Saturday, May 26, 2018

TN mulls extending metro to Vandalur bus terminus

U.Tejonmayam@timesgroup.com

Chennai: 26.05.2018


In the next few years, metro rail services may be extended up to the proposed satellite bus terminus at Kilambakkam near Vandalur on GST Road. Chief minister Edappadi Palaniswami, who inaugurated six underground metro rail stations in the city on Friday, said the government may soon conduct a feasibility study.

“A study will be conducted to extend the metro line, which links the airport, up to the proposed mofussil bus terminus and integrate it will all rapid transport systems in the city,” the CM said.

Palaniswami and Union minister of state for housing and urban affairs Hardip Singh Puri flagged off the commercial operation of trains services along the stretch from Central Metro to Nehru Park and AGDMS to Little Mount.

The terminus, which will house buses bound for southern districts as well as MTC buses, will be built on a 35-acre plot at an estimated cost of ₹300 crore. A detailed project report for the terminus, for which a portion of land is yet to be cleared by the Archaeological Survey of India, is being prepared by a consultant.

Experts have welcomed the extension plan as it will encourage more people to use the mass rapid transit system.

EPS urges Centre for quick release of funds for metro Phase 2

Chennai: “Connecting two modes of transport is a great idea, as multi-modal transport is the best way to make public transportation attractive to commuters, at a time when Chennai city, as a whole, is extending. With more lines coming up, at some point, metro will become like a mini road network,” said R Sivanandan, professor, transportation engineering division, IIT Madras.

The chief minister said Japan International Cooperation Agency (JICA) has come forward to fund the construction of two of three corridors — Madhavaram and Sholingannalur and Madhavaram to Koyambedu — in Phase 2 (107.55km) of the metro rail project. “I urge the Centre for early approval and sanction of their share of funds for the project,” he said. “We will begin construction for Phase 2 once we receive funds from JICA.”

The state submitted a detailed project report to the Centre last year for approval. Efforts are on to secure financial assistance from Asian Development Bank for a third corridor that will link Light House and CMBT, he said.

Elaborating on the progress of the project, he said 35km of the total 45km of Phase 1 is now operational; the 10km stretch from Washermenpet to AG-DMS will be ready by the end of 2018.

“So far, about 1.64 crore [people] have taken the metro. With the opening of the new stations, metro will connect all major transport hubs — Central, Egmore, CMBT and the airport,” he said, adding that footfalls are expected to increase significantly.
மக்களைக் கொல்வதற்கல்ல அரசு!

Published : 24 May 2018 09:28 IST

the hindu tamil




தூ த்துக்குடியில் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிரான போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்டுவரும் விதம், இந்த ஆட்சி யின் சகல அலங்கோலங்களையும் ஒருசேர வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘ஆலையை மூட வேண்டும்’ என்று பல்லாண்டுகளாகப் போராடிவரும் மக்கள், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே தற்போதைய போராட்டத்தை முன்னெடுத்தனர். முறையான பேச்சுவார்த்தை வழியே இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராமல் அலட்சியப்படுத்தி, மூன்று மாதங்களுக்கும் மேல் அந்தப் போராட்டத்தை நீடிக்கவிட்ட அரசு, போராட்டத்தின் நூறாவது நாளன்று காவல் துறை மூலம் சகிக்க முடியாத முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடுகளில் பத்து பேர் கொல்லப்பட்டிருப்பது ஜீரணிக்கவே முடியாத படு பாதகம். சம்பவம் தொடர்பான காணொலிகள் ஒவ்வொன்றும் பதறவைக்கின்றன. ஏதோ வேட்டைக் காரர்கள் குருவியைச் சுடுவதுபோல, போலீஸ் வண்டியின் மீது நின்றபடி, நிதானமாகக் குறி பார்த்து போலீஸ்காரர்கள் மக்களைச் சுடும் காட்சி களானது தமிழகக் காவல் துறைக்கு மனித மாண்பு கள் மீது துளியேனும் மதிப்பிருக்கிறதா எனும் கேள்வியையே எழுப்புகிறது.

இன்று நாம் கடைப்பிடித்துவரும் தொழில் கொள்கையானது தமிழகத்தின் பல பகுதிகளிலும் சூழலி யல் கேடுகளை உண்டாக்கியிருக்கிறது. அவ்வகையில், தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் கெட சம்பந்தப்பட்ட ஆலையும் ஒரு காரணமாகி இருக்கிறது. விளைவாகவே அந்த ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி மறுத்தது. தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பின் நிறைய நியாயங்கள் இருக்கின்றன. அரசே முன்வந்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அரசு அதைச் செய்யாத சூழலிலேயே போராட்டத்தில் மக்கள் இறங்கினர். அதற்குப் பின்னரேனும் மக்களுடன் ஆட்சியாளர்கள் நேரடியாகப் பேசியிருக்க வேண்டும்; நடக்கவில்லை.

நூறு நாட்கள் வரை போராடிய மக்களை அலட்சியப்படுத்தியது அரசு. நூறாவது நாளன்று பேரணியாகப் பெருந்திரள் மக்கள் திரள்வார்கள் என்ற சூழல் எழுந்தபோது, மக்கள் ஒன்றுகூடத் தடை விதித்தது. அரசியல் கட்சிகள் முன்னின்று மேற்கொள்ளாத இத்தகைய போராட்டங்களில் உள்ள மிக முக்கியமான அபாயம், ‘யாரும் அங்கு வந்து கலக்கலாம் - நிலைமை கட்டு மீறலாம்’ என்பது. அமைதியாக நீடித்த போராட்டம், திடீரென்று வன்முறைச் சூழலுக்கு மாறியதும் கலவரம் வெடித்ததும் இதையே வெளிப்படுத்துகின்றன. ஆட்சியின் பிரதி நிதிகள் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையைக் காவல் துறை மூலம் கையாள முற்பட்டதன் விளைவு, தம் சொந்த மக்களையே கொல்லும் அரசைக் கொண்ட மாநிலம் எனும் அவலத்துக்கு தமிழ்நாட்டை இன்று கொண்டுசென்றிருக்கிறது.

முதல்வராக பழனிசாமி ஆட்சிப் பொறுப்பேற்றது முதலாகவே காவல் துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துவருகின்றன. அரசு அவற்றை முளையிலேயே கிள்ளாததாலேயே இவ்வளவு மோசமான சூழல் இன்று ஏற்பட்டிருக்கிறது. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்பவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளில் ஒன்று இது. அளவுக்கு அதிகமாக அதிகாரிகளை நம்புவதும், விளைவாக அரசு இயந்திரத்தை உரிய வகையில் கையாளத் தெரியாமல் திணறுவதும். சமூகப் பிரச்சினைகளைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கையாளும் தவறு இந்த இடத்தில்தான் உருவாகிறது.

மக்கள் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகள் வாயிலாகவே எதிர்கொள்ள வேண்டும். போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, போராட்டம் நடத்துபவர் கள் மீது தடியடி, போராட்டங்களை ஒருங்கிணைப் பவர்களின் மீது குண்டர் சட்டத்தில் வழக்குகள் பதிவுசெய்வது என்று இந்த அரசு தொடர்ந்து கடைப்பிடித்துவரும் சட்டம்-ஒழுங்குக் கொள்கை, காலனியாட்சிக் காலத்தையே நினைவுபடுத்துகிறது. மக்கள் குரலுக்கு மதிப்பளித்து அவர்களோடு உரையாட வேண்டிய ஓர் அரசு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையைக் கொண்டு சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவது கூடாது. அடக்குமுறையால் ஏற்படுத்தப்படும் மவுனத்துக்குப் பெயர் சமூக அமைதியும் அல்ல.

உடனடியாக முதல்வர் தூத்துக்குடிக்குச் செல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளோடு கலந்து பேசி இந்தப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அவரே முன்னின்று மேற்கொள்ள வேண்டும். இனி ஒருமுறை இப்படி யான தவறுகள் நடக்காதவண்ணம் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அதிகாரிகள் ஒவ்வொருவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூத்துக்குடியில் அமைதி திரும்ப சகல தரப்பினரும் கைகோக்க வேண்டும்.
சின்ன சின்ன வரலாறு: 7- காபியோ காபி

Published : 25 May 2018 15:06 IST

லதா ரகுநாதன் 
 
 

இப்போது நம் பழக்கம் நிறையத்தான் மாறிவிட்டது. கடைகளில் கலர்கலராக விதவிதமான சுவைகளில் விற்கப்படும் சாஃப்ட் ட்ரிங்க்ஸ், டீ என்று குடிக்கத்தொடங்கிவிட்டோம். ஆனால் சில வருடங்கள் முன்பு வரை வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் நாம் கேட்கும் ஒரே கேள்வி "காபி சாப்பிடறீங்களா?". உபசரிப்பிற்கு ஏற்ற ஒரு பானமாக எல்லோராலும் தேர்வு செய்யப்பட்டது இந்தக் காபி.

என்ன காரணத்தினாலோ டீ காபிக்கு ஒரு படி கீழேதான். ஹோட்டல்களில் விலைபட்டியலிலும் காபி விலை டீ விலைக்கு மேல் தான் இருக்கும். இப்படி நம்மில் ஊறிய காபியின் வரலாறு இந்த பானத்தைப் போலவே நமக்கு இப்போதும் ஒரு புதுத் தெம்பு அளிக்கக்கூடியதுதான்.

கால்டி என்றப்பெயருடைய ஒரு ஆடு மேய்பவர், எதியோப்பியாவில் ஒன்பதாவது நூற்றாண்டில் அகஸ்மாத்தாக அவர் ஆடுகள் இந்தக் காபி செடியின் இலைகளைச் சாப்பிட்டபின் குதித்தோடியதைப்பார்த்து காபி பாணத்தை கண்டுபிடித்ததாக ஒரு கதை உண்டு . இவர் காப்பிக்கொட்டைகளை கடித்துப்பார்த்து கொஞ்சம் உற்சாகம் ஏற்படுவதை கவனித்து , அங்கே உள்ள துறவியிடம் எடுத்துச்சென்றாராம். துறவி அவற்றை நெருப்பில் போட அப்போது அங்கே எழுந்த மணத்தில் அனைவரும் மயங்கி, வருத்துக்கிடந்த கொட்டைகளை நெருப்பு அணைவதற்குத் தண்ணீரில் போட , காபி பானம் உருவானதாம். ஆனால் இது வெறும் கட்டுக்கதை.


உண்மையான கண்டுபிடிப்பு ஷேக் அபுல் ஹாசனின் சீடர் ஒமார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று அப்த அல் கதிர் என்பவர் எழுதிவைத்துள்ள குறிப்புகள் மூலம் சொல்லப்படுகிறது.

இதன் பின்னணியைக் கேட்டால் நீங்கள் திகைத்துப்போய்விடுவீர்கள். ஒமர் ஒரு சூஃபி துறவி. தன் பிரார்தனை மூலமே வியாதியைக் குணப்படுத்தும் இவர், ஒருமுறை நாடுகடத்தப்பட்டார். அவர் அனுப்பப்பட்டது ஒரு பாலைவனத்திற்கு. சாப்பிட எதுவும் கிடைக்காமல் பக்கம் இருந்த ஒரு செடி புதரின் காய்களைப் பறித்து சாப்பிட்டாராம்.

கசப்பாக இருக்கவே அவற்றை நெருப்பில் வறுத்தாராம். அப்போது அவை கறுத்து கடினப்பட்டுப்போகவே , அதைச் சரிசெய்ய தண்ணீரில் கொதிக்க விட நம் காபி பானம் பிறந்ததாம். குடித்துப்பார்த்து அவர் உடல் புத்துணர்வு கொள்ள, காபியை ஒரு அதிசய மருந்து என்று மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினாராம். ஆக, காபி முதன் முதலில் மருந்தாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். நாளடைவில் ஒரு உற்சாக பானமாகி பின் நம் அன்றாட தேவையாக மாறிவிட்டது.


காபியும் போதை பொருள் போல் நம்மை அடிமைப்படுத்திவிடும். நமக்குத்தெரிந்த நிறையப் பேர் காலையில் காபி சாப்பிடவில்லை அதனால் தலைவலி வந்துவிட்டது என்று சொல்லி கேட்டிருப்பீர்கள். காபியில் உள்ள கஃபேன் எனும் மூலப்பொருளுக்கு இந்தப் போதை ஏற்றும் தன்மை உள்ளது. காபியின் முதல் ஏற்றுமதி காராச்சியிலிருந்து ஏமன் நாட்டிற்கு நடந்தது. ஏமன் நாட்டில் காபி கடவுள்.

வழிபாட்டில் கடவுள் பெயரைச்சொல்லும்போது உற்சாகம் ஏற்படுத்தும் பானமாக முதலில் உபயோகித்தார்கள். சூஃபிக்கள் இரவு கடவுள் வழிபாட்டின்போது தூக்கம் வராமல் இருப்பதற்குக் காபி குடித்தார்கள். மெதுவாக இந்தப் பானம் 1414 ல் மெக்காவிற்கும் , 1500 ல் எகிப்த் நாட்டிற்கும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஊடுருவத் தொடங்கியது.

மெக்காவில் கிபி 1511 இந்தப் பானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. சொல்லப்பட்ட காரணம் அதன் உற்சாகப்படுத்தும் தன்மை. அதேபோல் 1532 வில் எகிப்திய மன்னரும் காபிக்கு தடை விதித்தார். இந்தக் கால கட்டத்தில் காபி பானம் மெதுவாக இத்தாலி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தலை காட்டத்தொடங்கியது. எதியோப்பியாவின் தேவாலயங்களும் காபியை ஒரு முஸ்லீம் பானம் என்று கருதி அதைத்தடை செய்தன.


பத்தொன்பதாவது நூற்றாண்டின் கடைசியில்தான் பல தேசங்களில் காபி மீதான தடைகள் நீங்கத்தொடங்கின. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் இப்படிப்பட்ட தடைகள் நீடித்திருந்தால் நாம் இப்போது பார்க்கும் காபி விளம்பரங்களின் கீழ் காபி குடிப்பது உடல் நலத்திற்கு கேடுவிளவிக்கும் என்ற சட்டபூர்வ எச்சரிக்கை கொடுத்திருப்போம்.

இங்கிலாந்து நாட்டிற்குக் காபியின் அறிமுகம் கிழக்கிந்திய கம்பெனி மூலம் நடந்தது.லண்டனில் உள்ள கார்ன்ஹில்லில் முதல் முதல் காபிஹவுஸ். பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. 1654-ல் தொடங்கப்பட்ட க்வீன்ஸ் லேன் காபி ஹவுஸ் இன்றும் இருக்கிறது. ப்ரான்ஸ் நாட்டில் கிங் லூயி XIV அவரின் காலமான 1646-1715 ல் இந்தப் பானம் பால் சக்கரையுடன் கலக்கப்பட்டு அரேபிய மருத்துவத்தின் ஒரு மருந்தாக அறிமுகம் ஆனது.

1673 ல் காஃபியாக அறிமுகமாகி பின் கஃபே என்று மாறுதல் அடைந்து தற்போது kaffee யாக ஜெர்மனியில் தொடர்கிறது அமெரிக்காவை பொறுத்தவரையில் 1773 பாஸ்டன் டீ பார்டிக்கு பின்னர் டீ அருந்துவது நாட்டுபற்றிலாத செயலாகக் கருதப்பட்டு காஃபிக்கு அனைவரும் மாறினர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பாபா புடன் என்ற துறவியால் 1670-ல் அறிமுகம் செய்யப்பட்டு கர்நாடகா கேரளா மற்றும் தமிழ் நாட்டில் மலைப்பரதேசங்களில் காபி தோட்டங்கள் அமையத்தொடங்கின. காபி குடிப்பது அதிகரித்தது. உடனே காபியின் மதிப்பும் உயர்ந்தது. 1660 யின் தொடக்கத்தில் லண்டனில் உள்ள காபி கிளப்புகள் சமூக கலாச்சார அமைப்புக்களாக அரும்பத்தொடங்கின. இங்கே முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. கலை சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அமெரிக்கன் ரெவல்யூஷனுக்கும் பிரென்ச் ரெவெல்யூஷனுக்கும் இது போல் ஒரு காபி களப்பில்தான் திட்டமிடுதல் ஆரம்பம் ஆனதாம். இன்றும் நாம் இந்த பழக்கம் மாறாமல் மிகவும் உயர்ந்ததாக எண்ணப்படும் புத்தகங்களை “ The coffee Table Book “ என்று தான் சொல்கிறோம்.
பழைய புண்களைக் கீறிப் பார்க்க இது நேரமில்லை!: தேவ கவுடா பேட்டி

Published : 25 May 2018 08:51 IST

முரளிதர கஜானே



மதவாத பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று விரும்புகிறார் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல் தலைவருமான எச்.டி.தேவகவுடா. அவருடைய பேட்டி:

பாஜகவை எதிர்க்கும் எல்லா கட்சிகளையும் எதற்காக கர்நாடக அரசு பதவியேற்பு விழாவுக்கு அழைத்தீர்கள்?

என்னுடைய அழைப்புக்கு வெவ்வேறுவித மான விளக்கங்களைப் பலரும் அளிக்கின்றனர். பாஜகவை எதிர்க்கும் எல்லா கட்சிகளை யும் அழைப்பதுதான் நோக்கம். அதில் சிலர் காங்கிரஸையும் எதிர்ப்பவர்களாக இருக்கக்கூடும். அனைவருடைய அரசியல் பொது திட்டமும் 2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜகவை அதிகாரத்திலிருந்து நீக்க வேண்டும் என்பது. இவ்விரு தரப்பினரையும் ஒரே மேடையில் இணைப்பதுதான் நோக்கம். பாஜகவுக்கு எதிரான அணி எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். பாஜகவுக்கு எதிரானவர்கள் அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள் என்ற தகவல் மக்களுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது என்று நம்புகிறேன்.

காங்கிரஸ் இல்லாத பாஜக எதிர்ப்பு அணியை உருவாக்குவது சாத்தியமா, அதனால் பலன் இருக்குமா?

கர்நாடகத்தில் இப்போது காங்கிரஸின் தோழமைக் கட்சியாகிவிட்டோம். நேர்மையாகச் சொல்வதென்றால், காங்கிரஸ் இல்லாமல் பாஜக எதிர்ப்புக் கூட்டணி அமைப்பது சாத்தியமே இல்லை. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு அமைப்பு, தொண்டர்கள், ஆதரவாளர்கள் இருப்பதால் இப்போது இல்லாவிட்டாலும் கூட்டணி பற்றிப் பேசும்போது காங்கிரஸை அழைத்தே தீர வேண்டும். காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளில் வெற்றி கிடைத்தால் அது இயல்பாகவே அணியின் முக்கிய கட்சியாகிவிடும். ஆனால், இந்த நடவடிக்கைகளில் நான் தலையிட மாட்டேன்.

மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு தந்தது பலருக்கும் வியப்பாக இருந்தது; இது எப்படி நடந்தது?

கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சியினர் என்னைத் தாக்கிப் பேசியது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. எதிர்க்கட்சி வரி சையில் உட்கார எங்களைத் தயார்படுத்திக்கொண்டோம். கடந்த ஓராண்டில் நாட்டின் நலன் கருதித்தான், என்னையும் என் கட்சியையும் சிறுமைப்படுத்திப் பலரும் பேசியதையெல்லாம் சகித்துக்கொண்டோம்.

கர்நாடக சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்காமலே எடியூரப்பா வெளியேறியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அது நீதித் துறைக்குக் கிடைத்த வெற்றி. எதிர்க்கட்சிக்காரர்களை பாஜக விலை கொடுத்து வாங்க முடியாமல், குறுகிய கால அவகாசம் அளித்து ஜனநாயகத்தை மீட்டது உச்ச நீதிமன்றம்தான். இதற்கும் முன்னதாக எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை வாதப் பிரதிவாதங்களைக் கேட்டு உத்தரவிட்டதன் மூலம் மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கேற்ப நடந்துகொண்டது உச்ச நீதிமன்றம்.

காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசு நீண்ட நாள் பதவியில் இருக்கும் என்று நம்புகிறீர்களா?

பழைய புண்களைக் கீறிப்பார்க்க இது நேரமில்லை. கடந்த காலங்களில் எங்களாலும் காங்கிரஸாலும் செய்யப்பட்ட தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் நானும் என்னுடைய மகன் முதலமைச்சர் குமாரசாமியும் உறுதியாக இருக்கிறோம். மதச்சார்பின்மை என்ற கொள்கைக்காக வாழ்ந்தவர் என்ற வகையிலும் நான் வகித்த பிரதமர் பதவிக்குரிய அந்தஸ்தைக் காக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட வேண்டியது என்னுடைய கடமை. நாட்டு மக்களின் எண்ணங்களைக் கேட்டுச் செயல்பட்டாக வேண்டும்.

‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில்: சாரி
எப்போது ஓட்டுவீர்கள் அந்த்யோதயா ரயிலை?

Published : 25 May 2018 08:52 IST

கி.ஜெயப்பிரகாஷ்

  முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை, அவஸ்தையைச் சராசரி இந்தியர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். 1930-களிலேயே கூட்ட நெரிசல் கொண்ட ரயில் பெட்டிகளை ‘பூலோக நரகம்’ என்று வர்ணித்திருக்கிறார் திரு.வி.க. அந்நிலை இன்று வரை மாறவில்லை. இப்படியான சூழலில், முன்பதிவு செய்யாமல், குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த ‘அந்த்யோதயா’ விரைவு ரயில் வெறும் அறிவிப்புடன் நின்றுவிட்டது பயணிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தாம்பரத்திலிருந்து விழுப்புரம், தஞ்சை வழியாகத் திருநெல்வேலிக்கு ஏப்ரல் 27 முதல் தினமும் அந்த்யோதயா விரைவு ரயில் இயக்கப்படும் என ஏப்ரல் 25-ல் தெற்கு ரயில்வே அறிவித்தது. 16 முன்பதிவில்லா இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் கொண்ட இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவித்தது. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் குறைந்த கட்டணத்தில் தினமும் பயணிக்க முடியும் என்பது பெரும் ஆறுதலைத் தந்தது. ஏற்கெனவே, பேருந்துக் கட்டணம் கடுமையாக உயர்ந்திருப்பதால், ஊருக்குச் செல்வதே பெரும்பாடாகியிருக்கும் நிலையில், இதுபோன்ற ரயில்கள் பயணிகளுக்கு வரப் பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்படியெல்லாம் எளிதில் நமக்கு நன்மை வாய்த்துவிடுமா? இந்த ரயில் சேவை தொடக்கத் தேதியைத் திடீரென ரத்துசெய்துவிட்டது தெற்கு ரயில்வே. ஏன் நிறுத்தப்பட்டது என்றோ, எப்போது தொடங்கிவைக்கப்படும் என்றோ சொல்லவில்லை. கொண்டுவரப்பட்ட ரயில் பெட்டிகளும் தாம்பரம், பல்லாவரம் பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. “பஸ் அதிபர்களின் ‘லாபி’ காரணமாகவே கோடை விடுமுறை முடியும் வரை ரயில் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் பயணிகள். “காரணமெல்லாம் இப்போதைக்குச் சொல்ல முடியாது. நிர்வாகரீதியாக எடுக்கப்பட்ட முடிவு இது. எனினும், இந்த ரயில் சேவையை விரைவில் தொடங்கு வோம்” என்று மட்டும் சொல்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.

தற்போது, கோடை விடுமுறை கிட்டத்தட்ட முடியப்போகும் இந்தத் தருணம் வரை அந்த்யோதயா இயக்கப்படவில்லை. ஏற்கெனவே, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதைப் பார்க்க முடிகிறது. தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்களும் யானைப் பசிக்கு சோளப்பொரிதான். பல மடங்குக் கட்டணம் வசூலிக்கும் சுவிதா ரயில் களும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சிறப்பு ரயில்களும் மட்டுமே ஒரே வழி. இதனால், சாதாரணக் கட்டணத்தில் பயணம் செய்யும் மக்களின் நிலை படுமோசமாகிவிட்டது. இந்நிலையில், அந்த்யோதயா ரயில் சாமானிய மக்களுக்குக் கைகொடுக்கவில்லை என்பது கூடுதல் துயரம்தான்!

- கி.ஜெயப்பிரகாஷ், தொடர்புக்கு: jayaprakash.k@thehindutamil.co.in
தூங்கும்போது பாம்பு கடித்தது தெரியாமல் பால் கொடுத்த தாயும், குடித்த குழந்தையும் பலி

Published : 25 May 2018 19:01 IST

பிடிஐ முசாபர்நகர்
 



கோப்புப்படம்

தூங்கும்போது பாம்பு கடித்தது தெரியாமல், அழுத குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில், மண்டலா கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண், அவரின் இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த பெண்ணுக்கு தெரியாமல், அவரை பாம்பு கடித்துள்ளது.

அதன்பின் சிறிது நேரத்தில் குழந்தை பசியெடுத்து பாலுக்கு அழுதுள்ளது. தன்னை பாம்பு கடித்தது தெரியாமல் குழந்தைக்கும் அந்த பெண் பாலூட்டியுள்ளார்.

ஆனால், சிறிது நேரத்தில் இருவரும் உயிருக்கு போராடவே, அவர்களை உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாய் உயிரிழந்தார். சிகிச்சை பலன்அளிக்காமல் குழந்தை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து முசாபர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
2ஜி மேல்முறையீட்டு வழக்கு தாமதப்படுத்தப்படுகிறதா?-உயர் நீதிமன்றதில் மத்திய அரசு புகார்

Published : 25 May 2018 20:37 IST

புதுடெல்லி



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 10 பேர், 9 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்தது. அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.

இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே மேல்முறையீடு செய்தன. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.பி. கர்க் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், டெல்லி உயர் நீதிமன்ற நோட்டீஸ் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரினர்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “வழக்கை தாமதப்படுத்தும் உத்தியை இவர்கள் கடைப்பிடிக்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். சிபிஐ மேல்முறையீட்டு மனு மீதான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதியும் அமலாக்கத்துறை மனு மீதான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 6-ம் தேதியும் நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict

NEET SS 2025 counselling deadlock ends as MCC prepares revised Round 2 schedule after SC verdict  TOI Education | Jul 29, 2026, 10.12 AM IST...