Friday, August 3, 2018

மருத்துவ இடம் கைவிட நாள் அறிவிப்பு

Added : ஆக 03, 2018 02:06


சென்னை:'அகில இந்திய கவுன்சிலிங்கில் பெற்ற இடங்களை கைவிட, வரும், 6ம் தேதி கடைசி நாள்' என, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட அகில இந்திய கவுன்சிலிங், ஜூன், 20, 21ல் நடந்தது. இதற்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இடங்களை பெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லுாரிகளில், வரும், 8ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

இந்நிலையில், முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், தங்கள் பெற்ற இடங்களை கைவிட விரும்பினால், வரும், 6ம் தேதிக்குள் கைவிடலாம் என, மத்திய சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், இடத்தை கைவிட நினைத்தால், கல்லுாரி நிர்வாகத்தை அணுகி, வரும், 6ம் தேதி மாலை, 3:00க்குள் இடங்களை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.09.2024