Sunday, April 8, 2018

Tamil Nadu, for first time, raises objection to Governor’s VC choice

DECCAN CHRONICLE.

PublishedApr 8, 2018, 1:45 am IST


This is the first time the TN government has come out with such a direct attack against the Governor.

Governor Banwarilal Purohit

Chennai: The AIADMK government has accused Governor Banwarilal Purohit of functioning “unilaterally” in appointing Dr M. K. Surappa as vice chancellor of Anna University and said the government was not consulted.

Criticising the Governor, state law minister C. V. Shanmugam said he could not understand why the Governor’s choice fell on a person from Karnataka though scores of renowned scholars like for instance former President A. P. J. Abdul Kalam, are there in Tamil Nadu.


“The state government has no role in the appointment. The Governor is functioning unilaterally and did not consult the democratically elected government. It is sad he has chosen a person from Karnataka. It is not only in AIADMK rule, even in DMK regime the governors functioned unilaterally,” Mr Shanmugam alleged.

This is the first time the TN government has come out with such a direct attack against the Governor though the DMK and other Opposition parties have been accusing Mr Purohit of violating the state autonomy by conducting review meetings with the state officials across the state.
திரும்பிய இடமெல்லாம் மஞ்சள் வாசனை!’ - குளிர்ந்துபோன கொண்டாட்டம்

நவீன் இளங்கோவன்
ரமேஷ் கந்தசாமி





ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவின் இறுதி நிகழ்வாக மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரிய மாரியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்தவகையில், பங்குனி மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை பூச்சாட்டுதலுடன் விழா ஆரம்பிக்கும். பின் அதனைத் தொடர்ந்து கம்பம் நடுதல், மாவிளக்கு பூஜை, கரகம் எடுத்தல், குண்டம் இறங்குதல் மற்றும் தேரோட்டம் என திருவிழா களைகட்டும்.



அந்தவகையில், இந்தவருடம் ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் திருவிழா கடந்த மார்ச் 20-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 24-ம் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி, ஏப்ரல் 4-ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. அதனையடுத்து திருவிழாவின் இறுதி நிகழ்வான கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.



இதற்காக, பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களில் நடப்பட்டிருந்த கம்பங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வாய்க்காலில் விடப்பட்டது. இந்த நிகழ்வில் ஜாதி, மத, இன வேறுபாடுன்றி ஈரோட்டிலுள்ள அனைத்து மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விநாயகர், முருகன், சிவன் போன்ற பல கடவுள்களின் வேடங்களை அணிந்த பக்தர்கள் நகரில் ஊர்வலமாக வந்தனர்.



மேலும், ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட அந்தக் கம்பங்களுக்கு பெண்கள் மஞ்சள் நீரை ஊற்றி வழிபட்டனர். மேலும், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். இதனால் நகர் முழுவதும் திரும்பிய இடங்களிலெல்லாம் மஞ்சள் வாசனை வீசியது. மேலும், மாநகர் முழுக்க குளிர்ந்துபோனது. இந்த மஞ்சள் நீரால் வெய்யிலினால் ஏற்படும் அம்மை, கொப்புளம் போன்ற நோய்களை பெரிய மாரியம்மன் தடுக்கிறாள் என மக்கள் நம்புகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக, நகரின் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், நகரின் போக்குவரத்து மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டது.
நடுவானில் விமானத்துக்குள் பயணிகளை 4 மணிநேரம் கலங்கடித்த கருங்குருவி!

அஷ்வினி சிவலிங்கம்  vikatan

கத்தார் விமானத்தில் கருங்குருவி ஒன்று, நடுவானில் சுமார் நான்கு மணி நேரம் பயணிகளைக் கலங்கடித்துள்ளது.



கடந்த மாதம் 24-ம் தேதி, கத்தார் நாட்டு விமானம் பாங்காக்கிலிருந்து தோஹா சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானம், சுமார் 39,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, பக்கிங்ஹாம் என்னும் பயணி, தன் லக்கேஜ் வைத்துள்ள இடத்தில் சிறிய பறவை ஒன்று பதுங்கியிருப்பதைக் கவனித்தார். அதைத் தொட முயன்றதும், விமானத்தினுள் வட்டமிடத் தொடங்கிவிட்டது. திடீரெனப் பறவை ஒன்று விமானத்தினுள் வட்டமிடுவதைப் பார்த்த பயணிகள் திகைத்துப்போனார்கள். சிலர், கைகளை உயர்த்தி பறவையை கேட்ச் பண்ண முயன்றனர். ஆனால் அந்த கறுப்பு நிற பறவையோ, யார் கையிலும் சிக்காமல் பறந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்கியதும் வெளியே பறந்துசென்றுவிட்டது.

`மம்மி’ படத்தைப்போல் தாயின் உடலைப் பதப்படுத்திய மகன்! - பென்சனுக்காக நடந்த கொடூரம்

அஷ்வினி சிவலிங்கம்



ஓய்வூதியம் பெறுவதற்காக இறந்த தாயின் உடலை சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பதப்படுத்தி கைரேகை எடுத்து வந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தாவில் வசித்து வந்தவர் சுபாபிரதா மஜூந்தர். இவருக்கு வயது 46. லெதர் டெக்னாலஜியில் மெரிட்டில் தேர்ச்சி பெற்ற இவர் தன் படிப்பைத் தாயின் உடலைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தச் சம்பவம் கொல்கத்தாவையே அதிரவைத்துள்ளது. இது குறித்து கொல்கத்தா போலீஸ் தரப்பில் கூறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு...

சுபாபிரதாவின் தாயார் பினா ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. அவர் கடந்த 2015-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வந்துகொண்டிருந்த ஓய்வூதியத்தை விட சுபாபிரதாவுக்கு மனதில்லை. எனவே, தன் தாயின் உடலைப் பதப்படுத்த குளிர்சாதனப்பெட்டி வாங்கியுள்ளார். அதில் பல்வேறு ரசாயனக் கலவையை ஊற்றி துர்நாற்றம் வீசாதவாறு ஏற்பாடு செய்து, தாயின் உடலைப் பதப்படுத்தியுள்ளார்.



தாயின் இறந்த உடலிலிருந்து சில பாகங்களை அகற்றி மம்மிபோல் பதப்படுத்தி வந்திருக்கிறார். ஒவ்வொரு மாதமும் இறந்த உடலிலிருந்து கைரேகை எடுத்து ஓய்வூதியப் பணத்தைப் பெற்று வந்துள்ளார். தன் தாய் உயிரோடு இருக்கிறார் என்னும் சான்றிதழ் ஒன்றையும் பெற்று வைத்திருந்ததால் வங்கி அதிகாரிகளுக்குச் சந்தேகம் வரவில்லை. உறவினர்கள் அவரிடம் தாயின் உடலை எங்கே அடக்கம் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, `என் தாய் உடல்தானம் செய்திருப்பதால் அவரின் உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது’ என்று சமாளித்துள்ளார். இதே போன்று சுமார் இரண்டு ஆண்டுகள் ஓய்வூதியத்தைப் பெற்று வந்துள்ளார். வீடு முழுவதும் ரசாயனங்களாக இருந்ததால், உறவினர்களுக்கு சுபாபிரதா நடவடிக்கைகள்மீது சந்தேகம் வந்து போலீஸில் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா போலீஸார் அவரின் வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது வசமாகச் சிக்கிவிட்டார்.




வீட்டுக்குள் பெரிய குளிர்சாதனப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் இறந்தபோன பினாவின் உடல் கிடந்தது. `எதற்காக இறந்தவரின் உடலை வைத்திருக்கிறீர்கள்’ என்று போலீஸ் கேட்டதற்கு, ‘என் தந்தைதான் அப்படிச் செய்தால் தாய் மீண்டும் உயிருடன் வருவார் என்றார்’ என்று தந்தைமீது சுபாபிரதா பழி சுமத்தியுள்ளார். சுபாபிரதாவின் தந்தையும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இந்தச் சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால் சுபாபிரதா தன் தாயைப் பதப்படுத்த பயன்படுத்தப்பட்ட குளிர்சாதனப்பெட்டிக்கு அருகில் மற்றொரு குளிர்சாதனப் பெட்டியும் இருந்துள்ளது. அவரின் தந்தையும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி என்பதால் அவருக்காக முன்னெச்சரிக்கையாக அந்தக் குளிர்சாதனப்பெட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறது போலீஸ்.
ஆண் அடையாளத்தை அகற்ற நடக்கும் உயிர்வலி சிகிச்சை! - திருநங்கைகளின் உடல்களை சிதைக்கிறார்களா மருத்துவர்கள்?! #SexReassignmentSurgery

இரா.செந்தில் குமார்  vikatan

``எங்களின் பெண் தன்மையை உணர ஆரம்பித்த கணத்திலிருந்து, எப்படியாவது அறுவைசிகிச்சை செய்துகொண்டு, முழுப் பெண்ணாக மாற வேண்டும் என்பது மட்டும்தான் எங்களின் முதல் நோக்கமாக இருக்கும். அதற்காகப் பணம் சேர்க்க நாங்கள் படும் வேதனைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒருவழியாகப் பணத்தைச் சேர்த்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே எங்களுக்கு நடப்பது கொடுமை. இதற்கான அறுவைசிகிச்சையில் (Sex Reassignment Surgery - SRS) அனுபவமில்லாத மருத்துவர்களால் எங்கள் உடல் சின்னாபின்னமாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியா முழுக்கவே இதேநிலைதான்’’ என்கிறார் முதல் திருநங்கை பொறியாளரான கிரேஸ்பானு.



மனதளவில், பழக்கவழக்கங்களில் பெண்ணாக மாறிவிட்ட பிறகு, உடலளவில் ஆணின் அடையாளங்களோடு இருப்பதை எந்தத் திருநங்கையும் விரும்புவதில்லை. வீட்டைவிட்டு வெளியேறிய உடனேயே அந்தச் சிகிச்சைக்காகப் பணம் சேர்ப்பதில்தான் அவர்களின் பாடு கழிகிறது.

திருநங்கைகள் என்றாலே `பிச்சை எடுப்பவர்கள்’, `பாலியல் தொழில் செய்பவர்கள்’ என்ற தோற்றம்தான் இருக்கிறது. ஆனால், அந்த அவலத்துக்குள் அவர்கள் ஏன் தள்ளப்படுகிறார்கள் என்பதை யாரும் யோசிப்பதில்லை. இப்படிப் பல துன்பங்களை அனுபவித்து சேர்த்த பணத்தை சக திருநங்கைகளே ஏமாற்றிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ``நான் சொல்றதையெல்லாம் கேட்டா, உனக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்றேன்’’ என்று ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட திருநங்கைகளும் இருக்கிறார்கள்.

`அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே இதற்கான அறுவைசிகிச்சை செய்கிறார்களே... அங்கு போய் செய்துகொள்ளவேண்டியதுதானே என்பது சிலரின் அறிவுரை. ஆனால், அது அத்தனை எளிதானதல்ல என்பது அனுபவப்பட்ட திருநங்கைகளுக்குத்தான் தெரியும். சென்னை அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட திருநங்கை சௌமியா அந்த வேதனைகளை விவரிக்கிறார்...



``2009-ம் வருஷம் அரசு மருத்துவமனையிலதான் இந்த சர்ஜரி பண்ணிக்கிட்டேன். ஹாஸ்பிட்டலுக்குப் போனவுடனேயே எனக்கு சர்ஜரி பண்ணிடலை. அதுக்கான பிராசஸே ஒரு வருஷம் நடந்தது. `நீங்க ஆம்பளையா... ஏன் பெண்ணாக மாற விரும்புறீங்க?’ இப்படிப் பல கேள்விகள் கேட்டாங்க. கவுன்சலிங் கொடுத்தாங்க. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குப் போய், கவுன்சலிங் முடிஞ்சதுக்கு அப்பறம் நல்ல மனநிலையிலதான் இருக்கேன்னு ஒரு லெட்டர் வாங்கிட்டு வரச் சொன்னாங்க. ஏழெட்டு முறை அலைஞ்ச பின்னாடிதான் அந்த லெட்டரே கிடைச்சுது.

அப்போ என்னோட சேர்த்து மொத்தம் மூணு பேருக்கு சர்ஜரி பண்ணினாங்க. அந்த ரெண்டு பேராலயும் ஆபரேஷனுக்குப் பிறகு பாத்ரூம் போக முடியலை. ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. எனக்கும் அந்த இடத்துல சரியா ஆபரேஷன் பண்ணலை. அரைகுறையா செஞ்சு அந்த இடத்தையே சிதைச்சுட்டாங்க. பாத்ரூம் போக முடியாம கஷ்டப்பட்ட ரெண்டு பேரையும் நான்தான் மறுபடியும் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போனேன். அங்கே, பெரிய கத்தியில ஜெல் தடவி அந்த இடங்களில் விட்டு எடுத்தாங்க. அந்த இடமே ரணமாகிடுச்சு. இப்போவரைக்கு அவங்க ரெண்டு பேரும் ரொம்பக் கஷ்டப்படுறாங்க. தனியார் மருத்துவமனையில இந்த சர்ஜரி பண்றதுக்குப் பணம் இல்லை, கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல ஒழுங்கா பண்ணுவாங்கனுதான் அங்கே போனோம். ஆனா, இப்பவரைக்கும் வேதனையை அனுபவிச்சுட்டிருக்கோம்’’ என்கிறார் சௌமியா.

இந்த அறுவைசிகிச்சை குறித்து திருநங்கை பானு கொஞ்சம் விளக்கமாகப் பேசுகிறார்...

``இந்தச் சிகிச்சையில் மொத்தம் மூன்றுவிதமான அறுவைசிகிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் டைப் 3 அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மட்டும்தான் துணையுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும். மற்ற இரண்டு முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடலுறவு சாத்தியப்படாது. அரசு மருத்துவமனைகளில் டைப் 1 அறுவைசிகிச்சையை மட்டுமே செய்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் மூன்றுவிதமான அறுவைசிகிச்சைகளும் செய்கிறார்கள். அரசு மருத்துவமனையோ, தனியார் மருத்துவமனையோ இந்தியாவில் இந்த அறுவைசிகிச்சையில் பலருக்கும் போதிய அனுபவமில்லை. எங்களைப் போன்ற பலரின் உடலுறுப்புகளைச் சிதைத்துவிடுகிறார்கள். சர்ஜரிகள் முழுமையாக இருப்பதில்லை. ஆனால், தாய்லாந்து போன்ற சில நாடுகளில்தான் மிகச் சரியாகவும் முழுமையாகவும் செய்கிறார்கள். ஆனால், அவ்வளவு தூரம் போய், பணம் செலவழிக்கும் நிலையில் இங்கு யாரும் இல்லை.

`திருநங்கைகள் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்; தவறு செய்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டுபவர்கள், எங்களின் வலிகளை, வேதனைகளைப் பற்றிப் பேசுவதில்லை. இந்த வலிகளோடுதான் எங்களில் பலர் பாலியல் தொழில் செய்கிறார்கள். எங்களுக்கு இதுபோன்ற பொருளாதாரத் தேவைகள் ஏற்படுவதால்தான், எங்களில் பலர் தவறான பாதையில் செல்லவேண்டிய தர்மசங்கடம் உண்டாகிறது. அரசு வழங்கும் மருத்துவக் காப்பீடும் திருநங்கைகளுக்குக் கிடையாது.



தனியார் மருத்துவமனையில் இந்தச் சிகிச்சைக்கு எழுபதாயிரம் ரூபாய்க்கும் மேல் செலவாகும். அரசு மருத்துவமனையில் செய்துகொள்ளும் வாய்ப்பிருப்பதால், பணச் செலவு கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளிலும் எல்லாமே இலவசமாகக் கிடைப்பதில்லை. அறுவைசிகிச்சைகள் செய்யத் தேவையான உபகரணங்களை நாங்கள்தான் வாங்கிக் கொடுக்கிறோம். அதற்கே ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய்வரை செலவாகிறது. முன்பெல்லாம், இந்தச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சைகளை எங்களுக்கு அளிப்பார்கள். நாங்கள் போராடி அந்த விதிமுறைகளை நீக்கவைத்தோம்.

அரசு மருத்துவமனைகளில் எங்களுக்கு அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்களில் பலருக்குப் போதிய அனுபவம் இருப்பதில்லை. எங்களை சோதனை எலிகளைப் போலப் பயன்படுத்துகிறார்கள். எங்களை வைத்து மாணவர்களுக்குப் பாடம் எடுப்பார்கள். சில நேரங்களில் மருத்துவ மாணவர்களே சர்ஜரி செய்வதும் உண்டு. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும். எங்களுக்கு உயிர்வலி தரும் இந்த அறுவைசிகிச்சைக்கு நல்ல அனுபவமுள்ள மருத்துவர்களை தமிழக அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும் அல்லது மருத்துவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியாவது பயிற்சிபெறச் செய்ய வேண்டும். எங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் அரசே செய்துதர வேண்டும்.

எங்களுக்கும் பசி, காதல், களிப்பு... என எல்லா உணர்வுகளும் இருக்கின்றன. அவற்றை முழுமையாக அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் தரப்படுவதில்லை. உடலாலும் உணர்வாலும் நாங்கள் மிகுந்த துயரங்களை அனுபவிக்கிறோம்’’ என்கிறார் கிரேஸ்பானு.



சுகாதார வசதிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு முன்னேற்றம் பெற்றிருக்கிறது என்று ஒருபுறம் மார்தட்டிக்கொள்கிறோம்; மறுபுறம் நம் சமூகத்தின் சக அங்கமான திருநங்கைகள் தங்களின் உடல் மாற்றம் பெறுவதற்கான அடிப்படை மருத்துவ வசதிகளுக்கே அல்லாடுகிறார்கள்.

அரசு நினைத்தால் இவர்களின் தலைவிதியை மாற்றலாம், செய்யுமா?
ஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி!

அஷ்வினி சிவலிங்கம்  vikatan

`Bombay’ என்ற வார்த்தையைச் சுருக்கி எழுதிய இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி ஆஸ்திரேலியாவில் பெரும் குழப்பத்தில் சிக்கிவிட்டார்.



மும்பையைச் சேர்ந்த வெங்கட லட்சுமி தன் மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். கடந்த புதன்கிழமை பிரிஸ்பேன் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு லக்கேஜ் சோதனை செய்யும் இடத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். லட்சுமியின் அருகில் நின்றிருந்த பெண் லட்சுமியின் லக்கேஜை வித்தியாசமாகப் பார்த்தார். லட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சிறிது நேரத்தில் ஆஸ்திரேலியா ஃபெடரல் போலீஸார் லட்சுமியை நோக்கி வேகமாக வந்தனர். அவரின் லக்கேஜை கைப்பற்றினர். அந்த இடமே பரபரப்பானது. லட்சுமிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. லட்சுமியின் லக்கேஜை சோதனைக்குட்படுத்தினர். அதில் சந்தேகம்படும்படி எந்தப் பொருள்களும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அந்த லக்கேஜ் குறித்து லட்சுமியிடம் விசாரித்தனர். `ஏன் இந்தப் பையில் Bomb to Brisbane என்று எழுதியிருக்கிறது’ என்று கேட்டனர். `அது Bomb கிடையாது; Bombay என்னும் வார்த்தையின் சுருக்கம்’ என்றார் அப்பாவித்தனமாக. இந்தப் பையில் Bomb என்று எழுதியிருந்ததால்தான் இவ்வளவு பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மன்னிக்கவும் என்று ஆஸ்திரேலியா போலீஸார் லட்சுமியிடம் மன்னிப்புக் கேட்டனர்.

View image on Twitter



ஆஸ்திரேலியாவில் வசிக்கும் லட்சுமியின் மகள் தேவி ஜோதிராஜ் இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசுகையில், ‘என் அம்மாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. முதல்முறையாகத் தனியாக விமானத்தில் பயணிக்கப் போகிறோம் என்ற பதற்றத்தில் இருந்திருப்பார். அதனால் லக்கேஜில் Bombay to Brisbane என்று எழுதுவதற்குப் பதில் சுருக்கமாக எழுதுவதாக எண்ணி Bomb to Brisbane என்று எழுதிவிட்டார். மேலும், அவர் காலத்தில் மும்பையைப் பம்பாய் என்றுதான் குறிப்பிடுவார்கள். காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடப்பதால் இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக வயதான பெண்ணை இவ்வளவு அலைக்கழித்திருக்கக் கூடாது’ என்றார்.
"ஒலிபெருக்கி தேவையில்லாத கர்ஜனை!".. 'இசை முரசு' நாகூர் ஹனிபா நினைவுகள்
ர.முகமது இல்யாஸ்




‘உடன்பிறப்பே! கழக உடன்பிறப்பே! அண்ணாவின் வழியில் அயராது உழைக்கும், பொன்னான கலைஞர் கண்ணாக மதிக்கும் உடன்பிறப்பே!’ என்ற பாடல் தி.மு.க. கூட்டங்களில் ஒலிக்கத் தொடங்கியவுடன், கரை வேட்டியுடனும் தோளில் கறுப்பு சிவப்புத் துண்டுடனும் உற்சாகமாகத் தொண்டர்கள் ஓடிவரும் காட்சியைக் காணாத தமிழ்நாட்டுத் தெருக்கள் கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களை ஊக்கப்படுத்தி ஏழு தசாப்தங்களாக ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த சிம்மக்குரலுக்குச் சொந்தக்காரர் ‘இசை முரசு’ நாகூர் ஹனிபா. ‘அழைக்கின்றார் அண்ணா’, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி’ போன்ற தி.மு.க-வின் பிரசாரப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய்ச் சேர்த்தவர் நாகூர் ஹனிபா. ஆனால், அவரை தி.மு.க. பிரசார பாடகர் என்று சுருக்கிவிட முடியாது.

திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே நாகூர் ஹனிபா ஒவ்வோர் ஊர் மேடைகளிலும் பாடியிருக்கிறார். அவரது பாடலை, தந்தை பெரியார் ரசித்துக் கேட்டிருக்கிறார். நாகூர் ஹனிபாவின் சிம்மக்குரலைச் சுட்டிக்காட்டி, ‘‘ஹனிபா அய்யாவுக்கு ஒலிபெருக்கி தேவையில்லை’’ எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், அவருக்கும் அந்தக் காலத்திலேயே ஒரு ரூபாய் பரிசும் அளித்து இருக்கிறார். பெரியாரிடம் பாராட்டும் பரிசும் வாங்கும் அரிய காட்சியை அன்றைய திராவிட இயக்கத் தோழர்கள் வியந்து இருக்கிறார்கள்.



இஸ்மாயில் முஹம்மது ஹனிபா, 25 டிசம்பர் 1925-ல் நாகூரில் பிறந்தவர். திருமண நிகழ்ச்சிகளில் பாடிப் பழகிய ஹனிபா, தன்னுடைய 15-ஆவது வயதிலேயே தனியாளாக இசைக் கச்சேரி நடத்தியவர். அந்த நிகழ்ச்சிக்கு 25 ரூபாய் அவருக்குக் கொடுக்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் ஹனிபா. 1937-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, நாகூர் வந்த ராஜாஜியை எதிர்த்து நான்கு பேர் கறுப்புக் கொடி காட்டினர். 13 வயதே ஆன ஹனிபாவும் அவர்களுள் ஒருவர்.

பின்னாள்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பாரதிதாசனின் பாடல்களான, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, ‘தமிழுக்கு அமுதென்று பெயர்’ முதலானவற்றை தம் கணீர்க் குரலால் பாடினார் ஹனிபா. ‘குடி அரசு’ இதழின் தீவிர வாசிப்பாளரான ஹனிபா, பெரியாரின்மீது பற்றுக்கொண்டு திராவிட இயக்கப் பாடல்களைப் பரப்பத் தொடங்கினார். பெரியார் பற்றிப் பல பாடல்களைப் பாடினார் ஹனிபா. ``பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வெ.ரா தூங்கிக்கிடந்த உன்னைத் தூக்கித் துடைத்தணைத்து தாங்கித் தரைமேல் இட்டார். தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா-வே!'' என்று அவர் பாடிய பாடல்தான் முதன்முதலில் பெரியார் பற்றி இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்ட பாடல்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியவுடன் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து செயல்பட்டார். 1953-ஆம் ஆண்டு கைத்தறி நெசவாளர்களின் வறுமையைப் போக்க தி.மு.க., தமிழ்நாடு முழுவதும் கைத்தறி துணிகளை விற்றது. அப்போது, அண்ணாவுடன் திருச்சிக்குக் கிளம்பினார் ஹனிபா. திருச்சி மக்களிடம் கைத்தறி துணியை விற்க, ஒலிபெருக்கி இல்லாமலேயே தன் வெண்கலக் குரலால் பாடி, மக்களைக் கவர்ந்தார் ஹனிபா.

அதே ஆண்டு, கோவையில் ஒரு மாநாடு நடந்தது. அண்ணா நடத்திவந்த ‘நம் நாடு’ நாளிதழில்.... அன்றைய நாள், ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாடல் வெளியாகியிருந்தது. அந்த மாநாட்டில் கருணாநிதியின் வேண்டுகோளின் பெயரில், அந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடினார் ஹனிபா. அவர், இசையமைப்பதிலும் வல்லவர் என்பதை அந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. அண்ணா மறைந்தபோது, ‘பட்டுமணல் மெத்தையிலே... பூ மணக்கும் வேளையிலே... உறங்குகிறாய் உறங்குகிறாய் அண்ணா' என்ற பாடலைப் பாடினார் ஹனிபா. தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் ஹனிபா. தேர்தல் அரசியல் ஹனிபாவுக்குக் கைகூடவில்லை என்றாலும், கருணாநிதி ஆட்சியில் தமிழக வக்பு வாரியத்துக்குத் தலைவராக இருந்தார் நாகூர் ஹனிபா.



நாகூர் ஹனிபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இஸ்லாமிய வழக்கங்களையும், வரலாற்றையும் அழகுத் தமிழில் பட்டிதொட்டியெங்கும் சேர்த்தன ஹனிபாவின் பாடல்கள். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், ஹனிபாவின் பாடல்களை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். உதாரணமாக, ‘பெரியார் பிலாலின் தியாக வாழ்க்கை’ என்ற பாடலில், பிலால் என்ற நபித்தோழர் அடிமையாக இருந்த வாழ்க்கையைப் பற்றிப் பாடியுள்ளார் ஹனிபா. ‘‘அது, தம்மைக் கண்கலங்கவைக்கும் பாடல்’’ எனப் பல மேடைகளில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

65 ஆண்டுகள் தொடர்ந்து பல மேடைகளில் பாடி சாதனை படைத்தவர் ஹனிபா. நாகூர் ஹனிபா என்றால் பலருக்கும் நினைவுக்கு வரும் பாடல் – ‘இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்பதுதான். மிக எளிமையான நடையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் சாதி, மதம் கடந்து அனைவராலும் பாடப்படுகிறது.

விட்டல்தாஸ் மகராஜ், மதுரை ஆதீனம் முதலான மதக் குருக்களும் இந்தப் பாடலைப் பொதுவெளியில் பாடி ஹனிபாவின் மத நல்லிணக்கப் பணியை வெளிபடுத்தியிருக்கின்றனர். இஸ்லாமியப் பாடல்களும் இயக்கப் பாடல்களும் மட்டுமல்லாமல், திரைத்துறையிலும் பாடியவர் ஹனிபா. 1961-ஆம் ஆண்டு, ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தில், டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்து ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்ற பாடலைப் பாடினார். 1992-ஆம் ‘செம்பருத்தி’ திரைப்படத்தில், இளையராஜா இசையில், ‘நட்ட நடு கடல் மீது’ என்ற பாடலும், 1997-ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ‘ராமன் அப்துல்லா’ திரைப்படத்தில், ‘உன் மதமா... என் மதமா? ஆண்டவன் என்ன மதம்?’ என்ற பாடலும் மிகவும் புகழ்பெற்றவை.



தன் குரல்வளத்தால் தமிழ்ச் சமூகத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த நாகூர் ஹனிபா 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி 89-ஆவது வயதில் மரணமடைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்ணீர் மல்க, ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் எந்த ஒரு மாநாடும் நாகூர் ஹனிபாவுடைய இசையில்லாமல், தொடங்கியதும் இல்லை; முடிந்ததும் இல்லை. ஹனிபா பாடிப்பாடி மக்களைக் கவர்ந்த காட்சியை, அந்த மக்களில் ஒருவனாக நான் ரசித்து இருக்கிறேன். என் ஆருயிர் சகோதரனை இழந்து தவிக்கிறேன். ஹனிபா பாடிய பாடல்கள் என்றென்றும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். வாழ்க நாகூர் ஹனிபா!’’ என்றார்.

அந்த இசைக்கலைஞரின் நெருங்கிய நண்பர் கருணாநிதி சொன்னதில் உண்மை இருக்கிறது. திராவிட இயக்கம் இருக்கும்வரை அந்த ‘இசை முரசு’ நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.

NEWS TODAY 21.12.2025