Tuesday, August 14, 2018

மருத்துவ கவுன்சிலிங் இடங்கள், 'ஹவுஸ்புல்'

Added : ஆக 13, 2018 23:30

சென்னை: இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான, 3,501 இடங்களுக்கும், பி.டி.எஸ்., படிப்பிற்கான, 1,198 இடங்களுக்குமான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7ம் தேதி வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பின.இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாதவை மற்றும் கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று, கல்லுாரிகளில் சேராதோர் என, 268 இடங்கள் காலியாகின.இதற்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், ஆக., 11ல் துவங்கியது. இரண்டு நாட்களில், 192 இடங்கள் நிரம்பி, 76 இடங்கள் மீதமிருந்தன. மூன்றாம் நாளான நேற்று, 76 இடங்களும் நிரம்பின.இது குறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:இரண்டாம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்கில், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், 17ம் தேதிக்குள், கல்லுாரிகளில் சேர வேண்டும். தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், விரைவில் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

No comments:

Post a Comment

Declare assets online by Oct, TN govt tells staff

Declare assets online by Oct, TN govt tells staff  Julie.Mariappan @timesofindia.com 11.09.2026 Chennai: Tamil Nadu govt has made it mandato...