Tuesday, August 14, 2018

பாம்பன் பாலத்தில் ரயிலுக்கு தடை

Added : ஆக 14, 2018 02:09

ராமேஸ்வரம்: கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால், பாம்பன் பாலத்தில் ரயில் செல்ல தடை விதிக்கப்பட்டது.தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்து நேற்று ராமேஸ்வரத்தில், 50 முதல், 60 கி.மீ., வேகத்தில் வீசியது. இதனால் பாம்பன், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு, 10 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.காற்று, 55 கி.மீ., வேகத்தில் வீசினால், 'சிக்னல்' தடைபடும். இதனால், ரயில்கள் செல்ல தடை விதித்தனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...