Friday, August 3, 2018

Break year students bag 40% of med seats in govt colleges

Ram.Sundaram@timesgroup.com

Chennai 03.05.2018

: Nearly half the candidates who secured an MBBS seat in government medical colleges this year had taken a break of at least a year or more to prepare for National Eligibility cum Entrance Test (NEET), data shows.

Of the 2,500 candidates who cleared NEET and got admission at medical colleges, as many as 1,269 cleared had their Class XII board exams before 2017, according to official data. The remaining 1,263 belonged to the current batch (2017-2018).

Compared to the previous year, there has been an increase in the number of candidates taking a break after Class XII board exams. Data shows that last year, a little over 40% candidates belonged to the previous batches. Many among them had joined private coaching centres and paid a hefty fee to prepare for NEET, say experts.

Commenting on this, Educationist Prince Gajendra Babu said this figure will increase further in the coming years as parents, who are either unable to pay the fees demanded by private medical colleges or not sure about the quality of teaching in these private institutions, encourage their children to skip the counselling that particular year, prepare better next year and get a seat in government medical college the following year.

“Instead of spending ₹30 lakh to ₹35 lakh in private colleges for the MBBS course, some prefer spending ₹2 lakh to ₹3 lakh at coaching centres for two years to ensure that they get a government seat where the fees would be much less. But meritorious students from economically weaker sections of the society will be eliminated from the competition in the longer run,” Babu said.

G R Ravindranath, general secretary, Doctor’s Association for Social Equality, said the trend is unavoidable with the government relaxing rules pertaining to upper age limit to take up NEET .

However, this trend might change in the next few years given the rate of corporatisation and privitisation of the health care system in the country and the weakening of public healthcare by reducing fund allocation.

“Many small and medium size medical clinics would shut down becaue of these policies thereby bringing down the demand for doctors. Also, given the duration of the course (seven-and-a-half years including postgraduation), high cost of education and fewer job opportunities, would deter more students from pursuing medicine,” he told TOI.
Caught with lover, woman bites off penis of husband

Karal.Marx@timesgroup.com

Vellore: 03.08.2018

The Vellore police on Wednesday arrested a 45-yearold woman for biting off a part of her husband’s penis during a scuffle with him after he caught her with her lover in Thuraimoolai village near Gudiyatham in Vellore district.

The woman, Jayanthi, has been charged with attempted murder, a police officer said.

The incident happened in the early hours of Monday after which villagers took a bleeding Senthamarai and the severed part of his penis to Vellore Government Hospital and later to Rajiv Gandhi Government Medical College and Hospital in Chennai for advanced care.

Senthamarai, 55, a farmer, and Jayanthi had taken part in avillage temple festival on Sunday as part of the auspicious Aadi month festivities.

CAUGHT RED HANDED

‘Enraged, he threatened to make their illicit relationship public’

After the temple event, they went for a street play, the officer said. Around 1.30am Jayanthi slipped out of the crowd on the pretext of needing to relieve herself.

When Jayanthi failed to return more than an hour later, a worried Senthamarai went in search of her. He later found her in a compromising position with another villager, Dhatchanamoorthi.

“Enraged, Senthamarai grabbed his wife and her lover and threatened to make their relationship public,” the officer said. “ Noise from the festivities outside drowned out Dhatchanamoorthi’s cries for help.”

“In the scuffle that ensued, Senthamarai’s dhoti fell

off. Jayanthi, fearing she and her lover would be thrashed, wanted to escape before villagers reached the spot,” he said. “She bit his penis, severing part of it, and fled with her lover.”

Doctors at Vellore Medical College and Hospital provided Senthamarai with first aid before he was moved to Rajiv Gandhi Government Medical College and Hospital in Chennai. Senthamarai’s condition is said to be stable.

Police tracked down Jayanthi by monitoring Dhatchanamoorthi’s cellphone. They registered a case under sections IPC Sections 294(b) (obscenity in public), 324 (causing hurt with dangerous weapons or means) and 307 (attempt to murder).

Police later said she “confessed to the crime”. When she was produced in court, it remanded her in Vellore Central Prison for Women.
15 ஆயிரம் ரூபாய்க்கு ‘ஆப்பிள் ஐபோன்’: சோப்புக்கட்டியைக் கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய நபர்கள்

Published : 01 Aug 2018 21:56 IST

சென்னை

 

ஏமாற்றிய நபர், சோப்புக்கட்டி, ஐபோன்

குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன் கிடைக்கிறதே என்று ஏமாந்து சோப்புக்கட்டியை வாங்கிய வங்கி மேலாளர் மயிலாப்பூர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மயிலாப்பூர், நடுத்தெருவில் வசிப்பவர் ரமேஷ் (36). இவர் லஸ் சர்ச் சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றுகிறார்.

வங்கியின் வழக்கமான பணிகள் முடிந்த பின்னர் தனது அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் ரமேஷ். அப்போது இரண்டு பேர் அவரைப் பார்க்க வந்திருப்பதாக செக்யூரிட்டி சொல்ல, உள்ளே வரச்சொல்லி தனது அறையில் அமர வைத்திருக்கிறார்.

'அவர்களிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டுள்ளார். 'சார், நாங்கள் ஐபோன் கம்பெனியில் பணியாற்றுபவர்கள், எங்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஐபோன் கிடைக்கும், அதை முக்கியமான நபர்களுக்கு அதே விலையில் விற்றுவிடுவோம்' என்று கூறியுள்ளனர்.

அவர்களை சந்தேகத்துடன் பார்த்த ரமேஷ், 'எனக்கு செல்போன் எல்லாம் வேண்டாம்' என்று கூறியுள்ளார். 'சார், அப்படிச் சொல்லாதீர்கள். இது பல வசதிகள் கொண்ட ஐபோன். போனால் கிடைக்காது' என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். 'என்ன விலைக்கு தருவீர்கள்? உங்களை எப்படி நம்புவது?' என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் புத்தம் புதிய ஐபோன் டப்பாவை எடுத்துக் காட்டியுள்ளனர். அதனுள்ளே புத்தம் புது ஐபோன் இருந்தது. அதை எடுத்து ஆன் செய்து காட்டியுள்ளனர். அதில் உள்ள அம்சங்களைப் பார்த்தவுடன் ரமேஷுக்கும் ஆசை வந்துள்ளது. 'எவ்வளவு விலை?' என்று கேட்டுள்ளார். 'வெறும் 15 ஆயிரம் மட்டும்தான் சார்' என்று அவர்கள் கூறியுள்ளனர்.

'அவ்வளவு குறைவாக ஏன் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, 'அதான் சொன்னோமே சார், நாங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவதால் எங்களுக்கு குறைந்த விலைக்கு கிடைக்கும். அதை நாங்கள் விற்றுவிடுவோம்' என்று கூறியுள்ளனர்.

மிகுந்த தயக்கத்துடன் 15 ஆயிரம் கொடுத்து செல்போனை வாங்கியுள்ளார். செல்போனை பழையபடி அட்டைப்பெட்டியில் போட்டு அவரிடம் கொடுத்துள்ளனர். அதை வாங்கி டேபிள் மீது வைத்துள்ளார்.

’சார் வேறு யாருக்காவது வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் சார், அடுத்த வாரம் வருகிறோம்' என்று கூறி அவர்கள் விடைபெற்றுச் சென்றனர். ஐந்து நிமிடங்கள் கழித்து ஆவலோடு ஆப்பிள் ஐபோனைப் பிரித்துப் பார்த்துள்ளார்.

அட்டைப்பெட்டியை பிரித்துப் பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அட்டைப்பெட்டிக்குள் ஆப்பிள் ஐபோனுக்குப் பதில் பிரபல கம்பெனியின் சோப்புக்கட்டி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் அறையைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்துள்ளார். அதற்குள் அந்த நபர்கள் மாயமாகிவிட்டனர்.

வேறு வழியில்லாமல் சோப்புக்கட்டியை எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீஸார், 'சார் எங்காவது ஆப்பிள் ஐபோன் 15 ஆயிரத்துக்கு கிடைக்குமா? அதை விற்பவன் வங்கி உள்ளே வந்துதான் விற்க வேண்டுமா?' என்று கேட்டு புகாரை வாங்கியுள்ளனர்.

பின்னர் வங்கியில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை எடுத்துள்ளனர். அதில் இரண்டுபேர் முதுகில் பையை மாட்டியபடி நிற்பதும், வங்கி மேலாளருடன் பேசுவதும் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதைபதைத்துப் போய் விசாரித்தார்; என்ன உதவி வேண்டும் என்றார்: ஸ்டாலின் நேரில் வந்ததால் நெகிழ்ந்த பிரியாணி கடைக்காரர் பேட்டி

Published : 02 Aug 2018 14:06 IST

சென்னை
 


பிரியாணி ஹோட்டலில் ஊழியர்களை நலம் விசாரிக்கும் ஸ்டாலின்

சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் என்னை அழைத்து பதைபதைத்துப்போய் கேட்டார், என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என்றார், அவர் அன்பால் நெகிழ்ந்து போனோம் என்று பிரியாணி கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

பிரியாணி கடையில் ஊழியர்களை திமுகவினர் தாக்கிய வீடியோ வைரலாகி கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற வன்முறைகளை எந்நாளும் திமுக ஏற்றுக்கொள்ளாது என்று அவர் தெரிவித்து அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றார்.
 
இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டு ஓட்டல் ஊழியர்களைத் தாக்கிய யுவராஜ், திவாகர் இருவரையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

ஸ்டாலின் தனது ஹோட்டலுக்கு நேரில் வந்து ஆறுதல் கூறிச் சென்றதில் பெரிதும் நெகிழ்ந்து போன பிரியாணிக்கடைக்காரர் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “நேற்றே எங்களை அறிவாலயத்துக்கு ஸ்டாலின் அழைத்தார், அண்ணா அறிவாலயம் சென்றோம், தாக்கப்பட்டவர்களையும் அழைத்துச் சென்றோம். அவர்களுக்கு ஆறுதல் சொன்ன அவர் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டார். பின்னர் எந்தப் பகுதியில் கடை உள்ளது என்று கேட்டார்.

விருகம்பாக்கத்தில் கடை அமைந்துள்ள இடம் பற்றிக் கூறினோம். நாளை நான் நேரில் வருகிறேன் என்றார். நாங்கள் பதறிப்போய், உங்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன. எங்களைத்தான் அழைத்து பார்த்துவிட்டீர்கள், உங்கள் பணிகளுக்கு இடையூறாக எதற்கு வரவேண்டும் என்று தெரிவித்தோம். இல்லை எனக்கு மனது கேட்கவில்லை வந்தே தீருவேன் என்று நேரில் வந்தார்.

ஊழியர்களிடம் நலம் விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டார், தாக்கியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும், உங்களுக்கு வேறு என்ன மாதிரி உதவி வேண்டும் என்று தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நாங்கள் நெகிழ்ந்து போனோம். நீங்கள் வந்ததே எங்களுக்குப் போதும் வேறு உதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டோம்'' என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கணவரின் சொத்தா மனைவி?- உச்ச நீதிமன்றம் கேள்வி

Published : 03 Aug 2018 08:05 IST

புதுடெல்லி 

 


உச்ச நீதிமன்றம்: கோப்புப்படம்

திருமண பந்தத்தில் மனைவி என்பவர் கணவரின் தனிப்பட்ட சொத்தா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இத்தாலியில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஜோசப் ஷைன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “இந்திய தண்டனை சட்டத்தின் 497-வது பிரிவு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த சட்டத்தின்படி, தவறான உறவின்போது ஆண்கள் மட்டுமே குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர். பெண்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவது இல்லை. ஆண்களுக்கு எதிரான இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:

இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவு பெண்களுக்கு சாதகமானது போன்று தெரியும். ஆனால் இந்த சட்டம் பெண் களுக்கு எதிரானது. கணவரின் ஒப்புதலுடன் மனைவி தவறான உறவில் ஈடுபட்டால் அது தவறில்லை. கணவரின் ஒப்புதல் இல்லாமல் மற்றொரு ஆணுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கூறுகிறது.

திருமண பந்தத்தில் மனைவி, கணவரின் தனிப்பட்ட சொத்தா கவே பாவிக்கப்படுகிறார். இது எந்த வகையில் நியாயம்? இவ் வாறு தலைமை நீதிபதி கூறினார்.

இதே வழக்கு கடந்த டிசம்பரில் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் இதே கருத்தை வெளியிட்டது. திருமணமான பெண் கணவரின் சொத்தா, ஜடப்பொருளா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் கடந்த ஜூலை யில் மத்திய அரசு 11 பக்கங்கள் அடங்கிய பதிலை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “திருமண பந்தத்தின் புனிதத் தன்மையை பாதுகாக்க தவறான உறவை குற்றமானதாகவே கருத வேண்டும். 497-வது சட்டப்பிரிவை ரத்து செய்யக்கூடாது” என்று கோரப்பட்டுள்ளது.

பயமுறுத்தும் சாலை விபத்துகள்


By எஸ். ஸ்ரீதுரை | Published on : 03rd August 2018 01:28 AM |

கோயம்புத்தூர் - பொள்ளாச்சி சாலையில், வெகுவேகமாக வந்த ஒரு சொகுசு கார் மோதியதில் ஆறு பேர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் கோவை நகரை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. மேலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகள் பாதுகாப்பானவைதானா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. நெருநல் உளனொருவன் இன்றில்லை' என்பது திருவள்ளுவரின் வாக்காகும். நேற்று உயிருடன் இருந்தவர் இன்று உயிருடன் இல்லை என்பதே இவ்வுலக வாழ்வின் சிறப்பு என்ற கருத்துடைய இக்குறள் மனித வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துக்கூறுகின்றது.
அன்றாடம் நாம் கேள்விப்படும் சாலை விபத்துக்களோ, சென்ற விநாடி இருந்தவர் இந்த விநாடியில் உயிருடன் இல்லை என்ற புதிய விதியை உருவாக்கி வருகின்றன.

அதிக வேகம், அலட்சியம், சாலை விதிகளை மதியாமை போன்று எத்தனையோ காரணங்களால் சாலை விபத்துக்கள் நேர்கின்றன. விபத்துகள் எதிர்பாராமல் ஏற்படக்கூடியவையே. ஆயினும், விபத்துகள் தவிர்க்கப்படக் கூடியவையே என்பதையும் வாகனங்களை இயக்குவோர் புரிந்து கொள்ள வேண்டும்.

சூழ்நிலைகள் மிக வேகமாக மாறி வருகின்றன. அம்பாசிடர்', பியட்' போன்ற கார்களை மட்டுமே நம் நாட்டுச் சாலைகள் பார்த்த காலம் ஒன்று உண்டு. எப்போதாவது அபூர்வமாக சில நவீன ரக கார்கள் கண்ணில் தென்படும். சென்ற தலைமுறையினரில் பலரும் இருசக்கர வாகனங்களுக்கு முன்பணம் கட்டிவிட்டு, வருடக் கணக்கில் காத்திருந்து வாங்கியவர்கள்தான்.
இப்போது எல்லாம் தலைகீழாக மாறியிருக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கை, விதவிதமான வாகனங்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ளவும், தேவைக்கேற்ப வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளவும் வழிவகை செய்துள்ளது.

வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருந்தாலே பெரிது என்ற காலம் போய், ஆளுக்கொரு ஸ்கூட்டர் அல்லது பைக் மற்றும் குடும்பத்துக்கு ஒரு கார் (குறைந்தபட்சம்) சொந்தம் என்ற நிலை உருவாகி விட்டது. யாருக்கும் யாருடனும் பேசுவதற்குக்கூட நேரமில்லை
.
நடுத்தர வர்க்கத்தினரின் நிலை இப்படி இருக்க, பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் தேவைக்கு வானமே எல்லை என்றாகிவிட்டது.
அதிகபட்ச வசதிகள் மற்றும் அதிவிரைவுப் பயணம் என்ற குறிக்கோளுடன் வாகனங்களை வாங்க விரும்பும் இவர்களுக்கென்றே பல லட்சம் ரூபாய்களில் (சில கோடிகளில் கூட) இறக்குமதித் தயாரிப்புகள் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப இறக்குமதி வரிகளும் உண்டு. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சமூக அந்தஸ்தின் குறியீடாகவே இத்தயாரிப்புகள் வாங்கப்படுகின்றன.

இளைஞர்களும், இளம்பெண்களும் இத்தகைய கார்களை ஓட்டும்போது ஆகாயத்தில் பறப்பது போன்று உணர்வார்கள். ஆனால், சட்டென்று பிரேக் பிடிக்க நேரும்போது வண்டி அவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்காது. விபத்து நேரிடும்போது யாருக்குமே தப்பிக்க வழியிருக்காது.
சென்னையில் சினிமா நட்சத்திரங்கள் சிலரும் கோடீஸ்வர வீட்டு வாரிசுகளும் இத்தகைய விலையுயர்ந்த இறக்குமதி வாகனங்களை விரைவாக ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துவதையும் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். குறிப்பாக, பழைய மகாபலிபுரம் சாலை இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தர சாட்சியாகிவிட்டது. இச்சாலையில் பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் படுத்தும் பாடு ஒரு தனிக்கதை.

குடியிருப்புப் பகுதிகளிலேயே, வண்டியைக் கிளப்பி, சில விநாடிகளில் அறுபது எழுபது வேகத்தைத் தொடுபவர்கள் நம்மவர்கள். இந்நிலையில், நல்ல தரமான சாலைகளில், வெளிநாட்டு இறக்குமதி வண்டியை ஓட்டுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது நம்மால் யூகிக்கப்படக்கூடியதே. உண்மையிலேயே விரைவாக ஓர் இடத்தை அடையவேண்டிய தேவையில் இத்தகைய வண்டிகளில் பயணிக்கக் கூடியவர்களும் உண்டு. தாம் நிர்வகிக்கும் தொழிலில் ஒரு விநாடியைக் கூட வீணடிக்க முடியாத நபர்களை நாம் விமர்சிப்பதற்கு ஒன்றும் இல்லை.

அதே நேரம், இத்தகைய வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் (உரிமையாளரே ஓட்டினாலும் சரி) மிகமிகத் திறமையான ஓட்டுநர்களாக இருப்பது முக்கியம். சாலை விதிகளைத் தாங்கள் மதிப்பது மட்டுமல்லாமல், நமது நாட்டில் சாலைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் (சாலையைக் கடக்கும் பாதசாரிகள் உட்பட) சாலை விதிகளை முழுவதுமாக மதிக்காதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டவர்களாக இருத்தல் மிகமிக முக்கியம்.

மது அருந்திவிட்டு இவ்வாகனங்களை ஓட்டக் கூடாது என்பதைத் தனியே கூறத் தேவையில்லை. கோவையில் ஏழு உயிர்களை வாங்கிய காரின் ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. உடல்நிலை சரியில்லாததால், தனக்குச் சற்றே மயக்கமாக இருந்ததாக அவர் கூறியதாகவும் ஒரு செய்தி உலா வருகின்றது. இவற்றில் எது உண்மை என்பது முழுமையான விசாரணைக்குப் பின்பே தெரியவரும்.
ஓட்டுநர்களைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களும் அவர்கள் சரியாக உணவருந்தியிருக்கிறார்களா, போதிய ஓய்வு எடுத்துவிட்டு வண்டியை இயக்க வந்திருக்கிறார்களா, ஏதாவது அச்சம் அல்லது கவலையுடன் இருக்கின்றார்களா என்பதுடன் அவர்கள் போதைப் பொருள் பழக்கமுள்ளவர்களா போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா வாகன ஓட்டிகளுக்கும் இவை பொருந்தும் என்றாலும், மின்னல் வேக இறக்குமதி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு இந்தக் காரணிகள் வெகுவாகப் பொருந்தும். மத்திய, மாநில அரசுகளும் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, பள்ளி - கல்லூரி வாகனங்கள், அரசு விரைவுப் பேருந்துகள் போல, இத்தகைய வெளிநாட்டு சொகுசு வண்டிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.

நம் நாட்டின் மக்கள்தொகை, வாகனப் பெருக்கம் இவற்றைக் கணக்கில் கொண்டு, எந்த வண்டியும் எந்தச் சூழ்நிலையிலும் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் விரையக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால்தான் விலைமதிப்பு மிக்க மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.
மருத்துவ இடம் கைவிட நாள் அறிவிப்பு

Added : ஆக 03, 2018 02:06


சென்னை:'அகில இந்திய கவுன்சிலிங்கில் பெற்ற இடங்களை கைவிட, வரும், 6ம் தேதி கடைசி நாள்' என, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட அகில இந்திய கவுன்சிலிங், ஜூன், 20, 21ல் நடந்தது. இதற்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இடங்களை பெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லுாரிகளில், வரும், 8ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

இந்நிலையில், முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், தங்கள் பெற்ற இடங்களை கைவிட விரும்பினால், வரும், 6ம் தேதிக்குள் கைவிடலாம் என, மத்திய சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், இடத்தை கைவிட நினைத்தால், கல்லுாரி நிர்வாகத்தை அணுகி, வரும், 6ம் தேதி மாலை, 3:00க்குள் இடங்களை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...