Tuesday, August 14, 2018

பல்கலை அதிகாரிகளிடம் விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு அனுமதி

Added : ஆக 14, 2018 03:27

சென்னை: அண்ணா பல்கலை விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில், அதிகாரிகளிடம் நேரடி விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, விடை திருத்த மைய பொறுப்பாளர்கள் சிவகுமார், விஜயகுமார் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பேராசிரி யர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்த, பல்கலை மற்றும் உயர்கல்வி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.இதன்படி, பேராசிரியர்களுக்கு, 'சம்மன்' அனுப்பி, விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுஉள்ளனர். பேராசிரியர்கள் தரப்பில் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதால், முதலில் விசாரணை நடத்தவும், விசாரணை முடியும் போது, நீதிமன்ற வழக்கின் நிலையை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும், போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...