சிறுமி பலியான விவகாரம் மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
2018-05-11@ 01:15:37
சென்னை: சென்னை, கொடுங்கையூர் காவேரிநகர் முதல்தெருவை சேர்ந்தவர் கோபி (32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லோகேஸ்வரி (28). இவர்களது மகள் தன்ஷிகா (5), கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த வாரம் மே 5ம் ேததி லோகேஸ்வரி, தனது மகளுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தட்டம்மை தடுப்பு ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டோம். உங்கள் குழந்தைக்கு மட்டும் இப்படி ஆனதற்கு என்ன காரணம் என தெரியவில்லை என அலட்சியமாக கூறியுள்ளனர். இதையடுத்து இந்த செய்தி கடந்த வாரம் மே 5ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தியாக வெளிவந்தது. இந்த செய்தியை பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்து இது சம்பந்தமாக மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரித்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
2018-05-11@ 01:15:37
சென்னை: சென்னை, கொடுங்கையூர் காவேரிநகர் முதல்தெருவை சேர்ந்தவர் கோபி (32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லோகேஸ்வரி (28). இவர்களது மகள் தன்ஷிகா (5), கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த வாரம் மே 5ம் ேததி லோகேஸ்வரி, தனது மகளுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தட்டம்மை தடுப்பு ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டோம். உங்கள் குழந்தைக்கு மட்டும் இப்படி ஆனதற்கு என்ன காரணம் என தெரியவில்லை என அலட்சியமாக கூறியுள்ளனர். இதையடுத்து இந்த செய்தி கடந்த வாரம் மே 5ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தியாக வெளிவந்தது. இந்த செய்தியை பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்து இது சம்பந்தமாக மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரித்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.