Saturday, March 11, 2017


திருவருள் சேர்க்கும் திருச்சி ஸ்தலங்கள்! #PhotoStory

திருச்சி மாநகருக்குச் சென்றால் போதும், மனதுக்குப்பிடித்த 5 தெய்வங்களையும் தரிசிக்கலாம்.


மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்:



திருச்சி என்றாலே மலைக்கோட்டை, மலைக்கோட்டை என்றாலே உச்சிப்பிள்ளையார்தான். உச்சிப் பிள்ளையார் கோயிலை அடைய 400 படிகள் ஏறிச் சென்றுதான் சுவாமி தரிசனம் செய்யவேண்டும். மலை முழுவதும் செடி கொடிக ள் இல்லாமல் பாறையாகவே இருப்பது இந்த மலையின் சிறப்பு. மலையின் மீதிருந்து திருச்சி மாநகரைப் பார்க்க, அத்தனை அழகாக இருக்கும். உச்சிப்பிள்ளையாரை தரிசிக்கச் செல்லும் வழியிலேயே தாயுமானவர் சந்நிதியையும் தரிசிக்கவேண்டும். மலை அடிவாரத்திலும் விநாயகருக்கு தனி சந்நிதி உள்ளது.

சமயபுரம் மாரியம்மன்:



திருச்சிக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது சமயபுரம். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்குள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களுக்குக்கூட இங்கு வந்து வழிபட்டால், உடல் நலம் அடையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. ஶ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கை என்பதால், அரங்கனின் சார்பாக சீர்வரிசை வழங்கப்படும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெறும்.

திருவரங்கம்:



வைணவர்களின் தலைமைச் செயலகமான திருவரங்கம், 108 திவ்ய தேசங்களில் முதல் கோயிலாக விளங்குகிறது. காவிரி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்திருக்கும் இக்கோயிலில் ரங்கநாதர் சயன நிலையில் இருந்து சேவை சாதிக்கின்றார். திருச்சியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருவரங்கம். 7 பிராகாரங்களுடன், 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவரங்கம் கோயிலில் கலைநயம் மிக்க வரலாற்றுச் சிற்பங்கள் பல உள்ளன.

திருவானைக்காவல்:



திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் அப்பு தலமாக (நீர்) திகழ்கின்றது. இங்குள்ள மூலவர் 'ஜம்பு' எனும் நாவல் மரத்தடியில் இருப்பதால், ஜம்புகேஸ்வரர் எனப்பெயர் பெற்றார். கருவறையில் எப்போதும் நீர் சுரந்துகொண்டே இருக்கும். அம்மன் அகிலாண்டேஸ்வரியை வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தருபவளாக இருக்கின்றாள். திருச்சியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது.

குமாரவயலூர்:



திருச்சிக்கு மேற்கே சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குமாரவயலூர். பச்சை பசேலென இருக்கும் வாழைத் தோப்புகளுக்கு மத்தியில் இருக்கின்ற வயலூர் முருகன் கோயில் மருதநில மண்ணின் மகத்துவத்துக்கு அடையாளம். திருமணத்தடை நீக்குவதற்குரிய மிக முக்கியமான தலமாகத் திகழ்கின்றது.

தொகுப்பு: எஸ்.கதிரேசன்

உபி தேர்தல் பி.ஜே.பி-யின் வெற்றி சூத்திரம் இதுதான்..!


பி.ஜே.பி தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிக்காரண சூழ்நிலைகளை உருவாக்குவதில் வெவ்வேறு உத்திகளைக் கையாள்வார்கள். உபி தேர்தல் சூத்திரம்தான் அவர்களுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது.

ராமர் கோஷம்

உத்தரபிரதேசம் ஒரு மினி இந்தியாவைப் போன்றது. இந்த மாநிலத்தில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சொல்வார்கள். 1991- உ.பி சட்டமன்ற தேர்தலில் ராமர் கோவில் கட்டுவோம் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தனர். கல்யாண் சிங் முதல்வர் ஆனார். ஆனால், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பின்னர், ஆட்சியை இழந்தது. 1997 தேர்தலிலும் ராமர் கோவில் கட்டுவோம் என்ற கோஷத்தையே பி.ஜே.பி முன் வைத்தது. எனினும் பி.ஜே.பி-பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாயாவதியின் துணையுடன் ஆட்சி அமைத்தனர். ஆட்சியைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஆட்சியை இழந்தனர்.

மாநில கட்சிகள் ஆதிக்கம்

மத்தியில் ஆட்சியில் பி.ஜே.பி ஆட்சி இருந்தபோதிலும், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதனைத் தொடர்ந்து பி.ஜே.பி மீது விழுந்த மதவாத கறை ஆகியவற்றால் 2002-ம் ஆண்டு உ.பி தேர்தல் பி.ஜே.பிக்கு வெற்றியைத் தரவில்லை. இந்த தேர்தலுக்குப் பின்னர் உ.பி தேர்தல் களத்தில் இருந்தே பி.ஜே.பி அகற்றப்பட்டது என்றே சொல்லலாம். மாநில கட்சிகளுக்கு இடையேதான் நீயா, நானா போட்டி இருந்தது.2002 தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த சமாஜ்வாடி கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி துணையுடன் ஆட்சி அமைத்தது. முதலில் மாயவதி 1 வருடமும் சில மாதங்களும், இரண்டாவதாக முலாயம் சிங் யாதவ் 3 ஆண்டுகளும் சில மாதங்களும் முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொண்டனர்.

3-வது இடத்தில்...

2007 தேர்தலில் மாயாவதி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார். பி.ஜே.பி-க்கு கிடைக்க வேண்டிய முற்போக்கு சமுதாயத்தின் ஓட்டுக்கள் கூட இந்த முறை மாயாவதிக்கு கிடைத்த து. பி.ஜே.பி 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

2012 தேர்தலிலும் பி.ஜே.பி-க்கு பெரிய ரோல் கிடைக்கவில்லை. ஆளும் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சி இரண்டுக்கும் இடையேயான போட்டியாகவே இருந்தது. சமாஜ்வாடி கட்சியின் இளம் தலைவர் என்ற வகையில் அகிலேஷ் யாதவ் பிரசாரம் பெரும் அளவில் எடுபட்டது.

1997-க்கு பின் மதவாத கட்சி என்ற கறை, தலித்களின் வெறுப்பு ஆகியவற்றின் காரணமாக உ.பி-யில் கால் பதிக்கமுடியாமல் பி.ஜே.பி திணறிக்கொண்டிருந்தது. 2014 லோக்சபா தேர்தலில்தான் உ.பி மாநிலம் பி.ஜே.பி-க்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. அப்போதே உ.பி-யில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கணக்குப் போட்டு விட்டார்கள்.

வெற்றி கணக்கு

2014 செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநில பி.ஜே.பி தலைவராக கேசவ் பிரசாத் மவுரியாவை நியமிக்கின்றனர். 47 வயதான இவர்தான் இப்போது பி.ஜே.பி-க்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார். பி.ஜே.பி தலைவர் அமித்ஷா ஆலோசனையுடன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டார். யாதவ் ஓட்டுக்களை பிரிப்பதுதான் அவர்களின் முதல் வேளையாக இருந்தது. மத்திய உளவுத்துறை மூலம் முலாயம் சிங் குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தினர். அகிலேஷ் யாதவுக்கு எதிராக அவரது சித்தப்பா ஷிவ்பால் யாதவை திருப்பி விட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது ஒன்றாக இருப்பது போல முலாயம் குடும்பம் காட்டிக் கொண்டாலும், அகிலேஷ் நிறுத்திய வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைகள் பார்த்தது ஷிவ்பால் குரூப்.

ஜாதி ஓட்டுக்கள்...

உ.பி-யில் ஒவ்வொரு தொகுதியையும் ஜாதி வாரியாக கணக்கிட்டு, அந்த தொகுதியில் எந்த ஜாதியினர் அதிகம் என்று பார்த்து அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது பி.ஜே.பி. தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக்கூட பி.ஜே.பி நிறுத்தவில்லை. மதவாதம் குறித்து பிரசாரம் செய்யாவிட்டாலும், முஸ்லீம் சமுதாயத்துக்கு எதிரான ஓட்டுக்களை எங்களுக்குக் கொடுங்கள் என்பதை தமது வேட்பாளர்கள் மூலம் மறைமுகமாக வாக்களர்களுக்குச்சொன்னது. முஸ்லீம் ஓட்டுக்கள் கூட சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி என இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவாக பிரிந்தன. இவை எல்லாமும்தான் அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மதவாதத்தில் இருந்து ஜாதி அரசியலுக்கு பி.ஜே.பி நகர்ந்திருக்கிறது.

-கே. பாலசுப்பிரமணி

குடும்பச் சண்டையால் வீழ்ந்தது சமாஜ்வாதி! உ.பி.யில் ஆட்சியமைக்கிறது பா.ஜனதா

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 290 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி அடைந்துள்ளது.




இதனைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு வெளியே தொண்டர்கள் ’மோடி’, ’மோடி’ என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இனிப்பு வழங்கி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணி 79 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன. இதன்மூலம் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

தந்தை முலாயமி சிங் யாவுக்கும், மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டத்தை தொடர்ந்து, கட்சியை அகிலேஷ் கைப்பற்றியது. இவர்களின் குடும்ப சண்டையால் தற்போது ஆட்சியை இழந்துள்ளது சமாஜ்வாதி கட்சி.


உத்தரகாண்ட்டிலும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக
உத்தரகாண்ட்டில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 55 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் 11 இடங்களை கைப்பற்றியது.




காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுவே, மக்களுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட முக்கிய காரணம். தேர்தல் பிரசாரத்தின் போது இந்தச்சூழலை பாஜக சாதகமாக பயன்படுத்தி கொண்டது. உத்தரகாண்ட்டில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது.

மேடையில் சரிந்த தொண்டர்... கண்டுகொள்ளாத தலைவர்... கொதித்த மக்கள்!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் அந்தக் கட்சித் தொண்டர்களில் பலர் உயிரைவிட்டனர். அவர்களுடைய குடும்பங்களுக்கு, தற்போது அ.தி.மு.க தலைமைக் கழகத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வில் மேடையில் சரிந்தார் ஒரு தொண்டர்... அவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தார், அந்தக் கட்சியின் தலைவர். இதைப் பார்த்த மக்களோ கொதித்தெழுந்துவிட்டனர்.

'இமயத்துடன்' என்ற டி.எம்.எஸ் பற்றிய தொடரை இயக்கியவர், இயக்குநர் டி.விஜயராஜ். இவர், ஜெயலலிதாவின் நினைவலைகள் பற்றி ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டிருந்தார்.

“1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயம். அவரது நிகழ்வுகளைப் படம்பிடிக்கும் ஃபிலிம் டிவிஷன் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஒருமுறை, சீனத் தூதரக அதிகாரி தலைமைச் செயலகம் வந்தபோது... அதைப் படம்பிடிக்கத் தோளில் 'டெக்'குடன் ஓடினேன். அப்போது, கீழே இருந்த கேபிள் ஒயர் தடுக்கியதால், முன்னே சென்ற மற்றொரு கேமராமேனின் கேமராவில் என் தலை மோதியது. சொல்லமுடியாத வலியால் என்னையும் அறியாமல் அந்தச் சூழலை மறந்து, 'ஐயோ... அம்மா' எனக் கத்தினேன். இதை, அங்கிருந்தவர்கள் மிகவும் சாதாரணமாகவே பார்த்தார்கள். ஆனால், முதல்வர் ஜெயலலிதா வேகமாக என் பக்கம் திரும்பி, 'தம்பி பார்த்து...பதற்றமில்லாம வேலைபாருங்க' என்றதோடு, என்னை நோக்கி நெருங்கிவந்தார். 'ஒண்ணும் இல்லீங்கம்மா... தேங்க்ஸ்' என்றேன். 'கேபிளை ஓரமாகப் போடக்கூடாதா...' என கேமராமேனைக் கண்டித்ததோடு, 'அவருக்கு மெடிக்கல் ஹெல்ப் வேணுமான்னு கேளுங்க' என என்னைக்காட்டி அருகிலிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டுச் சென்றார். ஒரு முதல்வர், சாதாரண ஓர் ஊழியனிடம் காட்டிய அந்தப் பரிவை இன்று நினைக்கும்போது பின்னாளில் அவர் 'அம்மா' என தொண்டர்களால் அழைக்கப்பட்டது சரியே என இப்போது உணர்கிறேன். ஒரு முதல்வராகப் பாதுகாப்பு வளையத்துக்குள் அவர் இருந்தாலும் அவர் மக்களிடம் நெருங்கிப் பழகவே விரும்பினார்'' என்று சொல்லியிருந்தார் பெருமைபொங்க.



ஆம். அவர் சொல்வது உண்மைதான். சாமான்ய மக்களின் வலி என்னவென்பதை நன்றாக உணர்ந்திருந்தவர் ஜெயலலிதா. அவர் மட்டுமல்ல... இன்னும் எத்தனையோ மதிப்புமிகுந்த தலைவர்கள், தாங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் இதுபோன்று துயரச் சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால்... அவர்களுக்கு முதலுதவி செய்வதிலேயே முன்னுரிமை அளிப்பர். அப்படித் தம்மால் முடியாதபட்சத்தில், தன் உதவியாளர்கள் மூலம் உதவச் செய்வர். ஆனால், இன்று அப்படிப்பட்ட அரசியல்வாதிகளைக் காண்பதே அரிதாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஜெயலலிதா மரணமடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியில் இறந்துபோன அந்தக் கட்சியின் தொண்டர்களுடைய குடும்பங்களுக்கு, நிதியுதவி வழங்கிய நேற்றைய (9-3-17) நிகழ்வில், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது, நிதியுதவி பெறுவதற்காகக் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர், டி.டி.வி.தினகரன் அருகே வந்தபோது... துக்கம் தாங்காமல் பீறிட்டு அழுதபடி மயங்கி விழுந்தார். இதை, எந்தவித பதற்றமுமின்றி அருகிலிருந்த டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்த்தபடி அமைதியாக நின்றனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் விரைந்துசென்று, பரமேஸ்வரியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளியவைத்தனர். அதன்பின், அவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது வேறு கதை.

''ஆபத்தில் சிக்கித்தவிக்கும் ஒருவருக்கு உதவாமல் அப்படியே அமைதியாக நின்று உற்றுப் பார்ப்பவர்களுக்கு எதற்குத் தலைவர் பட்டம்...இதுவா, அரசியல் நாகரிகம்... கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் இருப்பவர்களா மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள்'' என்று சரமாரியாக அவர்களைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றனர் பொதுமக்கள். மேலும், ''அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர்., அவரது வழியில் கட்சியைக் கட்டிக்காத்த ஜெயலலிதா ஆகியோரெல்லாம்கூட சாமான்ய மக்களிடம் சரிசமமாகப் பழகியிருக்கிறார்கள். ஆனால், தற்போது பதவிக்காகவும், பணத்துக்காகவும் கட்சி நடத்தும் இவர்களுக்கு மனிதநேயமும் மக்களின் வேதனைகளும் எங்கே தெரியப்போகிறது. இதற்கெல்லாம் முடிவு வரும். மக்களையும், அவர்களுடைய பிரச்னைகளையும் கண்டுகொள்ளாத இவர்களுக்குத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களாகிய நாங்கள் நல்ல பாடம் புகட்டுவோம்'' என்கின்றனர், அவர்கள்.

சாமான்யர்களோடு ஒன்றாகக் கலந்து, கைகுலுக்கி, உணவு உண்ட மரியாதைமிக்க தலைவர்கள் உண்மையிலேயே மறைந்துதான் போய்விட்டனர்!

- ஜெ.பிரகாஷ்
காணாமல் போன 'சந்திராயன்' விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா

வாஷிங்டன்: நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி, காணாமல் போனதாக கருதப்படும், 'சந்திராயன்' விண்கலத்தை, அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்துள்ளது.

சந்திராயன்:

நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'இஸ்ரோ' சார்பில், 2008, அக்டோபர், 22ல் அனுப்பப்பட்டது, 'சந்திராயன்' விண்கலம். கடந்த, 2009, ஆகஸ்ட், 29 முதல், இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காணாமல் போன, 'சந்திராயன்' விண்கலத்தை தேடும் பணி நடந்தது; ஆனால் பலனளிக்கவில்லை.

தேடும் பணி:

இந்த நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, நாசா, நிலவுக்கு தான் அனுப்பி, காணாமல் போன, விண்கலத்தை தேடும் பணியில் ஈடுபட்டது. மிக அதி நவீன ராடார்கள் உதவியுடன், நிலவின் சுற்று வட்டப் பாதையில், 200 கி.மீ., தொலைவில், தங்களுடைய விண்கலம் இருப்பதை நாசா உறுதி செய்தது. அத்துடன், 'சந்திராயன்' விண்கலமும், அந்த சுற்று வட்டப் பாதையில் இயங்கி வருவதை நாசா கண்டுபிடித்துள்ளது.

கண்டுபிடிப்பு:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, நாசாவின் ராடார் பிரிவு இதை கண்டுபிடித்துள்ளது. விண்வெளியில் உள்ள விண்கற்கள் உள்ளிட்டவை குறித்து இந்த, ராடார் பிரிவு ஆய்வு செய்து வருகிறது. அப்போது, நிலவுக்கு அருகில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் விண்கலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவி:

'பூமியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சிறிய ரக பொருட்களை ராடார்கள் உதவியுடன் கண்டுபிடிப்பதே கடினமானது. நிலவுக்கு அருகே சுற்றி வரும் விண்கலத்தை கண்டுபிடிப்பது அதைவிடக் கடினமானதாகும். 'தற்போது நாங்கள் மேற்கொண்ட புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வெகு தொலைவில் உள்ள பொருட்களையும் கண்டுபிடிக்க முடியும் என்பது, எதிர்கால ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய அளவு உதவும்' என, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

'Over 100 medical students got admission sans passing exams'


Ahmedabad, Mar 11, 2017, DHNS


An RTI query has revealed that over 100 students of government medical colleges in Ahmedabad had been given admissions to post graduate courses despite having failed in the entrance examinations.

According to information available, entrance test for admissions to 300 seats in post graduate medical colleges affiliated with Gujarat University were conducted in 2015. As many as 900 students appeared for 300 seats in B J Medical College and NHL college, with only 200 making it through.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...