Wednesday, April 12, 2017

லஞ்சம் வாங்கியதற்கான ஆவணங்களாலும் சிக்கல்

பதிவு செய்த நாள் 12 ஏப்  2017   02:48



அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையின் போது, சுகாதாரத் துறையில் பணி இடமாற்றம், பணி நியமனம் போன்றவற்றுக்கு, லஞ்சம் பெற்றது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில், சில ஆவணங்கள் வெளியாகி உள்ளன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அந்த ஆவணங்களில், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு மருந்துகள் வாங்கியதில், 67 லட்சம் ரூபாய்; எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அலுவலக உதவியாளர் பணி நியமனங்களுக்கு, 32 லட்சம் ரூபாய்; பணியிட மாறுதல், நியமனம் மூலம், 2.38 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 2016 நவ., 1 முதல், நவ., 10 வரை பணியிட மாற்றம், நியமனங்கள் மூலம், 5.16 கோடி ரூபாய் பெற்றதாக தெரிகிறது.

சுகாதாரத் துறையில் நடந்த முறைகேட்டில் சிறு பகுதி தான் இது. கடந்த ஆட்சியிலும், அவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போதைய ஆவணம் உண்மை என்றால், அவர் எவ்வளவு பணம் சம்பாதித்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது.எனவே, துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து, தனி விசாரணை கமிஷன் மூலம், விசாரணை நடத்த வேண்டும் என, சமூக நல ஆர்வர்கள் மற்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணி நியமனம், இடமாற்றம் போன்றவற்றுக்கு, அமைச்சர் பணம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால், அவர் பதவி இழக்க நேரிடும்.

- நமது நிருபர் -
திருமணமான 9 நாளிலேயே கணவரை கொலை செய்த புதுப்பெண் கைது; பரபரப்பு வாக்குமூலம் 


திருமணமான 9 நாளிலேயே கணவரை கொலை செய்த புதுப்பெண் கைது; பரபரப்பு வாக்குமூலம்

திருமணம் ஆன 9 நாட்களிலேயே கணவரின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்த புதுப்பெண் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏப்ரல் 12, 02:56 AM பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 28), சிற்ப கலைஞர். இவருக்கும் கடலூரை சேர்ந்த 17½ வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 2-ந்தேதி திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் அவரது தாய் வீட்டில் தாலி பிரித்துக்கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரமேஷ் மற்றும் இருவீட்டாரின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கிருந்து புதுமண தம்பதி ரமேஷின் தாய் வீட்டிற்கு வந்தனர். ரமேஷின் தாய் ராணி ரேஷன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். கணவன்-மனைவி இருவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது வீட்டில் தலைநசுங்கிய நிலையில் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசார் விசாரணை

சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பிய ராணி, தனது மகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுந்தார். ரமேஷின் மனைவியும், யாரோ கொலை செய்துவிட்டதாக கூறி கணவரின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். இந்த கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் இருந்த ரமேஷின் மனைவி மீது போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறினார். இதனால் சந்தேகம் வலுத்து, அவரிடம் மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குழவிக்கல்லை போட்டு கொலை

அப்போது, ரமேஷின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் அவரது மனைவி ஒப்புக்கொண்டார். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என்னை என் பெற்றோர் கட்டாயப்படுத்தி ரமேசுக்கு திருமணம் செய்துவைத்தனர். அவர் வழுக்கை தலையாக இருந்ததால் எனக்கு அவருடன் வாழ பிடிக்கவில்லை. எனது கணவரை பார்த்து என்னிடம் சிலர் கேலி செய்தனர். தாம்பத்திய வாழ்க்கையிலும் ரமேஷ் என்னை சந்தோஷப்படுத்தவில்லை. இதனால் எனக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.

நாடகமாடினேன்

எனது தாய் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நானும், ரமேசும் இந்த வீட்டிற்கு வந்துவிட்டோம். அப்போது, நாங்கள் தனியாக இருந்ததால், என்னை தாம்பத்தியத்துக்கு ரமேஷ் அழைத்தார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதனால் அவர் என் மீது கோபமடைந்து, என்னுடைய அம்மாவை ஆபாசமாக திட்டினார்.

இதில் ஆத்திரமடைந்த எனக்கும், அவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர், நான் அவரை சமாதானப்படுத்தினேன். இதில் ரமேஷ் அமைதியாக சென்று படுத்து தூங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். அதன்படி, வீட்டில் இருந்த கிரைண்டர் குழவிக்கல்லை எடுத்து, ரமேஷின் தலையில் போட்டேன். அதில் அவர் தலைநசுங்கி இறந்தார்.

அதன்பிறகு நான், மாமியார் ராணியிடம் வெளியே இருந்து வந்த ஒருவர் அவரை கொலை செய்ததாக கூறி நாடகமாடினேன். ஆனால், போலீசாருக்கு என்மேல் சந்தேகம் எழுந்து, என்னிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதால் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அந்த இளம்பெண் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷின் மனைவியை கைது செய்தனர். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.

திருமணமான 9-வது நாளிலேயே கணவரை மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடு வழி

சில தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ‘தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள அனைத்து மதுக்கடைகள், கிளப்புகள், நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தையும் ஏப்ரல் 1–ந் தேதி முதல் மூடிவிடவேண்டும். 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகரங்களில் இந்த தூர எல்லை 220 மீட்டராக குறைக்கப்படுகிறது’ என்றும் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள இந்த உத்தரவால், டாஸ்மாக் கடைகள் மட்டுமல்லாமல், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் கிளப்கள் மற்றும் ஏராளமான நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்களும் மூடப்பட்டுவிட்டன. இந்த அதிரடி உத்தரவால், மாநில அரசுகளின் வருமானம் மட்டுமல்ல, சுற்றுலாவும் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. நட்சத்திர ஓட்டல்களுக்கு தங்க வருபவர்கள் வசதிபடைத்தவர்களாகத்தான் இருப்பார்கள். இதுதவிர பல்வேறு கருத்தரங்குகள் குறிப்பாக சர்வதேச கருத்தரங்குகள், விருந்துகள், விழாக்களில் கலந்து கொள்ளத்தான் வருவார்கள்.

இவர்களெல்லாம் பார் இல்லை, மது பரிமாறப்படாது என்றால், நிச்சயம் நட்சத்திர ஓட்டல்கள் பக்கம் வரமாட்டார்கள். சர்வதேச கருத்தரங்குகள் இந்தியாவில் நடத்தப்படாமல், வேறு நாடுகளுக்கு போய்விடும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று சுற்றுலா மற்றும் ஓட்டல் தொழில் சங்கங்களின் சம்மேளனம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 90 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இவர்கள் வருகையெல்லாம் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுவிடும். இதுமட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை இழப்பு நேரிடும் என்ற வருத்தத்தை திட்டக்குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ள நிதி அயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் பதிவு செய்துள்ளார்.

குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களால்தான் பெருமளவு விபத்துகள் ஏற்படுகிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. நிச்சயமாக இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். எனவே மது குடித்துவிட்டு மோட்டார் வாகனம் ஓட்டக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், ஆங்காங்கு சாலைகளில் இதுபோல மதுகுடித்துவிட்டு யாராவது வாகனம் ஓட்டுகிறார்களா என்பதை கண்டுபிடிக்க அதிரடி சோதனைகள் நடத்துவதன் மூலமாகவும் மட்டும்தான் இத்தகைய குறைபாடுகளை சரிசெய்ய முடியும். மேலும், இத்தகைய உத்தரவினால் மாநில அரசுகளின் வரிவருவாய், வருவாய் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை கருத்தில்கொண்டு, இந்த நோக்கத்தை நிறைவேற்ற வேறுவழிகளையும் மத்திய அரசாங்கம் கண்டு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்யவேண்டும். மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் சர்மா
 
, ‘இந்த உத்தரவால் சுற்றுலா தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், இதில் ஒரு நடுவழி காணப்படும்’ என உறுதி அளித்தார். இதுமட்டுமல்லாமல், மாநில அரசுகளின் வருவாயில் பெரும்பகுதி மதுக்கடைகள் மூலமாகத்தான் கிடைக்கிறது. தமிழக அரசை எடுத்துக்கொண்டால், மாநில வருவாயில் கணிசமான அளவு டாஸ்மாக் மூலம்தான் கிடைக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் அரசின் வருமானத்தில் 16.3 சதவீதம் டாஸ்மாக் மூலம்தான் கிடைத்துள்ளது. இந்த வருமான இழப்பை மாநில அரசுகளால் தாங்கிக்கொள்ள முடியாது. பல மாநிலங்களில் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து வேறுவழிகளில் செல்ல முயற்சிசெய்கிறார்கள். மாநில நெடுஞ்சாலை என்பதை மாற்றி அமைத்து பிரதான மாவட்ட நெடுஞ்சாலை, ஊரக நெடுஞ்சாலை என்ற பெயரில் கடைகளை தொடர்ந்து நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுபோல ஒரு நிலைமை ஏற்படாமல், மதுவிலக்கு கொள்கையும் வேண்டும், அரசின் வருமானமும் பாதிக்கப்படக்கூடாது என்றவகையில், ஒரு நல்ல ஏற்பாட்டை காண மத்திய அரசாங்கமும், சுப்ரீம் கோர்ட்டும் சேர்ந்து முயற்சிக்கவேண்டும்.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வறுத்தெடுக்கும் வெயில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை,
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வேலூர், கரூர், நெல்லை, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பிற மாவட்டங்களில் 90 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. சென்னையிலும் பிற மாவட்டங்களுக்கு நிகராக வெயில் கொளுத்தி வருகிறது. சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெண்கள் கைக்குட்டை மற்றும் துப்பட்டாவால் முகத்தை மூடியபடி செல்வதை காணமுடிகிறது.

கானல் நீர் வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் கானல் நீர் தோன்றுகிறது. வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வியர்வை மழையில் நனைந்தவாறு சாலையோரம் உள்ள மரத்தின் நிழலில் தஞ்சம் அடைகின்றனர். சென்னையில் ‘வார்தா’ புயலால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதால் நிழலை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆங்காங்கே இருக்கும் தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர் கடைகளிலும், பழரச கடைகளிலும், மோர், கரும்புச்சாறு உள்ளிட்ட குளிர்பான கடைகளிலும் வியாபாரம் களைகட்டி வருகிறது.

ஓய்வில்லாத மின்விசிறிகள் பொதுமக்கள் சாலைகளில் குடை பிடித்தபடி நடந்து செல்வதை காணமுடிகிறது. மேலும் சிலர் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் முடங்குகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வருகின்றனர்.

இதனால் சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மதிய நேரங்களில் வெறிச்சோடி காணப்படுகிறது. வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி., ‘ஏர்கூலர்’களை ஓய்வு இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Link accounts to Aadhaar by April 30, says I-T dept
New Delhi
TIMES NEWS NETWORK 
 


Lack Of Info May Lead To Blocking Of Accounts 
 
Accounts opened from July 2014 to August 2015 will have to submit know your customer (KYC) details and their Aadhaar number to banks and financial institutions by April 30 and self-certify them to comply with FATCA regulations (Foreign Tax Compliance Act), the tax department said on Tuesday .
 
In case the account holders are unable to furnish details and provide self-certification by the new deadline, banks and financial institutions have the option of blocking the accounts. Once the details are furnished they can operate the accounts. The provision applies to accounts which come under the ambit of FATCA regulations.

Banks and financial institutions were asked to obtain self-certification and carry out due diligence for all individual and entity accounts opened from July 1, 2014 to August 31, 2015 to comply with the Foreign Account Tax Compliance Act (FATCA) pact signed by India and the United States.
In July 2015, India and the US signed a tax information sharing agreement under a new US law, FATCA, aimed at bolstering efforts for automatic exchange of financial information between the two nations about tax evaders. The agreement covers automatic sharing of information on bank accounts as well as financial products such as equities, mutual funds and insurance and is aimed at fighting the menace of black money stashed abroad.

“In case self-certifications are not provided till April 30, 2017, the accounts would be blocked, which would mean that the financial institution would prohibit the account holder from effecting any transaction with respect to such accounts,“ the tax department said in a statement.
“The transactions by the account holder in such blocked accounts may , thereafter, be permitted once the self-certification is obtained and due diligence completed,“ it said.
Tax officials said that the accounts would include banks, insurance, stocks.Account holders will also have to mention their Aadhaar numbers.

“Such self-certification and documentation was required to be obtained by the financial institutions by August 31, 2016, otherwise they were required to close the accounts and report the same if found to be a “reportable account“ as per prescribed due diligence procedure for preexisting account,“ the tax department said in a statement.
Don't try to evade tax inquiry: HC to MGR Univ VC
Chennai:
TIMES NEWS NETWORK 
 


“Don't try to escape the clutches of tax inquiry. You are occupying a responsible position and a public office. Income tax summons has not come from heaven, it has come after searches of your premises.“ That was a quote by the Madras high court, which on Tuesday refused to stay or quash I-T summons to Tamil Nadu Dr MGR Medical University vice-chancellor S Geethalakshmi.
 
After Justice K Ravichandrababu made it clear that he would neither stay the summons nor even extend the date for her appearance before the taxmen, the writ petition was dismissed as withdrawn.
Income tax officials on April 7 raided Dr Geethalakshmi's house and office.The officials had also searched the properties of health minister C Vijayabaskar and actor-politician R Sarathkumar.
After summoning all of them to appear before tax authorities on Monday , the date was changed to Wednesday (April 12) in the case of Geethalakshmi alone. While the minister and the actor obliged and answered queries for several hours, Geethalakshmi moved the high court, saying officials had not followed mandatory provisions of the Income Tax Act.Since she faced no investiga tion, summons ought not to have been issued to her, she said.

However, Justi ce Ravichandraba bu rejected the ar guments advanced by senior counsel S Gomathinayagam and said no intervention was possible in the matter.
Making it clear that the petition could not be entertained at all, the judge said if tax officials had issued summons, it was the responsibility of the recipient to appear and offer explanations to their satisfaction.

When the senior advocate sought the court to permit Geethalakshmi to appear before I-T officials on Monday in view of the intervening weekend, the judge said that the plea could not be entertained at all. Facing dismissal, counsel sought permission to withdraw the petition. It was then dismissed as withdrawn.

Tuesday, April 11, 2017

ஓய்வூதியம் என்றால் என்ன???

நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார்.

செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.

‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.

நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத் பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972)நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு.

ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித் திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம்

1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.

இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம்22.12.2003ல் பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசு உத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பெயரில்தான் பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி ஓய்வூதியவிதிகள். ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .

ஓய்வூதிய விதிகளில்தான் பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு வழங்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளும்,பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலை இழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும் உள்ளன.

நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேற்பார்வையிடவும், வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003முதல் முன்தேதியிட்டு நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் முறையான சட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும் சட்டபூர்வமான ஆணையம் செயல்படும். இது பா.ஜ.க.வின் ஆட்சிக்காலத்தில் நிதித்துறையின் செயல்பாடு.
2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா.ஜ.க. கொண்டுவந்த நிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்று ‘ஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல் ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill –ஐ அறிமுகப்படுத்தியது.

ஆனால், ஐ.மு.கூட்டணி 1 அரசை வெளியில் இருந்து ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனவே இந்த மசோதாவை 14-வது மக்களவை முடியும்வரை அந்த அரசால் சட்டமாக்க முடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம் காலாவதியானது.
பி.எஃப்.ஆர்.டி.ஏ 2005 பில் –ஐச் சட்டமாக்க முடியாத நிலையில் நிதித்துறை அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒரு சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின் பதவிக்காலத்தை 8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்தது.

10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல்8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்கு என நீட்டித்த காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது
8.4.2010 முதல் சட்டபூர்வத் தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச் சட்டபூர்வமாக்க ஐ.மு.கூட்டணி2 அரசு 24.3.2011ல்‘.பி.எஃப்.ஆர்.டி.ஏ 2011 பில்’ என அறிமுகப் படுத்தியது.

ஆனால் இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ‘இந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்’ என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப் படுத்தியது.

அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பிடித்தம் செய்யப்படும். இதற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இந்த ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.ஓய்வு பெறும் நாளில் பங்குச் சந்தையின் ஏற்ற,இறக்கங்களுக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும். அதுமட்டுமா?

புதிய ஓய்வூதியத்திட்டத்தில்
1.ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறமுடியாது.
2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடி சேராது.
3.குடும்பஓய்வூதியம் கிடையாது.
4.பணிக்கொடை கிடைக்காது.
5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும் ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது.

-இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள்.

இப்படி பட்ட cps காகத்தான் போராடுகிறோம் என்பதை cps  தோழர்களுக்கும் பொதுமக்களுக்கு ம் தெரியப்படுதுங்கள்.

NEWS TODAY 30.12.2025