Wednesday, November 22, 2017

Rotten eggs at government school: Headmaster transferred

| Updated: Nov 22, 2017, 06:49 IST
 
Representative Image

CHENNAI: Tiruvallur collector E Sundaravalli ordered the transfer of a panchayat union middle school headmaster, sent a deputy block development officer to vacancy reserve and placed the noon meal centre coordinator under suspension for distributing rotten eggs to the school students on Monday.

Soon after the news broke, education officials rushed to the school to examine the eggs. They found several of them rotten. Tiruttani tahsildar Narasimhan, revenue inspector Vani and VAO Arunachalam visited the school and they submitted a report to the collector. Based on the it, the the district administration ordered the transfer of school HM Sumathi and the deputy BDO Poongkodi to the vacancy reserve. They were asked to report to the district collectorate with immediate effect on Tuesday.
Madras University to sign MoU with NSDL to digitise certificates

Siddharth Prabhakar | TNN | Nov 22, 2017, 06:37 IST



CHENNAI: Students graduating from University of Madras from the current academic year will no longer need to go through a laborious procedure if they have to get their certificate verified by a foreign university or a prospective employer.

The university has accepted a proposal given by a subsidiary of public sector National Securities Depository Ltd (NSDL), which will maintain academic records in a digital depository. This would give educational institutions, students and employers online access or retrieval as well as verification of records.

Moreover, this would also eliminate forgery of certificates and markheets.

The syndicate of University of Madras last week passed the resolution to have an agreement with NSDL. This is part of the National Academic Depository (NAD) scheme of the ministry of human resources development (MHRD) and University Grants Commission (UGC).

Many students of the university apply in foreign universities as well as for jobs in other countries. The prospective employers and the universities write to Madras University for verification of the records. Since the documents are in manual form, it takes many weeks. Same is the case when students lose their certificates and apply for a new one. Lack of manpower is a main reason for this. Some records are in storerooms often frequented by snakes, say professors.

"After the digitisation, students or prospective employers can directly ask NSDL and a digital copy of the record will be sent to them," a university official said.

An MoU with NSDL is likely to be signed very soon and the implementation will start by the end of this current academic year, the official said, adding a decision will also be taken if the older records can be digitised.
தூக்க மாத்திரை சாப்பிட்டு ரோட்டில் பெண்கள் ரகளை

Added : நவ 21, 2017 22:14

சேலம்: சேலத்தைச் சேர்ந்த துரைசாமி மனைவி கவிதா, 22; தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிகிறார். அதே மருத்துவமனையில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிபவர், ராமமூர்த்தி மனைவி சுகுணா, 21. இருவரும், ஒரே அறையில் தங்கி உள்ளனர்.
கடந்த மாதம் கவிதா, தான் தங்கியிருந்த அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.குடும்பத்தினரை அழைத்து, மருத்துவமனை நிர்வாகம் பேச்சு நடத்தி, கவிதா மன்னிப்பு கேட்டதால், மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டது.


இந்நிலையில், நேற்று கவிதா, சுகுணா இருவரும், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில், அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். 


அரை மயக்க நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர்கள், அரிசி பாளையம் நான்கு ரோடு பகுதியில், மது அருந்தியவர்கள் போல், கூச்சலிடுவதும், தள்ளாடுவதுமாக இருந்தனர். பள்ளப்பட்டி போலீசார், பொதுமக்கள் துணையுடன், இரண்டு பெண்களையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

இன்று சென்னை-திருநெல்வேலி சிறப்பு ரயில்

Added : நவ 22, 2017 02:43 |



சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து, திருநெல்வேலிக்கு, சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இன்றும், வரும், 29ம் தேதியும், இரவு, 9:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள், காலை, 10:30க்கு திருநெல்வேலி சென்று அடையும்.

திருநெல்வேலியில் இருந்து, 23 மற்றும், 30ல் மதியம், 1:45க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3:30 மணிக்கு, சென்னை, எழும்பூர் வந்தடையும். விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி வழியாக இயக்கப்படும், இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கி விட்டது.

9 சார் - பதிவாளர்கள் திடீர் இட மாற்றம்

Added : நவ 21, 2017 22:20

சென்னை: தமிழகத்தில், பதிவுத்துறை பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக, பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினர், பல இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில், கிடைத்த விபரங்கள் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம், நாகை, திருவாரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருப்பூர், காரைக்குடி உள்ளிட்ட ஒன்பது அலுவலகங்களில், சார் - பதிவாளர் நிலையில், நிர்வாக பணியில் உள்ள அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் பிறப்பித்தார்.
கட்டாயம்?
சொத்து பரிவர்த்தனைக்கு ஆதார் இணைப்பு...
கறுப்பு பண ஒழிப்பில் அரசு அடுத்த அதிரடி


புதுடில்லி:கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசின், அடுத்த அதிரடி நடவடிக்கை யாக,சொத்து பரிவர்த்தனைஅனைத்துக்கும், ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால், சட்ட விரோதமாக சொத்துகளை வாங்கி குவித்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.




கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்தாண்டு, நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

இதன்பின், நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் வகையில், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் வசூலித்து வந்த பல்வேறு மறைமுக வரிகள் நீக்கப்பட்டு, எளிய வரி விதிப்பு, நடைமுறைக்கு வந்தது.'அரசின் நடவடிக்கை களால், நாட்டின் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி அடையும்' என, உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவைகருத்து தெரிவித்துள்ளன.

மேலும், நாட்டின் பொருளாதார நிலை அடிப்படையில், தர மதிப்பீடு வழங்கும், 'மூடிஸ்' நிறுவனம், சமீபத்தில், இந்தியாவின் தர மதிப்பை உயர்த்தி அறிவித்தது.இந்நிலையில், கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அடுத்த அதிரடிக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் அசையா சொத்து பரிவர்த்தனைகள் அனைத்துக்கும், ஆதார் அடையாள அட்டை எண் கட்டாயமாக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர், ஹர்தீப் புரி, நிருபர்களிடம் கூறியதாவது:
அசையா சொத்து பரிவர்த்தனைகளுக்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்க, மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம், விரைவில் அமல்படுத்தப் படும். ஆதார் எண் கட்டாயமானால், ரியல் எஸ்டேட் துறையில் குவிந்து கிடக்கும் கறுப்புப்பணம் வெளியே வர வாய்ப்பு உண்டாகும்.பினாமிகளின் பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவிப்பது தடுக்கப்படும். ஏற்கனவே,வங்கி கணக்குகளுடன்,

ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப் பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, சொத்து பரிவர்த்தனை களுக்கு ஆதார், கட்டாயம் ஆவது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

பினாமிசொத்து ஒழிப்பில்பிரதமர் தீவிரம்

பினாமி சொத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, பிரதமர் மோடி பல முறை பேசியுள்ளார். பினாமி சொத்துகள் மீதான நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆதார் இணைப்பு இருக்கும் என்பது, அமைச்சர் ஹர்தீப் புரியின் கருத்தில் உறுதியாகி உள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கறுப்பு பண முதலைகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.

மைத்ரேயன் போர்க்கொடியின் பின்னணி என்ன? :
அ.தி.மு.க.,வை அசரடிக்க போகும் அதிரடிகள்


அ.தி.மு.க.,வுக்குள் எழுந்துள்ள கலகக்குரலின் பின்னணியில், இரட்டை இலைச் சின்னம் குறித்த தீர்ப்பு மட்டுமல்லாது, டில்லியில் உருவாகிவரும் கடும் அதிருப்தியும் இருப்பதாக தெரியவந்துள்ளதால், இனி வரும் நாட்களில், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.



அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைய முயற்சிகள் மேற்கொண்டபோது, அதில் தீவிரமாக ஆர்வம் காட்டியது பழனிசாமி தானே தவிர, பன்னீர் அல்ல. உள்ளாட்சித் தேர்தல், முடங்கிய சின்னம் மீட்கப்பட வேண்டிய கட்டாயம் ஆகியவற்றின் காரணமாக, பன்னீர் அணியுடன் இணைவதில், முதல்வர் தரப்பு, அதிக ஆர்வம் காட்டியது.

'பன்னீரும், நானும் இரட்டைக் குழல் துப்பாக்கி' என்கிறார் முதல்வர். ஆனால், துப்பாக்கியின், 'டிரிக்கரில்' யார் கை உள்ளது என்பதே முக்கியம். ஆட்சிக்கு, பழனிசாமி; கட்சிக்கு பன்னீர். இதுதான் உடன்பாடு. ஆட்சியை முழு சுதந்திரத்துடன், பழனிசாமி நடத்துவதைப் போல, கட்சியை பன்னீர் வழிநடத்த வாய்ப்பில்லை.

வாக்குறுதிப்படி, இணைப்புக்கு முன்பே, பன்னீர் அணி சார்பில் ஐந்து பேர், பழனிசாமி அணி சார்பில், ஆறு பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
திங்கள ன்று அணி இணைப்பு. அதற்கு முந்தைய நாள் ஞாயிறு ஆலோசனை. அப்போது, 'வரும் வியாழன்று வழிகாட்டும் குழு' என உத்தர வாதம்அளித்தனர்.

12 வியாழன்கள் ஓடி விட்டனவே தவிர, ஒரு குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.

அணிகள் இணைந்து, மூன்று மாதங்களாகியும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளர், இரு துணை ஒருங்கிணைப்பாளர்கள் என நான்கு பேரும், ஒருமுறைகூட கூடி ஆலோசனை நடத்தவில்லை. ஆட்சி நகர்ந்து கொண்டிருக்கிறதே தவிர, கட்சி பணிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன. இணைப்பால், பழனிசாமி அணிக்கே லாபம்.

தர்மயுத்த அணியில், பன்னீர், பாண்டியராஜனை தவிர, கூட இருந்த தளபதிகளுக்கு, 'தம்படி' பயன் கூட கிடைக்கவில்லை. இதுபற்றி கேட்கும் போதெல்லாம், ' சின்னம்வரட்டும்; சரிசெய்யலாம்' என்று தான், பதில் கிடைத்தது. இங்கு தான் சிக்கல். சின்னம் கிடைத்தாலுமே, மறு நிமிடம் சசி அணி நீதிமன்றத்திற்கு போவது நிச்சயம்.பின், வழக்கு, விசாரணை என நீளும்.அதுவரையில் தர்மயுத்த தளபதிகளின் நிலை, பரிதாபம் தான்.

'நம்மால் நீடிக்கும் இந்த ஆட்சியில், நமக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. 'தனக்கு மட்டும் பதவி போதுமென, பன்னீரும், எம்.எல்.ஏ.,க்களை சரிகட்டினால் மட்டும் போதுமென முதல்வரும் கருதுகின்றனர்' என, குமுறுகின்றனர், தளபதிகள். சின்னம் கிடைத்தாலும் கூட, பழனிசாமி அணிதான் முன்னணியில் நிற்குமே தவிர, தர்மயுத்த தளபதிகள் தள்ளித்தான் நிற்க நேரிடும். அதனால் தான், சில நாட்களில், இரட்டை இலை தீர்ப்பு வரப் போவது தெரிந்ததும், முன்கூட்டியே முஷ்டியை உயர்த்தியுள்ளார், மைத்ரேயன்.

அவர், தன் முகநுால் பக்கத்தில், 'ஓ.பி.எஸ்., - ஈ.பி.எஸ்., அணி இணைந்து, இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று, நான்காவது மாதம் துவங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?' என, கேள்வி எழுப்பியுள்ளார். அவரது கருத்து, கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, மைத்ரேயன் கூறுகையில்,' 'தொண்டர்களின் உள்ளக்குமுறலை, திருக்குறள்

போல் பதிவு செய்துள்ளேன்.அதற்கு, பலர் விளக்க உரை எழுதுவர்,'' என்றார். அவரது கருத்துக்கு, பன்னீர் ஆதரவாளர்களிடம், பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.பிரதமர் மற்றும், பா.ஜ., தலைவர் களிடையே, தனி செல்வாக்குடையவர் மைத்ரேயன். சமீபத்திய வருமான வரித்துறை சோதனை களின் மறைமுக கரங்களில் இவரும் உள்ளார். இவர் மூலம்,இத்தகைய வெடி பற்ற வைத்திருப்பதற்கு பின்னணி உள்ளது.'

இணைந்து, கட்சி கட்ட மைப்பை பலமாக்கி,எதிர்கால கூட்டணிக்கு ஏதுவாக, விரைந்து மாறுங்கள் என, கூறினோம். 'அந்த நம்பிக்கைக்கு விரோதமாக செயல்பட் டால்,அடுத்த லோக்சபா தேர்தலில் எந்த பயனும் கிடைக்கபோவது இல்லை; பூனைக்கு மணி கட்டுங்கள்' என, டில்லி பிறப்பித்த உத்தரவின் வெளிப்பாடே, மைத்ரேயனின் போர்க்கொடி என்கின்றன, அரசியல் வட்டாரங்கள்.

கட்சிக்குள் நீருபூத்த நெருப்பாக தகிக்கும் குமுறல்கள், கவனத்திற்கு வந்துள்ளதால், வீசப்போகும் பெரும் புயலை உணர்த்தும் விதமாக, மைத்ரேயன் மூலம், புயல் எச்சரிக்கை கூண்டை, டில்லி ஏற்றியுள்ளது. கட்சியில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஒருமித்த கருத்துடன், ஒற்றுமை உணர்வோடு, அனைவரும் இணைந்து செயல்படுகிறோம். அனைவரும் ஒன்று சேர்ந்து, அ.தி.மு.க., மற்றும் அரசு என்ற தேரை இழுத்து செல்கிறோம். இதில், கருத்து வேறுபாடுக்கு இடமில்லை.

-ஜெயகுமார், மீன்வளத் துறை அமைச்சர், அ.தி.மு.க.,

மைத்ரேயன் மனதில் நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது. அந்த நிலநடுக்கம், இன்று, 6.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் தொடரும். அங்குள்ள எல்லாரது மனதிலும், இப்படிப்பட்ட செய்தி வரும்.

-சம்பத்,தினகரன் ஆதரவு பேச்சாளர்

NEWS TODAY 06.07.2026