Friday, December 23, 2016

பதில் சொல்லுங்கள் பன்னீர்செல்வம்!

சமஸ்
Return to frontpage

இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் ஜனநாயக முறைக்கான ஆரம்பக் கட்டுமானங்களில் ஒன்று இன்றைய தமிழகச் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வளாகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் - அரசு நிர்வாக வரலாற்றின் கறுப்பு நாட்களில் ஒன்று. இப்படியொரு நாளும் வரும் என்று நம் முன்னோர் எண்ணியிருப்பார்களா?

தமிழ்ச் சமூகம் நவீன ஆட்சி நிர்வாகத்தின் விளைவாக இன்று அடைந்திருக்கும் நலன்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர், அண்ணா போன்ற தொலைநோக்கும் நேர்மையும் மிக்க ஆட்சியாளர்களால் மட்டும் நாம் அடைந்தது அல்ல; நாட்டின் மீதும் மக்களின் மீதும் கனவுகளும் கரிசனமும் கொண்ட அரசு அலுவலர்களும் சேர்ந்தே அதைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றனர்; நம்முடைய ஆட்சிமுறையைக் கண்ணியப்படுத்தியிருக்கின்றனர். ராம மோகன ராவ் வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும், துணை ராணுவப் பாதுகாப்போடு வருமான வரித் துறையினர் சோதனையிட்டபோது, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய அறையில் மௌனமாகப் அமர்ந்திருந்தார்; அன்று மாலை இதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனமாக வெளியேறினார் எனும் செய்தி தமிழக அரசியலும் அரசு நிர்வாகத் துறையும் இன்று வந்தடைந்திருக்கும் மோசமான இழிநிலையின் வெளிப்பாடு.

சோதனைச் செய்தி வந்த அடுத்த நிமிஷம் கொந்தளித்தார் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. “ஒரு மாநிலத்தை ஆளும் தலைமை அலுவலகத்தில், மாநில அரசுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாமல், மத்தியப் படைகள் சூழ, இப்படி ஒரு சோதனையை மோடி அரசு நடத்துகிறது என்றால், அது கூட்டாட்சி முறை மீதான தாக்குதல்” என்றார் மம்தா. உண்மை. கூட்டாட்சி முறை மீதான தாக்குதலாகவே இதை நானும் பார்க்கிறேன். “ஆனால், இப்படி ஒரு மாநில அரசுக்கு எப்படி முன்கூட்டித் தகவல் அளிக்க முடியும்? அதுதானே இப்படிப்பட்ட ஒருவர் கையில் மாநில நிர்வாகத்தின் சாவியைக் கொடுத்திருக்கிறது? நினைவில் வையுங்கள், ராம மோகன ராவ் தலைமைச் செயலாளர் மட்டும் அல்ல; மாநிலத்தின் ஊழல் கண்காணிப்பு ஆணையராகவும் இந்த அரசு அவரை வைத்திருந்தது” என்கிறார்கள் வருமான வரித் துறை அதிகாரிகள். மறைமுகமாக அவர்கள் கேட்ட கேள்வி இதுதான்: “இவர்கள் எல்லோரும் ஒரே கூட்டம்தானே?”

தமிழர்களுக்கு எவ்வளவு பெரிய வெட்கக்கேடு இது! ஒருகாலத்தில் நாட்டிலேயே முன்னோடியாக, மாநிலங்களின் சுயாட்சிக்கான வலுவான குரலாகத் திகழ்ந்த மாநிலம். இன்று தன்னுடன் சேர்த்து, ஏனைய மாநிலங்களையும் சுயாட்சி தொடர்பில் பேச இயலாத நிலைக்குத் தள்ளியிருக்கிறது. அதிமுக அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைத் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திடமே அளித்திருக்கிறார்கள்.

ராம மோகன ராவ் மீதான குற்றச்சாட்டுகள் எளிமையாகக் கடக்கக் கூடியவை அல்ல. ரூ.134 கோடி கைப்பற்றப்பட்ட ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, ஆட்சியாளர்களின் ஊழல் கறுப்புப் பணத்தை மடை மாற்றும் வேலையிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறது வருமான வரித் துறை. சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே ராம மோகன ராவ் சிக்கியிருக்கிறார் என்றால், என்ன அர்த்தம்? சமூக விரோதிகளுடனான உறவில் தலைமைச் செயலாளர் இருந்திருக்கிறார் என்றல்லவா ஆகிறது? இதுபற்றி ஒரு வார்த்தை பேசாமல், சோதனை நடந்த மறுநாள் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம மோகன் ராவை நீக்கி, காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு புதிய தலைமைச் செயலாளரைத் தமிழக அரசு தேர்ந்தெடுக்கிறது என்றால் என்ன அர்த்தம்? ராம மோகன ராவ் மீதான குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றவை அல்ல என்றல்லவா ஆகிறது?

வெளிப்படையாகவே எதிர்க்கட்சிகள் “ராம மோகன ராவ் ஒரு அதிகாரத் தரகர்; ஆட்சியில் மட்டும் அல்லாது ஆளுங்கட்சிக்குள்ளும் ஒரு அதிகாரத் தரகராக அவர் கரம் நீண்டிருக்கிறது” என்று முன்பே குற்றஞ்சாட்டியிருக்கின்றன. எல்லாவற்றையும் மீறியே ராம மோகன ராவைத் தலைமைச் செயலாளராக வைத்திருந்தது அதிமுக அரசு. தமிழகத்தின் தலைமைச் செயலாளரானவர் கிட்டத்தட்ட 18 லட்சம் பேரைக் கொண்ட அரசு ஊழியர் படையின் தலைவர். இப்படி ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்தி, அவர் மீதான குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளி அவருடைய பதவியைப் பாதுகாத்ததன் வாயிலாக, அரசு ஊழியர்களுக்கு இந்த அரசு கொடுத்துவந்த சமிக்ஞை என்ன?

சென்னையிலிருந்து 1700 கி.மீ. தொலைவில் இருக்கிறது கொல்கத்தா. மம்தா உடனே கொந்தளிக்கிறார். சோதனையிடப்பட்ட ராம மோகன ராவ் அறையிலிருந்து சில அடிகள் தள்ளியிருக்கும் தன்னுடைய அறையில் உட்கார்ந்திருந்த பன்னீர்செல்வத்துக்கு இந்நடவடிக்கை தொடர்பில் பேச ஒரு வார்த்தை இல்லை என்றால், அதை எப்படிப் பொருள் கொள்வது? ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்புக்குள்ளாக்கப்படும்போதே அதை எதிர்த்து, ஊரையே ஸ்தம்பிக்க வைக்கும் இயல்புடைய அதிமுகவினர், அவர்களுடைய அரசின் கோட்டையே முற்றுகையிடப்படும்போது வெளிப்படுத்தும் அசாத்தியமான மௌனத்தை என்னவென்று பொருள் கொள்வது?

நம்மை நாமே ஆண்டுகொள்கிறோமா; ஏமாற்றிக்கொள்கிறோமா? அறம் கேள்வி கேட்கிறது, தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது, பேசுங்கள் பன்னீர்செல்வம்!

சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

Thursday, December 22, 2016

கலக்கம்!
வருமான வரி சோதனையால் கலக்கம் :
ஆவணத்தை பதுக்கும் உயர் கல்வி அதிகாரிகள்

DINAMALAR
தமிழக தலைமை செயலர் வீட்டில் நடந்த வரு மான வரித்துறை சோதனையால், உயர் கல்வி அதிகாரிகள் நடுக்கம் அடைந்துள்ளனர். அவருக்கு நெருக்கமானோர், தங்களிடம் உள்ள கறுப்பு பணம், ஆவணங்களை பதுக்கும் முயற்சி யில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய முடிவுகள் :


தமிழக தலைமை செயலர், ராமமோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையால், தமிழகத்தில் உள்ள பல, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர். உயர் கல்வி துறையின் முன்னாள், இந்நாள் முக்கிய அதிகாரிகள் மற்றும் பல்கலைகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில், ரெய்டு நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ராமமோகன ராவ், சென்னை பல்கலையில்,

பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு படித்த போது, சில பேராசிரியர்கள் மற்றும் உயர் கல்வி அதிகாரி கள், அவருக்கு நண்பர்களாகினர். ராமமோகன ராவ், முதல்வரின் செயலராக பதவிக்கு வந்த பின், அவர் களை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

பல்கலைகளில்,துணை வேந்தர், பேராசிரியர் நிய மனங்கள், உயர் கல்வி மன்ற திட்டங்களை அமல் படுத்துவது, கல்லுாரிகளில் கட்டுமான பணி களுக்கு, கான்டி ராக்ட் வழங்குவது போன்றவற்றில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதிக தலையீடு :

கல்லுாரிகளில் நடந்த பல நியமனங்களிலும், தலைமை செயலர் பெயரில், பேரம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உயர் கல்வி துறை யில், தலைமை செயலர், கவர்னர் மற்றும் உயர் கல்வி செயலக அலுவலகங்களில் உள்ளோர், அதிகம் தலையீடு உள்ளதாக, மத்திய அரசுக்கு பலர் புகார் அனுப்பினர். மத்திய அரசு, ரகசிய விசாரணை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி யதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, லஞ்சம் கொடுத்து பதவி பெற்றோர், லஞ் சம் வாங்கிய உயர் அதிகாரிகள் மற்றும் அவர்க ளுக்கு இடைத் தரகர்களாக பணியாற்றி யோர், கலக்கத்தில் உள்ளனர். இவர்களில், கறுப்பு பணம்,

முறைகேடான சொத்து வைத்திருப்போர், ஆவணங்களை உறவினர்கள், துறையில் பணி யாற்றும் நண்பர்கள் என, பல இடங்களிலும், பதுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி கல்வியிலும், 'கிலி' :

தலைமை செயலரின் வீட்டில் நடந்த சோதனை யால், பள்ளி கல்வி துறையில் உள்ள, பல முக்கிய அதிகாரிகள் பயத்தில் உள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆளுங்கட்சிக்கு நெருக்கம், தலைமை செயலரின் செல்வாக்கு என, அதிகாரத்துடன், முறைகேடுகளில் ஈடு பட்ட, பள்ளி கல்வி அதிகாரிகளும், சோதனை வலையில் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


* தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை உட்பட 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினர். இது, அதிகாரிகளிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்ட சோதனையில் ரூ.30 லட்சம் பணமும், 5 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | விரிவான செய்திக்கு > தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - துணை ராணுவப் படை பாதுகாப்புடன் தலைமைச் செயலகம் உட்பட 14 இடங்களில் நடந்தது |

* சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை 5 மணி நேரம் சோதனை நடத்தினர். 76 ஆண்டு வரலாற்றில் நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் புகுந்து சோதனை நடத்தியுள்ளது இப்போதுதான். | விரிவாக அறிய > தலைமைச் செயலகத்தில் 5 மணி நேரம் சோதனை: அதிகாரிகள் வேதனை |

* ஆந்திராவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். | அதன் விவரம் > சித்தூர், குண்டூர், விஜயவாடாவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி சோதனை |

* மத்திய போலீஸ் படையினர் ஒரு மாநிலத்தில் வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு அந்த மாநில டிஜிபி அலுவலகம் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், தமிழக போலீஸாரிடம் எந்த அனுமதியும் கேட்காமல் மத்திய ஆயுதப்படை போலீஸார் தமிழகத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். | முழு விவரம் > வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு: தமிழக போலீஸாரிடம் அனுமதி பெறவில்லை |

* புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டியும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். | விரிவான செய்திக்கு > ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: சேகர் ரெட்டி, உறவினர் கைது: வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர் |

வருமான வரித்துறை சோதனை முதல் ராமமோகன ராவ் சஸ்பெண்ட் வரை: தெரிந்திட 10 தகவல்கள்

இணையதள செய்திப் பிரிவு

* சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ஆகியோர் வருமான வரித்துறையிடம் சிக்கியதையடுத்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த 8 அமைச்சர்களும், சில வங்கி அதிகாரிகளும் சிக்க உள்ளனர். எனவே, இருவருடனும் தொடர்பில் இருந்த அமைச்சர்களும், வங்கி அதிகாரிகளும் தற்போது கலக்கத்தில் உள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும்போது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திடம் முன்அனுமதி பெற வேண்டும். தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரிடம் சோதனை நடத்தும்போது அந்த மாநில ஆளுநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவுக்கு தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அதிகாரிகளிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவ் கடந்து வந்த பாதை இதுதான் > ராமமோகன ராவ்: உதவி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை.. |

* வருமான வரித்துறை சோதனை யைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பி. ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். | முழு விவரம் > தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரி சோதனை: தலைவர்கள் கருத்து |

* ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போதிய ஆவணங்கள் கிடைக்கும் நிலையில் அவரை கைது செய்ய முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்கள் சிலர் கூறிய தகவல்கள் | முழுமையாக வாசிக்க > ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை: சட்ட வல்லுநர்கள் கருத்து |

* தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டார். | விவரம் > தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

சென்னை: தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சோதனை:

தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வருமான வரித்துறை பிடியில் வசமாக மாட்டிக் கொண்டார். அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள, அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், நேற்று வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அரசியல்வாதிகளின் கலெக்ஷன் ஏஜன்டாக, ராவ் செயல்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடந்த, இந்த சோதனையின் போது, பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது, அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியமனம்:

இதனையடுத்து தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் நீக்கப்பட்டார். புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள கிரிஜா வைத்தியநாதன், தற்போது நில நிர்வாகத்துறை ஆணையராக உள்ளார். 

கிரிஜா வைத்தியநாதன், கடந்த 1981ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. சென்னை ஐஐடியில் படித்து, பட்டம் பெற்றவர். இவரது தந்தை வெங்கிட்டரமணன், ரிசர்வ் வங்கி கவர்னராக 1990 முதல் 1992 வரை இருந்தார். கடந்த 01.07.59ம் ஆண்டு பிறந்த கிரிஜா, நல வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.
தலைமைச் செயலர் பதவியிலிருந்து ராம மோகன ராவ் ‛கல்தா'

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து தலைமை செயலர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், மகன், உறவினர் வீடு என 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து ராம மோகன ராவ் தலைமை செயலர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.

தபால் மூலம்:

இந்நிலையில், இன்று தலைமை செயலர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அவரது உதவியாளர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, ராமமோகன ராவ் காரில் இருந்த சிவப்பு சுழல் விளக்கும் அகற்றப்பட்டது.

ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை: சட்ட வல்லுநர்கள் கருத்து

டி. செல்வகுமார்

ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போதிய ஆவணங்கள் கிடைக்கும் நிலையில் அவரை கைது செய்ய முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

பி.வில்சன் (மத்திய முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்)

ஐஏஎஸ் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் அல்லது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யும்போதோ அல்லது கைது செய்யும்போதோ யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 197-ன்படி மத்திய பணியாளர் நலத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அதுகுறித்து வருமான வரித்துறையினர் மாநில அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிப்பர். அதன்பிறகு அந்த ஐஏஎஸ் அதிகாரியை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்யும். அந்த நடவடிக்கை எடுக்காமல்கூட இருக்கலாம். அதேநேரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக மாநில லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்கு வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்தால், அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்வார்கள். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்யலாம். அதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.

கே.எம்.விஜயன் (சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

வருமான வரித்துறையினருக்கு சோதனை நடத்தவும், பணத்தைப் பறிமுதல் செய்யவும் மட்டுமே அதிகாரம் உள்ளது. வருமான வரித்துறை சோதனை நடத்தியபிறகு, சம்பந்தப்பட்டவர் குற்றம் செய்திருப்பதாகக் கருதினால் அதன் தன்மையைக் கருத்தில் கொண்டு அமலாக்கத் துறை அல்லது சிபிஐ-யிடம் தெரிவிக்கப்படும். பின்னர் சிபிஐ வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியைக் கைது செய்யும்போது மத்திய அரசிடம் தகவல் தெரிவிப்பார்கள்.

வீ.கண்ணதாசன் (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்)

கைது செய்ய அதிகாரம் பெற்ற எந்த போலீஸாரும் ஒருவரைக் கைது செய்யலாம். அவர்கள் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், ஐஏஎஸ் அதிகாரியைக் கைது செய்யும் முன்பு அந்தந்த மாநில ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கும் நடைமுறை உள்ளது.

தலைமைச் செயலர் வீடு, அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை: ரூ. 5 கோடி தங்கம், ரூ. 30 லட்சம் புதிய நோட்டுகள், 43 ஆவணங்கள் பறிமுதல்

By DIN  |   Published on : 22nd December 2016 05:07 AM

தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீடு உள்பட 14 இடங்களில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த விவரம்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி. தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராகவும், கட்டுமான தொழிலதிபராகவும் இருந்த இவர், முறைகேடான வழியில் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆற்று மணல் குவாரிகளை தனது நிறுவனத்தின் மூலம் நடத்தி,அதில் முறைகேடு செய்து வந்தாராம். இதன் மூலம் அவர் பல நூறு கோடி ரூபாய் ஈட்டியதாகத் தெரிகிறது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும், அரசு உயர் அதிகாரிகளும் உதவி புரிந்ததாகவும், சிலருக்கு சேகர் ரெட்டி பினாமிபோல செயல்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், வருமான வரித்துறையினர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம், அவர் நண்பர்கள் சீனிவாசலு வீடு, பிரேம் குமார் வீடு ஆகியவற்றில் கடந்த 8-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனை நடத்தி,ரூ.147 கோடி பணமும்,178 கிலோ தங்க கட்டிகளையும்,தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.34 கோடி, புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.
இதற்கிடையே சேகர் ரெட்டி தொடர்பான விசாரணையில் சிபிஐயும், மத்திய அமலாக்கத்துறையும் இணைந்தன. இந்த இரு புலனாய்வு அமைப்புகளும் தங்களது விசாரணையைத் தொடர்ந்தன.
இதில் சேகர் ரெட்டி முறைகேடாக பணம் சம்பாதித்தது, முறைகேடான வழியில் பணப் பரிமாற்றம் செய்தது, தவறான வழியில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியது ஆகிய புகார்கள் தொடர்பாக சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன.


14 இடங்களில் சோதனை: இந்நிலையில் சேகர் ரெட்டியிடமும், அவரது கூட்டாளிகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன ராவுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சேகர் ரெட்டி, வருமான வரித்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகர் ஒய் பிளாக் 6ஆவது பிரதான சாலையில் உள்ள மூன்று தளங்களுடன் கூடிய ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடத்துவதற்கு,வருமான வரித் துறையினர் சென்னை மண்டல கூடுதல் ஆணையர் ராய் ஜோஸ் தலைமையில் புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அங்கு சென்றனர். வருமான வரித்துறையினர் ராம மோகன ராவ் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, அவரது வீட்டுக் காவலாளி தடுத்துள்ளார்.
அப்போது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டதாம். சப்தம் கேட்டு அங்கு வந்த ராம மோகன ராவ் குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். அதன் பின்னரே வருமான வரித் துறை அதிகாரிகள், ராம மோகன ராவ் வீட்டுக்குள் சென்றனர்.
ராம மோகன ராவிடம் சோதனை செய்வதற்கான உத்தரவைக் காட்டிய பின்னர், வருமான வரித் துறையினர் அங்கு சோதனையைத் தொடங்கினர். சோதனை தொடங்கியதும், ராம மோகன ராவ் வைத்திருந்த செல்லிடப்பேசி உள்ளிட்ட வீட்டில் இருந்த அனைவரது செல்லிடப்பேசிகளையும் வருமான வரித் துறையினர் வாங்கி வைத்துக் கொண்டனர்.
அதோடு தொலைபேசி இணைப்பையும் துண்டித்தனர். வீட்டில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். சோதனை தொடங்கப்பட்ட வேளையில், ராம மோகன ராவின் மணப்பாக்கம் வீடு, திருவான்மியூர் அப்பாசாமி நகரில் உள்ள அவரது மகன் விவேக் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
அதேபோல கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய இடங்களில் உள்ள ராம மோகன ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 14 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நண்பகலுக்குப் பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராம மோகன ராவ் அறையிலும் சோதனை நடத்தினர்.
துணை ராணுவம் குவிப்பு: இதற்கிடையே ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடைபெறும்போது, அங்கு வந்த ஆம் ஆத்மி தொண்டர் செந்தில்குமார், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டார். இதைப் பார்த்த அங்கிருந்த சில நபர்கள் அவரைக் கண்டித்தனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர், செந்தில்குமாரைத் தாக்கினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார், செந்தில்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு துணை ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் 4 கார்களில் வந்தனர். அவர்கள் சோதனை நடந்த பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இதைப் பார்த்த சென்னை போலீஸார், ராம மோகன ராவ் வீடு இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்றனர்.
பாதுகாப்பு கருதி துணை ராணுவத்தை அழைக்கும் அதிகாரம் வருமான வரித் துறைக்கு இருப்பதால், துணை ராணுவத்தினர் அங்கு பாதுகாப்புக்கு வந்ததாக அத்துறையினர் தெரிவித்தனர். மேலும் சோதனை நடைபெற்ற பெரும்பாலான பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
ரூ. 5 கோடி தங்கம், பணம் பறிமுதல்: இச் சோதனையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்கமும், பணமும் பறிமுதல் செய்யப்பட்ட வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. இதில் புதிய ரூபாய் நோட்டுகளாக ரூ.30 லட்சம் இருந்ததாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மேலும் 43 ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சோதனை பல இடங்களில் நடைபெற்றதால், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணம், நகை, ஆவணங்கள் ஆகியவற்றின் விவரத்தை இறுதியிலேயே தெரிவிக்க முடியும் என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். தமிழக அரசின் தலைமைச் செயலர் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது அரசு உயர் அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறைஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது.

மறைந்து கொண்டிருக்கும் மூத்த தலைமுறை ஒவ்வொருவராக நமக்கு நிரந்தர விடை கொடுத்து ஒரு தலைமுறை மறைந்து கொண்டிருக்கிறது. சாப்பிடும் முன் மற்றவர்கள...