Monday, July 17, 2017

பெண் கேட்டு பேனர் வைத்த 9 வாலிபர்கள் கைது

பதிவு செய்த நாள் 17 ஜூலை
2017

02:10 அரூர்: அரூர் அருகே, கோவில் திருவிழாவில், 'வயசு பசங்க நாங்க; பொண்ணு இருந்தா தாங்க' என, பேனர் வைத்த, ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டியில், ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், 11ம் தேதி பேனர் வைத்தனர். இது குறித்து, கீரைப்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், அரூர் போலீசில் புகார் அளித்தார்.

அதில், 'அனுமதி பெறாமல் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இதையடுத்து, பேனர் வைத்த, ஒன்பது வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
71 குழந்தைகளுக்கு இலவச பால் சப்ளை ஓய்வு பெற்ற அதிகாரியின் உயரிய சேவை

பதிவு செய்த நாள் 17 ஜூலை
2017
01:57



சமூகத்தில், நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களில், போட்டி, பொறாமை, ஆசை, வஞ்சகம் என, எத்தனை, எத்தனை முகங்களை பார்க்கிறோம். ஆனால், யாரோ சிலர் தான், சமூகத்திற்கு தங்களை அர்ப்பணித்து வாழ்வாங்கு வாழ்கின்றனர்.

அவர்களில் ஒருவர் தான், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அடுத்த, ராஜாபாளையத்தைச் சேர்ந்த, உள்ளாட்சி நிதி தணிக்கை துறை, இணை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற பாஸ்கர், 60. இவர், நாள்தோறும், 71 குழந்தைகளுக்கு இலவசமாக, நாட்டு மாட்டின் பால் வழங்கி, சேவையாற்றி வருகிறார்.

பாஸ்கர் கூறியதாவது:

இன்றைய குழந்தைகளுக்கு, தரமான நாட்டு மாட்டு பால் வழங்க வேண்டும் என்ற நோக்கில், ஓய்வுக்கு பின், ராஜஸ்தான், குஜராத், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு சென்று, வீரியமுள்ள நாட்டு மாட்டு இனங்களான, கிர், ஷாகிவால், ஓங்கோல், ராத்தி, ரெட் சிந்தி, காங்கேயம், காராம்பசு இனங்களை சேர்ந்த, 50 மாடுகளை வாங்கினேன்.

ராஜாபாளையத்தில், கோசாலை அமைத்து, பராமரித்து வருகிறேன். ஒவ்வொரு மாடும், 75 ஆயிரம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இதில் கிடைக்கும் பாலை, இப்பகுதி குழந்தைகளுக்கு நாள்தோறும், இரு வேளைக்கும், தலா, அரை லிட்டர் வீதம் இலவசமாக கொடுத்து வந்தேன். அருகில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து வந்தேன். ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல், ஒன்றரை ஆண்டுகளில், 71 குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கி வருகிறேன்.

பால் சப்ளை செய்யவும், மாடுகளை பராமரிக்கவும், 10 பணியாளர்களை வைத்துள்ளேன். என் ஓய்வூதியம், என் மனைவி கல்யாணி, 54; தமிழ்நாடு வடிகால் வாரிய உதவி பொறியாளர், மூத்த மகன் தேவா, 30; வங்கி அதிகாரி, இளைய மகன் தாமு, 27; கல்லுாரி பேராசிரியர் என, அனைவரும் நன்றாக சம்பாதிப்பதால், வருமானத்துக்கு குறைவில்லை.

இந்த சமுதாயம், எங்கள் குடும்பத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. எனவே, சமுதாயத்துக்கு எங்களால் முடித்த சேவையாக, பாலை கொடுப்பதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது.வளர்க்க முடியாத, வயதான நாட்டு மாடுகள் இருந்தால், அவற்றை அடிமாட்டுக்கு அனுப்ப வேண்டாம்; நான் நல்ல விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். நாட்டு மாட்டு பால் தொடர்ந்து குடித்து வந்தால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதுபோக, கடலுார் மாவட்டம், வடலுாரில் நாள்தோறும், 100 ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து வருகிறேன். தங்கள் வீட்டு குழந்தைகளுக்கும், இலவசமாக நாட்டு மாட்டு பால் தேவை எனில், 94432 55058 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.வயதானவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், இலவசமாக பால் வழங்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
பிசியோதெரபி டாக்டர்களுக்கும் கவுன்சில் - கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம்

பதிவு செய்த நாள் 17 ஜூலை
2017
00:08

கோவை : பிசியோதெரபி டாக்டர்களுக்கென்று பிரத்யேக கவுன்சில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோவையில் பிசியோதெரபி டாக்டர்கள் நேற்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில், ஏராளமான பிசியோதெரபி டாக்டர்கள் பங்கேற்றனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:

மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனைகளில், பிசியோதெரபி மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டுத்துறையில் மாநில அளவிலான அனைத்து விளையாட்டு அணிகளுக்கும், பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க மத்திய விளைாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாட, ஒரு வீரருக்கு ஒரு டாக்டர் என்ற முறையில் டாக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும்.தமிழகத்தில், 2009ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், பிசியோதெரபி கவுன்சில் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டும், இதுவரை பிசியோதெரபி கவுன்சில் உருவாக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் போலி பிசியோதெரபி மருத்துவ படிப்புகள் அதிகரித்து வருகின்றன. மாவட்டத்துக்கு ஒரு அரசு பிசியோதெரபி கல்லுாரியாவது துவங்கப்பட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில், பிசியோதெரபி டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Sunday, July 16, 2017

அகில இந்திய கவுன்சிலிங் 4,018 பேருக்கு மருத்துவ 'சீட்'

அகில இந்திய கவுன்சிலிங் 4,018 பேருக்கு மருத்துவ 'சீட்': சென்னை:அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 4,018 பேர் இடம் பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில ...
PG Medical Students doing Bond service in Same institution: HC Quashes Government Order 0Court Decision, Editors Pick, Medical EducationJuly 16, 2017 6 A+A- Share this: inShare EmailPrint Hyderabad: The Hyderabad High Court on recently, suspended the GO provision issued by the Andhra Pradesh government stating that PG medical students admitted under the management quota in private medical colleges would have to work for a year in the same institution, under the rural service scheme The divi...

Read more at Medical Dialogues: PG Medical Students doing Bond service in Same institution: HC Quashes Government Order http://education.medicaldialogues.in/medical-students-doing-bond-service-in-same-institution-hc-quashes-government-order/

2 doctors, Telgi acquitted in false medical certificate case

A special court had sentenced them to 7 years imprisonment

In a setback to the Central Bureau of Investigation, the High Court of Karnataka on Tuesday acquitted two former doctors of the State-owned Victoria Hospital, Bengaluru, of the charges of corruption in grant of false medical certificate to Abdul Karim Telgi, kingpin of the multicrore stamp paper racket.
A Division Bench comprising Justice Ravi Malimath and Justice John Michael Cunha passed the order while allowing the appeals filed in 2007 by the two doctors, K.H. Jnanendrappa and K.M. Channakeshava, who had questioned the June 19, 2007 verdict of the special court for CBI cases. Even Telgi himself was acquitted in this case by the High Court which allowed his appeal too.
The Bench said there was no evidence to prove charges of corruption against these two doctors, who were public servants, that they had accepted bribe from Telgi for granting him medical certificate with false reasons to help him to get bail on health grounds.
Sentencing
The special court had sentenced the two doctors and Telgi to seven years imprisonment. While a fine of Rs. 25 lakh was imposed on Telgi, a fine of Rs. 14 lakh each was slapped on the two doctors.
The special court had convicted the accused under the provisions of the Prevention of Corruption Act.

Qualification norms for V-C aspirants ready

The State government has come up with qualifications for V-C aspirants for State universities. The document will be gazetted and provided to the V-C search committees.
While it will not be available in the public domain, officials said if anyone wanted to access it, they would be allowed to look at it. The qualification criteria have given importance to teaching, research and administrative requirements.
In general, a V-C aspirant should have a Ph. D. in the relevant field of the university and must be a professor with a minimum of 10 years’ experience or should have teaching experience of 20 years in a university or college offering PG programmes; or he/she should have been employed in a publicly funded research institution, university or college offering PG.
The qualifying clause includes work experience in a self-financing institution or deemed university.
The aspirant should have at least six years’ administrative experience as a dean or head of department or a post equal to these or higher in a university or PG college or a publicly funded institution.
Aspirants should have published at least five research papers after Ph. D. in UGC-listed journals. They should have also presented at least two papers in international academic or research events. Aspirants should have also conducted at least one such international academic or research event.
In the case of Anna University, the Ph. D. degree could be in engineering, technology or any science discipline relevant to the university. A source said the addition was made to enable science graduates also to apply for the post.
With respect to other State universities, the minor difference is in the publication of papers. Aspirants should have published five papers in UGC-listed journals.
In disciplines with fewer journals, candidates should have authored at least two books. However, books edited by them would not be considered for qualification.
According to sources, the qualification was drafted in consultation with Governor-Chancellor Ch. Vidyasagar Rao.
Also, at present these rules may not apply to the University of Madras, which is governed by an Act drafted in 1923.

NEWS TODAY 22.08.2026