Monday, December 19, 2016

Medical education:

Easy entry for ‘foreign’ MBBS riles doctors

DECCAN CHRONICLE.

THIRUVANANTHAPURAM: Widespread resentment prevails among doctors and medical associations over the Centre’s move to cancel the Foreign Medical Graduates Examination (FMGE), the qualifying test for Indian students who have done their MBBS abroad. The proposed move will do away with the qualifying tests for those who did their MBBS from countries like China, Russia, Nepal, South East Asia and Eastern European countries. At present, they have to clear the FMGE before practising in India. The health ministry sent a proposal in this regard to the Medical Council of India based on a plea that it could plug the shortage of doctors in the country.

IMA state president Dr Jayakrishnan said screening test was being done away with in the name of removing deficiency of doctors in rural areas. “However, the basic problem was that the training in most foreign countries from where these students do MBBS was not on par with facilities available in India,” he said and added, “The doctors trained outside might not be able to practice in rural areas.” The IMA believes that many of them who go abroad for studies may not prefer to work in rural and backward areas especially Bihar, Odisha, Chhattisgarh or Jharkhand. The IMA suggested that in order to meet the shortage of doctors in rural areas, the government should allot medical colleges after taking state-wide medical manpower assessment.

Another alternative could be to establish a central medical service cadre to deploy doctors wherever they are needed. “It is strange that on the one hand the government was planning to start Licentiate examination for doctors in the country and on the other hand doing away with screening exams for foreign students,” Dr Jayakrishnan said. KGMOA state secretary Dr Raoof K.A. criticised the Centre’s move to do away with the qualification exams. He said there should be uniformity in norms for registration.

“Giving relaxation to MBBS students from foreign institutions will amount to discrimination. The government should not go ahead with the decision,” he said. A section of doctors said the students of private medical colleges could be better in objective theory examinations, but when it came to practical experience there was nothing like a government set up. Most doctors especially those in the north India are hesitant to work in rural and remote areas because of lack of basic infrastructure facilities. “I think the government should concentrate on providing better facilities in rural areas and upgrading medical care services,” he added.

RAC seats increase in all classes; side lower berths to go south

By B Anbuselvan | Express News Service | Published: 18th December 2016 04:11 AM |

Last Updated: 18th December 2016 04:11 AM | A+A A- |



For representational purpose | EPS


VELLORE : Want to travel long distance, but stuck with the dreaded RAC ticket? Fret not, as the Indian Railways has decided to reduce sleeper berths across all classes to accommodate more RAC ticket holders from January 16 next year. This plan aims at accommodating more passengers in the waiting list.

Presently, five side lower sleeper berths are earmarked per coach in the Sleeper Class. This arrangement accommodates 10 RAC ticket holders.

When the new rules will come into force, 14 RAC ticket holders will be benefited, as two additional side lower berths will be earmarked for them.

Similarly, the number of RAC seats earmarked in AC 3-tier class will be increased from four to eight at the expense of two side berths.

Similarly, RAC seats in II class AC will rise from four to six at the expense of a side berth.

Quoting the recent railway board order, official sources from the Southern Railway told Express that the revised allocation of seats would increase the chances of waitlisted passengers to get RAC seats.

“More than 50 per cent of trains operated in the Southern Railway region run with 24 coaches (maximum permitted number). Each train has 13 to 15 sleeper coaches.

The revised allocation would add a minimum of 35 to 40 passengers in all the classes,” added an officer.
The Southern Railway covers Tamil Nadu and Kerala, with six head divisions at Chennai, Madurai, Salem, Tiruchy, Thiruvananathapuram and Palakkad.

According to officials, this new arrangement would mainly benefit a few highly-congested sections, including Chennai-Howrah, Chennai-New Delhi, Chennai-Madurai, Chennai-Thriuvananthapuram and Katpadi-Howrah.

Officials said berths, which remain vacant in the intermediate stations on several long distance routes, including Mangaluru, Mumbai and Hyderabad, even after catering to all the RAC passengers, will get filled under the new arrangement.

However, the flip side of the move is that it would reduce the chances of senior citizens and pregnant women getting side lower berths. T Mohammed Mubeen, member of Divisional Rail Users Consultative Committee (DRUCC), Chennai, said, “Many senior citizens prefer walking into reservation counters over online booking to get lower berths. If two persons occupy the side berths, elders and pregnant women will have to negotiate with the passengers for lower berths,” he added.

The board directed the railway zones to implement the changes, with effect January 16, 2017, on trains that do not run with LHB coaches.




ESIC hosp in a fix as MCI declines renewal permission

By Ram M Sundaram | Express News Service | Published: 18th December 2016 01:50 AM |

Last Updated: 18th December 2016 04:46 AM | A+A A- |


CHENNAI: The ESIC Medical College Hospital, Chennai, is in troubled waters again after the Medical Council of India declined renewal of MBBS admissions for the forthcoming academic year.

The apex medical regulating body has cited unhygienic student hostel rooms, underqualified staff and shortage of essential facilities as reasons for rejecting the proposal to renew permission for fifth batch.

It all began in March last when the Employees’ State Insurance Corporation under the Union Labour Ministry signalled its intention to withdraw from the field of medical education. As this raised questions about future of hundreds of students studying in 11 institutes under the corporation, including the one in Chennai, the college located in K K Nagar witnessed a series of protests by students and staff condemning the corporation’s move.

After much struggle, it finally took the State government’s intervention to restore calm after it took over the operation of the institute under an agreement with the Centre.

Amid all this chaos, the MCI denied permission to admit students pointing out a series of deficiencies for the 2016-17 batch (4th batch). This was repealed after the ESIC authorities submitted compliance report.
However, the same problem has seemed to have surfaced again this year. The executive committee of MCI which met on October 10 declined permission to admit students for MBBS course in the forthcoming year.
The committee members who inspected the college in the previous week cited as many as 25 reasons to deny permission, including 15.97 per cent deficiency in faculty and 27.94 per cent shortage of resident doctors.

Their report also mentioned that the college’s medical superintendent Sowmya Sampath possessed only eight years of administrative experience against requirement of 10 years and hence was not qualified to hold the post. When Express contacted her, she refused to comment.
“Apart from leaky roofs in the central library, the exam hall, students’ hostel were under construction and there was no internet connection,” government sources said.

Responding to this, a senior ESIC administrator said that they have rectified these deficiencies within the stipulated deadline (30 days) and have sent a compliance report to the MCI. The college is awaiting fresh inspection from the committee members before May.


புயல் கற்றுத் தந்த பாடம்

ராஜலஷ்மி நிர்மல்

கடந்த வார வார்தா புயல் நம்மை கிட்டத்தட்ட அபாயத்தின் உச்சிக்கு அழைத்து சென்றுவிட்டது. இதுபோன்ற ஒரு புயல் காற்றை சென்னை சந்திக்கவில்லை என்று சொல்கின்றனர். புயல் ஓய்ந்த பின்னரே எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்பதை பார்க்கமுடிந்தது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடந்தன. அதுமட்டுமல்லாமல் வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களும் மிகப் பெரிய அளவுக்கு சேதமடைந்தன. வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பு 6,500 கோடி ரூபாய் இருக்கும் என அசோசேம் மதிப்பிட்டுள்ளது. இது ஒரு தனி நிகழ்வு அல்ல. இந்தியா முழுவதும் வருடந்தோறும் புயலால் மிகப் பெரிய பொருளாதார இழப்பு நேரிடுகிறது என்பதே உண்மை.

பொதுவாக புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது தனிநபர்களின் பொருட்கள், வாகனங்கள், வீடு ஆகியவைதான் மிகப்பெரிய அளவு பாதிப்புக்கு உள்ளாகும். இவற்றிக்கு காப்பீடு எடுத்திருந்தால் இழப்பை ஈடுகட்டிருக்காலமே என்று நமக்கு தோன்றும். சிலர் காப்பீடு எடுத்திருப்பார்கள் ஆனால் இழப்பீடு கோரும் பொழுது இவை உங்கள் பாலிசியின் கீழ் வரவில்லை என இழப்பீடு மறுக்கப்படும். ஆகவே காப்பீடு எடுக்கும்போது கவனமாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது. கார் மற்றும் வீடுகளுக்கான காப்பீடு எடுக்கும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வாகன காப்பீடு

பொதுவாக இருவகையான வாகன காப்பீடுகள் உள்ளன. ஒன்று தானாக பாதிப்பு ஏற்படுவதற்கான காப்பீடு.மற்றொன்று மூன்றாவது நபரால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீடு. புயல் மற்றும் இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பு மூன்றாவது நபரால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீட்டின் கீழ் வரும்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தில் நிறைய கார்கள் பாதிப்புக்கு உள்ளாயின. காப்பீடு செய்து வைத்திருந்தவர்கள் பாதிப் படைந்த வாகனங்களுக்கு இழப்பீடு கோரினர். ஆனால் பலருக்கு இழப்பீடு விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன. தண்ணீர் தேங்கியிருந்த பகுதியில் தொடர்ந்து இருந்ததால் ஏற்பட்ட தொடர்ச்சியான அழிவு என்று மறுத்தனர். தொடர்ச்சியான அழிவு வாகன காப்பீட்டின் கீழ் வருவதில்லை என்று ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்தை சார்ந்த சஞ்சய் தத்தா கூறுகிறார்.

புயல் போன்ற இயற்கை பேரிடர் களுக்கு அப்படி இல்லை. மரத்தின் கீழ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு சூறாவளி காற்றினால் மரம் சாய்ந்து வாகனத்திற்கு இழப்பீடு ஏற்படுமாயின் அது வாகன காப்பீட்டின் கீழ் வரும் என்கிறார் எஸ்பிஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் இழப்பீட்டு பிரிவின் தலைவர் பங்கஜ் வர்மா.

காரில் உள்ள மியூசிக் பிளேயர், ஸ்டீரியோ சிஸ்டம்ஸ், பார்க்கிங் கேமரா ஆகியவை சாதரணமான வாகன காப்பீட்டில் வராது. காரில் ரப்பர், பிளாஸ்டிக், நைலான் பகுதிகள், டயர், டியூப், பேட்டரி ஆகியவற்றில் 50 சதவீதம் தேய்மானமாக கருதப்படும். கண்ணாடி பாகங்களுக்கு 30 சதவீதம் தேய்மானமாக கருதப்படும்.

நீங்கள் எடுக்கும் பாலிசியோடு கூடு தலாக பிரீமியம் தொகை செலுத்தினால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க் கலாம். இன்ஜினுக்கென்று உங்கள் பாலிசி தொகையோடு சேர்த்து பிரீமியம் செலுத்த முடியும். விலையுயர்ந்த பொருட்களுக்கும் கூடுதல் பிரீமியம் செலுத்த முடியும்.

வீடுகளுக்கான காப்பீடு

கடந்த வாரம் ஏற்பட்ட புயலால் கட்டிடங்கள் மட்டுமல்ல கட்டிடத்தின் உள்ளே இருந்த ஏசி, கதவுகள், கண்ணாடி கதவுகள், பர்னிச்சர் பொருட்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற சேதங்களை தவிர்க்க வீடுகளுக்கு காப்பீடு எடுப்பதும் அவசியமாகிறது.

வீடுகளுக்கான காப்பீட்டில் தீயால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீடு மற்றும் பூகம்பம், தீ, வெள்ளம், புயல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்களுக்கான விரிவான காப்பீடு என இருவகைகள் உள்ளன. தீயினால் ஏற்படும் பாதிப்புக்கான காப்பீட்டில் தொடர்ச்சியான இழப்புகள் இதன் கீழ் வராது. ஆனால் நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனம் தீயினால் ஏற்படும் இழப்புக்கான காப்பீட்டில் மின்சார ஷார்ட் சர்க்யூட்டால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குகிறது.

அதேபோல் வீடு முழுவதும் சேதமடைந்தலோ அல்லது ஒரு பகுதி இடிந்து விழுந்தாலோ அதற்காக தனி காப்பீடு வசதி இருக்கிறது. சில தேய்மானங்களை தவிர மீதமுள்ள இழப்பீடு தொகையை வழங்குகின்றன. எலெட்க்ரிக்கல் அல்லது மெக்கானிக்கலாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கென்றும் தனியான காப்பீடு இருக்கிறது.

இப்படி வாகன காப்பீடு மற்றும் வீடுகளுக்கான காப்பீடு எடுக்கும் போது நாம் எதற்காக காப்பீடு எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். காப்பீடு எடுத்துவிட்டோம் இனி கவலையில்லை என்று நினைக்காதீர்கள். நம் பாலிசியில் என்னவெல்லாம் வருகிறது என்பதை பாருங்கள். நம் தேவை இதுதானா என்பதை புரிந்து கொண்டு காப்பீடுகளை எடுத்துவிட்டால் எவ்வளவு பெரிய இழப்பையும் தவிர்க்கலாம்.

தொடர்புக்கு: rajalakshmi.nirmal@thehindu.co.in

அரசியல் நாகரிகம் முளைக்கிறதா, மீண்டும் தழைக்கிறதா?

ஆர்.முத்துக்குமார்

திமுக, அதிமுக தலைவர்களிடம் தென்படும் மாற்றம் கவனிக்க வைக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அதிமுகவின் முன்னணித் தலைவர்களான தம்பிதுரையும் ஜெயக்குமாரும் நேரில் சென்று நலன் விசாரித்த செய்தி இன்றைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் அரும்பத் தொடங்கியிருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவன்று.

அடிப்படையில் ராஜாஜியும் பெரியாரும் இருவேறு துருவங்கள். ஆத்திகம்தான் ராஜாஜியின் சுவாசம்; பெரியாருக்கோ பகுத்தறிவுதான் பிரதானம். ஆனால், சித்தாந்தப் பின்புலங்களைத் தாண்டி இருவருமே அணுக்க நண்பர்கள். தன்னுடைய தனி வாழ்க்கை தொடர்பான அதிமுக்கிய முடிவான மணியம்மையை மணம் செய்துகொள்ளும் முடிவு குறித்து ராஜாஜியிடம் கலந்து பேசியவர் பெரியார். அப்போது தான் கொடுத்த யோசனை என்ன என்பதைக் கடைசி வரை ராஜாஜி பகிரங்கப்படுத்தவில்லை. அவர்களுக்கு இடையிலான நட்பு அந்த அளவுக்கு நாகரிகம் தோய்ந்தது. கொள்கை எதிரியாக இருந்தபோதும் ராஜாஜி மறைந்தபோது, அவரது இறுதிப் பயணத்தில் வாய்விட்டு அழுதபடியே சென்றார் பெரியார்.

ஆரோக்கிய அரசியல்

திமுக ஆட்சியின்போது இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார் முதல்வர் அண்ணா. அப்போது திமுகவின் பிரதான அரசியல் எதிரி காங்கிரஸ். ஆனாலும், அந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் மூவருக்கும் தரப்பட்ட மரியாதையும் கெளரவமும் ஆரோக்கிய அரசியலின் அடையாளங்கள். மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியவர் காமராஜர்; மாநாட்டுக்காகத் தயாரிக்கப்பட்ட கம்பரின் சிலையைத் திறந்தவர் பக்தவத்சலம்; மாநாட்டின் கலைப் பொருட்காட்சியைத் திறந்தவர் ராஜாஜி.

முதல்வர் கருணாநிதி தனது மகன் ஸ்டாலின் திருமணத்துக்கு வருமாறு காமராஜருக்கு அழைப்பு விடுத்தார். அப்போது காமராஜருக்கு உடல்நிலை சரியில்லை. ஆனாலும், காமராஜரின் வருகை அவசியம் என்று கருதிய கருணாநிதி, அண்ணா சாலையில் உள்ள உம்மிடி பத்மாவதி திருமண அரங்கில், மணமக்கள் அமரும் மேடை வரைக்கும் கார் வருவதற்குத் தோதாகச் சிறப்புவழி ஏற்பாடு செய்தார். அதனை ஏற்று, காரிலேயே மேடைவரை வந்து மணமக்களை வாழ்த்திப் பேசினார் காமராஜர்.

அணுக்க நண்பர்களாக இருந்து அரசியல் எதிரிகளாக மாறிய எம்ஜிஆரும் கருணாநிதியும்கூட அரசியல் நாகரிகம் பேணுவதில் ஆர்வம் செலுத்தியவர்களே. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, தனது மகள் டாக்டர் தமிழிசையின் திருமண விழாவில் பங்கேற்க எம்.ஜி.ஆர், கருணாநிதி இருவருக்கும் அழைப்புவிடுத்தார் குமரி அனந்தன். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, இருவரும் ஒரே மேடையில் நின்று, மணமக்களை வாழ்த்திப் பேசினர். அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பிறகும்கூட கருணாநிதியும் எம்ஜிஆரும் சட்டமன்றத்தில் அருகருகே அமர்ந்து பேசியதுண்டு. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் காமராஜரின் படம் வைக்கப்பட்டது. அந்தப் படத்துக்குக் கீழே எந்தப் பொன்மொழி இடம்பெற வேண்டும் என்பதை கருணாநிதியிடம் கேட்டார் எம்ஜிஆர். அவரது ஆலோசனைக்கேற்ப ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற பொன்மொழியைப் பொறித்தார் முதல்வர் எம்ஜிஆர்.

கருணாநிதியின் கடிதம்

எண்பதுகளின் மத்தியில் எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த தருணத்தில், “நானும் பிரார்த்தனை செய்கிறேன்” என்ற தலைப்பில் கருணாநிதி எழுதிய உருக்கமான கடிதம் முக்கியமானது. மேடைகளில் அதிமுகவும் திமுகவும் அமிலம் சுரக்கும் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில், எம்ஜிஆரின் உடல்நிலை பற்றி திமுகவினர் யாரும் மேடைகளில் பேசக் கூடாது என்று கருணாநிதி உத்தரவிட்டிருக்கிறார். எம்ஜிஆர் மரணம் அடைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தனது சுற்றுப்பயணத்தைப் பாதியில் ரத்துசெய்துவிட்டு வந்தார் கருணாநிதி. அப்போது திமுக சார்பில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு வார காலத்துக்கு ரத்துசெய்யப்பட்டன.

மேற்கண்ட நிகழ்வுகளின் பொருள், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும் அன்பின் வடிவமாக, ஒரு தாய் மக்களாக, அரசியல் நாகரிகத்தின் நாடு போற்றும் அடையாளங்களாக மட்டுமே இருந்தனர் என்பதல்ல. அரசியல் விமர்சனங்கள் இருக்கவே செய்தன. கண்டனக் கணைகளைப் பரஸ்பரம் பொழிந்துகொள்ளவே செய்தனர். ஆனாலும், அவர்களுக்கு இடையிலான தனிப்பட்ட உறவுகளில் பெரிய சிக்கல்களையோ, உரசல்களையோ ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

ஆனால், எண்பதுகளின் இறுதியில் தமிழ்நாட்டு அரசியல் களம் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமாக மாறியபோது, மேற்கண்ட அடிப்படைகள் ஆட்டம் காணத் தொடங்கின. அரசியல் எதிரிகளாக இருக்க வேண்டியவர்கள் தனிப்பட்ட எதிரிகளாக இயங்க ஆரம்பித்தனர். பொதுவான விழாக்களிலோ, தனிப்பட்ட நிகழ்வுகளிலோ கருணாநிதியும் ஜெயலலிதாவும் பரஸ்பரம் பங்கேற்பதோ, சந்தித்துக்கொள்வதோ கிடையாது. பொது நிகழ்ச்சியில் சந்திப்பதுகூட அந்தத் தலைவர்களின் பிரத்யேக விருப்பம், தனி உரிமை என்று தவிர்த்துவிடலாம்.

ஆனால், கட்டாயம் பங்கேற்க வேண்டிய சட்டமன்றத்தில் கூட ஜெயலலிதாவும் கருணாநிதியும் சந்தித்துக்கொள்வதை இருவருமே தவிர்த்துவிட்டார்கள். விதிவிலக்காக, திமுக சார்பில் சுனாமி நிவாரண நிதியைத் தருவதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை ஸ்டாலின் நேரில் சந்தித்ததையும் அப்போது கருணாநிதியின் உடல்நலன் குறித்து ஜெயலலிதா விசாரித்ததையும் சொல்லலாம். மற்றபடி, தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக, அதிமுக - திமுக தலைவர்கள் மத்தியில் பரஸ்பர உறவு நாகரிகம் பலவீனமாக இருக்கிறது என்பது உண்மைதான்.

மாறும் சூழல்

என்றாலும், சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரு தரப்பிலும் சிறுசிறு மாற்றங்கள் தென்படுகின்றன. பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் முதல்வர் வெளியிட்ட அறிக்கை, எதிரிக் கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று ஸ்டாலின் சொன்னது ஆகியன வெகுவாக வரவேற்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ‘அவர்மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல்நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்’ என்று திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி வெளியிட்டதும், அதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரித்ததும் அடுத்தடுத்து நடந்தன. உச்சபட்சமாக, முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் ஸ்டாலின் பங்கேற்றார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை அதிமுக தலைவர்கள் சந்தித்ததும் நலன் விசாரித்து வாழ்த்து சொன்னதும் நடந்தேறியிருக்கின்றன.

ஆக, தமிழகத்தில் மீண்டும் பழைய அரசியல் நாகரிகம் தழைக்கிறது என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால், இப்போதுதான் அப்படியொரு நாகரிகம் தொடங்குகிறது என்பது போன்ற பேச்சு உண்மையானதல்ல. இந்தக் கலாச்சாரம் மேன்மேலும் தழைத்தோங்குவது அரசியலை மேலும் மேன்மையானதாக்கும் என்பதோடு மாநிலத்தின் நலனுக்கும் வழிவகுக்கும்!

- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.

‘தமிழக அரசியல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

வேலை.. திருமணம்.. குழந்தை.. - இளம் பெண்களை வாட்டும் வாழ்வியல் பிரச்சினைகள்


தேடல் நிறைந்த பருவம், இளமை. இன்றைய இளம் பருவத்தினர் இனிமையை தேடுவதைவிட, சுமைகள் மிகுந்து காணப்படும் வாழ்வில் தீர்வு களைத் தேடி அலைபவர்களாக மாறிவருகிறார்கள். குறிப்பாக இருபது-முப்பது வயதுப் பெண்களை, நிரந்தர வேலை, திருமணம், குழந்தைப் பாக்கியம், உடல் பருமன், முதுமையின் தொடக்கம் என எண்ணற்ற பிரச்சினைகள் ஆட்டிப் படைக் கின்றன.

நீங்களும் அதே ரகம் என்றால், ஆய்வாளர்கள் இதில் இருந்து மீள்வதற்கு சொல்லும் வழிமுறைகளை கடைப்பிடியுங்கள்.

வேலை:

கல்லூரியை கடந்து, வயது இருபதைத் தாண்டினால், வாழ்க்கை கேள்விகள் நிறைந்ததாகிவிடுகிறது. ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்ற கேள்வியை சமூகம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஏனெனில் பலருக்கும் எதிர்பார்த்த மாதிரியான வேலை உடனே அமைந்துவிடுவதில்லை. விரும்பும் வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கவோ, அலையவோ வேண்டியிருக்கிறது.

25 வயது வரை அதில் நிச்சயமற்ற நிலை நீடித்தால், மனம் மேலும் படபடக்கும். ஒரு பக்கம் பெற்றோர் திருமண ஏற்பாட் டில் மும்முரமாக இருப்பார்கள். அந்த பெண்ணின் மன நிலையோ படித்த படிப்பிற்கான வேலை சரியாக அமையவில்லையே என்ற ஏக்கத்தை எதிரொலித்துக்கொண்டிருக்கும். ஆனால் கிடைத்திருக்கும் வேலையை விட்டுவிட்டு, அதைவிட சிறந்த வேலையை தேடவும் மனம் தயங்கும். இதுபோன்ற பிரச்சினை தனி நபர் சார்ந்தது அல்ல. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பொதுவானவை.

அமெரிக்காவில், ‘இளம் பெண்களின் வேலை திருப்தி’ பற்றி கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. முப்பது வயதுக்குட்பட்ட பணியாளர்களில் 80 சதவீதம் பேர், ‘தாங்களுக்கு கிடைத் திருக்கும் வேலையில் திருப்தியில்லை’ என்று கூறியிருக் கிறார்கள். அதனால் அந்த பணியில் இருந்து வேறு பணிக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால், ‘இருக்கிற வேலையை விட்டுவிட்டால் உள்ளதும் போச்சே என்ற நிலை ஆகிவிடக்கூடாது என்ற பயத்துடன் இருப்பதாகவும்’ கூறியிருக்கிறார்கள். ‘வேறு வேலை கிடைக்காமல் போய்விடக்கூடாதே!’ என்ற பயத்திலே கிடைத்திருக்கிற வேலையில் திருப்தியில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

‘இதுபோன்ற அச்சம் தேவையில்லை’ என்கிறார் யோகா ஆசிரியை மேகா. பதிப்புத் துறை சார்ந்த பணியில் இருந்த அவருக்கு அந்த பணியில் திருப்தி இல்லை. ராஜினாமா செய்துவிட்டு தான் கற்ற யோகா கலையை சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இப்போது மேகாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது யோகா.

“அலுவலக வாழ்க்கை என்னுடைய கனவுகளை சிதைப்பதாக உணர்ந்தேன். இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன்” என்று பூரிக்கிறார் அவர்.

இப்படி வேலையில் திருப்தியில்லாமல் திணறுகிறவர்களுக்கு மனநல நிபுணர்கள் தரும் தீர்வு என்ன?

“குறிப்பிட்ட துறை உங்களுக்கு ஏற்றது என நினைத்து அதில் வேலை பார்க்கத் தொடங்கியபின் அந்த துறை திருப்தியாக இல்லை என்று உணர்ந்தால் அந்த வேலையை மறுபரி சீலனை செய்வது நல்லதுதான். மனதுக்குப் பிடித்த ஒன்றுதான் மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் உண்டாக்கும். அதே நேரத்தில் அந்த பணியில் இருந்துகொண்டே பிடித்த அடுத்த வேலையை தேடிக்கொள்வது அவசியம். அந்த மாதிரியான நேரங் களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளவேண்டும். துணிச்சலை வரவழைத்துக்கொள்ள வேண்டும். என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உங்கள் மனம் நிலைகுலையாத அளவுக்கு பார்த்துக் கொள்ளவேண்டும்” என்கிறார்கள்.

திருமணம் :

இளம் பெண்கள் ஒருவழியாக கிடைத்த வேலையில் மனதை திருப்திபடுத்திக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கையில், ‘இத்தனை வயதாகிவிட்டதே! எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறாய்?’ என்ற நெருடலான கேள்வி எழுப்பப்படும். நாம் மரபுகளில் ஆழப் பதிந்தவர்கள் என்பதால் சமூகத்தின் இந்தக் கேள்வியை தடுக்க முடியாதுதான். உறவுகளும், தோழிகளும்கூட சமயத்தில் இந்த கேள்விகளை கேட்கும்போது மனதில் லேசாக வலி தோன்றத்தான் செய்யும். தன் மீதான அக்கறையில்தான் அந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பது தெரிந்தாலும் மனம் கலக்கமடைவதை தடுக்க முடியாது.

இதை எப்படி எதிர்கொள்வது? என்று சொல்கிறார் உளவியல் ஆய்வாளர்.

“அது என் தனிப்பட்ட விருப்பம் என்று முகத்தை முறிக்கும் வகையில் எல்லோரிடமும் பதில் கூற முடியாதுதான். ‘திருமணம்- குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ள இன்னும் கூடுதல் பக்குவம் தேவை என்று நினைக்கிறேன். அதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். உங்கள் அக்கறை எனக்கு அதற்கு துணை வரட்டும்’ என்று நாசூக்காக கூறிவிடலாம்.

நிஜமாகவே திருமண வாழ்க்கைக்கு தேவையான தகுதிகளை இளம் பெண்கள் வளர்த்துக்கொள்ளவேண்டியதிருக்கிறது. திருமண வாழ்க்கையின் பொறுப்புகளையும் அவர்கள் உணரவேண் டியதிருக்கிறது. அதற்கு மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக வேண்டியதிருக்கிறது. மணவாழ்க்கையில் அவசரத்தைவிட நிதானமே சிறந்தது.

குழந்தையின்மை:

ஒருவழியாக திருமணம் முடிந்து, ஒன்றிரண்டு வருடங்கள் ஆகிவிட்டால், ‘இன்னும் தொட்டில் ஆடவில்லையே?’ என்ற கேள்வி இளம்பெண்களை நோக்கி எழும்பும். இந்த கேள்வி, திருமணம் செய்த பெண்ணின் வீட்டிற்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் வரும். இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு பழக்கப்பட்ட குடும்பங்களில் இருந்துதான் நாம் பிறந்து வளர்ந்திருக்கிறோம். அதனால் இந்த கேள்வியை எதிர்கொள்ள பெண்கள் தயங்கக்கூடாது. அதே நேரத்தில் குழந்தையின்மையை பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் அவசியம் இருக்கவேண்டும்.

‘குழந்தையின்மையை நினைத்து பெண்கள் வருந்தவேண்டியதில்லை. இன்றைய நவீன கால மருத்துவத்தில் குழந்தையின்மைக்கும்- வயதுக்கும் தொடர்பில்லை. இளம் வயதை கடந்த பின்பும் நவீன மருத்துவத்தின் மூலம் தாய்மையடையலாம். அதனால் குழந்தையின்மையை பற்றிய பயத்தில் இருந்து பெண்கள் விடுபடவேண்டும்’ என்று கூறுகிறார், மகப்பேறு நிபுணர்.

‘குழந்தையின்மையை பற்றிய கேள்விகள் எழுப்பப்படும்போது இளம் பெண்கள் தடுமாறாமல் நிதானமாக பதிலளிக்க வேண்டும். ‘தாய்மையடைதலை இன்னும் ஒன்றிரண்டு வருடங்கள் தள்ளிவைத்திருக்கிறோம்’ என்றோ, ‘தாய்மையடைய தயாராகிக்கொண்டிருக்கிறேன்’ என்றோ, ‘நாங்களும் உங்களைப்போல ஆவலோடு காத்திருக்கிறோம்’ என்றோ சொல்லுங்கள்.

அழகுக் குறைபாடு:

இளம் பெண்கள் தங்கள் தலையில் ஒற்றை நரை முடியையோ, முகத்தில் லேசான சுருக்கத்தையோ முதன் முதலாக காணும்போது மிரண்டு போகிறார்கள். அதனை மறைக்க கையில் கிடைத்த அழகு சாதன பொருட்களை எல்லாம் பயன்படுத்த தொடங்கிவிடு கிறார்கள். இளநரை, தோல் சுருக்கம், குதிகால் வெடிப்பு, உடல் பருமன் போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கிறது. அந்தந்த துறையில் முறையாக கற்று, சிகிச்சை அளிப்பவர்களை கண்டறிந்து ஆலோசனை பெறுங்கள்.

‘TN opposed to NEET, Medical Council Bill’

State Health Minister C. Vijaya Baskar reiterated Tamil Nadu’s stated position of opposition to the National Eligibility cum Entrance Test (NEET) and also said that the State had objected to the proposed National Medical Commission Bill.

Mr. Vijaya Baskar was speaking at the installation ceremony of the State president of the Indian Medical Association, Tamil Nadu State, held on Sunday.

‘Sensitise other States’

Health Secretary J. Radhakrishnan, who also participated, requested the Association to also sensitise other States about the proposed Bill.

Outgoing State president S. Damodaran said the IMA, Tamil Nadu had 30,000 members across 158 branches. T.N. Ravishankar was installed as the new State president.

Issues such as the importance of the doctor-patient relationship were also highlighted. S. Geethalakshmi, vice chancellor, TN Dr. MGR Medical University and K. Prakasam, national vice president elect were also among those who participated.

NEWS TODAY 14.06.2026