Monday, March 5, 2018

Narrow escape for father and son as car catches fire

TIMES NEWS NETWORK  05.03.2018
Chennai: A father-son duo had anarrow escape when their car went up in flames after fatally knocking down a cow near Mamallapuram on Sunday night.

V Sathish, 34, and his sixyear-old son S Pradeesh are residents of Padi. The accident took place when they were returing home after paying a visit to their relative.

They were returning to Chennai from Vittalpuram. When their car reached Pattipulam at 8.15pm, a cow crossed their way. Sathish could not control the speeding car and rammed the cow, killing the bovine on the spot. Soon Sathish noticed smoke emanating from the engine. The fatherson duo got off their vehicle and ran for safety. Soon the car went up in flames. Fire and rescue service personnel were alerted and the fire was brought under control but the vehicle was completely reduced to ashes.

“Luckily they were driving with air conditioner switched on. There were chances of them being suffocated,” said an investigating officer. “These vehicles on ECR tend to speed up thinking that the road is free,” he said. The cow was believed to have come from nearby villages. The cow’s owner has so far not lodged any complaint.

Based on information, Mamallapuram police rushed to the scene and cleared the mangled remains of the vehicle.

Police have registered a case and are investigating.

The car that rammed a cow goes up in flames. The cow died in the accident
Freeze on hiring of profs by univs could be lifted

Recruitment Likely To Start In April

Siddharth.Prabhakar@timesgroup.com

05.03.2018

Chennai : State universities in Tamil Nadu have been given a green signal by the governor-chancellor to begin recruitment for sanctioned teaching posts that have not been filled yet. In all probability, theuniversities will start the recruitment process from April.

The state government had placed an embargo on any kind of recruitment until the redeployment of excess staff in Annamalai University was completed. However, the redeployment is now in its final stages and willbecompletedby Marchend, said officials.

Governor Banwarilal Purohit gave the nod on Saturday at a meeting with vice-chancellors.

The decision has come as a major relief to the universities as they have 30%- 45% vacancies. “The National Assessment and Accreditation Council (NAAC) accreditation takes into account the number of teachers wehave in proportion to the number of students. If the student-teacher ratio is high, our score takes a beating. So, we need to fill vacancies,” said a vice-chancellor, who did not wish to be identified.

At the meeting, the governor had also directed VCs to improve their NAAC score, as only one state university — Alagappa University — has an A+ score.

In a government order on April12 last year, the state government had noted that there were 1,031 excess teaching staff and 4,772 excess non-teaching staff at Annamalai University. Of these around 3,250 have been redeployed and 250 more will be redeployed by the end of March, said a top official.

“This includes 1,000 teaching staff who have been redeployed to universities including University of Madras and Anna University,” said the official.

However, the vice-chancellors have also been asked toconductthe recruitments in a fair manner by the governor. This comes in the backdrop of former Bharathiar University vice-chancellor A Ganapathi being caught red-handed by the Directorate of Vigilance and Anti-Corruption for accepting a bribe of ₹30 lakh from an assistant professor.

Corruption in recruitments has been rampant in TN universities which have also compromised on the quality of professors entering the system, say observers.

கை நீட்டும் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டுங்கள்!

Published : 26 Feb 2018 08:17 IST

ஒரு அரசாங்கத்தின் செயலாளர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்துவது எனும் கலாச்சாரத்தில் அரசியல்வாதிகள் இறங்குவது அடாவடியானது. அதிகாரி களுக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களிடம் இவர்கள் கை எவ்வளவு நீளும்?

சில வாரங்களுக்கு முன் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி உதவியாளர் கார்த்திகேயன் பாண்டியனின் இல்லத்தின் மீது, பாஜகவின் இளைஞர் பிரிவினர் (பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா) தாக்குதல் நடத்தினர். தலைநகர் புவனேஷ்வரில் உள்ள அவரது இல்லத்துக்கு பிப்ரவரி 10 அன்று வந்த சுமார் 30 பி.ஜே.ஒய்.எம். தொண்டர்கள், அங்கிருந்த இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், அவரது வீட்டுக்குள் பசுவின் சாணத்தை எறிந்து, அராஜகத்தில் ஈடுபட்டனர். ‘ஆளும் பிஜு ஜனதா தளக் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்’ என்பதும் ‘முதல்வர்போலச் செயல்படுகிறார்’ என்பதும் பாண்டியன் மீது அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டின் மேலூர் வெள்ளையாம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் முதல்வர் நவீன் பட் நாயக்கின் சொந்த மாவட்டமான கஞ்சத்தில் ஆட்சியராகப் பணிபுரிந்தபோது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி, தேசிய அளவில் விருது பெற்றவர். அவருடைய நேர்மை, நிர்வாகத் திறமையால் கவரப்பட்ட முதல்வர் பட்நாயக், அவரைத் தன்னுடைய தனிச் செயலராக நியமித்தார்.

ஒடிஷா பாஜக தலைவர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் வைஜயந்த் பாண்டா, கடந்த ஓராண்டாகவே பாண்டியனைக் கடுமையாக விமர்சித்துவந்தார். இதன் தொடர்ச்சியாகவே இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவத்தின் தொடர்ச்சியாக முதல்வர் நவீன் பட்நாயக் கைச் சந்தித்த அதிகாரிகள் தங்களுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கேட்டுக்கொண்டனர்.

ஒடிஷா சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் தலைநகர் டெல்லியில் அடுத்த அடாவடி நடந்திருக்கிறது. இங்கே அடாவடியில் ஈடுபட்டிருப் பவர்கள் ஆம்ஆத்மி கட்சியினர். முக்கியப் பிரச்சினை தொடர்பான அவசர ஆலோசனைக்கு வருமாறு முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு வரவழைக்கப்பட்ட டெல்லி தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆஆக சட்ட மன்ற உறுப்பினர்கள் அமானதுல்லாகான், பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் தாக்கியிருக் கின்றனர். தேசிய அளவில் இதுவும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக் கிறது. இரு சம்பவங்களையுமே சம்பந்தப்பட்ட கட்சிகள் கண்டிக்கவில்லை என்பதோடு, சப்பைக் கட்டவும் செய்கின்றன என்பதுதான் மோசத்திலும் மோசம்.

அதிகாரிகள் மீதான தாக்குதல் என்பது ஒருவகையில் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்துக்கும் விடுக்கப்படும் மிரட்டல். ஆபத்தான இந்தப் போக்கு முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களைச் சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பவிடக் கூடாது என்பதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவோ, ஆஆகவோ சில்லறை அமைப்புகள் அல்ல. வெவ்வேறு இடங்களில் ஆட்சியிலும் இருக்கும் அவை தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்!
வரவேற்கும் மனநிலை குறைவு... வசைபாடும் மனநிலைதான் அதிகம்: ஒரு பின்னூட்ட வாசகனின் கவலைகள்

Published : 01 Mar 2018 19:47 IST

பால்நிலவன்

the hindu tamil



மனிதர்கள் உடனான சந்திப்பிலும், புத்தக வாசிப்பிலும் நிலவும் அணுகுமுறை எனக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

நண்பர்கள் சந்திப்பின்போது இன்னொரு நபர் குறித்த கருத்து பெரும்பாலும் விரும்பும்படியாக, மகிழும்படியாக சொல்லப்படுவதே இல்லை. சின்னச் சின்ன விஷயங்களிலும் நாம் விமர்சன விதையைத் தூவி விடுகிறோமே என்ற சந்தேகம் எழுகிறது.

மனிதர்களிடத்தில்தான் இந்தப் பழக்கம் புரையோடிக் கிடக்கிறது என்று நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை இணையம் எனக்கு கற்பிக்கிறது. புத்தக மதிப்புரை, இணையதளக் கட்டுரைகள், செய்திகள் மீதான வாசகர்களின் கருத்துகளிலும் இதே அதிருப்தியும், எதிர்ப்பும் இருந்து வருவதை ஆழமாக கவனிக்க முடிகிறது.

எதிர்மறை கருத்து பேசியே, எழுதியே யாரும் பிரபலமாகத் துடிப்பதில்லை என்பதில் ஓரளவு உண்மையும் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், நாட்டின் எந்த நடப்புச் செய்திக்கும் ஆற்றும் எதிர்வினைகள் சற்று வித்தியாசமாக இருப்பதைக் காண முடிகிறது. அவற்றை ஒரே வகையில் அடக்க முடியவில்லை. ஆனால் பெரும்பாலும் அதிருப்தி மனநிலையின் வெளிப்பாடாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஆக்கபூர்வமான செய்திகள் என்றாலும் ஆக்கபூர்வ வாய்ப்பு நிகழ்த்தமுடியாத எதிர்மறை சிந்தனை உள்ளவர்களை அங்கே கொண்டுவந்து அவர்களை திட்டிதான் கமெண்ட் எழுதப்படுகிறது. குறிப்பிட்ட அந்த செய்தி ஆக்கபூர்வமானது எனும்போது அது எப்படி சாத்தியப்பட்டது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் அல்லது அதை சாத்தியப்படுத்தியவர்களின் மனம்குளிர கருத்து பதிவது மிகவும் குறைவாக உள்ளது.

சார்புகள் அற்ற பொதுவான வாசகர்களும் கணிசமான அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் இவர்கள் மிகவும் குறைவு. பெரும்பாலான வாசகர்கள் பொதுவான தளத்திலிருந்து கருத்துப் பதிபவர்கள் அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

ஏதாவது ஒரு சார்பிலிருந்து அவர்கள் தங்கள் கருத்துகளைப் பதிக்கின்றனர். அது நேரடியாக அவர்கள் விமர்சிக்கத்தகுந்த அமைப்போ இயக்கமோ கட்சியோ மதம் சார்ந்த செய்திகள் இல்லையென்றாலும் கூட எந்தவகையான செய்தியின்கீழும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று அவர்கள் நினைக்கின்றனர். ஒருவகையில் இது தவிர்க்கமுடியாதது.

உதாரணமாக பாஜக இந்தியாவை ஆள்கிறது. அதன் செயல்களை விமர்சிப்பது ஊடகங்களின் தார்மிகக் கடமை என்ற அளவில் வரும் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாத மனநிலையைக் காண முடிகிறது. அதேநேரம் மோடி, ராகுல் காந்தியோ கூட்டத்தில் பேசும் செய்தியை வெளியிட்டால் அவர்கள் பேசும் பிரச்சினைகளுக்கு மாற்றுக் கருத்துகள் முன்வைப்பதைக் காட்டிலும் உடனே தனிமனித தாக்குதலில் இறங்க கீபோர்டில் கைகள் பரபரப்பதைக் காண முடிகிறது.

நாடு முழுவதும் நடந்துவரும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் செய்தியாக வரும்போது இதை வெளியிடுவதில் 'உங்கள் நோக்கம் புரிகிறது' என்று கருத்து போடுவது... போன்ற தான் சார்ந்த இயக்க விசுவாசம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதுவே வசைபாடலாக மாறும்போது அந்த விசுவாசிகள் எல்லைமீறிவிடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

அதேபோல பாலேஸ்வரம் முதியோர் விடுதியில் நடப்பவை பற்றி வெளிவரும் செய்திகள் க்ரைம் வகை சேர்ந்தவை. அனைத்து ஊடகங்களும் இதை வெளியிடுவது கடமை. ஆனால் ஏதோ உள்நோக்கத்தோடு இச்செய்தியை வெளியிட்டதாகவே சில வாசகர்கள் விமர்சிப்பதைப் பார்க்க முடிகிறது.

நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை என்ற செய்திக்கு குடித்துவிட்டு இறந்தவருக்கு எதற்கு மரியாதை என்கிற ரீதியான வாசகர் கருத்துகளையும் காணமுடிகிறது. மாறிவரும் உலகத்தில் கலைவெளிப்பாடு என்ற வகையில் சினிமாவுக்கான இடம் மிகப் பெரியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீவித்யா மறைவுக்கு கேரள அரசு மரியாதை செய்தது. இத்தனைக்கும் அது ஒரு இடதுசாரி அரசு.

இறந்தவர்மீது தனிமனித தாக்குதல் நிகழ்த்துவது எவ்வகையிலும் சரியானது அல்ல. சிவாஜி கணேசனை அமெரிக்காவில் மார்லன் பிராண்டோ சந்தித்து பாராட்டிய நிகழ்ச்சிகள் எத்தனை பேருக்குத் தெரியும்- அன்றைய கெய்ரோ அதிபர் நாசர் சிவாஜியின் 'சிவந்தமண்; படம் பார்த்து விட்டு நேருவிடம் சிவாஜியை எங்கள் நாட்டுக்கு அனுப்புங்கள், அவரை நாங்கள் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்தன.

ஆனால், 'சிவாஜியை எனக்கு பிடிக்காது அவரை யார் பாராட்டினாலும் எனக்கு அவசியமில்லை' என்ற மனநிலை இருந்தால் எதுவும் சொல்வதற்கில்லை.

சிரியா பற்றி எழுதினால் ஏன் இலங்கை பற்றி பேசவில்லை என்று கேட்பது. சினிமா செய்திகள் கொடுத்தால் ஏன் விவசாயத்தைப் பற்றி எழுதவில்லை என்று கேட்பதற்கென்று சிலர் இருக்கிறார்கள். சரி விவசாயம் கட்டுரைகளின் இவர்கள் எதிர்வினையைத் தேடிப்பார்த்தால் அதுவுமில்லை.

கிரிக்கெட் பற்றி எழுதினால் ஏன் டென்னிஸ் பற்றி எழுதவில்ல என்று கேட்பது. டென்னிஸ் பற்றி செய்தி வரும்போது இதுபோன்ற வாசகர் அதற்கு முக்கியம் கொடுத்தால் டென்னிஸ் பற்றி செய்திகள் அதிகம் வரத்தானே செய்யும்?

தேசக்கட்டுமானத்தை உலகிற்கு பறைசாற்றும் கிரிக்கெட் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் வேண்டியதுதானே? பொங்கல்விழாக்களின்போது விளையாடும் தமிழர்களின் தொன்ம விளையாட்டான ஜல்லிக்கட்டுப் பிரச்சனையை கலாச்சார பிரச்சனையாக்கியதில் ஊடகங்களின் பங்களிப்பை மறந்துவிடமுடியுமா?

இழிசொல், வசை பிரயோகக் கருத்துக்கள் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை. அடேய் என்று ஆரம்பித்து அர்ச்சனை செய்பவர்கள் இருக்கிறார்கள். நாம் சார்ந்த அமைப்பையும் இயக்கங்களையும் கட்சிகளையும் தாண்டி நமக்கென்று சுயாதீனப் பார்வை உண்டு என்பதை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள். மொழியை நேசிப்பவர்கள் என்று கூறிக்கொள்பவர்களின் இத்தகைய பிரயோகங்கள் நமது மொழிக்கு செய்யும் மிகப் பெரிய கண்ணியக்குறைவு என்பதை நினைவில் இருத்திக்கொள்வது நல்லது.

தவிரவும், செய்திக்கு தொடர்பே இல்லாமல் எதையாவது வம்புக்கிழுக்க முற்படும் கருத்துகள் வெளியிடப்படுவதில்லை. அதேநேரம் நேரடியாக விமர்சிக்கும் கருத்துகள் வெளியிடப்பட்டே ஆகவேண்டும். ஆனால் அந்த விமர்சனம் ஆக்கபூர்வமானதாக இருக்கிறதா என்ற கேள்வியும் மிகமிக முக்கியமானது.

இப்படித்தான் வாசகர் கருத்து எழுத வேண்டும் என்று யாரையும் கட்டுப்படுத்துவது அல்ல நமது நோக்கம். ஆனால் எல்லாவற்றிற்குமே தனிமனித பெருவெறுப்போடு வெப்பத்தை உமிழும் மனநிலை தேவைதானா என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ளவேண்டியுள்ளது. உண்மையில் அனைவரும் இப்படி கிடையாது.

ஒரு பிரச்சினை சார்ந்து உண்மையிலேயே கோப்படுவது தார்மீக நெறியில் அது மிகமிக முக்கியமானது. அதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

சாதிக்கத் துடிக்கும் முதல்தலைமுறையினர் பற்றிய செய்திகள் ஆகட்டும் அரிய கண்டுபிடிப்புகளில் இறங்கியவர்களின் முயற்சிகள் பற்றிய செய்திகள் ஆகட்டும் முன்னுதாரணமான கிராமத்து சாதனைகள் ஆகட்டும் அதற்கு வரும் வாசகர்கள் கருத்துகள் நம்மை பெருமையடையச் செய்கின்றன. உத்வேகம் அளிக்கின்றன.

ஆனால் அது மிகமிகக் குறைவுதான். பெரும்பாலும் அதற்கான எதிர்வினைகள் தாமதமாகவே வருகின்றன. அரசியல் கருத்துகளுக்கு வருவதுபோல உடனடியாக கருத்துகள் வருவதில்லை. அவை உடனடியாக வரும்போது எங்கோ இருந்துகொண்டு சாதித்த அந்த வெளிஉலகம் காணக் காத்திருக்கும் அந்த உள்ளங்களுக்கு ஊக்கத்தைத் தருகின்றன. என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

பலபடிமேலேபோய் எத்தகைய உணர்வுபூர்வ தகவலாகப் புரிந்துகொள்ளப்படவேண்டிய செய்திகள் என்றாலும்கூட மிக கவனமாக உணர்ச்சிவசப்படாமல் அதில் கோபம் கொப்பளித்தாலும் கூட தங்கள் கருத்துகளை அனைவரும் ரசிக்கும்படி எழுதுகின்றனர் என்பதையும் இங்கு தவறாமல் சொல்ல வேண்டியுள்ளது.
பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்ல முடியாமல் தவிப்பு: பிளஸ் 2 மாணவிக்கு உதவிய மனிதாபிமான காவலர்

Published : 04 Mar 2018 12:40 IST

சேலம்



மாணவிக்கு உதவிய போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டு சக அதிகாரிகள் படம்: சிறப்பு ஏற்பாடு

சேலத்தில் பேருந்தை தவறவிட்டதால் தேர்வுக்கு செல்லமுடியாமல் கதறி அழுத மாணவிக்கு உதவி, அவரைப் பள்ளியில் நேரத்துக்கு அழைத்துச் சென்று தேர்வு எழுத உதவிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்பது போல் நம்மில் பலரும் அடுத்தவர் பிரச்சினையை பார்க்க மறுக்கிறோம். காரணம் வேகமான வாழ்க்கை சூழ்நிலை. ஆனால் தனது நெருக்கடியான பணி நேரத்திலும் ஒருவர் நிலை அறிந்து தக்க நேரத்தில் உதவி செய்துள்ளார் போக்குவரத்து காவலர் ஒருவர்.

சேலம் வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் பால்ராஜ். நேற்று முன் தினம் காலை இவருக்கு ஐந்து ரோடு அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி. அப்போது சாலை ஓரமாக 16 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர் கண்ணீர் விட்டு அழுதபடி நிற்பதை பலரும் பார்த்தும் பாராமுகமாக செல்வதை கவனித்துள்ளார்.

மாணவி பள்ளிச் சீருடையில் நிற்பதால் சந்தேகமடைந்து அழைத்து விபரம் கேட்டுள்ளார் பால்ராஜ். அதற்கு அந்த மாணவி தான் ஓமலூரில் இருந்து வருவதாகவும்.+2 பொதுத் தேர்வு எழுத அரசுப் பள்ளிக்குச் செல்ல காலையில் வீட்டிலிருந்து கிளம்பி வந்து மாற்று பேருந்தில் ஏறி பள்ளி செல்ல வந்ததாகவும் ஆனால் பேருந்தை தவற விட்டுவிட்டதாகவும் எப்படி தேர்வு எழுதப்போவேன் என்று கூறி கதறி அழுதுள்ளார்.

ஆட்டோவில் அனுப்பி வைக்கிறேன் என்று பால்ராஜ் கூற என்னிடம் அவ்வளவு பணம் இல்லை, மேலும் இந்த நேரத்தில் யார் அவ்வளவு தூரம் வருவார்கள் நான் தேர்வு எழுத போக முடியாது, என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று அந்த மாணவி அழுததைப் பார்த்து பால்ராஜுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.

தேர்வுக்கு இன்னமும் சற்று நேரமே உள்ளது என்ன செய்யப்போகிறேன் என்று அழுதபடி மாணவி நிற்பதைப் பார்த்து, உடனடியாக மாணவிக்கு உதவ நினைத்த காவலர் பால்ராஜ், தான் மாணவியை அழைத்துச்சென்றால் முக்கியமான ஐந்து ரோடு போக்குவரத்து சிக்னலை யார் பார்த்துக்கொள்வார்கள். ஏதாவது விபத்து நடந்தால் பணி நேரத்தில் தான் இல்லாதது தெரிந்து தனது வேலைக்கே பிரச்சினை வருமே என்று யோசித்துள்ளார்.

பின்னர் வருவது வரட்டும் என்று மேலதிகாரிக்கு போன் செய்து நிலைமையைல்க் கூறியுள்ளார். தான் மோட்டார் சைக்கிளில் சென்று அந்த மாணவியைப் பள்ளியில் இறக்கிவிட்டால் நேரத்திற்கு தேர்வு எழுத செல்லமுடியும் என கூறி அனுமதி கேட்டுள்ளார்.

மனிதாபிமானமிக்க அந்த உயர் அதிகாரியும் நிலைமையை புரிந்துகொண்டு மாற்று காவலரை நான் அனுப்பி வைக்கிறேன் நீங்கள் முதலில் மாணவியை தேர்வு மையத்திற்கு சென்று இறக்கிவிடுங்கள் என்று அனுமதி அளிக்க உடனடியாக மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேர்வு மையத்தில் நேரத்திற்கு சென்று இறக்கி விட்டுள்ளார்.

கையெடுத்துக் கும்பிட்ட அந்த மாணவியிடம் அதெல்லாம் எதுக்கும்மா நீ முதலில் நன்றாக தேர்வு எழுதும் வழியைப் பார் என்று தகப்பனின் ஸ்தானத்தில் அறிவுரை கூறி தனது பணியிடத்திற்கு திரும்பியுள்ளார் பால்ராஜ்.

மனிதாபிமானத்துடன் காவலர் பணி சமுதாயப்பணி என்ற எண்ணத்துடன் செயல்பட்ட சேலம் வடக்கு போக்குவரத்து தலைமைக் காவலர் பால்ராஜுக்கு பாராட்டுகள் குவிகின்றன. அவரது மேலதிகாரி சேலம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் அவரைப் பாராட்டினர்.
விமான பயணியின் மருத்துவ அவசரம்: யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் லண்டனில் தரையிறக்கம்

By DIN | Published on : 05th March 2018 10:04 AM |



நியூயார்க் நகரில் இருந்து தில்லி வந்துகொண்டிருந்த யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம், பயணி ஒருவருக்கு திடீர் உடல்நலம் குறைவால் அவதியால் லண்டனில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

266 பயணிகளுடன் நியூயார்க்கில் இருந்து தில்லி புறப்பட்ட விமானத்தில் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.

இதையடுத்து யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.

இதன் காரணமாக, அந்த விமானம் தில்லி வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓய்வு என்கிற பெயரில் வீட்டுப் பெரியவர்களை கூண்டில் அடைக்கிறோமா நாம்? மனநல ஆலோசகர் சொல்வதை கேளுங்கள்!

By மாலதி சுவாமிநாதன்  |   Published on : 16th February 2018 04:10 PM  | 
gutsy-granny-thrashes-robbers-with-her-walking-stick-in-dadar

தினந்தோறும் வாழ்வில் அர்த்தம் செய்து கொண்டு, மற்றவர்களுக்கும் நம்மால் பிரயோஜனம் உண்டு என்று இருந்தாலே வயதானாலும், உடல், மன நலம் கூடி இருக்கும்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வயதானவர்கள் பலவற்றை செய்வதைப் பார்க்கிறோம். பலர், தினம் வாக்கிங் போவது, பூங்காவில் சந்தித்து, குழுவாக பேசிக் கொள்வது, கச்சேரிக்குப் போவது, ட்யூஷன் எடுப்பது என்று இருப்பார்கள். இன்னும் சிலர் பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்வது, அவர்களுடன் விளையாடுவது, பள்ளிக்குக் கூட்டி செல்வதும் உண்டு. பூத்தொடுத்து விற்பது, மீன், முட்டை, கீரை, காய்-கனிகள் விற்பது என்று தொழில் செய்வோர்களையும் பார்க்கிறோம். பெசன்ட் நகர் கடற்கரையில் மோர் விற்கும் தாத்தா மிகப் பிரபலமானவர்!
இவர்களைப் போல் இல்லாமல், துவண்டு போய், ஒரே இடத்தில் பல மணிநேரம் உட்கார்ந்தோ, படுத்துக் கொண்டோ இருக்கும், அல்லது நாள் முழுவதும் டிவி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும்  வயதானவர்களும் உண்டு.
நம் வீட்டில் உள்ள வயதானவர்களை, நாம் மிக அக்கறையாக பார்த்துக் கொள்ள எண்ணுவோம். அதனால்  அவர்களை எதையும் செய்ய விடமாட்டோம், சிரமப் படுவார்களோ, அல்ல தடுமாறி, விழுந்து விடுவார்களோ என்ற பயத்தினால் நாமே எல்லாவற்றையும் செய்து விடுவோம். நாம் வயதானவரை வேலை வாங்குகிறோம் என்று யாரேனும் எண்ணி விடுவார்களோ என்று கூட அஞ்சிச் செய்வோம்.
பார்த்துக் கொள்வது நல்லது தான். ஆனால், கூண்டில் அடைத்த பறவை போல் அல்ல. அவர்களும், முடிந்த அளவிற்கு தன் வேலையை சுயமாக செய்யலாம், வீட்டிலும்  எதிலாவது தன் பங்கிற்கு உதவி செய்யலாம். அப்போது, தன்னாலும் உபயோகம் உண்டு என்பதை உணருவதே அவர்களின் நலனை மேம்படுத்தும். ஆனால், வற்புறுத்திச் செய்ய வைப்பதைத் தவிர்க்க வேண்டும். எதைச் செய்வது என்று அவர்கள் சொந்தமாக முடிவெடுத்தால்  நன்மை உண்டாக்கும். அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதும் ஒரு விதமாகும்.
நாற்பது வருடத்திற்கு முன்னால், வெளி நாட்டில், தேர்ந்தெடுத்த சில முதியோர் இல்லங்களில் இதைப் பற்றின ஆராய்ச்சி செய்தார்கள். அங்குள்ளவர்களில் சிலருக்கு பூந்தொட்டி கொடுத்து  அதைப் பாதுகாக்கும் பணி அவர்களிடம் ஒப்படைத்தார்கள். எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களின் தீர்மானத்திற்கே விட்டு விட்டார்கள். தண்ணீர் விடுவது, காய்ந்த இலைகளை அகற்றுவது அவர்களாகப் பார்த்துச்  செய்தார்கள் . ஆராய்ச்சி செய்வோர் என்ன கவனித்தார்கள் என்றால், செடியை ஈடுபாட்டுடன் கவனித்த முதியோரின் உடல் நலன் நன்றாகத் தேறி வந்தது. அவர்களின் ஞாபகத் திறன், பிரச்சினைகளைச்  சமாளிக்கும் திறன்களிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது .
அர்த்தமுள்ள செயலை செய்வதால், அதிலும்  சொந்தமாக  தேர்ந்தெடுப்பு  இருந்து விட்டால், அதற்கு நம் உடலைச் சீர் செய்யும் சக்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில், அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் நம் அரசாங்க கணிப்பின் படி 8.6% உள்ளார்கள். இவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துவது அவசியம் .
ஆரோக்கியம் என்றால் என்ன? உலகளவில், WHO-வின் (வர்ல்ட் ஹெல்த் ஆர்க்கனைஸேஷன்) ஆரோக்கியத்தின் வர்ணனையையே ஏற்றுக் கொண்டு இருக்கிறது. அதன் படி, ஆரோக்கியம் என்றால்  “நோய் இல்லாததும், நலிந்த, தளர்ந்த நிலை இல்லாதிருப்பதை மட்டும் குறிப்பது அல்ல; உடல், மனம், சமூக தொடர்பு நலன் எல்லாம்  உட்கொண்டுள்ளது”. உடல்/மனம்/சமூக தொடர் நலனில், ஏதாவது  ஒன்றில் ஏற்றத்தாழ்வு நேர்ந்து விட்டால், நலன் தடுமாறிவிடக்கூடும். 
எதையும் செய்யாமல் இருந்தால், தன் தேவைகளை மற்றவர்கள் பூர்த்தி செய்தால், மற்றவர்களே முடிவுகளை எடுத்தால், இல்லை தனிமைப்பட்டு இருந்தால், இவற்றினாலேயே நலன் கெடும். அதற்காகத்தான்  நம் கலாச்சாரத்தில் பெரியவர்களுடன்  கலந்து ஆலோசிப்பது, முக்கியமான காரியங்களில் அவர்களுக்குப்  பங்களிப்பு என்று அமைந்து இருக்கின்றது. இப்படிச் செய்து வருகையில், அவர்கள் இருப்பதற்கு அர்த்தம் இருக்கிறது என்பதைச் செயல் மூலம் காட்டுகிறோம்.
அதே நேரத்தில் ஒரு சிலருக்கு ஞாபக மறதி, பக்கவாதம், பார்க்கின்ஸன்ஸ், டிமென்ஷியா, மனச்சோர்வு என இருக்கலாம். இதற்கு மாத்திரை மருந்து அவசியமே. அத்துடன் சிறிதளவு சுறுசுறுப்பைச் சேர்த்துக் கொண்டால் நலனைக் கூடுதலாக்கும். 
எந்த வயதினரையும் உடலையும், மூளையையும் ஆக்டிவாக வைத்துக் கொள்ளவே டாக்டர் பரிந்துரைப்பார்கள். தினம் ஏதாவது ஒன்று செய்வது என்றும், வெவ்வேறு விதமாக வைத்துக் கொண்டால், ஆவலுடன் செய்யத் தோன்றும். எந்த அளவு முடிகிறதோ அந்த அளவிற்கு மட்டும் செய்து வந்தால், தொடர்ந்து செய்யலாம்.
சிலருக்கு,  முன் போல், செய்ய முடியாததாலோ, அடுத்தவர்கள் செய்து கொடுப்பதினாலோ  தயக்கமும்  தடுமாற்றமும்  வரலாம். மற்றவர்களுக்கு நாம் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்றும் சிலர் மௌனமாக, ஊமையாக  இருப்பார்கள்.
இப்படி எந்த மனப்பாங்குடன் இருந்தாலும் அவர்களின் நலனை உயர்த்திக் கூடுதலாக்கச் செய்யலாம். செய்யக் கூடிய பல வகைகளை வரிசைப் படுத்த போகிறேன். இதில், எதைத் தேர்ந்தெடுத்தாலும் வயதினரின் உடல் நலனை மனதில் வைத்தே தேர்வு செய்ய வேண்டும். 
I. ஒரே இடத்தில், படுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு
  • வீட்டுக்  குழுந்தைகளுக்கோ , பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கோ  சில பாடங்களை படிக்கும்போது, செய்யும்போது கவனிக்கலாம் . உதாரணத்திற்குக் கணக்கு வாய்ப்பாடு, கவிதை மனப்பாடம் செய்வதை, க்ராப்ஃட் செய்வதை  என்று.
  • தினசரி நாளிதழ்களை வாசிப்பது: அவர்கள் அருகில் உட்கார்ந்து, வாய் விட்டுப் படிக்கலாம்.
  • கதை, கவிதை, கட்டுரைகள் படிக்கலாம்.
  • அவர்களுடன் பாட்டு கேட்கலாம், பாடலாம்.
  • வார்த்தை, பாடல் அந்தாக்க்ஷரி விளையாடலாம்
  • அவர்களுடன் சுடோகு (Sudoku), க்ராஸ்வர்ட் (crossword) போடலாம்.
  • பல்லாங்குழி, தாயக் கட்டை, லுடோ விளையாடலாம்.
அவர்களையும் சேர்த்துக்.கொண்டு செய்வது என்பது பாசம் காண்பித்து, அவர்கள் உயிர் வாழ்வதை நல்ல கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும். இதனால், அவர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
II.அவர்களுக்கு, நாம் தெரிவிப்பது, “உங்களின் இடம், என் வாழ்க்கையில்..
  • ஆலோசிக்க, பகிர்ந்துகொள்ள, முடிவுகள் எடுப்பதில்.
  • அவர்கள் வாழ்வதற்கு அர்த்தம் உள்ளது என்பதைக் காட்டுவது முக்கியம்: நம்முள் ஒருவராகக் கருதுகிறோம் என்பதைக் காட்ட, நம் நண்பர்களை அறிமுகம் செய்வது, விருந்தாளிகளுடன் கலந்து கொள்வது.
நடந்து கொள்ளும் முறை முக்கியமானது. பெரியவர்களுடன் வாழும் நபர்களே இதை வார்த்தைகளாலும், செயலாகவும் காட்டலாம்.
III. ஒதுக்கி வைத்து விடுவதலின் காரணங்கள் 
  • தினசரி வாழ்வில் இடைஞ்சல் என்று கருதி ஒதுக்கி வைப்பது.
  • பாரம் என்று கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பது
  • மறதி இருப்பதால் 
  • நலன் குறைந்ததால்
இவர்களின் நிலைக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று  
யோசிக்காமல், மிக எளிதாக எதிர்மறை முடிவெடுப்பது. 
தீர்வு: டாக்டரை சந்தித்து ஆலோசித்து மேற்கொண்டு எப்படிப் பார்த்துக்  கொள்வது என்ற தெளிவு பெறலாம்.
IV. பெரியோர்கள்
வீட்டில், பக்கத்தில் இருக்கும் ஸ்கூல், மருத்துவ மனை, கோயில்களில் தங்களால் முடிந்ததைச்  செய்யலாம்.
நலன் இருப்பதைப் பொருத்து, முடிந்த அளவில் தன்னுடைய திறன்களைப் பகிர்ந்து கொண்டால், மேலே குறித்த மூன்று நலன்களும் நன்றாக இருக்கச் செய்யும்.
  • தன் பேரக்குழந்தைக்கோ, மற்ற குழந்தைகளுக்கு கற்றுத் தருவது
  • பக்கத்தில் இருக்கும் ஸ்கூலில் கதை சொல்லலாம் (கலாச்சாரம், வீரர்கள் பற்றி, சாதனையாளர்கள்…)
  • கண் பார்வை இல்லாதவர்களுக்கு எழுதி உதவுவது
  • பாடங்களை விளக்கிச் சொல்வது .
  • பாடங்களைப் கேஸட்டுகளில், பதிவு செய்தல்
  • ஹாஸ்டல், அனாதை விடுதி பிள்ளைகளுக்குப் பாடம், பாட்டு, நடனம் கற்பிப்பது.
  • பூக்களைத் தொடுப்பது
  • பூச் செடிகளுக்குத் தண்ணீர் விடுவது.
  • துணிகளை மடிப்பது
  • குடும்பத்தினருடன் வேலையைச் செய்வது: சுத்தம் செய்ய, தண்ணீர் நிரப்பி வைப்பது.
  • எப்பொழுது சாப்பிட விரும்புகிறார்கள் என்பதின் முடிவை  அவர்களிடமே விட்டு விடலாம்.
  • அவர்கள் அணியும் ஆடையைத்  தானாகவே தேர்ந்தெடுப்பது.
  • டிவி பார்ப்பதா? இல்லையா என்பதையும். நாம் பரிந்துரைப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
V. “ரிட்டையர்மென்ட் கம்யூனிடி ” ஓய்வு பெற்றவர்கள் இருப்பிடம்
சமீப காலங்களில், வயதானவர்கள் இருப்பிடமாக இது அமைந்து வருகிறது. இந்த இல்லங்களிலும் தங்குவோரின் வாழ்விற்கு அர்த்தம் தர பலவற்றைச் செய்து வரலாம். அன்றாடம் ஏதாவது ஒன்றைக் குறிக்கோளுடன்  செய்வதால் அவர்களின் நலன் மேலோங்கும்.
ரிட்டையர்மென்ட் கம்யூனிடியில் வாழலாம் என்று முடிவெடுப்பது பெரியோர்களே. தங்கள் பிள்ளைகளுக்கு பாரம் இல்லாமல் இருக்கவும், அதே சமயம், தங்களுக்குத் தேவைப்படும் வசதிகளுடன் இடமாக இருப்பதால் இதைத் தேர்வு செய்கிறார்கள். பெற்றோர் தங்களின் முடிவினால் அங்குச் சேர்வதால் பெற்றோர்-பிள்ளைகள் இருவருக்கும், குற்ற மனப்பான்மை இல்லாமல் இருக்கும்.
மொத்தத்தில், வயதானவர்களிடம் பல சொத்துக்கள் உண்டு. அனுபவம் என்ற மிகப் பெரிய சொத்து. வேறொன்று அறிவும், அவர்களிடம் இருக்கும் பல திறன்கள். இதை எல்லாமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், புரிய வைக்கலாம், வாதாடலாம். இதில் எதைச் செய்து வந்தாலும் அவர்களின் நலன் கூடும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எதற்காக வயதானால், பாரம், அல்லது முழுவதும் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கருத்து? 
மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்        
malathiswami@gmail.com

NEWS TODAY 17.09.2026