Tuesday, August 14, 2018

புதிய ரயில்வே அட்டவணை : நாளை வெளிவரும்

Added : ஆக 14, 2018 05:27



புதுடில்லி: நாளை முதல் புதிய ரயில்வே கால அட்டவணை இணையதளத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணை ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ரயில்வே அட்டவணை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஆகஸ்டு 14 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த முறை புதிய ரயில்வே கால அட்டவணையை ஐ.ஆர்.சி.டி.சி. தயாரித்துள்ளது. இந்தப் புதிய கால அட்டவணை நாளை முதல் (ஆக.15) முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும், நாளையே இணையத்தளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய கால அட்டவணையில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பல விரைவு ரயில்களின் புறப்படும் நேரமும் சேரும் நேரமும் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர புதிய கால அட்டவணையைப் புத்தகமாக அச்சிடும் பணி மும்பையில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒருவாரத்தில் புத்தகங்கள் ரயில்நிலையங்களில் விற்பனைக்கு வரும்


No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...