Sunday, May 20, 2018

தூக்க மாத்திரை கேட்டு இளைஞர்கள் தொல்லை: இரவு நேரங்களில் மருந்து கடைகளில் அட்டூழியம்

2018-05-19@ 15:10:57
செங்கல்பட்டு: போதைக்காக மருந்துக்கடைகளில் தூக்கமாத்திரை கேட்டு அலையும் இளைஞர்கள், ஊழியர்களை தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அன்மைக்காலமாக அரங்கேறி வருகிறது. செங்கல்பட்டை அடுத்த சிங்கெருமாள் கோவில் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மருந்து கடை ஒன்றில் 2 இளைஞர்கள் தூக்க மாத்திரை தரும்படி கேட்டிருக்கின்றனர். மருந்து சீட்டு இல்லாமல் தர முடியாது என ஊழியர்கள் கூறியதால் கடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து ஊழியர் மாரிமுத்துவின் கையில் குத்தியதுடன், அங்கிருந்த தொலைபேசி ரிசீவரை எடுத்து தலையில் சரமாரியாக கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுமட்டுமல்லாது கடையில் இருந்த 33 ஆயிரம் பணத்தையும் அவர்கள் திருடிச்சென்றுள்ளனர். இந்த தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மூப்பனார் பாலம் அருகேயுள்ள மருந்து கடையிலும் போதை ஆசாமிகள் தூக்க மாத்திரை கேட்டதுடன் பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர். இத்திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மாத இறுதிக்குள் டிடிஎஸ் செலுத்தாவிட்டால் தினமும் 200 வீதம் அபராதம்: வருமான வரித்துறை எச்சரிக்கை

    2018-05-19@ 00:43:48 புதுடெல்லி: பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதோடு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வருமான வரி சட்ட விதிகளின்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் டிடிஎஸ் தொகையை ஒவ்வொரு காலாண்டுக்கும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். டிடிஎஸ் பிடித்தம் செய்வோர் நிலுவை வைப்பதை தவிர்க்கவும் உடனடியாக செலுத்த செய்யவும் அபராதம் விதிப்பதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. இதில் வரி பிடித்தம் செய்வோர் கவனத்துக்கு. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை செலுத்த இந்த மாதம் 31ம் தேதி கடைசி. பிடித்தம் செய்த வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதித்தால், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும். எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட தொகையை பிடித்தம் செய்து வைத்திருந்தால் உடனடியாக வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும். பிடித்தம் செய்யாதவர்கள் உடனடியாக பிடித்தம் செய்து இந்த மாதத்துக்கு செலுத்த வேண்டும்.

இவர்கள் https://www.tdscpc.gov.in. இணையதளத்தில் தங்களது டான் எண் மற்றும் பிடித்தம் செய்தவர்களின் பான் எண் பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது டான் எண் குறிப்பிடாமல் டிடிஎஸ் பட்டியல் சமர்ப்பித்தாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானில் 25 நொடிகள் முன்னதாக கிளம்பிய ரயில்: மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்!

2018-05-18@ 17:40:26

கோக்கியோ: ஜப்பானில் குறிப்பிட்ட நேரத்தை விட முன்கூட்டியே ரயில் கிளம்பி சென்றதால் பொதுமக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். இதற்கு ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது. ஜப்பான் நாட்டில் நோட்டகவா என்ற ரயில் நிலையத்தில் இருந்து 7.12 மணிக்கு வழக்கம் போல் புறப்பட வேண்டிய ரயில் 25 நொடிகள் முன்னதாக கிளம்பி சென்றது. அந்த ரயிலில் பயணம் செய்யவிருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரயில் இல்லாததை கண்டு கோபமடைந்துள்ளனர். ஒரு சிலர் இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

பயணிகள் ரயிலை தவறவிட்டதை அறிந்த ரயில்வே நிர்வாகம் தவறுக்கு வருந்துவதாகவும், அடுத்த முறை இது போன்ற சம்பவம் நடைபெறாது எனவும் மன்னிப்பு கோரியுள்ளது. ரயில் நடத்துனர் நேரத்தை தவறாக புரிந்துகொண்டிருப்பதாக ஜப்பான் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் ஜப்பானில் வாடிக்கையாளர்களால் நிறுவனத்தின் தரத்தை குறைக்க காரணமாக அமையும். ரயில் ஒன்று கடந்த நவம்பரிலும் 20 வினாடிகள் மூன்கூட்டியே புறப்பட்டதற்கு ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.
சி.ஏ., படித்தால் வேலை நிச்சயம் : கலந்தாய்வு நிகழ்ச்சியில் விளக்கம்

Added : மே 20, 2018 00:40

தாம்பரம்: 'அர்ப்பணிப்புடன் படித்தால், எளிதாக சி.ஏ., ஆகலாம்' என, மாணவர்களுக்கான இலவச கலந்தாய்வு நிகழ்ச்சியில், அறிவுரை வழங்கப்பட்டது. 'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' படிப்பான, சி.ஏ., குறித்த, இலவச கலந்தாய்வு நிகழ்ச்சி, கிழக்கு தாம்பரத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட பட்டயக் கணக்காளர் கிளை அலுவலகத்தில் நடந்த, இந்த கலந்தாய்வில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடந்த கலந்தாய்வில், பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் பங்கேற்றனர்.சி.ஏ., என்றால் என்ன; இந்த படிப்பில் எப்படி சேர்வது; படிப்பின் முக்கியத்துவம்; பயன்கள்; தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்து, மாணவர்கள் கேட்டறிந்தனர்.சி.ஏ., படித்தால், என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து, மாணவர்கள் முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டனர்.கிளை அலுவலக தலைவர் சுந்தரராஜன், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சிவகுருநாதன் ஆகியோர், சி.ஏ., படிப்பு குறித்து விளக்கியதோடு, மாணவ - மாணவியரின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தனர்.பயனுள்ள இந்த கலந்தாய்வு நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் இன்று நடக்கிறது. கிளை தலைவர் சுந்தரராஜன் பேசியதாவது:மாணவர்கள், அவரவர் திறமையால் தான், படிக்க வேண்டும். அதற்கு, இது ஒரு வழிகாட்டி நிகழ்ச்சி மட்டுமே. இங்கு, சி.ஏ., படிப்பு குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்படும்.உந்துதல், அர்ப்பணிப்புடன் படித்தால், எளிதாக, சி.ஏ., முடிக்கலாம். சி.ஏ., படிப்பு கஷ்டமானது இல்லை. நான்கு வருடம் படித்தாலே போதும், எளிதாக, தேர்ச்சி பெறலாம். சி.ஏ., படித்தால், நிச்சயம் வேலை வாய்ப்பு உண்டு.இவ்வாறு அவர்

பேசினார்.
சீரடிக்கு தனி சிறப்பு ரயில்

Added : மே 19, 2018 21:57

கோவை:சீரடிக்கு தனி சிறப்பு ரயில் ஜூன் 3ம் தேதி மதுைரயிலிருந்து புறப்படுகிறது; ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., தெற்கு உதவி பொது மேலாளர் ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன்மூலம், ஆன்மிக தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை, 300க்கும் அதிகமான சுற்றுலாத் தலங்களுக்கு, லட்சக்கணக்கானோர் இதன்கீழ் பயணித்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, சீரடியில் அமைந்துள்ள சிறப்புமிக்க சாயிபாபா வழிபாட்டுத்தலத்திற்கு தனி ரயில் தமிழகத்திலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதி மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக சீரடி, பண்டரிபுரம், மந்த்ராலயம் வரை செல்கிறது. ஏழு நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒரு நபருக்கு 6 ஆயிரத்து 615 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டணத்தில் ஸ்லீப்பர் வசதி, தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க வாகன வசதி ஆகியவை அடங்கும். தவிர, ஒவ்வொரு கோச்சுக்கும் தகுதி வாய்ந்த மேலாளர்கள், பாதுகாவலர்கள், உணவு பரிமாறுபவர்கள், கிளீனிர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு வசதி உண்டு. விரும்புவோர் முன்பதிவுக்கு, 90031 40655 எண்ணிலோ, www.irctctourism.com யுனும் இணைய முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் வழித்தட எண் மாற்றம்

Added : மே 19, 2018 20:03

சென்னை:சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருவேற்காடுக்கு, 27சி வழித்தட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்தின் வழித்தட எண்ணை, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் மாற்ற முடிவு செய்துள்ளனர். அதன்படி, நாளை முதல், அதே வழித்தடத்தில், 27சி என்ற வழித்தட எண்ணுக்கு பதிலாக, 72சி என, எண் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட உள்ளது.ஏற்கனவே, இயக்கப்பட்டு வந்த, சாதாரண பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்து, டீலக்ஸ் பேருந்துகள், வழக்கம்போல், புதிய வழித்தட எண்ணில் இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலையில் பக்தர்கள் கூட்டம்

Added : மே 20, 2018 01:11

திருப்பதி: திருமலையில், வார விடுமுறையை ஒட்டி, பக்தர்கள், ஏழுமலையானை தரிசிக்க குவித்துள்ளனர். ஆந்திராவின், திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலில், கோடை விடுமுறை மற்றும் பள்ளி இறுதி தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, ஏழுமலையானிடம் வேண்டுதல் வைத்திருந்த பக்தர்கள், அதை நிறைவேற்ற, திருமலையில் குவிந்து வருகின்றனர்.அதனால், பக்தர்களுக்கு, 26 மணி நேரத்திற்கு பின், தரிசன நேரம் ஒதுக்கப்படுகிறது. காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்களும், 26 மணிநேரத்திற்கு பின், ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுகின்றனர்; எனவே, திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.பக்தர்களின் வருகைக்கு தக்கபடி, தேவஸ்தானமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...