Sunday, June 10, 2018

It’s official: Monsoon arrives a day early and comes pouring with its usual woes

TEAM TOI  10.06.2018

Mumbai:

Monsoon arrived in Mumbai with a bang early Saturday and headed straight to the town. While most areas in the city received a fair amount of rainfall, it was the island city that got the maximum. Fort received 207mm and Nariman Point 153mm rainfall in 13 hours—8am to 9pm—as recorded by BMC’s automatic weather stations. Byculla received 162mm in the same period. The India Meteorological Department’s Colaba observatory, an indicator for south Mumbai, recorded 157mm rainfall, while its Santacruz observatory, an indicator for the rest of Mumbai, saw 64mm between 8.30am and 8.30pm.

The island city, also the area which saw the most number of rain-related problems, received 108mm in three hours—5.30pm to 8.30pm. Bhandup and Mulund (172mm and 112mm respectively between 2am and 5pm) were among the few areas in the suburbs that received triple-digit rainfall. In stark contrast, there was Malad which received just 20mm, Kandivli 24mm and Goregaon 26mm. While the neighbouring Thane recorded 120mm, Bhiwandi recorded 210mm rainfall in 24 hours. In Navi Mumbai, the 24-hour rainfall was 153mm.

The rains brought along the usual partners: Water-logging and traffic jams. Though several low-lying areas in Mumbai were water-logged, leading to traffic snarls, the BMC decided to put the flooded areas’ figure at just 12. The usual offender, Hindmata Junction, forced municipal commissioner Ajoy Mehta to visit the spot and take stock. The BMC passed the buck to rain Gods and its officials said water-logging in Parel, Sion and Kurla was caused due to nearly 100mm rainfall in a very short span of time.

“There was knee-level water-logging at Hindmata Junction after just one hour of rain. Shops had to be shut and water was being pumped out of them,” said Sheetal Porwal, a local. She also said schools reopen on Monday after summer vacation and school buses will not come to pick up children if this happens after every downpour. Railway tracks too were flooded, delaying local trains by nearly 20-25 minutes.

Amid this chaos, BMC said its performance this year is better compared to last year as water receded quickly. Mehta said, “3,000 BMC staffers were on the road on Saturday. We managed to minimize waterlogging problems as we have paid attention to each flooding spot by widening the drainage system in those areas.” said Mehta. He added that on Saturday there was no problem at some spots that usually flood every year.
100க்கு 120 மதிப்பெண்கள்’ - இன்ப அதிர்ச்சியில் பீகார் மாணவர்கள்: பிளஸ் 2 தேர்வில் அடுத்த முறைகேடு அம்பலம்

Published : 09 Jun 2018 10:43 IST

பாட்னா
 



நீட் தேர்வில் நாடுதழுவிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி, பீகாரில் நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வருகைபதிவு இல்லாத அனுமதிக்கப்பட்ட நிலையில், இதே தேர்தவில், மொத்த மதிபெண்களை விடவும் கூடுதலான மதிப்பெண் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

நாடுமுழுவதும் நீட் தேர்வு சமீபத்தில் நடந்தது. தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

  நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மற்ற பல மாநிலங்களை விட தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. வெறும் 39.9 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநில மாணவர்கள், தமிழகத்தை விடவும் அதிகஅளவில் வெற்றி பெற்றனர். தமிழகத்தை சேர்ந்த ஒரே மாணவி மட்டும் 12வது இடம் பிடித்தார்.

இந்த தேர்தவில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி என்ற மாணவி 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பின்தங்கி இருந்த மாநிலமான பீகாரில் இருந்து மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு தேவை என்ற நிலையில், அது இல்லாமலேயே அவருக்கு தேர்வு எழுத அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கல்பனா குமாரி நீட் தேர்வில் மட்டுமின்றி பீகார் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

ஆனால் பீகார் கல்வி அமைச்சரோ இதுபோன்ற சர்ச்சையை யாரும் எழுப்ப வேண்டாம், பீகார் மாணவி அதிக மதிப்பெண் பெற்றுள்ளதை மட்டும் கொண்டாடுவோம் எனக் கூறினார்.

இந்நிலையில் பீகார் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12-ம் வகுப்பு தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்த மதிப்பெண்களை விடவும் மாணவர்கள் கூடுதலாக மதிப்பெண் பெற்றுள்ளனர். 100 சதவீதத்திற்கு 130 சதவீத மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இயற்பியலில் 65 மதிப்பெண்கள் தேர்வக்கும், 35 மதிப்பெண்கள் செய்முறை தேர்வுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் ஆர்வால் மாவட்டத்தைச் சேர்ந்த பீம் குமார் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35க்கும் அதிகமாக 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதுபோலவே வேதியியலில் சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35 விடவும் அதிகமாக 39 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோலவே எழுத்து தேர்விலும் தனித்தனியாக போடப்பட்ட மதிப்பெண்களை கூட்டி பார்த்தால் வரும் மதிப்பெண்களை விடவும் கூடுதலாக ‘இலவச’ மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளளன.

வேறு சில மாணவர்களுக்கு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காத நிலையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கணிதத்தில் மூன்று விடையில் ஒன்றை தேர்வு செய்யும் அப்ஜெக்டிவ் தேர்வு மொத்தம் 35 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் கிழக்கு சாம்ரான் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் ராஜ் என்ற மாணவர் 40 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதைவிட கொடுமையாக, வைஷாலி என்ற மாணவி உடல் நிலை சரியில்லாததால் உயிரியல் தேர்வை எழுதவில்லை. அந்த தேர்வில் வைஷாலிக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் பெற்ற 18 மதிப்பெண்ணையும் சேர்த்து, உயிரியில் தேர்வில் அவர் 38 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுபோலவே ஆங்கிலம் உள்ளிட்ட மொழி பாடங்களிலும் மதிப்பெண் ‘மழை’ பொழிந்துள்ளது. இதனால் பீகார் மாணவர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தேனீக்கள் கொட்டி 10 பேர் காயம்

Added : ஜூன் 10, 2018 04:13




தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவிலில், கேரளாந்தகன் நுழைவு வாயிலிலிருந்து, பறந்த தேனீக்கள் கொட்டியதில், 10 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர், பெரிய கோவில் கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில், 5 ம் தேதி, இடி தாக்கியதில், சுதை யாழி பொம்மை சேதமடைந்தது. அதை சீரமைக்கும் பணிக்காக, நேற்று, கோவில் பணியாளர்கள் இரும்பு கம்பியாலான சாரம் அமைத்தனர்.அப்போது, கேரளாந்தகன் நுழைவு வாயில் கோபுரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து, அதிலிருந்து தேனீக்கள் பறந்தன. அவை, பக்தர்களை துரத்திக் கொட்டின. இதனால், கோவில் பணியாளர்கள் ஐந்து பேரும், ஒரு பெண் உட்பட, பக்தர்கள் ஐந்து பேரும் காயமடைந்தனர்.
அதனால், கேரளாந்தகன் கோபுர நுழைவு வாயில், ஒரு மணி நேரம் மூடப்பட்டது. கோவில் உள்ளே இருந்த பக்தர்கள், சிவகங்கை பூங்கா வாயில் வழியாக வெளியேறினர்.தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து, வாகனத்துடன் வந்த வீரர்கள், தேன் கூட்டை அகற்ற மறுத்து விட்டனர். ஏற்கனவே, ஒரு முறை தேனீக்கள் பக்தர்களை கொட்டிய போது, தேன் கூட்டை அகற்றியதற்கு, தொல்லியல் துறையினர், ஆட்சேபனை தெரிவித்து, தகராறு செய்துள்ளனர். அதனால், தற்போது, முதலுதவிக்கு மட்டுமே வந்ததாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

Added : ஜூன் 10, 2018 04:12

கோவை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடு களும் தயார் நிலையில் உள்ளன.எம்.பி.பி.எஸ்., --- பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மே, 6ல் நீட் தேர்வு நடந்தது; முடிவுகள் கடந்த, 4ம் தேதி வெளியானது.

இதையடுத்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:

பிளஸ், 2 தேர்வு முடிவுகள், நீட் தேர்வு அடிப்படையில் வழிகாட்டி ஏடு மற்றும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை, 18ம் தேதி மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 19ம் தேதி மாலை, 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்ப படிவங்கள் பெற, செயலர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை என்ற பெயரில், 500 ரூபாய்க்கான டி.டி., எடுக்க வேண்டும்.
சுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., - எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்.மாணவர்கள் சான்றொப்பம் பெறப்பட்ட ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லுாரி களுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து, விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

விண்ணப்பங்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை வினியோகிக்கப்படும்.தட்டுப்பாடு இல்லாமல் விண்ணப்பங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களுக்கான, டி.டி., எடுப்பதற்கு அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளில் வங்கிகளின் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Saturday, June 9, 2018

முதலிடம் பிடித்து அனைவரையும் பயமுறுத்தும் விஷயம் எது தெரியுமா? ஒரு கூட்டத்தைப் பார்த்துப் பேசுவதுதான்


 முதலிடம் பிடித்து அனைவரையும் பயமுறுத்தும் விஷயம் எது தெரியுமா? ஒரு கூட்டத்தைப் பார்த்துப் பேசுவதுதான்


பயங்களிலேயே மிகப் பெரியது எதுவென உளவியல் ஆராய்ச்சி செய்தார்கள். அதாவது அநேகருக்கு எது மிகப் பெரிய பயம் என்று. மரணம் தானே என்கிறீர்களா? அதுதான் இல்லை. மரண பயத்திற்கு இரண்டாம் இடம்தான். முதலிடம் பிடித்து அனைவரையும் பயமுறுத்தும் விஷயம் எது தெரியுமா?
ஒரு கூட்டத்தைப் பார்த்துப் பேசுவதுதான்! கூட்டத்தில் உரையாற்றத் தேவை இல்லாதவருக்கு வேலைக்கான நேர்காணல் அனுபவம் தான் மிகப் பெரிய பயம் எனத் தாராளமாகச் சொல்லலாம். இதைப் பயம் என்பதைவிடப் பதற்றம் என்பதுதான் சரி. தன்னை யாரோ சோதிக்கிறார்கள் என்பதே ஒருவிதப் பதற்றத்தை உருவாக்குகிறது. இது எல்லா வயதினருக்கும் எல்லாத் தரப்பினருக்கும் பொருந்தும்.

ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு பயம் இல்லையா என்ன? தங்கள் மேற்படிப்புக்கான தேர்வு எழுதும்போது மாணவர்களைப் போலவே ஆசிரியர்களையும் கடைசி நிமிடப் படிப்பு, தேர்வு பயம் எல்லாம் தொற்றிக்கொள்கிறது. அதே போல் பெரும் பதவிகளில் இருப்பவர்களும் நேர்காணல்களில் பதற்றப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
புதிய ஆட்களைச் சந்திக்கும் பயத்திலேயே புது வேலை தேடாத ஆட்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும். நேர்காணலில் சிலருக்குப் பிரத்யேகப் பயங்கள் உண்டு. மேலதிகாரிகள் அல்லது பெரும் புள்ளிகளைச் சந்திப்பதில் சிலருக்குப் பயம். ஆங்கிலம் பேசுபவர்களைக் கண்டால் பயம் சிலருக்கு. பெண்கள் நேர்காணலில் கேள்வி கேட்டால் பதற்றத்தில் ஆண்களையே பார்த்துப் பேசும் ஆண்களும் இருக்கிறார்கள். (கல்யாணமானவர்கள் பெண்கள் கேள்விகளுக்குப் பெரிதும் பழகியிருப்பார்கள் என்பது வேறு விஷயம்!)

பயத்தை மறைக்கச் செய்யும் அனைத்தும் பயத்தைத் தெளிவாகக் காட்டிக் கொடுக்கும் என்பதுதான் விந்தை. என் பால்ய கால நண்பன் ஒருவன் எந்த பிரசண்டேஷன், இண்டர்வியூ என்றாலும் ஒரு அரைக்கால் (க்வாட்டரில் பாதி...ஹி ஹி!) போட்டுக்கொண்டு அதை மறக்க பீடா, பழம், சூட மிட்டாய் என சுகந்தமாய் வருவான். அவன் கேனச் சிரிப்பே காட்டிக் கொடுத்துவிடும். தைரியம் வருவதற்காக உட்கொண்ட வஸ்து தெரிந்த விஷயத்தையும் மறக்கடித்துவிடும். பின்னர் சொதப்பல்தான்.

பதற்றம் சிலரைப் பேச விடாது. சிலரை அதிகம் பேசவைக்கும். சிலரை விநோதமாக நடந்துகொள்ள வைக்கும். வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். பசிக்காது. சிறு நீர் வருவது போலத் தோன்றும். வராது. எதற்கு என்று தெரியாமல் மனம் கலவரமாய் இருக்கும். மொத்தத்தில் நம் இயல்பை மாற்றிக் காண்பிக்கும்.

சில இண்டர்வியூக்கள் ‘ஸ்ட்ரெஸ் இண்டெர்வ்யூ’ வகையைச் சேர்ந்தவை. அதாவது நீங்கள் பதற்றம் அடைகிறீர்களா? அல்லது எந்த அளவு பதற்றம் தாங்குவீர்கள் எனப் பார்ப்பதற்கே கேள்விகள் கேட்பார்கள். உங்களைக் கோபப்படுத்தும் கேள்விகளைக் கூடக் கேட்பார்கள். இது மன வலிமையைச் சோதிக்கும் முயற்சி. சில நிர்வாகப் பள்ளிகளிலும் ராணுவத் தேர்விலும் இதை வாடிக்கையாகச் செய்வார்கள்.

சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒரு கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள்: நல்லா தயார் செய்தா இந்தப் பயமெல்லாம் வராது. தெரியலைன்னாதான் பயம் வரும்.
இது முற்றிலும் தவறு. பயத்திற்கும் பாடம் அறிவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நன்கு படித்துப் பதில் தெரிந்த பலர் பதற்றத்தில் தவறாக விடை சொல்வார்கள். அவர்களுக்கு மறந்துபோவதும் இயற்கை. இது மன இயல்பு சார்ந்த விஷயம்.

ஒரு நேர்காணல் முழுவதும் ஒரு கேள்விக்குக்கூடப் பதில் சொல்லாதவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று எண்ணுவது பேதமை. அவர்களிடமிருந்து பதில் வரவழைக்கச் செய்வது ஒரு சவால். ஒரு நேர்காணல் கலை. அவ்வளவு தான்.

சரி, நேர்காணலில் பதற்றம் வந்தால் என்ன செய்யலாம்? ‘மனதை நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட மூச்சு விடுங்கள். புன்னகை செய்யுங்கள். தெரிந்ததைப் பேசுங்கள்’ போன்ற புராதன அறிவுரைகள் வேலை செய்யாது.
அந்த நிகழ்ச்சிக்குச் செல்லும்போது செய்துகொள்ள இது முக அலங்காரம் அல்ல. இது அக அலங்காரம். அதனால் நிறைய காலம் பிடிக்கும்.
பதற்றம், பயம், துக்கம், கோபம் போன்ற எதுவும் உங்கள் தினசரி வாழ்க்கையைப் பாதித்தால் உளவியல் உதவி அவசியம். நேர்காணலில் மட்டும் பதற்றப்படும் ஆளா அல்லது பொதுவாகப் பதற்றமான ஆளுமை கொண்டவரா என்பதை முதலில் அலச வேண்டும். State Anxiety சூழ்நிலை சார்ந்தது. Trait Anxiety ஆளுமை சார்ந்தது. இதற்கேற்பத்தான் இதைக் கையாள வேண்டும்.

இன்று பலர் பதற்றத்திற்கு உளவியல் சோதனை, சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். யோகா தொடர்ந்து செய்தால் ஒட்டுமொத்த பதற்றம் குறையும். ஆனால் ஸ்டேட் ஆங்க்சைடிக்கு உளவியல் உதவி நல்லது. நம் வேலையை, வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும் ஒரு பிரச்சினைக்கு ஆலோசனை எடுத்துக் கொள்வது தவறு இல்லையே? இது மேற்கத்தைய நாடுகளில் கல்விக் கூடங்களிலேயே நடக்கிறது!

தன் இருப்பு பற்றிய கவலை வருகையில் பயமும் பதற்றமும் வருகின்றன. தன்னை ஒருவர் கூர்ந்து நோக்குவதே ஓர் அசௌகரிய உணர்வுதான். பிறர் உற்று நோக்கினால் செய்யும் வேலையைக்கூடச் சரியாகச் செய்ய முடியாது.
சரி, எப்போதும் நேர்காணல் தரும் பதற்றத்தை எப்படிக் குறைப்பது? நிறைய நேர்காணல்கள் எடுத்துக் கொள்வதுதான் சிறந்த வழி. பதற்றத்தைத் தவிர்க்கும்போது ஏற்படும் நிவாரணம் அடுத்த முறை பதற்றத்தின் வீரியத்தை அதிகரிக்கும். பதற்றத்தைத் தொடர்ந்து எதிர்கொள்ளும்போது அது பலம் இழக்கும்.

எந்த வயதானால் என்ன? உங்களுக்குத் தகுந்த வேலைகளுக்கு விண்ணப்பியுங்கள். சில இண்டெர்வியூக்களுக்குச் செல்லுங்கள். பதற்றமும் குறையும். சந்தை நிலவரமும் தெரியும். வேலைச் சந்தையில் உங்கள் மதிப்பும் தெரியும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
உருவாக்கிக்கொள்பவைதான் வேலைகள்!

Published : 24 Nov 2014 12:10 IST
 
டாக்டர். ஆர். கார்த்திகேயன்

 

வாழ்க்கையில் உளச் சிக்கல் உள்ளவர்களுக்கும் அவர்களின் வேலைப் பளுவுக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்டார் நண்பர் ஒருவர். வேலைப் பளு அதிகம் இருந்தால் உளச் சிக்கல் வருமோ இல்லையோ, மிகக் குறைவான வேலைப் பளு நிச்சயம் மன உளைச்சலைத் தரும் என்றேன். வேலை குறைவாக இருந்தால் முதலில் ஆறுதலாகத்தான் இருக்கும். நிறைய நேரம் இருப்பது நன்மையாகத் தோன்றும். பின்னர் அதுதான் ஆபத்தாக மாறும்.

குறைந்த சம்பளத்திலும் திருப்தி

“வேலைன்னு பெரிசா கிடையாது. ஆனால் கண்டிப்பா சீட்டில் இருக்கணும்!” என்று ஆரம்பத்தில் பெருமையாகப் பேசுபவர்கள் பின்னர் நேரத்தைக் கொல்வதைவிடத் தங்கள் அமைதியைக் கொல்வார்கள். வேலை இல்லாதவன் மனம் ஒரு பிசாசின் பட்டறை என்று தெரியாமலா சொன்னார்கள்?

நீங்களே யோசித்துப் பாருங்களேன். உற்பத்திக் கூடத்தில் அடிமட்டத் தொழிலாளியின் பணியிடம் அவரது ஒவ்வொரு நிமிட வேலையையும் நிர்ணயித்து விடுகிறது. ஒரு பாகத்தைப் பொருத்துவதற்குள் அடுத்த பாகம் தயாராக நிற்கிறது. அத்தனையையும் சரியாகவும் சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். தேநீர் இடைவெளியும் உணவு இடைவெளியும் போய் வரத்தான் நேரம் சரியாக இருக்கிறது. இதனால் மனதை வேறு எதிலும் செலுத்தாவண்ணம் பணிபுரிகிறார்கள். இதனால்தான் குறைந்த சம்பளத்திலும் பணித் திருப்தி இவர்களிடம் அதிகம் உள்ளது.

ஓய்வறியா சூரிய(ளே)னே!

என்ன வேலை , எவ்வளவு வேலை என்று அளவிட முடியாத வேலைகளில் யோசிப்பதற்கு நேரம் நிறைய கிடைக்கிறது. அது பெரும்பாலும் மன உளைச்சலில்தான் கொண்டு முடிகிறது.

வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களை நான் எப்போதும் பெருமையுடன் பார்ப்பேன். என் வீட்டுப் பக்கத்தில் உள்ள ஒரு பெண்மணி காலை 5 முதல் இரவு 8 வரை பல வீடுகளில் வேலை பார்ப்பவர். ஒரு பக்கம் வீட்டு வேலை. இன்னொரு பக்கம் சமையல். இன்னொரு பக்கம் வண்டி துடைத்தல். இப்படிப் பல வேலைகள்.

காலை முதல் இரவுவரை அப்படி ஒரு துறுதுறுப்பு. தெரியாத வேலையே கிடையாதோ என்று சந்தேகிக்கும் அளவு எல்லா வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். யாருக்குப் பிரச்சினை என்றாலும் முதலில் நிற்பார். எங்க ஏரியாவில் எல்லாருக்கும் அந்தம்மா பரிச்சயம்.

“ஓய்வறியா சூரியனே” என்று இவருக்கு போஸ்டர் ஒட்ட ஆளில்லை. ஆனால் சொந்தச் சோகங்கள் எவ்வளவு இருந்தாலும் படுத்தால் நிம்மதியாக உறங்கும் வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். உட்கார்ந்து யோசித்தால் பெரும் பட்டியல் போடும் அளவுக்குப் பிரச்சினைகளும் துயரங்களும் அவருக்கு நிச்சயம் உண்டு. ஆனால் நேரம் ஏது?

வேலையில் கரைதல்

யோசிக்க நேரமில்லை என்பது மறைமுக ஆசீர்வாதம். நம் வாழ்க்கையில் வருத்தப்படவும், கோபப்படவும் ஆட்களுக்கும் சம்பவங்களுக்குமா பஞ்சம்? உட்கார்ந்து யோசித்தால் கசப்புதான் மிஞ்சும். குறிப்பாகக் கடந்த காலத்தை இம்மி அளவும் மாற்ற நமக்குச் சக்தி கிடையாது. வருங்காலம் பற்றிய பயங்களும் பெரும்பாலும் வீண் என்று நமக்கே தெரியும். அதனால் நேற்றைய வாழ்க்கையையும் நாளைய வாழ்க்கையையும் நினைக்காமல் இருக்க, இன்றைய பொழுதில் நிலைக்க நமக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. அது நம்மை முழுவதுமாக உள் வாங்கிக்கொள்ள அனுமதித்து அதில் கரைந்து போக முடிந்தால் நாம் பாக்கியசாலிகள்.

இதனால்தான் விழித்திருக்கும் நேரத்தில் அதிகம் வேலை இல்லாதவர்கள் நிம்மதியைத் தொலைத்துவிடுகிறார்கள்.வேலை என்பதை நாம் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியாகப் பார்க்க வேண்டும்.

மன அழுத்தம்

ஆறு மாதமாகச் சம்பளம் தராத கம்பெனியில் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் மிகச் சிறப்பாகச் செயல்படும் நண்பரைச் சந்தித்தேன். சம்பளம் வராத பிரச்சினையைக் கூட நினைக்க நேரமில்லை என்று சிரித்தார். ஒரு புத்த பிக்குவைப் பார்த்தது போலிருந்ததது. “சம்பளம் வராம எங்கே போகும், அதுக்காக வேலையைக் கெடுக்க முடியுமா?”

மன அழுத்தம் மேல்த் தட்டு மக்களுக்கு அதிகமாக வரக் காரணம் அவர்களுக்கு அதிகமான நேரம் கிடைப்பதால்தான். பத்துப் பேருக்குச் சதா பொருள் எடுத்துத் தரும் பெட்டிக்கடைக்காரருக்கோ, சாலையில் மக்கள் நெரிசலில் வேலை செய்யும் துப்புரவுத் தொழிலாளிக்கோ வராத மன அழுத்தம், ஏசி அறையின் தனிமையில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாதவருக்கு வருகிறது.

வேலையின் முக்கியத்துவம்

அலுவலகத்திலும் அதிகம் வம்பு பேசும் மக்கள் வேலை குறைவான பிரிவுகளில்தான் இருப்பார்கள். ஆனால் வேலைப்பளு உள்ள துறைகளில் உடல் அசதி இருந்தாலும் மன வெறுமை இருக்காது. சீனா போன்ற தேசத்தில் மக்கள் மன நலத்துடன் இருக்கக் காரணம் எல்லாரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள். முதியவர்கள்கூட வீட்டில் இருந்தே சின்னச் சின்ன வேலை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள்.

வேலை பார்ப்பது முக்கியம். அது நம் படிப்புக்கு, தகுதிக்கு, வசதிக்கு ஏற்றதாக இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். வருமானம் இல்லாவிட்டாலும் வேலை முக்கியம். குறிப்பாகக் குடும்பத்தை மட்டும் பராமரிக்கும் பெண்கள், ஓய்வுக்குப் பின் முதியோர்கள், படித்து வேலைக்குக் காத்திருக்கும் மாணவர்கள் இவர்கள் அனைவரும் அதிகம் தாமதிக்காமல் சில மணி நேரங்கள் செய்யும் பகுதி நேர வேலையையாவது மேற்கொள்ள வேண்டும்.

என்ன செய்யலாம்?

தொலைபேசி வழியே பொருட்கள் விற்கலாம். வலைத்தளத்தில் எழுதலாம். பார்வையற்றோர்க்குப் படித்துக் காட்டலாம். சின்ன முதலீட்டில் பலர் சேர்ந்து தொழில் செய்யலாம். டியூஷன் எடுக்கலாம். மொழிபெயர்ப்பு செய்யலாம். உங்கள் துறை சார்ந்து ‘குறைந்த கட்டண ஆலோசகர்’ ஆகலாம்.

கோயில்களில் சேவை செய்யலாம். உங்களுக்குத் தெரிந்தவர்கள் அலுவலகத்தில் உதவிகள் செய்யலாம். சிறியதாகத் தொடங்கும் பல வேலைகள் பின்னர் பெரும் வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தலாம். எதையாவது செய்யலாம். ஆனால் கண்டிப்பாக எதையாவது செய்யணும். வேலைகள் தானாக வருவதில்லை. அவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Medical admission fee fixed at Rs 13 lakh for now in Tamil Nadu

The first bench of the Madras High Court has held that the authorities concerned may admit students in the medical colleges run by the Deemed to be Universities in the State and the Union Territory of
Published: 09th June 2018 05:16 AM  |   Last Updated: 09th June 2018 05:16 AM
 
By Express News Service
 
CHENNAI: The first bench of the Madras High Court has held that the authorities concerned may admit students in the medical colleges run by the Deemed to be Universities in the State and the Union Territory of Puducherry by collecting Rs 13 lakh only for management quota until the UGC fee fixation committee finalises a sum.

“We are informed that the (UGC) fee committee has earlier fixed Rs 11.50 lakh for management quota for the medical colleges run by the Deemed Universities and the students may now be admitted subject to payment of Rs 13 lakh,” the bench of Chief Justice Indira Banerjee and Justice P T Asha said on Friday. Once the fee committee determines the fee and the same is found to be higher than Rs 13 lakh per annum, the students will have to remit the balance.

Similarly, if the fee is less than Rs 13 lakh, the differential amount shall be refunded to the students, the bench said. The bench was passing further interim orders on a 2017 PIL petition from Jawaharlal Shanmugam praying for a directive to the State Health Secretary and the Fee Fixation Committee to fix tuition fee structure for medical courses offered by colleges of Deemed Universities.

NEWS TODAY 21.07.2026