Wednesday, May 3, 2017

HC asks med colleges to give 50% PG seats to TN, slaps Rs 2 crore fine
Chennai 
 


Smashing the unholy nexus among the Medical Council of India, successive governments in Tamil Nadu since the year 2000, and private unaided medical colleges and deemed universities, Madras high court has held that surrender of 50% of postgraduate medical seats by all institutions, including deemed universities, is an inescapable necessity.
 
Justice N Kirubakaran imposed an exemplary cost of `1 crore each on MCI and Tamil Nadu government for their wilful failure to ensure surrender of seats by unaided colleges.While the sum to be deposited by the state government would go in for the Archaeological Survey of India's excavation work at Keezhadi in Sivaganga district, the MCI money would go into the bank account of Spastics Society of India, the judge said.

“The MCI failed to implement the regulation against deemed universities. The state too has failed to demand its share of 50% seats from private medical institutions,“ Justice Kirubakaran said. Justice Kirubakaran said “The MCI deliberately failed to implement the regulation against deemed universities, prejudicial to the interest of the state and it should be with ulterior motive only. The state government also has not so far demanded its share of 50% seats from all private medical institutions, including deemed universities.All stake holders involved have acted with hidden agenda for benefiting some private players, defrauded and caused irreparable loss and injury to the meritorious and poor meritorious students.“

The judge was passing orders on a batch of petitions for a direction to the state government to appropriate 50% of seats in recognised post-graduate degree and diploma courses in each specialty from 19 specified colleges and deemed universities in Tamil Nadu, and to ensure admissions on the basis of National Eligibility cum Entrance Test (PG) merit list to be prepared by MCI.
In his 130-page verdict on Tuesday , Justice Kirubakaran said: “The state government shall by notification include 50% seats in deemed universities, except minority institutions, in the counseling to be conducted for government quota seats in self-financing medical colleges, 50% institution quota seats in deemed universities and management quota seats in self-financing medical colleges.“ Minority institutions need not share 50% of seats to the government except by voluntary surrender, he said, adding: “Admission made in respect of NRI quota by non-governmental medical institutions in the state, excepting minority in stitutions, is not valid and is set aside.“

All private, non-minority institutions shall surrender all their seats, including 15% NRI quota seats, for centralised common counseling to be conducted by the state, Justice Kirubakaran said, adding: “The state government prospectus for common counseling to PG degreesdiploma courses in deemed universities in Tamil Nadu (excluding NRI quota) this 2017-18 session is quashed, as it does not appropriate 50% state quota seats from deemed universities.“ As for the procedure to be adopted by e state government during counsel the state government during counselling, the judge said it should notify in its website details such as availability of seats in each college, university , institution (specialty wise); complete fee structure of all non-governmental institutions, including deemed universities, which shall also include the expenses the student has to incur for pursuing his course; list of candidates absent during counseling; list of candidates who have not joined in governmentnon-governmental institutions; and specialty-wise details of seats allotted to NRI quota.

Justice Kirubakaran also asked all authorities and MCI to notify all the decision and procedure-formalities well in advance from next year onwards to avoid confusion in admission and avoid litigation Noting that commercialization of professional education, especially medical education, continues to be a worrisome issue to public, he said: “Even in this case, though most of the institutions have surrendered all their seats, they have not surrendered 15% NRI quota seats.“
தலையங்கம்
பின்னடைவில் தொழிலும், விவசாயமும்
ந்தவொரு நாடும், முன்னேற்றப்பாதையில் செல்லவேண்டுமென்றால், அங்கு பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும் மேம்பட்டு இருக்கவேண்டும். பொருளாதார வசதி மேம்பட்டு இருக்கவேண்டுமென்றால், நிச்சயம் அங்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் ஒழிக்கப்படவேண்டும். தொழிலும், விவசாயமும் இரண்டு தண்டவாளங்கள்போல் இருந்தால்தான் அங்கு வேலைவாய்ப்பு என்ற ரெயில் வேகமாக ஓடமுடியும்.

கடந்த மார்ச் மாதம் 31–ந் தேதியோடு தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்து காத்திருக்கிறார்கள். பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கையை சேர்த்தால் நிச்சயம் ஒரு கோடியை தாண்டும். இது நிச்சயம் தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்படவேண்டும், விவசாயம் மேம்படவேண்டும், வேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டால், அரசாங்கம் ஆண்டுதோறும் ஒருசில ஆயிரம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு தரமுடியும். தனியார் தொழில்கள், தனியார் முதலீடுகள் ஏராளமாக பெருகினால்தான், வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும்.

தமிழ்நாட்டின் நிலைமை அப்படியில்லை. இந்தியாவில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்களும் சரி, வெளிநாட்டு நிறுவனங்களும் சரி, முன்பெல்லாம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க போட்டிப்போட்டுக்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ‘ஹூண்டாய்’ கார் கம்பெனியின் துணை நிறுவனமான ‘கியா’ என்ற தென்கொரிய நாட்டு நிறுவனம் சென்னைக்கு மிக அருகில் ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா என்ற ஊரில் ஒரு புதிய கார் தொழிற்சாலையை நிறுவப்போகிறது. ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட இருக்கும் இந்த நிறுவனம், இந்தியாவிலேயே மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் முதலில் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய நிறுவனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த தொழிற்சாலையை அங்கு தொடங்குவதன்மூலம், மேலும் பல துணை நிறுவனங்களும், வர்த்தக நிறுவனங்களும் அதன் அருகே தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ‘இசுசூ’ மோட்டார் நிறுவனம் சென்னையை விட்டுவிட்டு, சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. ‘ஹீரோ’ மோட்டார் நிறுவனம் தனது இருசக்கர வாகன தொழிற்சாலையை அங்கு தொடங்க இருக்கிறது. இப்படி பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை தவிர்த்துவிட்டு, ஆந்திராவுக்கு செல்கிறது என்றால் அதன்காரணம் என்ன? என்பதை தமிழக அரசு ஆராய்ந்து, நம்மிடமுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்திசெய்து, தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தொழில் வளர்ச்சியில்தான் பின்தங்கி இருக்கிறோம் என்றால், ‘இந்துதாஸ்தான் டைம்ஸ்’ பத்திரிகை குழுமத்தை சேர்ந்த ‘மிண்ட்’ பத்திரிகை நடத்திய ‘கிராமப்புற இடர்பாடு’ என்ற ஆய்வில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயம் மிகப்பெரிய இடர்பாடுகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. விவசாய வளர்ச்சியில் பின்தங்கியிருக்கிறோம். கடுமையான வறட்சியும் மற்றவர்களைவிட அதிகம் தமிழ்நாட்டில் இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் விவசாயம் பெரிய இடர்பாடுகளை சந்திக்க இருக்கிறது என்று அந்த ஆய்வில் கூறப்படுகிறது. ஆக, தமிழக அரசு உடனடியாக விவசாயத்தையும், தொழிலையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதையே தனது முதல் லட்சியமாகக்கொண்டு, அந்தபாதையில் வேகமாக செல்வதற்கு தடையாக இருக்கும் அத்தனை முட்டுக்கட்டைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, தன் லட்சிய பயணத்தை தொடங்கவேண்டும்.
மேம்பாலம் இருந்தும் வடபழனியில் நெரிசல் குறையவில்லைமுருகா!ஆக்கிரமிப்பை அகற்றாமல் போக்குவரத்தை மாற்றுவதா?

பதிவு செய்த நாள்
மே 02,2017 23:15



சென்னை:கோடம்பாக்கம் - வடபழனி ஆற்காடு சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்ட நிலையிலும், எந்நேரமும் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகருகின்றன. ஆற்காடு சாலையை கடக்க, அரை மணி நேரத்திற்கு மேல் வாகனங்கள் காத்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.வடபழனி, 100 அடி சாலை மற்றும் வடபழனி ஆற்காடு சாலை வழியாக தினமும், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், இரண்டு சாலைகள் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதையடுத்து, 2010ல், வடபழனி, 100 அடி சாலையில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க, இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இருவழிப் பாதைமுதல் மேம்பாலத்தில் வாகனங்களும், 2வது மேம்பாலத்தில், மெட்ரோ ரயிலும் செல்ல திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. வாகனங்கள் செல்வதற்கான மேம்பாலம், பூமியில் இருந்து, 7 மீ., உயரத்தில், 520 மீ., நீளம், 18.6 மீ., அகலத்தில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம், 69 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

பணிகள் முடிந்த நிலையில், 2016 நவம்பரில், மேம்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இதனால், 100 அடி சாலை மற்றும் வடபழனி ஆற்காடு சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது.கோடம்பாக்கத்தில் இருந்து, வடபழனி நோக்கி வரும் வாகனங்கள், வடபழனி துரைசாமி சாலை, அசோக் நகர், 2 அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலைக்கு சென்றன. அங்கிருந்து, கே.கே.நகர், போரூர் செல்லும் வாகனங்கள், பி.டி.ராஜன் சாலை வழியாகவும், வடபழனி செல்லும் வாகனங்கள், 100 அடி சாலை வழியாகவும் சென்றன. இதனால், 100 அடி சாலை, பி.டி.ராஜன் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.

இதையடுத்து, ஒருவழிப் பாதையாக இருந்த கோடம்பாக்கம் -- வடபழனி ஆற்காடு சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
ஆமை வேகம்

அதில், இருசக்கர வாகனம், கார் மற்றும் ஆட்டோக்கள் போன்ற, இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கனரக வாகனங்கள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட துரைசாமி சாலை வழியாக செல்கின்றன.ஒருவழிப் பாதையாக இருந்த வடபழனி ஆற்காடு சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டதால், போரூரில் இருந்து வரும் வாகனங்கள், வடபழனி, ஏ.வி.எம்., ஸ்டுடியோ அருகில் இருந்து, வடபழனி காவல் நிலையம் வரை, வாகனங்கள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய துாரத்திற்கு, அரை மணி நேரம் ஆகிறது. 'பீக் அவர்' போல் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகருகின்றன. இதனால், அலுவலகம் செல்வோர், குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.

ஆக்கிரமிப்பை அகற்றும் எண்ணமில்லை

வடபழனியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம், கோவில் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் தான். அவற்றை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகளிடம், பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், போக்குவரத்தை மாற்ற, போலீசார் முடிவெடுத்தனர். இதையடுத்து, கோயம்பேட்டில் இருந்து அசோக் பில்லர் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும், 100 அடி சாலை, வடபழனி மேம்பாலத்தின் மேலே சென்று, தெற்கு சிவன் கோவில் தெரு அருகில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு முன் நின்று செல்லும்.அசோக் பில்லரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும், தெற்கு சிவன் கோவில் தெரு முன் நின்றுவிட்டு, மேம்பாலம் வழியாக கோயம்பேடுக்கு செல்லும்.இதனால், கோயம்பேடு செல்லும் பயணிகள், தெற்கு சிவன் கோவில் தெரு முன் ஏற்படுத்தப்பட்டுள்ள, புதிய பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை, இன்றிலிருந்து, தற்காலிகமாக அமலுக்கு வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றாமல், போக்குவரத்தை மாற்றுவது சரியான நடவடிக்கையா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடபழனி முருகன் கோவில் எதிரே, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது, பேருந்துகள் மேம்பாலத்தை பயன்படுத்த செய்யும் வகையில், பேருந்து நிறுத்தம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என, எதிர்பார்க்கிறோம்.வடபழனி போக்குவரத்து ஆய்வாளர்
தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்! : மருத்துவ படிப்பு விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி

பதிவு செய்த நாள் 02 மே
2017

23:39 சென்னை: முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு, தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளிடம் இருந்து, 50 சதவீத இடங்களை பெற்று, 'நீட்' தேர்வு அடிப்படையில் நிரப்பும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பாட்டை கண்டித்த உயர் நீதிமன்றம், தலா, ஒரு கோடி ரூபாய் வழக்கு செலவு தொகையும் விதித்தது. முதுகலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த டாக்டர்கள், 20 பேர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியுள்ளதாவது:

தனியார் மருத்துவக் கல்லுாரிகளிடம் இருந்து, முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், 50 சதவீத இடங்களை அரசு பெற்று, நீட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களை சேர்க்க வேண்டும்; அதுவரை, 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் நிரப்ப, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டது.

ரத்தாகவில்லை : மனுக்களை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள், ஆர்.என்.அமர்நாத், ஜி.சங்கரன் ஆஜராகினர். பின், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கும் இடையேயான, 50 : 50 இட பங்கீடானது, முதுகலை மருத்துவக் கல்விக்கான விதிமுறைகளின்படி உள்ளது. இந்த முறையை, எந்த நீதிமன்றமும் ரத்து செய்யவில்லை. இந்த இட பங்கீடு தொடர்பான விதிமுறைகளை எதிர்த்து, இதுவரை வழக்கு தொடரப்படவில்லை. எனவே, மாநில அரசுக்கு, 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் அளிக்க வேண்டும்.

கவனிக்கவில்லை : நிகர்நிலை பல்கலைகள், தங்களுக்கென தனிப்பட்ட அந்தஸ்து கோர முடியாது; அவைகளுக்கும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் பொருந்தும். அதில், இடங்கள் பகிர்வு தொடர்பான விதிமுறைகளும் அடங்கும். முதுகலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் வகுக்கப்பட்டும், அவை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை, இந்திய மருத்துவ கவுன்சில் கவனிக்க தவறிவிட்டது. தனியார் மருத்துவக் கல்லுாரிகள் ஆதாயம் பெற, அவைகளிடம் இருந்து, 50 சதவீத இடங்களை பெற, மாநில அரசு தவறிவிட்டது.

மாநில அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கூட்டு சேர்ந்து, இடங்கள் பகிர்வு முறையை, தனியார் கல்லுாரிகள் பின்பற்றவில்லை. 50 சதவீத இடங்களை, அரசுக்கு அளிக்காததன் மூலம், தனியார் கல்லுாரிகள் ஆதாயம் அடைந்திருக்க வேண்டும். மாநில ஒதுக்கீடான, 50 சதவீத இடங்களை சேர்க்காமல், பொது கவுன்சிலிங்குக்காக, நிகர்நிலை பல்கலைகளுக்கு என, தனி விளக்க குறிப்பேட்டை, மாநில அரசு வெளியிட்டது, மோசடியான செயல் மட்டுமல்ல, சட்ட விரோதமானது; பொதுநலனுக்கு எதிரானது. எனவே, கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

l சிறுபான்மை கல்லுாரிகள் தவிர்த்து, தனியார் கல்லுாரிகளிடம் இருந்து, முதுகலை மருத்துவப் படிப்புக்கான ஒவ்வொரு பிரிவிலும், 50 சதவீத இடங்களை, தமிழக அரசு பெற வேண்டும். 'நீட்' தேர்வின் தகுதி பட்டியல் அடிப்படையில், மத்திய கவுன்சிலிங் மூலம், அந்த இடங்களை நிரப்ப வேண்டும்

l நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, 50 சதவீத இடங்களை, அரசின் அறிவிப்பாணை மூலம் கொண்டு வர வேண்டும்

l சிறுபான்மை கல்லுாரிகள், தாங்களாக முன்வராமல், அரசுக்கு, 50 சதவீத இடங்களை வழங்க தேவையில்லை

l சிறுபான்மை நிறுவனங்கள் தவிர்த்து, தனியார் கல்லுாரிகளில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான, 15 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பது செல்லாது; அது, ரத்து செய்யப்படுகிறது. இந்த இடங்களை, மாநில அரசு நடத்தும் மத்திய கவுன்சிலிங்கில் சேர்க்க வேண்டும்
l நிகர்நிலை பல்கலைகளில், முதுகலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளுக்கான கவுன்சிலிங்குக்கு, 2017 - 18ம் ஆண்டுக்கான, மாநில அரசின் விளக்க குறிப்பேடு, ரத்து செய்யப்படுகிறது. இதில், மாநில அரசுக்கான, 50 சதவீத இடங்கள் இடம் பெறாததால், ரத்து செய்யப்படுகிறது.

கவுன்சிலிங் நடத்துவது மாநில அரசு என்பதால், இணையதளத்தில் கீழ்கண்ட விபரங்களை வெளியிட வேண்டும்.

l ஒவ்வொரு கல்லுாரி, பல்கலையில் உள்ள இடங்கள், பிரிவு வாரியாக இடம் பெற வேண்டும்

l நிகர்நிலை பல்கலை உள்ளிட்ட, தனியார் கல்லுாரிகளின் கட்டண விபரங்கள்
l கவுன்சிலிங் போது வராத, மாணவர்களின் பட்டியல்

l அரசு, தனியார், நிகர்நிலை பல்கலையில் சேராத மாணவர்களின் பட்டியல்
l வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் குறித்த விபரங்கள்

l அடுத்த ஆண்டு முதல், எடுக்கப்பட்ட முடிவுகள், நடைமுறைகள் அனைத்தையும், முன்கூட்டியே மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கீழடிக்கு ரூ.1 கோடி! : நீதிபதி கிருபாகரன் உத்தரவில் மேலும் கூறியதாவது: மற்ற மாநிலங்கள் எல்லாம், 50 சதவீத இடங்களை பெற்றிருக்கும் போது, தமிழக அரசு வேண்டுமென்றே, 50 சதவீத இடங்களை கேட்டு பெறவில்லை; இது, கண்டிக்கத்தக்கது. தகுதி வாய்ந்த மாணவர்கள், இதனால்
பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே, தமிழக அரசுக்கு, வழக்கு செலவு தொகையாக, ஒரு கோடி ரூபாய் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் அகழாய்வுக்கு பயன்படுத்த வேண்டும்.பொது நலன் பாதிக்கும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடு இருந்ததால், அதற்கும், ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மையத்துக்கு வழங்க வேண்டும்.

சட்ட விதிகள் மீறப்படுவதை தடுத்து, பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளுக்காக, இந்த வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. அதிகாரிகளின் அஜாக்கிரதையால், தகுதி படைத்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்; அவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
விபத்தில் சிக்கிய சரக்கு வாகனம்: திராட்சைகளை அள்ளிய மக்கள்

பதிவு செய்த நாள் 02 மே
2017
23:54



ஓசூர்: சூளகிரி அருகே, விபத்தில் சிக்கிய சரக்கு வாகனத்தில் இருந்து, கீழே கொட்டிய பச்சை திராட்சைகளை, பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாமணி, 45, டிரைவர். இவர், நேற்று மதியம், ஓசூரில் இருந்து, பச்சை திராட்சை லோடு ஏற்றி, கிருஷ்ணகிரிக்கு, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தில் கிளம்பினார்; 35 வயது கிளீனர் உடன் வந்தார்.
சூளகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில், மதியம், 2:30 மணிக்கு, பின்னால் வந்த ஈச்சர் லாரி, டாடா ஏஸ் மீது திடீரென மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் உருண்டுவிபத்துக்குள்ளானது. டாடா ஏஸ் வாகனத்தில் இருந்த பச்சை திராட்சைகள், சாலையோரம் சிதறின. இருசக்கர வாகனம் மற்றும் லாரிகளில் சென்றவர்கள் மட்டு மின்றி, நடந்து சென்ற பலரும், சாலையோரம் கொட்டி கிடந்த பச்சை திராட்சைகளை அள்ளிச் சென்றனர்.

விபத்தில் காயமடைந்த டிரைவர் ராஜாமணி, கிளீனர், சூளகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிளஸ் 2 விடைத்தாளில் 'டவுட்' : 'டம்மி' தேர்வு நடத்தி விசாரணை

பதிவு செய்த நாள் 03 மே
2017

01:09 பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கையெழுத்து மாறுபட்ட மாணவர்களிடம், அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 'டம்மி' தேர்வு நடத்தினர். முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 2 தேர்வில், பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இரு ஆண்டுகளுக்கு முன், தேர்வு நாளில், 'வாட்ஸ் ஆப்'பில், கணித வினாத்தாள் வெளியானது. ௨௦௧௬ல், தனியார் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு, ஆசிரியர்களே தேர்வை எழுதி கொடுத்தது தெரிய வந்தது.

இதனால், இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வை, எந்த முறைகேடுக்கும் இடமின்றி நடத்தி, முடிவை வெளியிட, அரசு உத்தரவிட்டு உள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில், விடைத்தாள் தெரிந்தால், அதை ஆய்வுக்கு அனுப்புமாறு, ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, 500க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் தேர்வுத் துறைக்கு வந்தன. அவற்றை, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர்களையும், பெற்றோரையும் வரவழைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில், கையெழுத்து மாறுபாடு, பேனாவை மாற்றி எழுதியதால் எழுத்துக்களின் நிறம் மாற்றம், எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசம், விடைத்தாளில் அலங்கரிப்பு, ஒரே கேள்வியை இரண்டு முறை எழுதுவது போன்றவை குறித்து விசாரிக்கப்பட்டு உள்ளன. சில கேள்விகளுக்கு பதில் எழுதுமாறு, மாணவர்களுக்கு தனி அறையில், 'டம்மி' தேர்வு நடத்தப்பட்டு உள்ளது.முடிவில், 'தேர்வை நான் தான் எழுதினேன்; எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கவில்லை' என, உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு உள்ளது. வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள, இந்த உறுதிமொழி கடிதம் பெறப்படுவதாக, அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -
டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பதிவு செய்த நாள் 02 மே
2017

00:32 சென்னை, இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால், டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் எழுந்துள்ளது.

முதுகலை மருத்துவ படிப்பில், 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, அரசு டாக்டர்கள், நடத்தி வரும் போராட்டம், நேற்று, 13வது நாளாக நீடித்தது. இதனால், நோயாளிகள் பரிதவித்து வருகின்றனர். 'டாக்டர்களின் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்' என, மக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை கால அமர்வில், இட ஒதுக்கீடுக்கான மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்கு வருகிறது. 'நீதிமன்ற உத்தரவை பொறுத்தே போராட்டத்தை தொடர்வதா, கைவிடுவதா என, முடிவு செய்வோம்' என, டாக்டர்கள்
கூறுகின்றனர்.

NEWS TODAY 04.06.2026