Saturday, July 15, 2017

பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத தெருக்கள்: மயிலை மக்கள்நல சங்கத்தின் சாதனை! க.சே.ரமணி பிரபா தேவி


குப்பைகளை சுத்தப்படுத்தும் ஊழியர். | பச்சை வண்ண குப்பைத் தொட்டி.
படங்கள்: எல்.சீனிவாசன்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மயிலை மக்களால் தொடங்கப்பட்டது மயிலாப்பூர் மக்கள் நலச் சங்கம். இச்சங்கம் பத்தோடு பதினொன்றாக நின்றுவிடாமல் ஏராளமான முன்னெடுப்புகளை நிகழ்த்தி வருகிறது. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார் அதன் செயலாளர் விஸ்வநாதன்.

”நாங்கள் தன்னார்வலர்களுடன் மட்டும் பணிபுரியாமல், குப்பைகள் சுத்திகரிப்பு, மின்சார வாரியம், மெட்ரோ உள்ளிட்ட அரசு இயந்திரங்களோடும் இணைந்து செயல்படுகிறோம்.

ஆண்டுக்கு சில முறைகள் மக்களுக்கான மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். வீட்டில் செடிகள் வளர்க்க நினைப்பவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், சில மாதங்களுக்கு முன்னர் சுமார் 9,000 மக்களுக்கு மருத்துவ குணம் கொண்ட நொச்சிச் செடிகள் அளிக்கப்பட்டன. இதற்காக மரக்கன்றுகளை மாநகராட்சியே வழங்கிவிடுகிறது.

மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜன் தொகுதிக்கான அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். தேர்தலுக்கு முன்னும், பின்னும் மக்களோடு ஒன்றிணைந்து செயல்படுபவர் அவர்.

'க்ளீன் மயிலை' என்னும் பெயரில் ஒரு வாட்ஸ் அப் குழுவை நிர்வகிக்கிறோம். அதில் எம்எல்ஏ நடராஜன், மாநகராட்சி ஆணையர், உதவி பொறியாளர், கண்காணிப்பாளர், நிர்வாகப் பொறியாளர், கள அலுவலர் ஆகிய அலுவலர்கள், பொதுமக்கள் என 80-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

அதில் தினசரி நிகழ்வுகள் பகிர்ந்துகொள்ளப்படும். குப்பை கொட்டிக் கிடப்பது, நீர் கசிவது, கழிவுகள் தேங்கி நிற்பது உள்ளிட்ட தகவல்கள் புகைப்படங்களுடன் பகிரப்படுவதால், பிரச்சினைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பண்டிகை தினங்களின்போது கூட்டம் அலைமோதும். பிரதோஷம் உள்ளிட்ட தினங்களின்போது தெருக்களில் நடக்கக் கூட இடம் இருக்காது. வழக்கமான நாட்களிலும் குறுகலான தெருக்களால் கூட்ட நெரிசல் இருக்கும். இதனால் பொதுமக்களும், பள்ளிக் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

இதனால் வீதிகளை காலை 9- 12 வரையும், மாலை 5- 8 வரையும் ஒரு வழிப்பாதையாக மாற்றியுள்ளோம். இதனால் மயிலாப்பூர் தெருக்களில் போக்குவரத்து சீராகியுள்ளது.

தற்போது கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து எந்தக் குப்பையும் வெளியே செல்வதில்லை. அங்கு பிளாஸ்டிக் பயன்பாடு முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. பூக்கள், கழிவுகள் ஆகியவை உரமாக்கப்படுகின்றன. மாடுகளின் சாணம் இயற்கை எரிவாயுவாக மாற்றப்பட்டு, கோயிலின் சமையல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

குப்பைகளைப் போட மாடவீதிகளில் மூன்று வகையான குப்பைத் தொட்டிகளை வைத்திருக்கிறோம். மட்கும் குப்பைகளை பச்சை நிறத் தொட்டிகளில் போட அறிவுறுத்துகிறோம். மறுசுழற்சி செய்ய முடியும் குப்பைக்கு நீல வண்ணமும், மருத்துவக் கழிவுகள், மெல்லிய பிளாஸ்டி உள்ளிட்ட மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுகளுக்கு சிவப்பு நிறக் குப்பைத் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட முடியாதவர்களின் வீட்டுக்குச் சென்று நேரடியாகவும் குப்பைகளைச் சேகரிக்கிறோம். 'என் குப்பை என் பொறுப்பு' என்ற பெயரில் ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதன்மூலம் காய்கறிக் கழிவுகள், டீத்தூள் உள்ளிட்ட இயற்கைக் குப்பைகளை வீட்டுத் தொட்டியில் போட்டுவைக்கலாம். அது 6- 8 வாரங்களில் முழுமையான இயற்கை உரமாகி விடும். இதனால் மயிலாப்பூர் வீதிகள் 'பிளாஸ்டிக் ஃப்ரீ' வீதிகளாகக் காட்சி அளிக்கின்றன.

இயற்கையோடு இயைந்து வாழும் நோக்கத்தில், தேனீ வளர்ப்புக் கழகத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். தேனீ வளர்க்கும் ஆர்வம் உடையவர்களுக்கு தேனீக்களை வழங்குகிறோம். இப்போது எல்லோரும் இயற்கைப் பொருட்களுக்கு மாறுவதால் தேனீ வளர்ப்பை வெற்றிகரமான தொழிலாகவும் மாற்றலாம்.

சென்னை போன்ற பெரு நகரத்தில், வாடகை வீடுகளில் கழிவு மேலாண்மை, தேனீக்கள், செடிகள் வளர்ப்பு போன்றவை சாத்தியமா என்ற கேள்விக்கு இடம் என்பது ஒரு காரணியே இல்லை. ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் போதும்'' என்கிறார் விஸ்வநாதன்.
காமராஜர்: தனியொரு தலைவர்! வெ. சந்திரமோகன்

ஜூலை 15: காமராஜர் பிறந்தநாள்

நீட் தேர்வு தொடர்பாகக் கல்வியாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இன்றைய சூழலில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று கேட்டேன். “படிச்சு முடிச்சப்புறம்தானே போட்டி? படிக்கப்போறதுக்கு முன்னாடியே எதுக்குப் போட்டின்னேன். நம்ம பசங்க படிக்கிறதுக்கு இத்தனை தடை எதுக்குன்னேன். உடனே டெல்லிக்கு ஃபோனைப் போடு” என்று சொல்லியிருப்பார் என்றார் அவர். மக்களுக்குப் பயன்படத்தான் சட்டம்; சட்டத்துக்காக மக்கள் அல்ல என்ற கொள்கையுடன் இயங்கிய காமராஜர் நிச்சயம் அதைத்தான் செய்திருப்பார்.

நேருவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தித் தமிழகத்துக்கு வளம் சேர்த்தது காமராஜரின் சாதனைகளில் ஒன்று. நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்க நிறுவனம் தொடங்கப்பட்டதில் அவரது பங்கும், அதற்கு மத்திய அரசுக்கு அவர் கொடுத்த அழுத்தமும் இன்றைய தலைவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திப் பிரதமர் நேருவைச் சம்மதிக்கச் செய்தார் காமராஜர்.

இன்றைக்கு உத்தர பிரதேசம் தொடங்கிப் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் ‘20 மணி நேரம் மின்சாரம்’ போன்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன. ஆனால், தமிழகத்தில் 1960-களிலேயே நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் மின்சார வசதி பரவலாக வந்துவிட்டது. கிராமப்புறங்களை மின்மயமாக்குவதில் அவர் காட்டிய அக்கறையின் வெற்றி அது. அதேபோல் உட்கட்டமைப்பு, தொழில் மேம்பாடு என்று ஒரு மாநில வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை விஷயங்களிலும் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார்.

நம் மண்ணை மட்டுமல்ல, வேர்களையும் நன்கு புரிந்துகொண்டவர் அவர். அதனால்தான், அதிகாரிகள் தரும் அறிக்கைகளை மட்டும் நம்பியிருக்காமல் கிராமப்புறப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை நடத்தினார். ஒரு வளர்ச்சித் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்ற நிலையிலும், அதற்காகக் காத்திருக்காமல் செயலில் இறங்குவதுதான் அவரது பாணி. “டெல்லியிடம் நான் பேசிக்கொள்வேன்’ என்று அதிகாரிகளுக்கு நம்பிக்கை கொடுப்பார். நலத்திட்டமோ, நிவாரண உதவிகளோ சிவப்பு நாடா நடைமுறைச் சிக்கல்களால் தாமதம் ஆவதை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.

கிண்டி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, மணிமுத்தாறு திட்டம், கீழ்பவானி திட்டம், மேட்டுர் கால்வாய்த் திட்டம், அமராவதி திட்டம், ஆரணியாறு திட்டம், வைகை திட்டம், புதிய கட்டளைத் திட்டம் என்று அவரது ஆட்சியின் சாதனைகளின் பட்டியல் மிக நீண்டது. கல்வி விஷயத்தில் அவர் தனிப்பட்ட முறையில் காட்டிய அக்கறை கடந்த சில தலைமுறைகளின் எதிர்காலத்தையே மாற்றியமைத்தது.

கல்வித் துறை இயக்குநராகப் பணியாற்றி பல திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய நெ.து. சுந்தரவடிவேலுவையும் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியத்தையும் ஓராண்டுக்கு அனுப்பிவைக்குமாறு மத்திய அரசே கேட்டுக்கொள்ளும் அளவுக்கு அந்தத் துறையின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார் காமராஜர். சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவருவதில் அவர் காட்டிய முனைப்பின் பின்னால் எவ்வளவு கருணை இருந்திருக்கும்? அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் சூழ்ந்த பரபரப்பான வாழ்க்கையில், அவரது மனம் ஏழைகளின் மீதே அக்கறை கொண்டிருந்தது.

கல்வி வளர்ச்சி ஏற்பட்டால் சாதி வித்தியாசம் தன்னாலேயே அழிந்துவிடும் என்று நம்பியவர் அவர். இன்றைக்கு தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான உறவில் ஒரு படிநிலை தென்படுவதைப் பார்க்க முடியும். நேரு தொடங்கி இந்திரா காந்தி வரை காங்கிரஸ் தலைவர்களுடனான காமராஜரின் அணுகுமுறை இன்றைய தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கும், பெருமதிப்பும் வேறு தலைவர்களுக்கு இருந்ததில்லை. “பள்ளி மாணவராக இருந்த காலத்தில் அவருக்காக வாக்கு சேகரிக்கச் சென்றிருக்கிறேன். ‘எங்க அப்புச்சிக்கு ஓட்டு போட மாட்டோமா’ என்று கிராமத்து மக்கள் எங்களை வாஞ்சையுடன் வரவேற்பார்கள்” என்று பேராசிரியர் தங்க. ஜெயராமன் குறிப்பிடுவார்.

“பெருந்தலைவர் எனும் பட்டம் அத்தனை பொருத்தமானது அவருக்கு. சத்தியமூர்த்தியிடம் அரசியல் பயின்றவர். கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர். அந்த அடிப்படையில் அவர் தேர்வுசெய்யும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை யாரும் சோடைபோனதில்லை” என்கிறார் அவர்.

“ஒரு விழாவுக்காக அவரை அழைக்கச் சென்றிருந்தோம். அப்போது அவரது எளிமையை நேரில் கண்டேன். சில வேஷ்டி, சட்டைகள். நிறைய புத்தகங்கள் அவரது அறையில் இருந்தன. பிரதமர் இந்திரா காந்தி செலாவணி மாற்று மதிப்புக் குறைப்பு நடவடிக்கை எடுத்த சமயம் அது. அதுதொடர்பாக எங்களிடம் ஆழமாக விவாதித்தபோது அவரது பொருளாதார அறிவைக் கண்டு வியந்துநின்றோம்” என்றும் தங்க. ஜெயராமன் நினைவுகூர்கிறார்.

1975-ல் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி கொண்டுவந்தது அவருக்கு மிகுந்த மனஉளைச்சலைக் கொடுத்தது. பல்வேறு தலைவர்களுடன் இணைந்து அதை எதிர்ப்பதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார். எனினும் அவரது மறைவு அதைச் சாத்தியமில்லாமல் செய்துவிட்டது. அவர் இன்னும் சில காலம் இருந்திருந்தால் இந்திய அரசியலின் போக்கை நிச்சயம் மாற்றியமைத்திருப்பார். இன்றைய அரசியல் சூழலில் அவர் போன்ற ஒரு தலைவர் நம்மிடையே இல்லாதது நமது துரதிர்ஷ்டம்தான்!

-வெ. சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் சி.எஸ்.ஜெ! வா. ரவிக்குமார்
 


சி.எஸ்.ஜெ. இல்லத்துக்கு வந்திருந்த சிவாஜிகணேசனுடன் சி.எஸ்.ஜெயராமன் சிவகாமசுந்தரி

சி.எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு

‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’, ‘இன்று போய் நாளை வாராய்…’, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’ போன்ற பாடல்களில் இசையின் மேன்மையையும் பாடல்களில் வெளிப்படும் வளமான கற்பனையையும் மீறி வசீகரிக்கவைக்கிறது சி.எஸ்.ஜெயராமனின் குரல்.

தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெ. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன் தான்.

கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் தெலுங்கில் என்.டி.ஆருக்கும் எண்ணற்ற திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை சி.எஸ்.ஜெ. பாடியிருக்கிறார். மிகச் சிறப்பான பாடகர்; இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, சி.எஸ்.ஜெ. டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார். குறிப்பாக கேரம் விளையாட்டுப் போட்டிகளில் சி.எஸ்.ஜெயராமன் இருமுறை தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

இந்த அரிய கலைஞரின் நூற்றாண்டு இது.1917-ம் ஆண்டு தை மாதம் 6-ம் நாள் சி.எஸ்.ஜெயராமன் பிறந்தார். சி.எஸ்.ஜெ. பற்றிப் பல பிரபலங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பை ‘ஓர் அரிய இசைப் பயணம்’ என்னும் நூலாக சி.எஸ்.ஜெயராமனின் மகள் சிவகாமசுந்தரி சமீபத்தில் வெளியிட்டார். தந்தையின் நினைவுகள் குறித்தும் பல பிரமுகர்கள் தந்தையைக் குறித்து அவரிடம் பகிர்ந்துகொண்ட முக்கியமான சம்பவங்களைக் குறித்தும் சிவகாமசுந்தரி நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும்

இசையிலும் தமிழிலும் ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்டவர். திருக்குறளுக்கு இசையமைத்து மேடையில் பாடியிருக்கிறார். மற்ற மொழிப் பாடல்களையும் பாடினால் நிறைய வாய்ப்புகள் வரும் என்ற நிலை இருந்த அந்த நாளிலும், தமிழ் மொழிப் பாடல்களையே மேடையில் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு தேசபக்தி அதிகம். அந்நாளில் ‘வெள்ளையனே வெளியேறு’ பாடலை ஒரு நாடகத்தில் பாடியதற்காக ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்பட்டார். கச்சேரி மேடைகளில் ‘வாழிய செந்தமிழ்’ பாடலைப் பாடித்தான் கச்சேரியை முடிப்பார். ஒரு முறை சிதம்பரத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 6 மணிவரை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

கேரம் டபுள்ஸ்

நாகசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்னம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், தங்கவேலு ஆகியோர் அவளுக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள். எங்களின் வீட்டுக்கு அவர்கள் வந்துவிட்டால் திருவிழா போல்தான் இருக்கும். இசைப் பணியில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தாலும் எங்களிடம் மிகவும் அன்பாக இருப்பார். அதிலும் என்னைத்தான் அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிச் செல்வார். இசையைப் போன்றே அப்பாவுக்கு விளையாட்டிலும் அதிக ஆர்வம் இருந்தது. கேரம்போர்டு விளையாட்டில் சாம்பியனாகவே இருந்தார்.

ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்த கலைவாணர், மதுரம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கேரம்போர்டில் டபுள்ஸ் ஆடினர். கலைவாணரும் மதுரமும் ஒரு செட். எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அப்பாவும் ஒரு செட். அப்பாவிடம் ஸ்டிரைக்கர் வந்தால் அடுத்து இருப்பவருக்கே வாய்ப்பு இருக்காதாம். அவரின் ஆட்ட நேர்த்தியைப் பார்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமி “என்ன மாயம்னா இது” என்று பாராட்டினாராம்.

அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்படித்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர் அப்பாதான். 8 கார்கள், பல ஏக்கரில் வீடு, தோட்டம் என இருந்தாலும், அவருக்கு ஏழை - பணக்காரன் வித்தியாசம் எல்லாம் இருந்ததில்லை. மிகப் பெரிய பிரபலமாக இருந்த அவர், தகரக் கட்டிலில் படித்துத் தூங்கிய சம்பவங்களும் உண்டு.



யார் இந்த பிரபலம்?

1982-ம் ஆண்டு. மாதம் ரூபாய் 500 மட்டுமே சம்பாதிக்கும் ஓர் இளைஞர். இதில் அறை வாடகைக்கு ரூபாய் 150 போய்விடும். சைதாப்பேட்டை, சேசாஷல முதலித் தெருவில் இருந்த மெட்ராஸ் பில்டிங்கின் அறை எண் 22-ல்தான் அந்த இளைஞர் தங்கியிருந்தார்.

ஒருநாள் பிற்பகல் 3 மணி அளவில் அந்த இளைஞரின் லாட்ஜுக்கு எதிரில் சிவப்புச் சுழல் விளக்கு பொருத்திய வெள்ளை நிற அம்பாசிடர் காரிலிருந்து பட்டு வேட்டி, பட்டு முழுக்கை சட்டை அணிந்த ஒருவர் வந்து இறங்கினார். அவரைப் பார்த்த அந்த இளைஞருக்கு நிச்சயமாக அவர் ஒரு பிரபலம் என்பது புரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை. காரை விட்டு இறங்கிய அந்தப் பிரமுகர் விறுவிறுவென லாட்ஜுக்கு எதிர்ப்புறத்திலிருந்த வீட்டுக்குள் விரைந்து சென்றார். அந்த இளைஞருக்கு இருப்புக் கொள்ளவில்லை. யாரென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மெதுவாகச் சென்று கார் ஓட்டுநரிடம் விசாரித்தார். தமிழக அரசால் இசைக் கல்லூரிக்கு முதல்வராக அறிவிக்கப்பட்ட பெரிய பாடகர் அவர் என்று சொல்லியிருக்கிறார் கார் ஓட்டுநர்.

தகரக் கட்டிலில் தூக்கம்

அதற்குள் அந்தப் பிரமுகர் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவரிடம் அந்த இளைஞர் ‘நான் உங்களின் ரசிகன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியா என்றபடி அந்த இளைஞரின் தோளில் கைபோட்டபடி, சிறிது நேரம் உரையாடியிருக்கிறார். அதன் பின், “தம்பி உங்க ரூம்ல போய்க் கொஞ்ச நேரம் உட்காரலாமா?’’ என்று கேட்டார். அந்த இளைஞருக்கோ தயக்கம். அவர் தடுமாறுவதற்குள், அந்தப் பிரமுகர் லாட்ஜுக்குள் நுழைந்துவிட்டார். அந்த இளைஞர் அவருடைய அறையைக் காட்ட, அறைக்கு உள்ளே ஒரு தகரக் கட்டில், கிழிந்த பாய், நைந்த தலையணை, அழுக்கேறிய போர்வைதான் இருந்தது. அந்த இளைஞருக்கு என்ன செய்வது என்றே தெரியாத நிலையில், “டீ, காப்பி ஏதாவது குடிக்கிறீங்களா?’’ என்று கேட்டிருக்கிறார்.

“கொஞ்சம் குடிக்கத் தண்ணி இருந்தா போதும் தம்பி’’ என்ற அந்தப் பிரமுகர், அந்த இளைஞர் வெளியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு போவதற்குள் அந்தத் தகரக் கட்டிலிலேயே படுத்து உறங்கிப் போயிருந்தார். அரைமணி நேரத்துக்குப் பின் லேசான சலனத்துடன் சிறு இருமலுடன் எழுந்தார். “கொஞ்சம் அசதியாஇருந்திச்சு தூங்கிட்டேன்’’ என்றபடி, அந்த இளைஞர் எடுத்துவந்த தண்ணீரைக் குடித்துத் தாகம் தணிந்த பின், அந்த இளைஞரிடம், “தம்பி இங்க தூங்கிட்டிருந்த கொஞ்ச நேரத்துல கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சு. ஆட்கள் தொந்தரவு இல்ல. நட்புகளின் நச்சரிப்பு இல்ல. உறவினர்களின் அடாவடித்தனம் இல்ல. அமைதியா இருக்கு. உங்க அறையில கொஞ்ச நேரம் தூங்குனது நிம்மதியா இருந்துச்சு. இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் உங்க அறையில நான் ஓய்வெடுத்துக்கலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

நினைவுகளின் தொகுப்பு

அந்த இளைஞரும் அந்தப் பிரமுகரிடம் “எப்ப வேணாலும் வாங்கய்யா… என் அறைக்குப் பூட்டே கிடையாது. நீங்க வந்து ஓய்வெடுக்கலாம்’’ என்று சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகும் அந்தப் பிரமுகர் நான்கைந்து முறை அந்த இளைஞரின் அறையில் ஓய்வெடுத்திருக்கிறார். சில நேரங்களில் அந்த இளைஞர் இருக்கும் போதும், சில நேரங்களில் அந்த இளைஞர் இல்லாத போதும். அந்தப் பிரமுகர் என்னுடைய அப்பா சி.எஸ்.ஜெயராமன். அந்த இளைஞர் வீ.கே.டி.பாலன்.

அப்பாவின் நூற்றாண்டை ஒட்டி சிலரிடம் பேசியபோது வீ.கே.டி.பாலனைப் போல் பலரும் அப்பாவுடனான விதவிதமான சம்பவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர். என்னுடைய தந்தையின் நினைவுகளைப் பற்றி நான் எழுதுவதைவிடப் பலரின் அனுபவங்களைச் சேகரித்து ஒரு தொகுப்பாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துதான் ‘சிதம்பரம் எஸ். ஜெயராமன்: ஓர் இனிய இசைப் பயணம்’ எனும் நூலை வெளியிட்டேன்.

டெல்லி, மும்பை போன்ற மாநிலங்களில் இருக்கும் அப்பாவின் ரசிகர்கள் பலர் அவர் பாடி வெளிவராத பாடல்கள் சிலவற்றையும் எனக்கு அனுப்பியிருக்கின்றனர். எதிர்காலத்தில் இந்தப் பாடல்களை ஆல்பமாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது என்றார் சிவகாமசுந்தரி.

படங்கள் உதவி: ஞானம்

சிங்கப்பூர் பல்கலைத் தலைவராக இந்திய விஞ்ஞானி தேர்வு



அமெரிக்கவாழ் இந்திய விஞ்ஞானியான
சுப்ரா சுரேஷ்(61) சிங்கப்பூரின் புகழ்பெற்ற நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக நேற்று (ஜூலை,13)தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தலைவர் பெர்டில் ஆண்டர்சன் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கிறார். அதைத் தொடர்ந்து சுப்ரா சுரேஷ் 2018 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் புதிய தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.

சுப்ரா சுரேஷ் கடந்த நான்கு ஆண்டுகளாக பிட்ஸ்பர்க் நகரில் கார்னகி மெல்லன் பல்கலைக்கழத்தின் தலைவராக இருந்து வந்தார்.

பல்கலைக்கழகங்களின் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க, சிங்கப்பூர் மற்றும் சர்வதேச அளவில் அதன் அடுத்த ஜனாதிபதியின் உலகளாவிய தேடலை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதற்கான திட்டமிடல், கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கிய பதவிக்கு திரு. கோ தலைமையிலான எட்டு உறுப்பினர்களைக் கொண்ட தேடல் குழு, பேராசிரியர் சுரேஷைத் தேர்ந்தெடுத்தது. அவருடைய இந்த நியமனம் என்.டி.யு. (நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்) சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் வலுவாக அங்கீகரிக்கப்பட்டது.

சுரேஷ் ஒரு கல்வியாளர், விஞ்ஞானி, ஆலோசகர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர். சிங்கப்பூர் தேசிய அறிவியல், தொழில்நுட்பக் கழகத்திலும் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் சுரேஷ் சிங்கப்பூரின் உயர்கல்வி, ஆய்வு முறைகளை நன்கறிந்தவர். மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நடைமுறைகளையும் அவர் நன்கறிந்திருப்பவர்’ என நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கோ பூன் ஹ்வீ தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுப்ரா சுரேஷ் அவர்களை அமெரிக்க தேசிய அறிவியல் நிறுவனத்தின் தலைவராகத் தேர்ந்தெடுத்தார். இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர் லோவா மாநில பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றினார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிக உயரிய தேசிய மருத்துவக்கல்வி நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். புற்றுநோய், இரத்த நோய்கள் மற்றும் மலேரியா செல்களின் இயக்கமுறைகள் பற்றிய சுப்ரா சுரேஷின் ஆராய்ச்சிக்காகத் தேசிய மருத்துவக் கல்வி நிறுவனம் அவருக்கு இந்த அங்கீகாரத்தை அளித்தது. 19 அமெரிக்க விஞ்ஞானிகளில் இவர் ஒருவர் மட்டுமே, 3 தேசிய கல்வி நிறுவனங்களின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுப்ரா சுரேஷ் அமெரிக்காவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு, இந்திய ஜனாதிபதி பத்மஸ்ரீ விருது வழங்கி அவரைக் கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெல்மெட்டுடன் பணிபுரியும் ஊழியர்கள்!

பீகாரில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட்டுடன் வேலைசெய்யும்

புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒரு வித பதற்றத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர். மிகவும் பழமையான கட்டடமான இது எப்போது வேண்டுமென்றாலும் இடிந்துவிழலாம் என்ற நிலையில் உள்ளது.

மழை நேரங்களில் கட்டடத்தில் இருந்து நீர் ஒழுகுவதாலும் ஊழியர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். இது தொடர்பாக பீகார் மாநில பொதுப்பணித்துறையினரிடம் ஊழியர்கள் தெரிவித்துள்ளது. அலுவலகத்துக்கு புதிய கட்டடம் ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் தங்களை தற்காத்துக்கொள்ளும் எண்ணத்தில் அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்தபடியே பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் அந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கும் தலையில் ஹெல்மெட்டுடனேயே வருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பாக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊழியர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Man held for cheating med college owner of Rs 7.5 crore
Chennai
TIMES NEWS NETWORK 
 


Police have arrested a 48-year-old man from Gujarat for cheating an owner of a private medical college of `7.5 crore by promising to remove the college's name from the Medical Council of India (MCI) blacklist. Yogesh Kumar Gupta, of Ahmedabad, convinced Murugesan, the owner of Ponnaiyah Ramajayam Medical College on ECR that he had clout with senior officials in MCI as well as top politicians at the Centre.

“Gupta had been operating a medical shop in Ahmedabad,“ a police officer said. “When Murugesan met him, Gupta claimed to have spoken to some contacts in the Prime Minister's Office and said he could get MCI to strike the college off its blacklist by speaking to some BJP leaders.“

Gupta struck a deal for `15 crore to restore recognition to the college that MCI had blacklisted in 2014. He demanded 50% un front, which Murugesan paid in five instalments.

Gupta stopped answering Murugesan's calls after this. He even threatened Murugesan, saying he could expose his possession of black money by having his house raided by the income tax department.

Murugesan approached Kancheepuram SP Santhosh Haidmeni and the district crime branch started a probe.
District crime branch sleuths on Thursday arrested Gupta in Ahmedabad with the help of the Gujarat police. They brought him to Chennai on Friday and a court remanded him in jail.


Govt blamed for poor academic standard of state board students
Chennai
TNN


Striking down the Tamil Nadu government's 85%-15% formula for state board and CBSE students respectively for MBBSBDS admissions lock, stock and barrel on Friday , the Madras high court has charged the state government with utter non-application of mind.
Justice K Ravichandrabaabu, describing the June 22 government order (GO) as `totally unreasonable,' said it was the state government which should take the blame for the poor academic standard of state board students.

“I do not think that the inability of the state board students to equip themselves can be a justifiable reason to overlook the meritorious students of other boards to get admission into professional courses.It is not in dispute that the syllabus of NEET was prepared much earlier and made public as early as in the year 2010-11. It is seen that the syllabus is prepared by Medical Council of India and not by CBSE. Therefore, it is for the state government to take all steps to equip the students of state board to compete with students from other boards, by providing all facilities and conducting coaching classes etc. Without doing so meticulously , now the government cannot take shelter under the guise of policy decision and issue the impugned GO, thereby , diluting the merits for admission,“ observed Justice Ravichandrabaabu. He was passing orders on a batch of writ petitions filed by students who had studied Class XII under CBSE board. It was their contention that the state ought not to discriminate between students of state board and the CBSE, especially when the qualifying examination to MBBSBDS admission was common to all. The impugned 85:15 quota denied reasonable opportunity for CBSE students to compete for admission in respect of all the seats. There cannot be reservation, amounting to discrimination, among equals, they argued.

The government said syllabus for the exam was in CBSE pattern and that out of top 300 seats, only 76 would go to students from state board.That is, while 28% seats would go to state board students, 72% would go to CBSE students, it said. Bright state board students would, thus, be denied of the opportunity to study in top government medical colleges.

Rejecting the arguments, Justice Ravichandrabaabu said though NEET was meant to offer a level playing field, the GO tried to give preference to lesser meritorious students of state board. “The state allowed students to take part in NEET.Now, it cannot change game plan after the game has started,“ said the judge. Justice Ravichandrabaabu said, “ What is sought to be done by the impugned GO is nothing but an institutional reservation.“

NEWS TODAY 22.08.2026