Tuesday, August 14, 2018

தாம்பரம் - செங்கோட்டை இடையே தினமும் அந்தியோதயா ரயில் அறிமுகம் : புதிய ரயில் கால அட்டவணையில் அறிவிப்பு

Added : ஆக 14, 2018 03:23

சென்னை: தாம்பரம் - செங்கோட்டை இடையே, தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்கிறது. புதிய ரயில் கால அட்டவணையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே, 2018 - 19க்கான புதிய ரயில்வே கால அட்டவணையை, இன்று இணையதளத்தில் வெளியிடுகிறது.

 இதன் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை, செய்திக்குறிப்பாக நேற்றிரவு வெளியிட்டது. அதன் விபரம்:சென்னை, சென்ட்ரலில் இருந்து புறப்படும், 14 ரயில்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்ட்ரல் வரும், 23 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 15 நிமிடங்கள் வரை மாற்றப்பட்டுள்ளது.எழும்பூரில் இருந்து புறப்படும், 14 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 30 நிமிடங்கள் வரையும், வெளியூர்களில் இருந்து எழும்பூர் வரும், 18 ரயில்களின் நேரம், ஐந்து முதல், 25 நிமிடங்கள் வரையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

.பகல் நேர புதிய ரயில்  தாம்பரம் - செங்கோட்டை இடையே, தினசரி அந்தியோதயா ரயில், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி வழியாக பகல் நேரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, காலை, 7:00க்கு புறப்பட்டு, இரவு, 10:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00க்கு புறப்பட்டு, இரவு, 10:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ரயில் போக்குவரத்து துவக்கம் மற்றும் வழியில் உள்ள நிறுத்தங்கள் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும்எக்ஸ்பிரஸ்கள் நீட்டிப்பு இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள், இரண்டு பயணியர் ரயில்கள், முக்கிய நகரங்கள் இடையே, நாளை முதல் நீட்டிக்கப்பட்டுள்ளன. கவுஹாத்தி - சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ், திப்ரூகர் - சென்னை எழும்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள், தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன கடலுார் - விருத்தாசலம் பயணியர் ரயில், திருப்பாதிரிபுலியூர் வரையும், நாகூர் - திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளனவேகம்

அதிகரிப்பு தாம்பரம் - நெல்லை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் உட்பட, 18 ரயில்களின் வேகம், ஐந்து நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் முன்னதாக சென்றடையும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது மும்பை சி.எஸ்.டி., - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ், 45 நிமிடங்களும்; நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி., இடையே, வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படும், சி.எஸ்.டி., எக்ஸ்பிரஸ், 30 நிமிடங்களும் முன்னதாக சென்றடையும் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும், நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், 25 நிமிடங்கள் முன்னதாக செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - காச்சிக்குடா எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள், 15 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும்

கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், மும்பை சி.எஸ்.டி. - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், கொல்லம் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் வேகமும், பயண நேரம், 10 நிமிடம் குறையும் வகையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சிலம்பு, திருச்செந்துார், நெல்லை மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் சதாப்தி ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு ள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.09.2024