Thursday, April 6, 2017

சொத்து குவிப்பு வழக்கில் விடுவிப்பு ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை

சொத்து குவிப்பு வழக்கில் விடுவிப்பு
ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. 
 
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிக்கோர்ட்டு தீர்ப்பு

இந்த வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விசாரித்து, அவர்களை விடுதலை செய்து 2015-ம் ஆண்டு, மே மாதம் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கினார்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசும், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் விசாரித்து ஜெயலலிதா மரணம் அடைந்து விட்ட நிலையில், அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போய் விடுகிறது என கூறி கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தீர்ப்பு கூறினர்.

ஆனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர். மூவரும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது தெரிய வந்து இருப்பதாக கூறிய நீதிபதிகள், அவர்கள் பெங்களூரு தனிக்கோர்ட்டில் உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டனர். அவர்களும் சரண் அடைந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கர்நாடக அரசு மறுஆய்வு மனு

ஆனால் ஜெயலலிதா மீதான தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் கடந்த மாதம் 21-ந் தேதி மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறி இருந்த முக்கிய அம்சங்கள்:-

* ஒரு குற்ற வழக்கில் வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைத்த பின்னர் ஒருவர் இறந்து விட்டால், அப்பீல் வழக்கு இல்லாமல் போய்விடும் என்ற கேள்விக்கே இடம் இல்லை. வழங்கப்படுகிற தீர்ப்பு, அந்த நபர் உயிரோடு இருந்து வழங்கப்பட்டிருந்தால் என்ன வலிமையுடன் இருக்குமோ, அதே வலிமையுடன் இருக்க வேண்டும்.

* ஒரு நபர் இறந்து விட்டால் அப்பீல் அற்றுப்போவதற்கு அரசியல் சாசனத்தில் எந்த சட்டப்பிரிவும் வகை செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் 2013-ம் ஆண்டு விதிகளும் இதுபற்றி கூறவில்லை.

* இந்த வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், சிறை தண்டனை அனுபவிக்கும் நிலை இல்லை. ஆனால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது சட்டப்படி நிலைத்து நிற்கத்தக்கது. அதை அவரது சொத்துகள் மூலம் வசூலிக்க வேண்டும்.

* ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்குவது பலனற்றது; இருப்பினும் அபராதம் விதிப்பது, சட்டவிரோதமாக சேர்த்த சொத்தை பறிமுதல் செய்வது கோர்ட்டின் பரிசீலனைக்கு உரியது.

* பிப்ரவரி 14-ந் தேதி வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு மாற்றி அமைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எதிராக தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மறு ஆய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் பரிசீலனை

சுப்ரீம் கோர்ட்டில், மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை, திறந்த அமர்வுகளில் நடைபெறுவது இல்லை. நீதிபதிகளின் அறையில் நடைபெறுவது தான் வழக்கமான நடைமுறை. மேலும், வழக்கில் தொடர்புடைய இரு தரப்பு வக்கீல்களும் அனுமதிக்கப்படாமல், நீதிபதிகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வார்கள்.

அதன்படி கர்நாடக அரசின் மறுஆய்வு மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தள்ளுபடி

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுக்களை தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

கர்நாடக அரசின் மறு ஆய்வு மனுவை நாங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலனை செய்தோம். நாங்கள் ஏற்கனவே பிப்ரவரி 14-ந் தேதி பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைப்பதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று கருதுகிறோம். அதன் அடிப்படையில் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபராதம் இல்லை

எனவே இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு அபராதம் கிடையாது. அவரது சொத்துகளை விற்று ரூ.100 கோடி அபராதம் வசூலிக்கும் சூழல் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 5, 2017

மௌனம் சம்மதமாகிவிடும்!

By ஆசிரியர்  |   Published on : 05th April 2017 01:28 AM  |  
|  
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, பல பிரசார மேடைகளில் லஞ்ச ஊழலையும் முறைகேடுகளையும் ஒழிப்பதற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பயன்படும் என்பதை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். அரசாங்கத்திலும், நிர்வாகத்திலும் காணப்படும் தவறுகளை வெளிக்கொணரத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தும்படி கட்சித் தொண்டர்களை வலியுறுத்தினார். கடந்த ஆண்டு நீதிபதிகள் மாநாட்டில்கூட, அரசியல்வாதிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஒரு பயனுள்ள ஆயுதம் என்று எடுத்துரைத்ததை அவர் மறந்திருக்கலாம், நாம் மறக்கவில்லை.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பது, அரசின் செயல்பாட்டின் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புடைமையையும் உறுதிப்படுத்துவதற்காகக் குடிமை நல உணர்வாளர்கள் (சிவில் சொசைட்டி) நீண்டகாலம் போராடிப் பெற்ற ஆயுதம். 2002-இல் கொண்டு வரப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டத்தில் பல மாற்றங்கள் இணைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 12, 2005-இல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. பல சமூக ஆர்வலர்களும், குடிமை நல உணர்வாளர்களும், ஊடகவியலாளர்களும், எதிர்க்கட்சியினரும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி அரசில் நடைபெறும் பல ஊழல்களையும் முறைகேடுகளையும் வெளிக் கொணர்ந்திருக்கிறார்கள். வெளிக் கொணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

முந்தைய மன்மோகன்சிங் அரசால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்றாலும், இந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளும் உடனடியாகவே தொடங்கிவிட்டன. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகுதான் மத்தியிலும் மாநிலங்களிலும் தகவல் ஆணையங்கள் அமைக்கப்பட்டு, எல்லா துறைகளிலும் தகவல் அதிகாரிகள் செயல்படத் தொடங்கினார்கள்.

நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தபோது, நிலைமையில் மாற்றம் ஏற்படும் என்று குடிமை நல உணர்வாளர்கள் நிஜமாகவே எதிர்பார்த்தார்கள். தேர்தல் பிரசாரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசியவர் பிரதமராகிறார் என்கிறபோது அப்படியொரு எதிர்பார்ப்பு உருவானதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இப்போதைய தேசிய ஜனநாயகக் கட்சி அரசும், முந்தைய அரசைப்போலவே தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை எப்படியெல்லாம் வலுவிழக்கச் செய்வது என்பதில் முனைப்பாக இருப்பதுதான் வருத்தமளிக்கிறது.

தகவல் பெறும் உரிமைச் சட்ட விதிகள் 2017 என்று ஒரு வரைவை தகவல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பான கருத்துகளைப் பொதுமக்களிடம் இருந்து வரவேற்றிருக்கிறது. அந்த வரைவில் முறையீட்டைத் திரும்பிப் பெறுதல், தள்ளுபடி செய்தல் என்கிற தலைப்பிலான பகுதி 2, விதி 12 விசித்திரமான ஒரு புதிய விதியை முன் வைக்கிறது. அதன்படி, முறையீடு செய்திருக்கும் நபர் இறந்துவிட்டால், அந்த முறையீடு தொடர்பான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு விடும்.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், ஒருவரின் மரணத்துடன் அந்த முறையீடு முடிக்கப்பட்டு விட வேண்டும்தானே என்று கேட்கலாம். தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான வழக்குகளையும், முறையீடுகளையும் ஏனைய நடைமுறை நீதிமன்ற வழக்குகளைப் போலவோ, அரசாங்க முறையீடுகள் போலவோ பார்க்கக் கூடாது. லஞ்ச ஊழலையும் முறைகேடுகளையும் வெளிக் கொணர்வதற்காக இடித்துரைப்பாளர்களாலும், சமூக ஆர்வலர்களாலும், ஊடகவியலாளர்களாலும் செய்யப்படும் முறையீடுகள் இவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த ஆண்டு தில்லியில் உள்ளத் தன்னார்வ நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையின்படி, 2005 முதல் 2016 வரையிலான இடைவெளியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரிய 56 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இவர்களில் 51 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 5 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல. தாக்கப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள், தொல்லைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்கப்பட்டவர்கள் 157க்கும் அதிகமானவர்கள். இந்தப் புள்ளிவிவரம் வெளியில் தெரிந்தது. தெரியாதது எத்தனை என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். 2017-இல் மட்டும் இதுவரை தகவல் கேட்டு விண்ணப்பித்த 375 பேர் தாக்கப்பட்டிருப்பதாக, இன்னொரு தன்னார்வ நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தப் பிரிவு இணைக்கப்பட்டால், தங்களுக்கு எதிராகத் தகவல் கேட்கும், அல்லது, பிடிவாதமாக மேல் முறையீடு செய்யும் நபர்கள் கொலை செய்யப்பட்டு, தகவல் வெளிவராமல் தடுக்கப்படும் என்பதுதான் நடைமுறை நிதர்சனம். அதேபோல, முறையீடு செய்தவர்கள் தங்களது முறையீட்டைத் திரும்பப் பெறலாம் என்கிற புதிய விதியும் இந்த வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டால், குற்றம் சாட்டப்படுபவரால் தாக்கப்பட்டோ, எச்சரிக்கப்பட்டோ, அழுத்தம் தரப்பட்டோ முறையீடுகள் பல திரும்பப் பெறப்படும்.

இவையெல்லாம், அதிகார வர்க்கத்தின் அழுத்தத்தின் பேரில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அரசு செய்ய நினைக்கும் மாற்றங்கள் என்பது தெரிகிறது. வரைவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பதும், இந்த மாற்றங்கள் சேர்க்கப்படாமல் தடுப்பதும் இடித்துரைப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என்று அனைவருக்குமான கடமை. வாக்குரிமை மட்டுமே சுதந்திரத்திற்கான அடையாளம் அல்ல!

அமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் திருட்டு

By DIN  |   Published on : 04th April 2017 10:31 PM  |  
 spb

அமெரிக்காவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற பாடகர் எஸ்பிபி உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழச்சிகளை நடத்திவருகிறார். அதில் ஒரு பகுதியாக தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எஸ்பிபியின் பேக் ஒன்று திருடுபோயுள்ளது.

அதில் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, ஐபேடு ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஹவுஸ்டனி்ல் உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

அதன்பின்னர் புதிய பாஸ்போர்ட் பெற்று இந்தியா திரும்பியதாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.

உ.பி., தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 500 மாணவர்களின் சேர்க்கை ரத்து: இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு

By DIN  |   Published on : 05th April 2017 05:08 AM  |
medical
Ads by Kiosked
உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்திலுள்ள சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் 500 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யுமாறு, அந்த கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) உத்தரவிட்டுள்ளது. இந்த மாணவர்கள் அனைவரும், கடந்த ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) பங்கேற்காதவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை, தங்களது சொந்த நுழைவுத் தேர்வு மூலமோ அல்லது 'நீட்' தேர்வு மூலமோ நிரப்புவதற்கு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வாய்ப்பு வழங்கியது.
அதன்படி, உத்தரப் பிரதேசம், தமிழகத்திலுள்ள ஒரு சில தனியார் மருத்துவ கல்லூரிகளில் 'நீட்' தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய இடங்கள், மாணவர்களிடம் பெரும் கட்டணத்தை பெற்றுக் கொண்டு முறைகேடாக நிரப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று விதிகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும்படி சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவ கவுன்சிலின் செயலர் ரீனா நய்யார் கூறியதாவது: உத்தரப் பிரதேசத்திலுள்ள 17-18 தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயிலும் சுமார் 400 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யுமாறு அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள பொன்னையா ராமஜெயம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பயிலும் சுமார் 36 மாணவர்களின் சேர்க்கையையும் ரத்து செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய இடங்களில், அத்தேர்வை எழுதாத மாணவர்களை மேற்கண்ட கல்லூரிகள் சேர்த்துள்ளன. இது சட்டவிரோதமானதாகும் என்றார் அவர்.

இதேபோல, பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய பல் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விவரங்கள் ஆராயப்பட்டு வருவதாக இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

 Students have little time to prepare for NEET

 Many seek out coaching centres to face the exam

While the board examinations got over on Friday, S. Kanmani will hardly have any time to take a few days off. She along with several other students from State board schools across the city will be kick starting their preparations for the NEET exam scheduled on May 7.

“Given all the confusion surrounding the conduct of the examination in the State, we hardly have any time to concentrate on preparations for the entrance and are hoping that we can put in our best through April,” she said. Many students like her are seeking out coaching and training centres which are offering intensive courses and camps to prepare them for the exam.
Archana Ram, Managing Director of SMART training resources, said they had seen an overwhelming response among students for the intensive programme that their centres are offering through April.

Introductory classes
“State Board students will have the same course material and curriculum as the CBSE students but additionally, we are preparing the State board students by giving them a few introductory classes to reorient them with a few concepts. At the end of the day, they will all be writing the same exam and we are hoping to ensure that all the students are clear about how to attempt the paper,” she explained.
Heads of schools in the city said that parents had been seeking them as well as teachers to ask them how to help their children preparing for NEET. “We are constantly asked about what areas in subjects the students should concentrate on or where they should go for coaching classes and most of us remain unaware of how to guide them. It will take at least a year or two for the stream to familiarise with NEET and how the exam is conducted to train our students accordingly,” said the headmistress of a school in the city.

G. Pandian, principal of Sir Sivaswami Kalalaya Higher Secondary School, said that it was important for students to have a strong foundation in their class 11 concepts to crack a competitive paper like NEET.

While a majority of coaching centres have already began classes for State board students, CBSE students too will be enrolling themselves in courses as soon as their exams end.
The science students have their last examination on April 5 and will take the Biology paper.
Academics cautious over college & varsity ranking
Mumbai:
TIMES NEWS NETWORK


Survey Will Take 3-4 Years To Be Well-Rounded, They Say 
The Union HRD ministry's ranking of institutions of higher learning 2017 has experts voice some concerns and put out a word of caution. Most academics are of the view that it is unfair to compare large generously-funded institutes with state universities that are challenged by the quality of students, plagued with vacant faculty positions, deprived of funds and cursed by political interference.
Amazed at the high rank of some institutescolleges and the conspicuous absence of other eminent colleges, experts say it is difficult to compare the 3,300 institutes included in the National Institutional Ranking Framework 2017 (NIRF). Former director of IIT-Bombay , Ashok Misra, says he wonders why the Indian Institute of Science, ranked No.1, and the Jawahar lal Nehru Centre for Advanced Scientific Research, had been categorised as universities.Given that the participation is voluntary , academics point out the first year saw top institutes sign up and this year a few more have joined in.

“Stability will come in only after three to four years when many more join in. Currently , the rank depends largely on who else is in this list to get ranked. Each year the relative ranks change depending on the pool of institutes in the ranking framework,“ said Neeraj Hatekar, head of the school of economics at University of Mumbai. The first NIRF rankings were released in 2016 and added two streams this year: `overall' and `colleges' to the existing engineering, universities, management and pharmacy categories. It has also expanded the parameters, including one that measures `outreach and inclusivity'.

ORF founder Sudheendra Kulkarni says the rankings simply indicate “where each university stands“. “Even geographical location matters. While universities in the metros are at an advantage, a Gondwana or a Chandrapur University will not figure in the rankings at all though they are doing some interesting work to serve the local population.“

Heads of the IITs often lament that they fall behind in international rankings as they are not funded as much as an MIT or Caltech. This is now the lament of state universities vis-a-vis the new rankings. But Ashok Misra points out, “The rankings are stream-wise and nothing stops a state university from attracting more resources and working with industry to set up labs and innovation centres.“




தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !!

தகவல் அறியும் உரிமை சட்டம் RTE FULL DETAILS AND IMPORTANT POINTS:
1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.

2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல்
அலுவலரின் முழுமுகவரி அஞ்சல்
குறியீட்டு எண்ணுடன்

3.நீங்கள் முன்னர்
எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின்
விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்


4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற
கேள்வி

5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்

6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/-
செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற
வில்லை எனில்(court fees stamp) மனுவின்
மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)

7.நீதிமன்ற வில்லையை[court fees stamp]
(ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல்
(xerox) எடுத்து வைக்கவும்

8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன்
கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.
(மெல் முறையீட்டின் போது ஒப்புதல்
அட்டை முக்கியம்.
தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த
தகவல்கள் கேட்கலாம்?.
( What type questions can be asked in RTI act
2005 )

1) பதிவேடுகள் (Records),
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.
( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள்
(Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information
stored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள்
(All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும்
பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,
(The right to review relevant documents and
records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take
Xerox) ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்
முறையீடு:
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்
தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த
தகவல் திருப்திகரமாக
இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில்
பிரிவு 19ன் கீழ் உள்ள மேல்
முறையீட்டு அதிகாரியிடம் 30
நாட்களுக்குள் முதல் மேல்
முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில்
திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க
ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல்
ஆணையரிடம் இரண்டாவது மேல்
முறையீடு செய்யலாம்.
மாநில தலைமை தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2, தியாகராயசாலை,
ஆலையம்மன் கோவில் அருகில் ,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.

தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act
தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் &
ஒழுங்கு நடவடிக்கை
பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும்
செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும்
துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக
வேண்டிவரும்
1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம்
வாங்க மறுத்தால்
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால்
(30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய
எண்ணத்துடம் மறுத்தால்
4. தவறான, முழுமையுறாத, தவறான
எணத்தை தோற்றுவிக்கும் வகையில்
தகவலை தெரிந்தே கொடுத்தால்
5. தகவலை அழித்தால்
6. தகவல் கொடுப்பதை தடுத்தால்
பிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250
வீதம் அபராதம்
ரூ 25,000 உயர்த பட்ச அபராதம்
பிரிவு 20 (2) படி துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை
மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம்
மட்டுமே தண்டனை விதிக்க முடியும்
தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல்
அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான்
தண்டனை விதிக்க முடியும்
நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட
பொது தகவல் அலுவலர்
மீது தண்டனை விதிக்க இயலாது.
குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம்
தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது
தண்டனைகள் (பிரிவு-20)
மாநில தகவல் ஆணையமானது, புகார்
அல்லது மேல்முறையீடு எதனையும்
தீர்மானிக்கும்போது:
1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம்
ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம்
ஒன்றினை மறுக்குமிடத்தும் ;
2. பொது தகவல் அலுவலர்
காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க
மறுக்குமிடத்தும் ;
3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான
கோரிக்கையினை உள்நோக்கத்துடன்
மறுக்குமிடத்தும் ;
4. கோரிக்கையின் பொருளாக இருந்த
தகவலை அழிக்குமிடத்தும் ;
5. பொது தகவல் அலுவலர்,
தகவலை அளிப்பதை எந்த முறையிலும்
தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம்
பெறப்படும் வரை அல்லது தகவல்
அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும்
ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல்
அலுவலர் மீது விதிக்கப்படும்.
எனினும், மொத்த தண்டத்
தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல்
இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம்
விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட
பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான
வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.
பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும்,
கவனத்துடனும்,
செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு,
அவரையே சார்ந்ததாகும்.
மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில்,
பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக,
அவருக்கு பொருந்தத்தக்க
பணிவிதிகளின்படி,
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட
துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்
– thagaval ariyum urimai sattam 2005
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலத்தில்
இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற
முடியும். இன்னும் சில இடங்களில் கால்
செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கான இணையதளங்கள்: http://
www.righttoinformation.gov.in http://
www.rtiindia.org
இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://
www.rtination.com என்ற தளத்தைப்
பார்வையிடலாம்.
ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு,
அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான
போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல்
புகார்கள்
ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம்
கேட்கின்றனர்.
தகவல் உரிமை பற்றி தமிழக அரசின் இணைய
தளம் http://www.tn.gov.in/rti/
தகவல் அறியும் உரிமை பற்றி மத்திய அரசின்
இணையத்தளம் http://rti.gov.in/
மேலும் தகவல்
உரிமை சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் http://
persmin.nic.in/RTI/WelcomeRTI.htm
முறையாக தகவல் கேட்பது எப்படி? http://
www.rtiindia.org/
கிராம மற்றும் பஞ்சாயத்து நிர்வகாம்
பற்றி அரசாங்கத்தின் கோப்புhttp://
www.tn.gov.in/rti/proactive/rural/
handbook_RD_PR.pdf

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...