Sunday, April 22, 2018

Cops register case against S Ve Shekher, no arrest yet

TIMES NEWS NETWORK 22.04.2018

Chennai: The cybercrime wing of the city police has registered a case against actor-turned politician S Ve Shekher under three IPC sections for posting inflammatory remarks about a woman journalist who complained against governor Banwarilal Purohit for patting on her cheek at a press conference early this week.

The cybercrime wing police registered a case based on the complaint of the journalists association and slapped a case against the BJP member under IPC Sections 504 (intentional insult to provoke breach of the peace), 505 (1) (c) (with intent to incite, or which is likely to incite, any class or community of persons to commit any offence against any other class or community), and 509 (Word, gesture or act intended to insult the modesty of a woman), and Section 4 of TN Prohibition of Women Harassment (Prevention) Act.

It all started when Shekher shared a derogatory Facebook post on women in media.

After huge criticism, he deleted the post and issued an apology.

Meanwhile, the police have registered a case against 30 journalists for throwing stones at Shekher’s house in Mandaiveli during a protest on Friday. A maid employed at the house was injured in the act.

While the agitations have been escalating everyday demanding the arrest of Shekher in the woman harassment case, a posse of police personnel deployed at Shekher’s house on Saturday evening created flutter in the political circle that Shekher may be apprehended. 





Can’t reject edu loan due to kin’s debt: HC

Saravanan.l1@timesgroup.com 22.04.2018

Madurai: The Madurai bench of the Madras high court has warned banks against rejecting educational loans based on the credit report of the applicant’s family, saying such actions would attract contempt of court proceedings.

Allowing the plea of M Hariharasudhan, the court asked Indian Bank to direct all its branches in TN to refrain from rejecting educational loan applications citing reasons outside the scope of the Centre’s scheme. Justice M S Ramesh said the court was constrained to observe that nationalised banks had been rejecting loan applications citing the CIBIL (Credit Information Bureau (India) Limited) reports of the student’s family members. “In my view, such reasoning would amount to wilful disobedience of the orders of this court, for which the concerned bank would be liable for contempt.”

‘Scheme was passed by Centre to help meritorious students’

The judge said the educational loan scheme was introduced by the central government with an objective to help meritorious students pursue his or her education with financial support from the banking system under reasonable terms and conditions. The student was the principal borrower and the loan was to be solely utilised for educational needs.

Hence, any reasonable restrictions imposed by the financial institution had to conform with the scheme’s objective.

“Any factor which is beyond the scope of the scheme as a bar for availing the loan could only be deemed to be prima facie illegal,” said the court while directing the Indian Bank’s branch at New Vilangudi in Madurai to positively consider the student’s plea in two weeks.

The petitioner who joined a five-year law course in a private institution had demanded ₹3.5 lakh as loan including ₹70,000 for the academic year 2017-18. As his application was not considered on time, he knocked on the doors of the judiciary. During the hearing, the bank’s counsel said that it had raised two clarifications with the petitioner – the reason for a year’s delay in admission to the course and the CIBIL report stating that the boy’s father’s score was 570 (which meant that the petitioner’s father might have committed default in repayment of money to either a bank or any trader

(s)). Hence it was unable to proceed any further on the boy’s request.
அரசு இணையதளம் முடக்கம்

Added : ஏப் 22, 2018 04:27

சென்னை: தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம், இரண்டு நாட்களாக முடங்கி உள்ளது. தமிழக அரசின், அதிகாரப்பூர்வ இணையதளமான, www.tn.gov.in நேற்று முன்தினம் முதல் முடங்கி உள்ளது. இந்த இணையதளத்தில், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன.அத்துடன் துறை வாரியாக, கொள்கை விளக்க குறிப்புகள், அரசு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு இ - சேவை, இந்த இணையதளம் வழியாக வழங்கப்பட்டது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்படும், பத்திரிகை செய்திகள், அரசாணைகள், இந்த இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்.
ஆண்களுக்கு மட்டும் திருவிழா : 381 ஆடுகள் வெட்டி பூஜை

Added : ஏப் 22, 2018 01:26



சிவகங்கை: சிவகங்கை அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சித்திரை திருவிழா நடந்தது. 381 ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சிவகங்கை, திருமலையில் மடைக்கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.14ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவில், பெண்களுக்கு அனுமதியில்லை. ஆண்கள் மட்டுமே காப்பு கட்டி விரதம் துவங்கினர்.கோவில் வளாகத்தின் அருகே, உள்ள கண்மாயில் அனைத்து மடைகளும் அடைக்கப்பட்டன. விழாவின், எட்டாம் நாளான நேற்று முன்தினம் மாலை திருமலையில் இருந்து, 1,000த்துக்கும் மேற்பட்ட ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள், மணி, கோவில் காளைகள், கருப்பு வெள்ளாடுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின், மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் தீர்த்தம் எடுத்து வந்து, ஒரு மண் பானையில் பொங்கலிட்டனர்.பின், 381 ஆடுகளை பலியிட்டனர். பொங்கல், ஆடுகளின் தலைகளை சுவாமி முன், படைத்து இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
சேலம், தர்மபுரியில் வெயில் அதிகரிக்கும்

Added : ஏப் 22, 2018 01:21

மேட்டூர்: ''சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்,'' என, வானிலை ஆய்வுத்துறை இயக்குனர், பாலச்சந்திரன்கூறினார்.

சேலம் மாவட்டம், மேட்டூரில், பாலச்சந்திரன் அளித்த பேட்டி: காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பருவ மழை சீராக பெய்வதில்லை. ஆண்டுதோறும் பெய்யும் மழை அளவு ஏற்றத் தாழ்வாக இருப்பதால், எவ்வளவு மழை பெய்யும் என்பதை, தெளிவாக கணிக்க முடியவில்லை.தமிழகத்தின், சராசரி வடகிழக்கு பருவமழையளவு, 44 செ.மீ., நடப்பாண்டு, அதே அளவில் இயல்பான மழை பெய்ய வாய்ப்புள்ளது.தமிழகத்தில், அதிகபட்சமாக, 42 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. நடப்பாண்டு, மே மாதம், 1 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடல்பரப்பிலிருந்து துாரத்திலுள்ள, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பெய்து வரும் மழையால், கடந்த, 19ல், 48 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று முன்தினம், 407 கன அடியாகவும், நேற்று, 685 கன அடியாகவும் அதிகரித்தது.நேற்று, தமிழக எல்லை, பிலிகுண்டுலுகாவிரியாற்றில், வினாடிக்கு, 1,200 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால், கூடுதல் நீர்வரத்து, மேலும் இரு நாட்கள் நீடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அணை நீர்மட்டம், 35.40 அடி; நீர் இருப்பு, 9.84 டி.எம்.சி., இருந்தது.
'அவசரப்பட்டுட்டோமோ...' : தினகரன் ஆட்கள் அதிருப்தி

Added : ஏப் 22, 2018 00:22

dinamalar

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களில் பலர், 'அவசரப்பட்டு விட்டோமோ' என, விரக்தியில் உள்ளனர். அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஓரம் கட்டப்பட்டதும், 18 எம்.எல்.ஏ.,க்கள், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். கட்சியும், ஆட்சியும், தினகரன் கட்டுப்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பில், ஆர்வமுடன் சென்றனர். ஆனால், எதிர்பார்த்தபடி தினகரன் அணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் பலம் கிடைக்கவில்லை. ஆதரவு தெரிவித்த, 18 எம்.எல்.ஏ.,க்களும், அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றம் சென்றனர். வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக காத்திருக்கிறது. மாதங்கள் கடந்த நிலையில், அரசியல் நிலவரம் மாறிவிட்டது. தினகரன், தனி கட்சி துவங்கி விட்டார். அ.தி.மு.க.,வை, முதல்வரும், துணை முதல்வரும், முழுமையாக பிடித்து விட்டனர். கட்சியும், ஆட்சியும், அவர்களிடம் உள்ளதால், நிர்வாகிகள் எல்லாம், தினகரன் பக்கம் செல்லும் எண்ணத்தை கைவிட்டனர்.தாமதமாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் மட்டுமே, ஆதரவு தெரிவித்தனர். அவர்களின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏ., பதவி பறிபோகவில்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பள உயர்வு, 2017 ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், புதிய சம்பளத்துடன், நிலுவைத் தொகையையும் பெற்றுள்ளனர்.

தினகரன் ஆதரவு, மூன்று எம்.எல்.ஏ.,க்களும், புதிய சம்பள உயர்வை பெற்றுள்ளனர். ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு, இரண்டரை மாத நிலுவைத் தொகை மட்டும் வந்துள்ளது; மாதச் சம்பளம் இல்லை.அதேபோல், தினகரன் துவங்கிய கட்சியில், ஒரு சிலருடைய ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மற்றவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை. இதனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் பலர், அவசரப்பட்டு விட்டோமோ என்ற, விரக்தியில் உள்ளனர். அவர்களிடம், 'நீதிமன்ற வழக்கு சாதகமாக வரும். அப்போது, நிலுவை தொகையை முழுமையாக பெறலாம்' என, ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -
ரஜினி, கமல் புறக்கணிப்பு விஜயகாந்த் விரக்தி

Added : ஏப் 22, 2018 00:21

தனக்கு நடந்த பாராட்டு விழாவில், ரஜினி, கமல் பங்கேற்காததால், விஜயகாந்த் கடும் விரக்தி அடைந்துள்ளார்.தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், சினிமாவுக்கு வந்து, 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்திற்கு பாராட்டு விழா, 15ம் தேதி, படப்பை அருகே நடந்தது.விழாவில் பங்கேற்க வரும்படி, திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு, அழைப்பு விடப்பட்டிருந்தது. விஜயகாந்த் மைத்துனர், சுதீஷ், மாநில நிர்வாகி பார்த்தசாரதி, காஞ்சிபுரம் மாவட்ட செயலர், முருகேசன் ஆகியோர், நேரடியாக சென்று, இதற்கான அழைப்பிதழை வழங்கினர்

.அதையேற்று, திரையுலகில், விஜயகாந்திற்கு நெருக்கமான மற்றும் அவரால் ஆதாயம் அடைந்த பலரும், விழாவில் பங்கேற்றனர்.கட்சி துவங்கிய பின், விஜயகாந்திற்கு எதிராக அரசியல் செய்த, நடிகர் சரத்குமார், இவ்விழாவில் பங்கேற்று, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். விஜயகாந்துடன் அவ்வளவாக நட்பு வைத்து கொள்ளாத நடிகர்கள், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோரும், மேடை ஏறி, வாயார வாழ்த்தினர்.ஜெ., இறப்புக்கு முன், விஜயகாந்தை சந்திப்பதை, திரையுலகினர் பலரும் தவிர்த்து வந்தனர். இப்போது, எதிர்பாராத பலரும், விழாவிற்கு வந்து வாழ்த்தியதால், விஜயகாந்த் மகிழ்ச்சி அடைந்தார். அதேநேரத்தில், விழாவில், ரஜினி, கமல் பங்கேற்பர் என, விஜயகாந்த் பெரிதும் எதிர்பார்த்தார்.

 இதன் வாயிலாக, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தலாம் என, கணக்கு போட்டார்.அவர்களின் வருகையை எதிர்பார்த்து, ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், இருவரும் விழாவில் பங்கேற்பதை தவிர்த்து விட்டனர். இதனால், விஜயகாந்த் கடும் விரக்தி அடைந்துஉள்ளார்.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், ரஜினி அல்லது கமலுடன் இணைந்து தேர்தலை சந்திக்க, விஜயகாந்த் விரும்பினார். ஆனால், இருவரும் விழாவில் பங்கேற்கவில்லை. இது, விஜயகாந்தை அதிகம் பாதித்துள்ளது.கட்சி துவங்கிய பின், கமல், நட்பின் அடிப்படையில் விஜயகாந்தை சந்தித்தார். ஆனால், ரஜினி, இதுவரை சந்திக்கவில்லை. விஜயகாந்தின் திரையுலக சாதனையை பாராட்டவும் இல்லை. இதுபற்றி, தன் நண்பர் களிடம், விஜயகாந்த் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

NEWS TODAY 25.12.2025