Tuesday, December 5, 2017

மன அழுத்தம் அகல வேண்டும்!

By ஐவி. நாகராஜன்  |   Published on : 04th December 2017 02:11 AM  |

 மாறி வரும் சூழ்நிலையில் பணிச் சுமை என்பது அனைவருக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இதற்குக் காரணம் சக்திக்கு மீறிய வேலைப்பளு, விலைவாசி உயர்வு, கூட்டுக்குடும்பம் இல்லாதது, பணிக்கும் படிப்புக்கும் சம்பந்தம் இல்லாத வேலை, கல்லூரியில் படிக்கும் போதே வேலை, அதிக சம்பளம் என்பதால் இரவில் வேலை பார்ப்பது, தூக்கத்தைத் தொலைப்பது, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டு வேலை பார்ப்பது, நீண்ட நேரம் தொடர்ச்சியான வேலை, குறைந்த சம்பளம், அன்பு காட்டாத சக ஊழியர்கள், பணியில் மோதல், பணியில் தெளிவின்மை, வேலையில் நாட்டமின்மை மற்றும் நிறுவன அமைப்பு அல்லது சவாலற்ற வேலை எனக் காரணங்கள் நீள்கின்றன.

மனதிற்கு பிடிக்காத வேலையை நாளெல்லாம் செய்ய வேண்டியிருப்பதை நினைத்து பெரும்பாலானோர் சலித்துக் கொள்கின்றார்கள். அதனால் வேலைக்குப் போவது என்றாலே அவர்களுக்குக் கசக்கிறது. இதனால் அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்கள்.

இப்போது ஆண்களுக்கு நிகராகக் பெண்களும் கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் பெண்கள் சோர்வடைகின்றனர். இவர்களைத் தவிர வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், காவல்துறையினர், ஐடி நிறுவன ஊழியர் முதல் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமான வருமானம் இல்லாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். 

இவ்வாறு வேலையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றி 2015-இல் எடுக்கப்பட்ட பொதுவான கணிப்பு என்னவென்றால், உலகில் 350 மில்லியன் மக்கள் மனச் சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது. 200 மில்லியன் மக்கள் மனச்சோர்வுடனே வாழ்கின்றனர். நான்கு பேரில் ஒருவருக்கு மன அழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது. 57 சதவீதம் தொழிலாளர்கள் இப்போதைய பணியிடத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 69 சதவீத பணியாளர்கள் தாங்கள் பார்க்கும் பணியால் அழுத்தம் இருப்பதாகக் கருதுகின்றனர். இன்னும் சிலர் இதுபோன்ற பிரச்னையால் அடிக்கடி வேலை இழக்கின்றனர். சிலர் பணியின் போதே மன அழுத்தம் இருப்பதனால் அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருக்கின்றனர். 

மன அழுத்தம் இருந்தால் சாதாரணப் பணிகூடக் கடினமானதாகத் தோன்றும். மேலும், மன அழுத்தம் இருந்தால் உடல் அளவில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக சோர்வு, தசைப் பதற்றம், தலைவலி, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, உடல் படபடப்பு, தூக்கமின்மை, இரத்த அழுத்தம், தசை மற்றும் மூட்டு வலி, உடல் நடுக்கம், செரிமான பிரச்னை, மனதளவில் மனச்சோர்வு, கவலை, தனிமை, அவநம்பிக்கை, அதிகப்படியான கவனக்குறைவு, பயம், உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் எரிச்சல்படுவது, வேலையில் செயல்திறன் குறைதல், தனிப்பட்ட உறவுகளில் சிக்கல், பின்தங்கிய நிலை இப்படி ஒவ்வொரு பணியாளரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.

காலப்போக்கில் இவை அதிகரித்து எளிய வேலை என்றாலும் அமைதியின்மை, அதிகமான அல்லது மிகக் குறைவான தூக்கம், கொழுப்புள்ள திண்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகள் அதிகம் உண்ணுதல், தற்கொலை எண்ணங்கள், மது மற்றும் போதை போன்றவற்றிற்கு அடிமையாதல் உட்பட்ட பல பாதிப்புகளைச் சந்திக்கின்றனர்.
மன அழுத்தம் உள்ள ஒருவர் உங்களுடன் பணி புரிந்தால் அவரை உற்சாகமூட்டும் வகையில் நடந்து கொள்ளுங்கள். அவர் எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பதை நினைவூட்டுங்கள். அவரால் வேலையைச் சரியாகச் செய்ய முடியும் என்பதை சொல்லி ஊக்கப்படுத்துங்கள். அவரை வீழ்த்தும் செயல் எதுவாக இருந்தாலும் அவரால் அதை சமாளிக்க முடியும் என்பதையும், அவரின் திறமைகளை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதையும் அவருக்கு உறுதிபடுத்துங்கள்.
மன அழுத்தம் குறைக்க, நமக்குள்ள பிரச்னையை நமது நலம் விரும்பி, உயிர்த்தோழன் அல்லது தாயிடம் சொல்லி மனதை லேசாக்கிக் கொள்ளலாம். மன உளைச்சல் நம்மை மீறும்போது மூன்று அல்லது ஐந்து முறை ஆழமாக மூச்சு விடுதல் நன்மை பயக்கிறது. படபடப்பான நேரத்தை சிறிது நேரம் மூச்சு விடுவதற்காக நாம் எடுத்துக் கொள்வதால் அந்தக்கால அவகாசம் படபடப்பு குறையவழிவகுக்கும். 

மூளையில் புதைந்துள்ள ஞாபகசக்தி தூண்டப்படுவதால் மனதிற்கு அமைதி தானே வந்துவிடும். வரும் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம் என்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பிரச்னையால் அதிகபட்ச இழப்பு என்ன? நாம் முயற்சித்தால் மாற்றக்கூடிய விஷயமா? எனப் பல கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டு அவற்றிற்கு பதில் சொல்லிக்கொண்டே வாருங்கள்.

உங்களால் முடிந்தவற்றை செய்தாகிவிட்டதா? அதற்குமேல் உங்கள் கையில் எதுவும் இல்லையென்றால் பின் எதற்காக அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?

கவலைப்படுவதால் மட்டும் எந்தப் பிரச்னையும் தீராது என்று நம்மை நாமே
தேற்றிக்கொண்டு மன அழுத்தத்தை சமாளிக்கலாம்.

எப்போது நாளுக்கு நாள் மன அழுத்த பாதிப்பை சமாளிப்பது கடினமாகிறதோ அப்போது நீங்கள் உளவியல் ஆலோசகரை (கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்) அணுக வேண்டும். உங்கள் பாதிப்புகள் எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிந்தபின் உங்களுக்கு உளவியல் நிபுணரை (சைக்யாட்ரிஸ்ட்) அவர் பரிந்துரைப்பார். உளவியல் நிபுணர்கள் மனநோய் சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசகர்கள் மன ஆரோக்கியத்திற்கான சிகிச்சை அளிப்பார்கள்.
உளவியல் ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்களை அணுகுவதில் இன்னமும் கூடப் பலர் தயக்கம் காட்டுகின்றனர். மன நோயாளி என்று சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். அந்த மனத்தடை உடைத்து எறியப்பட வேண்டும். உளவியல் ஆலோசனைகள் பெறுவது என்பதல்ல நோயின் அறிகுறி. ஆலோசனை பெறாமல் இருப்பதுதான் தன்னம்பிக்கையின்மையின், தாழ்வு மனப்பான்மையின் அறிகுறிகள். அதுதான் உண்மையான நோய் என்பதை உணர வேண்டும்.
முதுபெரும் ஹிந்தி நடிகர் சசி கபூர் காலமானார்
By DIN | Published on : 05th December 2017 04:13 AM




முதுபெரும் ஹிந்தி நடிகர் சசி கபூர் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 79.
மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சசி கபூர் திங்கள்கிழமை மாலை 5.20 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை மூத்த நடிகர் ராஜ் கபூரின் மகனும், நடிகருமான ரன்தீர் கபூர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக சிறுநீரக பிரச்னையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக டயாலிசிஸ் சிகிச்சையை அவர் பல ஆண்டுகளாக பெற்று வந்தார்' என்றார்.
சசி கபூரின் உடலுக்கு செவ்வாய்க்கிழமை காலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
ஹிந்தி நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகனாக கடந்த 1938-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் தேதி சசி கபூர் பிறந்தார். கடந்த 1940-ஆம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் சசி கபூர் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படங்களில், "ஆக்' (1948), "ஆவாரா' (1951) ஆகியவை சசி கபூருக்கு புகழைப் பெற்றுத் தந்தன.
இதையடுத்து கடந்த 1950-ஆம் ஆண்டுகளில், துணை இயக்குநராக பல படங்களில் சசி கபூர் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் 1961-ஆம் ஆண்டில், "தர்மபுத்ரா' எனும் படத்தில் கதாநாயகனாக சசி கபூர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் சுமார் 116 திரைப்படங்களில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். அதில் "தீவார்', "கபி கபி', "நமக் ஹலால்', "காலா ஃபாதர்' போன்ற திரைப்படங்கள், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக, ஹிந்தி திரையுலகில் கடந்த 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவற்றில் நாயகனாக அவர் நடித்திருந்தார். இதனால் காதல் சின்னமாகவே அவர் ரசிகர்களால் பார்க்கப்பட்டார்.
அவரது கலையுலக சேவையை பாராட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது அளித்து மத்திய அரசு கௌரவித்தது. இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதும் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி இரங்கல்: ஹிந்தி நடிகர் சசி கபூரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள், சசி கபூர் நடித்த கதாபாத்திரங்கள் பலதலைமுறைகளுக்கும் நினைவு கூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சேலத்தில் முதலில் செல்வது யார்? என்பது தொடர்பாக அரசு–தனியார் பஸ் டிரைவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
முதலில் செல்வது யார்? சேலத்தில் அரசு–தனியார் பஸ் டிரைவர்கள் திடீர் மோதல்
சேலம்,சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சிக்கு அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று கன்னங்குறிச்சிக்கு புறப்பட தயாராக இருந்தது. பஸ்சில் 45–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதேநேரத்தில் தனியார் பஸ் ஒன்றும் கன்னங்குறிச்சி செல்வதற்கு புறப்பட்டது. இதனால் முதலில் யார் செல்வது? என்பது தொடர்பாக இரண்டு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களது வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. இதனால் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி மோதிக்கொண்டனர். பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பழைய பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் உடனடியாக அங்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த தகராறில் தனியார் பஸ் டிரைவர்கள் அருண், நித்திஸ், கண்டக்டர் கோபி ஆகியோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கலெக்டரை வசை பாடிய 'மாஜி' எம்.எல்.ஏ., கைது
Added : டிச 04, 2017

பெரம்பலுார்: அரியலுார் கலெக்டரை ஒருமையில் பேசிய, காங்கிரஸ் முன்னாள், எம்.எல்.ஏ.,வை போலீசார் கைது செய்தனர். அரியலுார் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர், லட்சுமிபிரியா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, காங்கிரஸ் முன்னாள், எம்.எல்.ஏ., நல்லமுத்து, 'மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை' எனக் கூறி, கலெக்டரை ஒருமையில் திட்டினார். கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களை ஒருமையில் பேசியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்த நல்லமுத்துவை கைது செய்யுமாறு, கலெக்டர், லட்சுமிபிரியா, போலீசாருக்கு உத்தரவிட்டார். அரியலுார் போலீசார், நல்லமுத்துவை கைது செய்தனர்.
நல்லமுத்து, பெரம்பலுார் மாவட்டத்தைச் நேர்ந்தவர். இவர், 1984ல், பெரம்பலுார் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வாக இருந்தார். டாக்டரான இவர், தற்போது, அரியலுார் மாவட்டம், திருமானுாரில் கிளினிக் நடத்தி வருகிறார்.
  இருக்கும் போது மரியாதை; இறந்த பின் இல்லையே : ஜெயலலிதா உருவச்சிலை கூவி கூவி விற்பனை
Added : டிச 04, 2017 |

இருக்கும் போது மரியாதை; இறந்த பின் இல்லையே : ஜெயலலிதா உருவச்சிலை கூவி கூவி விற்பனை

திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தில் உருவான, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை, திருவள்ளூர் நகரில், கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உயிருடன் இருந்த போது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் இரும்பு மனிஷியாக திகழ்ந்தார். அவரது கண் அசைவின்றி கட்சி நிர்வாகிகள் முதல், தொண்டர்கள் வரை, எதுவும் செய்து விட முடியாது. தமிழகத்தில், அ.தி.மு.க.,வினர் நடத்தும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், அவரது உருவப் படம் தான் பெரிய அளவில் இடம் பெறும். அந்தளவிற்கு கட்சியையும், நிர்வாகிகளையும் ஆளுமை செய்த அவரது உருவச் சிலை, அவரது மறைவிற்கு பின், யாரும் வாங்க ஆர்வம் காட்டாததால், சிலைகளை வடிவமைத்தவர்கள், இன்று ஊர், ஊராக சென்று, கூவி, கூவி விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லுார், காக்குடூர் கிராமத்தில், சிற்ப சிலை கூடம் உள்ளது. இவர்கள், அம்மாநிலத்தில், என்.டி.ஆர்., ராஜசேகரரெட்டி என, ஆந்திர மாநில பிரபல அரசியல்வாதிகளின் சிலையை வடிவமைத்து உள்ளனர். தமிழகத்தில் பிரபலமாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெ.,வின் சிலையை வடிவமைத்தால், விற்பனையாகும் எனக் கருதியவர்கள், அவரது உருவச் சிலையை, மெழுகு, பைபர், போன்ற பல்வேறு கலவை பொருட்களால் வடிவமைத்தனர். ஆனால், ஒரு சிலை கூட விற்பனையாகவில்லை.


இதையடுத்து, சிலை வடிவமைப்பாளர்கள், ஜெயலலிதா சிலையை ஊர், ஊராக சென்று விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து சிலை வடிவமைப்பாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் மாபெரும் தலைவராக இருந்தவர் என்பதால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்தோம். இது குறித்து, தமிழகத்தில் உள்ள, அ.தி.மு.க., பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், யாரும் எங்களை நாடி சிலை வாங்க வரவில்லை. இதையடுத்து, அவரது சிலையை விற்பனை செய்ய, வாகனங்களில், 60 சிலைகளை கொண்டு வந்துள்ளோம். எங்களிடம், 45 ஆயிரம் இருந்து, 1.35 லட்சம் ரூபாய் வரையிலான சிலைகள் உள்ளன. வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் சிலையை வாங்கினார். அதன் பின், ஒரு சிலை கூட விற்பனையாகவில்லை. தொடர்ந்து, பிற மாவட்டங்களுக்கும் செல்ல உள்ளோம். உயிருடன் இருந்த போது, கடவுள் போல் கொண்டாடப்பட்டவர், இறந்த பின் சீண்டுவாரில்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வங்க கடலில் மிரட்டுது புயல் சின்னம் மீண்டும் தீவிர மழை எப்போது? 

வங்கக் கடலில் வலுப்பெற்று வரும் புயல் சின்னம், நாளை முதல், கடலோர பகுதிகளை நோக்கி நகரத் துவங்கும். அதனால், தமிழகம், ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு, கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



கன்னியாகுமரி முதல் குஜராத் வரை, அரபிக் கடலில் தாண்டவமாடிய, 'ஒக்கி' புயல், இன்று கரையை கடக்க உள்ள நிலையில், வங்கக் கடலில், அந்தமான் அருகில் உருவாகியுள்ள, புதிய புயல் சின்னம், நாளை முதல் நகர்வை துவங்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மேலும் வலுவாகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாளை முதல், தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களை நோக்கி அது நகரும் என, தெரிகிறது. இந்த புயல் சின்னம் நகரும்போது ஏற்படும், கடலின்
மேற்பரப்பு ஈரப்பதம் மற்றும் காற்றுச் சூழலை பொறுத்து, புயலாக மாறும் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடித்து, கன மழையை கொட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் சின்னத்தால், ஒடிசா வரை கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று, அந்தமான் நிகோபார் தீவுகளில் கன மழை இருக்கும் என, வானிலை மையம்தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு, இன்று மழை எச்சரிக்கை விடப்படவில்லை. ஆனால், நாளை முதல் மழை பெய்யலாம் என்பதை, இன்று, சென்னை வானிலை மைய இயக்குனர், பாலச்சந்திரன் அறிவிப்பார்.ஏற்கனவே, ஒக்கி புயல் பாதிப்பால், தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அடுத்து புயல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இது, புயலாக மாறினால், மசூலிப்பட்டினம், விசாகப்பட்டினம் இடையே, கரையைகடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சில நேரங்களில், ஒடிசாவுக்கு திரும்பவும் வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த நாட்களில், தாழ்வு மண்டலத்தின் நகர்வை பொறுத்து, கரை கடக்கும் இடம் முடிவாகும்.

தற்போதைய நிலையில், செயற்கை கோள் ஆய்வு, வானிலை ஆய்வு குறிப்புகள் மற்றும் தோராய வழித்தட கணிப்புகளின் படி, தமிழகம், புயல் ஆபத்திலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.அதனால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளது உறுதியாகியுள்ளது.
- நமது நிருபர் -

Sunday, December 3, 2017

ஆதார் உடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுவிட்டதா.? சரி பார்ப்பது எப்படி.?


ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்.
இந்த ஆதார்அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதியஉணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.மத்திய அரசின் சிறப்பு திட்டமான ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்ட பின்னர், நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தங்களைப் பற்றிய முழுவிபரங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் அனைத்து இடங்களிலும் இப்போது ஆதார் கண்டிப்பாக தேவைப்படுகிறது, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்க்க சில வழிமுறைகள் உள்ளது.முதலில் UIDAI-என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

அதன்பின்பு UIDAI--வலைதளத்தில் வலது பக்கத்தில் 'Verify Email/Mobile Number' -என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.அடுத்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஆதார் எண், மொபைல் எண், மற்றும் பாதுகாப்பு குறியீடு போன்ற தகவல்களை பூர்த்தி செய்யவேண்டும்.

பின்னர் உடனடி ஒருமுறை கடவுசொல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும், அதன்பின் உங்களுக்கு வந்த கடவுசொல்லை அந்தபக்கத்தில் உள்ளிடவும்.அதன்பின்பு மொபைல் எண் எங்கள் பதிவுகளுடன் பொருந்துகிறது என்ற தகவல் உங்களுக்கு கிடைக்கும்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...