கி வளையத்துக்குள் வர வேண்டும், அதற்குக் கணக்குக் காட்டப்பட்டு வருமானவரி கட்டப்பட வேண்டும். அப்படிக் கணக்குக் காட்ட முடியாவிட்டால் குப்பைத் தொட்டிக்குச் செல்ல வேண்டும்.
அது மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தையே பலவீனப்படுத்த, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரூ.500, ரூ.1,000 கள்ள நோட்டுக்களை அச்சடித்து உலவ விட்டிருக்கிறது. இப்போது அந்த நோட்டுக்கள் செல்லாததாகிவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பட்டிருக்கிறது.
அரசு எதற்காகப் புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. ஒரேயடியாக பணப் பரிமாற்றம் அனைத்தையும் வங்கிப் பரிவர்த்தனையாக மாற்றுவது சாத்தியமல்ல. அடுத்த சில ஆண்டுகளுக்கு, நாணயமான பரிவர்த்தனைக்கு உதவ புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தி, அதைப் படிப்படியாகக் குறைத்து வங்கிப் பரிமாற்றம் மூலம் மட்டுமே பெரிய தொகைகளுக்கான பரிமாற்றங்கள் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதுதான் அரசின் திட்டம் என்று தோன்றுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக இதற்கான முன்னேற்பாடுகள் நடந்திருக்கின்றன. எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கப் புதிய கரன்சி நோட்டுக்கள் அடிக்கப்பட்டுத் தயார் நிலையில் வங்கிகளுக்கு விநியோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நாள்கள் சாமானிய மக்கள் சிறிது சிரமம் அனுபவிக்க நேரும்தான். ஆனால், கருப்புப் பணத்துக்கு நிரந்தரக் கடிவாளம் போடுவதற்கு நாம் ஒத்துழைத்துத்தான் தீர வேண்டும்.
சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையோ, சிரமமோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும், அதே நேரத்தில் கருப்புப் பண முதலைகள் தங்கள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்காமல் பார்த்துக் கொள்வதிலும் அரசு கவனமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் இந்த அளவுக்குத் திட்டமிட்டு ஒரு நடவடிக்கை மேற்கொள்வது எப்படி சாத்தியம் என்பதை நினைத்தால் மலைப்பு மேலெழுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய சாதனையாக சரித்திரம் இந்த முடிவைப் பதிவு செய்யப் போகிறது.
"கருப்பு வெள்ளை நிஜம்!' என்ற தலைப்பில் 14.10.2016 அன்று "தினமணி'யில் வெளிவந்த தலையங்கத்தின் கடைசிப் பத்தியில், "ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களே இல்லாமல் ஆக்குவது அனைத்துப் பரிமாற்றங்களையும் வங்கிப் பரிமாற்றமாக்குவது என்கிற இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கருப்புப் பணத்துக்குக் கடிவாளம் போட்டு விடலாம். ஆனால், இதற்கு எந்த அரசும் முன்வராது. அதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அனுமதிக்கவும் மாட்டார்கள். இதுதான் கருப்பு, வெள்ளை நிஜம்!' என்று எழுதியிருந்தோம்.
துணிச்சலுடன் நரேந்திர மோடி அரசு, கருப்புப் பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும் கடிவாளம் போட்டிருக்கிறது. இதுதான் கருப்பு வெள்ளை நிஜம்!

உன்னத மன்னர் திப்பு சுல்தான்

By ஜெ. ஹாஜாகனி  |   Published on : 10th November 2016 01:36 AM  |

ஆடுகளாய் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதைவிட, சிங்கமாக ஒரே நாள் வாழ்வது மேல்' என்ற வீர வரிகளின் விலாசமாய் நிற்பவன் தீரன் திப்பு சுல்தான்.
நவம்பர் 10 அன்று திப்பு சுல்தானுக்கு கர்நாடக அரசு விழாவெடுக்க முன்வந்ததும், அதைக் கடுமையாக எதிர்ப்போர் திப்பு சுல்தானை மதவெறி மன்னனாக சித்திரிப்பதும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி "திப்பு ஒரு மன்னன்தானே தவிர சுதந்திரப் போராட்ட வீரன் இல்லை. அவனுக்கு விழா எடுக்க அரசு ஆர்வம் காட்டுவது அவசியமா' என்று வினாத் தொடுத்திருப்பதும், தியாக வரலாறுகள் திரும்பத் திரும்ப சொல்லப்பட வேண்டிய அவசியத்தையும், சொல்லப்படாவிட்டால் நிகழும் அபாயத்தையும் உணர்த்துகின்றன.
சென்னையிலே வால்டாக்ஸ்(Wall Tax) சாலை மிகப் பிரபலம். (Wall Tax) என்ற சுவர் வரி ஏன் விதிக்கப்பட்டது என்ற வரலாறு பலருக்கும் தெரியாது. "சென்னைப் பட்டணத்தில் நிலை கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் மீது, ஹைதர் அலி அடிக்கடி அதிரடித் தாக்குதல் தொடுத்து, அவர்களை அலற வைத்துக் கொண்டிருந்தார்.
ஹைதர் அலியின் படையெடுப்பைத் தடுக்க ஒரு நெடுஞ்சுவர் எழுப்பவும், அதற்கான நிதிக்காக விதிக்கப்பட்டதே வால்டாக்ஸ்' என்றும் தனது ஆய்வுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் தஸ்தகீர்.
திப்பு சுல்தானைத் தனது "யங் இந்தியா' இதழில் மிகவும் பாராட்டி எழுதியுள்ள தேசத் தந்தை காந்தியடிகள்,
"நல்லதொரு முஸ்லிமான அவர், மதுவிலும், மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராகவும் வாழ்ந்தார். வருமான இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், பூரண மதுவிலக்கை அமல்படுத்திய திப்பு ஓர் உன்னதமான மன்னர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேசத்தின் வரலாற்றை The Discovery of India என்று எழுத்தோவியமாய்த் தீட்டிய பண்டித ஜவாஹர்லால் நேரு, "ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கிழக்கிந்தியக் கம்பெனியின் பேரெதிரிகளாய் நின்றனர். படுதோல்விகளை பிரிட்டிஷாருக்கு பரிசளித்து, அவர்களின் ஆளுமைக் கனவுகளைத் தகர்த்து வந்தனர்' என்று புகழாரம் சூட்டுகிறார்.
"திப்பு விடுதலைப் போரின் முன்னோடி' என்ற முனைவர் வெ. ஜீவானந்தம் தொகுத்த நூலுக்கு எழுதிய முன்னுரையில் நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர்,
"மதவாதம் பெரும் நோயாகி, நமது சமுதாயத்தைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பைத்தியக்காரத்தனமான மதவெறியும், மூர்க்கம் மிகுந்த வழிதவறிய சிந்தனைகளுமே இந்த அவலத்தின் காரணமாகும்.
இவர்கள் வரலாற்று நாயகர்களைக் கூட பொய்யான கதை கட்டி இனவெறியர்களாகவும், மதவெறியாளர்களாகவும் சித்திரிக்கிறார்கள். சிறந்த மனிதாபிமானியும், சமய ஒற்றுமை பேணியவருமான திப்பு கூட இத்தகைய அவதூறுகளிலிருந்து தப்பவில்லை.
திப்புவின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மசூதியும், ரங்கநாதர் ஆலயமும் அருகருகே எந்த பாதிப்பும் இன்றி, இன்னுமிருப்பதைக் காணலாம். திப்பு மதவெறியனாக இருந்திருந்தால் இந்த ஆலயம் அல்லவா முதல் பலியாகியிருக்க வேண்டும்' என்று குறிப்பிடுகிறார்.
சிறந்த மன்னனாக, சீர்திருத்த நாயகனாக, அறிவியல் தொழில்நுட்ப ஆர்வலனாக, ஆன்மிகத் தேடல் உள்ளவனாக, விவசாயிகளின் தோழனாக, வெள்ளை ஏகாதிபத்தியத்தின் எதிரியாக, அனைத்து சமயத்தினர்க்கும் பொதுவானவனாக கல்வியாளனாக, களப் போராளியாக - இப்படிப் பன்முக ஆளுமை கொண்ட திப்பு சுல்தானை, தப்பு சுல்தானாகக் காட்டும் தகாத செயலுக்கு உந்து சக்தியாக இருப்பது எது என சிந்திக்க வேண்டும்.
"தன்மானமும், மண்மானமும் காக்க இஸ்லாமிய நிஜாமையும், கிறிஸ்தவ ஆங்கிலேயரையும், இந்து மராட்டியரையும் எதிர்த்தவன் திப்பு சுல்தான்' என்று குறிப்பிடுகிறார் குமரி அனந்தன்.
மார்பை மறைக்கும் உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டப் பெண்களின் நிலை கண்டு துடித்து, அதற்குக் காரணமான மரபையும், வறுமையையும் மாற்றியவன். ஆயுதத் தொழிற்சாலையின் கழிவான கந்தக அமிலம் காவிரியை மாசுபடுத்துவது கண்டு பொறுக்காமல், ஆலையையே இடம் மாற்றியவன்' என்று திப்பு சுல்தான் இந்தத் திருநாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை அழகுறப் பதிவு செய்துள்ளார் குமரி அனந்தன்.
திப்பு சுல்தான் பற்றி ஆவணங்களை லண்டன் அருங்காட்சியகத்தில் தேடிப் பிடித்து, ஒரு நூலை எழுதுகிறார் பகவான் எஸ். கித்வானி. இந் நூல்தான் பிற்காலத்தில் Sword of Tipu Sultan' என்ற பெயரில் தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பானது.
இந்தத் தொடருக்குப் பெரும் நெருக்கடிகள் தரப்பட்டன. படப்பிடிப்பு நடந்த பிரிமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததில் 55 பேர் மரணமடைந்தனர்.
அப்போதைய அரசு மல்கானியை இத் தொடரின் ஒரு நபர் தணிக்கையாளராக நியமித்தது. அவரது வற்புறுத்தலின்படி, ஆய்வுநூலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத் தொடர் முற்றிலும் ஒரு கற்பனைக் கதை என போடப்பட்டது.
திப்பு சுல்தானைப் பற்றிய கொடிய அவதூறுகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கொல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்த, ஹரிபிரசாத் சாஸ்திரி எழுதிய பள்ளிப் பாடநூலுக்கான கட்டுரையில், "திப்பு முஸ்லிமாக மாற வற்புறுத்தியதால் 3,000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், ஒடிஸா மாநிலங்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும், ஒடிஸாவின் முன்னாள் ஆளுநருமான பி.என். பாண்டே, ஹரிபிரசாத்தைத் தொடர்பு கொண்டு, அவரது கூற்றுக்கான ஆதாரங்களைக் கேட்டபோது, அவரால் தர இயலவில்லை. பிறகு பாண்டேவின் முயற்சியால் அப்பாடப் பகுதி நீக்கப்பட்டுள்ளது.
திப்பு சுல்தானின் மிக நெருங்கிய உதவியாளரான பூர்ணய்யா, ஒரு பிராமணர். அவர் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடும் என்று சிலர் குற்றம் சாட்டியபோது, "யாரோ சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே நிந்திப்பது கூடாது' என்ற குர்ஆனின் கருத்தை எடுத்துரைத்து அவர்கள் கூற்றை மறுத்துள்ளார் திப்பு சுல்தான்.
சமய நிறுவனங்களுக்கு திப்புவின் ஆட்சியில், ஓராண்டில் ஒதுக்கப்பட்ட தொகை 2,33,959 வராகன்கள். இதில் 2,13,959 வராகன்கள் இந்துக் கோயில்களுக்கு செலவிடப்பட்டது.
மூன்றாம் மைசூர் போரின்போது, பரசுராம் பாவே தலைமையில் படையெடுத்து வந்த இந்து வீரர்களைக் கொண்ட மராட்டிய படை சிருங்கேரி மடத்தை சூறையாடி 17 லட்சம் வராகன் மதிப்பிலான பொருள்களைக் களவாடிச் சென்றது. அப்போது பீடாதிபதியாக இருந்த சச்சிதானந்த பாரதியும், அவரது சீடர்களும் கர்க்கலாவிற்குத் தப்பிச் சென்றனர்.
மடத்தின் மூல விக்ரகமான தங்கத்தால் ஆன சாரதா தேவி சிலையும் கொள்ளை போனது. சிருங்கேரி மடத்திற்கு மராத்தியர்கள் செய்த கொடுமைக்கு இழப்பீடாகப் பெரும் பொருளுதவிகளை வழங்கி ஆறுதல் தந்தது திப்பு சுல்தான்தான்.
நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு திப்பு வழங்கிய 9.5 அங்குல உயரமுள்ள பச்சை மரகதலிங்கம் பாதுஷா லிங்கம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.
திண்டுக்கல் போரின்போது, கோட்டையைப் பின்புறமிருந்து தாக்கினால் எளிதாக வீழ்த்தலாம் என்ற ஆலோசனை திப்புவுக்கு வழங்கப்பட்டது. அப்படித் தாக்கினால் அங்கிருந்த சிவன் கோயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையறிந்து, அந்த வியூகத்தையே திப்பு கைவிட்டார்.
திப்புவின் ஆட்சியில் ஆளுநர் ஒருவர் காவிரி நீர் கீழ்பவானி பகுதிக்குச் செல்ல முடியாமல் தடுப்பணை கட்டினார். கீழ்பவானி விவசாயிகளான தமிழர்கள் திப்புவை சந்தித்து முறையிட்டனர்.
தமிழக விவசாயிகளின் நியாயப்பாட்டை ஏற்றுக் கொண்ட திப்பு, சூரியனும், சந்திரனும் உள்ளவரை, மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும் தண்ணீரைப் பிறரைப் பாதிக்கும் வகையில் தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்று கூறி தடுப்பணையை உடைத்துள்ளார்.
நிலப்பிரபுத்துவம் உருவாக்கிய சமூக அநீதிகளை சரிசெய்ய அரசு முதலாளித்துவம்(State Capitalism) என்ற கோட்பாட்டை திப்பு சுல்தான் அறிமுகப்படுத்தினார். சோஷலிசத்தை ஐரோப்பா சிந்திக்கத் தொடங்கும் முன்பே அதை நடைமுறைப்படுத்தியவர் திப்பு சுல்தான்.
அருகமைப் பள்ளிகளே கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் என்று நம்பிய திப்பு ஆறு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் திறந்ததும், கானுயிர் காப்பகத்தை முதலில் நிறுவியதும், அவரது தொலைநோக்கையும், மக்களின் மீதான பற்றையும் காட்டுவன.
17 வயதில் படைத் தளபதியான திப்பு, 1767-ஆம் ஆண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படையை எதிர்த்துப் போரிட்டு முதல் வெற்றியை ருசித்த இடம் தமிழகத்தின் வாணியம்பாடி.
திப்புவைக் கொன்று, அவனது பிள்ளைகளை வேலூரில் சிறை வைத்தது வெள்ளை ஏகாதிபத்தியம். 1806-ஆம் ஆண்டு திப்புவின் பிள்ளைகள், வேலூர் புரட்சியை சிறையிலேயே நடத்தி, கோட்டையில் பறந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கி, புலிக்கொடியை பறக்கவிட்டனர்.
திகைக்க வைக்கும் தீரத்தை கொண்ட திப்பு சுல்தானைக் கொண்டாடுவதன் மூலம், இளைய தலைமுறை ஏற்றமிகு சிந்தனையையும், எழுச்சிமிகு தியாகத்தையும் இதயத்தில் பதியமிடும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர்.

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு ஆதாரம் காண்பிக்க வேண்டும்

By DIN  |   Published on : 10th November 2016 05:29 AM 


செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் தற்போது செலுத்தும்போது, அந்தப் பணத்துக்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதேசமயத்தில், மக்களிடம் தற்போது இருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இரு வாரங்களுக்குள் வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளவும், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வங்கிக் கணக்குகளில் செலுத்தவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு செலுத்தப்படும் பணத்துக்கு கணக்குக் காண்பிக்க வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பம் மக்களுக்கு இருந்து வரும் சூழலில், இதுதொடர்பான விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்துள்ளார்.
இதுகுறித்து, தூர்தர்ஷன் செய்தித் தொலைக்காட்சிக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பணப்புழக்கத்தில் பெரும் பங்கு வகித்து வந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்திருப்பது, கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு மைல் கல் ஆகும். மேலும், இந்த அறிவிப்பால் ஊழலையும், கள்ளநோட்டு புழக்கத்தையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
தற்போது மக்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ கொடுத்து அவற்றுக்குப் பதிலாக குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. இல்லையெனில், தங்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அவரவர் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்திக் கொள்ள முடியும்.
அவ்வாறு வங்கிகளில் மாற்றப்படும் அல்லது செலுத்தப்படும் பணத்துக்கான மூல ஆதாரத்தை சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அந்தப் பணத்துக்கு எந்த வரிச்சலுகையும் அளிக்கப்பட மாட்டாது. அதேசமயத்தில், அன்றாடச் செலவுகளுக்காக வீடுகளில் இருக்கும் பணத்துக்கு (ரூ.50 ஆயிரம் வரை) எந்த ஆதாரமும் காண்பிக்கத் தேவையில்லை.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், சட்டவிரோதமாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்களும், ஊழல்வாதிகளுமே பாதிக்கப்படுவார்கள். நேர்மையாக சம்பாதிப்பவர்களுக்கும், வரி செலுத்துபவர்களுக்கும் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த அறிவிப்பு வெளியான முதல் இரண்டு வாரங்கள் மட்டும் வங்கிகளில் பணப் பரிமாற்றத்தில் சிறிது பாதிப்பு இருக்கும். பின்னர், புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துவிடும் என்பதால், பணப் பரிமாற்றம் வழக்கம்போல் நடைபெறும்.
இந்த நடவடிக்கையால், நாட்டில் மின் பணப்பரிமாற்றம் அதிகரிக்கும். குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இருப்பதால் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது, அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிலை நீடிக்கும்போது, அதிக வரி செலுத்துவோர் வசிக்கும் நாடாக எதிர்காலத்தில் இந்தியா மாறும் என்றார் அருண் ஜேட்லி.





NEWS TODAY 24.05.2026