Saturday, May 5, 2018

₹1k for aspirants going out of state for NEET

TIMES NEWS NETWORK

Chennai: 05.05.2018

Tamil Nadu chief minister Edappadi K Palaniswami on Friday announced ₹1,000 each to medical aspirants who have to travel to centres outside the state to appear for the National-Eligibilitycum-Entrance Test (NEET). The student and a person accompanying him or her will also be paid travel allowance equivalent to second class train fare.

“In order to address the difficulties faced by a few students appearing for the competitive examination at centres in other states, I have ordered travel allowance equivalent to second class train fare to the student and a person accompanying him or her, and ₹1,000 cash for other expenses,” the CM said.

NEET director Sanyam Bharadwaj said 1,000 to 1,500 students may have to travel outside the state to write NEET.

Tamil Nadu students can call toll-free helpline number: 14417 for any assistance, the chief minister said.


33.8K candidates to take NEET at 49 centres in city on May 6

While 33,842 candidates will take the test at 49 centres in Chennai on Sunday, 1,07,480 candidates will take it at 170 centres across the state. According to CBSE sources, 82,272 candidates wrote the test from 149 centres across TN in 2017.

Factoring in a 10% increase, the CBSE had expected 90,000 students to apply for the test this year, but nearly 17,000 more had enrolled for the test.

This year, 25,206 more candidates were allotted centres in Tamil Nadu compared to last year, say CBSE sources adding that 31% more candidates got allotted to their preferred centres.

Students who are to take the test in centres outside the state can avail of an advance payment from district educational officers, through the heads of schools, or claim cash they spend by producing travel documents. Those who receive cash in advance have to produce the documents to the officers upon their return. All students have to submit photocopies of hall tickets for the test and school ID cards.

Earlier in the day, opposition parties slammed the government for “its inefficiency” and for “putting students under enormous” pressure. DMK working president M K Stalin said the government should at least arrange special buses for students writing the exams in Kerala. In the case of those forced to to go to Rajasthan, it should provide air fare and accommodation for both students and their parents, Stalin said in a Facebook post.

MNM leader Kamal Haasan described “forcing poor students to sit for NEET in Kerala and Rajasthan” as a “gross injustice” in the age of the internet. “They can be enabled to sit for NEET in Chennai,” he said.

AMMK deputy general secretary T T V Dhinakaran said his party had arranged for a few of its office bearers to act as coordinators in 10 different cities in Kerala, where students from Tamil Nadu will be appearing for NEET. Needy students can contact the coordinators by telephone if they require accommodation and AMMK members will guide the students to the exam centres.
'நிர்பயா' வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : மே 04, 2018 22:20

புதுடில்லி: 'நிர்பயா' வழக்கில், மரண தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளில், இரண்டு பேர், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை, உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஆறு பேரால், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அதில், ராம் சிங் என்பவன், திஹார் சிறையில் தற்கொலை செய்தான். மற்றொரு குற்றவாளிக்கு, 18 வயது பூர்த்தி ஆகாததால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில், மூன்றாண்டுகள் அடைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டான்.இந்நிலையில், முகேஷ், 29, பவன் குப்தா, 22, வினய் சர்மா, 23 மற்றும் அக் ஷய்குமார் சிங், 31, ஆகியோருக்கு, டில்லி உயர் நீதிமன்றம், மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும்படி, வினய் சர்மா, பவன் குப்தா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை, நீதியின் பெயரால் நிகழ்த்தப்படுகிற படுகொலை' என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, இரு தரப்பு வழக்கறிஞர்களும், தங்கள் தரப்பு வாதத்தை அடுத்த வாரம், எழுத்து மூலம் சமர்ப்பிக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அதுவரை, இந்த மனு மீதான உத்தரவை, ஒத்தி வைத்தனர்.
ரூ.2,000, 500க்கு தட்டுப்பாடு : ஏ.டி.எம்.,களில் பணம் இல்லை

Added : மே 05, 2018 00:22 | 
 
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 2,000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் பலவங்கிகளின்ஏ.டி.எம்.,களில் பணமும் இல்லை.பாரத ஸ்டேட் வங்கிக்கு மாவட்டத்தில் 31 கிளைகள்,65 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. ஒரு வாரமாக 2,000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பணம் எடுப்போருக்கு 10, 20, 50, 100ரூபாய் நோட்டுகளே வழங்கப்படுகின்றன.மேலும்பல ஏ.டி.எம்., களில் பணம் வைக்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.அரசு ஊழியர்,ஆசிரியர்கள் கூறுகையில், 'பாரதஸ்டேட் வங்கி மட்டுமின்றி மற்ற வங்கி ஏ.டி.எம்.,களிலும் நான்கு தினங்களாக பணம் இல்லை. இதனால்சம்பளம் எடுக்க முடியவில்லை'என்றனர்.
வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மைசூரூவில் இருந்துபாரதஸ்டேட் வங்கிக்கு பணம் வருகிறது. பிப்ரவரியில் இருந்தே 2,000, 500 ரூபாய் நோட்டுகள் குறைவாக அனுப்பப்படுகின்றன'என்றார்.
டார்ஜிலிங் செல்ல 'குளுகுளு' ரயில்

Added : மே 05, 2018 00:27

கோவை: கேரளாவில் இருந்து, வரும், 18ம் தேதி டார்ஜிலிங் புறப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., கோடைகால 'ஏசி' சிறப்பு ரயிலுக்கு முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் கோடைகால சிறப்பு சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், வரும், 18ம் தேதி டார்ஜிலிங், கேங்டாங் செல்ல, முதல் வகுப்பு பெட்டிகள் இரண்டு, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் நான்கு, மூன்றாம் வகுப்பு பெட்டிகள் கொண்ட, 'ஏசி' சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து புறப்படும் ரயில் கொச்சி, பாலக்காடு, ஈரோடு, சேலம், சென்னை மற்றும் விஜயவாடா வழியாக விசாகப்பட்டினம் செல்கிறது.தொடர்ந்து, ஆந்திர மாநிலம் அரக்கு பள்ளத்தாக்கு, போரா குகைகள், சிக்கிம் மாநிலம் கேங்டாக், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மொத்தம், 12 நாட்களை உள்ளடக்கிய சுற்றுலாவுக்கு நபர் ஒருவருக்கு, 46 ஆயிரத்து, 200 ரூபாய் கட்டணம். வாகன வசதி, உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. விபரங்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40655; 98409 02919 ஆகிய எண்களிலும் www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.
ரயில் முன்பதிவுக்கு புதிய வசதி

Added : மே 05, 2018 00:38

புதுடில்லி: 'ஐ.ஆர்.சி.டி.சி., 'இ - வாலட்' பயனாளர்கள், இனி, 'ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட் ஆப்' மூலம், ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்' என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்து உள்ளது.ஐ.ஆர்.சி.டிசி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் வலைதளத்தில், 'இ - வாலட்' எனப்படும், மின்னணு பணப்பை வசதிக்காக, பதிவு செய்ய வேண்டும். இ - வாலட்டில், தங்களுடைய வங்கிக் கணக்குகளை இணைக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனெக்ட் ஆப் மூலம், ரயில் டிக்கெட்களை, பயணியர் முன்பதிவு செய்யலாம். இந்த ஆப் மூலம், 'ஓலா' டாக்சி சேவையையும் பெற முடியும். 'ஐ.ஆர்.சி.டி.சி., புட் ஆன் டிராக் ஆப்' மூலம், ரயில் பயணியர் உணவை, 'ஆர்டர்' செய்யலாம். உணவு வாங்கியதற்கு, 'பில்' கொடுக்கப்படாவிட்டால், அந்த உணவை, பயணியர் இலவசமாகவே பெற்றுக் கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்து   உள்ளது.

ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி, வாட்ச் அணிய தடை : 'நீட்' தேர்வு மாணவர்களுக்கு கட்டுப்பாடு

Added : மே 04, 2018 22:44

நீட் தேர்வு எழுதுவோருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம்:• தேர்வு மையத்திற்குள், புத்தகம், காகிதம், பேனா, சிறு குறிப்பு காகிதம், கணித உபகரண பெட்டி, கால்குலேட்டர், பென்சில், பிளாஸ்டிக் பவுச், ஸ்கேல், எழுதும் அட்டை, பென் டிரைவ், அழி ரப்பர், லாக் அட்டவணை, எலக்ட்ரானிக் பேனா, ஸ்கேனர் என, எந்த வித பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது.• மொபைல் போன், 'ப்ளூடூத்' கருவி, காதில் பொருத்தும் ஸ்பீக்கர், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட், பர்ஸ், தோள்பை, கைப்பை, பெல்ட், தொப்பி, கேமரா, வாட்ச் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை• மோதிரம், காது வளையம், ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி, செயின், நெக்லஸ், தொங்கட்டான், பேட்ஜ் மற்றும் உடல் அலங்கார ஆபரணங்கள் அணிந்து வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது• தண்ணீர் பாட்டில், ஜூஸ், ஸ்நாக்ஸ், நொறுக்கு தீவனங்கள் உள்ளிட்ட எந்த உணவு பொருளுக்கும் அனுமதி இல்லை. தேர்வு மையத்தில் குடிநீர் வசதி உண்டு. நீரிழிவு பிரச்னை இருப்பவர்களுக்கு, வசதிகள் செய்து தரப்படும்.

- நமது நிருபர் -
நீட்' தேர்வுக்கான வழிமுறைகள் என்ன?
மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுரை







 மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாளை நடக்க உள்ளது. இதில், பங்கேற்க வேண்டிய மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் வர வேண்டிய நேரம், தேர்வு எழுதும் முறைகளை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், கூறப்பட்டு உள்ளதாவது:

• காலை, 9:30 மணிக்கு பின், தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. 9:30க்கு, தேர்வுக்கான அறிவுரை வழங்குதல், ஹால் டிக்கெட் ஆய்வு போன்ற நடவடிக்கைகள் துவங்கும். 10:00 மணிக்கு தேர்வை எழுத துவங்க வேண்டும்; பகல் 1:00க்கு தேர்வு முடியும் தேர்வு மையத்தின் நேரம் என்பது, சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, கடிகார நேரத்தின் அடிப்படையில் கடைபிடிக்கப்படும்

• தேர்வு மையம், காலை, 7:00 மணிக்கே திறக்கப்படும். தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை நகல் எடுத்து, அதை தேர்வறைக்கு எடுத்து வர வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாதவர்கள், தேர்வு மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அளித்த புகைப்படத்தை பின்பற்றி, அதேபோன்ற இரண்டு புகைப்படங்களை, தேர்வு மையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்

• ஓ.எம்.ஆர்., எனப்படும், கணினி திருத்த விடைத்தாளில், சரியான விடையை எழுத, கறுப்பு அல்லது நீல நிற மை பேனா, தேர்வு மையத்திலேயே வழங்கப்படும். தேர்வர்கள் யாரும், பேனா எடுத்து செல்ல அனுமதியில்லை

• தேர்வறையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, தேர்வர்கள் அமர வேண்டும். வேறு இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதினால், அந்த தேர்வரின் விடைத்தாள் ரத்து செய்யப்படும்

கடைபிடிக்க வேண்டியவை:

• தேர்வு துவங்க உள்ள, 15 நிமிடங்களுக்கு முன், மூடி முத்திரையிட்ட உறையில், தேர்வுக்கான விடை எழுத வேண்டிய தாள் வழங்கப்படும். அதை வாங்கியவுடன், கவரின் மேல் பகுதியில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, தேர்வு மையத்தில், பந்து முனை பால் பாயின்ட் பேனா வழங்கப்படும். அதேநேரம், கண்காணிப்பாளர் கூறும் வரை, கவரை திறக்க கூடாது

• தேர்வு துவங்குவதற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன், கவரை பிரிக்க, கண்காணிப்பாளர் அறிவுறுத்துவார். விடை எழுத வேண்டிய தாளில், இரண்டாம் பக்கத்தில், குறியீட்டு எண் இருக்கும். அந்த எண், தேர்வருக்கு வழங்கப்பட்ட உறையில் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மாறியிருந்தால், கண்காணிப்பாளிரிடம் காட்டி, இரண்டு எண்ணும் சரியாக உள்ளதை பெற்று கொள்ள வேண்டும்

• கண்காணிப்பாளர் சொன்ன பிறகே, தேர்வு எழுத துவங்க வேண்டும்; அவர் அறிவுறுத்தியதும், தேர்வு எழுதுவதை முடித்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில், கண்காணிப்பாளர் கையெழுத்திட்டிருப்பதை, தேர்வு முடிந்ததும் உறுதி செய்ய வேண்டும்

• விடைத்தாளின் ஒரு பக்கத்தில், பதிவு எண், தேர்வரின் பெயர், தந்தை பெயர், தேர்வு மையத்தின் எண், தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விபரங்களை, அதற்காக குறிப்பிட்ட இடத்தில் நிரப்ப வேண்டும்.

தேர்வரின் கையெழுத்தையும் பதிவு செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில், பதிவு எண், தேர்வு மைய எண், விடைத்தாள் உறை எண், வினாத்தாள் குறியீடு ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இவ்வாறு தகவல் தொகுப்பில் கூறப்பட்டு உள்ளது.

'அடுத்தாண்டு சிக்கல் இருக்காது'

''தமிழக மாணவர்கள், நீட் தேர்வுக்காக, அடுத்த ஆண்டில், வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை இருக்காது,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 147 பொருட்கள் மீதான வரியை குறைக்க வலியுறுத்தினோம்; 95 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. இன்னும், 48 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட வேண்டும்.

'நீட்' தேர்வு என்பது, அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட முடிவு. தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நாங்கள் கடைசி வரை, நீட் தேர்வுக்கு உடன்படவில்லை. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு விதிவிலக்கு வேண்டும் என்பதில், மாற்று கருத்து இல்லை. சில மாவட்ட மாணவர்கள், இம்முறை, நீட் தேர்வு எழுத, வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, இந்த பிரச்னை இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

மைனஸ் மார்க்: கவனம் தேவை

இந்த தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து, கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையில், 180 கேள்விகள் இடம் பெறும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடையை தேர்வு செய்தால், ஒவ்வொரு தவறான விடைக்கும், மொத்த மதிப்பெண்ணில், தலா ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

இரட்டை விடைக்கு, 'கட்' :

ஒவ்வொரு வினா எண்ணிற்கு முன், நான்கு வட்டங்கள் இருக்கும். அதில், அந்த வினாவுக்கு சரியான விடையை, அதற்கான வட்டத்தில், 'மார்க்' செய்ய வேண்டும். விடையை மார்க் செய்யும் முன், ஒரு முறைக்கு, இரு முறை யோசித்து கொள்ள வேண்டும். ஏனென்றால், தவறான விடையை தேர்வு செய்தால், அதை மீண்டும் மாற்ற முடியாது. ஒரு கேள்விக்கு, ஒரு விடை மட்டுமே கணக்கில் எடுக்கப்படும். இரண்டு விடைகளை தேர்வு செய்திருந்தால், அதற்கு, எந்த மதிப்பெண்ணும் கிடையாது. ஒயிட்னர், அழிப்பான் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. பயன்படுத்தினாலும், அதை கணினி வழி திருத்தும் கருவி கண்டறிந்து, அந்த கேள்விக்கு மதிப்பெண் வழங்காது. சில கணக்கு மற்றும் சூத்திரங்கள் அடங்கிய கேள்விக்கு, 'ரப் ஒர்க்' தேவைப்பட்டால், விடைத்தாளின் இறுதியில், அதற்காக வழங்கப்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

எத்தனை மொழிகளில் தேர்வு?

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு, அனைத்து நகரங்களிலும் இடம் ஒதுக்கப்படும். மாநில மொழிகளாக, உருது, அஸ்ஸாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒரியா, தமிழ் மொழிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு, அந்தந்த மாநில தேர்வு மையங்களிலேயே இடம் ஒதுக்கப்படும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, வெளிமாநிலங்களில், இடம் ஒதுக்கப்பட்டுள்ள தால், அவர்களுக்கு, வேறு மாநிலங்களில், தமிழில் வினாத்தாள் வழங்கப்படுமா என்பது, தேர்வு நாளில் தான் தெரிய வரும்.

- நமது நிருபர் -

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...